Saturday, December 7, 2013

ஞானோதயம்:அன்றொரு நாள்: டிசம்பர் 8

அப்டேட்: செப்டம்பர் 2013ல் ஒரு பத்து நாட்கள் ஒரு விபஸ்ஸன்னா தியான மையத்தில் தங்கியிருந்தேன். அதை பற்றி சில சொற்களையாவது சொல்ல ஒரு தருணம் கிடைக்க வேண்டி காத்துக்கொண்டிருந்தேன். இன்று சுபதினம். வாசகர்களுக்கு ஆர்வமிருப்பின், ஆராவாரமில்லாமல் அந்த சாந்தி ஸ்தலம் பற்றி பேசலாம்.
இன்னம்பூரான்
8 12 2012
அன்றொரு நாள்: டிசம்பர் 8 ஞானோதயம்

Innamburan Innamburan 8 December 2011 18:23

அன்றொரு நாள்: டிசம்பர் 8
ஞானோதயம்

சித்தார்த்த கெளதமர் என்ற இளவரசர், இல்லறம் துறந்து, அங்குமிங்கும் அலைந்து, திரிந்து, கடுந்தவம் புரிந்து, தேடிய விடை காண இயலாமல், மனம் வருந்தினார். கயா க்ஷேத்ரத்தில், ஒரு அரசமரத்தடியில் அமர்ந்து தியானித்தார். அங்கு அவருக்கு ஞானம் கிட்டியது, மனிதனை ஆட்டிப்படைக்கும் பிணியின் மூலத்தை புரிந்து கொண்டார். ஆத்ம தரிசனம் கிட்டியது. இனி அவர் சாக்ய முனி. 
தொன்மை, மரபு, ஞானம், சமய கோட்பாடு, இவையெல்லாம் கூடி வாழ்பவை. ரசவாதமும் உண்டு. கட்டுச்சாதமும் உண்டு. சங்கமமும் உண்டு. விழுதுகளும் உண்டு. நாம் அவற்றையெல்லாம் ஆராயப்போவதில்லை. சில மரபுகள் படி, ‘உதயம் கிட்டாவிடின் சித்தார்த்தனின் அஸ்தமனம்’ என்ற கடுங்சபதம் எடுத்தாராம். ஒரு மரபு தியானத்தை கலைக்க வந்த மாரனை வென்றார் என்கிறது. மற்றும் சில மரபுகள் அவருடைய ஆழ்ந்த தியானத்தை பற்றி சொல்கின்றன.  பாலி மொழியில் ‘ தேரவடா’ மரபில் இருக்கும் முதல் பெளத்த நூலின் படி சாக்யமுனியே கூறியதாக சொல்லப்படுவது:

இரவின் முதல் பொழுதில் எண்ணற்ற தன் முன் பிறவிகளை உணர்ந்து, இரண்டாவது பொழுதில் கர்ம விதியையும், உகந்த இலக்கு கருத்து/ வாக்கு/செயல்/வாழ்வியல்/ முயற்சி/மனோபலம்/முனைதல்/ ஞானமும்,நிர்வாணமும் என்ற எட்டுவகை பாதையும், மூன்றாவது பொழுதில், 1. நீங்கா பிணியில் உழலும் வாழ்க்கை, 2. அதன் மூலம் பந்தமும், ஆசையும், 3. பந்தம் நீங்கினால், பிணி நீங்கும் & 4.உகந்த வாழ்வியலின் எட்டுவகை பாதையே அதற்குதவும் ராஜபாட்டை என்ற நான்கு சத்திய பிரமாணங்கள் தான் தன்னுடைய ஞானோதயம். 

நான் எழுதுவதெல்லாம் சிறிய அறிமுகமே தவிர அத்தாட்சிப்பத்திரங்கள் அல்ல. இயன்றவரை நம்பகத்தன்மை உடைய உசாத்துணைகளை தேடி அளிக்கிறேன். சாக்யமுனியின் கைங்கர்யங்களில் உளவியல் ஆராய்ச்சி முதலிடம் வகிக்கிறது, நுட்பங்களை நோக்கினால். உபநிடதங்கள் ஆத்மாவின் அழிவின்மையை பற்றி கூறுகிறது என்பார்கள். சாக்யமுனியோ மானிடனின் உடல் கூறுகளையும், உளவியல் நோக்குகளையும் பகுத்துக்காட்டினார் என்பார்கள். சாக்யமுனியின் வாக்கு, ‘...கடந்த/நிகழ்/வரும் காலங்களில், உள்ளிருப்பதோ/வெளியிலிருந்து வந்ததோ, நுட்பமோ/வெளிப்படையோ, அந்த உணர்வு, பிரஞ்கை யாதாயினும், அது எனது அல்ல;நான் அல்ல;...‘. ( மஜ்ஜிம நிகாயம் I:130).  அவருடைய முதல் பிரசங்கம்: ‘சுழலும் தர்மசக்ரம்’: (பாலி தம்மசக்கப்பவத்தன சூத்ரம்: SN 56,11). அவ்விடத்தே, பெளத்த மார்க்கத்தின் அஸ்திவாரம் தென்படுகிறது: எதிலும் தீவிர அணுகுமுறை வேண்டாம். கடுந்தவமும் வேண்டாம். லெளகிகத்தில் உழலவும் வேண்டாம். மத்திம பாதையில் நட. இது அன்றாட வாழ்க்கை.  சாஸ்வதம் என்று ஒன்றுமில்லை. சூன்யம் என்றும் சொல்வதிற்கில்லை. இது மனோதர்மம். 

இதுவே எல்லை கடந்த பேச்சு. மேலும் ஏதாவது சொல்லி சிக்கிக்கொள்ளலாகாது. அது ஒரு தற்காப்பு வர்மக்கலை.
மனசு கிடந்து அடிச்சுக்கிறது. சொல்லிட்றேன். சாக்ய முனி, நாகார்ஜுனர், போதி தர்மர், தலை லாமா என்ற பேச்செல்லாம் எடுக்காவிடினும், 
‘புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி’
என்று அந்த மாமுனியின் பாதாரவிந்தங்களில் நெடுஞ்சாங்கிடையாக விழுந்து வணங்குவது நலன் பயக்கும் என்று சொல்லி விடை பெறுகிறேன்.
இன்னம்பூரான்
08 12 2011
buddha.jpg
உசாத்துணை
Kornfield.J. The Teachings of the Buddha: Shambala
Eknath Easwaran (Translator) The Dhammapada

Geetha Sambasivam 8 December 2011 19:49


‘புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி’//


அதே அதே! 


Friday, December 6, 2013

டோரா! டோரா! டோரா!:அன்றொரு நாள்: டிசம்பர் 7



அன்றொரு நாள்: டிசம்பர் 7 டோரா! டோரா! டோரா!

Innamburan Innamburan 7 December 2011 16:44

அன்றொரு நாள்: டிசம்பர் 7
டோரா! டோரா! டோரா!
அலை அலையா வந்தோமா!
மலை மலையா சாச்சோமா!
குலை குலையா அறுத்தோமா!
கொலை கொலையா செஞ்சோமா!
~இது ஜப்பான்
மின்னலும் இடியுமா வந்துட்டானே!
பின்னி பின்னி அடிச்சுட்டானே!
சின்னப்பய கொளுத்திட்டானே!
கின்னஸ் சாதனை படைச்சுட்டானே!
~இது அமெரிக்கா

