Saturday, May 18, 2013

வள்ளலார்~2




வள்ளலார்~2

Innamburan S.Soundararajan Sat, May 19, 2013 at 8:54 PM


வள்ளலார்~2
Inline image 1
மேலும் கேளுங்கள்.
சித்திரத்துக்கு நன்றி:http://www.vallalar.org/templates/vallalarorg/images/VallalarSpaceVallalar.jpg

இன்னம்பூரான்
19 05 2013


அன்புள்ள இன்னம்புரன் அவர்களுக்கு,

மிக்க நன்றி. இப்பதிவை வெளியிட்டதற்கு.
ஒரு தவறு - அது விகடன் செய்ததா ?
முடிக்கும் போது ஒரு குசும்பு வேலை செய்யப்பட்டுள்ளது.
வள்ளலார் எப்போது சமாதி ஆனார் ?
ஞான சபையினை வள்ளலார் சமாதி என்று காட்டுவது எதற்காக ?
ஞான சபை என்பது அகத்தில் உள்ளதை புறத்தில் காட்டுவதற்காக
வள்ளல் பெருமானாரால் ஏற்படுத்தப் பட்டது.
இது கோவில் போன்ற வழிபாட்டு தளம் அல்ல.
இது உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 
அக அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக
வள்ளல் பெருமானால் ஏற்படுத்தப் பட்டது.
நாம் எப்பொழுதும் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பழக்கப் பட்டுள்ளோம். அது போன்ற சடங்குகளை விட்டு விலகியதே
சன்மார்க்கம். 
இதன் முடிந்த முடிபு கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் ஒன்றே.
இங்கே ஞான சபை என்பதே நம்முள்ளே 
சிற்சபை என்பது எது? 
பொற்சபை என்பது எது ? 
ஞான சபை என்பது எது ?
ஜோதி தரிசனம் என்பது எதற்காக ?
திரைகள் ஏன் விளக்கப் படுகின்றன ?
திரை விலகுவதற்கு முன்பு ஜோதியின் நிறம் என்ன ?
திரை விலகிய பின்னர் ஜோதியின் நிறம் என்ன ?
இது போன்ற சத் விசார கேள்விகளுக்கு 
விளக்கம் தருவதற்காக ஏற்படுத்தப் பட்டது.
ஆகவே ஞான சபை என்பது ஞானத்தை தெரிவிப்பதற்காக 
ஏற்பட்டதே தவிர வள்ளலாரின்  சமாதி என்று தவறானதை தெரிவிக்க வேண்டாம்.
அன்புடன்
நக்கினம் சிவம்
*
 அன்பரே!

சில விஷயங்கள் மீள்சிந்தனைக்கு உரியனவாய் இருக்கின்றன.

1)வள்ளலாரின் பெருமை ஜீவகாருண்யத்தை மிகச்சிறந்த ஆன்மிக நெறியாக வலியுறுத்தியதில் இருக்கிறது.

2)முதல் ஐந்து திருமுறைகள் சைவ சித்தாந்த ரீதியாகப் பாடிய வள்ளலார் ஏன் ஆறாம் திருமுறையை மட்டும் நேர் எதிர்கருத்துடன் பாடவேண்டும்?

3)தனக்கு சிவபெருமானும், முருகனும் அருள் செய்ததாகப் பாடும் ஒருவர் சிவ வழிபாடான சைவத்தை உதறிவிட்டு வெளியே வந்துவிடுங்கள் என்று கூறுவாரா?
அருட்பா மருட்பா எதிர்ப்பால் இந்தப் பின்விளைவான போக்கு தோன்றியிருக்குமா? அப்படி நாம் அந்த அருளாளர் விஷயத்தில் நினைப்பதைவிட, அவருடைய அனுதாபிகள் தங்களுக்குப் பிடித்த மகானுக்கு நேர்ந்த இடர்பாடுகளைக்கண்டு எதிர்போக்கு கொண்டு ஆற்றிய செயல்களின் வெளிப்பாடாய் அவை இருக்கலாம் அல்லவா? வள்ளலாரே எவ்வளவு தடுத்திருந்தாலும் சீறிய அன்பு கேட்காதே! 

4)அடுத்து வள்ளலாரின் நூல்களில் இடைச்செருகல் என்பவை இல்லையா? ஆரம்பகால பிரதிகள், கைப்பிரதிகள் அனைத்தையும் கண்டு ஆய்வுப்பதிப்பு வந்துள்ளதா? 

5)வாழ்வின் ஆரம்பத்தில் ஸ்ரீதர நாயக்கர் என்னும் பிரம்ம ஸமாஜி ஒருவருடன் பொது மேடையில் வேத உபநிஷதங்களைப் போற்றி, பிரம்மசமாஜக் கொள்கைகளை எதிர்த்துப் பேசினார் வள்ளலார் என்று படித்த நினைவு.  வாழ்வின் கடைசி கட்டத்தில் தாமே பிரம்மசமாஜம் போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா? 

--- இவை போன்ற பல விஷயங்கள் மீள் சிந்தனையின் போது தோன்றுகின்றன. விளக்கம் தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றி. நீர்விளக்கும், நீர்மையுடன் விளக்கமும் நமக்கு தெளிவு தரட்டும். 
*

”தண்ணமர் மதிபோற்சாந்தந்தழைத்தசத்துவனே போற்றி
வண்ணமாமணியே போற்றி மணிவண்ணத்தேவா போற்றி
அண்ணலே யெவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி.”

