Monday, December 31, 2018

அன்றொரு நாள்: ஜனவரி: 1: 2019:சிசு தரிசனம்:




அன்றொரு நாள்: ஜனவரி: 1 சிசு தரிசனம்





01-Jan-2012 00:26/ 2019




Information is key; Knowledge is the Threshold; Wisdom is 
the Treasure House. 


The caption is : This Day; Those Times.


I wrote everyday in 2012 and the styles vary; this is the Tamil Biblical style early 19th century. There was a huge following as many little-known subjects were covered and lively comments followed

I wish  A HAPPY & PROSPEROUS & STUDIOUS NEW YEAR 2019 TO  ALL OF YOU ALL OVER INDIA AND ALL MY VISITORS AND HOPE FOR FEEDBACKS FROM NOW ON.
Innamburan
January 1, 2019


அன்றொரு நாள்: ஜனவரி: 1
சிசு தரிசனம்


‘ ... கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்... அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது... அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்... அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்...’
~ விவிலியம்: மத்தேயு: அதிகாரம் 2: 1,2,9,10,11
மேற்கத்திய கலாச்சாரம் தழுவிய புத்தாண்டு தினத்தில், திருமலை வெங்கடேசனை தரிசிக்க ஏகப்பட்ட கூட்டம். சந்துஷ்டியை தேடி அலையும் மானிடர்களுக்கு, ஏதோ ஒரு பிரமேயம் கிடைத்தால் போதும். குழந்தைகளை இனம் தெரியாத உபத்ரவங்கள் படுத்தினால், ஹிந்து குடும்பங்கள் மசூதியில் சென்று, தொழுகை முடிந்த பின் ‘துவா’ பெறுவது உண்டு. ஹிந்துக்கள் நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி மாதாகோயிலுக்கும் பயபக்தியுடன் செல்வதும் உண்டு. ‘சிசு தரிசனமும்’ சமய எல்லைகளையும், சம்பிரதாய லக்ஷ்மணரேகைகளையும்  கடந்ததுவே. பீடிகை முடிந்தது.


கிருஸ்துமஸ் பண்டிகை முடிந்தவுடன், சாங்கோபாங்கமாக, ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. விவிலயத்திலுள்ள அந்த கதை பற்றிய உன்னத ஓவியங்களை லியோனார்டா வின்ஸி என்ற பன்முகக் கலைஞர் வரைந்தார். டீ.எஸ்.எலியட் என்ற கவிஞர் ஆன்மிகக்கவிதைத்தொடரொன்று படைத்தார். 1931ம் வருடத்தில் எழுதப்பட்ட உசாத்துணையில் இருக்கும் நூல் சொக்கவைக்கும் சொக்கத்தங்கம். இனி கதை சுருக்கம்:

இது ‘பட்டொளி பாதை’யே தான், ஒரு நக்ஷத்திரம் வழித்துணையாக இயங்குவதால். ஸில்க் ரோடு. ஒரு உயர் பிரஞ்ஞை உந்த, உந்த, மூன்று சீன ‘தாவோ’ ஞானிகள் புனித யாத்திரையை தொடங்கினார்கள். இது சீன புத்தாண்டு விழா மட்டுமல்ல, ஒரு புதிய சகாப்தத்தின் நல்வரவு என்று அவர்கள் உணர்ந்தார்கள். 

இலக்கு:பெத்லஹேம்.நாட்க்கணக்காக நடந்த பின், பெத்லஹேம் அடைந்து திருக்குமாரனை தொழுத பின், (கம்சனை போன்ற) ஹீராட் மன்னன் அறியாத வழியில் திரும்பியபோது, ஒரு பாலைவனச்சோலையை அடைந்தார்கள். அங்கு ‘மாகி’ எனப்படும் சமூகம் அவர்களுக்கு விருந்தோம்பினர். கைகட்டி, வாய் புதைத்து அவர்களின் தலைவரான மாகி, வந்திருந்த ஞானிகளின் தலைவரான சிஃபு அவர்களுடன் நடத்திய ஆன்மீக உரையாடல்:

மாகி: வெகு தொலைவில் உள்ள சீனாவில், உங்களுக்கு தேவகுமாரனின் வருகை பற்றி எப்படித் தெரியும்?

