Thursday, October 10, 2019

நாளொரு பக்கம் -1 - 6 நாளொரு பக்கம் -6


நாளொரு பக்கம் -1 - 6  நாளொரு பக்கம் -1

வெளி நாடுகளில் வாழும் நண்பர்கள் தங்கள் மகன்/மகள் ஆகியோருக்கு எளிதில் புரியவைக்கும் வகையில் இந்த பக்கங்கள் அமைகின்றன. கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.

சங்கக்காலத்து நூல்களில் நீதி நூல்கள் சில.  அவற்றில் பதிணென்கீழ்க்கணக்கு என்ற தொகுப்பிலஉள்ள  கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை என்ற சிறந்த நூலின் அறிவுரைகளை காண்போம். அவை பற்றி அளவளாவுவோம்.

இன்னம்பூரான்
10 10  2019  
ஆசார வித்து
(பஃறொடை வெண்பா)


நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து. [1]

1. நன்றி அறிதல்: 


'Thank You' has become common place. Even then, we should thank those who help us in one way or the other.
It is a good idea to say 'I am grateful to you' if some one imparts a lesson to us, like a teacher. You are driven say, 'I am beholden to you' in response to a gem of wisdom is shared with you. 

Harvard University noted, '...The word gratitude is derived from the Latin word gratia, which means grace, graciousness, or gratefulness (depending on the context). In some ways gratitude encompasses all of these meanings. Gratitude is a thankful appreciation for what an individual receives, whether tangible or intangible. With gratitude, people acknowledge the goodness in their lives. In the process, people usually recognize that the source of that goodness lies at least partially outside themselves. As a result, gratitude also helps people connect to something larger than themselves as individuals — whether to other people, nature, or a higher power...'


அடுத்து வருவது 'பொறையுடைமை' 


(தொடரும்). .



Youu really make іt appear really easy along with yourr presentatіon however I find thіs matter
to be really one thing whiich I think I would
by no means understand. It kind of ffeеls too complicɑted and extremely vast forr me.
I am looking ahead on youг subsequent pᥙblish, I wiⅼl tгy
to get the grаsp of it!
Thank You. I shall also try to simplify. I shall also look for other comments.
நாளொரு பக்கம் -2
2.  'பொறையுடைமை' 
அதாவது பொறுமை. 'பொறுத்தார் பூமியாள்வர்' என்பது பழமொழி.

கோபத்தைப்போல ஒரு தீமை  இல்லை
பொறுமையைப் போல ஒரு ஒழுக்கமும் இல்லை
எனவே பொறுமையை வளர்க்க கடுமையாக முயற்ச்சி செய்யுங்கள்
பல வழிகளிலும் கவனமாக பேணிவளர்த்துங்கள் 
        "போதிசத்துவர் போக்கில் ஈடுபடு" என்ற புத்தகத்திலிருந்து .  சாந்தி தேவா 

“One moment of patience may ward off great disaster. One moment of impatience may ruin a whole life.” – Chinese Proverb
These three quotes illustrate how patience is not only a virtue, is also a positive attitude and is inherent in Living Wisely.
(தொடரும்)
இன்னம்பூரான்


நாளொரு பக்கம் -3

இன்சொல் இயல்பிலேயே கூறுவது நற்பண்பின் அறிகுறியே. நமது சிறார்களுக்கு இனிமையாக பேசுவதை போதிக்கவேண்டும். உலகத்திலேயே மாபெரும் மேதையாக இயங்கிய அசோக சம்ராட் ப்ரியம் வதா என்று சொன்னதோடு நில்லாமல், தன்னையே பிரிய பாஷிணியாக அமைத்துக்கொண்டார். இன்றைய காலகட்டத்தில் கூட இனிமையாக பேசும் ஆசிரியர்களையும், அரசியல்வாதிகளையும் நாம் வரவேற்கிறோம். Wiki put it nicely:



.Speaking nicely to other people is about using your empathy to be considerate of others. It is about saying things clearly so that you are understood well. Speaking nicely also involves thinking before you speak, in order to put aside any of your own hostilities, annoyances and gripes that can cause tension or upset when holding a conversation or discussion.

(தொடரும்)
இன்னம்பூரான்
நாளொரு பக்கம் -4

முதல் பாடலிலேயே எட்டு நற்பண்புகள் கூறப்பட்டன. அவற்றில் 
நான்காவதாக 'எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமை' 
அறிவுடுத்தப்படுகிறது. இன்னாமை என்றால் மனதுக்கு துன்பம் விளைவிப்பத் -unpleasant. 

Lord Buddha said, 'If you have something unpleasant you have to say it... choose a wise time to say it. Don’t say it to them when they are tired, or angry and stressed out...If someone’s made a mistake, you don’t have to publicly embarrass them in front of others for it.


Admittedly, negative feedback cannot be always wished away. One can go about in a gentle, tactful way, at the same time, without beating araound the bush. Sincerity, humility and being non-judgemental helps a lot.


இன்னம்பூரான்

(தொடரும்)

நாளொரு பக்கம் -1 - 5  
நாளொரு பக்கம் -5

கல்வி என்பது பாடம் நடத்துவதில் மட்டும் நின்று போவதில்லை. வாழ்நெறியை அமைக்கும் இடை விடா இயக்கமது. அதனால் தான்கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு’. மேலும் நாலடியார் 132வது பாடல் கல்வியை அறியாமை என்ற பிணி தீர்க்கும் மருந்தாக பாவிக்கிறது

இம்மை பயக்குமால் ஈயக் குறைவு இன்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.    132

இந்த உலகத்தில் பெற விரும்பும் எல்லா நலன்களையும் உண்டாக்கித் தரும்கொடுத்தால் குறையாதுமாறாக வளரும். 
கல்வி உடையவரைப் பலர் அறிய விளங்குமாறு செய்யும்
அவர் உயிரோடு இருக்கும் வரையில் அவர் கற்ற கல்விக்குக் கேடு இல்லைஅதனால் எந்த உலகுக்குச் சென்றாலும் கல்வியைப் போல  அறியாமையைப் போக்கும் மருந்து ஒன்றினை யாம் கண்டதில்லை.  

வடமொழியில், ஹிதோபதேசம் (6) பகர்வது யாதெனில்:
கல்வி அடக்கத்தை படிப்பிக்கிறது. அடக்கம் பண்புக்கு வித்திடுகிறது. அடுத்த படி தகுதி. அதன் பரிசு செல்வம். செல்வம் தர்மத்துக்கு உதவுகிறது. தர்மிஷ்டர்களுக்கு மன மகிழ்ச்சி எளிதில் கிட்டுகிறது
विद्यां ददाति विनयं,
विनयाद् याति पात्रताम्।
पात्रत्वात् धनमाप्नोति,
धनात् धर्मं ततः सुखम्॥

“Vidya dadati vinayam vinayad yati patratam
Patratvad dhanam apnoti dhanad dharmam tatah sukham”


Education, as a discipline, transmits values and accumulated knowledge of a society. This is best done in the ambience of a school. It is designed to guide them in learning a culture, moulding their behaviour in the ways of adulthood, and directing them toward their eventual role in society.  
இன்னம்பூரான்
17 10 2019


நாளொரு பக்கம் -1 -6  

நாளொரு பக்கம் -6



அறிவுரையும், பரிந்துரையும் இரண்டறக்கலந்து நமக்கு அறுசுவையாக படைக்கும் புலவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார், கல்விக்கு அடுத்து ஒப்புரவு அறிதலை போற்றுகிறார். மஹாத்மா காந்தி போன்றவர்களின் பிறர்க்கும், சமுதாயத்துக்கும், அரசியல் களத்துக்கும், விடுதலை வேள்விக்கும் உதவிய பண்பு தான் ஒப்புரவு அறிதல் என்ற மேன்மை தரும் தன்மை. இது சொல்லிக்கொடுத்து வருவதில்லை, அன்பின் அகம் அளித்த வரபிரசாதம் இந்த   தான்தோன்றி உபயம் என்றாலும், ஆசாரக்கோவை நம்மை ஒப்புறவு அறிந்து அதை செயல் படுத்தத் தூண்டில் போடுகிறது.

பழமை தரும் ஒரு உதாரணம் நோக்குக:

 .....உறுநர்
தாமே ஒப்புரவு அறியின், ''தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல்'' என்று எம்மொடு படலே
! (நற்றிணை 220)

ஒப்புரவு என்ற சொல்லுக்குஉலக நடை அறிந்தவர்அதுபொது நன்மைக்காக, தன்னலம் கருதாததொண்டுத் தொண்டு தொண்டு என்றும் விளக்கலாம். மேற்படி பாடலில், தலைவிக்கு தோழி தந்திடம் கனிவான பணியை ஒப்புரவு என்று கூறப்படுகிறது. திருக்குறளில் பத்து பாடல்கள் ஒப்புரவு இலக்கணத்தை முன் வைக்கின்றன. 214 ஆம்குறள் “…ஒப்புரவு அறிந்தவன் உயிரோடு கூடி வாழ்பவனாவான் அதனை அறியாதவன் செத்தவர்களில் ஒருவனாக கருதப்பெறுவான் என்று அடித்து பேசுகிறது. அறிஞர் திலகம் .சுப.மாணிக்கம் அவர்கள், ‘ஒப்புரவு என்பதற்கு பிறர்க்கு உதவிடும் இனிய ஒழுக்கம், இணைந்து (ஒத்து, இசைந்து, பொருந்தி) ஒழுகுதல், ஒத்துப்போகும் மெல்லியல்பு என அகராதி பொருள் தருகிறது. +புரவு எனப் பிரித்து 'மன்பதைக்கு ஒத்த நிலையில் கொடை செய்தல்’’ என்று தெளிவுற விளக்கம் தருகிறார்.

நாம் யாவரும் ஒப்புரவு என்ற மெல்லியல்பு கற்போம், கற்றுக்கொடுப்போம், வாழ்ந்து காட்டுவோம் என்ற விருப்பத்தையே என் தீபாவளி வாழ்த்துக்களாக நமது இனிய சமூகத்துக்கு அளிக்கிறேன்.
கனிவுடன் இன்னம்பூரான்

27 10 2019

Wednesday, October 9, 2019

MY REPLIES TO தருமமிகு சென்னையும் நானும் முன்னுரை

I am sure this piece of writing has touched all the internet users,
its really really fastidious piece off writing on building up new
blog.
Thank You. I am encouraged.
Innamburan

  • MY REPLIES TO தருமமிகு சென்னையும் நானும் முன்னுரை
    AnonymousOctober 8, 2019 at 3:13 PM
    I've read some excellent stuff here. Definitely price bookmarking for revisiting.
    I surprise how a lot effort you set to create this sort of
    great informative web site.
    Thank You. I am encouraged.
    Innamburan
  • It's going to be end of mine day, but before ending I am reading
    this wonderful piece of writing to increase my experience.
    Thank You. I am encouraged. You are welcome.
    Innamburan

    I dο agree with all the ideas you've pressented to your post.
    They're vеry convincing and will certainly work. Still, the posts are very qiick
    for beginners. Could you please extend them a bit from subsequent tіme?
    Thanks ffor the post.
    Thank You. I shall try to extend. I am 87 and I have many items of work, redaing, writing, teaching, lecturing etc competing for time. I shll do my best.
  • I was wondering if you ever thought of changing the structure of your blog?
    Its very well written; I love what youve got to say.
    But maybe you could a little more in the way of content so people could
    connect with it better. Youve got an awful lot
    of text for only having 1 or two pictures. Maybe you could space it out better?
    Thank You. I fully agree with you. I shall try to space it out. I am 87 and I have many items of work, redaing, writing, teaching, lecturing etc competing for time. I shll do my best.
  • Tuesday, October 8, 2019

    தருமமிகு சென்னையும் நானும் முன்னுரை

    மீள்பதிவு 08 10 2019
    தருமமிகு சென்னையும் நானும்
    09/09/2010Innamburan Innamburan
    தருமமிகு சென்னையும் நானும்