ஒருமுறை அருட்பிரகாச வள்ளலார் திருத்தணிக்குச் சென்றார். அடிக்கடி அவர்
அந்த முருகனைக் காணச் செல்வது வழக்கம். ஆனால் போகும் வழியில் இருக்கும்
திருவள்ளூருக்குச் செல்லமாட்டார். அந்தத் தடவை திருவள்ளூரை
நெருங்கியவுடன் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. திருவள்ளூரில்
இருக்கும் அருள்மிகு வீரராகவப் பெருமாளைத் தரிசிக்காமல் போகிறோமே என்று
அப்போதுதான் அவர் மனதில் பட்டது.

பின் அவர் அங்கு போய்ப் பிரார்த்திக்க, வயிற்றுவலி அறவே நீங்கியது. அவர்
இந்தப் பெருமாள்மேல் "வீரராகவ பஞ்சகம்'' இயற்றியிருக்கிறார். இந்தக்
கோயில் வாயிலில் இந்த வீரராகவ பஞ்சகம் பளிங்குப் பலகையில்
செதுக்கப்பட்டிருக்கிறது



தேவ்
________________________________________________________________

[தொடரும்]
வள்ளலார்~3



(3): அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க...





Innamburan S.Soundararajan Sat, May 18, 2013 at 4:11 PM



 (3): அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க...
Inline image 1
முன்குறிப்பு:
இந்த தொடர், ஒரு சிக்கலான கேள்வியை ஒவ்வொருவர் அணுகும் முறையை அவதானிப்பது. இழைகள் தொடர்பு உடையவை. உரிய நேரத்தில் அப்டேட் செய்யப்படும்.
சித்திரத்துக்கு நன்றி: http://i.ytimg.com/vi/vI3fJ4KvrsE/0.jpg

இன்னம்பூரான்
19 05 2013
*
கொடுமை என்னவெனில் சுதந்திர நாடுகளாகக் கருதப்படும் ஜனநாயக நாடுகளிலும் மக்க்ளுக்கு உண்மையான் சுதந்திரம் இல்லை! ஜனநாயகம் என்று பேச்சளவில் இருந்தாலும் உண்மையில் வாரிசத்துவம் தான் நிலையாக் உள்ளது. வீணாக்காப்படும் மக்கள் செல்வம் அதிகமாகியுள்ளது (சேது சமுத்திரத் திட்டம் ஒரு மாபெறும் உதாரணம்)
எல்லா நிர்வாகங்களும் - சோஷலிஸம், முதலாளித்துவம், கலந்து கட்டி, தனியார் ஏகாதிபத்தியம், மக்களாட்சி, சர்வாதிகாரம், தவறுகள் இழைக்கின்றன என்பதும்,
அவற்ரில் ஆங்காங்கே எல்லாமுறைகளிலும் (சர்வாதிகாரம் தவிர) நன்முத்துக்கள் அரிதாக இருக்கின்றன என்பது தான் வரலாறு. இது மனிதனின் பலவீனம்.
மிக நன்றாகச் சொன்னீர்கள்!
நரசய்யா
*
கொடுமை என்னவெனில் சுதந்திர நாடுகளாகக் கருதப்படும் ஜனநாயக நாடுகளிலும் மக்களுக்கு உண்மையான் சுத்ந்திரம் இல்லை! ஜனநாயகம் என்று பேச்சளவில் இருந்தாலும் உண்மையில் வாரிசத்துவம் தான் நிலையாக உள்ளது. 
A family centric society will always have this & there shall be general acceptance among public seeing a Child growing under the shadow of his father. May it be politics, business or anything. Only the working for wage class stands apart. 
There is nothing wrong in Rajiv following Indira, Stalin following Karuna provided they earn it in the way their parents did.

My only concern is why people like our CM could not understand this when it come to Temples priests :-)
Sri Ramadoss M
*
எப்போது  மக்கள்  தங்களின் அடிப்படைத் தேவைகளை தம்மை ஆளும் அரசாங்கம் ஏற்படுத்தித் தரவேண்டும்
தாம் கொடுக்கும் வரிப்பணம்  மக்களுக்கும்  நாட்டு முன்னேற்றத்துக்கும்  உபயோகப்படுத்தப்படல்வேண்டும்

தனியார் கொள்ளையடிப்பதை தட்டிக் கேட்கவேண்டும்  என்னும் விழிப்புணர்வைப் பெறுகிறார்களோ
அந்த நாடுதான் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்

அனியாயத்தை  தட்டிக் கேட்க துணிவில்லாத  மக்கள்  இருக்கும் வரை  நாடு
அராஜக  அக்ரமக்காரகளின் கையில்  சிக்கி சீரழியும்

மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்


அப்போதுதான்

அது ஜனநாயகமோ  ,சோஷலிசமோ  எதுவோ  
    
மக்களின் வாழ்க்கை  செழிப்பு பெறும்

அன்புடன்
தமிழ்த்தேனீ
*
இன்னம்புரான்,

அரசாங்கங்கள் ஒரு நாட்டை நிர்வகிப்பதில் உள்ள திறமைக் குறைவைச் சுட்டித்தானே உங்கள்
கட்டுரை அமைகிறது? அதை மேலும் உறுதிப்படுத்தவே நான் எழுதினேன்.

"பிரிட்டிஷ் மாதிரியிலான அரசு" என நான் கூறியது பிரிட்டிஷ் பீரோகிரசியை வரித்துக் கொண்ட
முன்னாள் காலனித்துவ அரசுகள்: இந்தியா, மலேசியா, பாக்கிஸ்தான் இன்ன பிற.
இந்த பீரோகிரசிதான் திறமையின்மையின் மூலம். அதுவே பணவிரயத்துக்கும் ஊழலுக்கும்
வழிவகுக்கிறது.

