Showing posts with label ப்ளேட்டோ. Show all posts
Showing posts with label ப்ளேட்டோ. Show all posts

Thursday, May 2, 2013

இன்னம்பூரான் பக்கம் 16


இன்னம்பூரான் பக்கம் 16

“ …தத்துவத்தின் ஜனனம், வியப்பிலே தான்…”. (ப்ளேட்டோ)
‘சர்வ வியாபியான தத்துவ போதனையும், தேடிய சிந்தனையும், திறந்த மனதும், பிரதிபலித்தல் வருகையும்  நமக்கு உறுதுணை என்ற பிந்திய தொடரின் பீடிகை, வேறு  ஒரு இடத்தில் சில சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள ஏதுவாயிற்று. அவற்றின் சாராம்சம்:
பொது அங்கீகாரம் (conformity) ஒரு மாயை; மூளைச்சலவை, அநேக சமயங்களில். சிந்திக்காமல் செயல்படுவது எளிது. மாற்றமில்லாமல் முன்னேற்றமில்லை. நிரந்தரம் அடைந்த பொது அங்கீகாரம் அதற்கு முரண். சிந்தனைக்கு அதை மாற்றியமைக்கும் திறன் உண்டு. அதனால் தான், காலத்துக்கேற்ற பொருத்தம்/புதிய கோணங்கள்/காரண காரியங்களை கண்டு கொள்வது ஆகிய கட்டாயங்கள் ஏற்படும்போது,  பொது அங்கீகாரம் சிந்தனையை குலைக்கக் கட்டைப் பஞ்சாயத்து செய்கிறது. மூடநம்பிக்கைகள் அதனுடைய தூண்களாக அமைந்து விடுகின்றன.
விவேகமற்ற அரசியல் மேலாண்மையை கட்டுக்குள் வைக்க சமுதாயத்துக்குத் துணிவு இல்லாததால், தத்துவ விசாரணையின் பிதாமகன் என கருதப்படும் சாக்ரடீஸ் அரசாணைக்குட்பட்டு நச்சு அருந்தி தன்னை மாய்த்துக்கொண்டார். ‘காசே தான் கடவுளடா!’ என்ற பழம்பெருச்சாளிகளை நிந்தித்த ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்டார். ‘‘சாந்தி நிலவவேண்டும்’ என்ற மஹாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். பொது அங்கீகாரத்தின் மூளைச்சலவையின் ஆதிக்கம் வலிமை மிகுந்தது. அதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள, நாம் ஒரு குகையில் நுழைவோமாக.
நீண்டதொரு இருட்டுப்பாதையில் ஓட்டமும் நடையுமாக நடை நடந்து ஒரு கும்மிருட்டு குகைக்குள் செல்கிறீர். அதனுடைய முட்டுச்சுவர் பெரிது; அகலமானது; நீண்டது. மானிடர்கள் பலர், அதில் விலங்கிடப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கழுத்துக்குக்கூட அசையமுடியாத தளையிறுக்க, அவதிபடுகிறார்கள். எதிரில் உள்ள மற்றொரு சுவர் ஒன்று தான் காட்சி. ஒருவரை ஒருவர் பார்க்ககூட முடியாது.  வலியும் வழக்கமாகி போய்விட்டது. விடுதலையில்லை என்பதும் உறுதியாகி விட்டது. அவர்களுக்கு இது பழக்கமாகி விட்டது. ஆயுசு பரியந்தம் இதே நிலை, ஜனித்ததிலிருந்து. இயல்பு ஆகிவிடும், காலாகாலத்தில். இந்த முட்டுச்சுவருக்கு பின்னால் ஒரே பிரகாசம். கொழுந்து விட்டு எரிகிறது தீ. அங்கிருந்து சற்றே தொலைவில் சூடில்லா பிரதேசம். அங்கு மக்கள் வந்து போய் கொண்டு இருக்கிறார்கள்; தலையில் சுமை; வாயெல்லாம் பல்;அப்படி பேச்சு. இவர்களில் நிழல்களை கைதிகள் பார்க்கிறார்கள். பேச்சொலியின் எதிரொலியை கேட்கிறார்கள். வாழ்நாள் முழுதும் இதே கதி என்பதால், அவர்கள் மனதில் இந்த நிழல்களும் எதிரொலியும் உண்மை நிகழ்வுகளாக பதிந்து விடுகின்றன. என்ன தான் எடுத்துச்சொன்னாலும் அது விபரீதம் தான். சுருங்கச்சொல்லின், இந்த நிழலுலகம் அவர்களுக்கு நிதரிசன உலகு. மற்றதெல்லாம் மாயை. எப்பாடுப் பட்டோ, நீவிர் ஒரு கைதியை விடுவித்து, பிரகாசமான பிரதேசத்துக்கு அழைத்து செல்கிறீர்கள். ஒளி அவன் கண்ணை குத்துகிறது. முடங்கிக்கிடந்த கைகால் அசைய மறுக்கிறது. ஒன்றும் புரியவில்லை. காலம் செல்ல, செல்ல, அவனுக்கு துணிவு பிறக்கிறது, துளிராக. வெளியுலகம் அவனை ஈர்க்கிறது. நிழலை மறந்து அசலை அனுபவிக்கிறான். எதிரொலியின் விகாரம் மறைந்த இசைஒலி அவனுக்கு அமுதமாகப்படுகிறது. உம்முடன், அடித்துப்பிடித்துக்கொண்டு சகபாடிகளை உய்விக்க ஓடோடி வருகிறான், இருட்டுக்குகைக்குள். அவர்களோ இவனுடைய தீர்க்க தரிசனத்தை எள்ளி நகைத்து, அவனை நாடுகடத்தவேண்டும் என்ற ஏகோபித்த முடிவுக்கு வருகிறார்கள்.
(தொடரும்)
உசாத்துணை: The Myth of the Cave.
சித்திரத்துக்கு நன்றி
http://qiq.ru/media/npict/1008/original/amazing_animals_wallpapers_full_hd_1080p_709421.jpegMore Posts
பிரசுரம் http://www.atheetham.com/?p=4742

Monday, April 15, 2013

இன்னம்பூரான் பக்கம் – 15




இன்னம்பூரான் பக்கம் – 15
 update: 16 04 2013
Innamburan S.Soundararajan Mon, Apr 15, 2013 at 2:12 PM



MONDAY APRIL 15TH 2013


MONDAY APRIL 15TH 201Monday April 15, 201Monday April 15th 2013



Inline image 1

பசி தீர உணவும், தாகம் அடங்க சுத்த நீரும், உடுத்த ஆடையும் பெறவேண்டி ஊதியம் நாடி, அதற்காக பற்பல ஊழியம் செய்து, அன்றாட வாழ்க்கையை ஓட்டுகிறோம். சிந்திக்க நேரமில்லை என்கிறோம். அறுசுவை நாடி, தேறல் சுவைக்க, ஆடம்பரமும், அலங்காரமும் அழைக்க, ஊதியம் கூட வேண்டும் என்று, கடுமையாக உழைக்கிறோம்; சிலர் வாய்மை என்ற கற்பையும் இழக்கிறார்கள். சிந்திப்பதாவது! அவசர உணவும், அஜீர்ணமும், தேறலின் கிறக்கமும், ஆடை உடை பாவனைகளும், இயல்பான வாழ்க்கையை கூட பாதித்து விடுகின்றன. இப்படி அடுக்கிக்கொண்டே போய், அப்ரஹாம் மாஸ்லோவின், கார்ள் ரோஜர்ஸ்ஸின் நான்காவது உளவியல் துறைக்கும் போகலாம், தக்கதொரு தருணம் கிட்டினால். வணக்கத்துக்குரிய தலை லாமா அவர்கள் சொன்ன மாதிரி, நாம் திரவியம் தேடுவதில் உடல் நலம் பேணுவதில்லை; பின்னர் நோயற்ற வாழ்வு நாடி, சேகரித்த திரவியத்தை இழக்கிறோம். ‘வாலு போச்சு! கத்தி வரலை!’
இன்று பேசப்படுவது தத்துவத்தின் ஆணி வேர்.
“ …தத்துவத்தின் ஜனனம், வியப்பிலே தான்…”. (ப்ளேட்டோ)
ஒலி, சொல், பொருள், கருத்து, கற்பனை வளம், விசாரணை, விமர்சனம், மீள்பார்வை,  சிந்தனைகள், அவற்றை சிலாகிப்பது, நிந்திப்பது, அலசி தீர்வுகள் காண்பது போன்ற மேதாவிலாசம், மனித இனத்துக்கு வரப்பிரசாதம். விலங்கினம் ஒரு படி கீழ் தான். மற்றபடி, எல்லா ஜீவிதங்களும் ஒன்று தான். மனித இனத்தில், பெரும்பாலோரிடம் இந்த மேதாவிலாசம் புலப்படுவது இல்லை என்பது தான் வரலாறு கூறும் செய்தி. மனித இனம் தோன்றியபின் அவதரித்தக் கோடானுகோடி மக்களில், தன் சுயசிந்தனையால் உலகின் போக்கை மாற்றியவர்கள் மிகக்குறைவு. இத்தனைக்கும், ஆதி மனிதனின் இயற்கையின் ஊடே, இடியிலும், மின்னலிலும், அடைமழையிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், கரும்பின் இனிப்பிலும், அரவத்தின் நச்சிலும், வேட்டையிலும், வேளாண்மையிலும் கண்டது வியப்பும், திகைப்பும் தான்.
சற்றே நிதானித்து அவதானம் செய்தோமானால், அந்த வியப்பும், திகைப்பும் குறைய, குறைய, சிந்தனாசக்தியையும், கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக, நாம் கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறோமோ என்று தோன்றுகிறது. அதுவும், அவசரயுகமான கடந்த இரு நூற்றாண்டுகளில் பெரும்பாலோர் சிந்தனையில் ஆழ்வதில்லை என்றும், கல்வித்துறை ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறதோ!’ என்ற வியாகூலமும் எழுகிறது.
ஆங்கிலத்தில் ஃபிலாஸஃபி என்பதை, இங்குத் தத்துவம் என்ற சொல் குறிக்கிறது. தத்துவம் பன்முகமுடையது. வாழ்வாதாரம் பொருட்டு இயங்கும் எல்லா துறைகளிலும் அதனுடைய பாவும், இழையும் ஓடும். அரசியல் என்று எடுத்துக்கொண்டால், ‘சுதந்திரம்’, ‘சமுதாய நீதி’, ‘சமத்துவம்’, ‘உரிமை’, ‘மக்களாட்சி’ வகையறா சொற்களும், அவற்றின் பொருட்களும், கருத்துக்களும் சிந்தனைக்கும், கருத்துபரிமாற்றத்துக்கும் உகந்தவையே. சர்ச்சைகளும், விவாதங்களும், ஏன்? விதண்டாவாதங்களும் அடுத்த கட்டங்கள். அதே மாதிரி, சட்டமும், நீதியும், சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டால், ‘தர்மம்’, ‘நியாயம்’, ‘குற்றத்தின் பின்?’, ‘சட்டம்’, ‘சட்ட நிர்வாகம்’ என்றெல்லாம் கேள்விகள் எழும். மருத்துவம் என்று பார்த்தோமானால், ‘எது பூரண ஆரோக்கியம்?’ என்ற வினாவே சிக்கலானது.  டாக்டர்கள் ‘நோய் தடுப்பு/நிவாரணம்/ பக்க விளைவுகள்/ செலவு/ சமுதாய ஒத்துழைப்பு/ ஆய்வு/ பல மருத்துவ சாத்திரங்கள் ஆகியவற்றை பற்றி அன்றாட தீர்மானங்கள் எடுக்கும்போது, தார்மீக சிந்தனைகளும், அறம் சார்ந்த சிக்கல்களும் குறுக்கிடுவது சகஜம். எந்த அளவுக்கு மருத்துவ உலகம் அவற்றை விளக்கும் தத்துவ ரீதியில் இயங்குகிறார்கள் என்பதே, பெரிய கேள்விக்குறி.
வித்யாதானம் என்று சான்றோர்கள் சொல்லிவிட்டார்களே தவிர, கல்வித்துறையை போன்ற சிக்கலான துறையே இல்லை எனலாம். ஒரு பக்கம் பணம் விளையாடுகிறது.   மற்றொரு பக்கம் ‘ஏட்டுச்சுரைக்காய் கவைக்கு உதவாமல்’ வியர்த்தமாகி விடுகிறது. அடிப்படை கல்வி உரிமை, விடுதலை பெற்ற சுதந்திர இந்தியா மணிவிழா கண்டபின்பும், பகற்கனவாயிற்று. மேற்படிப்புத்துறைகளில் உன்னதமும் உண்டு; மட்டரகமும் உண்டு. இன்றைய காலகட்டத்தில், உலகளாவிய முறையில் தேடினால், கல்வி சார்ந்த சிந்தனைகளும், தத்துவ விசாரணைகளும் நன்முத்துக்குவியல்களை போல நம் முன்னே கொட்டி கிடக்கின்றன. நாம் ஏன் அவற்றின் பயனை, இலவசமாகக் கிடைக்கும் பயனை மக்களுக்கு அளிக்க முடியவில்லை?
இவ்வாறாக, நாம் எந்தத் துறையின் பக்கம் சென்றாலும், அவற்றின் தத்துவ ஆணி வேர்களும், விழுதுகளும் நம்மை கூவி அழைக்கின்றன. தத்துவத்தின் இலக்கணம் சுளுவானது. அடிப்படை கருத்துக்கள், கோட்பாடுகள், வழிமுறைகள் என்று வகுத்துக்கொள்வது சராசரி மனிதனின் திறனுக்கு அப்பாற்பட்டதல்ல. அவற்றின் பட்டியல் வகுப்பது முதல் கட்டம். லோயர் கே.ஜி. அவற்றை அலசுவதும், வினா எழுப்பி விடை காண்பதும், திறந்த மனதுடன், காழ்ப்புணர்வை ஒழித்து, கருத்து பரிமாற்றம் செய்து தீர்வுகள் காண்பது தான் முக்கியம். அதற்கு, நாம் காரணம் தேடும் கலையை கற்கவேண்டும். சிந்தனையின் பிரதிபலித்தலை (ரெஃப்ளெக்ஷன்) இனம் கண்டு, அதை செயல்களில் இயக்குவதை கற்றுக்கொள்ள வேண்டும்.
சுருங்கச்சொல்லின், சர்வ வியாபியான தத்துவ போதனையும், தேடிய சிந்தனையும், திறந்த மனதும், பிரதிபலித்தல் வருகையும் ( மேற்கத்திய உலகில் எல்லாத் துறைகளிலும் பிரதிபலித்தலின் செயலாற்றல் அதிகரித்து வருகிறது.) நமக்கு உறுதுணை. மற்றதெல்லாம் இரண்டாம் பக்ஷம். பீடிகை முற்றிற்று, இப்போதைக்கு.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: http://sriramakrishnavijayam.files.wordpress.com/2012/06/00015.jpg


பிரசுரம் & நன்றி: http://www.atheetham.com/?p=4638

*


Subashini Tremmel
Apr 15 (1 day ago)
to மின்தமிழ்
2013/4/15 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

MONDAY APRIL 15TH 2013


MONDAY APRIL 15TH 201Monday April 15, 201
Monday April 15th 2013



.....சற்றே நிதானித்து அவதானம் செய்தோமானால், அந்த வியப்பும், திகைப்பும் குறைய, குறைய, சிந்தனாசக்தியையும், கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக, நாம் கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறோமோ என்று தோன்றுகிறது. அதுவும், அவசரயுகமான கடந்த இரு நூற்றாண்டுகளில் பெரும்பாலோர் சிந்தனையில் ஆழ்வதில்லை என்றும், கல்வித்துறை ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறதோ!’ என்ற வியாகூலமும் எழுகிறது.
நல்லதொரு கேள்வியை முன் வைக்கின்றீர்கள். சிந்தனா சக்தி என்பதை சற்று விவரித்து அதனை இழந்து வருவதற்கான காரணத்தை அலசுவதும் மேலும் இந்த விஷயத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் எனக் கருதுகின்றேன்.

