Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: டிசம்பர் 29: ‘எங்கிருந்தோ வந்தான்!’


அன்றொரு நாள்: டிசம்பர் 29: ‘எங்கிருந்தோ வந்தான்!’
4 messages

Innamburan Innamburan Thu, Dec 29, 2011 at 3:48 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: டிசம்பர் 29:
‘எங்கிருந்தோ வந்தான்!’
‘மனிதகுலம் ஒன்றே, தேவன் ஒருவனே’ என்று பறை சாற்றுபவர்கள் கூட அதை மனதில் கொள்வது எளிதன்று என்று அறிவர். முத்துப்பட்டன் கதை என்ற நாடோடி பாடல் இதை வள்ளிசாக முன்வைக்கிறது. அந்தணனொருவன் இரு சக்கிலியப்பெண்களை மணக்கிறான். மாமனிடம், குலம் பெயர்ந்து வந்ததை செயல் மூலம் உணர்த்துகிறான். காதலில்லையேல் அது சாத்தியமா என்ற ஐயம் எழுகிறது. இந்த இனபேதத்தின் ஆழம் காண, மற்றொரு உதாரணம். திரு.வி.க. அவர்கள் தன் பெயரிலிருந்து ‘முதலியார்’ அடைமொழியை எடுத்த ‘மனிதகுலம் ஒன்றே’ கட்சிக்காரர். அவருடைய பெயரில் உள்ள  அமைப்பு ஒன்று முதலியார் சமூகத்திற்குள் மட்டும் திருமணங்கள் முடிப்பதற்காக இயங்குகிறது! இது நிற்க. இன்றைய விஷயம் அயர்லாந்தை பற்றி. ஏன் என்றால், என் தந்தையை நினைத்துக்கொண்டேன். அவர் தானே ஈமன் டி வேலராவின் வாழ்க்கைச்சரிதம் ( ஓரணா! ராமுலு பிரசுரம்: 25 பக்கங்கள்:தமிழ்/ஆங்கிலம்: மலிவு காகிதம்) வாங்கிக்கொடுத்து, சின்ன வயதில் தேசாபிமானத்துக்கு வித்திட்டார். ஈமன் டி வேலரா தான் விடுதலை போராட்டமன்னன், 1917லியே.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை ஒரு வெண்குடையின் கீழ் இருந்தாலும் ஓரளவுக்கு தனித்துவம் பாராட்டுபவை. அவரவர் மொழி வேறுபாடுகளை கவனமாக பாதுகாப்பார்கள். அயர்லாந்து முழுதும் இந்த வெண்குடை கீழ் தான் இருந்தது, ஒரு காலத்தில். ஆனால்,மக்களின் குணாதிசயங்களில் பல வேற்றுமைகள் காணலாம். முதலில் சமயம். இங்கிலாந்து கிருத்துவத்தின் ப்ராடெஸ்டெண்ட் பெரும்பாலும்; அல்லது ஆத்திகமற்றவர்கள். ஐயர்லாந்தில் கத்தோலிக்கர்கள் தான் அதிகம். இங்கிலாந்து செல்வந்தன். ஐயர்லாந்து ஏழை.  இருதரப்பும் நகைச்சுவை உள்ளவர்கள். இங்கிலாந்தில் அடக்கி வாசிப்பார்கள். ஐயர்லாந்தில் அமர்க்களம். சுதந்திரம் என்றால், இங்கிலாந்தில் உள்ளூர் பரவசம். ஐயர்லாந்தில் உலகளாவிய ஆவேசம். தேசாபிமானம் இப்படி சஞ்சரிப்பதால், அவர்கள் எத்தனை நாட்கள் ஒரே வீட்டில் வாசம் செய்ய முடியும்?
1917ல் பிரிவினை வாதம் தலையெடுத்தது. அடுத்த வருடம் ஸின் ஃபைன் என்ற பிரிவினை கட்சி பெரும்பான்மை பெற்று பிரிட்டீஷ் பார்லிமண்டை பாடாய் படுத்தியது. 1919ல் அங்கிருந்து விலகி, டப்ளினில் சுய பார்லிமெண்ட் அமைத்தார், ஈமன் டி வேலரா. மக்கள் ஆதரவு அபரிமிதம். சோவியத் ரஷ்யாவை தவிர, மற்ற நாடுகள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தன. ஒரு போர் கூட இங்கிலாந்துடன். 1921ல் ஒரு அரைகுறை விடுதலை உடன்படிக்கை. வெகுண்டு, ஈமன் டி வேலரா விலகினார். ஏனென்றால், 1922 வது வருட அரசியல் சாசனம் பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் ஆளுமையை ஏற்றுக்கொண்டது. அதை ஒத்துக்கொள்ளாத ஈமன் டி வேலரா, ஒரு புதிய அரசியல் சாஸனம் வகுக்கத்தொடங்கினார். இன்னல்கள் பல தரக்கூடிய இங்கிலாந்தின் அரசர் எட்வர்ட் VIII முடி துறந்த கால கட்டம். அவர்களுக்கு இன்னல். ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்று ஈமன் டி வேலரா தன் வேலையை துரிதப்படுத்தினார். உருவானது: Bunreacht na hÉireann (அரசியல் சாஸனம்). அன்றைய தினம் டிசம்பர் 29, 1937. ஏதோ இஸ்பேட் ராஜாவாக தொடர்ந்து இருந்த பிரிட்டீஷ் தொடர்பும், ஐரிஷ் குடியரசு சட்டம் 1948, ஏப்ரல் 18, 1948 அன்று அமலுக்கு வந்த போது அறுந்து போயிற்று. ஆக மொத்தம் கிடைத்த பலன்கள்:
  1. குடியரசு 2. தேசாபிமான வெற்றி. 3. ஏழை செல்வந்தனான விந்தை 4. இங்கிலாந்துடன் வணிக தொடர்புகள். 5. அடாது விடுபட்டாலும், விடாது தொடரும் வடக்கு அயர்லாந்து பிரச்னைகள்.
இன்னம்பூரான்
29 12 2011
Irish_Stamp_2_Two_Pence_Overprint.jpg
De-Valera-Time(scan).jpg
உசாத்துணை


Subashini Tremmel Thu, Dec 29, 2011 at 6:14 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

 ஈமன் டி வலேரா ஐரிஷ் கிளர்ச்சி.. சுதந்திரம்.. இன்னும் சற்று விரிவாகச் சொல்லியிருக்கலாமோ..!

இவரும்ஜே.எப் கென்னடியும் உள்ள ஒரு படம் ஒன்று எப்போதோ பார்த்த ஞாபகம்.. ஜே.எப் கென்னடி ஐரிஷ் பின்புலம் உள்ளவர் தானே.. இவர்கள் குடும்பத்தினரும் அயர்லாந்திர்லிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்று எனது பயனத்தின் போது தெரிந்து கொண்டேன். கென்னடி அயர்லாந்து வந்திருந்தபோது நல்ல வரவேற்பு அமைந்திருந்ததாம். நான் இது பற்றி பிறகு தகவல் இணையத்தில் தேடிப்பார்க்கிறேன்.

 திரு.வி.க. பெயரில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றம்.. கொசுறுச் செய்தியாக இருந்தாலும் நல்ல தகவல்.

சுபா

2011/12/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Geetha Sambasivam Thu, Dec 29, 2011 at 11:26 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
சுபாஷிணி சொன்னதை வழிமொழிகிறேன்.  அயர்லாந்து சுதந்திரப் போராட்டம் குறித்து அதிகம் படித்தது இல்லை.  அறியத் தந்தமைக்கு நன்றி.  சுருக்கமாக இருந்தாலும் வேண்டிய முக்கியத் தகவல்கள் நறுக் எழுத்திலே.  நன்றி.

2011/12/29 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: டிசம்பர் 29:
‘எங்கிருந்தோ வந்தான்!’



VijiFri, Dec 30, 2011 at 10:56 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
 
ஈமன் டி வலேரா ஐரிஷ் கிளர்ச்சி.. சுதந்திரம்.. இன்னும் சற்று விரிவாகச் சொல்லியிருக்கலாமோ..!
 
 
ஈமன் டி வலேரா  பிரிட்டனை மனதார வெறுத்தார், அதனால் பிரிட்டனின் எதிரி தன் நண்பன் என கருதினார், இந்த மனப்பான்மையை அன்று வலேரா மட்டுமல்ல, மற்ற ஐரிஷ் குடியரசு மக்களும் பெற்றிருந்தனர்.
 
அதன் விளைவு
ஈமன் டி வலேரா  நாஜி ஜெர்மனியையும், ஹிட்லரையும் நண்பரக்ளாக கருதி, ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு கண்ணை பொத்திக் கொண்டார். ஹிட்லர் ஏப்ரல் 30, 1945 அன்று தற்கொலை செய்தவுடன் , லப்ளினில் உள்ள ஜெர்மானிய தூதுவராலயத்திற்க்கு சென்று, ஹிட்லருக்கு இரங்கல் புஸ்தகத்தில் கையெழுத்திட்டார். ஹிட்லருக்கு இரங்கல் தெரிவித்த ஒரே தலைவர் வேலராதன்.
 