ஸிஃபு: எமக்குள் திருக்குமாரன் ~ஒரு ‘புத்தர் பிரான்’ ~ அவதாரம் பற்றிய உள்ளொலி எழுந்தது. தியானமும், நக்ஷத்ரமும் வழி காட்டின. ஓரிரவு சிலுவை உருவில் எழுந்த ஒரு நக்ஷத்திரக்கூட்டம் பட்டொளி பாட்டையில் அழைத்து சென்றது.

மாகி: நீங்கள் சிசு தரிசனம் செய்தது எப்படி?

ஸிஃபு: அந்த விண்மீன் எம்மை பெத்லஹெமுக்கு அழைத்துச் சென்றது; ஒரே கூட்டம்; குழப்பம்; கலவரம்.அவரவர் ஊருக்கு திரும்பவேண்டும் என்ற அரசாணை. எங்களுக்கு தங்க இடம் கிடைக்கவில்லை. ஒரு விடுதியின் பின் உள்ள மாட்டு தொழுவத்தில் தங்கச் சொன்னார்கள். ஒட்டகங்களை கட்டி விட்டு, மூட்டை முடிச்சுகளை அவிழ்த்து விட்டு, அங்கு போனால், பல இடையர்கள் அங்கு. எதையோ கண்டு மகிழ்ந்த வண்ணம் இருந்தனர். ஒரு சுயம்பிரகாசமான ஒளி வீச்சு! நாங்கள் விழுந்து வணங்கினோம்; தொழுதோம். எம்முள் இருந்த உள்ளொலி உள்ளொளியாக பிரகாசித்தது. அது அன்னையில் அரவணைப்புப் போல எனலாம். தலை நிமிர்ந்தால், கண்கொள்ளாக்காட்சி! வைக்கோல் பிரிமணை மீது அன்னை மேரி. தொழுவத்தில், திருக்குமாரன். எங்களுக்கோ, மற்றவர்கள் போல, புனர்ஜன்மம். தொழுதோம், பக்தி பரவசத்துடன். ககன சாரிகை தான், போங்கள்!

ஒரு மாகி சமூகத்தினர்: கன்னி மாதாவின் குழவி! இது இறையின் அவதாரமே!

ஸிஃபி: ஆம். அப்படித்தான் தோன்றியது.

மாகி: நீங்கள் பரிசுகள் பல சமர்ப்பித்ததாக கேள்விப்பட்டோம்.

ஸிஃபி: ஓ! பொன்னும், மணியும், பூஜை புனஸ்காரம் செய்ய சூடம், சாம்பிராணி, ஊதுவத்தி, வாசனைப்பொடிகள், புனுகு, ஜவ்வாது, எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் நாட்டு வைத்திய அறிவுரைகள். பொன் நீரை சுத்திகரிக்கும்; நாங்கள் கொணர்ந்தவையில் கிருமிநாசினிகளும் உண்டு.
மாகி: அப்பறம்?

ஸிஃபி: எல்லாரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும், அரசபயம் இருந்தது. மன்னன் ஹீராட் சிசுஹத்திக்குக் காத்திருந்தான்.

மாகி: என்ன ஆச்சு?

ஸிஃபி:கவலையற்க, நண்பரே. தாயும், சேயும் ஒரு மாகி நண்பர் வீட்டில் அடைக்கலம். உரிய நேரத்தில் திருக்குமாரர் மார்க்கபந்துவாக வந்து ‘டாவோ’ அறநெறியை பரப்புவார்.

மாகி: என்னே ஆச்சரியம்! இருள் நீங்கி பிரகாசம் வரும் வேளையில், நாம் ‘மித்ரா’ என்று ஆதவனை தொழும் வேளையில் திருக்குமாரர் அவதாரம்.

ஸிஃபி: ததாஸ்து. புதிய சகாப்தம் விடிந்ததாக, அசரீரி சொல்கிறது.

மாகி: என்னே ஆச்சிரியம்! மோசஸ் ஒரு குப்பியில் அடைபட்டு மிதந்ததாக சொல்கிறார்கள். தொழுவத்தில் தேவகுமாரன்.

ஸிஃபி: புத்தபிரான்கள் பலதடவை வந்தனர். அதற்கான அறிகுறிகளில் மாற்றமேதும் இல்லை.

மாகி: தொழுவம்: இது எதற்கு சின்னம் ஆகிறது?


ஸிஃபி: ஒருகால், அது நாம் விலங்கின இயல்புகளை துறக்கவேண்டும் என்பதற்கான சின்னமாக இருக்கலாம். இரக்க ஸ்வபாவத்தை நமக்கு அளிப்பதற்காக இருக்கலாம். இந்த தெய்வீக சிசுவின் சான்னித்யத்தை உணர்த்த இருக்கலாம்.

மாகி: ஸிஃபி! இந்த சிசுவின் மேன்மையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஸிஃபி: கெளதமர் சமீபத்தில் அவதரித்த புத்தர் பிரான். அவர் மாதிரியே, இந்த மாமுனியும் கருணாமூர்த்தியாகவும், குருநாதராகவும் விளங்குவார் என்று எனக்கு தோன்றுகிறது. குருமுகங்கள் வந்து போகும். ஆனால், உன்னதமான சிஷ்யர்களுக்கு மட்டும் தானே ஞானம் கிட்டும்.
இன்னம்பூரான்
01 01 2012
Adoration-of-the-Magi-c.-1725.jpg


உசாத்துணை:
Magre,M. (Translation: Merton, R.R.(1931) Return of the Magi.