டிசம்பர் 7, 1941 காலை 7.55: ஓஹு என்ற பசிஃபிக் தீவில் பவளத்துறைமுகம் (பெர்ள் ஹார்பர்) பறந்து வந்தான் ஜப்பான்காரன். ஐந்து போர்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. 16 போர்கப்பல்களுக்கு பலத்த அடி. 188 விமானங்கள் நொறுக்கப்பட்டன. நூறு ஜப்பானியர் காலி. அமெரிக்கர் 2,400 இறந்தனர். 1,178 பேருக்கு காயம். மணி காலை 10. மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தப்பின. எப்படி? வேறு இடத்திற்கு சவாரி போனதால். அது என்ன ‘டோரா! டோரா! டோரா!’ ஜப்பான் தளபதி கொக்கரிக்கிறாரு, ‘அதிரதில்லை!’ என்று மும்முறை.
வரலாற்றை சுருக்கி குப்பியில் அடைத்தால்: அதிர்ச்சி வைத்யம் எனெனினும் பல வருடங்களாக ஊறிய விரோதம். விளைவு ஹராகிரி. ஜப்பானியமொழியில் ஹராகிரி என்றால் வீர தற்கொலை. பின்னி பின்னி அடிச்சாலும், ஒரு ஜப்பான் தளபதி சொன்னமாதிரி அமெரிக்க கும்பகர்ணன் சிலிர்த்துக்கொண்டு எழுந்து விட்டான். ஜப்பானை ஒடுக்கி விட்டான். இரண்டு விஷயம் மட்டும் சொல்லிட்டு போய்டறேன். ஜப்பானுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி உயிர்நாடி. அதற்கான 1911 ஒப்பந்தத்தை 1940ல் ரத்து செய்து, மரண அடியாக இரும்பு தாது, கச்சா எண்ணைய் தரமாட்டோம் என்றவுடன், ஜப்பான் ஜெர்மனியுடனும், இத்தாலியுடனும் உறவு கொண்டாடியது. அடுத்த விஷயம், அமெரிக்காவில் உளவு துறை கோட்டை விட்டது. அதுவும் பெரியகதை.
பயாஸ்கோப் பாரு! பயாஸ்கோப் பாரு! சொன்னா ஏறாது. பாத்தா  மனசுலெ பதியும். அதான் பயாஸ்கோப் (ஸ்லைட் ஷோ + யூட்யூப் +படம்)
இன்னம்பூரான்
07 12 2011
இது நவம்பர் மாத செய்தி!

pearl_harbour_newspaper%201.jpg
உசாத்துணை:


Nagarajan Vadivel 7 December 2011 17:37


//அமெரிக்காவில் உளவு துறை கோட்டை விட்டது.//

இல்லை அமெரிக்க அதிபரின் அதிபயங்கர அல்வாக் கொடுத்த  வேலை பற்றிய தகவல் கீழே

http://whatreallyhappened.com/WRHARTICLES/pearl/www.geocities.com/Pentagon/6315/pearl.html

//டிசம்பர் 7, 1941 காலை 7.55: ஓஹு என்ற பசிஃபிக் தீவில் பவளத்துறைமுகம் (பெர்ள் ஹார்பர்) பறந்து வந்தான் ஜப்பான்காரன். ஐந்து போர்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. 16 போர்கப்பல்களுக்கு பலத்த அடி. 188 விமானங்கள் நொறுக்கப்பட்டன. நூறு ஜப்பானியர் காலி. அமெரிக்கர் 2,400 இறந்தனர். 1,178 பேருக்கு காயம். மணி காலை 10. மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தப்பின//There are 2402 names in this database

http://www.usswestvirginia.org/ph/phlist.php

நாகராசன்


Innamburan Innamburan 7 December 2011 18:33

நான் கோடி காட்டவேண்டியது. பேராசிரியர் கொடி ஆட்டவேண்டியது. நன்றி, ஐயா. வரலாறு நிரவப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
இன்னம்பூரான்


annamalai sugumaran 7 December 2011 18:38


இஸார் ,
 நான் கூட அந்த நாளில் வந்த "டோரா டோரா" படம் பார்த்துள்ளேன் ,
longest days, t34 ,great escape  போன்ற உலகப் போர் பற்றிய ஹாலிடுட் படங்கள் மறக்கமுடியாதவை .
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 

Geetha Sambasivam7 December 2011 21:54

டோரா.jpgஎனக்குத் தெரிஞ்ச டோரா சின்னக் குழந்தைகளின் கனவுக் கன்னி!  இந்தக்கதை அரைகுறையாத் தெரியும். அதுவும் பெர்ல் ஹார்பர் என்பதால் , இன்று இருவரின் தயவாலும் நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது.  நன்றி.

Thursday, December 5, 2013

ஆண்டாண்டு தோறும்...அன்றொரு நாள்: டிசம்பர் 6

அன்றொரு நாள்: டிசம்பர் 6 ஆண்டாண்டு தோறும்...

