Saturday, December 26, 2015

நாளொரு பக்கம் 44


நாளொரு பக்கம் 44

Wednesday, the 8th April 2015



Ludwig Wittgenstein has been considered by many as the most influential Western philosopher since Immanuel Kant. He had wide-ranging interests -moving from engineering to philosophy to becoming an elementary school teacher to military service, all the while deeply delving in philosophical investigations.
‘Bertrand Russell, his pupil Ludwig Wittgenstein  and their colleague G. E. Moore – the pioneers of Analytic philosophy – shared the view that ‘all sound philosophy should begin with an analysis of propositions’ (Russell 1992: 9; first published in 1900). In Russell and Wittgenstein such analysis was centrally a matter of logic.’
Viewed in this background, it come as no surprise that he uses the simile of a combination lock. In sum, Phlosophy is an alluring Spreadsheet.
-x-

Thursday, December 24, 2015

நாளொரு பக்கம் 43

நாளொரு பக்கம் 43


Tuesday, the 7th April 2015

स्वभावो नोपदेशेन शक्यते कर्तुमन्यथा ।
सुतप्तमपि पानीयं पुनर्गच्छति शीतताम् ॥

கல்யாண தரகர்களில் ஒருவர் சொன்னாராம், ‘ நான் சிபாரிசு செய்யும் பையனுக்கு தாராளமாக உங்கள் பொண்ணை கொடுக்கலாம். 64 குணங்களில் அவனுக்கு இரண்டு தான் இல்லை. மற்றபடி தங்கமான பையன்’. பொண்ணை பெத்தவன் கவலை அவனுக்கு. அந்த இரண்டும் என்ன என்று கேட்டாராம். பதில்: ‘தனக்காவும் தெரியாது; சொன்னாலும் கேட்கமாட்டான்!’.

இந்த பூவுலகில் பெரும்பாலோர் இப்படித்தான் ‘ரண்டுங்கெட்டான்’ என்ற உண்மையை மேற்படி சுபாஷிதம் டபால் என்று  போட்டு என்றோ உடைத்துவிட்டது: “ அடுப்பில் வைத்தால் தண்ணீர் வென்னீராகிறது. சற்று நேரம் கழித்து ஆறிவிடுகிறது. அது போல ஆலோசனை வழங்கி ஒருவரின் குணாதிசயங்களை மாற்றமுடியாது.”
இதையே, ‘நாய் வாலை நிமிர்த்த முடியாது.’ என்பார்கள். ஆனால், நாய் வாலை எதற்கு நிமிர்த்தவேண்டும்? அது பொருத்தமான உவமை அன்று.
In English: You can take the horse to water, but cannot make it drink.
அப்படியானால் என்ன் செய்யலாம்? தெரியவில்லை. சொல்லுங்கள்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://markewbie.weebly.com/uploads/4/0/3/9/40396485/7667532.jpg

Wednesday, December 23, 2015

SEASON'S GREETINGS & A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2016

SEASON'S GREETINGS & A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2016

INNAMBURAN

23 12 20115




IMAGE CREDIT & COPYRIGHT & THANKS TO GOOGLE




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, December 21, 2015

நாளொரு பக்கம்: 42

நாளொரு பக்கம்: 42


Monday, the 6th April 2015
பாரம்பரியம், மரபு போன்ற சொற்கள் நம்மை வரலாற்றின் முன்பக்கங்களுக்கு எடுத்து செல்கின்றன. தற்காலத்தில் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு, பழங்காலத்து ஆளுமை இருந்திருக்கிறது என்று புரிந்து கொண்டோமானால், அவற்றை பற்றி மேலும் மேலும் அறிய அவா எழும், ஆர்வம் உள்ளோருக்கு. ஆர்வமில்லாதவர்களுக்கும் மேலும் அறிய ஆவல் ஏற்படலாம். 

இனியவை நாற்பது, இன்னா நாற்பது போன்ற அறம் சாற்றும் நூற்கள், திருக்குறளுக்கு இணையாகவே அமைந்துள்ளன என்றால் மிகையாகாது. ‘இனியவை நாற்பது’ என்ற கடைச்சங்க நூலின் ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.

இறைவணக்கத்துக்கு பின் வந்து முதல் செய்யுளை காண்போம். 

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. ~ [1]

பிச்சை யெடுத்துண்டாயினும் கற்பனவற்றைக் கசடறக்கற்றல் மிக இனிது.  அங்ஙனம் கற்ற கல்விகள் நல்ல சபையில் உரையாட, அளவளாவ, தர்க்கம் செய்ய வந்துதவும். அதுவும் இனிதே. முத்தையொக்கும் பற்களையுடைய மகளிரது வாய்ச்சொல் இனிது. அது போலவே  சான்றோரின் துணைக் கொள்ளுதல் தெளியவுமினிது.
இத்தருணம்
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
என்று புறநானூறு கூறும் 177 செய்யுள் கண் முன்னே வந்து நிற்கும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.geotamil.com/pathivukalnew/images/stories/crit_7.jpg