Thursday, December 23, 2010

அம்மா சொல்படி ராஜூ:(சிறகுகள் முளைக்க ...): பகுதி 25: 9 11 2009

அம்மா சொல்படி ராஜூ:(சிறகுகள் முளைக்க ...): பகுதி 25: 9 11 2009

(அடுத்த படியாக...)


(...ரொம்ப நாள் புதுக்கோட்டையில் இருந்தோம்...) ...அப்போது என் பென்ணுக்கோ, பிள்ளைக்கோ கல்யாணம் ஆகவில்லை. ஆனால், என் புருஷனை தர்மபுரியிலிருந்து திருச்சி மாத்தினார்கள். அவர் உடனே என் பிள்ளை இரண்டாவது பிள்ளையை (ரகு) தானே வைத்துக்கொண்டு பி.எஸ்.சியில் சேர்த்து விட்டார். ஜெஞ்ஜோஸஃப் காலேஜில் அவன் படித்தான். அவன் செலவுக்கு என் புருஷன் பாத்துக்கொண்டார். அதனால் எங்களுக்கு பணம் அனுப்பமாட்டார். 93 நாங்கள் வீட்டு வாடகையை வைத்துக்கொண்டு தான் குடும்பம் நடத்தினோம். ஆனால் பெரிய பையன் மெட்றாஸில் விவேகானந்தா காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நாள் அவன் நாத்தனார் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதே சமயத்தில் எனக்கு ஒரு சோதனை. 8வது உண்டாகியிருக்கிறேன். அப்போது தான் என் மாமனார் போய் ஒரு வருஷம் ஆகவில்லை. அதற்குள் எனக்கு பெண் பிறந்து விட்டாள். அதற்குள் என் அம்மாவும் போய் விட்டாள். 94 அப்போது என் தம்பிக்கு 5வது பெண் பிறந்தது. அதுவும் என் அப்பா தான் வைத்துக் கொண்டார். ஆனால் என் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டார். அப்போது என் புருஷன் சேலத்தில் இருந்தார். ஒரு வருஷம் ஆனதும் என் புருஷனை திருச்சிக்கு மாத்தி விட்டார் (கள்). அதனால் எங்களுக்கு கொஞ்சம் செளகரியமாக இருந்தது.

இப்படியிருக்கும்போது என் அப்பாவிற்கு கொஞ்சம் பணம் கஷ்டமாகயிருந்தது. ஏனென்றால், அந்த சமயம் நாதன் கம்பெனியை வித்து விட்டார். அதனால் கஷ்டம் வந்து விட்டது? அதற்காக, என் பிள்ளை ஸ்ரீகாரத்தில் ஏதோ கொஞ்சம் நிலம் இருந்தது. அதை என் அப்பா விற்று என் கடனைக்கொடுத்தால் நல்லது என்று சொன்னதின் பேரில் என் புருஷன் அந்த நிலத்தை விற்றுக் கொடுத்தார். ஆனால் என் அப்பாவிற்கு கொடுக்க வேண்டியது 4000 ரூபாய். அதைக் கொடுத்து விட்டோம். அந்த நிலம் 5000 ரூபாய்க்கு போயிற்று. அதனால் என் அப்பாவிற்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு, பாக்கி 1000 ரூபாய் இருந்தது. அது எங்களிடம் கொடுத்தால் செலவு ஆகி விடும் என்று, என் அப்பாவிற்குத் தெரிந்தவர் புதுக்கோட்டையில் திவான் ஆக இருந்தார். ஆனால் அவர் இல்லை. அதனால் அவர் பிள்ளை கோபாலாச்சாரி. அவரிடம் கொடுத்தார். 95 அதுவும் என் பெரிய பிள்ளை படிப்புக்கு உதவியாக இருந்தது. அதனால் என் புருஷன் ஸ்ரீகாரம் போன பிள்ளையை தானே படிக்க வைத்துக் கொண்டார். இப்படியிருக்கும் (போது) என் பெரிய பெண்ணுடைய ஜாதகத்தை என் அப்பா கேட்டார். நான் நல்ல வரன் பார்க்கிறேன் என்று பார்த்துக் கொண்டிருந்தார். என் புருஷன் திருச்சியில் இருந்தபடி அவரும் பெண்ணுக்கு ஜாதகம் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியே பெண்ணைப் பார்க்க நாலு ஐந்து பேர் பார்த்துப் போய் ஒன்றும் ஒத்து வரவில்லை. ஆனால் இந்த சமயம் என் பெரிய பிள்ளை மெட்றாசில் படிக்கிறான். இப்போது எனக்கு எட்டாவது பெண் பிறந்து 18வது நாள் என் பெரிய பிள்ளைக்கு மெட்றாஸில் ஏ.ஜீ ஆஃபீசில் வேலை கிடைத்தது. பிறகு எனக்கு குழந்தை பிற(ந்)து மூன்றாவது மாஸம்?