Innamburan Innamburan 6 December 2011 16:27

அன்றொரு நாள்: டிசம்பர் 6
ஆண்டாண்டு தோறும்...
ஆண்டாண்டு தோறும் 1992லிருந்து இந்தியா முழுதும் பீதி நிறைந்த நாளாகி விட்டது, டிசம்பர் 6. அன்றைய தினம் நான் டில்லியில் இருந்தேன். பாபர் மசூதி இடிக்கப்படுவதைத் தொலைக்காட்சியில் கண்டு, மனம் கலங்கி, ஒரு இஸ்லாமிய நண்பரும் நானும், ஒருவரை ஒருவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டோம். சில நாட்கள் கழித்து, பிரயாக் ராஜ் எக்ஸ்ப்ரெஸ் என்ற நீண்டதொரு தொடரான ரயில் வண்டியில், அலஹாபாத் நகருக்கு பயணம் செய்தேன். கிட்டத்தட்ட 21 பெட்டிகள் அடங்கிய அந்தத் தொடரில் ஒரு வண்டியை தவிர, மற்றவை பூட்டிக்கிடந்தன. அந்த வண்டியில் சில அசட்டு பயணிகள், நானும், என் மகளும், போலீஸ், பச்சைக்கொடி/சிவப்புக்கொடி கார்டும், ஒரு இஸ்லாமிய டிக்கெட் பரிசோதகரும், உள்பட.  வண்டி ஓட்டியது ஒரு கெத்துக்கு என்றாலும்,எதற்கு அவரை அனுப்பினார்கள் என்று இன்றும் புரியவில்லை. நடுங்கிக் கிடந்தார், அவர். மற்ற ஹிந்து பிரயாணிகள் அவருக்கு உறுதுணை. ஒருவர் மட்டும் அலஹாபாத் இஸ்லாமியர்களை ஒழிப்பது பற்றி உறுமிக்கொண்டிருந்தார். கான்பூர் ஸ்டேஷன் வரும்போது, கிலி கூடியது. ஸ்டேஷனில் கொலை நடப்பதாக வதந்தி இருந்ததால். எப்படி தான் ரயிலை ஓட்டிச்சென்றார்களோ!  
அலஹாபாத்தில், பலத்த காவலுடன் அழைத்துச் சென்றார்கள். போலீஸ் அதிகாரிகளுடன் நட்பு கெட்டித்தது. அதன் பயனாக, மிக்க தயக்கத்துடன், எங்களை நடுநிசி ரோந்து போகும் போது, கூட்டி சென்றனர். இது எனக்கு தெரிந்த அலஹாபாத் இல்லை;பிரயாகை இல்லை. திரிவேணி சங்கமம் இல்லை. சுலைமானும், சின்ஹாவும், முக்கர்ஜியும், கணபதியும் நண்பர்களாக இருக்கும் ஆஃபீஸ். ஒரு கிருஷ்ணன் கோயில், ஒரு இஸ்லாமிய தொழுகை மன்றம் அங்கே உண்டு. இத்தனைக்கும் பத்தாம்பசலியூர். ஃப்யூடல். ஆனால், ஒரு சமபந்தி போஜனம், நடுவில். இன்றோ நடுநிசியில் அபாயம், கத்ரா என்ற பேட்டையில். கத்ரா என்றாலே, அபாயம் என்று பொருள். ஒரு அலறல். ஒரு முனகல். ஒரு ‘சதக்’. ஒரு தோட்டா விர்ரென்று பறக்கிறது. போலீஸ் புலிப்பாய்ச்சல். இனி இதை பற்றி பேசப்போவதில்லை. காழ்ப்புணர்ச்சி, பட்டி மன்றம், விதண்டா வாதம், சறுக்கும் சர்ச்சை: இதற்கெல்லாம் ஹேதுவாக இருக்க விருப்பமில்லை. ஒரு டைம் லைன், வரலாற்று நோக்கில். அத்துடன் சரி. 
1528: பாபர் மசூதி கட்டப்படுகிறது; அது ஶ்ரீராமனின் ஜன்மஸ்தலம் என்று சில ஹிந்துக்கள் நம்புகிறார்கள்.
1853: அவ்விடத்தில் சமயம் சார்ந்த வன்முறை, முதல் தடவையாக பதிவு ஆகிறது.
1859: கலோனிய அரசு பிரிவினை வேலி எழுப்பி, ஹிந்து/முஸ்லீம் பகுதிகளுக்கு எல்லை வகுக்கிறது.
1949: மசூதிக்குள் ஶ்ரீராமன் சிலை. முஸ்லீம் கண்டனம். கோர்ட் கேஸ் இரு தரப்பிலிருந்தும்; வம்பு எதற்கு என்று அரசு பூட்டி விடுகிறது.
1984: விஸ்வ ஹிந்து பரிஷத், புனித இடத்தை விடுவித்து கோயில் கட்ட, ஒரு கமிட்டி அமைக்கிறது. தலைமை திரு. லால் கிருஷ்ண அத்வானியிடம் போய் விடுகிறது. அவர் பி.ஜே.பி. முன்னணி தலைவர்களில் ஒருவர்.
1986: கேட்டை திறந்து  ஹிந்துக்கள் ஶ்ரீராமனை வணங்க, கோர்ட்டார் அனுமதி. முஸ்லீம் எதிர்ப்பு கமிட்டி.
1989: விஸ்வ ஹிந்து பரிஷத் மசூதிக்கு அருகில் கோயிலுக்கு அஸ்திவாரம் போடுகிறது.
1990: விஸ்வ ஹிந்து பரிஷத் வாலெண்டியர்கள் மசூதியை கொஞ்சம் உடைத்து விடுகிறார்கள். பிரதமர் சந்திரசேகரின் சமாதான முயற்சிகள் தோல்வி.
1991:  அயோத்யா இருக்கும் உத்தர் பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆட்சிக்க்கு வருகிறது.
1992: டிசம்பர் 6 நிகழ்வு. நாடு முழுதும் கிளர்ச்சி. இரண்டாயிரம் பேர்  மரணம்.
1998: அதுல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள் தலைமையில், மத்தியில் பி.ஜே.பி.யின் கூட்டரசு.
2001: டென்ஷன் கூடுகிறது. வீராவேசப்பேச்சுக்கள்.
2002: ஜனவரி: பிரதமர் சமாதான பேச்சு வார்த்தைக்கு வகை செய்கிறார். ஃபெப்ரவரி: அனல் பறக்கிறது. குஜராத் கோத்ரா ரயில் தாக்குதல். 58 ஹிந்து ஆர்வலர்கள் பலி. மார்ச்: குஜராத் இனவெறி தாக்குதல்களில், 1000/2000 மக்கள் பலி. பெரும்பாலும் இஸ்லாமியர். ஏப்ரல்: யாருக்கு சொந்தம்? உயர்நீதி மன்ற விசாரணை.
2003: ஜனவரி: கோர்ட்டார் ஆணைப்படி, ஶ்ரீராமன் கோயிலை தேடி அகழ்வாராய்ச்சி. ஆகஸ்ட்: கோயில் இருந்ததாக சாட்சியம். அதை இஸ்லாமியர் ஒத்துக்கொள்ளவில்லை. ஹிந்து ஆர்வலர் ராமசந்திரதாஸ் பரமஹம்ஸின் இறுதி ஊர்வலத்தில் கோயில் கட்டுவதாக பிரதமர் வாக்கு. அதே மூச்சில் கோர்ட்டு தீர்மானிக்கட்டும். பேச்சு வார்த்தைகள் ஜெயிக்கட்டும் என்ற பேச்சு. செப்டம்பர்: கோர்ட், மசூதி தாக்குதலுக்கு ஏழு ஹிந்து தலைவர்கள் மீது வழக்கு என்று. அத்வானி மேல் கேசு போடவில்லை.
2004: அக்டோபர்: அத்வானி கோயில் கட்டப்படும் என்று சாதிக்கிறார். நவம்பர்: கோர்ட்டார் அத்வானிக்கு கொடுத்த விதி விலக்கு சலுகையை மீள்பார்வை செய்யவேண்டும் என்கிறது.
2005: ஜூலை: இஸ்லாமியர்? தாக்குதல். போலீஸ் ஆறு பேரை சுட்டுத் தள்ளியது, பயங்கரவாதம் என்று சொல்லி.
2009: ஜூன்:மசூதி இடிக்கப்பட்டதை விசாரித்த லிபெர்ஹான் கமிஷன் 17 வருடங்களுக்கு பிறகு, அறிக்கை சமர்ப்பித்தது. நவம்பர்: நாடாளுமன்றத்தில் அந்த அறிவிக்கையை பற்றி அமளி.
2010: அலஹாபாத் உயர் நீதிமன்றம் பாகப்பிரிவினைக்கு ஆணையிட்டது. மூன்றில் ஒரு பாகம் ( மசூதி இருந்தவிடம் உள்பட) ஹிந்துக்களுக்கு, மூன்றில் ஒரு பாகம் இஸ்லாமியருக்கு; மூன்றில் ஒரு பாகம் நிர்மோஹி அக்காடா என்ற சன்யாசி அமைப்புக்கு. இஸ்லாமியர் அப்பீல் செய்யப்போவதாக சொன்னார்கள். பின் குறிப்பு நோக்குக.
2011: ஏப்ரல் 12: ராமநவமி விமரிசையாக, அயோத்தியில். திருவிழாக்கூட்டம், பல வருடங்களுக்கு பின். நல்லிணக்கம். இஸ்லாமியர் தண்ணீர்பந்தல் வைக்கிறார்கள். தன்னார்வப்பணியிலும்.
உபரிச்செய்தி: அபரிமித நல்லிணக்கம்:  அயோத்தியில் ‘அம்மாஜி மந்திர்’ தெரியுமோ? ஶ்ரீ ராமசாமி கோயில். உத்ஸவர் திருப்பாற்கடலிலிருந்து, ஒரு மாதரசியின் கனவை பூர்த்தி செய்ய 1904ல், ஶ்ரீ யோகி பார்த்தசாரதி ஐயங்கார் ஸ்வாமிகளால், அயோத்திக்கு எழுந்தருளப்பட்டவர். காதிலெ விழறதா,ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்? முனைவர். வேங்கடகிருஷ்ணன் அவர்களின் மூதாதையர் என்று நினைவு. கோயில் அறங்காவலர்கள் 1992க்கு பிறகு,ஶ்ரீராம நவமி கொண்டாட தயங்கினார்கள். கோயிலுக்கு பரம்பரையாக புஷ்பம் தருபவர்கள், தாங்கள் பாதுகாப்பு தருவதாக, ஊக்கம் அளித்தனர். அவர்கள் அனைத்தும் இஸ்லாமியர். விழாவும் விமரிசையாக நடந்தேறியது என்று படித்ததாக ஞாபகம்.
இன்னம்பூரான்
06 12 2011
பி.கு: ஏதோ ஒரு சிக்கல். தீர்வு கிடைக்கலாகாது என்று கங்கணம் கட்டிக்கொள்கிறார்கள், வாதி ~ பிரதிவாதிகள். சிக்கல்கள் பலவற்றை தருவித்து, உணர்ச்சிப்பெருக்கால், நெருக்கமாக பின்னி, ‘ஐயோ சாமி! அவிழ்த்து விடுங்கோ’ என்று கனம் கோர்ட்டாரிடம் போயி, தாக்குதல்களை தாக்கல் செய்து, ஒத்திப்போடவைத்து, அதற்குள் மொத்திக்கொண்டு, அப்பீலுக்கு மேல் அப்பீல்! ஆண்டவா! உசாத்துணை 4: கோர்ட்டு சமாச்சாரம் முச்சூடும். சுருக்கமா எழுதினாலே, ஆயிரம் பக்கம். முதல் சில வரிகள் மட்டுமிங்கே: “...1500 சதுரகஜம். சின்ன இடம். தேவர்கள் நடக்க அஞ்சுமிடம். எக்கச்சக்கப் பொறிகள்... சில சான்றோர்கள்,‘போகாதே! போகாதே! நீதியரசே! சுக்குநூறாகிச் செத்துப்போவாய் என்றார்கள்...
ஹூம்! சொல்றத்துக்கு எக்கச்சக்கமாக இருக்கு, சிக்கல்களும், முடிச்சுகளும். ஆனா ஒண்ணு. இரு தரப்பினரும் சுமுகமாக கும்பிட்டு வந்தனர், ஆண்டாண்டு தோறும். அதை சொல்ல வேண்டாமோ?

babri masjid verdict
babri+masjid+verdict.gif
உசாத்துணை:


Geetha Sambasivam 6 December 2011 20:20

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
மறக்கமுடியாத நினைவுகள்.  நாங்க அப்போ குஜராத்தில் இருந்தோம். ம்ம்ம்.. நல்லதொரு நடுநிலைப்பார்வையுடன் கூடிய பதிவு.  அத்வானி ரத யாத்திரையின் போதும் குஜராத் வாசம் தான்.  ஒரு சின்ன கலாட்டா கூட இல்லை அப்போ.  அமைதி மாபெரும் அமைதி காத்தது.
2011/12/6 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: டிசம்பர் 6
ஆண்டாண்டு தோறும்...

