Friday, March 1, 2013

அன்றொரு நாள்: ஜனவரி:31 தளை விலகியதும், தளை பூண்டதும்




அன்றொரு நாள்: ஜனவரி:31 தளை விலகியதும், தளை பூண்டதும்
37 messages

Innamburan Innamburan Mon, Jan 30, 2012 at 7:07 PM
To: mintamil , thamizhvaasal
அன்றொரு நாள்: ஜனவரி:31
தளை விலக்கியதும், தளை பூண்டதும்

தளை விலக்க:
அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ந்யூ யார்க் டைம்ஸ் என்றுமே, எதையும் அடக்கி வாசிக்கும். ஆனால், ஜனவரி 31,1865 அன்று சிறப்பு பதிவுடன் அமெரிக்காவின் கொடுமையான அடிமை ஒழிக்கப்பட்டதை கொண்டாடியது. அந்த தார்மீக முடிபு எளிதில் அடைந்தது அல்ல. ஒரு உள்நாட்டுப்போரே நடந்தது. அதன் காரணகர்த்தாவான அதிபர் அப்ரஹாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார். சட்டம் இயற்றுவதும் தவழ்ந்து, தவழ்ந்து, மந்த கதியில் நடந்தேறியது.
இனி அந்த இதழ் சொல்வதை கேட்போம். ‘...நமது வரலாற்றில் இது யுகாரம்பம். மக்கள் பிரதிநிதிகளும், பார்வையாளர்களும் மறக்கமுடியாத வரலாறு படைத்த தினம். மதியம் 3 மணிக்கு சபையில் நிசப்தம். ஊசி போட்டால் சப்தம் கேட்கும். இதுவோ, சபையினர் யாவரும் விரும்பியது. நீக்ரோக்களின் அடிமைத்தளையை களைய 113 வாக்குக்கள்-டிமாக்ரடிக் கட்சி; எதிர்த்து 58. பிரபலமான டெமாக்ரடிக் பிரதிநிதிகள் வாக்களித்தபோது, பலமான கைத்தட்டல். இறுதியில், அவைத்தலைவர் 116 வாக்குக்கள் ஆதரித்தும், 56 வாக்குக்கள் மட்டுமே எதிர்த்தும் அமைந்ததை அதிகார பூர்வமாக அறிவித்த போது, பார்வையாளர்களின் வானளாவிய வரவேற்பு கைத்தட்டல் கூரையை பிளந்தது. ஒரே உத்ஸாகம். யாரும் குறுக்கிடவில்லை. கரை புரண்ட மகிழ்ச்சி வெகு நேரம் நிலவியது.
தளை அணிய:
சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு டாக்ஸியில் இரவில் பயணம். சீட் பெல்ட் அணிந்து கொண்ட நான், காரோட்டியிடம் அணிந்து கொள்ள சொன்னேன். ‘அதெல்லாம் வேலைக்காவாது’ என்று அவர் ஒரு தத்துவபோதனையை உதிர்க்க, சகபயணியான என் தம்பியும், அவனுடைய அருமந்த நண்பரும் கேலிச்சிரிப்பை உதிர்த்தனர். அவர்களும் பெல்ட் அணியவில்லை. நள்ளிரவில் மாமாண்டூர் தாண்டும்போது, ஒரு குடிமகன் தெருவில் வந்தார், தள்ளாடிக்கிணு.. திடீர் ப்ரேக்! காரோட்டி தலை ‘டும்’ என்று முட்டிக்கொண்டது. பிறகு, பெல்ட்டிக்கொண்டனர், யாவரும்.
எதற்கு சொல்ல வரேன் என்றால்: ஜனவரி 31, 1983 அன்று பிரிட்டனில் முற்புற சீட் பயணிகள் கட்டாயமாக பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் வந்தது. 1991லிருந்து, பின்பக்க சீட் பயணிகளும் பெல்ட் அணியவேண்டும். வருடா வருடம் ஆயிரம் உயிர்கள் தப்பக்கூடும் என்று புள்ளி விவரங்கள் சொன்னாலும், பாதிக்கு மேல் அணிவதில்லை என்பது சர்க்காரின் புகார். நம்மூர் ஸ்கூட்டர் ஹெல்மெட் விவகாரம் போல், போலீஸில் முதலில் தாராள மனப்பான்மை இருந்தது, 15 வருடமாக. சட்டம் கொண்டு வர 11 தடவை முயன்றும் பயனில்லை. சுதந்திர நாடாச்சே! எங்கள் சுதந்திரம் பறி போகுதே என்று கூச்சல் வேறு. இதனால் வருத்தமடைந்த அமைச்சர் லிண்டா சாக்கர், ‘...தானே அனுபவித்து உணரும் வரை, பிறரின் அறிவுரையை யாரும் கேட்பதில்லை...’ என்றார். தற்காலம், பேச்சு மூச்சு இல்லாமல், எல்லாரும் சீட் பெல்ட் அணிகிறார்கள். இல்லையெனில், காரோட்டுபவருக்கு கடும் தண்டனை.
மின் தமிழில் கோயில் பராமரிப்பு, குப்பை கொட்டுவது  போன்ற சமூக ஆக்கப்பணிகள் சூடாக விவாதிக்கப்படுகின்றன. கொஞ்சம் லிண்டாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாம். சட்டம் யாதாயினும், ‘அடி உதவறமாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்.
இன்னம்பூரான்
31 01 2012
பி.கு. நான் போக்குவரத்துச்சட்டத்தை மீறி கோர்ட்டில் வாதாடிய கதை, பத்து பேராவது, சரி, அஞ்சு!. கேட்டால் தான் சொல்லப்படும்.
66_slavery_abolition_poster_gosnay.jpgseat-belts.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam Mon, Jan 30, 2012 at 8:39 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
பத்து பேராவது, சரி, அஞ்சு!. கேட்டால் தான் சொல்லப்படும். 

+1

2012/1/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி:31
தளை விலக்கியதும், தளை பூண்டதும்


பி.கு. நான் போக்குவரத்துச்சட்டத்தை மீறி கோர்ட்டில் வாதாடிய கதை, பத்து பேராவது, சரி, அஞ்சு!. கேட்டால் தான் சொல்லப்படும்.
66_slavery_abolition_poster_gosnay.jpgseat-belts.jpg

உசாத்துணை:
-

செல்வன் Mon, Jan 30, 2012 at 8:51 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/1/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ந்யூ யார்க் டைம்ஸ் என்றுமே, எதையும் அடக்கி வாசிக்கும். ஆனால், ஜனவரி 31,1865 அன்று சிறப்பு பதிவுடன் அமெரிக்காவின் கொடுமையான அடிமை ஒழிக்கப்பட்டதை கொண்டாடியது.

ஒரு சிறுவரலாற்று குறிப்பு

அடிமைதளையை ஒழித்த ஆபிரகாம் லிங்கன் ரிபப்ளிகன் கட்சி.

லிங்கனை எதிர்த்த டெமேக்ரடிக் கட்சி வேட்பாளர் ஸ்டீபன் டக்ளஸ் அடிமைதனம் இருக்கவேண்டும் என வாதாடி தேர்தலில் தோற்றார்.

உலகில் அடிமைமுறை ஒழியவேண்டும் என சொல்லி ஒரு சிவில் யுத்தத்தை துவக்கி ஜெயித்த பெருமைக்குரியவர் ரிபப்ளிகன் கட்சியின் ஆபிரகாம் லிங்கன் மட்டுமே.

--
செல்வன்

"மற்றவர்களுக்கு பிடிக்காததை பேச இருக்கும் உரிமையின் பெயரே சுதந்திரம் ஆகும்"- ஜார்ஜ் ஆர்வெல்




Innamburan Innamburan Mon, Jan 30, 2012 at 9:12 PM
To: mintamil@googlegroups.com
ஆமாம்! ஆமாம்! அந்தக்காலத்து ரிபப்ளிகனு.
[Quoted text hidden]

செல்வன் Mon, Jan 30, 2012 at 9:21 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


அந்த காலத்து ரிபப்ளிக்கன்கள் அமெரிக்காவில் அடிமைதளையை ஒழித்தார்கள்.

இந்த கால ரிபப்ளிகன்கள் (உதா: ரேகன்) உலகெங்கும் கம்யூனிச நுகத்தடியில் உழன்ற பலநாட்டு மக்களுக்கு விடுதலை அளித்தார்கள்.சுதந்திர பொருளாதார கொள்கைகள் மூலம் பலநாடுகளுக்கு (உம்: சீனா) வளமையை அளித்தார்கள்.

இத்தகைய கட்சியை ஸ்தாபித்ததற்கு லிங்கன் பெருமைபடவேண்டும்.
[Quoted text hidden]

balarajan geetha Tue, Jan 31, 2012 at 1:30 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan

அன்புள்ள இ ஐயா,

வாழ்க வளமுடன்.

நானும் வேண்டிக்கொள்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,

பாலராஜன்கீதா
= = = = = = = = =
[Quoted text hidden]

கி.காளைராசன் Tue, Jan 31, 2012 at 6:12 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா செல்வன் அவர்களுக்கு வணக்கம்

2012/1/31 செல்வன் <holyape@gmail.com>
இத்தகைய கட்சியை ஸ்தாபித்ததற்கு லிங்கன் பெருமைபடவேண்டும்.
நானும் அமெரிக்கர்களை நினைத்துப் பெருமை கொள்கிறேன்.
--
அன்பன்
கி.காளைராசன்


செல்வன் Wed, Feb 1, 2012 at 6:52 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/1/31 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>

2012/1/31 செல்வன் <holyape@gmail.com>
இத்தகைய கட்சியை ஸ்தாபித்ததற்கு லிங்கன் பெருமைபடவேண்டும்.
நானும் அமெரிக்கர்களை நினைத்துப் பெருமை கொள்கிறேன்.


மிக்க மகிழ்ச்சி ஐயா.அருமையான தேசத்தை அமெரிக்கர்கள் கட்டமைத்துள்ளனர். அதேபோன்ற அரசியல் அமைப்பும், பொருளாதார அமைப்பும் உலகநாடுகள் அனைத்துக்கும் கிட்ட ஆண்டவன் அருள் புரியவேண்டும்.
--
செல்வன்

[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Feb 1, 2012 at 1:42 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
குறைகளும் இல்லாமல் இல்லை செல்வன்;  எந்த ஒரு வேலையைச் செய்ய வேண்டி வந்தாலும் குறைந்த பக்ஷமாக நூறு டாலர் செலவு செய்ய வேண்டும்.