Wednesday, September 19, 2018

நீதி, நெறி நழுவாமல்…1


நீதி, நெறி நழுவாமல்…1

இன்னம்பூரான்
2018-09-18
மக்களை கட்டி மேய்ப்பது எளிது அன்று. உயிரினங்களில் மனித இனம் மட்டும் தான் கட்டுப்பாடு இல்லையெனில் ஊரையே மேயும்.கரையை கரைக்கும். மரையை கழட்டும். கூறையை பிரிக்கும். சூறையாடும். கூறு போடும், பொது சொத்தை.
சிங்கம், புலி, புரவி, எருது, பசு மாடு எல்லாவற்றின் மீதும் ஆளுமை செலுத்தும் மனிதனை அவனுடைய தனயன் கூட மதிக்காததைக் கண்கூடாக பர்க்கிறோம். மனித இனம் கூடி வாழ்வதை விரும்புகிறது. அதற்காக, தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கி வைக்கவும் கற்றுக்கொள்கிறது. அது சமுதாய நலன் பொருட்டு இன்றியமையாத தியாகம் என்று தோன்றினாலும், உண்மையில் தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளும் தந்திரம் எனலாம். சமுதாய நலனும், சுயநலமும் ஒரே பாட்டையில் பயணிக்க இயலவில்லை என்றால், உதட்டளவில் சமுதாய நலம் நாடி, செயலில் சுயநலம் தேடி இயங்குபவர்களை சமூக விரோதிகள் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. நீதி அவர்களை இனம் கண்டு தண்டிக்கவேண்டும். நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது கூட ஒரு உருவகம் தான். பாரத தேசமும், குறிப்பாக தமிழகமும் தொன்மையானவை, அவற்றின் வரலாறு, இலக்கியம், தத்துவம், கலாச்சாரம்,பழமை ஆகியவை போற்றத்தக்கவை என்பது போல கிரேக்க/ ரோமானிய வரலாறு, இலக்கியம், தத்துவம், கலாச்சாரம்,பழமை ஆகியவையும் போற்றத்தக்கவை என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.
ஜஸ்டியா அகஸ்டா என்ற ரோமானிய நீதி தேவதை ஒரு அலங்கரிக்கப்பட்ட அரியாசனத்தில் அமர்ந்து அருள் பாலிப்பது ஜனவரி மாதம் 8ம் தேதி 13 கி.மு. முதல் ஒரு ஆலயத்தைல் துவக்கப்பட்டதாக ரோமானிய தொன்மை கூறுகிறது. அகஸ்டஸ் என்ற ராஜாதி ராஜன் தான் நீதி தேவதையை நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அவள் திறந்தக் கண்ணிளாள். கி.பி. 16ம் நூற்றாண்டில் தான் அவளது கண்மலர்கள் மூடப்பட்டன, பாரபக்ஷமில்லால் இயங்குபவள் என்பதை முன்னிறுத்த. அவளுக்கு செல்வம், அதிகாரம், பதவி ஆகியவற்றுக்கு முக்கியத்வம் கொடுக்கத் தெரியாது. கண்கட்டுடன் காணப்படும் நீதி தேவதை முதலில் ஸ்விட்சர்லாந்தில் பெர்ன் நகரில் 1543ல் அவதரித்தாள். லண்டனில் இருக்கும் ஓல்ட் பெய்லி நீதி மன்றம் பழமையானது மட்டுமல்ல; பிரபல வழக்குகள் அங்கு மன்றாடப்பட்டன. அங்கு அருள் பாலிக்கும் நீதி தேவதைக்கு ‘கண்மூடி’ கிடையாது. அந்த கோர்ட்டாரின் தலபுராணம் நல்லதொரு விளக்கம் தருகிறது. புராதன ரோமானிய தேவதை விழிப்புடன் தான் இருந்தாள். அவள் ஒரு கன்னிகை தேவதை என்பதால் பாரபக்ஷமின்மைக்கு உத்தரவாதம் உளது என்கிறது. இப்போது தேவதா விசுவாசத்தை சற்றே நகற்றி வைத்து விட்டு, நீதி பரிபாலனத்தைப் பற்றி சில வரிகள்.
மக்களை கட்டி மேய்க்க சமுதாய விதிகள் தேவை. அவற்றில் சில வேலியை மேய்க்கும் என்பது வரலாறு
அடிக்கடி கூறும் கசப்பான உண்மை. கட்டை பஞ்சாயத்து முரட்டுத்தனமாக குருட்டு நீதி வழங்குவதை ஊடகங்கள் அவ்வப்பொழுது சன்னமான குரலில் எடுத்துரைக்கின்றன. பிறகு யாவரும் மறந்து விடுவார்கள். சில சமுதாயங்கள் சட்டம் அனுமதிக்கும்/ வரவேற்கும் கலப்பு மணங்களை தடை செய்யும், சட்ட விரோதமான வன்முறை எதிர்ப்புக்களை கண்டு கொள்ளாது. அரசாங்கம் என்றதொரு அதிகார மையம் இருந்தால், சமுதாய நலன் அக்கறையுடன் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. விதிகள், அதற்கேற்ப இயற்றப்படும்; அவற்றை அரசு நிர்வகிக்கும்; நீதி மன்றங்கள் சட்டத்தை பாதுகாக்கும். மாண்டெஸ்கோ என்ற சிந்தனையாளர் Separation of Powers என்று எழுதிய அரசியல் கோட்பாடுகளை இதற்கு முந்திய ஒரு வரியில் அடக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே தொடரவேண்டி இருக்கிறது. இது ஒரு முகாந்திரம் மட்டுமே.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/b/ba/NewarkJustice1.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.co















Tuesday, September 11, 2018

பேஷ்! பேஷ்!! [11]




பேஷ்! பேஷ்!! [11]

தம் தமா தம்! 
ஷிகாகோ மாநகரில் உலக ஹிந்து காங்கிரஸ் மாநாடு சுபமாக நடந்தேறியது, சண்டை சச்சரவுகளுக்கு நடுவில். அதை பற்றி ஒரு அருமையான கேலிச்சித்திரம்: 

1893: ‘எனது அமெரிக்க சோதரர்களே, சோதரிகளே! சிங்கங்களாகிய நீங்கள் ஆட்டுமந்தையாயினேரே! ... [ஸ்வாமி விவேகாநந்தா]

2018: ‘காட்டுநாய்கள் சிங்கத்தை தாக்குகின்றன...[மோஹன் பகவத்]

காப்புரிமை பொருட்டு அந்த கேலிச்சித்திரத்தை இங்கு பதிவு செய்ய அனுமதி கிடைக்கவில்லை. 