அது மட்டும் அல்ல. நாஜிக்களை யுத்தம் செய்ய 5000 ஐரிஷ் வீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பல முனைகளில் போர் புரிந்தனர். அவர்கள் அயர்லாந்து திரும்பி வந்தவுடன் அவர்கள் பல கொடூரங்களுக்கு உள்ளாக்கப் பட்டனர். அவர்களுக்கு வேலை மறுக்கப் பட்டது, அவர்கள் பென்ஷன் மறுக்கப்பட்டது. பலர் ஏழ்மையில் இருந்தனர் , அவர்கள் நாஜிகளை யுத்தம் செய்தனர் என்ற காரணத்தால், ஹிட்லர் வேலராவின் நண்பன் என்ற காரணத்தால்.
 
60 வருடங்கள் கழித்துதான் மெதுவாக ஐரிஷ் அரசாங்கம் அவர்களுக்கு “மன்னிப்பு”  வழங்க எண்ணம் செய்கிரது
 
 
Five thousand Irish soldiers who swapped uniforms to fight for the British against Hitler went on to suffer years of persecution.
One of them, 92-year-old Phil Farrington, took part in the D-Day landings and helped liberate the German death camp at Bergen-Belsen - but he wears his medals in secret.
Even to this day, he has nightmares that he will be arrested by the authorities and imprisoned for his wartime service.
"They would come and get me, yes they would," he said in a frail voice at his home in the docks area of Dublin.
And his 25-year-old grandson, Patrick, confirmed: "I see the fear in him even today, even after 65 years."
Mr Farrington's fears are not groundless.
He was one of about 5,000 Irish soldiers who deserted their own neutral army to join the war against fascism and who were brutally punished on their return home as a result .
They were formally dismissed from the Irish army, stripped of all pay and pension rights, and prevented from finding work by being banned for seven years from any employment paid for by state or government funds.
A special "list" was drawn up containing their names and addresses, and circulated to every government department, town hall and railway station - anywhere the men might look for a job.

"They didn't understand why we did what we did. A lot of Irish people wanted Germany to win the war - they were dead up against the British."
It was only 20 years since Ireland had won its independence after many centuries of rule from London, and the Irish list of grievances against Britain was long - as Gerald Morgan, long-time professor of history at Trinity College, Dublin, explains.
"The uprisings, the civil war, all sorts of reneged promises - I'd estimate that 60% of the population expected or indeed hoped the Germans would win.
"To prevent civil unrest, Eamon de Valera had to do something. Hence the starvation order and the list."
Ireland adopted a policy of strict neutrality which may have been necessary politically or even popular, but a significant minority strongly backed Britain, including tens of thousands of Irish civilians who signed up to fight alongside the 5,000 Irish servicemen who switched uniforms
[Quoted text hidden]

அன்றொரு நாள்: டிசம்பர் 30: ஆத்ம விசாரம்.



அன்றொரு நாள்: டிசம்பர் 30: ஆத்ம விசாரம்.
2 messages

Innamburan Innamburan Fri, Dec 30, 2011 at 1:33 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: டிசம்பர் 30:
ஆத்ம விசாரம்.
  “ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.”
~ ரமண மகரிஷிகள்
இன்றைய தினம் ஒரு வல்லரசு உருவாயிற்று, பல வருடங்களுக்கு முன். நேதாஜி இந்தியாவின் கொடி ஏற்றினார், நாடு ‘அதிகாரபூர்வமாக’ விடுதலை அடையும் முன். அதையெல்லாம் விட்டு விட்டு எழுதுவதோ ஆத்ம விசாரம். டிசம்பர் 30, 1879 பகவான் ரமணரின் அவதார தினம். அவரை பற்றி எழுத யோக்யதா-சித்தி உள்ளவர்கள் பலர் இருக்கும் மின் தமிழ் குழுமத்தில், நான் என்ன புதிதாக எழுத இயலும்? அதற்காக, உரிய நேரத்தில் வரலாறு உரைக்காமல் இருக்கவும் கூடாது. இந்த இழையில், பகவான் ரமணருக்கு சமர்ப்பணமாக சான்றோர்கள், தொடர்ந்து எழுதி சிறப்பித்தால், எனக்கு ஒரு மனநிறைவு கிடைக்கும். திருச்சுழியில் ஜனனம், தந்தையை இழந்தபோது ஆத்மவிசாரம், அருணாச்சலம் அழைத்தது, கடுந்தவம், பால் ப்ரண்டனும், யோகானந்தரும் வந்தது, சாமர்சட் மாம் என்ற இலக்கிய அரசர் வந்து போய், அந்த அனுபவத்தின் மீது ஒரு புதினம் வடித்தது, சகஜ நிர்விகல்ப சமாதி, அம்மை அழகம்மை வந்தது, ஶ்ரீ ரமணாஸ்ரமம் அமைந்தது, அது ஒரு யாத்திரை தலமாக இருப்பது, அதனுடைய நிர்வாகம், அதில் பகவான் ரமணரின் உறவினர்களின் பங்கு, சொத்து பத்து அணுகுமுறைகள், பெருமாள்சாமி வழக்கு எல்லாம் விலாவாரியாக எழுதப்பட்டவை. எனவே, இத்துடன் வரலாற்றை நிறுத்தி...
இந்தியா இறை-மனிதர்கள் (Godmen) நிறைந்த நன்னாடு; பெரும்பாலும் போலிகள். நன்கு தொடங்கி மக்கிப்போனவர்கள், பலர். வணிக உத்திகள் நிறைந்த துறை, ஆன்மீக வியாபாரம். பெயர்களை சொல்லி அலசுவது, நமக்குத் தான் சிறுமை. போகட்டும். சதாசிவ பிரம்மேந்திராள், சேஷாத்ரி ஸ்வாமிகள், ஜட்ஜ் ஸ்வாமிகள், காஞ்சி முனிவர், பகவான் ரமணர் என்ற வரிசையோ ஒரு பரிசுத்த ஆன்மீக அலைவரிசையை உலகெங்கும், என்றென்றும் பரப்பிய வண்ணம் உளது. அந்த ஆறுதல் மன நிறைவையும், ஆத்மசுத்தியையும் தந்து, நம்மை உய்விக்க்கிறது என்று சொல்வது மிகையல்ல. அந்த மஹானுபாவர்கள் யாவரும் நமது தமிழ்நாடு என்ற குறுகிய வட்டத்தில் அவதரித்தவர்கள் என்று, சாமான்ய மனிதர்களான நாம் மகிழ்ந்தோமானால், நாம் பெருந்தவறு ஒன்றும் இழைக்கவில்லை. ஆத்மவிசார யத்தனம் முயன்றாலே நலம்.
பகவான் ரமணர் பிராமணரல்ல.  பிரம்மச்சர்யம், கிருகஸ்தம், வானபிரஸ்தம்,சந்நியாசம் நான்கு  நிலைகளையும் கடந்த, அதியாஸ்ரமி என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். எனவே வருணமும் கடந்தவர். அவர் ஒரு மெளனகுரு. அவருடைய பக்தி யாகத்தில், நெய் வார்த்து, ஆஹூதி செய்தது, சேக்கிழாரின் பெரிய புராணம். அந்த பக்தி இலக்கியத்தின் அடி எடுத்துக்கொடுத்தது அம்பலவாணனே என்பர். கடுந்தவத்திலிருந்த ரமணரை கண்டுபிடித்தது, சேஷாத்திரி ஸ்வாமிகள். 
ஒரு பெர்சனல் சமாச்சாரம். ஓரிரவு, என் மாமனாரும், நானும், மற்றவர்களும் வீட்டுத்திண்ணையிலமர்ந்து, அலவளாவிக்கொண்டிருந்தோம். ஒரு வான ஒளி பறந்து சென்ற அதிசயம் கண்டோம். அது எரி நக்ஷத்ரம் போல இல்லை என்று பேசிக்கொண்டோம். மறு நாள் ஊடகங்கள், அது பறந்த நேரத்தில் தான், பகவான் ரமணமகரிஷியின் ஆத்மா விடுதலை அடைந்தது, என்று பேசின. இது பற்றி, அன்று அங்கிருந்த ஹென்றி கார்ட்டியர்-ப்ரெஸன் என்ற உலக பிரசித்தமான ஃபோட்டோக்ராஃபர் எழுதுகிறார்: ‘அதி ஆச்சிரியமான நிகழ்வு...ஒரு வால் நக்ஷத்ரம் ‘விர்ரென்று’ தெற்கிலிருந்து வந்து அருணாசல மலை மீதேறி மறைந்தது. அது எரி நக்ஷத்திரமல்ல. எனவே மணியை பார்த்தோம்: 8:47. ஆஸ்ரமத்துக்கு ஓடினோம். பகவான் பரிநிர்வாணம் அடைந்து விட்டார்.’
இன்னம்பூரான்
30 12 2011
8188018651.jpg
உசாத்துணை:

Geetha Sambasivam Fri, Dec 30, 2011 at 4:37 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
ஆஹா, என்ன சொல்றது, என்ன சொல்றது!  கொடுத்து வைச்சிருக்கீங்க, ரமண ஒளியின் தரிசனம் கிடைச்சிருக்கே.  வரலாறு சுருக்கமாய்ச் சொல்லி இருக்கீங்க. இத்தனை நறுக்குனு எனக்கு எழுத வரலை. :))))) இப்போத்தான் ரமண சரிதத்தை மறுபடி படிச்சேன்.  ரமணரின் திருவுந்தியாருக்கு ஒரு நண்பர் எழுதின விளக்கத்தையும் அவ்வப்போது படிக்கிறேன்.  ரமண சரித்திரத்தைப் பலரும் எழுதிப் படிச்சாலும் பரணீதரன் எழுதியதைச் சிறுவயதில் ஆனந்தவிகடனில் வரும்போதே படித்த நினைவு . அப்போத் தான் முதல்முதலாக அவரைப் பற்றித் தெரிந்தும் கொண்டேன். இப்போ இங்கே வந்து மறுபடி அருணாசல மகிமை புத்தகத்தை ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்திலிருந்து எடுத்து வந்து படிச்சேன்.  இதிலே கொஞ்சம் /இல்லை நிறையவே எடிட் செய்து அச்சேற்றி இருக்கிறார்கள்.  அந்த ஒரிஜினல் நிறைய விஷயங்களோடு இருக்கும்.  பைன்டிங் இருந்தது வீட்டில்.  கிழிந்து போய்விட்டது. :(((( யாரிடமாவது இருந்தால் தேடிப் பிடிச்சு வாங்கி மறுபடி படிக்கணும்.