இன்னம்பூரான்
06 12 2011
பி.கு: ஏதோ ஒரு சிக்கல். தீர்வு கிடைக்கலாகாது என்று கங்கணம் கட்டிக்கொள்கிறார்கள், வாதி ~ பிரதிவாதிகள். சிக்கல்கள் பலவற்றை தருவித்து, உணர்ச்சிப்பெருக்கால், நெருக்கமாக பின்னி, ‘ஐயோ சாமி! அவிழ்த்து விடுங்கோ’ என்று கனம் கோர்ட்டாரிடம் போயி, தாக்குதல்களை தாக்கல் செய்து, ஒத்திப்போடவைத்து, அதற்குள் மொத்திக்கொண்டு, அப்பீலுக்கு மேல் அப்பீல்! ஆண்டவா! உசாத்துணை 4: கோர்ட்டு சமாச்சாரம் முச்சூடும். சுருக்கமா எழுதினாலே, ஆயிரம் பக்கம். முதல் சில வரிகள் மட்டுமிங்கே: “...1500 சதுரகஜம். சின்ன இடம். தேவர்கள் நடக்க அஞ்சுமிடம். எக்கச்சக்கப் பொறிகள்... சில சான்றோர்கள்,‘போகாதே! போகாதே! நீதியரசே! சுக்குநூறாகிச் செத்துப்போவாய் என்றார்கள்...
ஹூம்! சொல்றத்துக்கு எக்கச்சக்கமாக இருக்கு, சிக்கல்களும், முடிச்சுகளும். ஆனா ஒண்ணு. இரு தரப்பினரும் சுமுகமாக கும்பிட்டு வந்தனர், ஆண்டாண்டு தோறும். அதை சொல்ல வேண்டாமோ?

babri masjid verdict

உசாத்துணை:




Tthamizth Tthenee 7 December 2011 06:17


மதம் ஆட்டிப் படைத்து  அதனால் வரும் மமதையினால்  மனிதம் இழந்த மனிதர்களின் வெறியாட்டச் செயல்களின் நடப்புகளை  படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் திரு இன்னம்புரான் அவர்கள்.
நிகழ்வுகளை  வர்ணிக்க அதுவும் சுவையாக நாமே நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது  நயம் மிக்க ஒரு கலை, அந்தக் கலை பரிபூரணமாக இன்னம்புராரிடம் இருப்பது
நம் போன்றவர்களின் பாக்கியம்
அன்புடன்
தமிழ்த்தேனீ

கி.காளைராசன் 7 December 2011 10:38

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.


ஆண்டாண்டு தோறும் 1992லிருந்து இந்தியா முழுதும் பீதி நிறைந்த நாளாகி விட்டது, டிசம்பர் 6.

இரத்தினச்சுருக்கமாகச் சிக்கலை விளக்கிவிட்டீர்கள்.

அன்றைய தினம் நான் டில்லியில் இருந்தேன். பாபர் மசூதி இடிக்கப்படுவதைத் தொலைக்காட்சியில் கண்டு, மனம் கலங்கி, ஒரு இஸ்லாமிய நண்பரும் நானும், ஒருவரை ஒருவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.

இதனால் அன்றோ இந்தியா இன்றும் ஒற்றுமையாய் உள்ளது.
இந்தியர்களை இந்துக்கள் என்றும் இசுலாமியர் என்றும் ஏன் பிரித்துப்பார்க்க வேண்டும்.


 ஏதோ ஒரு சிக்கல். தீர்வு கிடைக்கலாகாது என்று கங்கணம் கட்டிக்கொள்கிறார்கள், வாதி ~ பிரதிவாதிகள். சிக்கல்கள் பலவற்றை தருவித்து, உணர்ச்சிப்பெருக்கால், நெருக்கமாக பின்னி, ‘ஐயோ சாமி! அவிழ்த்து விடுங்கோ’ என்று கனம் கோர்ட்டாரிடம் போயி, தாக்குதல்களை தாக்கல் செய்து, ஒத்திப்போடவைத்து, அதற்குள் மொத்திக்கொண்டு, அப்பீலுக்கு மேல் அப்பீல்! ஆண்டவா!

பாக்கிசுத்தான் மறைந்தவுடன் இந்தச் சிக்கலும் காசுமீரச் சிக்கலும் தீர்ந்து விடும் என்று நம்புகிறேன்.
 -- 
அன்பன்
கி.காளைராசன்

Subashini Tremmel 8 December 2011 18:25


இச்செய்தியின் நல்லதொரு வரலாற்றுத் தொகுப்பு. நிறைய தேடி தொகுத்து வழங்கியிருக்கின்றீர்கள். நன்றி.

1980களில் இந்தியாவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்களை மலேசிய பத்திரிக்கைகளில் வாசித்திருக்கின்றேன். 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து திரும்பிச் சென்ற நாள் டிசம்பர் 6ம் தேதி. அன்று சென்னை விமான நிலையத்தில் பலத்த காவல் போடப்பட்டிருந்தது. இந்தப் பதிவை வாசிக்கும் போது இவை ஞாபகம் வருகின்றன. 

சுபா

நாகரீக கோமாளி:அன்றொரு நாள்: டிசம்பர் 5



அன்றொரு நாள்: டிசம்பர் 5 நாகரீக கோமாளி

Innamburan Innamburan 5 December 2011 16:37

அன்றொரு நாள்: டிசம்பர் 5
நாகரீக கோமாளி

இன்று கடும்போட்டி! உலகப்புகழ் புரட்சி சொற்பொழிவாளர் சிசிரோவா? மன மகிழ் மன்னன் வால்ட் டிஸ்னேயா?  டிஸ்னே தான் ஜெயிக்கிறார். ஒரு விஷயத்தில் காந்திஜி மாதிரி. பதவி யாதுமில்லை. ஆனால், யாதுமே அவர் தான். டோட்டல் கண்ட்ரோல். எங்கிருந்தோ வந்த நிழலுலக மார்க்கண்டேயர்களை கண்டு களியுங்கள் ~ மிக்கி மெளஸ், டொனால்ட் டக், ஸ்னோ ஒயிட்டும் ஏழு குள்ளர்களும், ப்ளூட்டோ, கூஃபி, டம்போ, பாம்பி, பீட்டர் பான், ஃபெர்டிணாண்ட் என்ற காளை, சிண்ட்ரல்லா பொண்ணு, முயல் தம்பி, பினாச்சியோ. எல்லாருமே சிரஞ்சீவிகள். ஆளுக்கொருவிதம் என்றாலும், இந்த சூதுவாது அறியாத கதாபாத்திரங்களை நேசிக்காமல் இருக்கமுடியாது. மிக்கி மெளஸ்ஸுக்கு என்ன மவுசு என்கிறீர்கள்! ஃபிரான்ஸில் மிஷல் ஸெளரிஸ், இத்தாலியில் டாப்போலினோ, ஜப்பானில் மிகி குச்சி, ஸ்பெயினில் மைகேல் ராடோசிடோ, தென்னமெரிக்காவில் எல் ராட்டோன் மைகெலிடோ, ஸ்வீடனில் ம்யூஸ் பிக், ரஷ்யாவில் மிக்கி மவுசு. சரியான காரணப்பெயர்! உச்சகட்டமாக, இரண்டாவது உலக யுத்தத்தின் அதி முக்கிய தினத்தில் நேசப்படை தலைமை செயலகத்தின் ரகசிய கடவுச்சொல்! 

வால்ட் டிஸ்னே தன்னுடைய படங்களை சின்னத்திரைக்கு தரமாட்டார். பாயிண்ட் மேட். சிறார்களிலிருந்து தாத்தா பாட்டி வரை, உலகாபிமானச்சின்னம். வாழையடி வாழையாக, எவெர் க்ரீன். எல்லா தலைமுறைக்கும் நல்வரவு.உலகமெங்கும் அவ்வப்பொழுது அற்ப மானிடர்கள் சந்தோஷ கப்பலில் மிதக்கிறார்கள் என்றால், வால்ட் டிஸ்னே அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவருடைய கற்பனை வெள்ளத்தின் ஊற்று என்றுமே வற்றாதது. அதற்கு மக்களும் தாராளமாகவே கப்பம் கட்டினார்கள். அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும் அவரை கெளரவித்ததே, அவர் உலகமயமானதற்கு சாக்ஷியம். திரைப்பட தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஏங்குவது ஒரு ஆஸ்கார் விருது பெற. ஐயாவுக்கு 29 ஆஸ்கர்கள் கிடைத்தன. கார்ட்டூன், அனிமேஷன், நடிப்பு எல்லா வகை திரைப்படங்களும் வாகை சூடியவண்ணம். ஜாதகம் அப்படி. சாதனை அப்படி. சொல்லி மாளாது போங்கள். அவர் ஒரு ஏடுபடாக்கூடர். பள்ளி தாண்டா பண்டாரகர். ஹார்வார்டும் யேலும் ஓடொடி வந்து விருதுகள் அளித்தன. 29 பக்க பயோடாட்டா; 700 விருதுகள், பரிசில்கள், பட்டியலில். சர்வதேசங்களிலும் கீர்த்திமான். மேரி பாப்பின்ஸ் சினிமா தடபுடல். 50 மிலியன் டாலர் வரவு. அவருடைய லாஸ் ஏஞ்செலஸ் டிஸ்னே லாண்ட் மாயாலோகம். அதே மாதிரி ஃப்ளோரிடாவில், ஃப்ரான்ஸில்.

‘நாட்டுப்புறக்கலை படைப்பதில் மன்னன்;வாழ்வியலை கருணையுடன் பார்க்கும் ஸ்வபாவம்; அதன் மூலம் வால்ட் டிஸ்னே நம் சிறார்களுக்கு மனித நேயம் நோக்கி நல்வழி நடக்க வழி வகுத்தார்.’ இது ஜனதிபதி ஐஸன்ஹோவரிடமிருந்து. யேல் பல்கலைக்கழகம், ‘விலங்கியல், இயற்கையியல் பரிசோதனை சாலைகள் செய்யமுடியாததை, இவர் செய்தார்; விலங்கினத்துக்கு ஆத்ம தானம் செய்தார்.’.
சரி. அவருடைய பொன்மொழிகள்:
‘நான் நல்ல கால கனவு காண்பவன். அழுகைப்படங்களில் எனக்கு ஆர்வமில்லை. உலக அதிசயங்களை கண்டு நான் வியக்காத நாள் கிடையாது.  மிக்கி மவுசை பாருங்கள். அருமையான பிருகிருதி. யாருக்கும் தீங்கு நினையா நல்லவன். தப்பு ஒன்றும் செய்யாமலே மாட்டிக்கொள்ளும் அசடு மாதிரி. ஆனால், சிரித்துக்கொண்டே தப்பித்து விடுவான். அவனை நேசிக்காமல் இருக்கமுடியுமோ?’
வாகை சூடி அதனுடைய லாகிரியில் திளைத்தபோது கூட, உழைப்பதை குறைக்க விரும்பாத அவர் சொன்னது நமக்கெல்லாம் என்றும் பாடமே, ‘... கற்பனை ஊற்றெடுக்கும் வரை டிஸ்னேலண்ட் வளர்ந்து கொண்டே இருக்கும்...’.

என்றோ படித்தது. ரீடர்ஸ் டைஜெஸ்ட் என்று நினைக்கிறேன். ஆரம்பகாலத்தில், கார் வைக்கும் லாயத்தில் ஸ்டூடியோ. பணக்கஷ்டம். கடன். ஆனால், மாதம் ஒரு காசோலை செல்லுபடி செய்யப்படவில்லை. அது அவரது காரியதரிசி லிலியனின் சம்பளம். அவளது உண்மையான ஒத்துழைப்புக்கேற்ற பரிசில் கொடுத்தார், வால்ட் டிஸ்னே ~ திருமணம். ஆனால், இன்று அந்த ஆதாரம் கிடைக்கவில்லை. எது எப்படியோ? மிக்கி மெளசுக்கு நாமகரணம் செய்தது, லிலியன். அது போதாதோ!
நான் இந்தியன். அதனாலே விட்லாச்சாரியாருக்கும் ஒரு கும்பிடு. அடடா! மறந்து போச்சே. அவருடைய பிறந்த நாள், இன்று: டிசம்பர் 5. 1901ல் ஜனனம்.  டிசம்பர் 15,1966ல் மறைவு.

இன்னம்பூரான்
05 12 2011
walt-disney-stamp-1968-202x300.jpg

multiple-disney.jpg

உசாத்துணை:


Innamburan Innamburan 5 December 2011 17:06

திருத்தம்: 'அவருடைய' எடுத்து 'வால்ட் டிஸ்னேயின்' என்று போடவும்.


Tuesday, December 3, 2013

பிக்ஷாவந்தனம்;அன்றொரு நாள்: டிசம்பர் 4

அப்டேட்: தமிழ் இலக்கிய கர்த்தாக்களை பற்றி அறிய:  அதற்கான ஆர்வத்தை வளர்த்த , இங்குமெங்கும் எழுதிப்பார்க்கிறேன். பார்க்கலாம்.
இன்னம்பூரான்
04 12 1013


அன்றொரு நாள்: டிசம்பர் 4 பிக்ஷாவந்தனம்

Innamburan Innamburan 4 December 2011 18:12


அன்றொரு நாள்: டிசம்பர் 4
பிக்ஷாவந்தனம்
மண்ணில் பிறந்தால் வானேற ஆசை,/காலோடிருந்தால் பறப்பதற்காசை,/ வானாயிருந்தால், பூமிக்கு வேட்கை,...மின்னாயிருந்தால் எருக்குழிக்காசை./எருக்குழியானால் மலராகும் பித்து... தனியாயிருந்தால்
வீட்டுக்கு ஆசை./வீட்டோடிருந்தால் கைவல்யத்திற்காசை/நானாயிருந்தால் நீயாகும் ஆசை. /உனக்கோ?
உலகாகும் ஆசை.’ 
~ லீலை: ந. பிச்சமூர்த்தி

‘1930க்கு முன்பு பிச்சமூர்த்தி போன்ற படைப்பாளிகளுக்கு தமிழில் தளம் இருந்திருக்க முடியாது.’ 
~ அசோகமித்ரன் (2002) ந.பிச்சமூர்த்தி: சாகித்ய அக்காதெமி: புது டில்லி (ப.16)

‘பிச்சமூர்த்தி... வெளிப் படையானவர் என்பதாலும், சிக்கலற்றவர் என்பதாலும் அவருடைய ஆளுமையைப் புரிந்து கொள்வது சுலபம். மேலும் மிக ஆத்மார்த்தமான கலைஞரான இவருக்கும் இவரது படைப்புகளுக்கும் இடையே இடைவெளி இல்லை. தன்னிடம் இல்லாத ஒரு குணத்தை வெளிப்படுத்தி அதற்குரிய மதிப்பை பிறரிடமிருந்து பெற முயலும் கெட்டிக்காரத்தனம் இவரது படைப் புகளில் ஒரு வரியில் கூட இல்லை... பிச்சமூர்த்தி யார்? பிச்சமூர்த்தி ஒரு மனிதர். அவருடைய பார்வைப்-படி... ஆகவே அவர் ஒரு கலைஞர்.’ 
~சுந்தர ராமசாமி: 1991
‘‘மேலும் கலைஞன் என்றொரு தனி சிருஷ்டி இல்லை. அவனும் மனிதன்தான். மனிதன் தான் இவ்வித சிருஷ்டிகளைச் செய்தான். வேறெந்தப் பிராணியும் செய்யாத இச்செயலை மனிதன் மனிதனுக்காகத்தான் செய்கிறான். ஏனெனில் வேறெந்தப் பிராணிக்கும் அனுபவிக்கத் தெரியாது. மனிதனுக்குள்ளே கலைஞனும், கலைஞனுக்குள்ளே மனிதனும் இருப்பதால்தான் கலைப் படைப்புகளை உருவாக்கமுடிகிறது’’ 
~பிச்சமூர்த்தி. ‘எதற்காக எழுதுகிறேன்?’ ‘எழுத்து’ மே, 1962
தமிழில் சிறுகதையின் சிருஷ்டிகர்த்தா ந.பிச்சமூர்த்தி என்றால் அதில் தவறு இல்லை, வ.வே.சு. ஐயரின், அ.மாதவையாவின், மஹாகவி பாரதியாரின் கதைகளின் வெள்ளோட்டம் இருந்திருந்தாலும். அவர் ஒரு சுதந்திர பறவை.என்னைக்கேட்டால், ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல் போல என்று ஒரு போடு போடுவேன். அதனால் தான் அமர்க்களமான புதுக்கவிதைகள் ~‘வானேற ஆசை’! ஜனித்த தினமோ ஆகஸ்ட் 15. வருஷாரம்பமெல்லாம் சின்ன விஷயம். இவர் சதாப்தியை பிராரம்பம் செய்து வைத்தார். ஆம். 1900ல் ஜனனம். இன்று அவருடைய நினைவஞ்சலி தினம். அவர் கைவல்யம் தேடிக்கொண்டது, டிசம்பர் 4, 1976 அன்று. ஆனால் பாருங்கள், அவருடைய வாழ்க்கை வரலாறு பதிப்பிக்க மேலும் கால் நூற்றாண்டு கழிந்தது. வயசாயிடுத்தோல்லியோ! சாஹித்ய அக்காடமிக்கு ஷார்ட் டெர்ம் நினைவாற்றல் குறைந்து விட்டது. ஏதோ தமிழன்னை செய்த புண்ணியம் லாங்க் டெர்ம் நினைவாற்றல் மங்கினாலும், தொங்கவில்லை. மத்தவாளுக்குமா தோணலை! ஈஷ்வரா! 
சார் கும்பகோணத்தான். அவருடைய தந்தை நடேச தீக்ஷிதர் ஒரு புலவர். தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, மராட்டியில் கதா காலக்ஷேபம் செய்வார். வைத்த பெயர் ‘சங்கர நாரயணன்’ மாதிரி ஹரியும் ஹரனும்: வேங்கட மஹாலிங்கம். பசங்க தக்கணும் என்று பெத்தமனசு அடிச்சுக்கும். அதற்காக ‘பிச்சை’ என்ற அற்ப பெயர். இவரும் ஸ்டைலா ‘பிச்சமூர்த்தி’ ஆனார். பட்டம் வாங்கியது: தத்துவம். பிறகு சட்டம் படித்து 13 வருடங்கள் வழக்கறிஞராக இருந்தார்; பிறகு 1959 வரை இருபது வருடங்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரி. இதழியல், படைப்புகள் இத்யாதி. 15 வருடங்கள் எழுதாமலே இருந்தார். பிறகு பதினெட்டாம் பெருக்குத் தான். ஆளவந்தாராக, ஶ்ரீ ராமானுஜர் என்ற திரைப்படத்தில் நடித்ததும் பயோ டாட்டாவில். ஆங்கிலத்திலும் கதைகள் எழுதியிருக்கிறார். பிக்ஷு, ரேவதி என்ற புனைப்பெயர்கள் வேறு, அது போதும், இப்போதைக்கு. ‘தரிசனம்’ என்றொரு சிருஷ்டி, இவரது. படிச்சிருங்கோ, ப்ளீஸ். இது தான் பிக்ஷா வந்தனம்.
இன்னம்பூரான்
04 12 2011
ta023579.jpeg
உசாத்துணை
http://jeeveesblog.blogspot.com/2010/07/blog-post_20.html

