Thursday, July 10, 2014

'புஸ்வாணம்' மத்திய பட்ஜெட் 2014 -15: ஓர் அலசல்

'புஸ்வாணம்' மத்திய பட்ஜெட் 2014 -15: ஓர் அலசல்
பிரசுரம்: http://tamil.webdunia.com/article/union-budget-2014-15/a-quick-review-of-union-budget-2014-15-114071000038_1.html(இன்னம்பூரான், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர்) 

pastedGraphic.pdf


“அத்தையும் செய்யலாம்; இத்தையும் செய்யலாம்; ஐவேஜி இல்லாத்துக்கு என்னத்தைச் செய்யலாம்?” - சர். அமராவதி சேஷையா சாஸ்திரிகள் (1828 –1903), திருவிதாங்கூர் / புதுக்கோட்டை சமஸ்தான திவான். நிகரற்ற நிர்வாகப் புனரமைப்புத் திறனாளி.
இன்று மத்திய அரசின் பட்ஜெட் 2014-15 ஐச் சமர்ப்பித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களின் பரிதாப நிலையை நூறாண்டுகளுக்கு முந்தைய மேற்படி வினா தயவு தாக்ஷிண்யமில்லாமல் பிரதிபலிக்கிறது. அவரே ‘சவால்’ என்று ஒத்துக்கொண்டு தான் சமாளிக்கிறார். மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி. ஜெட்லிக்கு எல்லாப் பக்கத்திலிருந்தும் இடி, அடி, உதை. 
காங்கிரஸ் கட்சி கூட்டணி கஜானாவைக் காலியாக விட்டுச் சென்றனர். மான்ய துஷ்பிரயோகம் மட்டுமில்லை; கஜானாவையே முழுங்கிய ஊழல்கள் கொள்ளையடித்தன. போதாக் குறையாக, தான்ய குதிரும் காலியாகிவிடுமோ என அச்சம் இருக்கிறது, வருண பகவானின் கருணை இருக்காது என்ற கணிப்பு இருப்பதால். நீரின்றி அமையாது உலகு. 
மூன்றாவதாக, ஈராக் சிக்கலின் எதிர்வினைகள் படாத பாடு படுத்தும். உலகமே ஒரு கிராமம் என்பதால், பன்முனைச் சிக்கல் தோன்றிய வண்ணம் இருக்கும், தற்காலிக முன்னேற்றம் நீடிக்காவிடின். அண்டை நாடுகள் பிரச்னை வேறு. மத்திய அரசின் சீர்திருத்தங்கள், ஆளுமையில் ஊறிப் போனவர்களைப் பாதிக்கும் என்பதால், உள்குத்து, தாக்குதல், கிருத்திரமம் எல்லாம் கைவரிசையைக் காட்டும். இத்தனைக்கும் நடுவில், தங்கமும் தன தான்யமும், தனி மனித ஐஸ்வர்யமும், நாட்டுச் செல்வக் களஞ்சியமும் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை திரு. ஜெட்லி இன்முகத்துடன் இந்திர ஜாலம் செய்து நிறைவேற்றியிருக்க வேண்டும், இந்த பட்ஜெட்டில்! 
1947இலிருந்து எல்லா இந்திய பட்ஜெட்களையும், திரு. நானி பால்கிவாலா அவர்களின் தயவால் புரிந்து, படித்து வந்த எனக்கு என்னமோ ஏமாற்றம் தான். ஒருகால், ஒரு நாள் முன்னால் அறிவிக்கப்படும் பொருளியல் ஆய்வறிக்கையின் துணிவு என் எதிர்பார்ப்பைக் கூட்டி விட்டதோ? அது பல நுட்பங்களை, காரண காரியங்களை, பழங்கதை, புதிய திட்டம், சால்ஜாப்புகள் ஆகியவற்றைக் குறிப்பால் உணர்த்தும். 
ஒரு சூசகம். ஊகங்களும், உண்மை நடப்புகளும் சாமர்த்தியமாகக் கூடி வரும். ஏற்கனவே வெப்துனியாவில் வெளிவந்துள்ள பட்ஜெட் செய்திகளை அரைத்த மாவாக மறுபடியும் பதியாமல், என் உடனடி கருத்துகளை மட்டும் கூறுகிறேன்.  சுங்க வரி பக்கம் போகவில்லை. ஏனெனில் GST (சீர்திருத்தப்பட்ட பொது வரி) விஷயத்தில் பட்ஜெட் தெளிவு தரவில்லை. பட்ஜெட் அனுபந்தங்களைப் படித்த பின் எழுதக்கூடியதை இத்தருணம் தவிர்ப்பது தான் நடுநிலைமை. அதைக் கடைபிடிக்கிறேன்.
என் உடனடி கருத்துகள்:
1. அரசின் கஜானா வரத்து 5.4% -5.9% வரை வளரும் என்றார் ஜெட்லி, நேற்றைய ஆய்வறிக்கையில். அதைத் திரு.ப.சி. வரவேற்றது குறிப்பிடத்தக்கது. அதற்கான சூத்திரத்தைப் பட்ஜெட்டில் எதிர்பார்த்தேன்; ஏமாந்து போனேன்.
2. தங்கத்துக்கு சுங்கம் குறையும். 10% -6%. அதனால் கடத்தல் கட்டுப்படும் என்று நேற்றே ராய்ட்டர் நிறுவனம் ஊகித்தது. அது பொய்த்துப் போனது. சைனாவுக்கு அடுத்த படியாக, இந்தியா தான் தங்கத்தை அதிக அளவு இறுக்குமதி செய்கிறது. தங்கம் வாங்கும் அளவுக்குச் செல்வம் முடக்கப்படும். அதனால் இன்றியமையாத வளர்ச்சிக்குத் துட்டு கிடைப்பது குறைந்து விடும். இது மைனஸ். 