தகவல்: 
ஹிந்து ஒற்றுமையையும், எழுச்சியையும் ஓங்கி வளருவதை ஆதரித்த இந்த மாநாட்டில் விநோதமான அறிவுரைகளும் வழங்கப்பட்டன. 
1. பதினாறும் பெற்று ஹிந்து ஜனத்தொகையை பெருக்கவேண்டும் என்ற அறைகூவல்!!!! - சாது மது பண்டித தாசா.
2. ஹிந்துக்கள் அடிக்கடி தாக்கப்படுவதால், அவர்கள் வன்மையை கடைபிடிக்கவேண்டும். - எஃப் காத்திய(ர்). 
3. தற்காலம் இதை எதிர்கொள்ள  ஈ.வே.ரா. அவர்கள் இல்லையே என்ற தாபமும் இருந்திருக்கலாம் என கேள்வி.
4. திலீப் அமீன் என்ற தர்ம தூதர்பிரான் ‘கலப்பு மணம் ஒழிக!’ என்ற வாசகங்களுடன் தொங்கவிடப்பட்ட படங்கள் அகற்றப்பட்டன.
5. மாநாட்டில் கலந்து கொண்ட உபஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு அவர்கள், நல்ல வேளை, இந்த அறிவுரைகளை அரசு ஆதரிக்க வில்லை என்றார். நானும் மூச்சை இழுத்து விட்டேன்.
6. அமெரிக்கா வாழ் சட்ட நிபுணர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அருமையாக உரை ஆற்றினார். யாவரும் ஸ்வாமி விவேகானந்தரின் போதனைகளை மட்டும் பின்பற்றவேண்டும் என்றார். கவனிக்கவும். காழ்ப்புணர்ச்சியை அறவே ஒழிக்கவேண்டும் என்றார். அவருடைய நண்பர்கள் அவரை தடுத்தாட்கொண்டபோதும், நற்செய்திகளையும், பொன்வாக்குகளையும் அளிக்கத்தவறக்கூடாது என்ற நெறியுடன் அவர் பேசியது, இன்று உலகெங்கும் பேசப்படுகிறது. 
7.ஷிகாகோ ட் ரிப்யூன் இதழில் எதிர்வாதங்கள் முழங்கும் விளம்பரம் வெளிவந்தது.
8. கைகலப்பு நடந்ததாக சொல்கிறார்கள். 
யாமொன்றும் அறியேன், பராபரமே!
பேஷ்! பேஷ்!! 

-#-




















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, September 10, 2018

பேஷ்! பேஷ்!! [9]

பேஷ்! பேஷ்!! [9]                    
இன்னம்பூரான்
10 09 2014
எத்தனை நாட்கள் இது ஓடுமோ தெரியவில்லை. நாட்தோறும், ‘பேஷ்! பேஷ்!!’, ‘சபாஷ்! சபாஷ்’, ‘பலே! பலே!!’, ‘அடடா!’, ‘பின்னிட்டாள் (ர்)டா!’ தகவல்கள் ஆயிரம் தடா வந்துக்கொட்டிக்கொண்டிருக்கின்றன. எதை விட்டால் நிந்தனை குறையும் என்ற கவலை வாட்டி எடுக்கிறது. இன்றைய தகவல்:
கல்லிடைக்குறிச்சியின் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலிலிருந்து 600 வருடம் வயதான ஒரு நடராஜர் சிலை 1982ல் அபேஸ். அந்த கோயிலினால் என்ன பயன், அந்த சிலையினால் என்ன பயன் என்று எல்லாம் வல்ல சுயமரியாதை அன்பர்கள் கேட்டால், எனக்கு பதில் தெரியாது. ஆகமொத்தம், அது 30 கோடி ரூபாய்க்கு ஆஸ்ட்ரேலியாவுக்கு விற்கப்பட்ட கற்சிற்பம். ஒரு சமயம் அந்த நாட்டில் ஏன் இதற்கு மவுசு  என்ற வினா எழும். கூட போக்கடிக்கப்பட்டது, சிவகாமி அம்மன். திரும்பி வந்தது சிவகாமியின் சிலையா அல்லது ஃபேக்கா? என்ற  ஐயம் தீரவில்லை. மேலும், மாணிக்கவாசகர் சிலை ஒன்றும், ஶ்ரீ பலி நாயகர் சிலை ஒன்றும் கவரப்பட்டாலும், இரண்டே வருடங்களில், போலீஸ் கேஸை கச்சிதமாக முடித்துக்கொண்டது. தற்காலத்து சிற்பமீட்டாளர் திரு.பொன். மாணிக்கவேல் அவர்களின் குழு, இந்த பாண்டியர் காலத்து சிற்பத்தை மீட்டு விட்டது. அவர்களுக்கு, இந்த சிலைகளை கடப் செய்தவர்கள் யார் என்று தெரியுமாம். அவர்களை பிடிச்சு பிச்சு உதறவேண்டும்.
                                பேஷ்! பேஷ்!! [9]      
-#-