    முன்னுரை

         சுபஸ்ய சீக்ரம்! ரங்கனாராவது விட்டுக்கொடுத்தார். என் எட்டு வயது மருமான் பேரன் ஒரு பொன்வாக்கு உதிர்த்தான், ‘எனக்கு மீசை முளைக்க எட்டு வருஷம் ஆகும். அதுவரை உயிரோடு இருந்தால் நீங்கள் பார்க்கலாம்!’ என்று. தொடங்கிவிட்டேன், குறிப்புணர்ந்து. உள்ளது உள்ளபடி எழுதுவதால், சிந்தித்து சிந்தித்து குழம்பவேண்டிய தேவை இல்லை. அவ்வப்பொழுது கொஞ்சமாக எழுதினால், யாரும் விரட்டப்போவதுமில்லை. 
         பட்டிக்காட்டான் பட்டணம் வந்த கதை தான் எனது. அக்ஷராப்யாசம் செக்கானூரணியில். குக்கிராமம். நரவாஹனம் (சித்தியாவின் தோளுக்கு இனியானாக!) பக்கத்து வீட்டு லீலா டீச்சர் தான் எஸ்கார்ட். அவர் தான் அந்த கிராமத்து பள்ளி ஆல் - இன்-ஆல். பத்தடி நடை. அப்றம் அவர் தோளில். ஏதோ பாடம், எல்லா வகுப்புக்களுக்கும் ஒன்றாக. கூச்சல் கூறையை பிளக்கும். அந்த களைப்பில் அவர் மடியில் தூக்கம். அந்த உரிமை எனக்கு மட்டும். எல்லா பசங்களும் வரும் - கிழிச ட்றாயர், நோ சட்டை. கவண் கல் வீசினால், குருவி காலடியில் விழும். குறி தப்பாது. அதிலெ கெட்டி, அந்த பசங்க.  ஏழை பாழைகள். பெற்றோர்கள் படிக்காதவர்கள். முக்காவாசி பிரமலைக்கள்ளர்கள். லீலா தெய்வம், அவர்களுக்கு. எனக்கு முதல் பாடம்: ‘இன பேதம் என்று ஒன்று இல்லை’. இது உணர்ந்தது; பாடம் எடுக்கப்படவில்லை. இருபது வருடங்களுக்கு பிறகு, உடல் நலம் நலிந்த என் தந்தையை பார்க்க அவரும், கணவர் ஷண்முகமும் (அப்பாவின் சக ஊழியர்.) வந்திருந்தார்கள். லீலா டீச்சர் பூரித்து போய்விட்டார், ‘ராஜூ கார்லெ கொண்டு விட்றான், அழகிய மனைவி, அப்பா அம்மாவை பாத்துக்கிறான்’ என்று. இத்தகைய பெருமிதம் பள்ளி ஆசிரியருக்கு மட்டுமே.
         காட்சி மாறுகிறது. காரணம் நினைவில் இல்லை. காரைக்குடி முத்தூரணி கரையில் ஒரு குடிசை. அங்கு சமத்து வாத்தியாரின் திண்ணைப்பள்ளிக்கூடம். வைஷ்ணவக்கும்பல். பட்டையா நாமம் போட்டுக்கணும். மணல் தான் ஸ்லேட். சுளீர்னு பிரம்பால் அடிப்பார். லீலா டீச்சர் மடியில் ரெஸ்ட் எடுக்கும் எனக்கு இந்த கொடுமை ஒத்து வருமோ? கொள்ளுப்பாட்டியிடம் பிராது கொடுத்தேன். அவள் கையை பிடித்துக்கொண்டு, ‘சமத்தா’ மறுநாள் போனேன். பாட்டியின் வாக்கு, 
    ‘ஏண்டா சமத்து! ஏன் புத்தி கெட்டு அலையறே? குழந்தை மேலே கை வச்சே! கூறு கூறா வெட்டி குளத்தலே வீசிடுவேன்!’ 
         இல்லாத மீசையை முறுக்கிக்கொண்டேன்! அன்றைக்கு தான் நாமம் போட கற்றுக்கொண்டேன். இனி நான் தான் சமத்து. ஆனால், முனகுவார், ‘இந்த வாண்டு ஆட்டி வச்சிருத்து.’ நம்ம கிட்ட அளவு கடந்த கசப்பான கனிவு. நாலு மாசம் கூட அங்கே படிக்கவில்லை. அப்பவோ, பிறகோ, எப்டியோ எனக்கு ஃப்ரெண்ட் காதர் மொய்தீன். ஒரு நாள் அவன் குல்லாவை போட்டுக்கொள்ள, பாட்டி சிரியா சிரித்தாள். தாத்தா வெடியா வெடித்தார். நான் பொருட்படுத்தவில்லை. அப்பவே ‘டோண்ட் கேர் மாஸ்டர்’. தாத்தா வச்ச காரணப்பெயர். ஒரு நாள் அவரை பற்றி எழுதணும். எனக்கு வாழ்நெறி கற்றுக்கொடுத்த சான்றோன்.
         அப்றம் தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் வித்யா சாலை. தொடர்பு இருக்கிறது. தலைமை ஆசிரியர் பிரகாஷ், என்னைப்பற்றிய பதிவுகள் எடுத்துக்கொடுத்தார், கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு பிறகு! முதலில் கிடைக்கவில்லை. சக்கு பாய் என்று தேடுங்கள் என்றேன். ஹூம்! விமலா என்று தேடச்சொன்னேன். கிடைத்தது. அவள் தான் அப்போது உயிர்தோழி என்றேன். ஹெட் மாஸ்டரோல்லியோ! ஒரு மாதிரியா பார்த்தார். நான் கண்டுகொள்ளவில்லை. எல்லாத்தையும் சொல்லிண்டுருப்பாளா? என்ன? 
         பிறகு உசிலம்பட்டி, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, சென்னை வருகை. இந்த ப்ராக்கெட்டுக்குள் 12 வருடங்கள். பெரும் காதைகள். சொல்றதுக்கு வேளை வந்தால், பார்த்துக்கொள்ளலாம். என்னடாது? சென்னையை பற்றி கேட்டால் சுயபுராணம் எழுதரானே என்று கேட்டால் - 1. இது எப்படி போகும் என்று எனக்கே தெரியாது. 2. நான்கு தலைமுறை தொடராகவும் பயணிக்கலாம். 3. தருமமிழந்த சென்னை மட்டும் பேசப்படலாம். 4. அஸ்வத்தாமை போல, திருமங்கலம் டாக்டர் சிரம் திருகியது முதல் நவம்பர் 2010 விழா வரை - வோல்காவிலிருந்து கங்கை வரை மாதிரி நீண்டும் போகலாம். 5. எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு விருப்பமில்லாதது உரைக்கப்படா.