இப்போது எங்க பெண் வீட்டில் ஒரு பக்கத்துக் குளியலறையில் எங்கிருந்தோ தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  அதைச் சரி செய்யப் ப்ளம்பரைக் கூப்பிட்டார்கள்.  முந்தாநாள் முதலில் ஒரு ப்ளம்பர் வந்து பார்த்துவிட்டு எங்கிருந்து கசிவு என்பதைக் கண்டுபிடிக்கவே 250 டாலர் கேட்டார்.  அவரை வேண்டாம்னு அனுப்பிட்டு இன்னொருவரை அழைத்தனர். அவர் வந்து கண்டுபிடிக்க ஐம்பது டாலர் கேட்டார்.  சரினு தவறைக் கண்டு பிடித்தாகிவிட்டது.  ஆனால் அதைச் சரி செய்ய எஸ்டிமேட் ஆயிரத்து ஐநூறு டாலர்.  பாத்ரூம் கீழேத் தோண்டிக் குழாயில் கசிவு இருக்குமிடத்தைச் சரி செய்துவிட்டுப் புதுக்குழாய்கள் மாற்றிவிட்டுப் பின்னர் குளியலறைத் தரையை மறுபடி டைல்ஸ் ஒட்டிக் கார்ப்பெட்டைச் சரியாக்க வேண்டும். இதற்கான எஸ்டிமேட் தான் ஆயிரத்து ஐநூறு டாலர்.  இன்ஷூரன்ஸ் இதை டாமேஜ் கணக்கில் ஏற்க மறுத்துவிட்டது.  வேறு யாரேனும் குறைந்த கொடேஷனில் வருவாங்களானு பார்க்கிறாங்க.  ஹோம் டெப்போவும் கைவிரித்துவிட்டது.

இதே நம்ம ஊர்னா அதிகபக்ஷமாக ஐநூறு ரூபாய் தான் ஆகும்.  அதோட சமையலறையில் சமைத்தால் என்னதான் எக்ஸாஸ்ட் ஃபான் போட்டாலும்/ Air purifier வைத்தாலும் சிரமமாகவே இருக்கிறது.  என் போன்ற chronic asthma patientக்கு இதைவிடக் கொடுமை வேறெதுவும் இல்லை! இதுவும் ஒருவகையில் pollution .  வீட்டு வாசலில் புயலில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்த 250 டாலர்கள்.  அதோடு சொந்த வீடு இருந்தால் வரியும் அதிகம்.  தீட்டிடறாங்க. 

என்னதான் சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊரு போல வருமா?  
[Quoted text hidden]
[Quoted text hidden]

செல்வன் Wed, Feb 1, 2012 at 4:15 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/1 Geetha Sambasivam
குறைகளும் இல்லாமல் இல்லை செல்வன்;  எந்த ஒரு வேலையைச் செய்ய வேண்டி வந்தாலும் குறைந்த பக்ஷமாக நூறு டாலர் செலவு செய்ய வேண்டும்.இதே நம்ம ஊர்னா அதிகபக்ஷமாக ஐநூறு ரூபாய் தான் ஆகும்.  


இந்தியாவில் வீட்டில் வேலை செய்ய வரும் பிளம்பர் நூறு ரூபாய் கேட்டால் அதிகம் என்போமா?அந்த மாதிரிதான் இங்கே நூறுடாலர்.நீங்க டாலரை இன்னும் ரூபாயால் பெருக்கி ஐயாயிரம் ரூபாயா என அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறீர்கள் போல:-)

மத்தபடி தொழிலாளிக்கு குறைந்தகூலி கொடுப்பதால் நமக்கு அவர்களின் அருமை தெரிவதில்லை. சவரகடைக்கு போய் சேவிங் செய்ய சொல்கிறோம். நாம் தின்ற தட்டை கூட கழுவாமல் பர்சனல் வேலையை செய்ய வேலைகாரர்களை வைத்துகொள்கிறோம்.காரணம் நூறு ரூபாய் கொடுத்தால் ஆள்கிடைக்கும் என்ற அலட்சியம்தான்.இந்தியாவில் டிச்சு அடைப்பை எடுப்பவரையும் அமெரிக்காவில் எடுப்பவரையும் ஒப்பிட்டு பாருங்கள்....நியூயார்க்கில் டிச்சு அடைப்பை எடுப்பவருக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம்..ஒரு சாப்ட்வேர் நிபுணர் வாங்குவதை விட அதிக சம்பளம் இது.

images?q=tbn:ANd9GcSeGCZs-Kia6-PrtZqoixMeI4mdtnT79m2-XHvYEloYL4zbe1y1alUDyqSg

sewer-worker-robert-nickelsberg-getty-images.jpg

முடிந்தவரை வீட்டு வேலைகளை நாமே செய்துகொள்ல வேண்டும், சின்ன சின்ன ரிப்பேர் வேலைகளை நாமே செய்யவேண்டும்.தொழிலாளிக்கு மரியாதையும் அவர் உழைப்புக்கேற்ற ஊதியமும் வழங்கவேண்டும்.

 
[Quoted text hidden]

Suresh sundaresanWed, Feb 1, 2012 at 4:44 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இன்னம்புரன் ஐயா

வணக்கம்   நன்றகா இருந்தது
உங்கள் நண்பன் (இன்னம்புரன் நண்பன் )



mayakunar Wed, Feb 1, 2012 at 3:05 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்

" பி.கு. நான் போக்குவரத்துச்சட்டத்தை மீறி கோர்ட்டில் வாதாடிய கதை,
பத்து
 பேராவது, சரி, அஞ்சு!. கேட்டால் தான் சொல்லப்படும்."
இ சார் சொல்லுங்கள் .கேட்கிறேன் .நானே ஐந்து முறை கேட்டால் சொல்வீர்களா ?
கோபாலன்
:
>
5...
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Feb 1, 2012 at 6:00 PM
To: mintamil@googlegroups.com
கோபாலா! கோபாலா! ஒரு தடவை கோபாலன் கேட்டாலும் எல்லா சுவர்களும் எதிரொலிக்கின்றன, என்றாள், யசோதை. டாக்டர் சார், நீங்க கேட்டதும் சொல்லிட்றேன். இங்கு சொன்னா சரிப்படுமா? 'பூம் பூம்' ல் சொல்லிப்போடவா?


2012/2/1 mayakunar

" பி.கு. நான் போக்குவரத்துச்சட்டத்தை மீறி கோர்ட்டில் வாதாடிய கதை,
பத்து
 பேராவது, சரி, அஞ்சு!. கேட்டால் தான் சொல்லப்படும்."
இ சார் சொல்லுங்கள் .கேட்கிறேன் .நானே ஐந்து முறை கேட்டால் சொல்வீர்களா ?
கோபாலன்
:

கி.காளைராசன்Wed, Feb 1, 2012 at 8:07 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா செல்வன் அவர்களுக்கு வணக்கம்.

2012/2/1 செல்வன் <holyape@gmail.com>
மிக்க மகிழ்ச்சி ஐயா.அருமையான தேசத்தை அமெரிக்கர்கள் கட்டமைத்துள்ளனர். அதேபோன்ற அரசியல் அமைப்பும், பொருளாதார அமைப்பும் உலகநாடுகள் அனைத்துக்கும் கிட்ட
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் உழைக்க வேண்டும்.
எதிர்கட்சிகள் அரசியல்வாதிகள் ஒத்துழைக்க வேண்டும்.

அன்பன்
கி.காளைராசன்

[Quoted text hidden]

செல்வன் Wed, Feb 1, 2012 at 8:18 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/1 கி.காளைராசன் 
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் உழைக்க வேண்டும்.
எதிர்கட்சிகள் அரசியல்வாதிகள் ஒத்துழைக்க வேண்டும்.


அவர்கள் எதையும் செய்ய போவதில்லை ஐயா.

மக்கள் அவர்களை செய்ய வைக்க வேண்டும். அரசின் சைஸை குறைக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.அரசின் சைஸும், அதிகாரமும் குறைந்தால் அதன்பின் மத்தியில் எந்த கட்சி ஆள்கிறது என்பது பிரச்சனையே இல்லை.

ரிக் பெர்ரி அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான பிரைமரியில் போட்டியிட்டபோது கீழ்கண்ட வாக்குறுதியை அளித்தார்.

"நான் ஜெயித்தால் வாஷிங்டனில் உள்ள அரசை உங்கள் தினசரி வாழ்வை பொறுத்தவரை செயலற்றதாக ஆக்குவேன்" என்றார்.

அதுபோல டில்லியில், சென்னையில் உள்ள அரசுகளின் அதிகாரத்தை குறைத்து அவை நம்மை பொறுத்தவரை இருப்பதும் ஒன்று, இல்லாததும் ஒன்று என்ர நிலைக்கு கொண்டுவரவேண்டும். எதற்கு எடுத்தாலும் கலெக்டர் அலுவலகத்துக்கு காவடி எடுப்பதும், மனு கொடுப்பதும், முதல்மந்திரிக்கு லெட்டர் போடுவதுமான சம்பிரதாயங்கள் ஒழியவேண்டும்.அரசியல்வாதிகளிடம் இருந்து அதிகாரத்தை பறித்து மக்களிடம் அளிக்கவேண்டும்.

இதற்காக தனிமனித அளவில் நம்மால் செய்யகூடியது என்ன?முதலில் இதுகுறித்த ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இணையத்தில் செய்ய முடிந்தது அதுதான்.
--
செல்வன்


Innamburan Innamburan Wed, Feb 1, 2012 at 9:06 PM
To: mintamil@googlegroups.com
செல்வனும், காளைராஜனும் சில நுட்பங்களை கவனிக்கவேண்டும். சமீபத்தில் நடந்த ஒரு சர்வேயில் ,அமெரிக்க அரசு ஊழியர்களின் தொகையில் ஒரு பின்னமே இந்தியாவில் என்றும், உலகளவில் இந்திய அரசு ஊழியர்கள் தான் விகிதாச்சாரப்படி குறைவும், சம்பளம் குறைவும் என்று, வித்தியாசங்களை சமன் படுத்தி, ஆய்வு கூறுகிறது. சில துறைகளில் ஊழியர்கள் குறைவு. நேரம் கிடைத்தபோது வல்லமையில் விவரமாக எழுதுகிறேன். சுருங்கச்சொல்லின்:
1. ஊழியர்கள் வேலையை அமைச்சர்களும், எம் எல் ஏக்களும் செய்கிறார்கள்; அதில் தன்னலம் தலைமை வகிக்கிறது. உதாரணம்: ஸ்கூல் டீச்சரை மாற்றுவது.
2. அமைச்சர்கள் வேலையை  அதிகாரிகள் செய்கிறார்கள்: உதாரணம்: பாலிஸி/கொள்கை. அதிகார செருக்கு ஏறுகிறது.
1 & 2: காரண கர்த்தா: காங்கிரஸ் ஆட்சி.
3. மக்கள் அரசை அப்பன் & ஆத்தாளாக நினைக்கிறது: உதாரணம்: துப்புறவு.
4. ஆளும் கட்சி, எதிர்கட்சி எல்லாம் மாயாஜாலம். காமராஜர் சொன்ன மாதிரி தான்.
5. அரசு ஊழியர்கள், மொத்தத்தில் அதிகம் இல்லை. ஆனால், இங்கும் அங்கும் தாறுமாறு. 
6. அதிகாரிகள் வீட்டில் கொத்தடிமைகள் ஒழிய வேண்டும்.
காளைராஜன், 'அரசியல்வாதிகளிடம் இருந்து அதிகாரத்தை பறித்து மக்களிடம் அளிக்கவேண்டும்.' இதை விளக்கவேண்டும். எப்படி என்று சொல்லவேண்டும். 
இன்னம்பூரான்
2012/2/1 செல்வன் 


2012/2/1 கி.காளைராசன்



செல்வன் Wed, Feb 1, 2012 at 9:35 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>
காளைராஜன், 'அரசியல்வாதிகளிடம் இருந்து அதிகாரத்தை பறித்து மக்களிடம் அளிக்கவேண்டும்.' இதை விளக்கவேண்டும். எப்படி என்று சொல்லவேண்டும். 

இதை எழுதியது நான் தான். அதனால் நானே விளக்குகிறேன்.

அரசிடம் உள்ள அதிகாரம் முழுக்க மக்களிடம் பறிக்கபட்டதே. ஆக அரசின் அதிகாரம் குறைய, குறைய மக்களின் அதிகாரம் அதிகரிக்கும்.

அரசின் அதிகாரத்தை குறைப்பது எப்படி?

வழிமுறை 1: தனியார் மயம். தனியார் என்பது மக்கள் தான். ஒரு தொழிலை நடத்த மக்களுக்கு உரிமை இல்லை என சொல்லி அந்த தொழிலை அரசு நடத்தும்போது அதிகாரமும், பணமும் மக்களிடம் இருந்து அரசுக்கு சென்று சேர்கிறது.அரசிடம் இருந்து அந்த அதிகாரத்தையும், செல்வத்தையும் பிடுங்கி மக்களுக்கு அளிக்கும் கருவியே தனியார்மயம்...இதை தனியார்மயம் என்பதை விட மக்கள்மயமாக்கல் என சொல்வதே பொருந்தும்.

உதாரணமாக விவசாயிகள் பாரம்பரியமாக கள் இறக்கி விற்று வந்தார்கள். ஆயிரமாயிரம் ஆன்டுகளாக விவசாய பெருங்குடி மக்களிடம் இருந்த இந்த உரிமையை பிடுங்கிகொண்டு அரசு மது விற்பனையில் ஏகபோகம் செலுத்துகிறது.விவசாயிக்கு எலும்புதுண்டாக இலவச மின்சாரத்தையும், உர மானியத்தையும் கொடுக்கிறது.மது விற்பனை, உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றுஇல் இருந்து அரசை அகற்றி மக்களை சுதந்திரமாக கள் இறக்க, லைன்சென்ஸுடன் மது உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய அனுமதித்தால் பல லட்சம் விவசாயிகள் செல்வந்தர்கள் ஆவார்கள்.அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட அதிகாரம் அவர்களை வந்தடையும்.

இது ஒரு உதாரணம் தான்.இன்னும் நிரைய எழுதமுடியும்.
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Feb 2, 2012 at 5:30 AM
To: mintamil@googlegroups.com
மது விற்பனை சரியான உதாரணம். அணு ச்கதி மின்சாரம் அப்படி இல்லை. தனியார் துறை லேசுப்பட்டது இல்லை. கை பேசி கட்டணங்களில் கொள்ளை.தற்காலம் பொருளியல் ஆய்வுகளில் ஸ்டேட் கேபிடலிசம் என்று சிந்தனைகள் எழுகின்றன. இதுவும் வேண்டும்.அதுவும் வேண்டும். எதுவும் கட்டுப்பாடுடன் வேண்டும். பிடுங்குவது என்பது பூனைக்கு மணி கட்டுவது போல்.
இன்னம்பூரான்
2012/2/1 செல்வன் 


2012/2/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>
காளைராஜன், 'அரசியல்வாதிகளிடம் இருந்து அதிகாரத்தை பறித்து மக்களிடம் அளிக்கவேண்டும்.' இதை விளக்கவேண்டும். எப்படி என்று சொல்லவேண்டும். 


செல்வன் Thu, Feb 2, 2012 at 8:31 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>
தனியார் துறை லேசுப்பட்டது இல்லை. கை பேசி கட்டணங்களில் கொள்ளை.தற்காலம் பொருளியல் ஆய்வுகளில் ஸ்டேட் கேபிடலிசம் என்று சிந்தனைகள் எழுகின்றன. இதுவும் வேண்டும்.அதுவும் வேண்டும். எதுவும் கட்டுப்பாடுடன் வேண்டும். பிடுங்குவது என்பது பூனைக்கு மணி கட்டுவது போல்.

உலகிலேயே செல்போன் கட்டணங்கள் குறைவாக இருக்கும் நாடு இந்தியாதான்.

ஸ்டேட் கேபிடலிசம் என்பது ஜனநாயக நாடுகளில் காணகிடைக்காத சர்வாதிகார நாடுகளில் மட்டுமே கானகூடியது. சர்வாதிகாரிகளின் சோஷியல் எஞ்சினியரிங்குக்கு பணம் கலெக்ட் செய்து தரும் கான்செப்ட்.

சர்வாதிகாரிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கபடாத ஆட்சியாளர்களும் கொண்டு வரும் எந்த கான்செப்டும் ஏற்ககூடியதல்ல.
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Feb 2, 2012 at 9:04 AM
To: mintamil@googlegroups.com
தலைப்பிலிருந்தும், இழையின் தொடக்கத்திலிருந்தும் விலகி போகிறது, இழை.தலைப்பின் பின்னணி.

1. சமுதாயத்தின் அவலமான தளையை களைந்தது அரசு. அடிமைக்கொடுமையின் தூண் தனியார் துறை. சமுதாயத்தின் அசட்டையை, தளை பூட்டியது, அரசின் சட்டம். தலைப்பு அதை தான் கூறுகிறது.
2. இந்தியாவின் கைப்பேசி கட்டணம்/ அடாவடி ஒரு கதையை நினைவூட்டுகிறது: 'உன் நாலு பிள்ளைகளில் யார் நல்ல பையன்? கூரை மேல் தீவட்டி சுழற்றுகிறானே, அவன் தான். 
இன்னம்பூரான்
[Quoted text hidden]

செல்வன்Thu, Feb 2, 2012 at 9:50 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/2 Innamburan Innamburan <innamburan@gmail.com>
1. சமுதாயத்தின் அவலமான தளையை களைந்தது அரசு. அடிமைக்கொடுமையின் தூண் தனியார் துறை. சமுதாயத்தின் அசட்டையை, தளை பூட்டியது, அரசின் சட்டம். தலைப்பு அதை தான் கூறுகிறது.

ஒரு அரசு அடிமைமுறையை கொண்டுவந்தது. பின்னாளைய அரசு அதை அகற்றியது.

2. இந்தியாவின் கைப்பேசி கட்டணம்/ அடாவடி ஒரு கதையை நினைவூட்டுகிறது: 'உன் நாலு பிள்ளைகளில் யார் நல்ல பையன்? கூரை மேல் தீவட்டி சுழற்றுகிறானே, அவன் தான்.
கண்ணல் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்

உலகிலேயே செல்போன் கட்டணம் இந்தியாவில் தான் குறைவு.ஆக செல்போன் கொள்ளை என்பது மெய் அல்ல:-)
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Feb 2, 2012 at 11:55 AM
To: mintamil@googlegroups.com
இன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பை கவனிக்கவும். 


2012/2/2 செல்வன் 
[Quoted text hidden]

செல்வன் Thu, Feb 2, 2012 at 8:46 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/2 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பை கவனிக்கவும். 

அ.ராசா கொடுத்த அனைத்து லைசென்ஸுகளும் ரத்து.

யார் இந்த அ.ராசா?மந்திரி.

ஆக மந்திரிகளுக்கு லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரம் இருக்க கூடாது என்கிறது கோர்ட்டு.

ஐ அக்ரி
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Feb 2, 2012 at 9:16 PM
To: mintamil@googlegroups.com
அப்படிச்சொல்லவில்லை, செல்வா!  நீங்கள் தற்கால ரிபப்ளிகன்... சரி வேண்டாம்.! முழு ஜட்ஜ்மெண்டும்  கையில் இருக்கிறது. அனுப்பவா? அனுமாருக்கு வால் இருந்தால், ராமனுக்கும் இருக்கணுமா? என்ன?
இன்னம்பூரான்
2012/2/2 செல்வன் 


2012/2/2 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பை கவனிக்கவும். 

அ.ராசா கொடுத்த அனைத்து லைசென்ஸுகளும் ரத்து.

யார் இந்த அ.ராசா?மந்திரி.

