Thursday, March 17, 2016

இன்னம்பூரான் பக்கம்: IV:2 சற்றே இளைப்பாற... [2]

இன்னம்பூரான் பக்கம்: IV:2
சற்றே இளைப்பாற... [2]


‘மொழிப்பிரச்னைகளில் ஒன்று: கலவாமை. மொழி தீர்வுகளில் ஒன்று: கலவை.’ என்று யாம் மொழிந்ததற்கு ஆதரவு கிட்டியதை ஒட்டி மனமகிழ்ந்தோம். சில சொற்களில் மொழி குழைவதைக் கண்கூடாக காணலாம். நேற்றைய நாளிதழ் ஒன்றில் கொட்டைக் கொட்டையான முதல்பக்க செய்தி அரங்கத்தில், ‘பம்மினாரே’ என்ற சொல் தலைமை தாங்கியது. சொல்லாக்கம் செவிக்கு ‘பம்மி, பம்மி’, ‘பம்ம/பம்ம/ பமரினா/பமரினா/பம்ம/பம்ம’ என்றெல்லாம் பாலபருவத்து தாளவாத்திய கச்சேரி நிகழ்த்தினாலும், இடம்,பொருள், ஏவல் புரிய நேரமாச்சுது, ஐயா!

தேர்தல் நெருங்க, நெருங்க, தேர்தல் மேலாண்மை செல்வபயணங்களை கழுகுப்பார்வையில் கண்ணோட்டம் செய்வதாலும், சித்திரப்பாவைகளை திரைமறைவில் கம்மலில்லா பொம்மலாட்டம் ஆடவைத்ததாலும், மேலாவிலிருப்போர் காலணா காசு செலவு செய்ய சுணங்குவதாலும், இலவசமும் கலசங்களை நிரப்புவதாலும், ருசி கண்ட வாக்காள பெருமக்கள், ‘குக்கராசை, வெள்ளி சிலம்பராசை, நோட்டாசை, (கரன்சி நோட்டாசை), துட்டாசை ஆகப்பட்ட ஆனானப்பட்ட ஆசைகளை உரமிட்டு வளர்த்ததாலும், உள்ளூர் அரசியல் தலைவர்கள் ஊரை விட்டு ஓடி ஒளிந்து கொண்டார்களாம். அதை அவ்விதழ் ‘பம்மினார்கள்’ என்றது.
அகராதி சொல்லும் பொருள்: பம்முவது: மேகம்மூட்டம்போடுதல்; செறிதல்; மறைதல்; மூடுதல்; ஒலித்தல்; நூலோட்டுதல்; பதுங்குதல்.

1842 ம் வருட இலங்கை தமிழகராதி: செம்முதல், பொருத்தி கட்டிசை,மந்தாரம், மந்திப்பு, மட்டிசை, மூடுதல் என்ற வகையில் பொருள் கூறுகிறது.

ஆகமொத்தம், காசு பரிவர்த்தனை குறையுமாம்!

குறையட்டுமே.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

களைப்பாறுவுமே, ஐயகோ!
சென்னை 3500
திருநெல்வேலி 1980
மதுரை 1300
கன்னியாகுமரி 748
கோவை 815
சேலம் 700
காஞ்சிபுரம் 416
விழுப்புரம் 475
விருதுநகர் 655
தூத்துக்குடி 605
தொம்தொம் 17,350




Tuesday, March 15, 2016

சற்றே இளைப்பாற... [1] இன்னம்பூரான் பக்கம்: IV:1

இன்னம்பூரான் பக்கம்: IV:1


சற்றே இளைப்பாற... [1]

மொழிப்பிரச்னைகளில் ஒன்று: கலவாமை. மொழி தீர்வுகளில் ஒன்று: கலவை. கட்டபொம்மன் நாட்டுப்பாடலில் டீ பார்ட்டியும், சோல்ஜர்களும் வருகிறார்கள். இது என்ன ‘தமாஷ்’ இழையா என்று ஒரு.அ. சபாஷிக்கிறார். சங்கதமும் சரஸமாக வந்து சங்கடப்படுத்துகிறது. 

