Saturday, March 21, 2015

சிரிச்சு மாளலெ ~ 15: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (10)

சிரிச்சு மாளலெ ~ 15: 
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (10)

இன்னம்பூரான்
21 03 2015

பல்லாண்டுகளுக்கு முன்பு டில்லி வாழ் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மாதம் ரூ.500/- கூடாரம் வைத்துக்கொள்ள என்றோ அருளப்பட்ட ஆணை, கூடாரமில்லாத காலகட்டத்திலும் தொடர்ந்தது. அந்த ஆணையை அரசு ரத்து செய்ய விரும்பவில்லை. அதே மாதிரி இரண்டாவது உலகப்போர் பொருட்டு பின்னி நெசவாலையில், அதற்கென்ன தனியாக கொடுக்கப்பட்ட பஞ்சப்படியை நாற்பது ஆண்டுகளுக்கு பின்னரும் ரத்து செய்யக்கூடாது தொழிற்சங்கங்கள் போரிட்டன. விளைவு: மூடு விழா. பேட்டரி போட்ட பச்சை/சிவப்பு விளக்குக் கொடுக்கப்பட்ட பின்னரும் ரயில்வே கார்டுகள் விளக்குக்கு எண்ணெய் கேட்டார்கள். இப்படியாக இந்தியா பீடுநடை போட்டு வரும் போது கிடைத்த இந்த செய்தி என்னை உலுக்கி விட்டது. ஏனெனில், காசு போச்சு, மானம் போச்சு, காலம் போச்சு. எல்லாம் போச்சு!

தஞ்சை, கும்பகோணம், மதுரை செளராஷ்டிர சமுதாயம் நெசவுக்கு பேர்போனவர்கள்.அப்போது அவர்களுக்கு சிட்டம் நூல் வேண்டும். அதற்கு ஆங்கிலத்தில் ஹான்க் யார்ன் என்று பெயர். அதை தயாரிக்க வேலை மெனெக்கெடவேண்டும் செலவு ஜாஸ்தி. நன்றாக பேக் செய்யவேண்டும். கருணை கொண்ட கலோனிய அரசு அக்காலத்தில் மில்களை இவற்றை கணிசமாக தயாரிக்கவேண்டும், நஷ்டப்பட்டாலும் என்று கோட்டா போட்டு ஆணையிட்டது. இப்போது நெசவாளிகள் ஆட்டோமெட்டிக் பவர் லூம் நாடுகிறார்கள், பல்லாண்டுகளாக ஹான்க் யார்னை ஒதுக்கிவிட்டு. ஆனால் நஷ்டத்தில் அவை உற்பத்தி செய்ய்ப்படுகின்றன. கேட்பார் இல்லை. நஷ்டம் கண்டு வருந்துகிறேன். ஆனால், மூளையை இயக்காமல் பத்தாம்பசலி செலவு செய்வதை கண்டால், சிரிப்பு வருது! சிரிப்பு வருது! சந்திரபாபு பாடினால் போல்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://d2q9kw5vp0we94.cloudfront.net/regular/5420193.jpg