http://www.ulakaththamizh.org/JOTSpdf/057116118.pdf
http://azhiyasudargal.blogspot.com/2010/03/blog-post_27.html
****************************************************
தரிசனம் ~ந.பிச்சமூர்த்தி

     நேற்றிரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். புஸ்தகம் முடிந்துவிட்டது. வாணி தரிசனம் முடிந்ததும் பிருகிருதி தேவியைக் காண வெளியே சென்றேன். ஆகாயம் ஓர் எல்லையற்ற மைக் கூண்டு. விளையாட்டுத்தனமாய் ஏதோ தெய்வீகக் குழந்தை அதைக் கவிழ்த்து விட்டது போலும்! ஒரே இருள் வெள்ளம்
மரங்களெல்லாம் விண்ணைத் தாங்கும் கறுப்புத் தூண்கள். மின்னும் பொழுதெல்லாம் வானம் மூடிமூடித் திறந்தது. கண் சிமிட்டிற்று. நான் கண்ணாமூச்சி விளையாடினேனோ அல்லது மின்னலா?
      திரும்பி வீட்டிற்குள் வந்து பாயைப் போட்டேன். துயில் திரை கண்களின் மேல் படர்ந்தது, ஆமைக் கால்களைப் போல், என் புலன்கள் சுருங்கி உறங்க ஆரம்பித்தன. மனத்தின் சுடர்விழி மட்டும் முழுதும் மூடவில்லை. வௌவால் முகத்தினருகில் அடித்தது. கண் திறந்தேன். எதிரில் ஆகாயமளாவி நின்றாள் சிவசக்தி. தலைமயிர் வெற்றிக் கொடிபோல் பறந்தது. கண்ணினின்று கொஞ்சும் அழகு. கையில் கொடி மின்னலைப் பழிக்கும் வைரவாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கலகலவென்ற சிரிப்பு உலகெங்கும் பரவியது. உடல் மயிர்க் கூச்செறிந்தது.
     சிறிது நேரம் கழிந்தது. அலையோய்ந்த கடல்போல் சற்று நெஞ்சம் ஆறுதலடைந்தது. போர்வையை எடுத்தேன்; பளீரென்று ஒரு மின்னல் உலகை ஒளிரச் செய்தது. அவ்வொளிர் "சொக்கப்பனையில்" எதிரே கண்ணில் பட்டது. ஒரு மரம் - ஒரு வெறும் நெட்டைத் தென்னை! "என்ன ஆச்சர்யமென நினைத்தேன்.
***
 மழைத் தெய்வம்
     மறுபடியும் இன்றைய தினம் கொடும்பாவி கட்டி இழுத்தார்கள். ஆமாம், கொடும்பாவி என்று என்ன பெயர்? இருக்கட்டும். குடியானவர்கள் ஒரு கையில் ஒரு பிடி நெற்பயிரை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கொடும்பாவியைத் தெருவழியே இழுத்துச் சென்று, கடைக்குக் கடை நின்று, கொடும்பாவியின் புருஷன் சூரியனைத் திட்டி, மாரில் அடித்துக் கொண்டு வைத்த ஒப்பாரியைக் கேட்டபொழுது (நடிப்பு ஒப்பாரியாக இருந்த பொழுதும் கூட) என் உள்ளம் உருகிப் போய்விட்டது. பாவம்! மண்மீது மழையில்லை என்றால், வயிற்றில் மண்தானே! எனவே "மானம் பார்த்த" சீமையென்று சில இடங்களை ஏளனம் செய்தது தப்பல்லவா? ஆறு, குளங்கள் உள்ள ஊர்க்காரர்களுக்குக் கூடத்தான் பார்க்க வேண்டும். இரண்டு மானத்தையும் தான் - ஒரு 'மான'த்தை வயிற்றுக்காகவும் மற்றொன்றை ஜீவனுடைய தீராத பசியாகிய கௌரவத்திற்காகவும்...
     மழைக்குக் கொடும்பாவி இடத்தில் ஏன் அவ்வளவு பயம்? ஆனால் பயமென்று எப்படிச் சொல்லலாம்? அனுதாபமாயிருக்கலாம்; அல்லது குடியானவர்கள் சொல்வதுபோல் சூரியனுடைய காதல் கட்டழகியாகிய கொடும்பாவியின் மீதுள்ள போட்டிப் பிரேமையாயிருக்கலாம்.
     எப்படி இருந்தாலென்ன? இதோ மழை வந்துவிட்டது. ஜில்லென்று தாமரைத் தண்டுகள் தொடுவதுபோல் மேலே காற்று வீசுகிறது. வானம் மைக்காரியாகி விட்டது. நக்ஷத்திரங்களெல்லாம் வழி தெரியாமல் விழுந்து விட்டன. அடடா! வானில் என்ன கத்தி விளையாட்டு! என்ன இடி முழக்கம்! கொல்லைப் புறத்திலிருந்து தவளைகள் தங்கள் தெய்வத்தை வரவேற்பதற்காக முறை வைத்துப் பாட ஆரம்பித்து விட்டன. எவ்வளவு தினிசுகள்! - வேத பாராயணம், துடுக்குப் பேச்சு, எந்திரம் அறைத்தல், கிஞ்சிரா, மிருதங்கத்தின் ஒலி, ஒற்றைக் குரல், அதிகாரக் குரல், அடடா! வர்ணிக்க வார்த்தை எனக்குத் தெரிந்தாலல்லவா!...
*******
புலியின் வரிகள்
     ஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன. புலிக்கு வரிகள் இல்லை. பழம் போன்ற வர்ணம் மட்டும் உடலில் பரவி இருந்தது.
     காட்டு வழியே வரிக்கோடுகள் நடந்து வந்து கொண்டிருந்தன. ஆதி முதற்கொண்டு வரிகள் தனித்து ஓரியாக இருந்தன. தனிமையின் தன்மையில் தம்மையே உணர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன. பொருள்கள் மோதினால்தானே, இணைந்தால்தானே உணர்வு பிறக்கும், பொறி பறக்கும்? குகையை விட்டு வரும் அரிமாவைப் போல நான் என்னும் நினைப்பு, பிடரி மயிரைச் சிலிர்த்துப் பெருமிதம் அடைய முடியும்? ஆனால் வரிகள் ஒன்றியாகப் பயனற்றிருந்தன. தவிப்பை முறித்தெறியப் பாதை வழியே அவை நடந்து வந்து கொண்டிருந்தன.
     'என்ன அழகிய மூங்கில் கொத்து! என்ன அழகிய புலி!' என்று, ஒரு நிமிஷம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே விர்ரென்று விஷ அம்பு ஒன்று புலி மேல் பாய்ந்தது. காடு நடுங்க உறுமிக் கொண்டே புலி இறந்தது. புலிதான் போய்விட்டதே என்ற தைரியத்தில், கோடாலிக்காரன் விரைந்து வந்து மூங்கில்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து வீடுகட்ட எடுத்துப் போய்விட்டான். மிஞ்சி இருந்த இரண்டு மூங்கில்கள் உராய்ந்து கொண்டே துயரத்தால் ஓலமிட்டன. புலிக்கு நாம் துணை, நமக்குப் புலி துணை என்று நினைத்தோமே, ஏமாந்து விட்டோ மே என்று புலம்பின.
     பயந்து போய் வரிக்கோடுகள் மேலே நடந்து சென்றன. "ஓரியாக இருந்தால் இன்பம் இல்லை" என்றது ஒரு கோடு.
     "இரண்டாக இருந்தால் மூன்றாவது எதிரி வருகிறான்" என்றது மற்றொரு வரி.
     "பின் என்ன செய்யலாம்?"
     "ஒன்றியாக இல்லாமல் இரண்டாகவும் இல்லாமல் ஒன்றிவிட்டால் இன்பம் உண்டு. பலவாக இருப்பது ஒன்றிவிட்டாலும் பகை தெரியாது. பெருமிதம் மிஞ்சும்."
     "அதுதான் சரி" என்று வரிகள் முடிவு செய்தன.
     கொஞ்ச தூரத்துக்கும் அப்பால் மற்றொரு மூங்கில் புதரும் புலியும் தெரிந்தன. புலியைப் பார்த்த உடனேயே வரிகள் புலியின் தோலுடன் தனித்தனியாக ஒன்றி, கறுப்புப் பட்டுப்போல் மின்னி மகிழ்ந்தன. வெயிலும் நிழலும் கலந்த மூங்கில் கொத்தும் வரிப்புலியும் எல்லாம் ஒன்றாகிவிட்டன. எது எதுவென்றே தெரியவில்லை.  
     கோடாலிக்காரன் வரும் வாசனையை உணர்ந்த புலி பயங்கரமாக உறுமிற்று. உறுமல் அலையலையாகப் பரவி வேடனை எச்சரித்தது. எழுந்து பார்த்தான். புலி இருக்கும் இடம் தெரியவில்லை. வெயிலும் மூங்கில்களின் நிழல்களும் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. 'உருவத்தைப் பார்த்தால் இலக்கு வைக்கலாம். குரலைக் குறித்து எப்படி இலக்கு வைக்க முடியும்?' என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே போனான். கோடாலிக்காரன் புலி உறுமுகிறதென்று போய்விட்டான்.
     கோடாலிக்காரனும் வேடனும் திரும்பிச் சென்றதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மூங்கில்களுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. தங்களுடைய உடல் புலியைப் போன்ற வண்ணம் கொண்டதைக் காண வியப்பாக இருந்தது.
     வரி வேங்கை ஆனந்தமாய்த் தூங்கக் கொட்டாவி விட்டது. என்ன பயங்கரமான குகைவாய், கோரப் பற்கள்!
கலைமகள் - ஜூன் 1960
******************************

rajam 4 December 2011 20:00

படித்தேன்!




Geetha Sambasivam 4 December 2011 20:10

ஜீவி சார் அவர்களின் பதிவில் ஏற்கெனவே படித்திருக்கிறேன்;  என்றாலும் உங்கள் மொழியிலும் படிக்கச் சுவை.  நன்றி.



2011/12/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: டிசம்பர் 4
பிக்ஷாவந்தனம்
மண்ணில் பிறந்தால் வானேற ஆசை,/காலோடிருந்தால் பறப்பதற்காசை,/ வானாயிருந்தால், பூமிக்கு வேட்கை,...மின்னாயிருந்தால் எருக்குழிக்காசை./எருக்குழியானால் மலராகும் பித்து... தனியாயிருந்தால்
வீட்டுக்கு ஆசை./வீட்டோடிருந்தால் கைவல்யத்திற்காசை/நானாயிருந்தால் நீயாகும் ஆசை. /உனக்கோ?
உலகாகும் ஆசை.’ 
~ லீலை: ந. பிச்சமூர்த்தி

‘1930க்கு முன்பு பிச்சமூர்த்தி போன்ற படைப்பாளிகளுக்கு தமிழில் தளம் இருந்திருக்க முடியாது.’ 
~ அசோகமித்ரன் (2002) ந.பிச்சமூர்த்தி: சாகித்ய அக்காதெமி: புது டில்லி (ப.16)


Monday, December 2, 2013

கூரை இல்லமும் மனநிறைவும் அன்றொரு நாள்: டிசம்பர் 3

இன்றைய அப்டேட்: ராஜன் பாபு குடிசைக்குத் திரும்பினார். மாஜி ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் திருப்பினார். எதை? அரசு சம்பந்தமாக வந்து எடுத்துச்செல்லப்பட்ட பரிசுகளை. ஒரு தர்மஸ்தாபனத்துக்கு இரவல் கொடுக்கப்பட்டு திரும்பியதாக சொல்கிறார்கள். ஆனால், அவர் பதவிக்காலம் முடிந்த போது அள்ளிண்டு போறாரே என்று ஊடகங்கள் கூறின. எது எப்படியோ? ஒருவர் திரும்பினார். மற்றொருவர் திருப்பினார்.


வாழ்க பாரத திரு நாடு.
இன்னம்பூரான்
3 12 2013
சித்திரத்துக்கு நன்றி: http://i.dailymail.co.uk/i/pix/2012/09/26/article-2209088-1538A770000005DC-367_468x324.jpg


அன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்


Innamburan Innamburan 3 December 2011 17:38



அன்றொரு நாள்: டிசம்பர் 3
கூரை இல்லமும் மனநிறைவும்
ராஜன் பாபு மும்முறை காங்கிரஸ் அக்கிராசனராகவும் (1934,1939,1947) நமது அரசியல் சாஸன சபையின் தலைவராகவும் (1946-49), இருமுறை நமது ஜனாதிபதியாக இருந்தவருமான (1952 -62) தேசாபிமானி. ராஜன் பாபு என்று அறியப்பட்ட ‘ தேச ரத்ன’ ‘பாரதரத்ன’ ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஜன்மதினம் டிசம்பர் 3, 1884. பின்தங்கிய பீகார் கிராமத்தில் பிறந்த ராஜன் பாபு எப்போதும் படிப்பில் முதல். பாட்னா/கல்கத்தாவில் நல்ல வருமானமுள்ள வழக்கறிஞர்; அதை விட்டு விட்டு, காந்திஜியின் தலைமை ஏற்றார், 1917-18 சம்பரான் இயக்கத்தின் போது. 1918ல் ஸெர்ச் லைட் என்ற விழிப்புணர்ச்சி இதழை துவக்கினார். சர்தார் படேல் பர்தோலி இயக்கத்தின் சர்வாதிகாரியாக இருந்தாற்போல், பீகாரில் தொண்டு செய்தார், 1932ல் (சர்வாதிகாரி என்றால் பூரண ஆளுமை தரப்பட்ட தலைவர் என்று பொருள்.) மூன்றாவது முறையாக கைதும் செய்யப்பட்டார்.
ஒரு சான்றோனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சில சொற்களில் கட்டிப்போடும்போது, போனது, வந்ததுக்கெல்லாம் உசாத்துணை கொடுத்து விட்டு, அவருடைய மையக்கருத்துக்களில் ஒன்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். 1946ல் மத்திய அமைச்சராக டில்லிக்கு வரும் வரை ஒரு கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார். 1962ல் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், சிதிலமடைந்த அந்த கூரை வீட்டிற்கே வந்தார். தள்ளாத வயது. அது ஒத்து வரவில்லை. பலஹீனம் வேறு. லோகநாயக் ஜெயபிரகாஷ் நாராயன், நன்கொடைகள் பெற்று, பீஹார் வித்யாபீடத்தில் ஒரு குடில் அமைத்துக் கொடுத்தார். அங்கு தான் ராஜன் பாபு, ஃபெப்ரவரி, 28, 1963யில் உயிர் பிரியும் வரை வாழ்ந்தார். வாழ்க்கைக்குறிப்பு முற்றியது. 
இனி மையக்கருத்து:
அக்டோபர் 11, 1954 அன்று மஹாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துகையில், மனநிறைவு (True Happiness) என்ற தலைப்பில் ராஜன் பாபு நிகழ்த்திய சொற்பொழிவின் சாராம்சம்:

‘...செல்வம் குவித்து நிம்மதி பெற இயலாது என்றாலும் அண்ணல் காந்தி சொன்னாற்போல், ஏழைக்கு சோறு தான் இறை தரிசனம்...பணக்கார நாடுகளில் மன அழுத்தமும், ஏழை பாழைகளின் மனநிறைவும் காணக்கிடைப்பது அதிசயமில்லை...மகிழ்ச்சியின் ஊற்று, உள்மனதிலிருந்து என்பதிலும் ஐயமில்லை. சொத்துசுதந்திரம் எல்லாம் நடைபாதை. இலக்கு அன்று...வெளி உலகம் விதிக்கும் அதீத கட்டுப்பாடுகள் மனநிறைவை குலைக்ககூடும். நாமே நமக்கு உரிய விதிகளை அனுசரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். எனினும் சமுதாயம் நமக்கு பூர்ணசுதந்திரம் தராது. அதன் தலையீட்டை தணிக்க கற்றுக்கொள்வது மனநிறைவை தேட உதவும்...ஸ்தாவர ஜங்கம சொத்துக்கள் நம்மை கட்டிப்போட்டு விடுகின்றன. மனநிறைவையும், ஆன்மீக தேடலையும் அடைய, அவை தடைகளாகி விடுகின்றன. முன்னேற்றத்தின் விலை தனிமனிதனின் சுதந்திரம் என்றால், அது மிகையல்ல... வாழ்க்கைத்தரம், பொருளியல் நோக்கில் உயர, உயர,நாம் மற்றவர்களின் தயவு நாடவேண்டியிருக்கும் என்பது நிதர்சனம். அந்த அளவுக்கு மனநிறைவு குறைந்தும் விடுகிறது...போக்குவரத்து முன்னேற்றம், தேசங்களை அடுத்த வீடுகளாக அமைத்து விட்டது. நல்லது தான். வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களுக்கு விமானமூலம் உணவு அளிக்க முடிந்தது. ஆனால், அமெரிக்காவில் கோதுமை அமோக விளைச்சல் என்றால், இங்கு விலை அடிமட்டத்தில்...உலக சந்தை, தாராளமயம் எல்லாவற்றிற்கும் மறுபக்கமும் உண்டு...என்ன தான் முன்னேற்றமிருந்தாலும், எந்ததொரு பொருளும், உலகமக்கள் எல்லாருடைய தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தியாவதில்லை. அதனால் தான் வாழ்க்கைத்தரம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு படி நிலையில். இதனால் விரோதம் ஏற்படுகிறது...காந்தி மஹான் போற்றும் ‘எளிய வாழ்வியலும், உன்னத சிந்தனையும்‘ தான் நல்வழி...முன்னேறவேண்டும் என்ற ஆசையை நான் தடுக்கவில்லைமனநிறைவுக்கு வெளி உலகத்தை மட்டும் நம்பினால், சண்டையும் சச்சரவும் தான் மிஞ்சும் என்று அஞ்சுகிறேன்...’

வால்மார்ட்டும், ஜன்னல் கோர்ட்டும் படையெடுக்கும் தருணத்தில், இது என்ன பத்தாம்பசலி பேச்சு? இது ஒரு காந்திபக்திமானின் உளரலா என்று கேட்பவர்கள் உளர். நான் அவர்களிடம் சொல்லக்கூடியது, இது தான். தலைப்பு பொருளியலுக்கு அப்பாற்பட்டது. பெரிய விஷயம். ராஜன் பாபு பொருளியலில் முதுகலைப்பட்டம் வாங்கியது 1907ல். கட்டற்ற சந்தை போற்றப்பட்ட காலமது. அதை அவர் போற்றவில்லை என்ற நுட்பம் நோக்குக. அவர் சட்டவல்லுனரும் ஆவார். பொது மக்களுடன் பல்லாண்டுகளாக நெருங்கிய பழக்கம். தொண்டு செய்வதும் வழக்கம். தேசாபிமானி என்பதால், அவர் நாட்டின் நலம் நாடுபவர் என்பதில் ஐயமில்லை. இந்த பின்னணியில் தான் அவருடைய கருத்துக்களை ஏற்கவேண்டும். இவர் காலத்துக்கு முன்னாலேயே மேல் நாடுகளில் க்வேக்கர் இயக்கம் எளிமையை போற்றியது. பல வருடங்கள் கழிந்து 1973ல் வெளி வந்து ஒரு சீடர் கூட்டத்தை அமைத்துக்கொண்ட ‘சிறியதின் அழகு‘ என்ற நூலின் உபதலைப்பு. ‘மக்களை பொருட்படுத்தி’. அதை எழுதிய ஈ.எஃப். ஷூமெக்கெர் பிரபல பொருளியல் வல்லுனர். அவருடைய கருத்துக்கள் மேற்படி சொற்பொழிவுடன் ஒத்துப்போவதை மறக்கலாகாது. ராஜன் பாபுவுக்கும் நேருவுக்கும் கருத்து வேற்றுமை இருந்தது வியப்புக்குரியதல்ல. நாமும், இன்றைய சூழ்நிலையில், மேற்படி கருத்துக்கள் நடைமுறையில் ஒத்துப்போகவில்லை என்றும் அறிவோம். ஆனால், தலைப்பையும், நீல நிறத்தில் உள்ள கருத்துக்களை அலசுபவர்கள், ராஜன் பாபுவின் அணுகுமுறையை புரிந்து கொள்ளலாம்.
நான் சொல்லியதை விட, விட்டுப்போனது அதிகம். ஜனாதிபதியாக இருந்த போது ரூபாய் 1000 தான் மாதாமாதம் பெற்றுக்கொண்டார், ராஜன் பாபு என்றொரு செய்தி; சிக்கனவாழ்வில் ஊறியிருந்த ராஜன் பாபு கருமி போல் பணம் சேர்த்தார்; அதை மாற்றச்சொல்லி நேரு கேட்டுக்கொண்டார் என்றும், ஒரு முரணான செய்தியை, வெகு நாட்களுக்கு முன் ஆதாரத்துடன் படித்த ஞாபகம். நாள் முழுதும்  தேடினேன். இரண்டிற்கும் ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், எத்தனை அருமையான கடிதங்களை படிக்க நேர்ந்தது! நமது தேசபக்தர்களின் கடமையுணர்ச்சியும், இடை விடாத உன்னத உழைப்பும், மக்கள் மீது இருந்த ஆழ்ந்த அக்கறையும், அபிப்ராய பேதங்களும், அதை கடந்த பாணியும் என்னை திக்குமுக்காடவைத்தன. என்றோ ஒரு நாள், அவற்றையும் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்ற அவா என்னை வாட்டுகிறது.
இன்னம்பூரான்
03 12 2011
http://philamirror.info/wp-content/uploads/2010/12/Dr-Rajendra-Prasad-Stamp.jpg

Geetha Sambasivam 4 December 2011 22:05

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
..செல்வம் குவித்து நிம்மதி பெற இயலாது //

...மகிழ்ச்சியின் ஊற்று, உள்மனதிலிருந்து என்பதிலும் ஐயமில்லை.//

இதைத்தான் வேறொரு இழையில் ராஜம் அம்மாவிடமும், செல்வனிடமும் கூறினேன்.  தேவைக்கு மேல் பணம் இருத்தல் நிம்மதியைத் தராது.  பலரையும் பார்த்தாச்சு! 





DEV RAJ 5 December 2011 04:12



>>> .காந்தி மஹான் போற்றும் ‘எளிய வாழ்வியலும், உன்னத சிந்தனையும்‘
தான் நல்வழி...முன்னேறவேண்டும் என்ற ஆசையை நான் தடுக்கவில்லை.
மனநிறைவுக்கு
வெளி உலகத்தை மட்டும் நம்பினால், சண்டையும் சச்சரவும் தான் மிஞ்சும்
என்று
அஞ்சுகிறேன்...<<<

ஸாதா³ ஜீவந், உச்ச விசார் - காந்தியாருக்கும் முன் காலம் காலமாக
நிலவிவந்த
மிக நல்ல கருத்து; கடைப்பிடிக்கவும் ஆசைதான். இன்றைய சூழலில் சாத்தியமா ?
அருமை மகன் வாய்க்குள் திணித்த காட்பரீஸ் ஐஸ் க்ரீமைச் சுவைத்தபடி.....


தேவ்