Tuesday, November 10, 2015

நாளொரு பக்கம் 31

நாளொரு பக்கம் 31

Wednesday, the 25rd March 2015
अङ्गुष्टमात्र: पुरुषो मध्य आत्मनि तिष्टति
ईसानां भूतभव्यस्य न ततो विजुगुप्सते ॥

அங்குஷ்ட மாத்ர: புருஷ: மத்ய ஆத்மனி திஷ்டதி
ஈஸானம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே


தெய்வத்தின் குரல் எங்கும் ஒலிக்கும். அதன் வெளிச்சமே ஒளி. திருக்கோவிலூர் ரேழியில் முதலாழ்வார்களை நெருக்கியவன், அந்த நீக்கமற நிறைந்தவனாகிய தெய்வமே. ஆங்கிலத்தில் Omnipresent, Omniscient என்பார்கள் அதே கருத்தை.

இதயம் எனப்படும் பெட்டகத்தே, கட்டைவிரல் அளவு இடைவெளிக்குள் ஒடுக்கிக்கொண்டு ஆனந்தமாக உறைவதும், அவனே. 

எல்லை அறிய இயலாத  ஆகாய வெளியில் விசாலமாக  விரிந்திருப்பதும் அவனே. பரம்பொருள் என்கிறார்கள்.

அனாதி காலம் முதற்கொண்டு, என்றென்றும் காலம், நேரம், நாள், கிழமை போன்ற 
கால அளவுகளை கடந்தவனாகிய  கடவுளை உணர்ந்து கொண்டுவிட்டால், அந்த  பாகியசாலிகள் தங்களை எதிலிருந்தும் காத்துக்கொள்ள முனைவதில்லை என்பதே இந்த கடோபனிஷத்  செய்யுளின் பொருள். 

தன்னையும் 
சுற்றத்தையும் பிரித்தறியாமல் 
தன்னுள்
இருப்பதே எங்கும் இருப்பது 
என்று உணர்ந்தபின் எதனிடமிருந்து எதை காப்பாற்றுவது? 
-#-

Monday, November 9, 2015

அன்றொரு நாள்: ஜூலை 6/7

அன்றொரு நாள்: ஜூலை 6/7


‘மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
எந்நோற்றான் கொல்லெனும் சொல்.’

என்ன நோன்பும், உதவியும் வேண்டிக்கிடக்கிறது? ஜீ.எல்.பாட்ரா அவர்கள் ஜனாதிபதி முன் நிற்கிறார், கண்களில் நீர் ததும்ப, நெஞ்சடைக்க, மனமுடைந்து, உடல் தளர்ந்து, ஆத்மபலம் கரைந்தது போல். அவற்றை எல்லாம் கட்டிப்போட்டதால், அஃறிணையாக, ‘கானகத்தே நிற்கும் நெடு மரம் போல்’. ஜடம். படத்தைப் பாருங்கள். 15 ஆகஸ்ட் 1999 அன்று, இந்த நிகழ்வு.
கார்கில் யுத்தம். அண்டை அயல் அநாவசியமாகத் தொடுத்த யுத்தம். சிந்திய  இரத்தத்தை நினைத்தால், மனம் கலங்குகிறது. அதான் சிவப்பு மசி.
இலக்கு 5140 என்ற இடத்தை பிடிக்க செல்கிறார், ‘சிம்ம ராஜா’ கேப்டன் விக்ரம் பாட்ரா (24) (13, ஜேஏகே ரைஃபில்ஸ் & டெல்டா கம்பெனி). பகையை எதிர்பாராத விதமாகத் தாக்கவேண்டுமென, அவரும், ஐந்து வீரர்களும் ஒரு செங்குத்தான பாதை மேல் ஏற, பகையின் மிஷின்கன் தாக்குதல் கடுமை. ‘த கன்ஸ் ஆஃப் நவ்ரோன்’ சினிமா பார்த்திருக்கிறீர்களோ? அந்த மாதிரியான இக்கட்டு; நெருக்கடி. கையும் கையுமாகக் கலந்த கடுமையான போரில், இவரது கையால் இறந்தது மூன்று பகையாளிகள். பலத்த காயம் பட்ட பிறகு போராடிய இவரது துணிச்சலால் உந்தப்பட்டு, இவர் படை ஆவேசத்துடன் இயங்க, அந்த இலக்கு பிடிப்பட்டது: அதிகாலை 3:30. 20 ஜூன் 1999. ஒன்றன் பின் ஒன்றாக, இலக்கு 5100, இலக்கு 4700, உச்சி, மூன்று புள்ளிகள் ஆகியவை இவரது வசமாயின. அடுத்து, கேப்டன் அனுஜ் நய்யார், சஞ்சய் குமார் (இவருக்கும் இதே விருது;சரியான கூட்டாளி, விக்ரமுக்கு.) உதவியுடன், இலக்கு 4750 ஐயும், இலக்கு 4875 ஐயும் பிடிக்கும் தறுவாயில், கேப்டன் விக்ரம் பட்ரா வீரமரணம் எய்தினார். அதிகாலை: 6/7 ஜூலை 1999. ( என்ன இலக்கு வேண்டியிருக்கு, போங்கள்?) அவரது மரண வாக்கு, ‘என் தெய்வத்தாய்க்கு (பாரதமாதா) ஜே!’. 