இதற்கு மாற்றாகத்தான் கேப்பிட்டலிசமும் தாராளமயப் பொருளாதாரமும் நமக்குத் தந்த
தனியார் துறை வருகிறது. தனியார் துறை ஊழலற்றதல்ல. அதற்குத்தான் அரசாங்க மேலாண்மை
அதனை எந்த நாளும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஊழல் இருந்தாலும்
தனது சேவைகளை வெற்றிகரமாக வழங்குவது தனியார் துறைதான். அரசாங்கமே சேவையை
முன்வழங்க வரும்போது சேவையும் திறமையாக அமைவதில்லை; ஊழலும் பெருகுகிறது.

"எல்லா நிர்வாகங்களும் - சோஷலிஸம், முதலாளித்துவம், கலந்து கட்டி, தனியார் ஏகாதிபத்தியம், மக்களாட்சி, சர்வாதிகாரம், தவறுகள் இழைக்கின்றன என்பதும்,அவற்றில் ஆங்காங்கே எல்லாமுறைகளிலும் (சர்வாதிகாரம் தவிர) நன்முத்துக்கள் அரிதாக இருக்கின்றன என்பது தான் வரலாறு. இது மனிதனின் பலவீனம்."

ஒப்புக் கொள்ள வேண்டிய கருத்து. ஆனால் "சர்வாதிகாரத்துக்கு" ஏன் விதிவிலக்கு அளித்தீர்களோ
தெரியவில்லை.  ரஷ்ய சர்வாதிகாரமாக இருந்தாலும், ஆப்பிரிக்க பூர்வகுடிச் சர்வாதிகாரமாக
இருந்தாலும் ஊழல்கள் இருக்கவே செய்கின்றன. மக்களாட்சிச் சர்வாதிகாரம் என்று கூறக்கூடிய
சிங்கப்பூர் மட்டுமே ஊழல்கள் இல்லாத முறையாக இருக்கிறது.

தனியார் மயத்தில் உள்ள இலாப நோக்கு திறமையின் உந்துசக்திகளில் மிகச் சிறந்தது. இதில்
போட்டியும் இருக்க வேண்டும். Monopoly கூடாது. ஆகவே தண்ணீர் வழங்குவதானாலும், சாலை
போடுவதானாலும் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும். நிச்சயமாக
தரமானது வெல்லும். இப்படிப்பட்ட போட்டி இல்லாததுதான் அரசாங்கச் சேவைத் துறைகள்
அசட்டையாகவும் அலட்சியமாகவும் இருந்து திறமையின்மையைப் பெருக்கிக் கொள்ளும் காரணம்.

 ஏன் இந்தியாவில் தனியார் துறை வந்தால் "விழுங்கிவிடும்" என்ற கருத்து இருக்கிறது?
சரியான கண்காணிப்பு, விதிமுறைகள் இருந்தால் தனியார் துறையின் சேவை சிறப்பாக
இருக்கும். அரசாங்கம் தருவது போன்ற மலிவான சேவையை அவை வழங்கா என்பது
தெளிவு. திறமான சேவைக்குரிய விலையைக் கொடுக்க மக்களும் தயாராக வேண்டும்.

நீங்கள் சொல்லும் மருத்துவ சிகிச்சை காப்பீடு பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எங்கள்
நாட்டில் தனியார் நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீடுகள் நன்றாகவே செயல்
படுகின்றன. சிங்கப்பூரில் கட்டாயக் காப்புறுதித் திட்டம் நன்றாகவே செயல் படுகிறது.
அமெரிக்காவில் ஒபாமா கொண்டுவரும் கட்டாயக் காப்புறுதித் திட்டத்திலும் நன்மைகளே
அதிகம் உள்ளன.

தனியார் மயத்துக்கு மக்களின் ஆரம்ப கட்ட எதிர்ப்பு எதிர்பார்க்கக் கூடியதே. சேவையின் விலை
உயரும் என்பதே முதல் ஆட்சேபமாக இருக்கும். அதற்கேற்ப சேவையின் தரமும் உயரும்
என்பதைப் புரிந்து கொள்ள கொஞ்ச நாளாகும்.

ஆனால் எல்லா முறைகளிலும் அடிமட்ட மக்களையே முதன்மையாக வைத்துச் சிந்தித்தால்
அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் பின்னடைவுகளையும் முதன்மைப் படுத்தினால்,
எந்தத் துறையும் முன்னேற முடியாது. நடுத்தர வர்க்கத்தின் நலன்களை முதன்மைப் படுத்தும்
திட்டங்களை வகுத்துச் செயல் படுத்தினால், அதனால் ஏற்படும் முன்னேற்றம், ஏழைகளையும்
(கொஞ்சம் தாமதமானாலும்) வந்தடையும். அதோடு அரசு தனது வருமானத்தைப் பயன் படுத்தி
ஒரு பாதுகாப்பு வலையையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் (இலவச அடிப்படை
மருத்துவச் சேவை, ரேஷன் கார்டு போன்றவை).


ரெ.கா.
*
இன்னம்புரான்,

அரசாங்கங்கள் ஒரு நாட்டை நிர்வகிப்பதில் உள்ள திறமைக் குறைவைச் சுட்டித்தானே உங்கள்
கட்டுரை அமைகிறது? அதை மேலும் உறுதிப்படுத்தவே நான் எழுதினேன்.