Sunday, September 9, 2018

பேஷ்! பேஷ்!! [8]


பேஷ்! பேஷ்!! [8]
இன்னம்பூரான்
செப்டம்பர் 10, 2018
மனிதனொருவன் மாதொருவளுடன் தொடர்பு வைத்திருந்தான். அவர்களுக்குள் பிணக்கம் ஏற்பட்டதால், உறவும் உடைந்தது. அவளும் அவன் மேல் பாலியல் வன்புணர்வு வழக்குத் தொடுத்தாள். அவனை கைது செய்தார்கள். 1955ல் பானிப்பெட் கோர்ட்டாரும் அவனுக்கு ஏழு வருட சிறை தண்டனை அளித்தார்கள். மூன்று வருடங்கள் சிறை வாசத்த்துக்கு பிறகு, சட்டரீதியாக தற்காலிக விடுதலை பெற்ற அவன், திரும்பவே இல்லை. அங்குமிங்குமாக பல உணவு விடுதிகளில் பாத்திரம் கழுவி, வயிறு கழுவி வந்த அவனை, 19 வருடங்களுக்குப் பிறகு லூதியானா ரயில் நிலைய உணவகத்தில் வேலை செய்து வந்த காலகட்டத்தில் தன் குடும்பத்தைப் பார்க்கவந்த போது பிடித்து விட்டார்கள், போலீஸார். இந்த போலீஸ் தரப்பு செய்தியில், இவன் மேல் தொடரப்பட்ட வழக்கின் உண்மை நிலை பற்றி செய்தி இல்லை!
பேஷ்! பேஷ்!!
-#-











இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com










Wednesday, September 5, 2018

பேஷ்! பேஷ்! [7]



பேஷ்! பேஷ்! [7]

சொல்லலாகுமோ, ஐயா? காலத்தின் கோலத்தை
பொல்லாப்பு வந்தால் என் செய்வது, சொல்லுமய்யா,
சொல்லலாகுமோ, ஐயா? தன் மானத்தை இழக்கலாகுமோ?
மொள்ளலாமோ, ஐயா, ஆலகால நஞ்சுப் பொட்டலத்தை?
பேஷ்! பேஷ்!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com






Tuesday, September 4, 2018

பேஷ்! பேஷ்!! [6]



பேஷ்! பேஷ்!! [6]
இன்னம்பூரான்
செப்டம்பர் 4, 2018

தண்டல்காரன் [போலீஸ்] என்றால்  'தூத்துக்குடி பீதி' என்றாலும், பொதுவாக மக்கள் அவனை தள்ளித்தான் வைக்கிறார்கள். அவர்கள் படும் அவதியும், ஆற்றாமையும் வெளியில் தென்படுவதில்லை. உயர் அதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலை செய்கிறார்கள் என்பதும் உலகமறிந்த விஷயம் தான். ஒரு சமயம் கனம் கோர்ட்டார்கள் ஆணைக்கு உட்பட்டு நிறுத்தி விட்டார்களோ என்பதை யான் அறியேன். அவர்கள் சங்கம் அமைத்து கம்யூனிஸ்ட் வழியில் போராடவும் முடியாது. அவர்களில் ஒருசாராரை அரசு படுத்துவதாக கோர்ட்டாருக்கு தெரிய வந்துள்ளது. நியாயமான தீர்ப்பை வழங்கிவிட்டார்கள்.