ஆக மந்திரிகளுக்கு லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரம் இருக்க கூடாது என்கிறது கோர்ட்டு.

ஐ அக்ரி

--
செல்வன்

செல்வன்Thu, Feb 2, 2012 at 9:48 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நான் பத்திரிக்கையில் படித்தேன் இ சார்..ஸ்பெக்ட்ரமை எப்படி ஏலம் விடுவது என்பதுக்கு எல்லாம் மண்டையை குழப்பிக்கவே வேண்டியதில்லை.யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு விற்றால் முடிந்தது விஷயம். சந்தை பொருளாதாரம் அத்தனை எளிமையானது. இதை சிக்கலாக்கி, ஊழல் செய்ய அரசும், மந்திரியும் தேவைபடுகிறார்கள்.

லஞ்சல் கொடுத்தால் தான் லைசென்ஸ் என்ற விதி இருந்தால் லஞ்சம் கொடுப்பவர்கள் தான் தொழில் செய்ய முடியும்..செத்த பிணத்தை புதைக்கவே லஞ்சம் தரவேண்டி இருக்கும் நாட்டில் லஞ்சம் கொடுக்கிறார்கள் என தொழிலதிபர்கள் மேல் குறைகூறூவது மூச்சு விடுகிறார்கள் என மனிதர்கள் மேல் குறைகூறுவது மாதிரிதான்.நேரடியான ஏலத்தில் நேர்மையாக் ஸ்பெக்ட்ரத்தை விற்றால் அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு ஏலம் எடுக்கிறார்கள்.லஞ்சம் தர அவர்களுக்கு என்ன ஆசையா?

2012/2/2 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Innamburan Innamburan Fri, Feb 3, 2012 at 6:41 AM
To: mintamil@googlegroups.com

லஞ்சல் கொடுத்தால் தான் லைசென்ஸ் என்ற விதி இருந்தால்>> அது அரசு அல்ல. பேயரசு. 
நீதி மன்றம் சொன்னது நீங்கள் சொன்னமாதிரி இருப்பதாக, ஒரு இதழைலும் போடவில்லை, செல்வன்.
இன்னம்பூரான்
2012/2/2 செல்வன் <holyape@gmail.com>
நான் பத்திரிக்கையில் படித்தேன் இ சார்..

செல்வன் Fri, Feb 3, 2012 at 6:54 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
லஞ்சல் கொடுத்தால் தான் லைசென்ஸ் என்ற விதி இருந்தால்>> அது அரசு அல்ல. பேயரசு. 

 
அரசிடம் அதிகாரங்கள் குவிய, குவிய அது பேயரசாக மாறுகிறது. பவர் கரப்ட்ஸ், அப்சல்யூட் பவர் கரப்ட்ஸ் என சும்மாவா சொன்னார்கள்?

ஆர்வெல்லின் 1984ல் அதிகாரத்தை பற்றி ஒப்ரையன் கூறுவதாவது

The Party seeks power entirely for its own sake. We are not interested in the good of others; we are interested solely in power. Not wealth or luxury or long life or happiness: only power, pure power. What pure power means you will understand presently. We are different from all the oligarchies of the past, in that we know what we are doing. All the others, even those who resembled ourselves, were cowards and hypocrites. The German Nazis and the Russian Communists came very close to us in their methods, but they never had the courage to recognize their own motives. They pretended, perhaps they even believed, that they had seized power unwillingly and for a limited time, and that just round the corner there lay a paradise where human beings would be free and equal. We are not like that. We know that no one ever seizes power with the intention of relinquishing it. Power is not a means, it is an end. One does not establish a dictatorship in order to safeguard a revolution; one makes the revolution in order to establish the dictatorship. The object of persecution is persecution. The object of torture is torture. The object of power is power. Now do you begin to understand me?’ 
[Quoted text hidden]

செல்வன் Fri, Feb 3, 2012 at 6:56 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நீதி மன்றம் சொன்னது நீங்கள் சொன்னமாதிரி இருப்பதாக, ஒரு இதழைலும் போடவில்லை, செல்வன்.

நாம் நேரில் சந்திக்கும்போது நீதிதுறை குறித்து பேசலாம் ஐயா.
[Quoted text hidden]