அரசு நிறுவனங்கள் சரியாக வேலை செய்யாமல் இருக்க தனியாரும் ஒரு காரணம்.
உதாரணமாக பிஎஸென்னல் G3 தொழில் நுட்ப உரிமம் பெற்று பல மாதங்கள் ஆகின்றன. இன்னும் சேவை சில நகரங்களுக்கு மட்டுமே! இதற்கு அவர்கள் மெத்தனம் மட்டுமே காரணமல்ல. 
திவாஜி
*
பிஎஸ் என் எல் தனியாரோடு போட்டி போட முடியாமல் திணறுகிறது என்று சொல்லலாம், அதற்கு மோசமான அமைச்சகமும் காரணம் என்பது வெளிப்படை. கடந்த மூன்றாண்டுகளில் தட்டுத்தடுமாறி நடை போடுகிறது பி எஸ் என் எல். என்றாலும் மத்திய அரசு இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நேற்று சபரிமலை நேரடி ஒளிபரப்பையே எடுத்துக் கொண்டால், பொதிகை சானல் நன்றாக நிகழ்ச்சியை ஒளிபரப்ப முயன்றாலும் முடியவில்லை. ஒரே கோடு கோடாக, புள்ளி புள்ளியாகத் திரை, அதே தனியார் சானல்களில் பளிச்சோ பளிச். அப்புறம் தூரதர்ஷன் பாரதி கொஞ்சம் பரவாயில்லாமல் வந்தது. பொதிகையின் நிகழ்ச்சிகள் நல்ல ஆக்கபூர்வமாய் வந்தாலும் தனியார் தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர்களுக்கு முன்னால் போட்டி போட முடியவில்லை. பிஎஸ் என் எல்லுக்கும் அதே பிரச்னை!
*
நரசய்யா,

'வாரிசத்துவம்' நல்ல சொல். என்ன செய்யலாம், ஊழல் இல்லாத நாடு என்று பெயர் பெற்ற
சிங்கப்பூரிலும் வாரிசித்துவம்தான் ஆளுகிறது. ஆளும் குடும்பங்கள் பல இருக்கின்றன
உலகில். மலேசியப் பிரதமர் நஜீப்பின் தந்தை இரண்டு தவணைகளுக்கு முன் பிரதமராக
இருந்தவர்.

ஜியார்ஜ் புஷ்ஷின் அதிபராட்சியையும் வாரிசத்துவம் என்று சொல்லலாமா?
ஒரு வேளை முறையான தகுதிகள் இல்லாமல் பதவிக்கு வருபவரைத்தான்
அப்படிச் சொல்லமுடியும் போலும். ஒரு தவணை இன்னொருவர் இருந்தபின்
பதவிக்கு வருபவரை அப்படிச் சொல்ல முடியாது.

ரெ.கா.
*
அரசியலில்  அன்றிலிருந்து  இன்று வரை  வாரிசுகளே  தொடர்கின்றன

அதில் தவறு இல்லை

அரசியலில் மட்டுமல்ல

அனைத்து துறைகளிலும்  வாரிசுகள்தான்  வரமுடிகிறது

ஆனால்  வாரிசுகள்  வந்தாலும்    வருவதற்கு வேண்டுமானால்   அது உதவுமே தவிற

திறமை  இல்லாவிடில்      நிலைக்க முடியாது

ஆனால் அரசியலில் மட்டும் தான்   திறமை  இல்லாத போதும் மற்ற  அராஜக்ங்கள் செய்து   நிலைக்க முடிகிறது


அன்புடன்
தமிழ்த்தேனீ
*
ரெ. கா கவனத்திற்கு: 
எனது கட்டுரை ஒன்று ஹிந்துவில் வெளியானது வாரிசத்துவத்தைப்பற்றி விளக்கியது பார்க்கவும்

நரசய்யா
_______________________________________________________________________________________________
(தொடரும்) 
 (4):அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க...



வள்ளலார் ~1



வள்ளலார் ~1

Innamburan S.Soundararajan Sat, May 18, 2013 at 6:32 PM

வள்ளலார் ~1
வள்ளலாருக்கு ஒரு வெற்றி மாலை!
This article is copyright of Vikatan. Thanks and Acknpwledgment.
Innamburan
இது மே 1, 2010 அன்று முதல் பலநாட்கள் ஓடிய இழை. பலர் கலந்து கொண்டனர்.
இன்னம்பூரான்
18 05 2013


'அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை...' என்று கருணைக் கடலாக அறியப்பட்டவர் வடலூர் ராமலிங்க வள்ளலார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று சொன்ன வள்ளலாரை எதிர்த்து, கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் கழித்து, சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு!
150 ஆண்டுகளுக்கு முன்பும் வள்ளலாருக்கு எதிராக பிரிட்டிஷ் காலத்திலேயே பிரபலமான ஒரு வழக்கு வாதாடப்பட்டது. அந்த ஃபிளாஷ்பேக் முதலில்...
ஜீவகாருண்யம், பசியாற்றுவித்தல், சாதிமத வேறு பாடின்மை, ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகிய நான்கையும் வலியுறுத்திய வள்ள லார், சன்மார்க்க சங்கத்தை உருவாக்கி சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் ஆகியவற்றை வடலூரில் நிறுவினார். 'கடவுளை உண்மையான அன்புடன் ஒளி வடிவில் வழிபட வேண்டும்' என்பது வள்ளலாரின் எண்ணம். அப்படி அவர் உருவ வழிபாட்டை மறுத்ததால், வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
''அவர் எழுதியதை அருட்பாவாக ஏற்க முடியாது. தேவாரம், திருவாசகம்தான் அருட்பாக்கள். இவை வெறும் மருட் பாக்கள்!'' என்று யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தலைமையிலான தீவிர சைவர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். ''தன்னை உணர்ந்தோர் பாட்டெல்லாம் அருட்பா. மற்றதெல்லாம் மருட்பா!'' என்று இதற்கு வள்ளலார் விளக்கம் அளித்தார். 'ஆறுமுக நாவலரின் பெயரைச் சொல்லி ஒரு
கூட்டத்தில் வள்ளலார் கிண்ட லடித்ததாக' கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. அன்றைய தினம் வள்ளலாரே நீதிமன்றத்துக்கு நேரில் வர... அப்போது வழக்குப் போட்ட ஆறுமுக நாவலரே, வள்ளலாரை எழுந்து நின்று வணங்கினார். இதைப் பார்த்த நீதிபதி, ''எதிரிகளாலும் வணங்கத்தக்க வள்ளலார் தவறாகப் பேசியிருக்க மாட்டார்!'' என்று ஆங்கிலேய ஆட்சியிலேயே வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில்தான், தற்போது சபானந்த ஒளி சிவாச் சாரியார் என்பவர் வடலூர் கருவறையில் லிங்க உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதை இந்து சமய அறநிலையத் துறை ஏற்கவில்லை. 'வள்ளலார் உருவ வழிபாட்டை ஏற்காமல்... ஜோதி வழிபாட்டையே ஏற்றார்!' என்பதைச் சொல்லி, 'உருவம் எதையும் வைக்கக் கூடாது' என்றது. இந்த உத்தரவுகளுக்குத் தடை விதிக்கக் கேட்டுதான் சிவாச்சாரியார் சென்னை உயர் நீதிமன் றத்தை அணுகினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் சந்துரு ஒரு மகத்தான தீர்ப்பை அளித்திருக் கிறார்.
''சாதிமத வேறுபாடுகளைக் கண்டித்த மாபெரும் மனிதாபிமானி வள்ளலார். 'சாதியும் மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி' என்று அவர் பாடியதுதான் 1872-ம் ஆண்டும் பிரிட்டிஷ் அரசு, சாதிக்கு எதிரான சட்டம் கொண்டுவரத் தூண்டுகோலாக அமைந்தது. அப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கடலூருக்கு அருகில் அணையாத அடுப்புகளை உருவாக்கி அன்னசாலை அமைத்தார். அன்று இருந்த அந்நிய ஆட்சியை எதிர்த்து, 'கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக... அருள் நியந்த நன்மார்க்கர் ஆள்க' என்று பயமில்லாமல் பாடிய வள்ளலார், சிறந்த மனிதாபிமானியாகவும் சாதி மதத்துக்கு எதிரானவராகவும் இருந்தார்.
அவரது ஆன்மிக எண்ணங்கள் ஜோதியை அடிப்படையாகக்கொண்டே இருக்கின்றன. 'ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி என் உளத்தே' என்று பாடி இருக்கிறார். 'சமயம் குலம் முதல் சால்பு எலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட்பெருஞ்சோதி' என்கிறார். இந்த ஜோதி வழிபாட்டை முன்னெடுக்கும் நோக்கத்துடன்தான், சத்திய ஞான சபை தொடங்கப்பட்டது. அதில் எப்படிப்பட்ட வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று 18.7.1872-ம் நாள் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. ஜோதி வழிபாட்டைத் தவிர, வேறு எதற்கும் வழி கிடையாது என்று அதில் திட்ட வட்டமாகக் கூறப்பட்டுள்ளது. 'தகரப் பெட்டியில் வைத்து ஜோதியைஏற்ற வேண்டும். அது கண்ணாடியில் பிரதிபலிக்க வேண்டும். எண்ணெய் பயன்படுத்தி ஜோதியை ஏற்ற வேண்டும். ஜோதி காட்டப்படும்போது அனைவரும் மௌனமாக இருக்க வேண்டும். 'அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி' என்ற மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும். இதில் பங்கேற்பவர்களுக்கு, வேதங்களிலோ, ஆகமங்களிலோ, புராணங்களிலோ, இதிகாசங்களிலோ, நம்பிக்கை இருக்கக் கூடாது. இதில் பங்கேற்பவர்களுக்கு, சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய பிற மதங்களின் மீது நம்பிக்கை இருக்கக் கூடாது' என்று வள்ளலார் தனது நெறிமுறைகளைத் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, லிங்கப் பிரதிஷ்டை செய்வது வள்ளலாருக்கு எதிரானதாகும்!'' என பல்வேறு ஆதாரங்களை தனது தீர்ப்பில் நீதியரசர் சந்துரு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ''வள்ளலார் மார்க்கம் விஞ்ஞான அடிப் படையில் ஆனது. புத்தருக்குப் பிறகு புதிய நன்மார்க்கத்தை அவர் உருவாக்கியவர். வள்ளலார் ஆறு திருமுறைகளை எழுதியிருக்கிறார். முதல் ஐந்து திருமுறைகளில் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொண்டாலும்... கடைசியாக ஆறாம் திருமுறையில், ஜோதி வழிபாட்டை மட்டுமே வலியுறுத்தி இருக்கிறார். இறுதிக் காலத்தில் சொன்னதையே அவரது உறுதியான வாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்!'' என்று சொன்ன நீதிபதி சந்துரு, ''சைவத்தின் மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டு இருந்தேன். ஆனால், முழு உண்மை என்ன என்பதை உணர்ந்த பிறகு அதை விட்டுவிட்டேன். நீங்களும் அதை விட்டுவிடுங்கள். அப்போதுதான் நீங்கள் ஆன்மிகரீதியாக முன்னேறலாம். வெற்று வார்த்தைகளாலும் சடங்குகளாலும் பயன் இல்லை. அன்பு, உண்மை, கருணை ஆகியவற்றால் மட்டுமே உயர்வை அடைய முடியும்!'' என்று வள்ளலார் சுட்டிக்காட்டியதையும் குறிப்பிட்டார்.
மேலும் அவர், ''சத்திய ஞான சபையில் உருவ வழிபாட்டை நடத்துவது வள்ளலாரை அவமதிப்பதாகும். வள்ளலாரை அவரது எதிரிகள் எதற்காக எதிர்த்தார்களோ, அந்தக் காரணத்தின் மூலமாகத்தான் அவரை முழுமையாக உணர முடியும். உருவ வழிபாட்டை எதிர்ப்பதையும், சாதி மத வேற்றுமைகளை நிராகரிப்பதையும் பார்த்துத்தான் வள்ளலாருக்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே, உருவங்களை வடலூரில் வைத்து வழிபடக் கூடாது!'' என்று தீர்ப்பு அளித்துள்ளார்.
வள்ளலாரின் சமாதியில் மீண்டும் ஒரு வெற்றி மாலை!
- ப.திருமாவேலன்

அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(2)




அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(2)
1 message

Innamburan S.Soundararajan Sat, May 18, 2013 at 3:06 PM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88


அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(2)
Inline image 1

கீழ்க்கண்டதை எழுதியபின் இரண்டாண்டுகள் கடந்தன. எகிப்து, லிபியா போன்ற அடக்குமுறையில் தத்தளித்த நாடுகள் கொதித்து எழுந்தன. ஆனால், விடிவு காலம் பிறக்கவில்லை. இந்தியாவில் தடுமாற்றம் அதிகரித்தது.
இன்னம்பூரான்
18 05 2013

திரு. ரெ.கா

இங்கிலாந்தில்  மக்களால் மட்டுமே அரசை மேய்க்க முடியும் என்றும்,. நாள் தோறும்அரசு மான்யம் பெற்று அதை செய்கிறோம்!  என்றல்லவவா கூறினேன். அரசு - மேலும் குறிப்பாக பிரிட்டிஷ் மாதிரியிலான அரசு - ஒரு சிறந்த நிர்வாகியாக
இருக்க முடியாது என வரலாறும்பல நாடுகளின் அனுபவங்களும் நிருபித்துள்ளன. என்பதற்குஆதாரம் சுட்டினால் நல்லது. இந்த கருத்துடன் என் அனுபவத்திற்கு உடன்பாடு இல்லை. எல்லா நிர்வாகங்களும் - சோஷலிஸம்முதலாளித்துவம்கலந்து கட்டிதனியார் ஏகாதிபத்தியம்மக்களாட்சிசர்வாதிகாரம்தவறுகள் இழைக்கின்றன என்பதும்அவற்றில் ஆங்காங்கே எல்லாமுறைகளிலும் (சர்வாதிகாரம் தவிர) நன்முத்துக்கள் அரிதாக இருக்கின்றன என்பது தான் வரலாறு. இது மனிதனின் பலவீனம்.

தற்கால சூழ்நிலையில் தனியார் வந்தால்இந்தியாவை கபளீகரம் செய்து விடுவார்கள். தமிழ்நாட்டு இலவச மருத்துவ சிகிச்சை காப்பீடு ஒரு உதாரணம. அரசு பணிகளோ மோசம். என் செய்யலாம் என்பது தான் சர்ச்சை. இருந்தும்நீங்கள் சொல்வது போல அரசு என்ன செய்யவேண்டாம் என்பதை விளக்கினால்அதற்கு பொதுஜன வரவேற்பு இருந்தால் நல்லது. அரசு செய்யும் சில அநாவசிய வேலைகள் நீக்கப்படவேண்டும்அவை எல்லாமே தனியாரிடம் போக தேவையில்லை. அத்துடன்மக்களிடமேசில சேவைகளை ஒப்படைக்க  இயலும். சோஷலிசம்ுதலாளித்துவம் தனியார் பெருமை எல்லாமேதோல்வியடைந்து விட்டன.

திரு.கண்ணன்:

வரும் மின்னூல்களுக்கு காத்திருந்து விரிவான பதில் போடுகிறேன். இந்திய அரசு முறைகளில்புராணங்களில் தவிர,ஆன்மீகத்தின் தாக்கம் கிடையாது. தார்மீகத்தின் தாக்கம் இருந்ததுநீதி நூல்களின் நல்வரவாக. அர்த்த ஸாஸ்திரம் ஆன்மீகத்தை அரசியலில் ஈடுபடுத்தவில்லை. தமிழ்நாட்டு அரசர்களும்அகம்,புறம் என்று திரிந்தார்கள். ஆன்மீகமில்லை. சமயத்தின் தாக்கம் கூட ஓரளவு தான் இருந்ததது. ஆட்சிமுறைகளை மாற்ற முயலவில்லை. கோரமான சுயநலமும்,ஊழலும்ஒழுங்கின்மையும் செய்முறை
வாழ்வாகியும்விட்டது. ஒருபுறம் சோஷலிசம்இன்னொருபுறம் தனியார் துறை. இரண்டையும் ஊழலே அங்குகட்டுப்படுத்துகிறது.
ஊழல் என்பதே இந்திய அரசின் அடிக்கோடாகஅடிப்படை அலகாக மாறிவிட்டது. என்பது மறுக்கமுடியாத உண்மை. இது ஜனநாயகத்தின் பக்க விளைவு. அரசு நிர்வாகம்அரசியல் வாதிகள்அதிகாரமையங்கள்ஊழியர் சமுதாயம்மக்கள் ஆகியோர் எப்படி இயங்கவேண்டும் என்பதை ஆராய முடியும்இந்த இழையில். மக்காளாட்சி வேண்டாம் என்றும்,யதேச்சிதிகாரம் வேண்டும் என்று சொல்வது சரியல்ல என்று வரலாறு கூவிய வண்ணம் உள்ளது.

