Saturday, August 24, 2013

நாமக்கல் கவிஞர்:அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24


அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24

Innamburan Innamburan Wed, Aug 24, 2011 at 1:34 AM

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24
     உங்களுக்கு கருப்பையா பிள்ளையை தெரியுமோ? அம்மணியின் எட்டாவது குழந்தை. இது அம்மா ஆசையுடன் கூப்பிடும் பெயர். அவர் தான் நாமக்கல் கவிஞர். கவிஞர்களில் சிலரின் உரைநடை, கவிதை, அறிவுரை எல்லாம் எளிய நடையில், படோடோபமில்லாமல் இருக்கும் என்பதற்கு பாரதியார், கவிமணி, பாவேந்தன், நாமக்கல் கவிஞர் ஆகியோர் தக்க சான்றுகள். சிறுவயதில் நாமக்கல் கவிஞரின் ‘என் சரிதம்’ என்னை ஈர்த்ததின் காரணம் அதுவே. இயல்பான நடை என்னை கேட்டால், இந்த விஷயத்தில், அவரை முன்னால் வைப்பேன். அவரிடம் ராஜ விசுவாசமும், விடுதலை பற்றும், அவரது கவிதைகளும், ஓவியங்களும் ஒரு சேர இருப்பதைப் போல், முரண் யாதுமில்லாமல், தன்னிச்சையாக வளைய வருவதைக் கண்டேன்.  அக்டோபர்19, 1888 இல் பிறந்த திரு. வெ.ராமலிங்கம் பிள்ளை (நாமக்கல் கவிஞர்) அவர்களை ஆகஸ்ட், 24, 1972 அன்று இழந்தோம். காந்திஜி விதைத்த விதை என்று ராஜாஜி அவரை விமரசித்தது சரியே. சதா சர்வகாலமும் காந்திஸ்மரணை, இவருக்கு. இவருடைய காந்தி மலர் ஒரு நூலன்று. அது ஒரு வாடாத பூச்செண்டு. இது ஒன்று போதும் சமச்சீர்க்கல்வியை, படிப்படியாக அளிக்க.
     வாழ்க்கை விநோதமானது. தந்தை வெங்கடராமனோ காவல் துறை. தேசபக்திக்கான உரம் யாதுமில்லை. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், நல்லிசையும் செவிப்பழக்கம், நாடகமும் நடைப்பழக்கம் என்று இருந்த கவிஞரின் நண்பர் எஸ்.ஜி. கிட்டப்பாவின் ஏழுகட்டை சுருதி தமிழுலகம் அறிந்ததே. அவருக்கு பாட்டு எழுதப்போய், இவரையும் நாட்டுப்பற்று தொற்றிக்கொண்டது. நாகராஜ ஐயங்கார் என்பவரும் இவருடன் சேர, இருவரும் அரவிந்தர் போன்ற சான்றோர்களின் உரைகளை கேட்டு களத்தில் இறங்கினார்கள். நம் கவிஞரின் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. வாசாலகர் இவர் என்க.
     ஒரு உரையாடல்: செட்டி நாடு/காரைக்குடி: 
பாரதியார்: ‘கவி பாடுவீரோ? ஒன்று பாடும்.’
கவிஞர் (அவருக்கு நல்ல குரல் வளம்): "...தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...’
பாரதியார், "பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...' பலே, பலே இந்த ஓர் அடியே போதும்''.
     நாடு விடுதலை அடைந்தது 1947. சென்னை மாகாண ஆஸ்தான கவிஞர் 1949 இல் பிள்ளைவாள்.1956-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி நிர்வாக உறுப்பினரானார். 1956 முதல் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1971-ஆம் ஆண்டு பாரத அரசு அவருக்கு "பத்மபூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘அவளும் அவனும்’ ஒரு இனிய காவியம். புதினங்கள் பல எழுதினார். அவரின் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாக வலம் வந்தது. இவரை தமிழுலகத்துக்கு அறிமுகம் செய்த பெருமை, ‘தமிழ்ப்பண்ணை’ சின்ன அண்ணாமலையை சாரும். அவரும் அருமையான சொற்பொழிவாளர். கேட்டிருக்கிறேன்.
     மறக்கலாகாது, ஐயா. நாமக்கல் கவிஞர் வேதாரண்ய உப்பு சத்யாக்ரஹத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார் என்பது பெரிய செய்தி அல்ல. உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலொன்றை அவர் இயற்ற, அது இன்றளவும் அஹிம்சையின் இனிய குழலோசையாக அமைந்ததே பெரிய செய்தி.க ேளும்:
’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
     1387.jpg
     இன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு, தமிழகம், செந்தமிழ், தனித்தமிழ், செம்மொழி, என்று தோள் தட்டுகிறோம்; குரலெழுப்புகிறோம்; வாதங்களில் இறங்குகிறோம், படியில்லா கிணற்றில் சறுக்கியபடி.  
"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்' 
என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை உதட்டசைத்து மட்டும் பாடுகிறோம். ஐயகோ! அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!
வணக்கத்துடன்,
இன்னம்பூரான்
24 08 2011