ஓபன் என்ற இதழில்  12 04 2014 அன்று ஸுனந்தா தத்தா ராய் அவர்கள் ‘எல்லாம் சாதாரணம் தான் [ Very Humdrum, Sir] என்று பொருள்பட எழுதியதின் ஒரு பகுதி:

‘C Rajagopalachari shared my reservation about English-language newspapers, albeit for altogether different reasons. When the first edition of The Indian Express appeared on 5 September 1932, among the goodwill messages was one from Rajaji who wrote with his customary asperity: ‘If you had asked me for advice, I should have warned you against now putting money in the English language.’ He warned that the English readership was old-fashioned, timid and indifferent to public issues. The future belonged to the masses ‘and this means that the educational and news service must be in Tamil inside our own province and in Hindi outside.’ 

Since Rajaji himself wrote superbly lucid English, he had no inkling of the social aspirations that prompt ordinary folk to say ‘palate’ instead of tashri or rakabi.

விஷயம் இது தான். இந்தியாவில் காலூன்றிய வெள்ளைக்கார்ங்க இரண்டு பேர் ஒரு தட்டை பார்த்து இது ‘தஷ்ரியா?’ இல்லை ‘ரகபியா’ என்று விவாதம் செய்தார்கள். டவாலியோ கிழவன். அவனை கேட்க, அவர், ‘ஹுஜூர்! நாங்கள் இதை பளட் (ப்ளேட்) என்போம் என்று ஒரு போடு போட்டாராம்! நீங்கள் தமிழில் ஒரு போடு போடுங்க, ஐயாமாரே! அம்மாமாரே!
-#-
சித்திரத்துக்கு நன்றி:

Sunday, March 13, 2016

III:3: இன்னம்பூரான் பக்கம்: III:3இந்திய தணிக்கைத்துறையும், நானும்[3] ஆட்டைத்தூக்கி…!


III:3: 
இன்னம்பூரான் பக்கம்: III:3
Monday, March 14, 2016, 5:31
இந்திய தணிக்கைத்துறையும், நானும்[3]
ஆட்டைத்தூக்கி…!
இன்னம்பூரான்
மார்ச் 13, 2016

தணிக்கைத்துறை சகலகலாவல்லவனாக இருக்கமுடியாது. 
ஒரு நாள் கல்லூரி ஆடிட்; 
அடுத்த நாள் நீர் பாசனம்; 
அடுத்த நாள் ஆசுபத்திரி;
அடுத்த நாள் ராணுவ தளவாடங்கள். 

எல்லாம் வேஸ்ட் சார்! இது காமன் எரிந்த கட்சி. 

சார்! கணக்கு வழக்குப் பார்ப்பவனுக்கு நிர்வாகத்தை பற்றி என்ன தெரியும்? ரோடு போடமுடியுமா? பதிலடி கொடுப்போம் இல்லை! இது ரதியும் எரிந்த கட்சி!

தணிக்கை செய்யப்பட்ட துறையுடன் ஆலோசனை செய்து, ஆடிட் திட்டமிடப்படுகிறது. அந்த துறையின் பதிலும் உள்ளடக்கம். நாங்கள் உள்ளதை, உங்கள் ஆவணங்களை ஆய்வு செய்து, சொல்கிறோம். எங்கள் அறிக்கையை, அக்கு வேறு, ஆணி வேறாக அலச, சட்டசபையின் பொது கணக்கு கமிட்டி இருக்கிறது. இது காமன் எரியாத கட்சி.

ஒரு பல்கலை கழகத்தின் நூலகம் சிதறி கிடைந்தது. நூல் வாங்க அளித்த பணத்தில் ஹாஸ்டலுக்கு அரிசி வாங்கினார்கள்; பாசனத்துக்கு சுழல்முறையில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அது தவறினால், அநீதி நிகழும். ஒரு ஆசுபத்திரியில் செத்தவங்களுக்கு சோறு போட்டதாக கணக்கு எழுதினார்கள். போஃபோர்ஸ் பீரங்கி தெரிந்த கதை. கணக்கு வழக்குப் பார்க்கிறவன், தோட்டாவை காணவில்லையே பெட்டியில். நமது சிப்பாய் எதிராளியை தாக்கமுடியாமல் சுடப்படுவானே என்று அங்கலாய்த்தால், அதில் என்ன தவறு?

தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது. வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும். தணிக்கைத்துறையின் பயிற்சிக்கூடம் 1955 வரை சென்னையில் இருந்தது. பின்னர் சிம்லாவில் அங்கு தான் எங்களுக்கு அக்னிப்பரிக்ஷை.

ஒரு அனுபவம். நான் இராணுவத்துறையில் பணிபுரிந்த போது, பொதுகணக்குத்துறையில் ஆடிட்டுக்கு எதிரணியில் பணி. உரிய நேரத்தில் முடிவு எடுக்காததால் பீர் விலை ஏறிவிட்டது. இத்தனை நஷ்டம் என்று ஆடிட் புகார். நஷ்டமில்லை. விலையில் கூட்டிவிட்டோம் என்று பதில் அளித்தார், ஹரீஷ் ஸரீன் ஐ.சி.எஸ். ஆடிட்டர் ஜெனெரல் ரங்கநாதனும் ஐ.சி.எஸ். ஆபீஸுக்கு வந்த பின் அந்த பதிலில் உள்ள தவறை ஹரீஷ் ஸரீனிடம் காண்பித்தேன். காலையில், முடிந்து போன கதையை மறுபடியும் எடுத்து, தவறை ஏற்றுக்கொண்டு, இரவே இந்த செலவை ஜவான் தலையில் கட்டக்கூடாது என்று எங்கள் தலையில் போட்டுக்கொண்டோம் என்றார், அவர். எல்லாரும் அதை சிலாகித்தார்கள். அந்த காலத்தில் எல்லாருமே மாரல் ஜட்ஜ்மெண்டில் குறியாக இருந்தார்கள். இது நிற்க.

மாஜி ராணுவவீரர்கள் நாள்தோறும் செத்துப்பிழைத்தவர்கள். எல்லாநாடுகளிலும் அவர்களுக்கு தனி மரியாதை, சலுகைகளும் உண்டு. இந்தியாவிலும் தான். ஆனால் நடந்ததை பாருங்கள். மாஜி ராணுவ வீரர்கள், அவரை சார்ந்த குடும்பம், பெற்றோர்கள் ஆகியோருக்கு [47.34 லக்ஷம்: ஏப்ரல் 2015] கைக்காசு செலவழிக்காத வகையில் மருத்துவ உதவி அளிக்க மத்திய அரசு 2002ல் ECDS என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

சமீபத்தில் நடந்த ஆடிட் முடிவுகள்:
முதல் கோணல் முற்றும் கோணல்: உறுப்பினர்களுக்கு அடையாள சீட்டு அச்சடிக்கும் மிகவும் பொறுப்பான வேலையை ஐந்து வருடங்களுக்கு விதியை மீறி ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்ட்டது. சந்தை விலையை பற்றி ஒரு விசாரிப்பு இல்லை. அதிகப்படி தண்டம் ரூ.6.69 லக்ஷம் வேறே!

இது இலவச பராமரிப்பு இல்லை. ஒரே தடவை-சந்தா காசு கட்டினால் தான் சிகிச்சை. வேறு செலவை மாஜிகள் தலையில் கட்டக்கூடாது; ஆனால் கட்டினார்கள். கேள்வி முறை இல்லையா?

டில்லியில் மட்டும், மாஜிகளின் சந்தாவில் பணிபுரியும் இந்த ECDSலிருந்து தற்கால ராணுவ மருத்துவ இலாக்காவுக்கு அனுமதியில்லாமல் செய்த செலவு: ரூ.40.78 கோடி. அதான் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டார்கள்!

பல பாலிக்ளினிக்களில் மருந்து பஞ்சம், வருடம் முழுதும்.
காலாவதியான மருந்துகளை தன் செலவில் ஒப்பந்தக்காரர் எடுத்து செல்லவேண்டும் என்று ஷரத்து. ஆனால், அவற்றை திருப்பி அனுப்பாததால் நஷ்டம்: ரூ.73.44 லக்ஷம்.
மற்றும் பல.

ஆடிட் ரிப்போர்ட்டை முழுதும் படித்தால், நான் குறிப்பால் உணர்த்தியது சொற்பம் என்று தெரியும். அது இலவசம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: