Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 7: II ராஜ மரியாதை

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 7: II ராஜ மரியாதை
3 messages


Innamburan Innamburan Tue, Feb 7, 2012 at 6:45 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 7: II
ராஜ மரியாதை
அக்கம்பக்கத்திலே விழா எடுக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஆழ்ந்து போனதால், உள்ளூர் இலக்கிய பிதாமகனின் 200வது பிறந்த தினத்தன்று, அவரை பற்றி இரு வரியாவது எழுதவேண்டாமா? ஃபெப்ரவரி 7, 1812 அன்று இந்த ஊரில் எமது இல்லத்துக்கு அருகில் உள்ள தெருவில் உள்ள வீட்டில் சார்லஸ் டிக்கென்ஸ் பிறந்தார். புதின இலக்கியம் பிறந்த நாடு இங்கிலாந்து ~சார்லஸ் டிக்கென்ஸ், ஸர் வால்டர் ஸ்காத், சார்லஸ் கிங்ஸ்லி, ஜேன் ஆஸ்டின் இத்யாதி புதின இலக்கிய கர்த்தாக்கள். 
சின்ன வயதில் படித்தது. சார்லஸ் டிக்கென்ஸ் தான் தொடர் கதை இலக்கியத்தை துவக்கியவர். அமெரிக்காவுக்கு அந்தந்த இதழ் பிரதிகள் கப்பலில் அனுப்பபடும். துறைமுகத்தில் ரசிகர் மன்றம் முண்டியடித்துக்கொண்டு, ‘அவனுக்கு என்ன ஆச்சு’? ‘இவளுக்கு என்ன ஆயிடுத்து?’ என்று டென்ஷனோடு மாலுமிகளிடம் வினவுமாம். நடிகராக விரும்பிய சார்லஸ் டிக்கென்ஸ் பிரபல நாவலாசிரியரானார். அவை மூலம் நடித்தார் என்றால், மிகையல்ல. தன்னுடைய புதினங்களை, ஏற்றத்தாழ்வுடன் ராகம் போட்டு படிப்பதில், ஐயா ஐரோப்பாவிலும், அமெரிக்காவில் படு பாப்புலர். எப்ப பார்த்தாலும் எழுத்து. அவர் எழுதிய கடிதங்களில், 14 ஆயிரம் கிடைத்தன. எத்தனை சமாச்சாரங்கள், தன்னுடைய பிரியமான காகம் இறந்ததிலிருந்து!
அவருடைய ஒவ்வொரு நாவலை பற்றியும், அவருடைய முரணும், அவிழ்ந்த முரணுமான கரடுமுரடான வாழ்க்கையை பற்றியும், இங்குள்ள அரும் காட்சியகம் பற்றியும் எழுத நிறைய இருக்கிறது. பிறகு பார்க்கலாம்.
இன்று ராஜ மரியாதை அமோகம். ப்ரின்ஸ் சார்லஸ் லண்டனில் அவருடைய கல்லறையில் மலர் வளையம் வைத்து வணங்கினார். 1830லிருந்து இன்று வரை அவருடைய நூல்கள் மறு பிரசுரம் ஆகின்றன. உலகமெங்கும், இன்று ‘பேயரசு புரியும்’  ஏழ்மை, அதீத ஏற்றத்தாழ்வு, பேராசை முதலாளிகள், லஞ்சலாவண்ய அரசியலர் பற்றிய பிரதிபலிப்புக்களை அவருடைய நாவல்களில் அப்பட்டமாகக் காணலாம். ‘ஆலிவர் ட்விஸ்ட்’ டில் ஒரு வரி, அந்த ஆத்திரத்தின் எதிரொலி. :
“...சீ! நாற்றமடிக்கும் ஏழ்மையின் போர்வை, குப்பை, கூளம், அழுகல், அசிங்கம், இவை தான் அந்த அழுக்குக் குட்டையில் மக்கிப்போன மட்டைகள்...”
ஒரு சின்ன கேள்வி: மு.வ.வின் ‘கரித்துண்டு’ படித்து இருக்கிறீர்களோ. இல்லை, புதுமைபித்தனின் அம்மாளுவை தெரியுமோ?
இன்னம்பூரான்
07 02 2012
google-dickens_2130012b.jpg
The Google doodle for Charles Dickens. Image 1 of 2
உசாத்துணை:
Callow. S. (2012): Charles Dickens And The Great Theatre of theWorld: Harper
Hartley.J. Ed. (2012) The Selected Letters of Charles Dickens: OUP

Geetha Sambasivam Tue, Feb 7, 2012 at 7:43 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
ஒரு சின்ன கேள்வி: மு.வ.வின் ‘கரித்துண்டு’ படித்து இருக்கிறீர்களோ. இல்லை, புதுமைபித்தனின் அம்மாளுவை தெரியுமோ? //


ம்ம்ம்ம் படிச்சிருக்கேன்.  இன்னிக்கு கூகிள் பக்கத்திலே டிக்கன்ஸ் பிறந்தநாள்னு பார்த்ததுமே இந்தப் பதிவை எதிர்பார்த்தேன்னு தான் சொல்லணும்.  அவரோட பல கதைகள் முக்கியமா Tale of Two Cities Novel English II partல் படிக்காத மாணவர்களே இருந்திருக்க மாட்டார்கள்.   இதைத் தழுவிப் பல சினிமாக்கள் வந்திருக்கின்றன.  ஆலிவர் ட்விஸ்ட் கதையும் கூட. 

2012/2/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 7: II
ராஜ மரியாதை

07 02 2012

The Google doodle for Charles Dickens. Image 1 of 2
உசாத்துணை:
Callow. S. (2012): Charles Dickens And The Great Theatre of theWorld: Harper
Hartley.J. Ed. (2012) The Selected Letters of Charles Dickens: OUP


Innamburan Innamburan Tue, Feb 7, 2012 at 8:46 PM
To: mintamil , thamizhvaasal

நல்லது. இதையும் எழுத நினைத்தேன். எனக்கு ஒரு விதத்தில் ஆசான் சார்லஸ் டிக்கென்ஸ். பள்ளியில் தமிழ் மீடியம். ஆங்கில அறிவு சொற்பம். காலேஜில் எல்லாமே இங்கிளிபீஸ். புதுக்கோட்டை ராஜா காலேஜில் இண்டெர் படிக்கச்சே, வி.கே.வி & வி.கே.பி. ஆங்கில ஆசிரியர்கள். சகோதரர்கள். வி.கே.வி. டேல் ஆஃப் டூ சிட்டிஸ் எடுப்பார். அவருடைய பொண்ணு வேறே ஃப்ர்ஸ்ட் பெஞ்சில். நான் வழக்கம் போல் கடைசி பென்ச். இங்கிலீஷ் க்ளாஸ் பெரிசு. 80 பேர் இருப்போம். காலரி. அதனாலே, கவனித்து உட்கார்ந்தால் ஃப்ர்ஸ்ட் பெஞ்சிலிருந்து ரொம்ப தள்ளியில்லே. அதெல்லாம் ஒரு ட்ரிக்!

வி.கே.வி. பாடம் நடத்தறதை பார்த்தால், சார்லஸ் டிக்கன்ஸே அசந்துடுவார். அத்தனை உருக்கம். சிட்னி கார்ட்டன் அந்த வண்டியில் போகும் போது, 80 பசங்களும், கூச்சமில்லாமல் கண்ணீர் விடுவார்கள். ஒரு நாள் அவருடைய பெண்ணிடம் கேட்டேன். 'அப்பா உனக்கு வீட்டில் இந்த பாடம் எடுப்பாரா?' என்று. சில நாள் இலக்கியம் பேசுவார். நிசப்தமாகக் கேட்போம் என்றாள். 
அவர் சொல்லிக்கொடுத்த உத்வேஹம், வால்டையர், ரூஸோ, கார்லைல், பர்க், பேரனஸ் ஆர்ஸி, டாயின்பி, எல்லாம் ஒரே மூச்சில் படித்ததின் பயன், இன்றும் வரலாறு படிக்கும்போது, அந்த காலகட்டத்திற்கு போய் விடுகிறேன். 1990ல் அக்காலம் ஆடிட்டர் ஜெனெர்ல்களுக்கு எல்லாம் பீஷ்மரான கனடாவின் ஆடிட்டர் ஜெனெரல் கென்னெத் டை அவர்கள் லண்டனில் என்னுடைய கட்டுரை ஒன்றை படித்துவிட்டு, 'நீ படித்தது இங்கிலாந்தா? அமெரிக்காவா? என்று கேட்டார். வி.கே.வி. கதையை சொன்னேன். அவருக்கு பரம திருப்தி. என் கட்டுரையை கனடாவின் கருவூலத்தில் சேர்த்து விட்டார்.  என்றென்றும் வி.கே.வி.அவர்களுக்கு நன்றியுடைத்தவன் ஆவேன். கேட்டேள். கொட்டிப்பிட்டேன்.
இன்னம்பூரான்.
[Quoted text hidden]

No comments:

Post a Comment