இதற்கு எதிர்வினையாக முடக்கப்பட்ட ஐவேஜு அந்த அளவுக்குப் பணவீக்கம் அதிகரிப்பதைக் குறைத்திருக்க வேண்டும். போன நிதி ஆண்டில் அரசு செல்வ நிலையில் 20இல் ஒரு பங்கு இவ்வாறு முடக்கப்பட்டது: $54 பிலியன்:1017 டன். அது நடக்கவில்லையே. இப்படிப் போனால் அப்படி. அப்படிப் போனால் இப்படி! இந்தப் பிரச்னையை திரு.ஜெட்லி அணுகவேயில்லை.
3. அவரது உரையை உன்னிப்பாகக் கவனித்துக்கேட்டேன். எனக்கு என்னமோ கவலையுடன் திருமதி. இந்திரா காந்தியின் ‘கரீபி ஹடோ’ (ஏழ்மையை விரட்டு) முழக்கங்கள் தான் நினைவுக்கு வந்தன. காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி, வேளாண் துறைக்குப் பல முக்கிய திட்டங்கள், தேசிய அளவில் வேளாண் சந்தைகள், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம், மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி, நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி, பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி போன்றவை அறிவிப்புகளாக தென்பட்டனவையே தவிர, திட்டமிட்டு வரையறைகள் வகுத்த பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளாகத் தென்படவில்லை. இந்த வைராக்யமெல்லாம் காற்றோடு போய்விடுமோ என்ற அச்சம் எழுகிறது.
4. ஏன்? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வரவு செலவில் துண்டு விழுவதைச் சமாளிப்பது, செல்வம் கூட்டுவது, கடன் அடைப்பது ஆகியவற்றைப் பற்றி அவர் ஆற்றிய உரையில் தெளிவு காண முடியவில்லை.
5. பட்ஜெட் என்றால் எல்லாரும் வருமான வரி பற்றித் தான் முதலில் கவனிப்பார்கள். சம்பளம் / ஓய்வூதியம் வாங்குபவர்கள் தான் வருமான வரியை ஒழுங்காகக் கட்டுகிறார்கள். அதன் பொருட்டு, ஒரு காலத்தில் சிறிய சலுகை ஒன்று இருந்தது. அதை ஆவலுடன் மத்திய வர்க்கம் எதிர்பார்த்தது. ஏமாந்து போனார்கள். பசு மாட்டைக் கறக்காமல் விடுவாரோ, ஜெட்லி?
6. தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சமாகவும் / முதியோர்களுக்கு ரூ. 3 லட்சமாகவும் உயர்த்தியது பேருக்குத் தான். டோகனிஸம். இது ஒரு கண்துடைப்பு தான். சேமிப்புக்கான சலுகையை ரூ.1.5 லட்சமாக உயர்த்தியது, பொருளியலை அசட்டை செய்வது. நியாயமாக அதை ரூ.3 லட்சம் என்று நிர்ணயித்திருந்தால், அரசுக்கும் பல செலவுகளுக்கு முதலீடு கிடைத்திருக்கும். தனி மனிதனும் ஆதாயம் பெற்றிருப்பான். அதுவும் போச்சு. கிசான் விகாஸ் சேமிப்பு பத்திரங்களால் கணிசமான சலுகை கிடைக்கவில்லை.
7. பல கோடி வருமானத்துக்கும், சில லட்ச வருமானத்துக்கும் ஒரே விகிதத்தில் வரி. இது தகுமோ? ஒரு 40% ஸ்லாப் வரவேண்டும். நான் ஒரு சிறிய முன்னேற்றமாவது எதிர்பார்த்தேன். கிட்டவில்லை. அம்பானியும் அம்பி மாமாவும் ஒரே விகிதாச்சாரத்தில் வரி கட்டுகிறார்கள்! 
8. சுருங்கச் சொல்லின், முக்கியமாக மும்முனை மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன - பொருளியல் சிக்கல்களை, அரைவேக்காடாக தனித் தனியாக அலசாமல், பொதுவான, முழுமையான அணுகுமுறை செயல்படுத்தப்படும் என்றது ஆய்வறிக்கை. அடுத்தபடியாக, தரகர்களை விலக்கி, வேளாண்மைக்கும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய்க்கும் ஆதாரமான நவீன சந்தை அணுகுமுறை செயல்படுத்தப்படும் என்ற ஆய்வறிக்கையிலும் விவரம் போதாது; பட்ஜெட்டும் மூடி மெழுகி விட்டது. 
9. எல்லா விதமான நிலக்கரிக்கான சுங்கவரி ஒன்றே என்று அவர் 12:57 மணியில் சொன்னது எனக்குத் தூக்கி வாரி போட்டது. பின்னணி கொஞ்சம் கூட கூறப்படவில்லை.