Nagarajan Vadivel Fri, Feb 3, 2012 at 6:59 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
போனாப்போகுது இந்தியவைக் கண்டுக்காதீங்கங்ணா.
இங்கே அது லஞ்சம் இல்லீங்கண்ணா. ஆசைப்பட்டா மந்திரிக்குப் பணம் கொகுக்குறதும் மந்திரி ஆசைப்பட்டா வேண்டப்பட்டவங்களுக்கு லைசன்ஸ் குடுக்கறதும் காலம் காலமா சாம பேத தான தண்டத்துக்குள்ளே அடங்கீடுதுங்க்கண்ணா. அந்தக்காலத்துல ஒரு டின் பழனிப் பஞ்சாமிர்தத்தைக் குடுத்த எடத்துல இப்ப ஒரு கண்டெய்னரல கரன்ஸி குடுக்கவேண்டியிருக்கு
லஞ்சம் கொடுக்காம ஏலத்தில வாழுற சுதந்திரப் பொருளாதார பூமியில் கார்ப்பரேட் ஃப்ராடை கார்ப்பரேட் சர்வைவல் என்று சொல்லி அடாவடி செய்த கும்பினிகளிப்பற்றி ஒங்களுக்குத் தெரியாததாங்ணா
நான் சென்ற நாடுகளில் எல்லாம் லஞ்சத்தைச் சந்தித்திருக்கிறேன்.  சில நாடுகளில் லஞ்சம் குடுக்க்கலேன்னா எதுவுமே நட்சக்காதுங்ணா இந்தியாவில் லஞ்சம் குடுக்கலேன்னா லசன்ஸ் கிடைக்கும் ஆனா மெதுவாக் கிடைக்கும்.  லஞ்சம் கொடுத்தால் வேகமாக நடக்கும்
இந்தியாவில் லஞ்சம் கொடுக்கக்கூடாது என்பது விதி. லஞ்சம் கொடுப்பது விதிமீறல்
பல நாடுகளில் பலருக்கும் லஞ்சம் கொடுத்த அனுபவத்ல சொல்றேங்க்ணா இந்தியா இருக்குறவைக்கும் இந்த லஞ்சமும் இருக்குமுங்கங்ணா
நாகராசன்

2012/2/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Innamburan Innamburan Fri, Feb 3, 2012 at 7:22 AM
To: mintamil@googlegroups.com
அவ்வாறே செய்வோம், செல்வன். முடிந்தால், இந்த நாகராஜனையும் வம்புக்கு இழுப்போம். 
இன்னம்பூரான்
2012/2/3 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>
'... அந்தக்காலத்துல ஒரு டின் பழனிப் பஞ்சாமிர்தத்தைக் குடுத்த எடத்துல இப்ப ஒரு கண்டெய்னரல கரன்ஸி குடுக்கவேண்டியிருக்கு...'
 


செல்வன் Fri, Feb 3, 2012 at 7:57 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அவ்வாறே செய்வோம், செல்வன். முடிந்தால், இந்த நாகராஜனையும் வம்புக்கு இழுப்போம். 

நிச்சயமா...தங்கமணி இந்தியா போயாச்சு.வர இன்னும் ஆறு மாசம் ஆகலாம். தனிகாட்டு ராஜா என்பதால் நீங்கள் எப்ப வந்தாலும் செயின்ட் லூயிஸுக்கு அந்த வார இறுதியே வந்துடுவேன்:-)
--

Innamburan Innamburan Fri, Feb 3, 2012 at 8:00 AM
To: mintamil@googlegroups.com
நல்லது. ஆர்ட்டிச்சோக் மரக்கறி உணவு?
[Quoted text hidden]

செல்வன் Fri, Feb 3, 2012 at 8:04 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/2/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நல்லது. ஆர்ட்டிச்சோக் மரக்கறி உணவு?

நானே இப்ப சமைச்சு பழகிட்டு இருக்கேன்.உங்களை வெச்சு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிடலாம்:-)
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Feb 3, 2012 at 8:05 AM
To: mintamil@googlegroups.com
ததாஸ்து.

2012/2/3 செல்வன் <holyape@gmail.com>
[Quoted text hidden]

mayakunar Fri, Feb 3, 2012 at 12:37 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
இ சார்
எங்கு போட்டாலும் உங்கள் பெயரை பார்த்தவுடன் படித்துவிடுவேன் . நன்றி.
கோபாலன் .

On Feb 1, 11:00 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> கோபாலா! கோபாலா! ஒரு தடவை கோபாலன் கேட்டாலும் எல்லா சுவர்களும்
> எதிரொலிக்கின்றன, என்றாள், யசோதை. டாக்டர் சார், நீங்க கேட்டதும்
> சொல்லிட்றேன். இங்கு சொன்னா சரிப்படுமா? 'பூம் பூம்' ல் சொல்லிப்போடவா?
> இ



[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Feb 3, 2012 at 1:52 PM
To: mintamil@googlegroups.com
பூம் பூம் இல் விரைவில் போடுகிறேன். நீங்கள் என் பதிவுகள படிப்பது கேட்டு அகமகிழ்ந்தேன். புறமகிழ்வது பற்றி, கேட்டால் சொல்லுகிறேன், பூம், பூமில்.
இன்னம்பூரான்
[Quoted text hidden]

Nagarajan Vadivel Fri, Feb 3, 2012 at 4:48 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
There is no level playing field
உலக போலீஸ்காரன் அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து சென்னைவாழ் த(ன்)னிப் பாம்பையா அடிப்பது
யாரடிச்சுச் சொல்லுவார் அவரிஷ்டம் நாரதரே
நீங்கள் எப்ப வந்தாலும் செயின்ட் லூயிஸுக்கு அந்த வார இறுதியே வந்துடுவேன்:-)
http://www.youtube.com/watch?v=cRXp8mAQ_wI
பூம் பூமும் ஆவ்சமும் என ரெண்டுபேர் உலகத்தின் மறுபாதியில் கூடி செய்யக்கூடிய வேலையா இது
Nagarajan
2012/2/3 செல்வன் <holyape@gmail.com>
[Quoted text hidden]
[Quoted text hidden]

No comments:

Post a Comment