    ரங்கனார் அளித்த தாரக மந்திரம்: ‘ஒன்று விடாமல்’.

    நன்றி, வணக்கம்.
    இன்னம்பூரான்
    09 09 2010
    Sign in to reply
    09/09/2010Mohanarangan V Srirangam
    பரவாயில்லை. 
    ராஜூ சொன்னத்தைக் கேட்கற நல்ல பையன்தான்.
    :--))) 
     
    நல்ல ஆரம்பம். 
    நன்றி. 
     
    ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

     



    10/09/2010சீதாலட்சுமி
    ராஜு சமத்து அண்ணா
    அண்ணா உங்க சரித்திரம் நன்னா இருக்கு
    சென்னை வரும் பொழுது உங்ககிட்டே ஜாக்கிரதையா பேசணும்
    எனக்கு கிடைத்த முதல் பாடம்
     
     


     



    10/09/2010Mohanarangan V Srirangam
    உங்ககிட்டே ஜாக்கிரதையா பேசணும்<<<< 
     
    இது யாரைக் குறித்து எழுதப்பட்டது? 
     
    ’ராஜு’வைக் குறித்து என்றால் நானும் ’ஆமாம் மாமி’ போட்றேன். 
    :--))

     

    10/09/2010சீதாலட்சுமி
    ராஜு அண்ணாவைத்தான் குறிப்பிட்டேன்.
    அவர் வீட்டிற்கருகில் ஓர் கல்வெட்டு ஆய்வாளர் இருக்கின்றார்
    அவருடன் அண்ணா வீடு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை விவாதிக்க வருவதாகச் சொன்னேன். அத்துடன் பல மரபுச் செய்திகள், அரசியல் வரலாறும் 
    விவாதிக்கப்பட இருக்கின்றன. நான் ஏதாவது உளறி என் அண்ணனின் கைவண்ணத்தில் அது வந்து விடுமோ என்று தான் அப்படி எழுதினேன்
    இம்முறை தமிழகச் சுற்றுலா சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகின்றேன்
    முடிந்த மட்டும் மின் தமிழ் அறிஞ்ர்கள் பலரைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்
     


     

    10/09/2010S.Krishnamoorthy
    இது மிக நல்ல தொடர். சுவையான செய்திகளையும், சம்பவங்களையும், நினைவுகளையும், அனுபவங்களையும் படித்து ரசிக்கலாம்.
    1950-60 களில் சென்னைக்கு வந்து சிவமானேன் என்ற தலைப்பில் அன்றைய பிரபல எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதினார்கள்.  கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்த்து எப்படி?  சென்னையில் பட்ட இன்ப துன்பங்கள், மகிழ்ச்சி-வேதனை, சென்னை தன்னை எழுத்தாளனாக எப்படி உருவாக்கியது என்பது போன்ற சுவையான அனுபவப் பரிமாற்றங்களை அந்தத் தொடர் எடுத்துவைத்தது.
    வழிப்போக்கன்





    10/09/2010vadivelu kaniappan
    அன்புடையீர்! வணக்கம். தொடக்கமே அமர்க்களம்.இதனைப் படிக்க நான் தயார். அருமையான Serial. தொடருங்கள் ஐயா. என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.