சேஷாத்ரி சுவாமிகளையும் பற்றி அதிலே தான் படிச்சேன்.  நம் மரபு விக்கியில் சேஷாத்ரி சுவாமிகளின் சரித்திரத்தை "தெய்வீகப் பெரியார்கள்" தொகுப்பில் சுருக்கமாய் வலை ஏற்றி இருக்கிறேன்.  நேரம் கிடைக்கிறச்சே பார்த்துட்டு அதில் ஏதானும் விட்டுப் போயிருந்தாலோ, சேர்க்கவேண்டி இருந்தாலோ, வேறு செய்திகள் இருந்தாலோ சொல்லுங்க.  சேர்த்துடலாம்.  அருமையான விசாரம்.  தேவையான விசாரம்.

http://tinyurl.com/86j9m7h   Seshadhri Swamigal link
[Open in new window]


முதலில் நேதாஜி பெயரைப் பார்த்துட்டுப் பதிவு அவரைப் பத்தினு நினைச்சு ஏமாந்தது என்னமோ உண்மை! :))))))

2011/12/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: டிசம்பர் 30:
ஆத்ம விசாரம்.
  “ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.”
~ ரமண மகரிஷிகள்

அன்றொருநாள்: மார்ச் 3 "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்"




அன்றொருநாள்: மார்ச் 3 "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்"
2 messages

Innamburan Innamburan Fri, Mar 2, 2012 at 6:34 PM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88 , coral shree , anantha narayanan nagarajan , Soumya Srinivasan , Manimekalai kalai
அன்றொருநாள்: மார்ச் 3
"தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்"
மார்க்கம் ஒன்று தான்; வழிநடைகள் தான் பல; அடிச்சுவடுகள் எங்கெங்கும். சர்வமதமும் சம்மதம் என்றாலும், சமயங்கள், கிளை சமயங்கள், ஒற்றையடி பாதைகள் என ஆன்மிக தேட்டல்கள் என்றுமே இருந்து வந்தன. அவற்றில் ‘அய்யா வழி’ ஒன்று. அது தோன்றியது கடந்த இரு நூறு ஆண்டுகளுக்குள் தான் என்றாலும், பேசப்படும் ஆன்மிகம், தொன்மை, சங்கேதங்கள் எல்லாம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. எனக்கு அவரை பற்றி தெரியாது. அறிந்து கொண்டதை, உசாத்துணையுடன், சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன். 
முத்துக்குட்டி பிறந்த தினம், மார்ச் 3, 1809 என்று ஒரு குறிப்பு; குமரி மாவட்டத்தின் தாமரைகுளம் என்ற ஊரில், தாழ்த்தப்பட்ட சாணார் இனத்தில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு ஆண்மகவு சுபஜனனம். ஶ்ரீமன்நாராயணனின் அவதாரமாக கருதப்படும் இவருக்கு, 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். தாத்தா சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. புலையன் வீட்டில் பிரசவம். ‘பெருமாள்’ என்று பாட்டி நாமகரணம் செய்கிறாள். எஜமான் கிட்ட சேதி சொன்னால், அவர் எரிந்து விழுகிறார். ‘இன்னாழ்தா பெழ்ம்மாழ்? த்திமிரா? மாழ்த்து சத்துபுழ்த்துணு’ என்று கர்ஜித்து விட்டு, தாம்பூலத்தை உமிழ்கிறார். மறுநாள் தரிசனத்தின்  போது, புலையன் சொன்ன புது பெயர், ‘பெத்த பெருமாள்’! அந்த மாதிரி,‘முத்துக்குட்டி’யாக படியிறக்கப்பட்ட 'முடிசூடும் பெருமாள்‘ அய்யா வைகுண்டர் ஆன வரலாறு அகில திரட்டு அம்மானை என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அந்த நூல் முத்துக்குட்டி என்ற குழந்தை இறந்து பிறந்ததாகவும், சடம் பிறந்த உடன், சம்பூரணதேவனின் ஆத்மா அவ்வுடலில் செலுத்தப்படுவதாக கூறுகிறது. சம்பூரணதேவனே, அய்யா வைகுண்டரின் ஸ்தூல/சூக்ஷ்ம தேஹங்களை தாங்கி, தாமரைக்குளம் என்ற ஊரில் பிறந்திருக்கிறார். அவர் ஒரு தெய்வலோகவாசி. வைகுண்ட அவதாரம் வரை, இந்த அவதாரச்சடலத்தை சுமக்கும் பொறுப்பு சம்பூரணதேவனுக்கு கொடுக்கப்படுகிறது. விஷ்ணுபக்தனான முத்துக்குட்டிக்கு 17 வயதில் திருமாலம்மாள் என்ற ஏற்கனவே மணம் புரிந்துள்ள பெண்ணுடன், திருமணம் ஆகிறது.
ஶ்ரீமன்நாராயணைனின் ஆணைகுட்பட்டு, தாயும், தனயனும் திருச்செந்தூர் சென்று கடலில் ஸ்நானம் செய்கிறார்கள். இவர் திரும்பவில்லை. மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20ல் (1833?) வைகுண்டராக கடலிலிருந்து வெளிப்படுகிறார். அவர் கொண்டுள்ள சொரூபம்(உடல்) காரணமாக முத்துக்குட்டி கடலிலிருந்து வருவதாக வெயிலாளுக்குத் தெரிகிறது. அவள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் செல்கிறாள். ஆனால் அவர் அவளை தடுக்கிறார். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும், கலியை  அழிக்க நாராயணரே வைகுண்டராக அவதரித்திருப்பதாகவும் கூறுகிறார்.
"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்
கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு
குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ"

வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த அவதாரப்பதி என்ற இடம் அய்யாவழி வழிப்பாட்டின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். இது, செந்தூர் பதி என்று அகிலத்தில் கூறப்பட்டுள்ளது.
1833ல்  ‘அய்யா வழி’ என்ற ஹிந்துமத ஒற்றையடி பாதை, இவ்வாறு, உருவாகிறது. சுவாமிதோப்பு என்ற இடத்தில், அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. வியப்புறச்செய்யும் பல செய்திகள் இருந்தாலும், "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட, இந்த நாராயண பண்டாரத்தால், மக்கள் ஊக்கிவிக்கப்பட்டனர். அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப் பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதாக, அய்யாவழியில் அறியப்படுகிறது. எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா? மன்னன் இவரை கைது செய்ததாகவும், அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.
வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம்,திங்களன்று வைகுண்டம் சென்றார் என்றும்  அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் மண்ணறையில் வைக்கப்படுகிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அதற்கு மாறாக, அவர் உடலோடு வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்றும் வாதங்கள் நிகழ்கின்றன. வாதமில்லையேல்...!
எனக்கு அறிமுகம் இல்லாத இந்த அய்யா வழியை பற்றி, பல உசாத்துணைகள். ஒன்று என்னை கவர்ந்தது. திரு அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி ஆகியோர் தமிழ்ஹிந்து இதழில் சாதிகளை பற்றி ‘சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3’
என்று ஃபெப்ரவரி 22, 2010 அன்று எழுதிய கட்டுரை. காப்புரிமையையும், நன்றியையும் கூறி, அதிலிருந்து ஒரு பகுதியை கீழே அளிக்கிறேன்.  கிருத்துவமதத்தை பற்றி அங்கு கூறப்பட்டதுடன், எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் என்ன? பரவாயில்லை.
***
“...உயர் குலத்தவன் என தன்னை கருதுபவன் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தைக் கூறவும் தகுதியற்றவன் என குந்தி தேவி கிருஷ்ணரை துதிக்கும் போது கூறுகிறாள் (ஸ்ரீ மத் பாகவதம்: 1.8.22)
கீதை, புராணங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பற்றிக் கூறினீர்கள். பிற்பட்ட காலங்களிலும் சாதியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த அருளாளர்கள் இருந்தார்களா?

