Saturday, February 14, 2015

அச்சச்சோ! சோச்சோ! ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 7




அச்சச்சோ! சோச்சோ!
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 7
இன்னம்பூரான்
14 02 2015

‘நின்னா குத்தம் உக்காந்தா குத்தம்’ என்ற வகையில் அந்தக்காலத்து குறுநிலமன்னர்கள் கழுவேற்றுவார்கள் என்றும், தான்தோன்றித்தனமாக ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்ற வகையில் அரசியல் தலைவர்கள் குளறுபடி செய்வார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, இது கொஞ்சம் ஓவர் இல்லை !? என்னைக்கேட்டால், கஷ்குமுஷ்கு யஷ்ஷை விட படுமோசம் என்று தோன்றுகிறது. விமானம் ஏறத்தொடங்கிய உடனேயே, அங்கு ஊழியம் செய்யும் அழகிகள் பலமான உபசாரம் செய்வார்கள். முந்திரி தந்திரம், பான அபிஷேகம், நசுங்கிய சோறு, பொங்கிய சப்பாத்தி, காரமான மிட்டாய் வகைகள் என்றெல்லாம் பூமியில் கிடைக்காத மாற்றுருவ சாப்பாட்டு வைபோகம் நடக்கும். அதற்காக விமானபோக்குவரத்தையே, நம்ம ‘அச்சச்சோ சோச்சா’ மாமி மாதிரி ஸ்தம்பிக்க செய்யலாமோ?  ‘அச்சச்சோ சோச்சா’ மாமியிடைய தகப்பன்சாமி தான் விமான கம்பெனி சொந்தக்காரர். ‘போத்திப் போத்தி’ செல்லம் கொடுத்து வளர்த்திருப்பார்கள் போல. அவள் பெயர் ஹீதர் சோ. நியூயார்க்லெ விமானம் ‘டொய்னு’ மேலெ ஏறின உடனே மக்கடம் என்ற வகை கடலையை பையோடு கையாக ஒரு ஊழியர் கொண்டு வந்து கொடுத்தார். அவருக்கு ஏழரைநாட்டு சனி போல. பொங்கியெழுந்த ஹீதர் சோ அவரை திட்டி விட்டு, விமானத்தைத் திருப்பச்சொல்லி தடாலடி நாட்டாமை செய்தாள். அந்த கம்பெனிலெ அவள் உயரதிகாரி வேறே. பயணிகள் எல்லாருக்கும் சினமெழுந்தது. என்ன செய்தார்கள் தெரியுமா? இந்திய வாசனை அடிச்சது போல். முணுமுணுத்தார்கள்! முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் கோர்ட்டுக்கு போய்விட்டது விவகாரம். அழுதுகொண்டே, ஒரு மன்னிப்பு கடுதாசை பேருக்குக் கொடுத்தாளே தவிர பச்சாதாபமே காட்டவில்லை என்று ‘ஓ’ என்ற நீதிபதி கூற அப்பனும் அவளை கண்டித்து வைத்தாராம். அரசு தரப்பில் சட்டத்தை மீறியதற்காகவும், அடிதடியில் இறங்கி ஒரு ஊழியரை மொத்தினதற்கும், விசாரணையில் தலையிட்டதற்கும் சேர்த்து மூன்று வருட சிறை தண்டனை கொடுக்க பரிந்துரை செய்தார்களாம். ஒரு கற்பனை: இந்தியாவில் 2013ம் வருடம் பர்ட் டவரார்ரா மாதிரியான ஒரு பெரும் புள்ளிராசா விமானத்தில் இப்படி பாடாய்படுத்தினால், அவரு தான் கெலிப்பார்.

இதையெல்லாம் இங்கு எழுதும் காரணம் யாது எனில்: தெற்கு கொரியாவில் வம்சாவளி செல்வக்கொழுந்துகள் இப்படி தான் தாறுமாறாக நடந்து கொள்வார்களாம். இந்த வழக்கு நல்ல படிபினையாம். 
இந்தியாவிலும் இந்த மாதிரி தடாலடி கலாட்டா வீஐபீகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே தான் காரணம்.
-#-




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, February 12, 2015

சிரிச்சு மாளலெ ~ 13: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6)

சிரிச்சு மாளலெ ~ 13:
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6)
இன்னம்பூரான்
12 02 2015

உஷ்! உஷ்! யஷ் பற்றிய கொஷ்யன்ஸும் வழவழா கொழகொழா ஆன்ஷர்ஷும்! ஒரு கோர்ட் சாட்சியமும், அதை சார்ந்த உரையாடல் பற்றி எழுத நினைத்தால், இன்று ஒரு புத்தகம் வந்து எம்மை அலக்கழிக்கிறது. பிரபல பென்குவின் பிரசுராலயம். ஷோபா டே என்ற பிரபல மாமியின் பிரிவு. தலைமாந்தர் யஷ் பிர்லா என்ற செல்வந்தர். சின்ன வயது; பெரிய வம்சாவளி; அண்ணல் காந்திக்கு போஜனம் அளித்த கஜானன் பிர்லா தான் மூதாதையர். புத்தகத்தில் அவருடைய திவாலாகும் நிலையில் உள்ள வணிகங்களை பற்றி அதிகம் சொல்லாமல், யஷ்ஷின் சார்லஸ் அட்லாஸ் தேகவாகு (நம்ம ராபர்ட் வடேரா மாதிரி!), கலையார்வமான பச்சைக்குத்தல், ஃபேஷன் மேலும் மேற்குடி வாழ்க்கை தான் எடுபடுகிறது என்கிறார், புத்தக விமர்சகர். இது நிற்க. கனம் கோர்ட்டார் கூப்பிடுகிறார்.