என் பெரிய பெண்ணை பெண் பார்க்க பொன்மலை யிலிருந்து வருவதாக என் புருஷன் திருச்சியிலிருந்து வந்து சொன்னார். பெண்ணை எங்கு வைத்துப் பார்ப்பது என்று யோஜனையாக இருந்தது. பிறகு என் புருஷனுடன் ஒரு ஐய்யர் சந்திரமெளலி என் புருஷன் ஆஃபீஸ் சொட்ரியாக (செக்ரெட்டிரி) இருக்கிறார். அவர் தான் என் வீட்டில் உங்கள் பெண்ணை அழைத்து வாருங்கள். அவர்கள் பொன்மலையிருந்து அவர்கள் என் வீட்டிற்கு வரும்படி செய்வோம். பிறகு அவர்கள் பெண் பார்க்கட்டும். பெண் பார்த்த பிறகு அவர்களோடு நீங்களும் நானும் கல்யாண விஷயத்தை பேசுவோம் (என்றார்). அவர் சொன்னபடியே புதுக்கோட்டையிலிருந்து பெண்ணை அழைத்துக்கொண்டு சந்திரமெளலி வீட்டிற்கு என் புருஷன் அழைத்துப் போனார். அங்கு நல்லபடியாக பொன்மலையிலிருந்து பிள்ளை, பிள்ளையுடைய அப்பா, அம்மா எல்லாரும் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். உடனே என் பெண்ணை என் புருஷன் புதுக்கோட்டை கொண்டு வந்து விட்டார். மறுபடியும் சந்திரமெளலியும் என் புருஷனும் பொன்மலை போய் நிச்சயம் செய்து விட்டார்.

93. அவரும் அரைப்பட்டினி: ‘படிப்பு முக்யம்’.

94. மகராசி போய் சேர்ந்தாள். நான் ராஜாஸ் காலேஜ் சேர்ந்தவுடன் பேரன் காலேஜ் போகும் அழகைப் பார்க்க வந்தாள். நானோ காமராசர் யூனிஃபார்ம், சுயசம்பாத்தியம் வரையில்! குழாய் (ட்ரெளஸர்) போட்டுக்க மாட்டானோ என்று அங்களாய்த்தாளாம். அம்மா அவனை மாத்தமுடியாது என்று சொல்லிவிட்டாளாம். பிற்காலம், நான் கோட்டும், ஸூட்டும், பூட்ஸுமாக உலா வந்ததைப் பார்த்திருந்தால், மாய்ந்து போயிருப்பாள் ஆனந்தத்தில்! அன்பு, அன்பு என்கிறீர்களே, அதன் ஊற்று தான் இது.

ஒரு உரையாடல்:

தாத்தா ஆஃபீஸ் கிளம்பும் போது பீரோவைத் திறப்பார். பாட்டி ‘பிலு பிலு’ன்னு வந்து நிற்பாள், தோரணையோடு. ‘ருக்கு பிள்ளை இன்னிக்கு ஊருக்குப் போறான்’ ‘போகட்டும்’. ‘டேய்! இந்தா. (சில குடை மார்க் ஜப்பான் பென்சில் வரும்.) எல்லாருக்கும் கொடுக்கணும்’ ‘தாத்தா! மொஹைதீன் ஒன்னு கேட்டான்’. மேலும் ஒன்று. ‘அப்டி ஒரு ஃப்ரெண்டா!’ (அவனிடன் பண்டமாற்று செய்து உறங்கும் பம்பரம் வாங்கிக்கொண்டது தனிக்கதை.) ‘தேங்காய் பர்ஃபி பண்ணனும்; ஆறு தேங்காய் வாங்கணும்.’ ‘ஆராமுதுட்ட கொடுத்து அனுப்பறேன்’ ‘அவன் கண்டான்! மாங்காய்ன்னா வாங்கிண்டு வருவான்’ [ஆராமுது மாமா ‘உர்ர்’ என்று நிற்பார்.] வாய் கூசாமல் நாலு ரூபாய் கேப்பாள். அவரும் ஒரு ரூபாய் கொடுப்பார்.