அவருக்கு இந்தியாவின் அதி உன்னதமான ‘பரம் வீர் சக்ரா’ அருளிய திருவிழாவை முதலில் பார்த்தோம். 
இன்றைய இடுகைக்கு நடத்திய ஆய்வில் பரம வீர் சக்ராவை பற்றிய வரலாற்று செய்திகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. அந்த ஆய்வில் என்னை தோய்த்து எடுத்தன. இரண்டை மட்டும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன். விக்ரமும் சரி, முதல் முதலாக 1948ல் இந்த பதக்கத்தை பெற்ற மேஜர் ஸோம்நாத் சர்மாவும் ஒரே ஊர்: பாலன்பூர். மேலும், இந்த பதக்கத்தின் வடிவமைத்துக்கொடுத்தவர், திருமதி.சாவித்ரி கனோல்கர் என்ற அன்னிய நாட்டு பெண்மணி. அவருடைய வடமொழி ஞானம், இந்திய ஆன்மீக  ஆர்வம், வேதத்தை பற்றிய ஞானம் ஆகியவற்றை வைத்து தான் அவரை அணுகினார்கள். அவரும் ததீசி முனிவர் வஜ்ராயுதத்திற்காக, தன் எலும்பை கொடுத்த  நிகழ்வின் அடிப்படையில், இந்த பதக்கத்தை வடிவமைத்தார்.(தாய்: ரஷ்யன் தந்தை:ஹங்கேரியன்: கணவன்: இந்தியர்:ராணுவ அதிகாரி) மேஜர் ஸோம்நாத் சர்மா, இவரின் மாப்பிள்ளையின் அண்ணன். இந்த பதக்கம் நம் நாட்டுக்கு வேண்டும் என்றவர், நேரு. இதன் முன்னோடி: இங்கிலாந்தின் விக்டோரியா க்ராஸ் என்ற செப்புப் பதக்கம். விக்டோரியா க்ராஸ்ஸின் வரலாறும் அதை பெற்ற தியாகச்செம்மல்களின் வீர தீர பராக்ரமங்களும், ரோமஹர்ஷம் வருமளவுக்கு, துணிச்சலானவை. 

ஒரு வேளை, மற்றதெல்லாம் விட்டு விட்டு, பரம வீர் சக்ராவும், விக்டோரியா க்ராஸ்ஸும் மட்டுமே என் கவனத்தின் மீது ஆளுமை செய்யுமோ?
இன்னம்பூரான்
07 07 2011
உசாத்துணை:




Param Vir Chakra
Mr Girdhari Lal Batra with his son's Param Vir Chakra medal. A grateful nation applauds the Batra family.