10. பல வருடங்களாகப் பேசப்படும் நேரடி வரித் திட்டம் (Direct Tax code) பற்றி, மேலும் பேசப்படும் என்கிறார்!
ஆக மொத்தம் எனக்கு ஏமாற்றம் தான். இந்த ஏமாற்றத்தைப் போக்க, மேலும் ஆக்கப் பூர்வமான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine


www.olitamizh.com

Wednesday, July 9, 2014

புல்லட் ரயில்வே பட்ஜெட் - ஒரு 'சட்புட்' அலசல்












புல்லட் ரயில்வே பட்ஜெட் - ஒரு 'சட்புட்' அலசல்

pastedGraphic.pdf
இன்னம்பூரான் 
புதன், 9 ஜூலை 2014 (13:27 IST)

pastedGraphic_1.pdf
pastedGraphic_2.pdf


யானை வரும் பின்னே. மணியோசை வரும் முன்னே என்பது போல ரயில்வே பட்ஜெட், மத்திய அரசின் வருடாந்திர பட்ஜெட்டின் முள்ளுப் பெருக்கிச் சாமி. வைணவ கோயிலொழுக்குப்படி பெருமாளை எழுந்தருளிப் பண்ணி உலா வரும் முன், சேனை முதலி ஓட்டமும் நடையுமாக பாதையைச் சீர்ப்படுத்துவார். அம்மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட் ஸ்டேஷன் வருவதற்கு முன்னாலேயே, பாதி வழியில் நின்றுவிட்டது. ஜூலை 8, 2014 அன்று புதிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் பற்றியும், புதிய ரயில்களையும் பற்றியும் வந்துள்ள விவரமான செய்திகளை மீள்பதிவு செய்யப் போவதில்லை. 