சமூகத்தின் நிலையைப் பார்க்கும் போது அனைவருக்கும் பொதுவாக இருப்பதாக அங்கீகாரம் செய்யப்பட்ட விஷயங்களை ஏற்று அதன் அடிப்படையில் செல்வதற்கு சிந்தனை அவ்வளவாகத் தேவையில்லை. இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு செல்வது என்பது மட்டுமே இங்கு நிகழ்கின்றது. இருப்பதைப் பார்த்து, அது நமக்கு பொருந்துகின்றதா, இக்காலகட்டத்துக்கு பொருந்துகின்றதா, மாறி வரும் சூழலுக்குப் பொருந்துகின்றதா என சிந்திக்க விளையும் மனங்களுக்குத் தான் சிந்தனா சக்தி தேவைப்படுகின்றது; புதிய கோணங்களில் விஷயங்களைப் பார்க்க விளையும் போது சிந்தனை தேவைப்படுகின்றது. காரண காரியங்களை கண்டுகொள்ள விரும்பும் மனங்களுக்கும் சிந்தனை தேவைப்படுகின்றது. இது அற்ற நிலையில் இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு அது தானாகவே வாழ முற்படும் போது சிந்தனைக்கு இடமற்று போய்விடுகின்றது என நினைக்கின்றேன். 

சுபா

-- 
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
Innamburan S.Soundararajan 
9:37 PM (23 hours ago)
to mintamilme, bcc: innamburan88
நன்றி, சுபாஷிணி, என்னை மேலும் சிந்திக்கவைத்ததற்கு. இந்த பீடிகையும், சிந்தனா சக்தியின் விவரணையும், நாம் அதை இழந்து வருவதின் பின்னணியும், மீட்புப்பணியை பற்றிய கருத்துகளையும், முதுசொம் கல்வி மேடையில் (THF Study Circle) நான்காவது அலகு ஆக வைக்க விழைந்தேன். அங்கு எல்லாம் ‘கிணற்றில் போட்ட கல்’ மாதிரி இருப்பதால் இப்படி தலையை சுற்றி மூக்கைத் தொடுகிறேன். தருணம் கிட்டட்டும். தொடருவோம்.

நீங்கள் சிந்தித்துத் தொடுத்த அளித்தக் கருத்துக்களை அணுகும் முன்: 
சிந்தனாசக்தியின் ஆதிகால வருகையான உபநிஷதங்கள், தொல்காப்பியம், கிரேக்க/ரோமானிய கருவூலங்கள் ஆகியவற்றுக்கு இணை தற்காலம் தென்படுவது இல்லை. எனினும், ஜான் ட்யூவி, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், எம்.என் ஶ்ரீனிவாஸ், புதுமை பித்தன் போன்றோர் தற்காலத்தில் சிந்தனை விளக்கின் திரியை தூண்டியவர்கள். சிந்தனையியலில் என்னை முதலில் ஆழ்த்தியது R. H Thouless: Straight and Crooked Thinking (in 1952). Thereafter, RD Laing, Edward de Bono, Donald Schon, Jacques Derrida, Foucoult et al  சிந்தனையியலில் ஆர்வத்தைக் கூட்டினர். அது எல்லாம் சிந்தனா சக்தியின் விவரணைக்கு உதவும். இதற்கெல்லாம் காலம் தழைக்கவேண்டும்.  பார்க்கலாம்.
உங்கள் கருத்துக்கள்:

சமூகத்தின் நிலையைப் பார்க்கும் போது அனைவருக்கும் பொதுவாக இருப்பதாக அங்கீகாரம் செய்யப்பட்ட விஷயங்களை ஏற்று அதன் அடிப்படையில் செல்வதற்கு சிந்தனை அவ்வளவாகத் தேவையில்லை. இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு செல்வது என்பது மட்டுமே இங்கு நிகழ்கின்றது.

~ சரியாக சொன்னீர்கள். ஆனால், ‘பொது அங்கீகாரமே’ ஒரு மாயை; மூளைச்சலவை, அநேக சமயங்களில். சிந்திக்காமல் செயல்படுவது எளிது. அதனால் தான் இப்படி. 


இருப்பதைப் பார்த்து, அது நமக்கு பொருந்துகின்றதா, இக்காலகட்டத்துக்கு பொருந்துகின்றதா, மாறி வரும் சூழலுக்குப் பொருந்துகின்றதா என சிந்திக்க விளையும் மனங்களுக்குத் தான் சிந்தனா சக்தி தேவைப்படுகின்றது; 

~ ஆம்.

புதிய கோணங்களில் விஷயங்களைப் பார்க்க விளையும் போது சிந்தனை தேவைப்படுகின்றது.

~ ஆம்.