[aside] ‘ இந்த பாவி பிராமணன் காசு காசு ன்னு அலயறது,’ முணுமுணுப்பு. மேலும் ஒரு எட்டணா பெயரும். தாத்தா புறப்பாடு. ‘இந்தா! சினிமாக்கு போய்ட்டு வா’ ‘பாட்டி! தாத்தா வாசல்லே பஞ்சாயத்து பண்ணிண்டிருப்பாளே?’

[ ரோட்டோரத்திலே நார் கட்டில்லில் தாத்தா படுத்திண்டிருப்பா. ஊர்க்காரா பிரச்னைகள் தீர்க்கப்படும்.] [சினிமால்லேர்ந்து வந்தாச்சு.] ‘எங்கடா போயிருந்தே? வேளாவேளைக்கு வரவேண்டாம்.’ பாட்டி ஓரமா, என் காவல் தெய்வமா நின்னுண்டுருப்பா. ‘ குழந்தை அலஞ்சுட்டு வரது. கேள்வியைப்பாரு, கேள்வியை. நீ சாப்ட வாடா’ [ஒரு பாடாக, அன்றிரவு கழிந்தது; மறு நாள் விஷமம் திட்டமிடவேண்டாமா?]

95. தாத்தா ஃபைனான்சியல் எக்ஸ்பெர்ட்..

(சிறகுகள் முளைக்க ...)


--
இன்னம்பூரான்
Reply
Reply to all
Forward
Reply

Geetha Sambasivam

to mintamil
show details 11/18/09
//[ஒரு பாடாக, அன்றிரவு கழிந்தது; மறு நாள் விஷமம் திட்டமிடவேண்டாமா?]//

நல்லா இருக்கு விஷமம், மிச்சம் நாளைக்கு. ஓவர்டைம் போட்டு இல்லை படிக்க வேண்டி இருக்கு??

அம்மா சொல்படி ராஜூ:(அடுத்த படியாக...): பகுதி 23: 9 11 2009

அம்மா சொல்படி ராஜூ:(அடுத்த படியாக...): பகுதி 23: 9 11 2009

(ஒரு சகாப்தம் முடிய...)