இந்திய ரயில்வேயின் வரலாறு போற்றத்தக்கது. பாடப் புத்தகங்களில் ஆங்கிலேயக் காலனி அரசு ராணுவ வரத்துப் போக்குக்காக ரயில்வே அமைத்தனர் என்று சொல்லப்பட்டது அரைகுறை உண்மை. பஞ்சம் ஏற்பட்டபோது உணவுப் பொருட்களைப் பெருமளவில் அனுப்பவும், வணிகம் செழிப்புடன் வளரவும், மக்களின் யாத்திரைகள் அதிகரிக்கவும், அதனால் இன பேதம் தணிந்து, கலாச்சாரப் பரிமாற்றம் நடந்ததிலும் ரயில்வேக்குப் பெரும் பங்கு உண்டு. 

கட்டை வண்டி போல மரக்கட்டை கதவுகள் கொண்ட நத்தை வேக பாஸெஞ்செர் வண்டிகளையும், உலகளாவிய துர்நாற்றக் கழிப்பறைகளையும், மாயவரம் டிகிரி காஃபியையும், விஜயவாடா ஆம்சத்தா (மாம்பழச்சாறு கற்றை), லோனாவாலா சிக்கியையும், பாடியாலா லஸ்ஸியையும் (நீர் மோர்), பதான்க்கோட் பரோட்டாவையும் நான் சுவைத்த பின்னரும், உயிரோடு இருக்கிறேன்! சில நாடுகளில் ரயில்வே பயணம் செய்திருக்கிறேன். மூன்று ரயில்வே மாவட்டங்களில் (Zonal Railways) பணி புரிந்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் இப்போது கை கொடுக்கின்றன. நன்றி: இந்திய ரயில்வே.

முதலில் ஒரு ரயில்வே ஜோக்: 

தென்னிந்திய ரயில்வேயின் ஒலவக்கோட்டுப் பகுதி என்று வைத்துக்கொள்ளுங்கள். நடந்தது என்னமோ மேற்கத்திய ரயில்வேயில். அதற்கு மேல் சொன்னால் வம்பு! 

இளமை வேகம்; திருமணமான அறுபது நாட்களுக்குள்; மோகம். உதவிப் பொறியாளர். ரயில் பாதையில் அத்வானமான காட்டின் நடுவில் ஒரு ரயில்வே பங்களா. ரயில் நிற்காது. அதனால், ட்ராலி வண்டியில் தம்பதி ஜாலி டூர்! பங்களாவைக் காணோம்! திரும்பி வந்து மேலாளரிடம் ‘பொய்க் கணக்கு’ என்று புகார். அவருடைய பதிலைக் கேட்பீர்களாக: 

‘அப்பனே! என்னை கேட்காமல் நீ ஏன் போனாய்? கட்டியதாகக் கணக்கு எழுதினவன் நான். உடனே, அது பாழாக இடிந்துவிட்டதால் அழிக்க வேண்டும்’ என்று திட்டம் கொடு’.  

எப்படி? இது ரயில்வேக்காரர்கள் தங்களுக்குள் கேலி செய்துகொள்வது.

உண்மையில், மற்ற துறைகளை விட ரயில்வேயில் நாணயம் அதிகம்; லாவண்யம் குறைவு. ஆனால், போன வருடம் காங்கிரஸ் கட்சி ரயில்வே அமைச்சரகத்தில் 1942 ரயில்வே கழிப்பறை துர்நாற்றம். தலைமை முதல் அடியாள் வரை ரயில்வே போர்டில் லஞ்ச வாவண்யம். அமைச்சரின் பெயர் அடிபட்டது. ராஜிநாமா செய்து தப்பிவிட்டார். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ தான் அநாகரீகமாக, அசிங்கமாக, இன்றைய ரயில்வே அமைச்சரின் பெயர்ப் பலகையைப் பிடுங்கி எடுத்து மிதித்தார். வெட்கக்கேடு! சீப்பை ஒளித்து வைத்தால், கல்யாணம் நின்று விடுமா? என்ன? ஆனாலும், மறைமுகமான லஞ்சம், வீணடிப்பில் ஆதாயம், அபாரச் சலுகைகள், அறுசுவை உண்டி எல்லாம் ரயில்வேயின் பிதுரார்ஜித சொத்துகள்! எல்லாம் அளவோடு இருக்கும், அந்தக் காலத்தில்!

இந்தப் பின்னணியில் புல்லட் ரயில்வே பட்ஜெட் அலசல்:

1. லஞ்சத்தை ஒடுக்கும் வகையில் அறிவிப்பு இல்லை; ஆனால், எல்லாம் வெளிப்படையாக இருக்கும் என்றது பட்ஜெட். இது போதாது.

2. நேருவின் சோஷலிஸம் வந்த போது தனியார் மயம் காசு செலவழிக்கத் தயாராக இல்லை. ஏகப்பட்ட திரவியம் வேண்டியிருந்தது: உதாரணம்: ரூர்க்கேலா எஃகு உற்பத்தி சாலை. அப்போது அரசு வாரியங்கள் / கம்பெனிகள் தலையெடுத்தன. இப்போது, தனியார் கை இங்கும், எங்கும் ஓங்கி உலகை அளக்கின்றன: உதாரணம்: அம்பானி.  ஸ்விஸ் வங்கிகளிலும் கோடிக்கணக்காகத் துட்டு! இந்தப் பின்னணியில் ரயில்வே பட்ஜெட் தனியார் / அன்னிய முதலீடு நாடுவது சரியே. ஆனால், கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு கண்காணிக்க வேண்டும். தணிக்கைத் துறைக்கு வழி விட வேண்டும். 2ஜி, நிலக்கரி, கச்சா எண்ணெய் ஜாம்பவான்கள் ஜொள்ளு விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!

3. புல்லட் ரயில் வகையறா நல்வரவு. பயிற்சி, பாதுகாப்பு, மராமத்து ஆகியவற்றில் முழுக் கவனம் தேவை.

4. பங்குச் சந்தை சிங்கியடித்ததைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அது தனி உலகம்.

5. கணினி மய ஏற்பாடுகள் கன ஜோர்.

6. பிரதமர் சொன்ன மாதிரி இது மக்கள் நலம் நாடும் பட்ஜெட். அதனால் தான் தமிழ்நாட்டு முதல்வரும், கருணாநிதியும் (ஓரளவு!) வரவேற்பு கூறியிருக்கிறார்கள். மற்ற புகார்கள் எல்லாம் சென்னை பாஷையில் ‘வேலைக்கு ஆவாது!’.

7. நாடாளுமன்றத்தில் அமளி செய்தது, சில எதிர்க் கட்சிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு. 

இன்னும் பேசிக்கொண்டே போகலாம். அவசியமானது மட்டுமே இடம் பெறுகிறது. அடுத்து 'சட்புட்' சடுதியில் பாயும் மத்திய பட்ஜெட்டைப் பார்க்கலாமா?

===================
ஒரு பின்னுரை:

வெப்துனியா தளத்தில் நாம் யாவரும் விழிப்புணர்வுடன் அறிந்துகொள்ள வேண்டிய பல துறைகளைச் சார்ந்த தகவல்கள் / செய்திகள் / வரலாற்றுச் சம்பவங்கள் / கருத்துக் களம் பற்றித் திறனாய்வு / விமரிசனம் செய்ய தருணம் கிட்டியதைப் பற்றிய என் மகிழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தத் தொடர், எல்லா விஷயங்களையும் நடுவுநிலையிலிருந்து, ஆக்கப்பூர்வமாக, விழிப்புணர்ச்சியை இலக்கு வைத்து அமையும். மக்கள் நலம், நீதிமன்றத்தார், கண்காணிப்பு, சமுதாயத்தின்/ அரசியலின் ராஜ பாட்டைகள், திக்குத் தவறிய ஒற்றையடிச் சந்துகள், குறுக்குப் பாதைகள், தணிக்கையின் தன்மையும், பயன்பாடும், மேலாண்மை, தன்னார்வம், ஐ ஏ எஸ் படிப்பு, மற்றும் பல எல்லாமே கலந்து வரும், வாசகர் விருப்பப்படி. கணகணப்பு இருக்கும்; ஆனால் புண்படுத்தாது. வெப்துனியாவில் பண்புடன் வரும் பின்னூட்டங்களும், மாற்றுக் கருத்துகளும், அளவளாவுதலும் நல்வரவே. பதில் அளிக்கப்படும்.

