Saturday, March 8, 2014

MUTTHUPATTAN KATHAI PART III


MUTTHUPATTAN KATHAI PART III

இன்னம்பூரான்
08 03 2014


https://www.youtube.com/watch?v=dmcVDD3qXwA

Friday, March 7, 2014

Part II of A FABLE RETOLD: கதை கேளு ! கதை கேளு! முத்துபட்டன் கதை



Dear viewers,

This is Part II of A FABLE RETOLD: கதை கேளு ! கதை கேளு! முத்துபட்டன் கதை





https://www.youtube.com/watch?v=3c9XZc6-S7k

Thursday, March 6, 2014

A FABLE RETOLD; கதை கேளு! கதை கேளு! முத்துப்பட்டன் கதை.

A FABLE RETOLD; கதை கேளு! கதை கேளு! முத்துப்பட்டன் கதை.







இன்னம்பூரான்

March 6, 2014
நன்றி:
வல்லமை பிரசுரம்:http://www.vallamai.com/?p=42614#comments
கூகிளாண்டவரின் அசரீரி!…
Wednesday, March 5, 2014, 5:15
1 comment

இன்னம்பூரான்
கூகிளாண்டவரின் அசரீரி!

தேர்தல் வரும்பின்னே ! ஆருடங்கள் வரும் முன்னே!
கடந்த மூன்று மாதங்களாக ஒரு மக்களாலோசனை நடத்தி, கூகிளாண்டவர் எடுத்துரைப்பதாவது:
இணைய வாசிகள் இந்திய அரசியலை பற்றி நுட்பங்களும், நாட்டு நடப்பும் அறிய ஆவலாக இருக்கிறார்கள். வரும் தேசீய தேர்தலில், தலைவர்களின் மோதல் மட்டுமில்லை; கட்சிகளின் கோட்பாடுகளும், உகந்த/கூடாநட்புகளும் பற்றியும், ராகுல் காந்தி vs நரேந்திர மோடி என்ற ஜடுகுடு பற்றியும் அறிய விழைகிறார்கள். மேலும், ஆன்லைன் போர்க்களம் அமர்க்களம்; ஆவண யுத்தத்தில் சத்தம் மிகை; தெருக்கோடி சண்டைகள் மண்டையை பிளக்கின்றன.
2ஜீ மாயாமாலம், நிலக்கரி பதுக்கல், ஆதர்ஷம் இழந்த ஆதர்ஷ் கூத்து ஆகியவை பற்றி கூகிளாண்டவரின் கோயிலிலே உபாசனை. ராகுலரின் மஹாத்மியங்களும், ‘ஆம்’ ஆத்மி ‘இல்லை’ ஆன விவகாரமும் எங்கும் பேச்சு. 1984 & 2002 கலவரங்களும் வரலாற்று நோக்கில் மீள்பார்வையில் உளன.
முதற்கண்ணாக லஞ்ச லாவண்யமும் லோக்பால் பிரச்னையும் தலைமை வகிக்கின்றன.
இன்றைய பார்வை லோக்பால் பிரச்னை பற்றியது. சர்வ விசாரணை வல்ல லோக் பால் என்ற சூப்பர் தணிக்கையாளனை கண்டெடுப்பது பற்றி. மஹாராஜ ராஜ ஶ்ரீ அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் ஒலிபெருக்கி தன் தலையிலேயே அபிஷேகம் செய்து கொண்டு, கண்டெடுப்பு கமிட்டியில் அமர ஃபாலி நாரிமென் என்ற பிரபல வழக்காளரும், மாஜி நீதிபதி கே.டி. தாமஸ் அவர்களும் மறுத்ததால் எமக்கு இக்கட்டு இல்லை என்று சப்பைக்கட்டு கட்டினார். ஃபாலி நாரிமென் என்ற பிரபல வழக்காளரும், மாஜி நீதிபதி கே.டி. தாமஸ் சொன்னதற்கு பதில் இல்லை. (அ-து) கண்டெடுப்பு கமிட்டி சிபாரிக்குமாம். அப்பறம் பிரதமர் தலைமையில், எதிர் கட்சி தலைவர் உட்பட்ட உப்பரிகை கமிட்டி பெரும்பான்மை முடிவு எடுக்குமாம்?
இந்தியா! நீ எங்கே செல்கிறாய்?
Image Credit: http://cdn.ndtv.com/tech/images/doodle_for_google_India_past_winners.jpg

இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, March 5, 2014

ELECTION UPDATE:நெத்தில் வந்த பிட்டு. புலி வருது! புலி வருது! புலி வந்துடுத்து டோய் !


Update

25 03 2014


கழுதை யாரு? குருதை யாரு?

டார்ஜிலிங்க் நகரத்து டார்லிங்க் ஆக வலம் வந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுஜய் கடக் என்பவருக்கு அதிசயமும், வியப்பும் அடங்கவில்லை. எதிர்க்கட்சியான திரினாமூலர்கள், நாமினேஷன் பதிவு செய்யவந்த அவரை திக்குமுக்காட வைத்துவிட்டனர். அத்தனை உபசாரம்! தடபுடலான கரகோஷம். தங்கள் கட்சி வேட்பாளர் பூடியா அவர் தான் என்று நினைத்து, மாலையிட்டு வரவேற்று எல்லாம் முடியும் போது தான் ஆள் மாறாட்டமானது (கடக் தவறு ஒன்றும் இல்லை) ஆனாது தெரிந்தவுடன் திரினாமூலர்கள் அசடு வழிந்தார்கள். 


பலே! பலே!
இன்னம்பூரான்
25 03 2014
சித்திரத்துக்கு நன்றி: http://awardakodukkaranga.files.wordpress.com/2009/04/sabash_meena.jpg?w=191
பி.கு. சும்மா போட்டேன். சண்டைக்கு வராதீர்கள்

Update
14 03 2014

Politics/Nation

Advani struggles to hold on to his bastion in Gandhinagar

For LK Advani, remarkable ascent of his one-time protégé hasn’t made things any smoother in Gandhinagar. State BJP is not keen on Advani, although no one would say so publicly.


Update
14 03 2014
ELECTION UPDATE:நெத்தில் வந்த பிட்டு.
விஜயகாந்த் கோயம்பேடு மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார். அவரை சந்திக்க ராஜ்நாத்சிங் வருகிறார்.

விஜயகாந்த்: வாங்க.....வாங்க மோடிஜீ நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்.

ராஜ்நாத்சிங்: நான் மோடியில்லே ஜீ.

விஜயகாந்த்: ஓ அப்படியா சரி சரி மன்மோகன் சிங் தானே....

ராஜ்நாத் சிங்: நாசமா போச்சு.....நான் ராஜ்நாத் சிங்.

விஜயகாந்த்: அதானே பார்த்தேன்.....மன்மோகன் சிங், மோடில்லாம் தாடி வச்சிருப்பாங்களே....உங்களுக்கு தாடி இல்லையேன்னு நினைச்சேன். சரி.... நீங்க எந்த கட்சி?

ராஜ்நாத்சிங்: உருப்பட்ட மாதிரிதான். நான் பிஜேபி தலைவருங்க

விஜயகாந்த்: ஓ அப்படியா.... நீங்கதான் தலைவரா? பொன்.ராதாகிருஷ்ணன்னு சொன்னாங்க.

ராஜ்நாத் சிங்: அவரு தமிழ்நாடு தலைவரு. நான் இந்திய தலைவரு.

விஜயகாந்த்: இப்ப ஏன் என்னை பார்க்க வந்ததிருக்கீங்க?

ராஜ்நாத் சிங்: அதுவும் மறந்து போச்சா......சரி நானே சொல்றேன்.....கூட்டணி பேச கூப்பிட்டதா சொன்னாங்க..

விஜயகாந்த்: நான் சொன்னேனா? எப்ப சொன்னேன்? நான் சொன்னதா ஞாபகம் இல்லையே...

ராஜ்நாத் சிங்: ராத்திரிதானே சொன்னீங்க...

விஜயகாந்த்: ராத்திரியா? அதை சீரியசா எடுத்துக்கா இவ்வளவு தூரம் ரெண்டு பேரு வந்தீங்க?

ராஜ்நாத் சிங்: நான் ஒருத்தன் தானே வந்திருக்கேன்...

விஜயகாந்த்: ஒரு ஆள் தானா? என் கண்ணுக்கு ரெண்டு ரெண்டா தெரியுது. அது கிடக்கட்டும் விடுங்க....

அப்போது எம்.எல்.ஏ.,சந்திரக்குமார் வருகிறார்...

சந்திரக்குமார்: தலைவரே..... அறிவாலயத்திற்கு போன் போட சொன்னீங்கள்ல போட்டாச்சு...இப்ப அவங்க வெயிட்டிங்

விஜயகாந்த்: அவஙகளுக்கு எப்ப போன் போட சொன்னேன்?

சந்திரகுமார்: நேத்து சொன்னீங்களே..

விஜயகாந்த்: அப்படியா.... இன்னும் யார் யார் கிட்ட போன் போட சொல்லிருக்கேன்?

சந்திரக்குமார்: வாசனுக்கும், ஞானதேசிகனுக்கும் போன் போட சொல்லிருக்கீங்க தலைவரே?

விஜயகாந்த்: ஆமா....இவங்கள்லாம் யாரு?

சந்திரக்குமார்: அய்யோ தலைவரே மறந்துபோச்சா...இவங்கதான் காங்கிரஸ்ல முக்கியமான ஆளுங்க....

விஜயகாந்த்: ஓகே ஓகே...... (ராஜ்நாத் சிங் பக்கம் திரும்பி)
மிஸ்டர் ராஜ்நாத் சிங் ஜீ..... நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இவ்வளவு தூரம் நீங்க வந்து கேட்டதால என்னால் தட்ட முடியல.... அதோடு திமுக., காங்கிரஸ்னு எல்லோருமே எனக்கு வேண்டப்பட்ட தலைவர்கள்தான். அதனால.....
பிஜேபியோடு பத்து தொகுதியிலும், காங்கிரசோடு பத்து தொகுதியிலும், தி.மு.க.,வோடு பத்து தொகுதியிலும் கூட்டணி வச்சு போட்டியிடலாம்ன்னு நினைக்கிறேன்.....இன்னும் பத்து தொகுதில தனிச்சு நிற்கலாம்ன்னு முடிவு செஞ்சிட்டேன்....
நீங்க என்ன சொல்றீங்க



Update
13 03 2014
எங்கு பார்த்தாலும் காந்தி! மஹாத்மா காந்தி!

இன்னம்பூரான்


ரூவா நோட்லெ காந்தி படம் போட்டாலும் போட்டங்க. அவர் கிட்டக்கிடுகிடுவென்று பினாமியாகவே, கறுப்பு மேனியாகவே, பறந்த வண்ணம் ஸ்விஸ் வங்கிக்கெல்லாம் ஓடினாலும், தேர்தல் வரதுனாலே, உள்ளூரிலேயே எஸ்.யூ.வி., லாரி, எல்லாத்திலேயும் திரு அமங்கல பிரானாக வளைய வராரே என்று அஞ்சி, தேர்தல் கமிஷன், ‘தேர்தலுக்காக வாரியிறைக்கும் துட்டை’ இனமறிந்து பிடுங்கி/ அட் லீஸ்ட் குரல் கொடுத்து கள்ளப்பணத்துக்குக் கணக்கு பார்க்க 700 வருமான வரி/சுங்க வரி இலாக்கா ஊழியர்களை களத்தில் இறக்கப்போறதாம். இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. தங்கத்திலே மோதிரம் கொடுத்தாஹ. தாலி கொடுத்தாஹ. காசுக்கு பதிலா, இந்த அரசியல் வாதிகள் தங்கத்திலே அரச இலை கூட குடுப்பாகளாமே !


*



From Hindustan Times today:

"Several British universities have started research projects and online initiatives to focus on the forthcoming general elections in India, the largest such exercise in the world.
For a host of reasons, the study of India at various levels has been one of the most prominent themes in UK university research, particularly at centres of Indian expertise at the universities of Oxford, Cambridge, Edinburgh and the School of Oriental and African Studies.
The focus on Indian elections has increased with the recent opening of some ‘India centres’, such as the one at King’s College London, where experts including Sunil Khilnani, Christophe Jeffrelot and James Manor last week discussed the challenges and post-poll scenarios.
Bournemouth University is in the process of launching ‘Project India’ for producing news coverage and research on the elections. It has tied up with journalism departments of some Indian universities.
“The idea is to cover the event via a website and on social media channels. The project will run from March to end of May. We are also working with two media partners — rediff.com and wonobo.com — to provide an alternative take on the Indian elections,” Bournemouth lecturer Chindu Sreedharan said. 
The London School of Economics would be running a series of articles and blogs on the Indian polls in coordination with academic partners Columbia University.
London School of Economics experts on India include authors Mukulika Banerjee and Sumantra Bose.
Katherine Adeney, professor at the University of Nottingham, said the School of Politics and International Relations has started a blog titled ‘Ballots and Bullets’ with academic contributions from the UK, India, Europe, Pakistan and America."

Do you wish to have updates?
இன்னம்பூரான்
12 03 2014
சித்திரத்துக்கு நன்றி
http://www.scopevision.net/images/Periscope.gif

********

தேர்தல் ஆரூடங்களை/கணிப்புகளை தடை செய்யவேண்டுமென்றால் அல்லது கட்டுப்படுத்த வேண்டுமானால், மக்கள் பிரிதிநித்துவம் சார்ந்த சட்டத்தை திருத்தவேண்டும். தற்காலம் தேர்தல் கமிஷன் தேர்தல் நடக்க 48 மணி நேரம் முன்னால் தான் தடை செய்ய முடியும். அது வரை மஜா தான்!  கட்டுப்படுத்துவதை பற்றிய ஒரு நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் 2004 அரசுக்கு அளித்த பரிந்துரை, கிட்டத்தட்ட ஒரு மாமாங்கமாக, கிடப்பில். மறுபடியும் இப்போது அதை மீண்டும் வலியுயிறுத்தி இருக்கிறது. இத்தனைக்கும் அந்த வேண்டுகோளை வைத்தது, அரசாளும் காங்கிரஸ் கட்சி ! அரசு என்னமோ மெத்தனமாக, பிரச்னையை சட்டம் திருத்தும் பரிந்துரை கமிஷனிடம் தாக்கீது அனுப்பிருக்கிறது. அடுத்த பொது தேர்தல் வரை குப்பையும் கொட்டுவார்கள்; குளவி போல் கொட்டவும் செய்வார்கள்.
இன்னம்பூரான்
07 03 2014
Image Credit: 
http://sr.photos3.fotosearch.com/bthumb/CSP/CSP562/k5620537.jpg

தாவித்தாவி தாண்டும் அரசியலர்கள், தடம் மாற்றியும், புரண்டும் பயணிக்கும் கட்சிகள்,  வாக்காளரின் தருமசஙடம் நிறைந்த தற்காலத்தில்,புள்ளியியலை திறனோடு கையாளும் தேர்தல் ஆரூடங்கள் பலிக்ககூடும் என்று ஒரு கருத்து:
இன்னம்பூரான்
06 03 2014
‘...Opinion polls offered mathematicians a platform to demonstrate the power of statistics, Rajeeva L. Karandikar, Director, Chennai Mathematical Institute said on Thursday...he said, ‘...while the opinion poll was neither “the truth, the whole truth and nothing but the truth” nor wholly about “lies, damned lies and statistics”, sampling, if properly done, had the power of determining the winner... the point is that it is only the percentages and not the absolute numbers that determine the accuracy...the “problem was not with the statistics but its usage... however, opinion polls, “which are as much about the power of statistics as their limitations”, can be off the mark too.”. He felt that law permitting, it was better to “do a honest and effective job” with engaging in opinion polls. ‘.
Excerpted from the Hindu today. Copyright: The Hindu
Image Credit:http://www.unsv.com/member/images/package.png

புலி வருது! புலி வருது! புலி வந்துடுத்து டோய் !

http://www.vikatan.com/av/2011/04/mtknjg/images/p64a.jpg

சூடான மதிய செய்தி: 16வது மக்கள் சபைக்கான தேசீய தேர்தல் ஏப்ரல் 7 அன்று தொடங்கி மே 12 அன்று முடியும்; ஏழு குறிப்பிட்ட தேதிகளும் நடக்கும். இந்த தேர்தலின் வாக்கு எண்ணுவது மே 16 அன்று.  மத்திய தேர்தல் கமிஷனின் இந்த அறிக்கை சற்று முன் வெளியானது. 81.4 கோடி வாக்காளர்கள். அது 2009ம் வருட தொகையை (1.76 கோடி) விட பத்து கோடி அதிகம். முதல் முதலாக நான் வாக்களித்த 1952ம் வருட வாக்காளர் எண்ணிக்கை, தோராயமாக, இதில் ஐம்பதில் ஒரு பங்கு. அன்று காமதேனு வந்தாள் என்று அர்ச்சனை செய்தார்கள். இன்று ?  96% வாக்காளர்களுக்கு ஐடிண்டி கார்ட் கொடுக்கப்பட்டதாக செய்தி. 9.13 லக்ஷம் தேர்தல் சாவடிகள். 
டில்லி தேர்தலில் புரட்சி படைத்த ‘ எல்லா வேட்பாளர்களுக்கும் பெப்பே!’ சொல்லும் ‘none of the above’ (NOTA) பட்டன் 9.13 லக்ஷம் சாவடிகளிலும் தலை நிமிர்ந்து நிற்கும்.
ஆனை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே! என்ற பழமொழிக்கு உகந்தவாறு ஆருட சர்வேக்கள்; கடந்த மூன்று மாதங்களாக ஒரு மக்களாலோசனை நடத்தி, கூகிளாண்டவர் (Google)கூவியது போல, அரசியல் வாதிகளை பின்னியெடுக்கும் சர்வேக்களுக்கு தடாலடி தடை விதிக்கமுடியாது என்று தெளிவு பட கூறிவிட்டது, தேர்தல் கமிஷன். அது நாடாளுமன்றம் எடுக்க வேண்டிய முடிவு என்றார்கள். கட்சிகளின் கொள்கை, ஆராய்ந்த நட்பும், கூடா நட்பும், ராகுலர்/மோடி இழுபறி பற்றியெல்லாம் மக்கள் அறிய விரும்புகிறார்கள் என்றும், லஞ்ச லாவண்யம் பற்றிய கவலையும், லோக்பால் எதிர்ப்பார்ப்பும் மக்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தும் என்று கூறும் கூகிளாண்டவரின் கோயிலிலே உபாசனை: 2ஜீ மாயாமாலம், நிலக்கரி பதுக்கல், ஆதர்ஷம் இழந்த ஆதர்ஷ் கூத்து வகையறா:எண்ணுக்கடங்கா, கண்ணில் தென்படா கூற்றுக்கள் எல்லாம். ஆன்லைன் போர்க்களம் அமர்க்களம்; ஆவண யுத்தத்தில் சத்தம் மிகை; தெருக்கோடி சண்டைகள் மண்டையை பிளப்பது எல்லாம் மிகும்.
கோலோச்சும் ( செங்கோல் என்று நான் சொல்லவில்லையே !) அரசியல் வாதிகளை கட்டிப்போடும்  இலட்சிய பாதை அமலுக்கு இன்றே வந்தாகி விட்டது.
  1. அரசியல் கட்சிகள் சாதிக்கக் கூடிய சத்தியம் தான் பேசவேண்டும். அதற்கான வழியை உரைக்க வேண்டும்.
  2. இலட்சிய பாதையின் இலக்கு: பாரபக்ஷம் அற்ற நடைமுறைகள்.
  3. அரசு செலவில் ஓட்டுக்கேட்க போகக்கூடாது. இது பற்றி இரண்டு வரலாற்று செய்திகள். 1952ல் முதல் தேர்தல் ஆனதால், இது பற்றி பிரச்னை எழுந்தது. பிரதமர் நேரு இங்கிலாந்து பிரதமர் ஆட்லியிடம் ஆலோசனை கேட்டார். ‘என் மனைவி காரோட்டுவாள்; நான் பிரசாரம் செய்வேன். என்ன பிரச்னை?’ என்றார், அவர். 1966ல் குஜராத் முதல்வர் ஹிது பாயி, தேர்தலுக்கு முண்டியடித்துக்கொண்டு, ஒரு ஃபியட் காரில் செல்வார்.
  4. மக்கள் பணத்தை பிரசார பீரங்கிக்காக, விரயம் செய்யக்கூடாது.
  5. இலவசங்கள்/மான்யங்களை: இவற்றிற்கு தட்தட் தடா.
பார்க்கலாம். சித்து வித்தைகள், தடலடி தம்புரான் தாண்டவம், வழிந்தோடும் காசாறு எல்லாவற்றையும் பார்க்கத்தான் போகிறோம்.
இறைவா! பாரதமாதாவை ரக்ஷி.
இன்னம்பூரான்
05 03 2014
சித்திரம்: காப்புரிமை & நன்றி: http://www.vikatan.com/av/2011/04/mtknjg/images/p64a.jpg




Sunday, March 2, 2014

பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ [7]

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ [7]


http://imageenvision.com/450/27533-clip-art-graphic-of-a-white-bread-slice-mascot-character-greeting-with-open-arms-by-toons4biz.jpg

தேசீய தேர்தல் நெருங்குகிறது. விந்தை கூட்டணிகள் பற்றி செய்திகள், வதந்திகள், கருத்துக்கள் உலவுகின்றன. சர்ச்சைக்கும், உள்குத்துக்களுக்கும் உட்படுத்தப்பட்ட ஜாயிண்ட் நாடாளுமன்றக்குழுவின் தலைவர் அந்த ‘அநாவசிய’ கமிட்டியின் அறிக்கையை தாக்கல் செய்து, பாரததேசத்தின் ஜனநாயகத்தின் வாய்மையையை பழித்துவிட்டார் என்று ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வலம் வருகின்றன. பாரத நாட்டின் தற்கால அரசியல் மையங்களில் லஞ்ச லாவண்யத்தின் கொடி பனிமலையிலிருந்து குமரி முனை வரை தடாலடியாக பறக்கிறது. ஆடிட்டர் ஜெனரல் ஆகாயத்தில் 2ஜியையும், நிலத்தடி நிலக்கரியையும், கச்சா எண்ணெயையும் கையாண்ட முறை தவறிய நடைமுறைகளை சாடிய போது கூக்குரல் போட்டவர்கள், அந்த தணிக்கை அறிக்கைகளின் பரிந்துரை படி தான் நடக்க விழைகிறார்கள். தேசீய வங்கிகளின் வாராக்கடன்கள் அவற்றை மூழ்கடிக்கும் அச்சம் நிலவுகிறது. அவற்றை ஆடிட்டர் ஜெனரல் ஆடிட் செய்யக்கூடாது என்ற கோஷம் வலுக்கிறது. கனம் கோர்ட்டார் அவர்கள் அளிக்கும் தீர்ப்புகளை கண்டு அரசாணை தவிக்கிறது. இத்தனை பீடிகை எதற்கு என்றால், சிறு துளி நச்சு பெருங்குடத்தின் நீரை பாழாக்கி விடுகிறது என்பதற்கு 40 வருடங்களுக்கு முந்திய ஒரு காட்சியை முன் வைக்க:
WHY NOT THE CAKE !
“ The poor are given bread 
  Urban as they were.

  Say it not, it was like mud.
  Ingradients as you know, came from CARE !
  Let’s be fair, as CARE gave all.
  Soy flour, sugar, salt and yeast.
  The baker, look at his gall,
  Took them away, the beast.
  Let’s be fair, water he gave free,
  Sixteen times by the litre.
  Took salt, but gave malt in a spree.
  Less of sugar, hops, yeast and milk,
[to make the kids fitter.
The child is the father of the Man,
And the kids spat it out.
The baker cared not a damn.
And you know, he is now stout!
-S.Soundararajan: 1978.
மேற்படி வாசகத்தை இன்று பதிப்பிக்கும் காரணம், அது இன்று தற்செயலாகக் கிடைத்ததே. இதை நான் ஒடிஷா பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டியிடம் சமர்ப்பித்த போது, பின்னணி கூறப்பட்டது. - ரூர்கெலாவின் எஃகு தொழிற்சாலையை தணிக்கை செய்த போது, எதிர்பாராத விதமாக, முனிசிபல் கெளன்சிலர் ஒருவர், அங்கன்வாடியில் மாணவர்கள் ரொட்டித்துண்டை டம்ளரில் பருகுவதை பற்றி அளித்த புகார் சிக்கியது. இந்திய மரபுப்படி எல்லாருக்கும் நகல் அனுப்பிய போது, சம்பந்தமில்லாத தொழிற்சாலைக்கும் அனுப்பியிருந்தார். அன்றே அங்கன்வாடிக்கு போய் பார்த்தால், அவர்கள் அந்த நீராகார ரொட்டியை துப்பிக்கொண்டிருந்தார்கள்! மாநில அளவில் தணிக்கை செய்த போது, இந்த சிறுதுளி நஞ்சு திருட்டுத்தான் பல மேல்மட்ட களவாணிகளுக்குக் கை கொடுத்தது தெரியவந்தது. அந்தக்காலத்தில் பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டிக்கு மதிப்பு இருந்தது. ஜாயிண்ட் கமிட்டிகள் வாரா. இந்த வாசகத்தை முன் வைத்து, பின்னர் அரசு வாசகத்தில் அதை பிரசுரித்தபின், மற்ற ஊழல்கள் நிற்காவிடினும், பசங்க ரொட்டியை கடித்துத் தின்றார்கள்.
லஞ்சம் ஒழிப்பது மக்கள் கையில். அப்போது தான் பாரத தேசம் என்று பெயர் சொல்லலாம்.
இன்னம்பூரான்
02 03 14

சித்திரத்துக்கு நன்றிhttp://imageenvision.com/450/27533-clip-art-graphic-of-a-white-bread-slice-mascot-character-greeting-with-open-arms-by-toons4biz.jpg