Geetha Sambasivam Wed, Aug 24, 2011 at 8:39 PM

அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!//

என்ன அற்புதமான சொல்லாடல்!  ஐயா,உங்களின் இந்த வரிகள் மனதைப்பிழிகிறது.  கேட்பவர் கேட்டால் நன்மை விளையும்.  விளையட்டும். அனைவரும் திருந்தப்பிரார்த்திப்போம்.  நாமக்கல் கவிஞர் குறித்த செய்திகளுக்கு நன்றி. பள்ளிப்பாடத்தில் படித்தது. 


2011/8/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24
   ஐயகோ! அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!
வணக்கத்துடன்,
இன்னம்பூரான்
24 08 2011

Thursday, August 22, 2013

சென்னை குறிப்புகள் ~5 ஐந்து நாள் வைபோகம்! வைபோகமே!


சென்னை குறிப்புகள் ~5 ஐந்து நாள் வைபோகம்! வைபோகமே!

Innamburan S.Soundararajan Wed, Aug 21, 2013 at 3:07 PM

Tuesday, August 20, 2013
சென்னை குறிப்புகள் ~5
ஐந்து நாள் வைபோகம்! வைபோகமே!

உங்களுக்கு பண்டாரவாடை வெற்றிலை கதை தெரியுமோ? கும்போணம் துளிர் வெற்றிலைக்கு உள்ள மவுசுக்கு உற்பத்திஸ்தானம் பண்டாரவாடையில் படரும் வெளிர்பச்சை வெற்றிலை கொடிகள். பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் திறன்மிக்க பணி, அதன் சாகுபடியில். மத நல்லிணக்கத்துக்கு வெற்றிலை ஒரு எடுத்துக்காட்டு. கோயில்களுக்கு அங்கிருந்து தானே வருகிறது. ஆனா ஒண்ணு. தொட்டாச்சுணுங்கி மாதிரி, கவனம் குறைந்தால், அழுகிவிடும். உடனே விற்றுவிடவேண்டும், சல்லிசு விலைக்கு. ஆனால், நாள் தோறும் அழுகிய வெற்றிலை தான் விற்க நேரிடும். அல்லது ஒரு நாள் அழுகலை அழிக்கவேண்டும். நிதி அமைச்சரையோ அல்லது திட்டக்கமிஷனையோ கேட்டால், தினந்தோறும் அழுகிய வெற்றிலையை விற்கச்சொல்லுவார்களோ, என்னமோ, ஆடிட்காரன் மீது பழியை போட்டு விட்டு!

இத்தனை அருமையான உவமையை முன்னிறுத்துவதற்குக்காரணம், என் தற்கால நிலைமை தான். நாள் தோறும் செந்தமிழேணியில் பேலன்சிங்க்! சூறாவளி பயணங்கள். நண்பர்களுடன் சந்திப்பு. ஓயாதக் கைச்செவி. காதோ மந்தம். அது தான் போகிறது என்றால் இணையம் கிட்டாது. கிட்டினாலும் எட்டாது. எட்டினால் மீட்டிங்கில். திருவேங்கடமணி மாதிரி அநேக நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த அழகில் அன்றாட நினைவுகள் மங்கிப் போய்விடுவதால், வாசகர்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு, முன்னும் பின்னுமாக எழுதுகிறேன். இல்லாவிடின், அவை மக்கிப்போய்விடக்கூடும். ஜூலை 7 அன்றே, இறங்கிய களைப்புத் தீராமல் சென்னை உலா வந்ததை (காரைக்குடிக்கு வந்து என்னை வாழ்த்திய கீதா சாம்பசிவம் தம்பதிகள் நோட்டுக.) எழுதி முடிக்கும் முன் ஆகஸ்ட் 16 வந்து விட்டது. ஆண்டவா?. அதான் இப்படி. 

ஆகஸ்ட் 13 அன்று இரவு, இன்னம்பூர்/காரைக்குடி விஜயம் முடிந்த பின் ( அது பிறகு வரும்.), மறுபடியும் தஞ்சை பெரிய கோயில், தாராசுரம், கங்கை கொண்டான் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்து, சிற்பங்களை கண்டு வியந்து, திருவண்ணாமலையில் தமிழ்ச்செல்வி குடும்பத்தினருடன் அளவளாவி விட்டு, இராத்தங்கல் கிரோம்பேட்டையில். 14 அன்று என் தந்தையின் திதி. அவருடைய ஞாபகம் பூரணமாக மனதில் இருக்க, அவருக்கு அஞ்சலி செலுத்தினோம், நானும் என் தம்பியும். அன்றே சாஸ்திரி நகர் பயணம்.

சாஸ்திரி நகரில் ஒரு அடுக்கு மாடி வாசிகள் வாரச்சாப்பாடு போட்டார்கள், இந்த ‘ஐந்து நாள் வைபோகத்தில்’. சுகுமார்-டொரதி என்ற தம்பதியுடன் வாசம். உடனிருந்த பெண்ணரசி எவாஞ்சலின். வெளியூரில் வசிக்கும் பாலீன் தினந்தோறும் மாலை கைபேசியில். அன்று இரவு அங்கு விருந்து. பிறகு, காலை, மதியம், மாலை இந்த மாடி வீடு அல்லது அந்த மாடி வீடு என்று விருந்து. ஆகஸ்ட் 18 அன்று வழியில் உண்ண டொரதி கொடுத்த சாண்ட்விச் வரை அங்கு தான் டேரா; விருந்தோம்பல் எல்லாம். அங்கிருந்த குடித்தனக்காரர்கள் யாவரும் என்னை உபசரித்தது ஒரு மென்மையான அனுபவம். அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையும், கனிவான அன்பும், என் ஆரோக்கியத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட கவனிப்பும் சொல்லில் அடங்கா. ஒரு வீடு பஞ்சாபி நண்பரின் வாசஸ்தலம். என்னிலும் முதியவரான அவருடைய மாமனாரும், அவரது சஹதர்மிணியும் உபசரித்தனர். மற்றொரு வீட்டில் ஒரு இளம்பெண்ணும், பெற்றோர்களும். கவனித்துப்போட்டதுமில்லாமல், உணவு சம்பந்தமான என் ஆசாபாசங்களை கணக்கில் எடுத்துக்கொண்டனர். மற்றொரு வீட்டில் இளந்தம்பதி, முதியவர்கள், விசால தள நேத்ரியான ஒரு ஸ்தீரி பிரஜை. சமத்து குழந்தை. அவளுடைய தங்கை, கைக்குழந்தை. அவர்கள் வைரமுத்துவின் நூல்களை எனக்கு படிக்கக்கொடுத்தனர்.

நான் விருந்தாளியாக இல்லை, டொரதி வீட்டில். வீட்டுக்கு ‘பெரிசாக’ இருந்தேன். அன்பும் கனிவும், அக்கறையும், கவனிப்பும் இயல்பாகவே அமைந்து விட்டது பூரணமாக. நாள் தோறும் ஹை-லைட்ஸ். காலை எட்டு மணிக்கு வேலைக்கும், கல்லூரிக்கும் அவர்கள் சென்று விடுவதால், எல்லாம் திட்டமிட்ட முன்னேற்பாடு. மாலை/இரவு மணிக்கணக்காக அளவளாவுதல். பாமரகீர்த்திகள் பல பாடப்பட்டன. கை பேசிகள் படம் எடுத்த வண்ணம். ஒரு நாள் மாலை என் மகளும், பேருக்கு தாதியாகவும், உள்ளபடி மற்றொரு மகளாக எங்களுக்கு இருந்த புஜம்மாவும் அவளுடைய மகளும், புது மாப்பிள்ளையும் எஞ்சினீயர் மகனும் வந்திருந்தார்கள். ‘ஆதி ஆந்திர திராவிட இனம்’ என்று சொல்லப்பட்டு, சமூகத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்ட புஜம்மாவின் குடும்பத்தின் தற்கால உன்னத நிலை எனக்கு அளித்த மகிழ்ச்சியை சொல்லி மாளாது. பல வருடங்கள் வரை சாத்தியமாகாத இந்த சந்திப்பு வஸந்தாவின் ஞாபகார்த்தமாக அமைந்தது. 

டொரதி குடும்பத்தில் நான் ‘புதிய தாத்தா’ என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஒரு மனநிறைவு தரும் நிகழ்வு. அங்கிருந்த ஐந்து நாட்களும், வினாடி தோறும், குடும்பத்தில் ‘பெரியவராக’ ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஒரு நினைவைக் கிளறியது. கேரளத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க சான்றோன், என் சிறு வயதில் எனக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்தார். இத்தனைக்கும் அந்த காலகட்டம் சோகமயமானது. அவருடைய மூத்த மகனும், என் கடைசி தம்பியும் டைஃபாயிடில் இறந்த காலகட்டம். ஐம்பது வருடங்களுக்கு பின் அவருடைய கடைசி மகன் டில்லியில் என்னை சந்தித்தார். அப்போது அவர் சொன்னது, ‘நீங்கள் தான் இனி எங்கள் பெரிய குடும்பத்தின் மூத்தமகன்’ என்று எங்கள் தந்தை அடிக்கடி சொல்லுவார்.’. அந்த இனிய சம்பவமும் சரி, பாலீனுக்கும், எவாஞ்சலினுக்கும் நான், ‘the Other Thaathaa’ ஆனதும் எனக்கு பரமபிதாவும், கர்த்தரும் அளித்த வரன்கள் என்று சொன்னால் மிகையாகாது.  ஒரு குறை. ஞாயிற்றுக்கிழமை அவர்களுடன் மாதாகோயிலுக்குப் போவதாக திட்டம். உடனுக்குடன் அமெரிக்கா போய் சேர்ந்த பெண்ணுடன் பேச, அப்போது தான் நேரம் அமைந்தது. ஆகவே, மாதாகோயிலுக்கு போக இயலவில்லை.
பத்துப்பக்கம் எழுதுவதை ஒரு சித்திரம் சொல்லி விடும். அத்தகைய சித்திரங்களை எடுத்தது, டொரதி. குடும்பமே கலைக்குடும்பம். அவர்களுடன் ‘சிசு தரிசனம்’ பற்றியும், ராகத்துடன் தோத்திரபாடல்கள் இயற்றிய மரியாதைக்குரிய வேதநாயகம் சாஸ்திரிகளை பற்றியும் சம்பாஷணை நடந்தது.  நான் பயணம் செய்ய கிளம்பும்போது, நாங்கள் நால்வரும் கைகோத்து பிரார்த்தனை செய்தது, மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வு:
ஆண்டவனின் பரிபூர்ணமான அரவணைப்பு அந்த குடும்பத்திற்கு என்றென்றும் கிட்டவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
இன்னம்பூரான்
14 ~ 18 ஆகஸ்ட் 2013/ 20 ஆகஸ்ட் 2013
சித்திரங்கள்: டொரதி உபயம்.

5 attachments
IMG01380-20130818-1714.jpg
436K
IMG01387-20130818-1719.jpg
463K
IMG01389-20130818-1738.jpg
437K
IMG01363-20130815-1805.jpg
431K
IMG01362-20130815-1752.jpg
491K

Dorathy 
Dear Uncle / The ‘Other Thatha’ !

I cant say how we were blessed to have you with us – especially when we felt you are like my dad .. The richness of your thought and the kind of time we could spend with you was very emotional for us.  We wish you good health and we must catch up as often as we can...  We are honoured to be in your ‘blog’...

Lots of love and affection; I am really touched.   

Dorathy

PS: Tell Suja and Jagan that you are a ‘shared father’.....

From: Innamburan S.Soundararajan [mailto:innamburan@gmail.com]
Sent: Wednesday, August 21, 2013 3:08 PM
To: mintamil; vallamai@googlegroups.com
Subject: 
சென்னை குறிப்புகள் ~5 ஐந்து நாள் வைபோகம்வைபோகமே!


Geetha Sambasivam Wed, Aug 21, 2013 at 5:09 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
// தாதியாகவும், உள்ளபடி மற்றொரு மகளாக எங்களுக்கு இருந்த புஜம்மாவும் அவளுடைய மகளும், புது மாப்பிள்ளையும் எஞ்சினீயர் மகனும் வந்திருந்தார்கள். ‘ஆதி ஆந்திர திராவிட இனம்’ என்று சொல்லப்பட்டு, சமூகத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்ட புஜம்மாவின் குடும்பத்தின் தற்கால உன்னத நிலை எனக்கு அளித்த மகிழ்ச்சியை சொல்லி மாளாது. பல வருடங்கள் வரை சாத்தியமாகாத இந்த சந்திப்பு வஸந்தாவின் ஞாபகார்த்தமாக அமைந்தது. //

இவங்களுக்குத் தானே நீங்க உங்க மனைவியின் கடைசி வேண்டுகோளான பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றியது? வாழ்க! வளர்க!  நினைவு வைச்சுப் பார்க்க வந்திருக்காங்களே.

திருவண்ணாமலையில் தமிழ்ச் செல்வியைப் பார்த்தேன் என்பது உண்மையில் எனக்கு வியப்பு.  தமிழ்ச்செல்வி எப்படி இருக்காங்க?  அவங்களை நினைக்காத நாளே இல்லை.  இப்போ அதிகம் இணையத்தில் பார்க்க முடியலை.  தெரிஞ்சால் கேட்டதாகச் சொல்லச் சொல்லி இருப்பேன். இந்த மடலைப் பார்ப்பாங்கனு நினைக்கிறேன்.

அருமையான  அற்புதமான அனுபவங்கள். அனைவரையும் அனுசரித்துக் கொண்டு காலத்துக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டு நடப்பதாலேயே இது சாத்தியம் ஆகிறது. வணங்கிக்கறேன்.

2

Geetha Sambasivam Wed, Aug 21, 2013 at 5:10 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
படங்களைத் தனியாகத் தான் திறந்து பார்க்க முடிந்தது.  இங்கே வரவில்லை.  புஜம்மாவையும் பார்த்தேன். 
[Quoted text hidden]

கி.காளைராசன் Wed, Aug 21, 2013 at 7:20 PM

Reply-To: vallamai@googlegroups.com
To: mintamil
Cc: "vallamai@googlegroups.com"
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2013/8/21 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
நான் விருந்தாளியாக இல்லை, டொரதி வீட்டில். வீட்டுக்கு ‘பெரிசாக’ இருந்தேன். அன்பும் கனிவும், அக்கறையும், கவனிப்பும் இயல்பாகவே அமைந்து விட்டது பூரணமாக. நாள் தோறும் ஹை-லைட்ஸ். காலை எட்டு மணிக்கு வேலைக்கும், கல்லூரிக்கும் அவர்கள் சென்று விடுவதால், எல்லாம் திட்டமிட்ட முன்னேற்பாடு. மாலை/இரவு மணிக்கணக்காக அளவளாவுதல். பாமரகீர்த்திகள் பல பாடப்பட்டன.

சூரியஒளியும், தண்ணீரும்தான் உலகில் உள்ள எல்லாப்பொருட்களுடனும் ஒன்றாகக் கலந்து விடுமாம்.
ஐயா, தாங்கள் சூரியஒளியா? தண்ணீரா?

அன்பன்
கி.காளைராசன்



Monday, August 19, 2013

சென்னை குறிப்புகள் ~3 டைம் பாஸ் எக்ஸ்பெரஸ்...!




சென்னை குறிப்புகள் ~3
டைம் பாஸ் எக்ஸ்பெரஸ்...!