ஒரே ஒரு கிராமம். அங்கு ஒரு யஷ் பிர்லா கம்பெனி. சாட்சி & சாட்சி என்ற விளம்பரகம்பெனி தங்களுக்கு வரவேண்டிய தொகை வரவில்லை என்று சாட்சியத்துடன் ஆகஸ்ட் 2014ல் வழக்குத் தொடர, கோர்ட்டாரும் கதவை இழுத்து மூட ஆணையிட்டனர்.
போதாக்குறையாக, கம்பெனி கிட்டங்கியிலிருந்து துர்நாற்றம் என்று கிராம பஞ்சாயத்து புகார் கொடுத்தும், கேட்பாரில்லை. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார்கோயில் ஆண்டி இல்லையா? யஷ் பிர்லா அவர்களே கோர்ட்டில் வந்து சாட்சியம் சொல்ல வேண்டும் என்று ஃபெப்ரவரி 5 அன்று ஆணை. இது சம்பந்தமான இரண்டு நாட்கள் முன்னால் நடந்த கோர்ட் உரையாடல்:

நீதியரசர் கதாவாலா: உமது கம்பெனியின் டைரக்டர்களாக, உமது சமையற்காரனையும், எடுபிடியையும் அமர்த்தியது யார்?

யஷ் பிர்லா: நான் இல்லை.

நீதி: உமது கம்பெனியின் டைரக்டர்களாக, உமது சமையற்காரனையும், எடுபிடியையும் இருப்பது, உமக்கு தெரியுமா?

ய: தெரியும்,இப்போது தான்.

நீ: அவர்களை அமர்த்தியது யார்?
ய: என்னுடைய ஊழியர்கள்.
(ஃபெப்ரவரி 5 அன்று இந்த சமையற்காரனும், எடுபிடியும் கிஞ்சித்துக்கூட ஆங்கிலம் தெரியாதவர்கள், ஐந்தாம் வகுப்பும் ஆறாம் வகுப்பும் வரை படித்த அவர்களுக்கு ஹிந்தி கூட தொந்தரவு தான் என்றும், அவர்கள் இருவரும் மூன்றாம் நபரும் ஒரு போர்ட் மீட்டிங்க் கூட வராதவர்கள் என்று அறிந்த நீதிபதி திடுக்கிட்டுப்போய் தான் முதலாளியை வரச்சொன்னார்.)
நீ: இந்த மாதிரியான கடை நிலை வேலைக்காரர்களை டைரக்டர்களாக யார் நியமித்து இருப்பார்கள்?
ய: என் ஊழியர்களுக்கும் இந்த கடை நிலை வேலைக்காரர்களுக்கும் பரிச்சயம் உண்டு. அவர்கள் இவர்களை நியமித்திருக்கலாம்.
நீ: உண்மை பேச கற்றுக்கொள். கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது. உன்னுடைய வக்கீலே உன்னை நம்பியிருக்கமாட்டார். உங்கள் ஆட்கள் உண்மையை கக்கிவிட்டனர்.

நவ்ரோஜ் சீர்வை (யஷ்ஷின் வக்கீல்) உங்கள் 5ம்தேதி ஆணையை எதிர்த்து விண்ணப்பிப்பதாக இருந்தோம்.
நீ: (குழப்பத்துடன்) என்னது இது? கோர்ட்டுக்கு வா என்றால் அப்பீலா!!!???
ஆமாம். கம்பெனியில் உங்கள் முதலீடு எத்தனை?
ய: 0.01%, தொடக்கத்திலிருந்து அதே.
நீ: ஓ! கம்பெனியை ஆரம்பிச்சு அடியாட்களை டைரக்டர்களாக்கி, நீ கழண்டு விட்டு..
என்ன சொல்ல விரும்புகிறாய்?
ய: கோர்ட்டார் சொன்னபடி செய்யறேன்.
நீ: நான்கு வாரங்களுக்குள் உண்மை விவரங்கள் கூறி, துர்நாற்றத்தை ஒழி.



pastedGraphic.pdf 

உசாத்துணை

பின்குறிப்பு: எனக்கு இவர் யார் என்று லவலேசமும் தெரியாது. யாதொரு விதமான காழ்ப்புணர்ச்சி இல்லாமல் கோர்ட்டில் நடந்ததை உள்ளது உள்ளபடி சொன்னேன். கொஞ்சம் தேடிப்பார்த்தாலே தலை சுற்றுகிறது. அத்தனை குற்றச்சாட்டுக்கள். ஆக மொத்தம் மக்கள் ஏமாற்றப்படுவது தெரிகிறது. சம்பந்தம் இல்லாத இரு விஷயங்கள்.
நான் ஒரு கம்பெனியில் டைரக்டராக அரசு நியமனம். முதலாளி தபால் தலை சேகரிப்பவர். ஆயிரக்கணக்கில் செலவு செய்து விட்டு, கம்பெனி அஞ்சல் செலவில் கலவி செய்து விடுவார்கள். நான் ராஜிநாமா செய்தேன். ஒரு ஜோக் சொல்வார்கள். கம்பெனி ஆடிட்டர்கள் ‘என்ன சாமான்களை பேக் செய்யாமலே பேக்கிங்க் செலவு எக்கச்சக்கம் ஆனது?’. கம்பெனி காரியதரிசி ரகசியமாக வந்து சொன்னாராம், ‘அப்பன் செத்துட்டான். சவ அடக்க செலவை கம்பெனி மேல் போட்டுட்டான்’ எப்படி?.

-#-
Those who cannot read Tamil can read the news item, by clicking on the reference.

Wednesday, February 11, 2015

என்னத்தைச் சொல்ல? -7 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (5)

என்னத்தைச் சொல்ல? -7 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (5)


இன்னம்பூரான்
11 02 2015

மாமாங்கத்துக்கு மாமாங்கம் சால்ஜாப்பு சொல்லுவோம். 
ஜாமத்துக்கு ஜாமம் ஊரை நாசமடிப்போம்.
ஏமாத்து வேலைக்கு ஜால்ரா போடுவோம். விளக்கு
மாத்தாலெ அடிச்சாலும் சுரணை கிடையாது.

‘பீஸ் சால் கே பாத்’ (20 வருடங்களுக்கு பிறகு) என்ற ஒரு சினிமா அந்த காலத்தில் பிரபலம். பேரை மட்டும் வாங்கிக்கிறேன், ஒரு முப்பது வருட கொலைக்களத்து பிலாக்கணம் பாட:

1996ம் வருடம் உச்ச நீதி மன்றத்துக்கு முன்னால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கொடுத்த சபதம் இது:

"It is submitted that there are 584 tanneries in North Arcot Ambedkar District vide annexure 'A' and 'D'. Out of which 443 Tanneries have applied for consent of the Board. The Government were concerned with the treatment and disposal of effluent from tanneries. The Government gave time upto 31.7.1985 to tanneries to put up Effluent Treatment Plant (E.T.P.). So far 33 tanneries in North Arcot Ambedkar District have put up Effluent Treatment Plant. The Board has stipulated standards for the effluent to be disposed by the tanneries."

அந்த சபதத்தை மீறி, கண்ட கழுதைகளுக்கு ஆதரவு அளித்து, அண்ணல் காந்தியின் தரித்ர நாரயணனை அவர் கொலையுண்ட தினத்தில், கொலை செய்தவர்களை என்ன செய்யலாம்? நடந்தது என்ன? முப்பது வருடங்களுக்கு பிறகு:

ராணிபேட்டையில் ஒரு சாக்கடை. அந்த ‘சாக்கடை’ எனப்படுவது சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ஒரு சாயகழிப்பறை. நஞ்சு கலந்த சாயக்கழிவுகளால் காந்தி மகான் அஞ்சலி தினமன்று அங்கு ஒரு பிணக்குவியல். அந்த ஹெக்ஸாவெல்ண்ட் க்ரோமியம் அந்த பிராந்தியத்தில் குடிநீர் குடிப்பவர்களையும் கொன்றுவிடுமாம். எத்தனை அப்பாவிகள் செத்தனரோ? அந்த வெள்ளிக்கிழமையில் இறந்த பத்து பேர்களில் ஒன்பது பேர் வறுமையின் காரணமாக மேற்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த அன்றாடங்காய்ச்சி இளைஞர்கள். அவர்களை கொன்று குவித்த முதலாளிகளுக்கு தேசீய சுற்றுப்புறசூழல் நீதிமன்றம் ரூபாய் 75 லட்சம் தண்டனை அளித்திருக்கிறது. அதில் 50 லட்சம் அரசுக்கு; பாக்கி கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு. வரிப்பணத்தில் கைவைக்காமல், மாசுபடுத்தியவர்களிடமிருந்து நஷ்ட ஈடு வாங்கியது சரி தான் என்றாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரங்கெட்ட அதிகாரிகள்  இதற்கெல்லாம் உள்கை.  கொலையில் அவர்களுக்கும் பங்கு உண்டு. அந்த வாரியத்தின் தலைமை குற்றத்தை ஒத்துக்கொண்டு இருக்கிறது. 

உசாத்துணை;








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com