(காலை 6 மணி அளவில் என் மாமனார் இறந்து விட்டார்...) ... நான் என்ன செய்யமுடியும். பெரிய பெண்ணும் ஆத்துக்கு வரக்கூடாது. என்ன செய்வது என்று தெரியவில்லை. சின்ன வீட்டில் குடியிருந்த பையனிடம் நான் ரூபாயைக் கொடுத்து மெட்றாஸ், கும்பகோணம், புனா, காரைக்குடி எல்லா இடத்திற்கும் தந்தி கொடுக்கச் சொன்னேன். பிறகு, தர்மபுரிக்கும் தந்தி கொடுத்தாச்சு. ஆனால் சமயத்திற்கு ஒருவரும் வர முடியவில்லை. ஆனால், காரைக்குடியிலிருந்து என் அப்பா வந்து விட்டார். 91 அவர் என்னம்மா செய்தே என்று கேட்டார். அதற்கு நான் கொடுக்க வேண்டியவர்களுக்கு தந்தி கொடுத்துவிட்டேன் என்று சொன்னேன். [ஆனால் என்னுடைய அப்பா உடனே வந்து விட்டார். என்ன செய்தாய் என்று கேட்டார். வேண்டியவர்களுக்குத் தந்தி கொடுத்தேன் என்று சொன்னேன்.] சரி என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு செய்யவேண்டியதை செய்வோம் என்று உடனே பணம் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். உடனே என் மாமனாரை அடக்கம் செய்யும் இடத்திற்கு போய் தானே ஏற்பாடுகளை செய்து விட்டார். பிறகு வாத்தியார் தில்லைஸ்தான வாத்தியாரைக் கூப்பிட்டு ஆள் அனுப்பி வைத்தோம். அவரும் வந்து விட்டார். உடனே என் மாமனார் காரியத்தை என் அப்பா இருந்து நடத்தினார்? 92 பெரிய வீட்டில் வக்கீல் சுந்தரேசேய்யர் என்று ஒருவர் இருந்தார். அவரும் வாடகைக்கு ஆளை வைத்து என் மாமனாரை அடக்கம் செய்கிற இடத்திற்குக் கொண்டு போனார்கள். இதில் ஒரு விஷயம். என் புருஷன் உடனே வரமுடியவில்லை. மற்றவர்களும் வர வில்லை. மாமனாருக்குக் கருமம் செய்வது யார் என்று தெரியவில்லை எனக்கு கவலையாகப் போய்விட்டது. உடனே வாத்தியார் சொன்னார். புள்ளையுடைய புள்ளை செய்யலாம் என்று சொன்னார். உடனே என் அப்பா சொன்னார். என் ஏழாவது பிள்ளைக்கு நாலு வயது இருக்கும். அந்த பிள்ளையிடம் புல்லைக்கொடுத்து வாங்கி யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னார். அதனால் என் அக்காவுடைய மைத்துனன் மாப்பிள்ளையை எங்களுக்கு தெரியும். அவருக்கு சொல்லி அனுப்பினோம். அவர் உடனே வந்தார். இது மாதுரி சமாச்சாரத்தைச் சொன்னோம். அவர் உடனே நான் செய்கிறேன். என் அப்பா மாதுரி தான் என்று சொல்லிவிட்டு அவரே செய்தார். ரொம்ப நல்ல மனுஷன். அவர் செய்து விட்டு வீட்டிற்குப் போய் எங்களுக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு நாங்கள் வீடு எல்லாம் அலம்பி சுத்தம் செய்து கொண்டிருக்கும் சமயத்தில், சாயந்திரம் கும்பகோனம் என் பெரிய நாத்தனார் அவர் புருஷன் எல்லாரும் வந்து விட்டார்கள். உடனே மத்றாஸ்ஸிலிருந்து மற்ற இரண்டு நாத்தனாரும் வந்து விட்டார்கள். அவர்கள் என்னை ஏன் நாங்கள் வரும் வரையில் அப்பாவை அடக்கம் பண்ணாமல் வைக்கப்படாதா என்று கோபமாகப் பேசினார்கள். அதற்கு நான் என்ன சொன்னேன் என்றால் அவரை வைக்கமுடியாது. வயறு எல்லாம் வீங்கியிருப்பதால் வைக்கக்கூடாது என்று வாத்தியார் சொல்லிவிட்டார். அதனால் தான் வைக்கவில்லை. தவிற, வி(யா)ழக்கிழமை போனதால். வாத்தியார் சொன்னதால் எல்லாம் நடந்து விட்டது. இனிமேல் உங்கள் முத்தா (அண்ணன்) வந்த பிறகு தான் எல்லாம் நடக்கவேண்டும். என்ன செய்வது. நானே தனியாக குடும்பம் நடத்துவதால் என்னால் என்ன செய்யமுடியும். காலையில் தான் என் அப்பா வந்து எல்லாக்காரியத்தையும் முடித்து விட்டுப் போனார். அவர் இருந்ததால் எனக்கு நல்லதாகப்போச்சு என்று நான் சொல்லிவிட்டேன். பிறகு வந்தவர்கள் எல்லாரும் பத்து நாள் இருந்தார்கள். அதற்குள் என் புருஷனை சேலத்திற்கு பக்கத்தில் தர்மபுரி என்ற ஊரில் மாத்தியிருந்தார்கள் அதனால் அவர் அப்பா இறந்தவுடனே வரமுடியவில்லை. வருவதற்கு இரண்டு நாள் ஆகிவிட்டது. பிறகு அவர் வந்த உடனே காரியங்கள் நடந்தது. ஆனால் நானும் உடனே (?) என் மைத்துனர் பூனாவில் இருந்தார். அவருக்கு தந்தி கொடுத்துவிட்டேன். அவரும் வந்து விட்டார். எல்லாம் நல்லபடியாக நடந்தது. அப்போது என் (அப்பா) பெரியவராக இருந்து நடத்தி வைத்தார். எல்லாம் நடந்த பிறகு எல்லாரும் அவரவர் ஊருக்குப் போய் விட்டார்கள். பிறகு நானும் என் குழந்தைகளும் ரொம்ப நாள் புதுக்கோட்டையில் இருந்தோம்.

91. ஆபத்பாந்தவன். காரைக்குடியில், இத்தகைய நேரங்களில் வருபவர்களுக்காக, பணமுடிச்சு வைத்திருப்பார். அவர் பீரோவைத் திறக்க, என்னை மட்டும் தான் அனுமத்திப்பார்.

92. கேள்விக்குறிக்கு பொருள் இல்லை.

(அடுத்த படியாக...)


--
இன்னம்பூரான்