அய்யா வைகுண்டர் எனும் அவதார புருஷரின் உதாரணம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
சாணார்/நாடார் என்று பேச்சுவழக்கில் அழைக்கப் படும் சான்றோர் சமுதாயம், அந்நிய மதப் பிரச்சாரகர்கள் மற்றும் வெள்ளையர் ஆதிக்கக் கைப்பாவையான திருவிதாங்கூர் மேல்சாதி வர்க்கத்தால் அடக்குமுறைக்கு ஆளாகி இருந்தது. அந்தச் சமுதாயத்தை சுரண்டல், அடக்குமுறை, மதமாற்றம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றி, உரிமைகளை வென்று மானுடத்தின் வெற்றிக்குக் காரணமான தெய்வீக புருஷர் அய்யா வைகுண்டர்.
அவரது அகிலத்திரட்டு எனும் அருள் நூலை நோக்கினால் சனாதனமாக பாரதம் முழுமைக்கும் அருள் வழங்கும் சத்தியம் அய்யா வைகுண்டரின் சமுதாய எழுச்சிக்கும் உள்ளொளியாக வெளிப்பட்டதை அறியலாம்.
மேற்கத்திய மதங்களில் இறைத்தூதன் அல்லது மீட்பர் எனக்கருதப்படுபவரின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட மேல்சாதியிலேயே நிகழும். உதாரணமாக டேவிட் என்கிற அரசனின் குலத்தில்தான் ஏசு பிறப்பார் என முன்னறிவிக்கப் பட்டு அந்த குலத்தில்தான் ஏசு பிறந்ததாக கிறிஸ்தவர் கூறுகின்றனர். ஆனால் இறைவன் அவதரிக்க சாதி குலம் எதுவும் தடை இல்லை என்பது இந்து தத்துவம். இறைவன் ஆயனாகவும் அவதரிப்பார். சமுதாயத்தால் இகழப்பட்டு புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதராகவும் வருவார். இது இந்து புராணங்களும் இதிகாசங்களும் கூறும் உண்மை ஆகும்.
எனவே, அய்யா வைகுண்டர் அவதார புருஷர் என்று அடியார்கள் அவரைப் போற்றுவதைக் கேள்விப் பட்டவுடன், வெளிநாட்டு ஆதிக்கக் கைப்பாவையாக இருந்த திருவிதாங்கூர் மன்னன் (அன்னிய மத தாக்கத்தினால்) ”அரச பரம்பரையை விட்டு கடவுள் என்ன தீண்டத்தகாத குலத்தில் பிறப்பாரா?” எனக் கேட்டான். அதற்கு சாஸ்திரி ஒருவர்,
“எளிமையாம் குலங்கள் என்று எண்ணுற மனுவே அல்ல
பளிரென ஆதிநாதன் பார்க்கவே மாட்டார் அய்யா”
என்று கூறினார். மேலும் பூவண்டன் எனும் அமைச்சர் அரசனுக்கு இந்து ஞான மரபில் எந்த குலத்திலும் இறைவன் அவதரிப்பார் எனக் கூறும் போது அனைத்து விளிம்பு நிலை குலங்களையும் குறிப்பிட்டு அவை அனைத்திலும் இறைவன் பிறந்திருக்கிறார் எனக் கூறுகிறார் -
“பாணனாய்த் தோன்றி நிற்பார்; பறையனாய்த் தோன்றி நிற்பார்
குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார்
மசவெனக்குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்.”
பகவான் புத்தர், மகாவீரர் ஆகியோர், மகான் ஞானேஸ்வர், மகான் துகாராம், மகான் ஏகநாதர், மகான் ரவிதாஸர், மகான் ராமானந்தர் ஆகிய வடநாட்டு பெரியவர்களும் சாதியத்தை எதிர்த்து போராடியவர்கள் ஆவர். மகான் ஞானேஸ்வர் பகவத் கீதையை மராட்டி மொழியில் எல்லாத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்றார் . மகான் துகாராம் உயர்ந்த ஆன்மீகக் கருத்துக்களை மராட்டிய மொழியில் அபங்கங்கள் என்னும் எளிய பாட்லகள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னாளில் ஜோதிபா புலே, சாகு மகராஜ் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள், தலித் போராளிகள் மராட்டிய மண்ணில் தோன்றுவதற்கு இந்த அருளாளர்களின் உபதேசங்களும் ஒரு முக்கியப் பங்கை ஆற்றின என்றே சொல்லலாம். அண்ணல் அம்பேத்கரும் இந்த அருளாளர்களின் உபதேசங்களால் உந்துதல் பெற்றார்...”
***
இன்னம்பூரான்
03 03 2012
Inline image 1

உசாத்துணை:
அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் (நூல்) - நெல்லை விவேகநந்தா (வானதி பதிப்பகம் - டிசம்பர் 2010)
http://books.google.co.uk/books/about/அய்யா_வைகுண்டர.html?id=6bDpXwAACAAJ&redir_esc=y


Geetha Sambasivam Fri, Mar 2, 2012 at 8:56 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
ஐயா வைகுண்டர் பற்றிச் சில வருடங்களாகவே அறிவேன்.  சென்னையில் நடந்த ஆன்மிகப் பொருட்காட்சியிலும் இவர்களின் ஐயாவழிக் காட்சிகளையும், புத்தகங்கள் போன்றவற்றைக் காண முடிந்தது.  நம் மின் தமிழிலேயே திரு கந்தவேல் நாகராஜன் அவர்களும் ஐயா வைகுண்டர் குறித்து விபரமாக எழுதிப் படித்த நினைவும் உள்ளது.

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

On Fri, Mar 2, 2012 at 12:34 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: மார்ச் 3
"தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்"


அன்றொரு நாள்: டிசம்பர் 31: தெரில்லெ சாமி கதை





அன்றொரு நாள்: டிசம்பர் 31: தெரில்லெ சாமி கதை
4 messages

Innamburan Innamburan Sat, Dec 31, 2011 at 6:10 AM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan

அன்றொரு நாள்: டிசம்பர் 31:
தெரில்லெ சாமி கதை
நகைச்சுவையுடன், அப்பா ஒரு கட்டுக்கதை சொல்லுவார். திருச்சியில் கலைக்ட்டராக பதவி ஏற்குமுன், ஊர் சுற்றிப்பார்க்க விரும்பினார், வில்சன் துரை. வடிவேலு தான் துணை, மொழிபெயர்ப்பு, டூரிஸ்ட் கைட், ஜட்கா வண்டியோட்டி எல்லாம். ஒரு கல்யாண ஊர்வலம் போகிறது. வில்சன் இது என்ன என்று கேட்டார். யாரோ வடிவேலுவை எச்சரித்திருக்கிறார்கள். ஆயிரம் கேள்வி கேட்பான், ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் என்று. ‘தெரில்லெ சாமி’ என்றான், ரத்னசுருக்கமாக. மதிய உணவுக்கு பின் ஒரு ரவுண்டு. ஒரு பிரேத ஊர்வலம். அதே கேள்வி! அதே பதில்! வில்சன் தொரை கேட்டாரு, ‘என்னப்பா இது? தெரில்லெ சாமிக்கு இன்னிக்கே கல்யாணம்; இன்னிக்கே சாவா!’ என்று. அந்த மாதிரி: டிசம்பர் 30 மணம்; டிசம்பர் 31 மரணம்: வருடங்கள் தான் வேறே.
இது சும்மா அறிமுகத்தின் முதல் பத்தி. கிட்டத்தட்ட ஒரு கண்டம் போல விசாலமான, ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் கால்களை ஊன்றியிருந்த ரஷ்யாவின் ஜார் அரசர்களை போல கொடுங்கோலர்கள் வரலாற்றில் மிகக்குறைவு. 22.5 மிலியன் சதுரமைல்கள் பரப்பு, இந்த உலகிலேயே பெரிய நாட்டுக்கு. ஜனத்தொகை முழுதும் அடிமைகள். சாது மிரண்டது 1917. ஒரு மாபெரும் புரட்சி. கெரன்ஸ்கி, ட்ராட்ஸ்கி, லெனின், ஸ்டாலின், குருஷேவ்,ப்ரெஷ்னெவ், கோர்பஷேவ், யெல்ட்ஸின், புடீன், போல்ஷிவிக், கம்யூனிஸ்ட், இரும்புத்திரை எல்லாம் பற்றி எழுத நாள் பிடிக்கும். பக்கம், பக்கமா எழுதணும். யார் படிப்பா? சொல்லுங்கோ. அதனால், வந்ததையும், போனதையும் சொல்லிட்டு போயிண்டே இருக்கேன். வருஷம் வேறே முடியப்போறது.
ஜார் கொடுங்கோலாட்சி மார்ச் 1917ல் கூறு போடப்பட்டது. தற்காலிக அரசினால், லெனினுடைய போல்ஷ்விக் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அக்டோபர் புரட்சி என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட புரட்சி மூலம் ஆளுமையை அவர்கள் கைபற்றினர். முதல் உலக யுத்தத்திலிருந்து சோவியத் ரஷ்யா விலகியது. உள்நாட்டுப்போர் என்னவோ 1917லிருந்து 1923 வரை ஓயவில்லை. வெளிநாடுகளின் தலையீடு,ஜார் நிக்கொலஸ் IIம் அவன் குடும்பமும் சிரச்சேதம், 1921ம் வருட பஞ்சம் (5 மிலியன் மக்கள் சாவு), போலண்ட், ஃபின்லாண்ட், எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியாவுடன் சண்டை,சச்சரவு. இத்தனை பிச்சல் பிடுங்கலுக்கு நடுவில் ரஷ்யா, காகசியா, உக்ரேன்,பைலோரஷ்யா ஆகியவற்றின் கூட்டுக்குடித்தனங்கள் ஸோவியத் குடியரசுகளின் ஒருமித்த ராச்சியத்தை உருவாக்க திட்டமிட்டு, அதற்கான உடன்பாட்டையும், பிரகடனத்தையும் ‘அதிகாரபூர்வமாக்கிய’ தினம், டிசம்பர் 30, 1922. துரிதகதியில் ஒரு வல்லரசாகி, அமெரிக்காவுக்கு ஓயாத தலை வலி கொடுத்தது. உலகெங்கும் கம்யூனிசம் பரப்ப, இல்லாதததும், பொல்லாததும் செய்தது. ஆரம்பகாலத்தில் ஈ.வே.ரா. ~ நேரு எல்லாரையும் வளைத்துப்போட்டது. இந்தியாவும் கூஜா தூக்கியது. லெனினும், ஸ்டாலினும், ஜார் மன்னர்களை மிஞ்சினர். குருஷேவ் போன்ற கோமாளிகளையும், யெல்ஸ்டீன் போன்ற மிடாக்குடியன்களையும் விடுங்கள். கோர்பஷேவ் என்ற மிதவாதி 1985ல் தலைமை ஏற்று, செல்வநிலையை சரி செய்ய முயன்றபோது தான், பிரிவினை வாதங்கள் தலையெடுக்கத் தொடங்கின. தொடக்கம்: ஹெல்சின்கி உடன்பாடு என்ற மூன்றே நபர்கள் அமைத்த கம்யூனிசத்தை எதிர்க்கும் பின்லாந்து அமைப்பு: ஜூன் 1986. டிசம்பர் 1986 ~ லாட்வியாவில் முந்நூறு பேர் ஊர்வலம். கஜகஸ்தானில் கலாட்டா: மூவாயிரம் பேர். 1987-88: பால்டிக் மாநிலங்கள் பல்டி! கோர்பஷேவ்வின் ஆளுமையும் சுரத்தும் ‘விர்ரென்று’ இறங்க, பெரும்பாலான மாநிலங்கள் கலைக்கப்பட்ட சீட்டுக்கட்டுப் போல விலகி விட, ரஷ்யா தனித்து விடப்பட்டது. கோர்பஷேவ் ராஜிநாமா: டிசம்பர் 25, 1991. இந்த உருக்குலைதலை ஐ.நா. அங்கீகரித்து, சோவியத் ரஷ்யாவுக்கு பதில் தனித்து விடப்பட்ட ரஷ்யா தான் அங்கத்தினர் என்றது, டிசம்பர் 31, 1991 அன்று. ‘சோவியத்’ என்ற அடைமொழி மறைந்த நாளும் அதுவே. இந்த 70 வருட இடைவெளி (1922 ~1991) ஒரு நாட்டின் வரலாற்றில், காலையும்,மாலையும் போல ~‘1922ல் மணம் & 1991ல் மரணம் என்றால்: ‘தெரில்லெ சாமி’ போல! இல்லெ!
இன்னம்பூரான்
31 12 2011
mikhail_gorbachev_01.jpg
உசாத்துணை:
Daniels, RV:The Rise and Fall of Communism in Russia: Yale University Press


