Saturday, August 1, 2015

நாளொரு பக்கம் 98

நாளொரு பக்கம் 98
Thursdayday, the 3rd July, 2015

‘வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்
மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி
மயில் குயிலாச்சுதடி’
-வள்ளலார்

மனம் மாறினால், அறிவு குலைந்தால், உணர்வு மங்கினால், நினைவாற்றலை இழந்தால், விரும்பத்தகாத வேட்கை ஏற்பட்டால், ஒழுக்கம் கெட்டால், நடவடிக்கை அடாவடியானால், செயல் தடுமாறினால், அந்த நபரின் மனோபாவத்தைக் குறை கூறுகிறோம். அவருடைய மனம் மோனத்தை நாடினால் சித்தபிரமை என்கிறோம். அறிவு, சராசரி தேடலைத் தவிர்த்து, விவேகத்தை நாடினால், பித்தன் என்கிறோம். வலது பக்கம் போவதை இடது பக்கம் தேடுகிறோம். இடது பக்கம் போவதை வானத்தில் தேடுகிறோம். அதைத் தான் மறை ஞானமாக இராமலிங்க அடிகளார், அருளினாரோ மேலே!

‘சுத்த சன்மார்க்கமே அகத்தில் இருந்துதானே தொடங்கப்பெறவேண்டியுள்ளது.‘ என்ற சுகபிரும்ம வாக்கு இது எனலாம். இதிகாச சுகபிரும்மத்தின் மூலமாக உன்மத்தத்தின் ஆதிமூலம் அறிய ஒரு வாய்ப்பு கிட்டியது. உன்மத்தம் தலைக்கேற, ஏறவே, அதன் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம். அதற்கு முன் திருமூலரின் இலச்சினை:

ஆதிபரன்ஆட அங்கைக் கனலாட
ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.  2751 
-(திருமந்திரம், ஒன்பதாந் தந்திரம் – பொற்றில்லைக் கூத்து.)
-#-

Wednesday, July 29, 2015

Puducherry Flash.

Puducherry Flash.

I hope to visit this site in the fast track.

PUDUCHERRY: An underground chamber close to a twelfth-century Siva temple at nearby Villianoor was on Wednesday found by workers engaged in renovation work. 

The workers came across a granite slab close to the Lord Somaskandar shrine and when they removed it, they found a 15 foot deep chamber with some stepping stones leading to it, officials said. 

The contractor engaged in renovation work said he got into the chamber and went ahead for a few feet and found it to be a strong structure. He could not proceed further because of the airtight nature of the basement, he said. 

Officials of the Revenue, Hindu Religious Institutions and Police departments who rushed to the spot opined that the chamber could have been used as a safety vault to store valuable icons and other valuables. 

The temple was constructed during the Chola period and it was estimated that it was constructed in 12th century. 

As soon as news spread of the chamber being found, a large number of people made a beeline to see it. 

Police were deployed to prevent people from getting close to the site as it has a narrow entrance.

With No Comments.


Puttaparthi Confidential

With No Comments.
*
The mystery over the treasure trove inside the late Sathya Sai Baba’s personal chamber ‘Yajur Mandir’ was on Friday unravelled with the disclosure that it contained 98 kg of gold, 307 kg of silver apart from Rs 11.56 crore in cash.
The Central Sathya Sai Trust, which conducted an inventory of the things stored inside the Yajur Mandir since it was broken open yesterday, came out with the announcement this evening listing details of the treasure trove.
The assessment was done in the presence of retired judge of Supreme Court A P Mishra and retired judge of Karnataka High Court Vaidyanatha.
An assessor approved by the Income Tax Department was also present to assist in evaluating the gold, jewellery and silver, Trust member and Sai Baba’s nephew R J Ratnakar told the media. Apart from five trustees, two members of the Council of Management including former Chief Justice of India PN Bhagavati, were also present as independent witnesses, he said.
Source: Business Standard today

Tuesday, July 28, 2015

எந்தரோ மஹானுபாவலு! [1]

எந்தரோ மஹானுபாவலு! [1]


சித்திரமெதுக்கடி, குதும்பாய்!
சாத்திரம் படைப்பதற்கு? நீயும்
பத்திரமாகவே இருக்க வேணும்,அவனும்
காத்திரமாகவும் இருக்க வேண்டுமடி, குதும்பாய்!

இன்னம்பூரான்
செவ்வாய்கிழமை, ஜூலை 28, 2015

நான் சொல்றதை தப்பா நினைக்காதீர்கள். மாணவ பந்துவாகிய ‘ஜன அதிபதி’ ஜனாப் அப்துல் கலாம் அவர்கள் கொடுத்து வைத்தவர். இன்றைய நாளிதழ்களை அலங்கரிக்கும் தமிழ்நாட்டு ‘மாணவ செல்வங்களை’ பற்றி படிக்காமல், அநாயசமாக மகராசன் போய் சேர்ந்தார்.

நடந்தது என்ன,ஓய்?!:

திருச்சி திமிலோகப்பட்டது. நேற்று சட்டக்கல்லூரி மாணவர்களின் கும்பல் ஒன்று ‘விடியலை’ நோக்கி குடியலுலகம் ஆகிய டாஸ்மேக் மீது படையெடுத்தார்கள், மது விலக்குப் பிரச்ச்சாற்றம் செய்ய. குடி குடியை கெடுக்கும் (எந்தக்குடி எந்தக்குடியை கெடுக்கும் என்று என்னை கேட்காதீர்கள். லவ்பெல் அவர்களை கேளுங்கள்.) ‘களவும் கற்று மற’ என்ற தமிழ்பண்பை மீறலாகாது என்ற தலைவிதிக்கிணங்க, ஆளாளுக்கு மிடாக்குடியனாக மாறி தடுமாறவே, போலீஸுடன் லொள்ளு. சட்டம் படிக்கிறதாக சொல்லிக்கொள்ளும் அந்த ‘வித்யாதரர்கள்’ உடனுக்குடன் உரிமை போராட்டம் நடத்தவே, திருச்சியே சூடு பிடித்து அனல் பறந்ததாம். சட்டாம்பிள்ளை பசங்களல்லவா! மதியிழந்தாலும் சதி செய்யவேண்டாம் என்ற பகுத்தறிவு தலை தூக்க, ப்ளேட்டை மாத்திப்போட்டு, ‘நாங்கள் விழா எடுக்கப்போகிறோம். அதற்கு முன்னுரையாக, ஆளுக்கு ஒரு போத்தலில் குடியிருந்து விட்டுப் போய்விடுவோம்’ என்று சத்திய பிரமாணம் செய்தார்கள். ஆனால், இந்த போலீஸ் ‘அதெல்லாம் முடியாது. நோ அட்மிஷன் வித்தவுட் பெர்மிஷன்.’ என்று சவால் விட்டவுடன், சட்டம் பேசும் மட்டம் கேட்டதாம்,’ நாங்களும் இன்னாட்டு பிரஜைகள் அல்லவா? மற்றவர்களுக்கு உள்ள டாஸ்மெக்குடியுரிமை எங்களுக்கும் உண்டு’ என்றவுடன், போலீஸ் டைலமாவில்.! 

 தெரியாமத்தான் கேட்கிறேன்.கேள்விக்கு என்ன பதில், இந்நாட்டு மன்னர்களே?
-#-





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, July 27, 2015

டாக்டர் அப்துல் கலாம்

சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)

“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”


இணையத்தில் கிடைத்த மேற்கோள்.  சற்று நேரம் முன்பு அமரராகி விட்ட ஜனாப் டாக்டர் அப்துல் கலாம் இவ்வாறு தான் இயங்கினார்.

இன்னம்பூரான்http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


Update:
சுவாமி சிவானந்தா அவருக்கு அளித்த அறிவுரையை நான் நகலெடுத்துக்கொடுத்தது, ஒரு காரணத்தால். சுவாமிஜி தான் ஜனாப் அவர்களுக்கு ஆசானாக அமைந்திருந்தார்.