வழக்கு:
பாபுலால் மித்தரலால் என்ற டில்லி போலீஸ் கான்ஸ்டபிள் அவர்களுக்கு ஒரு மன அழுத்தம், கவலை, 
அவமானம், பட்ஜெட்டில் உதைக்கிறது, மனைவிக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்று கேட்டால், அவருடைய மாத சம்பளம் 2006க்கு பிறகு வந்த கான்ஸ்டபிள்களை விட ரூ.1900 குறைவு. அரசு பணியில் உள்ளவர்களுக்கு தனியாக அமைந்துள்ள நீதி மன்றத்தில் தாவா தொடர்ந்து வெற்றி பெற்றார். அவருடைய வக்கீல், தொழிற்சங்கங்கள் இருந்தால், இவ்வாறு பாதிக்கப்பட்ட 4000 நபர்களும் ஒரு வழக்குப்போட்டு நியாயம் பெறலாம். ஆனால், போலீசார் சங்கம் நிறுவ முடியாதே. என்று போட்டு உடைத்தார். சர்வ வல்லமையுடன், அங்கேயும், இங்கேயும் அரசாளும் மத்திய அரசு, கஜானா காலி என்று கையை விரித்து, பாபுலாலுக்கு மட்டும் ஈடு செய்தார்கள். அப்பனே! இது அரசியல் சாஸனத்துக்கு விரோதம் என்று உயர் நீதி மன்றம் டோஸ் கொடுத்தது. தேவையா?
பேஷ்! பேஷ்!! [6]
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com














Saturday, September 1, 2018

பேஷ்! பேஷ்!! [5]

பேஷ்! பேஷ்!! [5]
இன்னம்பூரான்
ஸெப்டம்பர் 2, 2018-09-02

சுப்பராயநாதனும், சையது ஒமரும், ஹாசனும் கூட்டுக்களவாணி பயசங்க. ஒத்தன் ஜட்காவண்டி ஓட்ரவன். ஒத்தன் மினி ஜவுளி வியாபாரி. கடசி பொடிப்பய வெட்டிப்பய. மே 17 தேதி அன்று முதல் ஆசாமியின் ஜட்காவில் 6 வீசை 31/2 பலம் கஞ்சா கடத்திப்போவதை மோப்பம் பிடிச்சு, பிடிச்சுப்பிட்டாங்க. மாஜிஸ்ட்ரேட் எசமானும் அவங்களுக்கு அவராதம் போட்டாரு. கட்டாட்டா காராகிருகம் அப்டின்னு கறாரா சொல்லிட்டாரு. கசக்குதா என்ன? காசைக்கட்டிப்பிட்டு, காட்டுக்குப்போய் கஞ்சா பறிச்சு அடுத்த ராஸ்தாலெ போய் கஞ்சாவை காசாக்கினாங்க.

சத்யா ராவும், சீநியும் ஜனவரி 8 2013 அன்று கெளரிப்பட்டினம் கிட்ட போலீஸ்லெ 

மாட்டிக்கிட்டாங்க. ஒரு காரில் 475 கிலோ கஞ்சாவை படேரு கிராமத்திலிருந்து 

விசாகப்பட்டினத்துக்குக் கடத்திட்டு போறாங்க. அப்பத்தான் மாட்டிக்கிட்டாங்க. இது 

எத்தானாவாது தடவையோ? வந்த கோபத்தில் ஜட்ஜ் ஐயா 14 வருஷம் ஜெயில் என்று சொல்லிப்போட்டார்.

மகாஜனங்களே! என்ன முன்னேற்றம் பாருங்க. ஆறு வீசையை நாதனோட ஜட்காவில் கடத்தியது 

மே 17, 1918. 475 கிலோவை காரில் கடத்தியது ஜனவரி 8,2013.

கிட்டத்தட்ட 95 வருடங்களில் என்னே முன்னேற்றம், லாகிரி வியாபாரத்தில்!

பேஷ்! பேஷ்!!