- இன்னம்பூரான்
===================

pastedGraphic_3.pdf

இதில் மேலும் படிக்கவும் :  


Tuesday, July 8, 2014

ராஜு விமோசனம்

ராஜு விமோசனம்
இன்னம்பூரான்
ஜூலை 8 ,2014
ஜூலை 2 அன்று 50 வருடங்களாக பாழாப்போன மனிதனால் நாள்தோறும் கொடுமைப்படுத்தப்பட்ட ராஜூவின் விமோசனம் நிறைவேறியது; அவர் அழுதார். சங்கிலி விலங்கு, கூர் ஆயுதத்தால் சதை கிழிய, பட்டினி; எடுப்பது பிச்சை.  அதை பிடுங்கி தின்பது பாகன்/சொந்தம் கொண்டாடும் படு பாவி. அவன் ராஜுவை கண்டபடி அடிப்பான்; மீட்டது, Wildlife SOS [founded 1955]. இதை ஆவணபடுத்தியது The Huffington Post என்ற பிரபல அமெரிக்கன் வலைப்பூ. விமோசனத்தின் மகிழ்ச்சியில் ராஜு அழுதது கண்டோர் மனதை உருக்கியது. நீங்கள் படங்களையும், வீடியோவையும் அவசியம் பார்க்கவேண்டும்.  
இன்று படித்த மற்றொரு செய்தி, தமிழ்நாட்டில் யானை கொலை செய்யப்பட்டது.
*
For 50 years, Raju the elephant was abused, held shackled in spiked chains and forced to live off scraps from passing tourists. All that changed when he was rescued last weekend by wildlife conservationists who said the animal cried when he was finally set free.
Wildlife SOS, a group established in 1995 to protect endangered wildlife in India, set out to rescue Raju on the night of July 2. Raju is around 50 years old and was likely captured as a baby and bought and sold many times over the course of his life. He was forced to work as a begging elephant in Allahabad. His legs were bound in spiked chains that made walking difficult and left him with chronic wounds. He was also beaten.
Wildlife SOS found out about Raju's story through India's Forestry Commission. When the group attempted to rescue Raju on the night of July 2 in the Uttar Pradesh region of India, his owner and mahout -- an individual who rides elephants -- apparently attempted to dismantle the effort with a standoff, Nikki Sharp, the executive director of Wildlife SOS-USA, told The Huffington Post Monday.
Raju's captors layered tighter chains on him and attempted to confuse him by shouting commands, but their efforts proved futile. A team of 10 veterinarians and experts from Wildlife SOS along with 20 Forestry Commission officers and two policemen managed to rescue the abused elephant, according to the Mirror, a British tabloid.
“Raju was in chains 24 hours a day, an act of ­intolerable cruelty. The team were astounded to see tears roll down his face during the rescue," Pooja Binepal, a spokesman for Wildlife SOS, said, per the Mirror. "It was incredibly emotional. We knew in our hearts he realized he was being freed. Elephants are majestic and highly intelligent animals. We can only imagine what torture the past half a century has been for him."
Sharp echoed Binepal's statement while speaking with HuffPost.
"They [the rescue team] went in to rescue him and they [his captors] had bound him up so tightly that he was in a lot of pain," she said. "The vet and our team came with fruits and just started speaking softly to him and to reassure him that we were there to help, and it was at that time that tears flooded down his face. The founder of Wildlife SOS, who was there are the time of the rescue, said .... that really caught him off guard. They've done a lot of elephant rescues and the fact the the tears were just coming down ... he was weeping. It was an emotional moment and everyone was more motivated to get him on the truck and to safety."
Raju was taken to the Elephant Conservation and Care Centre in Mathura. On July 4, the same day Americans celebrated their independence, Raju took his first steps of freedom. Sharp said he is doing "fabulously." The Wildlife SOS team is prepared to help make Raju comfortable in his new life and to rehabilitate him by treating his physical wounds and introducing him to other elephants at the center.
Elephants can live up to 70 years. Sharp says they hope Raju has another 10 years or more ahead of him.