Full size: 399x791 
Image Credit: http://www.bharat-rakshak.com/ARMY/Galleries/2590-3/Batra08.jpg






Point 5140
Reconnaissance for the capture of Point 5140. Sitting Left to Right: Lieutenant Vikram Batra, Major Vikas Vohra, Captain Chatterji and the CO of 13 JAK Rifles, Lieutenant Colonel Y K Joshi.

Full size: 490x291 






Copyright BHARAT RAKSHAK. All rights reserved.Reproduction in whole or in part in any form or medium without express written permission of BHARAT RAKSHAK is prohibited.
Copyright BHARAT RAKSHAK. All rights reserved.Reproduction in whole or in part in any form or medium without express written permission of BHARAT RAKSHAK is prohibited.






Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
7/7/11

to thamizhvaasal, me 





மிக மிக அருமையான, கண்ணீர் கொட்ட வைக்கும் இடுகை ஐயா.  பல ராணுவ அதிகாரிகளுடன் நட்பு முறையில் நெருக்கமாகப் பழகியதால் இந்த உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. அமைதிப்படையின் பரமேச்வரனும், மெட்ராஜ் ரெஜிமெண்டின் விசாகன் என்னும் கர்னலும் எங்கள் நண்பர்கள்.  அதுவும் விசாகனின் பெண்ணும், எங்க பெண்ணும் ஒரே வகுப்பு.  உல்ஃபா தீவிரவாதிகளால் விசாகன் அவர் குடும்பத்தினர் கண்ணெதிரே கொல்லப்பட்டபோது அழுகையை அடக்க முடியவில்லை.  இப்படி எத்தனை எத்தனை நண்பர்கள்!  மனம் கனத்துத் தான் போகிறது. :((((((((((

2011/7/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>




Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>Unsubscribe
7/7/11

to thamizhvaasal 





பரம்வீர்சக்ரா பற்றிய தொலைக்காட்சித் தொடர் ஒன்று தூர்தர்ஷன் மட்டுமே பிரபலமாக இருந்த நாட்களில் வந்திருக்கிறது.  கோர்கா ரெஜிமெண்டின் மேஜர் ஜெனரல் தாபா அவர்கள் அதிலே முன்னுரை கொடுத்திருப்பார்.

Sunday, November 8, 2015

நாளொரு பக்கம் 29

நாளொரு பக்கம் 29

Tuesday, the 24rd March 2015

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு. 
-திரிகடுகம் 6


பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும்:
தற்புகழ்ச்சியையே தவிர்ப்பது கடினம். சுயநலத்திற்காகவோ, மரியாதை நிமித்தமாகவோ, பணிவன்புடனோ பிறர் புகழ்மாலை சாற்றினால் உச்சி குளிர்ந்துவிடும். மற்றவர் பேணுவதை நாடுவீர்கள். அதை லஜ்ஜையுடன் கையாளுவது சாலத்தகும்.
பேணார்
திறன் வேறு கூறின் பொறையும்:

புகழ் வரவு. இழிச்சொல்லோ பற்று (அதாவது [-]). இழிச்சொல்லை ஜீரணம் செய்வது கடினம். அது சொற்போரையோ, கைகலப்பையோ துவக்கலாம். தேவையா? பொறுத்தாள்வதே விவேகம்.

அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும்:

பிறருக்கு மைம்மாறு செய்யும் தருணம் கிட்டினால், அதை கொடுப்பினையாக கருதாமல், கைம்மாறு எதிர்பார்ப்பதைத் தவிர்த்து, ‘பணி செய்து கிடப்பது என் கடனே’ என்ற ஆளுமை தான் நற்பயன். செருக்கு என்றால் அகந்தை என்ற பொருள் இங்கு இல்லை. அது பெருமிதத்தைக் குறிக்கிறது.
-#-