    10/09/2010Rasa
    திரு இன்னம்பூராரே
    பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது. சொல்புதிது சுவைபுதிது. இப்பொழுது நீங்கள் எழுதும் இந்த நடை எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படியே தொடந்து எழுதுங்கள்.
    அன்புடன்
    ஆராதி



    10/09/2010Tthamizth Tthenee
    திரு இன்னம்புரார் மூலமாக  வெளிவரவேண்டிய  அருமையான தொடர், 
    திரு இன்னம்புராரின்  கருத்து செறிந்த நடை மனதுக்கு இதமாகவும், பல அறிய செய்திகளையும் உள்ளடக்கி வரும் என்பது நமக்கெல்லாம் தெரியும்,
     
    கரை புரண்டு  ஓடட்டும் ”தருமமிகு சென்னையும் நானும்”  
    நாமும்  முத்தெடுப்போம்,
     
    அன்புடன்
    தமிழ்த்தேனீ

     

    10/09/2010myself
    சக்கு பாய் என்று தேடுங்கள் என்றேன். ஹூம்! விமலா என்று தேடச்சொன்னேன். கிடைத்தது. அவள் தான் அப்போது உயிர்தோழி என்றேன். ஹெட் மாஸ்டரோல்லியோ! ஒரு மாதிரியா பார்த்தார். நான் கண்டுகொள்ளவில்லை. எல்லாத்தையும் சொல்லிண்டுருப்பாளா? என்ன?//

    இப்படி எழுத உங்களுக்குத் தான் வரும். மறுபடியும் சொல்றேன், அந்தக் காலத்து எஸ்.வி.வி.யைப் படிக்கிறாப்போல் ஓர் உணர்வு. அங்கேயே போயாச்சு!
    அப்புறம் பேரனை வாத்தியார் அடிச்சதுக்குப் பாட்டி வாத்தியாரைக் கண்டிக்கிறது எங்க வீட்டிலேயும் என் கணவருக்கு நடந்திருக்கு. அந்த வாத்தியாரைப் பெரிய சார் னு கூப்பிடுவாங்க. எங்க கல்யாணம் ஆகி நாங்க நமஸ்காரம் செய்யப் போனப்போ அவர் என்கிட்டே சொன்னது முதல்லே இதுதான். ஒருநாள் உன் ஆம்படையானை அடிச்சுட்டேனு அவனோட பாட்டி வந்து என்னைக் கன்னாபின்னானு திட்டிட்டா! அதுக்கப்புறம் அவன் மேலே கையே வச்சதில்லை என்றார்.  அந்தக் காலத்தில் எல்லாப் பாட்டிங்களும் இப்படித் தான் இருந்திருப்பாங்க போல! 





    Attachments (1)
    360.gif
    453 B   View   Download

    11/09/2010N. Kannan
    சூப்பரோ! சூப்பர்!
    இனா எழுதினா தேனா இல்லையா?
    சில நேரம் இப்படிக் கொட்டும். தேன்மழை எப்போதுமில்லை!
    க.>

    > ‘ஏண்டா சமத்து! ஏன் புத்தி கெட்டு அலையறே? குழந்தை மேலே கை வச்சே! கூறு கூறா வெட்டி குளத்தலே வீசிடுவேன்!’
    >
    >      இல்லாத மீசையை முறுக்கிக்கொண்டேன்!
    >      அப்றம் தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் வித்யா சாலை. தொடர்பு இருக்கிறது. தலைமை ஆசிரியர் பிரகாஷ், என்னைப்பற்றிய பதிவுகள் எடுத்துக்கொடுத்தார், கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு பிறகு! முதலில் கிடைக்கவில்லை. சக்கு பாய் என்று தேடுங்கள் என்றேன். ஹூம்! விமலா என்று தேடச்சொன்னேன். கிடைத்தது. அவள் தான் அப்போது உயிர்தோழி என்றேன். ஹெட் மாஸ்டரோல்லியோ! ஒரு மாதிரியா பார்த்தார். நான் கண்டுகொள்ளவில்லை. எல்லாத்தையும் சொல்லிண்டுருப்பாளா? என்ன? 
    (தொடரும்)