காரண காரியங்களை கண்டுகொள்ள விரும்பும் மனங்களுக்கும் சிந்தனை தேவைப்படுகின்றது.
~ ஆம். 

இது அற்ற நிலையில் இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு அது தானாகவே வாழ முற்படும் போது சிந்தனைக்கு இடமற்று போய்விடுகின்றது என நினைக்கின்றேன். 

~ ஆம். இழப்பு வாழ்வியலுக்கு; சிக்கல் தனிமனிதருக்கு; பிரச்னை: சமுதாயத்துக்கு.

நன்றி, வணக்கம்,

இன்னம்பூரான்

15 04 2013
செல்வன்
9:47 PM (23 hours ago)
to mintamilme
2013/4/15 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

~ சரியாக சொன்னீர்கள். ஆனால், ‘பொது அங்கீகாரமே’ ஒரு மாயை; மூளைச்சலவை, அநேக சமயங்களில். சிந்திக்காமல் செயல்படுவது எளிது. அதனால் தான் இப்படி. 

கரெக்ட்.

பொது அங்கீகாரத்தை அதிகாரத்தில் இருப்பவர்கள் எளிதில் மேனிபுலேட் செய்யலாம். சுயசிந்தனயுடன் அனைத்தையும் கேள்வி கேட்க பழகினால் ஒழிய நமக்கு எது நல்லது என்பதை ஆய்வது சிரமம்

Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: ஜனவரி: 2 பன்முகப்புலமை




அன்றொரு நாள்: ஜனவரி: 2 பன்முகப்புலமை
8 messages

Innamburan Innamburan Mon, Jan 2, 2012 at 4:53 PM
To: mintamil , thamizhvaasal
அன்றொரு நாள்: ஜனவரி: 2
பன்முகப்புலமை

“ ப்ளேட்டோ ஆத்மா அழிவற்றது என்கிறார்; உவமைகள் பல உரைத்து ‘உளவியலுக்கு’ அடி கோலினார்... மனிதன் உயிர்தரித்து இருப்பதை அவனது ஆசாபாசங்கள், சினம், பகுத்தறிவு மூலம் நிரூபணம் செய்கிறான் என்கிறார். கிரேக்கமொழியிலிருந்து மொழிபயர்ப்பது கடினம். அவற்றை காமம், சச்சரவு, சிந்தனை என்றும் சொல்லலாம். அவற்றையெல்லாம் விழைகிறோம், வெறுக்கிறோம், உதறுகிறோம். இதையெல்லாம் ஆட்டுவிப்பது ஒரு நிர்ணய கோட்பாடு; உகந்ததையும், தகாததையும் பிரித்து இயங்குவது, அந்த அணுகுமுறை தனக்கு என்று வழி வகுத்துக் கொள்வது.
பகுத்து அறிவதுடன், இது தற்காலத்தில், ‘சுய தீர்மானம்’ (‘வில்’) என்று நாம் புரிந்து கொள்ளும் தன்மை. அது தான் ஆத்மா. இந்த காமம், சச்சரவு, சிந்தனையெல்லாம் ஆத்மாவின் தொண்டர்கள், வாழ்வின் பகுதிகளின் உருக்கள்; உயிர்மையின் வரத்துப்போக்குகள்...மற்றொரு இடத்தில் ப்ளேட்டோ விளக்குகிறார் ~‘ஒரு சாரட்; இரண்டு புரவிகள்; ஒன்று சோம்பேறி, கீழ்நோக்கி. மற்றொன்று துணிச்சல், பாய்ச்சல், விரைந்தோடி வரும் கடுமா. மனிதனோ அவற்றை அடக்கியாண்டு, லாகவமாக செலுத்துவதல்லாமல், வழி நடக்கும் பாதையையும் நிர்ணயிக்க வேண்டும். அவனுக்கு இந்த கட்டத்தில் பேருதவி செய்து, மார்க்க பந்துவாக இயங்குவது சாரதி. அந்த சாரதி தான் ஆத்மா...’
~ கில்பெர்ட் முர்ரே: 1918: ‘ஆத்மாவும், அதை கையாளுவதும்’: ஹிப்பெர்ட் ஜர்னல்: ஜனவரி 1918: மீள்பதிவு: பிரம்மஞான சங்கம்: சென்னை: அடையார்’






கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. புலமையும், பரந்த மனப்பான்மையும், புன்னை மரத்தடி போதனை ஆற்றலும் , உலகளாவிய சிந்தனையும், தொன்மையின் மரபை பேணும் ஆர்வமும், திறந்த மனமும், சிரித்த முகமும், கனிவும், பரிவும் ஆன குணமும்,ஒன்றுக்கொன்று போட்டியிடாமல், ஒருவரிடம் ஒண்டுக்குடித்தனம் செய்தால், அதை விட பெரும்பேறு ஒருவருக்கும் கிட்டப்போவதில்லை. நேற்று மதிய உணவுக்கு ஒரு விருந்தினர். அவருக்கு தமிழுடன், நம் எல்லாரையையும் விட பழைமையாக உள்ள உறவைக் கண்டு நான் மகிழ்ந்தேன். பிறகு அதை பற்றி எழுதுகிறேன். நாங்கள் அளவளாவும் போது ஏழு தலைமுறைகளாக, இங்கிலாந்திலும், இந்தியாவிலும் கல்வி அளிப்பது நடந்த விதத்தை ஆக்கப்பூர்வமாக விவாதிக்க இயன்றது. அவரவர் கருத்துக்கள், அனுபவங்கள், கேட்டறிந்தது, சுருக்கமாக:
1800 ~ 1900: வீட்டுப்பாடம், ஓலைச்சுவடி, திண்ணைப்பள்ளிக்கூடம், சில கிராமங்களில் குடத்துள் குத்துவிளக்கு போன்ற புலவர்கள், சைவ மடங்களின் தமிழார்வம், நகரங்களில் பட்டணங்களில், அதுவும் கிருத்துவ பள்ளிகளில் படிப்போருக்கு, எளிதில் ஆங்கிலப்புலமை;
1900 ~1950: மேற்கண்டவை வேகமாக பரவின. கும்பகோணம் கல்லூரி போன்ற அரசு உயர்கல்வி, நகரத்தார் =கொடை: காரைக்குடியில் பெண் கல்வி, சென்னையில் கலவலக்கண்ணன் செட்டியார், எம்ஸிட்டி பள்ளிகள், பார் அட் லா அழகப்பச்செட்டியார், ராஜா ஸர் அண்ணாமலை செட்டியார் கல்வி வள்ளல்கள், புதுக்கோட்டை குலபதி பாலையா, தம்புடு சார் போன்றோரின் கல்வி தானம், ஒரு பக்கம் உ.வே.சா, திரு.வி.க. தலையெடுத்தது; ஒரு பக்கம் ஐ.சி. எஸ். அதிகாரிகள். ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி, நடுத்தர குடும்பத்தில் பிறந்து, கல்வி பெற்று, இங்கிலாந்து மேல்படிப்பில், கிரேக்க/ரோமாபுரி இலக்கியங்கள் கற்று, நமது மரபுகளை கற்றுக்கொண்டு, நுண்கலை, இலக்கியம், ஓவியம் எல்லாம் அறிந்து, தன்னுடைய துறையில் வல்லுனராக விளங்கியது பற்றி பேசப்பட்டபோது, கல்வியின் தரம், முழுமை, விசாலம், தொடர் நிலை, வாழ்வியல் மாற்றங்கள் ஆகியவை முன் வைக்கப்பட்டன.
1950 ~1975: அகில இந்திய கல்விக்கொள்கைகள் முக்கியத்துவம் பெற்றாலும், மாநிலங்களில் கல்வி தீவுகள் கோலோச்சின. தமிழ்நாடு பொருத்தவரை, அது கண்கூடு. கல்வியின் விலை கணிசமாக ஏறியது, பிற்பகுதியில்
1975 ~ 2011: குலபதிகள் கடந்த கால வரலாறு. கல்வித்தந்தைகளின் யதேச்சதிகாரம் தலை தூக்கியது. கல்வியின் விலை தாறுமாறாக ஏறியது. தமிழ் தாழ்ந்தது. ஆங்கிலத்துக்கு ஆதரவு மிகுந்து வருகிறது. இது நடைமுறையில். பேச்சளவில், ஆங்கிலம் தாழ்ந்தது. தமிழுக்கு அமோக ஆதரவு. 2011 ஆண்டு பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் இங்கிலாந்து மாணவர்களின் அறிவுகிடங்கு, சராசரி தமிழ்நாட்டு பட்டதாரியின் படிப்புக்கு சமானம் என்றால், அது மிகையல்ல,
இத்தருணம், ஜனவரி 2, 1866 அன்று ஆஸ்ட் ரேலியாவில் பிறந்த பேராசிரியர் கில்பர்ட் முர்ரே அவர்களை பற்றி பேச்சு வந்தது. 23 வயதில் க்ளாஸ்கோ பல்கலை கழகத்தில் கிரேக்க இலக்கிய பேராசிரியர். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 1926ம் வருடம்  கவிதை இலக்கிய பேராசிரியாக இருந்ததைத் தவிர, 1906லிருந்து 28 வருடங்கள் ஆக்ஸ்ஃபோர்ட்டில் ரீஜியஸ் பேராசிரியர் என்ற உயர்பதவியிலமர்ந்து, கிரேக்க இலக்கியத்தை புன்னை மரத்தடி போதனை செய்தார். அருமையான மொழி பெயர்ப்பாளர்.  1897லிருந்து 1960 வரை அநேக நூல்கள் எழுதியுள்ளார். உலக சமாதானத்திற்கு உழைத்தார். ஐ.நா. சம்பந்தமான மையத்துக்கும், அதற்கு முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்ஸ் சம்பந்தமான மையத்துக்கும் தலைவராக தொண்டு செய்தார். துவக்கத்தில் பட்டியல் இடப்பட்ட நற்குணங்களுக்கு உறைவிடமாக இருந்தார். அவரை பில் கேட்ஸ் மாதிரி சாதனையாளர் என்று சொல்ல முடியாது. ஆனால், அவருடைய ஆசிரியர்கள் அளித்த கல்வியின் கடலாழத்தாலும், சுய விசாரணை தன்மையாலும் ஒரு பூரணத்துவம் அடைந்த மாமனிதரவர் என்றால், அது மிகையாகாது. அவரை துருவநக்ஷத்திரமாகப் பாவித்து, கல்வித்தீக்கு ஆஹூதி செய்வோமாக.
இன்னம்பூரான்.
02 01 2012
பி.கு. ‘ஆத்மாவும் அதை கையாளுவதும்’ என்ற தலைப்பில் அரிஸ்டாட்டிலும், அண்ணல் காந்தியும் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ளதை ‘கட் அண்ட் ஒட்’ செய்வது எளிது. அப்படி செய்தால், ஆத்மா கேலி செய்யும்! என்றோ ஒரு நாள், தமிழாக்கம் செய்கிறேன், அவற்றை. ஒரு வியப்பு. நேற்று சிசுவை தரிசித்தோம். கில்பர்ட் முர்ரேயை பல வருடங்கள் படித்த எனக்கு, இன்று தான் அவர் அதை பற்றி எழுதியது கிடைத்தது. அதுவும் திருமதி. கீதா சாம்பசிவம் ஆத்மார்த்தமாக எழுதியதின் நல் வரவு என்று நினைக்கிறேன். ப்ளேட்டோ பேசுவது பகவத் கீதா சாரமா?