Geetha Sambasivam Sat, Dec 31, 2011 at 12:12 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
பிறந்த கதை அவ்வளவாய்த் தெரியாது; இறந்த கதை தெரியும்.  பதிவுக்கு நன்றி. தேடிப் பிடித்துச் சரித்திரப் பதிவுகளைத் தொடர்ந்து கொடுக்கும் வலிமையை வரப் போகும் புத்தாண்டில் உங்களுக்குக் கிடைக்கவேண்டிப் பிரார்த்தனைகளும், புத்தாண்டு வாழ்த்துகளும்.

2011/12/31 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: டிசம்பர் 31:
தெரில்லெ சாமி கதை
. இந்த உருக்குலைதலை ஐ.நா. அங்கீகரித்து, சோவியத் ரஷ்யாவுக்கு பதில் தனித்து விடப்பட்ட ரஷ்யா தான் அங்கத்தினர் என்றது, டிசம்பர் 31, 1991 அன்று. ‘சோவியத்’ என்ற அடைமொழி மறைந்த நாளும் அதுவே. இந்த 70 வருட இடைவெளி (1922 ~1991) ஒரு நாட்டின் வரலாற்றில், காலையும்,மாலையும் போல ~‘1922ல் மணம் & 1991ல் மரணம் என்றால்: ‘தெரில்லெ சாமி’ போல! இல்லெ!
இன்னம்பூரான்
31 12 2011

உசாத்துணை:
Daniels, RV:The Rise and Fall of Communism in Russia: Yale University Press


-- 

Innamburan Innamburan Sat, Dec 31, 2011 at 12:19 PM
To: Geetha Sambasivam
நன்றி பல. என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள், மறுபடியும். வர வர எழுத முடியாமல் போவதால், எல்லாரையும் பேச்சில் வீழ்த்துவதாக உத்தேசம். எல்லாம் ஆண்டவன் செயல். I shall be needing your support and goodwill. 
இன்னம்பூரான்
[Quoted text hidden]

Thevan Sat, Dec 31, 2011 at 6:32 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கோர்பசேவ் கொண்டுவந்த க்ளாஸ்நாஸ்ட் (வெளிப்படையான செயல்முறை) மற்றும் பெரிஸ்டோரிகா (மறுகட்டமைப்பு) கொள்கைதான் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு காரணமான்றதும் தெரியல சாமி.



Regards,
Thevan, 
Mumbai.

அன்றொரு நாள்: ஜனவரி: 1 சிசு தரிசனம்




அன்றொரு நாள்: ஜனவரி: 1 சிசு தரிசனம்
2 messages

Innamburan Innamburan Sun, Jan 1, 2012 at 6:56 PM
To: mintamil , thamizhvaasal


அன்றொரு நாள்: ஜனவரி: 1
சிசு தரிசனம்
‘ ... கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்... அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது... அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்... அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்...’
~ விவிலியம்: மத்தேயு: அதிகாரம் 2: 1,2,9,10,11
மேற்கத்திய கலாச்சாரம் தழுவிய புத்தாண்டு தினத்தில், திருமலை வெங்கடேசனை தரிசிக்க ஏகப்பட்ட கூட்டம். சந்துஷ்டியை தேடி அலையும் மானிடர்களுக்கு, ஏதோ ஒரு பிரமேயம் கிடைத்தால் போதும். குழந்தைகளை இனம் தெரியாத உபத்ரவங்கள் படுத்தினால், ஹிந்து குடும்பங்கள் மசூதியில் சென்று, தொழுகை முடிந்த பின் ‘துவா’ பெறுவது உண்டு. ஹிந்துக்கள் நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி மாதாகோயிலுக்கும் பயபக்தியுடன் செல்வதும் உண்டு. ‘சிசு தரிசனமும்’ சமய எல்லைகளையும், சம்பிரதாய லக்ஷ்மணரேகைகளையும்  கடந்ததுவே. பீடிகை முடிந்தது.