இன்னம்பூரான்

Sunday, July 26, 2015

கஜானா காலி [3] -ஏமாந்த சோணகிரி!


கஜானா காலி [3] -ஏமாந்த சோணகிரி!

இன்னம்பூரான்
ஜூலை 26, 2015

சாணக்கியர் தன்னுடைய ராஜதந்திரங்களை அடுக்கி அளிக்கும்போது கட்டுப்பாடு, கட்டமைப்பு பற்றி கூறும்போது கட்டு அவிழ்வதின் மர்மங்களையும் எடுத்து உரைத்திருக்கிறார். தானாகவே கட்டு அவிழ்வது சொற்பம். கட்டவிழ்க்கும் கூத்துக்களையும், கட்டமைப்புக்களில் நுழைத்து விட்டால், வேண்டியபோது கட்டு அவிழ்ந்து, துட்டு விழும். அதை லூப்ஹோல் என்கிறது ஆங்கிலம். சட்டம் பாயின் அடியில் நுழைந்து துழாவினால், சட்டத்தை மீறுபவர்கள் கோலத்தில் அடியில் அமர்ந்து கோலோச்சுவர்களாம்! வரியை கட்டாமல் ஏமாற்றுபவர்களுக்கு கோலம் தான் காவல் தெய்வம்! எல்லாமே மர்மம். அவர்களுக்கு சட்டம் அத்துபடி. தானம் கொடுத்தால் வரி சலுகையா? கொடை என்ற கறுப்புக்குடைக்கடியில் பேத்துமாத்து நடக்கும். 

அரசு பல காவலர்களை நிற்க வைத்தால் நட்டம் அவர்களுக்குத் தான். ஒரு காவலர் விலைக்குப் போய்விட்டாலும், டண்டணக்கா! அதற்கு, அவர்களுக்கும் சம்பளம், பஞ்சப்படி வகையறா! 

பங்குச்சந்தை என்ற கோலத்துக்குள் புகுந்து, அடாவடியாக கறுப்புப்பணத்தின் சாயத்தை வெளுத்து, சத்தியசந்தர்களாக வளைய வரும் 900 கடைகளை இப்போது தான் பங்குச்சந்தை காவலாளர் (ஸெபி) மூடச்சொல்கிறார்களாம். வருமானவரி இலாக்காவுக்கும், இவர்களை காட்டிக்கொடுக்கப்போகிறார்களாம். பங்குச்சந்தை காவலாளர் மையத்தின் தலைவர் யூ.கே. சின்ஹா வருமானவரி ஏமாற்றப்பட்டது 5000 -6000 கோடி என்று யூகிக்கிறாராம். இப்பேற்ப்பட்ட ‘சத்தியசந்தர்களை’ சின்னபசங்க ஒவ்வொன்றாக ஈசலை பிடித்து கபளீகரம் செய்வது போல், லபக் லபக் என்று பிடித்து வருகிறார்களாம்! ஆனாலும்  திரு சின்ஹா அவர்கள் இது பாய்க்கும் கோலத்துக்கும் நடக்கும் இடை விடாத, முடிவுகாணாத போர் என்று ஒத்துக்கொள்ளும்போது, கட்டவிழ்க்கும் கூத்துக்களையும், கட்டமைப்புக்களில் நுழைத்து விட்டதால் தான் இந்த அலங்கோலம் என்றும் ஒத்துக்கொள்கிறார். குற்றம் செய்பவர்களுக்கு குற்றேவல் செய்யவே சில பிறவிகள் உளர் என்ற உண்மையை அவர் உரைத்த போதிலும், அந்த அதிசயபிறவிகள் பங்குச்சந்தையின் அன்றாட வரத்துப்போக்கில், மக்களையும் ஏமாற்றி இந்த குற்றேவலர்கள் இயக்கும் மாயா மச்சீந்திரா மர்மங்களை இனி தான் அவிழ்க்க முயலப்போகிறார்களாம்! 
பார்க்கலாம். அதுவரை நாம் யாவரும் ஒரு இனம்: ஏமாந்த சோணகிரிகள்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.taxguru.net/comix/LoopholeNoose113006.jpg



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com