9780199208791.jpg

உசாத்துணை:
Christopher Stray (2007) Gilbert Murray Reassessed: Hellenism, Theatre, and International Politics

Geetha Sambasivam Mon, Jan 2, 2012 at 9:15 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
. கல்வித்தந்தைகளின் யதேச்சதிகாரம் தலை தூக்கியது. கல்வியின் விலை தாறுமாறாக ஏறியது. தமிழ் தாழ்ந்தது. ஆங்கிலத்துக்கு ஆதரவு மிகுந்து வருகிறது. இது நடைமுறையில். பேச்சளவில், ஆங்கிலம் தாழ்ந்தது. தமிழுக்கு அமோக ஆதரவு. //

எனக்கு அப்படித் தெரியலை ஐயா. :((((  ஆனால் கல்வி பற்றி நீங்கள் கூறி இருக்கும் அனைத்துக் கருத்துக்களும் சரியானவையே.  கல்வித்தீக்கு ஆஹூதி செய்யவேண்டும்.  ஒரு சின்ன வேண்டுகோள்.  தாங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள் என்றாலும் நினைவூட்ட விரும்புகிறேன்.


தாங்கள் தரம்பால் அவர்களின் தளத்தில் இந்தக் குறிப்பிட்ட பக்கம் சென்று : The Beautiful Tree Indigenous Indian Education in the Eighteenth Century 
:இந்தப் புத்தகம் குறித்த தங்கள் கருத்தைப் பதிவு செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் மூலம் இது பலரையும் சென்றடையும் என்ற சின்ன நப்பாசையும் காரணம்/.
அதோடு உங்கள் கருத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

2012/1/2 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி: 2
பன்முகப்புலமை


பி.கு. ‘ஆத்மாவும் அதை கையாளுவதும்’ என்ற தலைப்பில் அரிஸ்டாட்டிலும், அண்ணல் காந்தியும் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ளதை ‘கட் அண்ட் ஒட்’ செய்வது எளிது. அப்படி செய்தால், ஆத்மா கேலி செய்யும்! என்றோ ஒரு நாள், தமிழாக்கம் செய்கிறேன், அவற்றை. ஒரு வியப்பு. நேற்று சிசுவை தரிசித்தோம். கில்பர்ட் முர்ரேயை பல வருடங்கள் படித்த எனக்கு, இன்று தான் அவர் அதை பற்றி எழுதியது கிடைத்தது. அதுவும் திருமதி. கீதா சாம்பசிவம் ஆத்மார்த்தமாக எழுதியதின் நல் வரவு என்று நினைக்கிறேன். ப்ளேட்டோ பேசுவது பகவத் கீதா சாரமா?

9780199208791.jpg

உசாத்துணை:
Christopher Stray (2007) Gilbert Murray Reassessed: Hellenism, Theatre, and International Politics
--


செல்வன் Mon, Jan 2, 2012 at 9:22 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/1/2 Innamburan Innamburan <innamburan@gmail.com>
1975 ~ 2011: குலபதிகள் கடந்த கால வரலாறு. கல்வித்தந்தைகளின் யதேச்சதிகாரம் தலை தூக்கியது. கல்வியின் விலை தாறுமாறாக ஏறியது. தமிழ் தாழ்ந்தது. ஆங்கிலத்துக்கு ஆதரவு மிகுந்து வருகிறது. இது நடைமுறையில். பேச்சளவில், ஆங்கிலம் தாழ்ந்தது. தமிழுக்கு அமோக ஆதரவு.

பள்ளிகூடமும், மருத்துவமும் நடத்தவேண்டிய அரசு சாராயம் விற்றுகொண்டும், பஸ் ஓட்டிகொண்டும், பால்வணிகம், ஓட்டல் வணிகம் ஆகியவற்ரையும் நடத்தி வருகிறது. அதனால் சாராயம் விற்பவர்கள், பால் வியாபாரிகள் ஆகியோர் கல்விதந்தைகளாகவும், மருத்துவதந்தைகளாகவும் ஆகிவிட்டனர்.