கிருஸ்துமஸ் பண்டிகை முடிந்தவுடன், சாங்கோபாங்கமாக, ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. விவிலயத்திலுள்ள அந்த கதை பற்றிய உன்னத ஓவியங்களை லியோனார்டா வின்ஸி என்ற பன்முகக் கலைஞர் வரைந்தார். டீ.எஸ்.எலியட் என்ற கவிஞர் ஆன்மிகக்கவிதைத்தொடரொன்று படைத்தார். 1931ம் வருடத்தில் எழுதப்பட்ட உசாத்துணையில் இருக்கும் நூல் சொக்கவைக்கும் சொக்கத்தங்கம். இனி கதை சுருக்கம்:
இது ‘பட்டொளி பாதை’யே தான், ஒரு நக்ஷத்திரம் வழித்துணையாக இயங்குவதால். ஸில்க் ரோடு. ஒரு உயர் பிரஞ்ஞை உந்த, உந்த, மூன்று சீன ‘தாவோ’ ஞானிகள் புனித யாத்திரையை தொடங்கினார்கள். இது சீன புத்தாண்டு விழா மட்டுமல்ல, ஒரு புதிய சகாப்தத்தின் நல்வரவு என்று அவர்கள் உணர்ந்தார்கள். 
இலக்கு:பெத்லஹேம்.நாட்க்கணக்காக நடந்த பின், பெத்லஹேம் அடைந்து திருக்குமாரனை தொழுத பின், (கம்சனை போன்ற) ஹீராட் மன்னன் அறியாத வழியில் திரும்பியபோது, ஒரு பாலைவனச்சோலையை அடைந்தார்கள். அங்கு ‘மாகி’ எனப்படும் சமூகம் அவர்களுக்கு விருந்தோம்பினர். கைகட்டி, வாய் புதைத்து அவர்களின் தலைவரான மாகி, வந்திருந்த ஞானிகளின் தலைவரான சிஃபு அவர்களுடன் நடத்திய ஆன்மீக உரையாடல்:
மாகி: வெகு தொலைவில் உள்ள சீனாவில், உங்களுக்கு தேவகுமாரனின் வருகை பற்றி எப்படித் தெரியும்?
ஸிஃபு: எமக்குள் திருக்குமாரன் ~ஒரு ‘புத்தர் பிரான்’ ~ அவதாரம் பற்றிய உள்ளொலி எழுந்தது. தியானமும், நக்ஷத்ரமும் வழி காட்டின. ஓரிரவு சிலுவை உருவில் எழுந்த ஒரு நக்ஷத்திரக்கூட்டம் பட்டொளி பாட்டையில் அழைத்து சென்றது.
மாகி: நீங்கள் சிசு தரிசனம் செய்தது எப்படி?
ஸிஃபு: அந்த விண்மீன் எம்மை பெத்லஹெமுக்கு அழைத்துச் சென்றது; ஒரே கூட்டம்; குழப்பம்; கலவரம்.அவரவர் ஊருக்கு திரும்பவேண்டும் என்ற அரசாணை. எங்களுக்கு தங்க இடம் கிடைக்கவில்லை. ஒரு விடுதியின் பின் உள்ள மாட்டு தொழுவத்தில் தங்கச் சொன்னார்கள். ஒட்டகங்களை கட்டி விட்டு, மூட்டை முடிச்சுகளை அவிழ்த்து விட்டு, அங்கு போனால், பல இடையர்கள் அங்கு. எதையோ கண்டு மகிழ்ந்த வண்ணம் இருந்தனர். ஒரு சுயம்பிரகாசமான ஒளி வீச்சு! நாங்கள் விழுந்து வணங்கினோம்; தொழுதோம். எம்முள் இருந்த உள்ளொலி உள்ளொளியாக பிரகாசித்தது. அது அன்னையில் அரவணைப்புப் போல எனலாம். தலை நிமிர்ந்தால், கண்கொள்ளாக்காட்சி! வைக்கோல் பிரிமணை மீது அன்னை மேரி. தொழுவத்தில், திருக்குமாரன். எங்களுக்கோ, மற்றவர்கள் போல, புனர்ஜன்மம். தொழுதோம், பக்தி பரவசத்துடன். ககன சாரிகை தான், போங்கள்!
ஒரு மாகி சமூகத்தினர்: கன்னி மாதாவின் குழவி! இது இறையின் அவதாரமே!
ஸிஃபி: ஆம். அப்படித்தான் தோன்றியது.
மாகி: நீங்கள் பரிசுகள் பல சமர்ப்பித்ததாக கேள்விப்பட்டோம்.
ஸிஃபி: ஓ! பொன்னும், மணியும், பூஜை புனஸ்காரம் செய்ய சூடம், சாம்பிராணி, ஊதுவத்தி, வாசனைப்பொடிகள், புனுகு, ஜவ்வாது, எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் நாட்டு வைத்திய அறிவுரைகள். பொன் நீரை சுத்திகரிக்கும்; நாங்கள் கொணர்ந்தவையில் கிருமிநாசினிகளும் உண்டு.
மாகி: அப்பறம்?
ஸிஃபி: எல்லாரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும், அரசபயம் இருந்தது. மன்னன் ஹீராட் சிசுஹத்திக்குக் காத்திருந்தான்.
மாகி: என்ன ஆச்சு?
ஸிஃபி:கவலையற்க, நண்பரே. தாயும், சேயும் ஒரு மாகி நண்பர் வீட்டில் அடைக்கலம். உரிய நேரத்தில் திருக்குமாரர் மார்க்கபந்துவாக வந்து ‘டாவோ’ அறநெறியை பரப்புவார்.
மாகி: என்னே ஆச்சரியம்! இருள் நீங்கி பிரகாசம் வரும் வேளையில், நாம் ‘மித்ரா’ என்று ஆதவனை தொழும் வேளையில் திருக்குமாரர் அவதாரம்.
ஸிஃபி: ததாஸ்து. புதிய சகாப்தம் விடிந்ததாக, அசரீரி சொல்கிறது.
மாகி: என்னே ஆச்சிரியம்! மோசஸ் ஒரு குப்பியில் அடைபட்டு மிதந்ததாக சொல்கிறார்கள். தொழுவத்தில் தேவகுமாரன்.
ஸிஃபி: புத்தபிரான்கள் பலதடவை வந்தனர். அதற்கான அறிகுறிகளில் மாற்றமேதும் இல்லை.
மாகி: தொழுவம்: இது எதற்கு சின்னம் ஆகிறது?
ஸிஃபி: ஒருகால், அது நாம் விலங்கின இயல்புகளை துறக்கவேண்டும் என்பதற்கான சின்னமாக இருக்கலாம். இரக்க ஸ்வபாவத்தை நமக்கு அளிப்பதற்காக இருக்கலாம். இந்த தெய்வீக சிசுவின் சான்னித்யத்தை உணர்த்த இருக்கலாம்.
மாகி: ஸிஃபி! இந்த சிசுவின் மேன்மையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஸிஃபி: கெளதமர் சமீபத்தில் அவதரித்த புத்தர் பிரான். அவர் மாதிரியே, இந்த மாமுனியும் கருணாமூர்த்தியாகவும், குருநாதராகவும் விளங்குவார் என்று எனக்கு தோன்றுகிறது. குருமுகங்கள் வந்து போகும். ஆனால், உன்னதமான சிஷ்யர்களுக்கு மட்டும் தானே ஞானம் கிட்டும்.
இன்னம்பூரான்
01 01 2012
Adoration-of-the-Magi-c.-1725.jpg

உசாத்துணை:
Magre,M. (Translation: Merton, R.R.(1931) Return of the Magi.


Geetha SambasivamSun, Jan 1, 2012 at 7:58 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
குருமுகங்கள் வந்து போகும். ஆனால், உன்னதமான சிஷ்யர்களுக்கு மட்டும் தானே ஞானம் கிட்டும்.
இன்னம்பூரான்//

உண்மையை "நச்"னு அழகாவும் ஆழமாகவும் சொல்லி இருக்கீங்க.இன்னம்புரார் டச் இது தானோ?  படிக்கிறச்சேயே கண்ணீர் அலை மோதிவிட்டது.  என்ன எழுத்து!  என்ன எழுத்து! அப்படியே உள்ளே போய் ஆழமாகப் பதிந்து தலையிலே இருந்து கால்வரையும் ஒரு சிலிர்ப்பு.  இம்மாதிரியான பதிவுகளில் உங்கள் கைகளில் தானாக ஒரு உணர்ச்சிப் பிரவாகம் வந்துவிடுகிறது.  பல சமயங்களிலும் லா.ச.ரா.வின் பாற்கடலும், புத்ரவும் நினைவில் வருகிறது.  இரு முறை ரசித்துப் படித்தேன்.

2012/1/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஜனவரி: 1
சிசு தரிசனம்
‘ ... கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்... அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது... அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்... அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்...’
~ விவிலியம்: மத்தேயு: அதிகாரம் 2: 1,2,9,10,11
மேற்கத்திய கலாச்சாரம் தழுவிய புத்தாண்டு தினத்தில், திருமலை வெங்கடேசனை தரிசிக்க ஏகப்பட்ட கூட்டம். சந்துஷ்டியை தேடி அலையும் மானிடர்களுக்கு, ஏதோ ஒரு பிரமேயம் கிடைத்தால் போதும். குழந்தைகளை இனம் தெரியாத உபத்ரவங்கள் படுத்தினால், ஹிந்து குடும்பங்கள் மசூதியில் சென்று, தொழுகை முடிந்த பின் ‘துவா’ பெறுவது உண்டு. ஹிந்துக்கள் நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி மாதாகோயிலுக்கும் பயபக்தியுடன் செல்வதும் உண்டு. ‘சிசு தரிசனமும்’ சமய எல்லைகளையும், சம்பிரதாய லக்ஷ்மணரேகைகளையும்  கடந்ததுவே. பீடிகை முடிந்தது.

ஸிஃபி: கெளதமர் சமீபத்தில் அவதரித்த புத்தர் பிரான். அவர் மாதிரியே, இந்த மாமுனியும் கருணாமூர்த்தியாகவும், குருநாதராகவும் விளங்குவார் என்று எனக்கு தோன்றுகிறது. குருமுகங்கள் வந்து போகும். ஆனால், உன்னதமான சிஷ்யர்களுக்கு மட்டும் தானே ஞானம் கிட்டும்.
இன்னம்பூரான்
01 01 2012


உசாத்துணை:
Magre,M. (Translation: Merton, R.R.(1931) Return of the Magi.