Monday, August 19, 2013
சென்னை குறிப்புகள் ~3
டைம் பாஸ் எக்ஸ்பெரஸ்...!
Inline image 2

யான் செய்த முற்பயன் விளைவாக, நமது வடிவேலரை (வேறு யாரு? வ.வெ. தான்.) போலவே அஞ்ஞாத வாசம் சென்னை மாநகரத்தில், நான்கு நாட்கள்.  அதனால், நேற்று புதுச்சேரிக்குப் பயணம், முல்லைப்பாட்டையும், கபிலரையும் நாடி. அருந்தவம் செய்ததின் நற்பயன், முன்கூட்டி பயணச்சீட்டு கெழுமை நண்பரொருவர் மூலமாக பதிவு செய்த அசகாய வருமுன் காப்போன் செயல். சாஸ்திரி நகரிலிருந்து ஒரு நண்பரின் காரில், மற்றொரு நண்பரின் உறுதுணையோடு, மாலை 6.00 மணிக்கு, அதாவது அரை மணி நேரம் முன்னதாகவே ஆஜராக வேண்டும் என்ற கட்டளை பயணச்சீட்டில் கொட்டை கொட்டையாக எழுதப்பட்டிருந்ததால், ஜாமான்கள் ஐந்து இருந்ததால், 5.38க்கே ஆஜரானோம். ஊழ்வினை உறுத்தூஊம் அல்லவா. திருவாரூர் தேர் போல ஆடி அசைந்து வந்த ‘பர்தா’ எக்ஸ்பெரஸ், குறித்த இடத்தை விட்டுத் தள்ளியே நின்றது. முன் பின் தெரியாத என்னை, ‘அஸால்ட்டாக’ பயணச்சீட்டு வகையறா கேட்காமல், ‘டுர்ரெ’ன்று கிளம்பிவிட்டது. உதவியாளர் ‘கொச்சினா?’ என்று வினவினார். நான் திக்கிட்டுப்போனேன். ‘பரவாயில்லை. முதலில் புதுச்சேரி’ என்று ஆசுவாசப்படுத்தினார். ஏன் போகும் ஊர் பேர் போடவில்லை என்றேன், அப்பாவியாக. என்னை பிள்ளைப்பூச்சியை போல் திரணமாக மதித்த ஓட்டுனர், ‘அதெல்லாம் போடக்கூடாது. நாங்கள் ரூட் பஸ் இல்லை, தினந்தோறும் ரூட் பஸ்ஸாக பயணித்தாலும்.’ என்றார். உடனே, தனக்கு ‘ஆமாம்! ஆமாம்! போட்டுக்கொண்டார். தமிழ் நாட்டில் சட்டம் செல்லாக்காசு என்று சொல்லாமல் சொன்னார்.  அந்த நிமிடம் முதல், என்னால் தடைப்பட்ட ‘கடலை போடலை’ ஊர்தி ஓட்டுனரும், அவருடைய இரு உதவியாளர்களும் இடை விடாமல் புதுச்சேரி வரை ‘லொட லொட’ என்றும், ‘சள சள’ வென்றும் தொடர்ந்தனர். இருவருக்கும் தெரிந்த சமாச்சாரங்களைச் சொல்லி சொல்லி, ஆயிரம் வாலா வெடி போல் சிரித்து மகிழ்ந்தனர். எனக்கோ அஸ்தியில் ஜன்னி. ஃப்ரண்ட் சீட் ஆச்சே!. பெல்ட் இல்லை. ஒரு பாடாக புதுச்சேரிக்கு தாமதமாக வந்து சேர்ந்தோம். பஸ் ஸ்டேண்டுக்கு செல்லாமல், வழியில், அவர்களின் ‘ஆபீஸ்’ என்ற இடத்துக்கு முன்னால் நின்றது பஸ்ஸு. ஏன் இப்படி என்றேன். மறுபடியும் என்னை பிள்ளைப்பூச்சியை போல் திரணமாகவும் விநோதமாகவும் ஓட்டுனர், ‘அதெல்லாம் போடக்கூடாது. நாங்கள் ரூட் பஸ் இல்லை, தினந்தோறும் ரூட் பஸ்ஸாக பயணித்தாலும்.’ என்றார். உடனே, மறுபடியும் தனக்கு ‘ஆமாம்! ஆமாம்! போட்டுக்கொண்டார். மறுபடியும் தமிழ் நாட்டில் சட்டம் செல்லாக்காசு என்று சொல்லாமல் சொன்னார். புதுச்சேரியிலும் தான் என்று நினைத்துக்கொண்டேன். இன்னும் சொல்ல எத்தனையோ இருக்கிறது. ‘பர்தா’ எக்ஸ்பெரஸ்’ ஒரு அச்சுப்பிழை.
வர்ரேன்....
இன்னம்பூரான்
18/19. 08 2013