வாழ்க சோஷலிசம்.
--
செல்வன்





-- 

Innamburan Innamburan Tue, Jan 3, 2012 at 6:01 AM
To: mintamil@googlegroups.com
திருமதி கீதா சொன்னதை செய்கிறேன். நன்றி. திரு.செல்வனின் நகைச்சுவை அபாரம். முதலாளித்துவத்தின் அட்டகாசங்களுக்கு 'சோஷலிசம்' என்று புனர்நாம்கரணம் செய்து விட்டார்.
இன்னம்பூரான்
2012/1/2 செல்வன் <holyape@gmail.com>




செல்வன் Tue, Jan 3, 2012 at 6:21 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அரசு இயங்கவேண்டிய துறையில் அரசு இயங்காவிட்டால் அங்கே முதலாளிகள் தான் செயல்படுவார்கள். எதுவும் இல்லாத வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பார்களே அதுபோல.

தொழில்துறையில் இருந்து அரசு விலகிகொண்டு முதலாளிகளுக்கு வழிவிடவேண்டும். கல்வி மற்றும் மருத்துவத்தில் மட்டும் அரசு இறங்கினால் முதலாளிகள் தாமே ஓடிவிடுவார்கள். நல்ல தரத்தை கொடுத்து இலவச கல்வியையும் அளிக்கும் அரசுபள்ளியுடன் போட்டியிட எந்த கான்வென்ட்டால் இயலும்?






Nagarajan Vadivel Tue, Jan 3, 2012 at 6:36 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
செல்வன் ஐயா
நான் உயர்கல்வித் துறையில் செயல்பட்ட பட்டறிவுடன் சொல்வது
அரசு மட்டுமே உயர்கல்வித் துறையில் பெரும்பங்குகொண்டு தனியார் முயற்சியை ஊக்குவிக்காத காலத்தில் உயர்கல்வியில் க்ல்லூரிப்பருவ மாணவர்களின் விழுக்காடு மொத்தம் 5% விழுக்காடுகளே
இன்று தனியார் பங்களிப்புடன் மாணவர் விழுக்காடு 12%
இந்தியா உயர்கல்வியில் வளர்ந்தநாடு என்று கண்க்கிட அடிப்படையில் 20% மாணவர்கள் உயர்கல்வி பயிலவேண்டும்
இந்திய அரசு இந்த இலக்கை அடையப் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது
பொது மருத்துவத்திலும் அதே நிலைதான்
உயர் கல்வியில் தனியார் ஈடுபாடு என்பது என் உயரற்ற உடலின்மீதுதான் நடக்கவேண்டும் என்று சூளுரைத்து அவர் வாழ்நாளில் ஆந்திராவில் தனியார் முயற்சிக்குத் தடைபோட்டவர் என்.டி.ஆர்
தனியார் முயற்சியைச் சோதனை ஓட்டமாக நடைமுறைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்
இன்று தகவல் தொழில் துறையில் கோலோச்சும் ஆந்திரர்கள் எல்லாம் தமிழகத் தனியார் முயற்சியில் உருவான கல்விக்கூடங்களில் இருந்துதான் வெளிக் கிளம்பினார்கள்
கல்வி எல்லாருக்கும் பொது
அதற்கு இஸச் சாயம் பூச வேண்டாம்
நாகராசன்
[Quoted text hidden]

செல்வன் Tue, Jan 3, 2012 at 6:48 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நாகராசன் ஐயா

பொருளாதாரத்தில் அரசு எத்துறையில் இயங்கவேண்டும், எதில் இயங்ககூடாது என வரையறை செய்வது அவசியம். அரசு இயங்ககூடிய, இயங்கவேண்டிய துறைகள் கல்வி மருத்துவம் ஆகியவை. ஐடியலாக பார்த்தால் இவை இரண்டும் மக்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் கிடைக்கவேண்டும். இதற்கு அரசு இத்துறைகளில் மேலும் அதிகமாக செயல்படவேண்டும். அதற்கு ஒரு வழி ஏர் இந்தியா நடத்தி 65,000 கோடியை நஷ்டமாக்காமல் அதை விற்றுவிட்டு அந்த காசில் கல்லூரிகள், மருத்துவமனைகளை அரசு கட்டலாம்.

தனியாரை கல்விதுறையிலிருந்து தன் சிறப்பான சேவையால் அரசு விரட்டவேண்டும். அது முடியாது என்பது ஒருபுறம் இருக்க குறைந்தது அந்த நோக்கத்துடனாவது போட்டி மனபான்மையுடன் அரசு கல்லூரிகள்,பள்ளிகள் இயங்கினால் மாணவர்களுக்கு நல்லது என்பது என் கருத்து. அரசு பள்ளி இலவச கல்வியை அளிக்கையில் அதில் சேராமல் பீஸ் கட்டி தனியார் பள்ளியில் ஒரு மாணவன் சேர்ந்தாலும் அதை கவுரவபிரச்சனையாக அரசு பள்ளிகள் கருதி தம்தரத்தை அதிகரித்து தனியார் பள்ளிகளை திவால் ஆக்கவேண்டும்.இத்தகைய ஆரோக்கியமான போட்டி கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் நிலவவேண்டும் எனவே குறிப்பிட்டேன்.
[Quoted text hidden]
[Quoted text hidden]

Thevan Tue, Jan 3, 2012 at 6:16 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
திரு செல்வன் அவர்களே,

பள்ளிக் கூடத்தையும், மருத்துவத்தையும் அரசாங்கம் நடத்தத் தேவையில்லை. அத்துறைகளை கண்காணித்து நடத்தினால் போதும்.