திருஓம். வெ.சுப்பிரமணியன்
 ஒரு சோவியட் ரஷ்யா ஜோக்: ஒரு தொழிற்சாலையில் மின் இயக்கும் தள்ளு வண்டிகள் தினம்தோறும் காணாமல் போயின,பலத்த சோதனைகள் இருந்தாலும். வேறு வழியில்லாமல்நிர்வாகம்திருட்டை ஒப்புக்கொள்பவர்களுக்குபரிசில் தருவதாக (முதலாளித்துவ ட்ரிக்) ஆசை காட்டியது. ஒருவர் சொன்னார்: 'தினந்தோறும் குப்பையை தள்ளுவண்டியில் இட்டுச்செல்வேன். குப்பையைக் கிளரிவிட்டுவண்டியை விட்டுவிடுவார்கள் என்று! நீங்கள் கூறிய சம்பவம் அந்த வகை. தணிக்கையில்இந்த மாதிரி கொள்ளைகளை எடுத்துக்காட்டியிருக்கிறோம்.
கோலாலம்பூர் ஜெட் எஞ்சின் திருடு விந்தையாக இல்லைஆனால் பாருங்கள்அங்கு தண்டனையின் கடுமையை. இந்தியாவில்  ஜாமீன் கொடுத்து விடுவார்கள்!

புதுவரவு

12 01 2010 Economist

Freedom is in decline in many places around the world

Political rights and civil liberties around the world suffered for the fourth year on the trot in 2009, according to the latest report published by Freedom House, an American think-tank. This represents the longest continuous period of deterioration in the history of the report. The number of electoral democracies dropped from 119 to 116, the lowest figure since 1995. Six countries were downgraded: Lesotho to partly free and Bahrain, Gabon, Jordan, Kyrgyzstan and Yemen dropped into the “not free” category. Around a third of the world’s population live in countries deemed not free, although over half of these live in China. In the Middle East and North Africa 70% of countries are not free. Still, freedom was on the march in 16 countries, notably in the Balkans, where Montenegro is now considered free, and Kosovo is partly free.
இன்னம்பூரான்


 
K R A Narasiah 
1/14/10

 
கொடுமை என்னவெனில் சுதந்திர நாடுகளாகக் கருதப்ப்டும் ஜனநாயக நாடுகளிலும் மக்க்ளுக்கு உண்மையான் சுத்ந்திரம் இல்லை! ஜனநாயகம் என்று பேச்சளவில் இருந்தாலும் உண்மையில் வாரிசத்துவம் தான் நிலையாக் உள்ளது. வீணாக்காப்படும் மக்கள் செல்வம் அதிகமாகியுள்ளது (சேது சமுத்திரத் திட்டம் ஒரு மாபெறும் உதாரணம்)
எல்லா நிர்வாகங்களும் - சோஷலிஸம்முதலாளித்துவம்கலந்து கட்டிதனியார் ஏகாதிபத்தியம்மக்களாட்சிசர்வாதிகாரம்,தவறுகள் இழைக்கின்றன என்பதும்,
அவற்றில் ஆங்காங்கே எல்லாமுறைகளிலும் (சர்வாதிகாரம் தவிர) நன்முத்துக்கள் அரிதாக இருக்கின்றன என்பது தான் வரலாறு. இது மனிதனின் பலவீனம்.
மிக நன்றாகச் சொன்னீர்கள்!
நரசய்யா
_________________________________________________________________________________________________
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

அன்றொரு நாள்: மே 18: மேதாவிலாசம்




அன்றொரு நாள்: மே 18: மேதாவிலாசம்

Innamburan Innamburan Sat, May 19, 2012 at 2:16 AM


ன்றொரு நாள்: மே 18:
மேதாவிலாசம்
தீர்க்கதரிசிகள், தத்துவபோதகர்கள், நீதி நூலாசிரியர்கள், வேதாந்த சிரோன்மணிகள், சிந்தனையாளர்கள் ஆகியோருக்கு ஒரு உபத்ரவம்: அவர்களது கூற்றுக்களை, மற்றவர்கள், காலங்காலமாக, அவரவர் போக்கில் பொருள் காண்பது தான், அது. திருவள்ளுவர் படும் பாடு கண்கூடு. பல சாக்ரட்டீஸ் மேற்கோள்கள் அவர் அறியாதவை. பிளேட்டோவின் பிளேட்டுகள் திருப்பிப்போடப்படுகின்றன. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் படிக்காதவர்களின் அனர்த்தம் தாங்கமுடியவில்லை. சொன்னால் பொல்லாப்பு. போதி தர்மரை பற்றி அவரை பற்றி அறியாதவர்கள் தான் அழுத்தமாக கருத்துத் தெளிக்கிறார்கள். கபீர் தோஹாக்களுக்கு குபீர் விளக்கங்கள் வந்த வண்ணம். வள்ளலாரை எப்படியோ எல்லாம் முன் நிறுத்துகிறார்கள்! கலீல் ஜிப்ரானின் லெபனீஸ்/ஆங்கில ஆக்கங்களுக்கு அளிக்கப்படும் விளக்கங்கள் நம்மை திகைக்க வைக்கின்றன. ‘என்னை ஆசானின் பீடத்தில் அமர்த்தாதீர்கள்’ என்று சொல்லி தனக்கு அமைக்கப்பட்ட ஆதீனத்தைக் கலைத்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அனந்தகோடி சிஷ்யர்கள்.

இந்த உபத்ரவத்திலிருந்து பன்மொழிப்புலவரும், விஞ்ஞானியும், கணக்கு சாத்திர வல்லுனரும்,தத்துவ ஞானியும் அமரகாவியங்கள் படைத்த கவிஞருமான அப்து’ல் ஃபாத் உமர் இப்ன் இப்ராஹீம் கய்யாம் (11வது நூற்றாண்டு ஈரானியர் எனலாம்.) அவர்களும் தப்பவில்லை. அவர் மே, 18, 1048ல் பிறந்தவர் என்று விக்கிப்பீடியா சொன்னாலும், நான் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். அவர்கள், இவருடைய பிறந்த/இறந்த தேதிகளை நிர்ணயிக்க முயலவில்லை. இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஸர் எட்வர்ட் ஃபிட்ஸ்கெரால்ட் அவர்களின் இலக்கிய சேவை பாராட்டத்தக்கது. அதில்
Of knowledge naught remained I did not know,
Of secrets, scarcely any, high or low;
All day and night for three score and twelve years,
I pondered, just to learn that naught I know.
(Rubā‘iyyāt, Sa‘idī 1991, p. 125)

என்ற வரிகள் மிக பிரபலமானவை. அநேகர் அதற்கு மேல் போவதில்லை. எனக்கு பிடித்த வரிகள்:

Of knowledge naught remained I did not know,
Of secrets, scarcely any, high or low;
All day and night for three score and twelve years,
I pondered, just to learn that naught I know.
(Rubā‘iyyāt, Sa‘idī 1991, p. 125)

‘72 வருடங்களாக, இரவும் பகலுமாக, நான் படித்ததும், அதை பற்றி சிந்தித்ததும், மர்மங்களும், ரகசியங்களும்...ஹூம்! கற்றது கைமண் அளவு: கற்க விட்டுப்போனது கடலளவு’ (ஒரு துளி மொழியாக்கம்)
நான் இத்துடன் நிறுத்தவில்லை. விமானம் இறங்கும் நேரம் நெருங்கிவிட்டது.
தொடருதாக உத்தேசம். விட்டுப்போகக்கூடாது பாருங்கள்.
இன்னம்பூரான்
18/19/05 2012
Inline image 1

உசாத்துணை:

Geetha Sambasivam Sat, May 19, 2012 at 2:19 AM
To: vallamai@googlegroups.com
Cc: mintamil , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
அருமையான கட்டுரைக்கு ஏற்ற அருமையான படம். உசாத்துணை படிக்கணும் இனிமேல் தான்.

2012/5/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ன்றொரு நாள்: மே 18:
மேதாவிலாசம்


உசாத்துணை:
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

rajam Sat, May 19, 2012 at 2:23 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
"ருபையட் அஃப் ஒமர்கய்யாம்" எங்களுக்குக் கல்லூரிப் பாடம். படித்து மயங்கிப் போனதுண்டு.


Begin forwarded message:

From: Innamburan Innamburan <innamburan@gmail.com>
Date: May 18, 2012 6:16:03 PM PDT
To: mintamil <minTamil@googlegroups.com>,  thamizhvaasal <thamizhvaasal@googlegroups.com>,  தமிழ் சிறகுகள் <tamizhsiragugal@googlegroups.com>,  vallamai@googlegroups.com
Cc: Innamburan Innamburan <innamburan@googlemail.com>
Subject: [MinTamil] அன்றொரு நாள்: மே 18: மேதாவிலாசம்
[Quoted text hidden]
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

coral shree Sat, May 19, 2012 at 2:45 AM
To: Innamburan Innamburan
// ‘72 வருடங்களாக, இரவும் பகலுமாக, நான் படித்ததும், அதை பற்றி சிந்தித்ததும், மர்மங்களும், ரகசியங்களும்...ஹூம்! கற்றது கைமண் அளவு: கற்க விட்டுப்போனது கடலளவு’ (ஒரு துளி மொழியாக்கம்) //

அன்பின் ஐயா,

அருமையான சுவை, சுவைத்தேன் இனிமையாக.சத்தியமான வார்த்தைகள். புறப்படும் அவசரத்திலும் அழகாக அன்றொரு நாளை அளித்துவிட்டு, கடமையுணர்வையும் வெளிப்படுத்திவிட்டீர்கள். கற்க வேண்டிய பாடம் பல....

அன்புடன்
பவளா.
[Quoted text hidden]
--

                                                              
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

sk natarajan Sat, May 19, 2012 at 3:33 AM
To: vallamai@googlegroups.com
Cc: mintamil , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
தொடருங்கள் ஐயா
செல்வன் ஐயாவை மிகவும் விசாரித்ததாக சொல்லுங்கள்
உங்களின் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்
[Quoted text hidden]

Nagarajan Vadivel Sat, May 19, 2012 at 7:10 AM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
கற்றது கைமண் அளவு: கற்க விட்டுப்போனது கடலளவு’ (ஒரு துளி மொழியாக்கம்)கவிமணி தேசிய விநாயகம் அவர்களின் அற்புதமான மொழியாக்கம் கீழே
http://www.youtube.com/watch?v=Lwimqfw8E9U

நாகராசன்
2012/5/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\


-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

renuka rajasekaran Sat, May 19, 2012 at 9:56 AM
To: Innamburan Innamburan

ஆஹா! 
பொன்மொழிகளின் மேல் பொல்லா வர்ணனைகளை வான்கோழிகள் அன்றாடம் அரங்கேற்றுவதை, இத்தனை நிதர்சனமாய் விவிரிக்க எவ்வாறு முடிந்தது?

பாராட்டுக்கள்!

[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Sun, May 20, 2012 at 5:20 AM
To: renuka rajasekaran
wஅன்றி, ரேணுகா. இன்ரு விஸ்கன்ஸில்.
[Quoted text hidden]