--

அன்றொரு நாள்: ஜனவரி: 2 பன்முகப்புலமை




அன்றொரு நாள்: ஜனவரி: 2 பன்முகப்புலமை
8 messages

Innamburan Innamburan Mon, Jan 2, 2012 at 4:53 PM
To: mintamil , thamizhvaasal
அன்றொரு நாள்: ஜனவரி: 2
பன்முகப்புலமை

“ ப்ளேட்டோ ஆத்மா அழிவற்றது என்கிறார்; உவமைகள் பல உரைத்து ‘உளவியலுக்கு’ அடி கோலினார்... மனிதன் உயிர்தரித்து இருப்பதை அவனது ஆசாபாசங்கள், சினம், பகுத்தறிவு மூலம் நிரூபணம் செய்கிறான் என்கிறார். கிரேக்கமொழியிலிருந்து மொழிபயர்ப்பது கடினம். அவற்றை காமம், சச்சரவு, சிந்தனை என்றும் சொல்லலாம். அவற்றையெல்லாம் விழைகிறோம், வெறுக்கிறோம், உதறுகிறோம். இதையெல்லாம் ஆட்டுவிப்பது ஒரு நிர்ணய கோட்பாடு; உகந்ததையும், தகாததையும் பிரித்து இயங்குவது, அந்த அணுகுமுறை தனக்கு என்று வழி வகுத்துக் கொள்வது.
பகுத்து அறிவதுடன், இது தற்காலத்தில், ‘சுய தீர்மானம்’ (‘வில்’) என்று நாம் புரிந்து கொள்ளும் தன்மை. அது தான் ஆத்மா. இந்த காமம், சச்சரவு, சிந்தனையெல்லாம் ஆத்மாவின் தொண்டர்கள், வாழ்வின் பகுதிகளின் உருக்கள்; உயிர்மையின் வரத்துப்போக்குகள்...மற்றொரு இடத்தில் ப்ளேட்டோ விளக்குகிறார் ~‘ஒரு சாரட்; இரண்டு புரவிகள்; ஒன்று சோம்பேறி, கீழ்நோக்கி. மற்றொன்று துணிச்சல், பாய்ச்சல், விரைந்தோடி வரும் கடுமா. மனிதனோ அவற்றை அடக்கியாண்டு, லாகவமாக செலுத்துவதல்லாமல், வழி நடக்கும் பாதையையும் நிர்ணயிக்க வேண்டும். அவனுக்கு இந்த கட்டத்தில் பேருதவி செய்து, மார்க்க பந்துவாக இயங்குவது சாரதி. அந்த சாரதி தான் ஆத்மா...’
~ கில்பெர்ட் முர்ரே: 1918: ‘ஆத்மாவும், அதை கையாளுவதும்’: ஹிப்பெர்ட் ஜர்னல்: ஜனவரி 1918: மீள்பதிவு: பிரம்மஞான சங்கம்: சென்னை: அடையார்’






கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. புலமையும், பரந்த மனப்பான்மையும், புன்னை மரத்தடி போதனை ஆற்றலும் , உலகளாவிய சிந்தனையும், தொன்மையின் மரபை பேணும் ஆர்வமும், திறந்த மனமும், சிரித்த முகமும், கனிவும், பரிவும் ஆன குணமும்,ஒன்றுக்கொன்று போட்டியிடாமல், ஒருவரிடம் ஒண்டுக்குடித்தனம் செய்தால், அதை விட பெரும்பேறு ஒருவருக்கும் கிட்டப்போவதில்லை. நேற்று மதிய உணவுக்கு ஒரு விருந்தினர். அவருக்கு தமிழுடன், நம் எல்லாரையையும் விட பழைமையாக உள்ள உறவைக் கண்டு நான் மகிழ்ந்தேன். பிறகு அதை பற்றி எழுதுகிறேன். நாங்கள் அளவளாவும் போது ஏழு தலைமுறைகளாக, இங்கிலாந்திலும், இந்தியாவிலும் கல்வி அளிப்பது நடந்த விதத்தை ஆக்கப்பூர்வமாக விவாதிக்க இயன்றது. அவரவர் கருத்துக்கள், அனுபவங்கள், கேட்டறிந்தது, சுருக்கமாக:
1800 ~ 1900: வீட்டுப்பாடம், ஓலைச்சுவடி, திண்ணைப்பள்ளிக்கூடம், சில கிராமங்களில் குடத்துள் குத்துவிளக்கு போன்ற புலவர்கள், சைவ மடங்களின் தமிழார்வம், நகரங்களில் பட்டணங்களில், அதுவும் கிருத்துவ பள்ளிகளில் படிப்போருக்கு, எளிதில் ஆங்கிலப்புலமை;
1900 ~1950: மேற்கண்டவை வேகமாக பரவின. கும்பகோணம் கல்லூரி போன்ற அரசு உயர்கல்வி, நகரத்தார் =கொடை: காரைக்குடியில் பெண் கல்வி, சென்னையில் கலவலக்கண்ணன் செட்டியார், எம்ஸிட்டி பள்ளிகள், பார் அட் லா அழகப்பச்செட்டியார், ராஜா ஸர் அண்ணாமலை செட்டியார் கல்வி வள்ளல்கள், புதுக்கோட்டை குலபதி பாலையா, தம்புடு சார் போன்றோரின் கல்வி தானம், ஒரு பக்கம் உ.வே.சா, திரு.வி.க. தலையெடுத்தது; ஒரு பக்கம் ஐ.சி. எஸ். அதிகாரிகள். ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி, நடுத்தர குடும்பத்தில் பிறந்து, கல்வி பெற்று, இங்கிலாந்து மேல்படிப்பில், கிரேக்க/ரோமாபுரி இலக்கியங்கள் கற்று, நமது மரபுகளை கற்றுக்கொண்டு, நுண்கலை, இலக்கியம், ஓவியம் எல்லாம் அறிந்து, தன்னுடைய துறையில் வல்லுனராக விளங்கியது பற்றி பேசப்பட்டபோது, கல்வியின் தரம், முழுமை, விசாலம், தொடர் நிலை, வாழ்வியல் மாற்றங்கள் ஆகியவை முன் வைக்கப்பட்டன.
1950 ~1975: அகில இந்திய கல்விக்கொள்கைகள் முக்கியத்துவம் பெற்றாலும், மாநிலங்களில் கல்வி தீவுகள் கோலோச்சின. தமிழ்நாடு பொருத்தவரை, அது கண்கூடு. கல்வியின் விலை கணிசமாக ஏறியது, பிற்பகுதியில்
1975 ~ 2011: குலபதிகள் கடந்த கால வரலாறு. கல்வித்தந்தைகளின் யதேச்சதிகாரம் தலை தூக்கியது. கல்வியின் விலை தாறுமாறாக ஏறியது. தமிழ் தாழ்ந்தது. ஆங்கிலத்துக்கு ஆதரவு மிகுந்து வருகிறது. இது நடைமுறையில். பேச்சளவில், ஆங்கிலம் தாழ்ந்தது. தமிழுக்கு அமோக ஆதரவு. 2011 ஆண்டு பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் இங்கிலாந்து மாணவர்களின் அறிவுகிடங்கு, சராசரி தமிழ்நாட்டு பட்டதாரியின் படிப்புக்கு சமானம் என்றால், அது மிகையல்ல,
இத்தருணம், ஜனவரி 2, 1866 அன்று ஆஸ்ட் ரேலியாவில் பிறந்த பேராசிரியர் கில்பர்ட் முர்ரே அவர்களை பற்றி பேச்சு வந்தது. 23 வயதில் க்ளாஸ்கோ பல்கலை கழகத்தில் கிரேக்க இலக்கிய பேராசிரியர். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 1926ம் வருடம்  கவிதை இலக்கிய பேராசிரியாக இருந்ததைத் தவிர, 1906லிருந்து 28 வருடங்கள் ஆக்ஸ்ஃபோர்ட்டில் ரீஜியஸ் பேராசிரியர் என்ற உயர்பதவியிலமர்ந்து, கிரேக்க இலக்கியத்தை புன்னை மரத்தடி போதனை செய்தார். அருமையான மொழி பெயர்ப்பாளர்.  1897லிருந்து 1960 வரை அநேக நூல்கள் எழுதியுள்ளார். உலக சமாதானத்திற்கு உழைத்தார். ஐ.நா. சம்பந்தமான மையத்துக்கும், அதற்கு முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்ஸ் சம்பந்தமான மையத்துக்கும் தலைவராக தொண்டு செய்தார். துவக்கத்தில் பட்டியல் இடப்பட்ட நற்குணங்களுக்கு உறைவிடமாக இருந்தார். அவரை பில் கேட்ஸ் மாதிரி சாதனையாளர் என்று சொல்ல முடியாது. ஆனால், அவருடைய ஆசிரியர்கள் அளித்த கல்வியின் கடலாழத்தாலும், சுய விசாரணை தன்மையாலும் ஒரு பூரணத்துவம் அடைந்த மாமனிதரவர் என்றால், அது மிகையாகாது. அவரை துருவநக்ஷத்திரமாகப் பாவித்து, கல்வித்தீக்கு ஆஹூதி செய்வோமாக.
இன்னம்பூரான்.
02 01 2012
பி.கு. ‘ஆத்மாவும் அதை கையாளுவதும்’ என்ற தலைப்பில் அரிஸ்டாட்டிலும், அண்ணல் காந்தியும் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ளதை ‘கட் அண்ட் ஒட்’ செய்வது எளிது. அப்படி செய்தால், ஆத்மா கேலி செய்யும்! என்றோ ஒரு நாள், தமிழாக்கம் செய்கிறேன், அவற்றை. ஒரு வியப்பு. நேற்று சிசுவை தரிசித்தோம். கில்பர்ட் முர்ரேயை பல வருடங்கள் படித்த எனக்கு, இன்று தான் அவர் அதை பற்றி எழுதியது கிடைத்தது. அதுவும் திருமதி. கீதா சாம்பசிவம் ஆத்மார்த்தமாக எழுதியதின் நல் வரவு என்று நினைக்கிறேன். ப்ளேட்டோ பேசுவது பகவத் கீதா சாரமா?

9780199208791.jpg

உசாத்துணை:
Christopher Stray (2007) Gilbert Murray Reassessed: Hellenism, Theatre, and International Politics

Geetha Sambasivam Mon, Jan 2, 2012 at 9:15 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
. கல்வித்தந்தைகளின் யதேச்சதிகாரம் தலை தூக்கியது. கல்வியின் விலை தாறுமாறாக ஏறியது. தமிழ் தாழ்ந்தது. ஆங்கிலத்துக்கு ஆதரவு மிகுந்து வருகிறது. இது நடைமுறையில். பேச்சளவில், ஆங்கிலம் தாழ்ந்தது. தமிழுக்கு அமோக ஆதரவு. //

எனக்கு அப்படித் தெரியலை ஐயா. :((((  ஆனால் கல்வி பற்றி நீங்கள் கூறி இருக்கும் அனைத்துக் கருத்துக்களும் சரியானவையே.  கல்வித்தீக்கு ஆஹூதி செய்யவேண்டும்.  ஒரு சின்ன வேண்டுகோள்.  தாங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள் என்றாலும் நினைவூட்ட விரும்புகிறேன்.


தாங்கள் தரம்பால் அவர்களின் தளத்தில் இந்தக் குறிப்பிட்ட பக்கம் சென்று : The Beautiful Tree Indigenous Indian Education in the Eighteenth Century 
:இந்தப் புத்தகம் குறித்த தங்கள் கருத்தைப் பதிவு செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் மூலம் இது பலரையும் சென்றடையும் என்ற சின்ன நப்பாசையும் காரணம்/.
அதோடு உங்கள் கருத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

2012/1/2 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி: 2
பன்முகப்புலமை


பி.கு. ‘ஆத்மாவும் அதை கையாளுவதும்’ என்ற தலைப்பில் அரிஸ்டாட்டிலும், அண்ணல் காந்தியும் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ளதை ‘கட் அண்ட் ஒட்’ செய்வது எளிது. அப்படி செய்தால், ஆத்மா கேலி செய்யும்! என்றோ ஒரு நாள், தமிழாக்கம் செய்கிறேன், அவற்றை. ஒரு வியப்பு. நேற்று சிசுவை தரிசித்தோம். கில்பர்ட் முர்ரேயை பல வருடங்கள் படித்த எனக்கு, இன்று தான் அவர் அதை பற்றி எழுதியது கிடைத்தது. அதுவும் திருமதி. கீதா சாம்பசிவம் ஆத்மார்த்தமாக எழுதியதின் நல் வரவு என்று நினைக்கிறேன். ப்ளேட்டோ பேசுவது பகவத் கீதா சாரமா?

9780199208791.jpg

உசாத்துணை:
Christopher Stray (2007) Gilbert Murray Reassessed: Hellenism, Theatre, and International Politics
--


செல்வன் Mon, Jan 2, 2012 at 9:22 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/1/2 Innamburan Innamburan <innamburan@gmail.com>
1975 ~ 2011: குலபதிகள் கடந்த கால வரலாறு. கல்வித்தந்தைகளின் யதேச்சதிகாரம் தலை தூக்கியது. கல்வியின் விலை தாறுமாறாக ஏறியது. தமிழ் தாழ்ந்தது. ஆங்கிலத்துக்கு ஆதரவு மிகுந்து வருகிறது. இது நடைமுறையில். பேச்சளவில், ஆங்கிலம் தாழ்ந்தது. தமிழுக்கு அமோக ஆதரவு.

பள்ளிகூடமும், மருத்துவமும் நடத்தவேண்டிய அரசு சாராயம் விற்றுகொண்டும், பஸ் ஓட்டிகொண்டும், பால்வணிகம், ஓட்டல் வணிகம் ஆகியவற்ரையும் நடத்தி வருகிறது. அதனால் சாராயம் விற்பவர்கள், பால் வியாபாரிகள் ஆகியோர் கல்விதந்தைகளாகவும், மருத்துவதந்தைகளாகவும் ஆகிவிட்டனர்.

வாழ்க சோஷலிசம்.
--
செல்வன்





-- 

Innamburan Innamburan Tue, Jan 3, 2012 at 6:01 AM
To: mintamil@googlegroups.com
திருமதி கீதா சொன்னதை செய்கிறேன். நன்றி. திரு.செல்வனின் நகைச்சுவை அபாரம். முதலாளித்துவத்தின் அட்டகாசங்களுக்கு 'சோஷலிசம்' என்று புனர்நாம்கரணம் செய்து விட்டார்.
இன்னம்பூரான்
2012/1/2 செல்வன் <holyape@gmail.com>




செல்வன் Tue, Jan 3, 2012 at 6:21 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அரசு இயங்கவேண்டிய துறையில் அரசு இயங்காவிட்டால் அங்கே முதலாளிகள் தான் செயல்படுவார்கள். எதுவும் இல்லாத வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பார்களே அதுபோல.

தொழில்துறையில் இருந்து அரசு விலகிகொண்டு முதலாளிகளுக்கு வழிவிடவேண்டும். கல்வி மற்றும் மருத்துவத்தில் மட்டும் அரசு இறங்கினால் முதலாளிகள் தாமே ஓடிவிடுவார்கள். நல்ல தரத்தை கொடுத்து இலவச கல்வியையும் அளிக்கும் அரசுபள்ளியுடன் போட்டியிட எந்த கான்வென்ட்டால் இயலும்?






Nagarajan Vadivel Tue, Jan 3, 2012 at 6:36 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
செல்வன் ஐயா
நான் உயர்கல்வித் துறையில் செயல்பட்ட பட்டறிவுடன் சொல்வது
அரசு மட்டுமே உயர்கல்வித் துறையில் பெரும்பங்குகொண்டு தனியார் முயற்சியை ஊக்குவிக்காத காலத்தில் உயர்கல்வியில் க்ல்லூரிப்பருவ மாணவர்களின் விழுக்காடு மொத்தம் 5% விழுக்காடுகளே
இன்று தனியார் பங்களிப்புடன் மாணவர் விழுக்காடு 12%
இந்தியா உயர்கல்வியில் வளர்ந்தநாடு என்று கண்க்கிட அடிப்படையில் 20% மாணவர்கள் உயர்கல்வி பயிலவேண்டும்
இந்திய அரசு இந்த இலக்கை அடையப் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது
பொது மருத்துவத்திலும் அதே நிலைதான்
உயர் கல்வியில் தனியார் ஈடுபாடு என்பது என் உயரற்ற உடலின்மீதுதான் நடக்கவேண்டும் என்று சூளுரைத்து அவர் வாழ்நாளில் ஆந்திராவில் தனியார் முயற்சிக்குத் தடைபோட்டவர் என்.டி.ஆர்
தனியார் முயற்சியைச் சோதனை ஓட்டமாக நடைமுறைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்
இன்று தகவல் தொழில் துறையில் கோலோச்சும் ஆந்திரர்கள் எல்லாம் தமிழகத் தனியார் முயற்சியில் உருவான கல்விக்கூடங்களில் இருந்துதான் வெளிக் கிளம்பினார்கள்
கல்வி எல்லாருக்கும் பொது
அதற்கு இஸச் சாயம் பூச வேண்டாம்
நாகராசன்
[Quoted text hidden]

செல்வன் Tue, Jan 3, 2012 at 6:48 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நாகராசன் ஐயா

பொருளாதாரத்தில் அரசு எத்துறையில் இயங்கவேண்டும், எதில் இயங்ககூடாது என வரையறை செய்வது அவசியம். அரசு இயங்ககூடிய, இயங்கவேண்டிய துறைகள் கல்வி மருத்துவம் ஆகியவை. ஐடியலாக பார்த்தால் இவை இரண்டும் மக்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் கிடைக்கவேண்டும். இதற்கு அரசு இத்துறைகளில் மேலும் அதிகமாக செயல்படவேண்டும். அதற்கு ஒரு வழி ஏர் இந்தியா நடத்தி 65,000 கோடியை நஷ்டமாக்காமல் அதை விற்றுவிட்டு அந்த காசில் கல்லூரிகள், மருத்துவமனைகளை அரசு கட்டலாம்.

தனியாரை கல்விதுறையிலிருந்து தன் சிறப்பான சேவையால் அரசு விரட்டவேண்டும். அது முடியாது என்பது ஒருபுறம் இருக்க குறைந்தது அந்த நோக்கத்துடனாவது போட்டி மனபான்மையுடன் அரசு கல்லூரிகள்,பள்ளிகள் இயங்கினால் மாணவர்களுக்கு நல்லது என்பது என் கருத்து. அரசு பள்ளி இலவச கல்வியை அளிக்கையில் அதில் சேராமல் பீஸ் கட்டி தனியார் பள்ளியில் ஒரு மாணவன் சேர்ந்தாலும் அதை கவுரவபிரச்சனையாக அரசு பள்ளிகள் கருதி தம்தரத்தை அதிகரித்து தனியார் பள்ளிகளை திவால் ஆக்கவேண்டும்.இத்தகைய ஆரோக்கியமான போட்டி கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் நிலவவேண்டும் எனவே குறிப்பிட்டேன்.
[Quoted text hidden]
[Quoted text hidden]

Thevan Tue, Jan 3, 2012 at 6:16 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
திரு செல்வன் அவர்களே,

பள்ளிக் கூடத்தையும், மருத்துவத்தையும் அரசாங்கம் நடத்தத் தேவையில்லை. அத்துறைகளை கண்காணித்து நடத்தினால் போதும்.