Saturday, September 24, 2016

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:XI

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:XI


இன்னம்பூரான்

25 09 2016



1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்ததில் ஒரு பகுதி:

வினா ஒன்றை எழுப்பி தானே அதற்கு பதில் அளிப்பது ஒரு உத்தி. பெரியவா அசுவமேத யாகத்தையும், அதன் தொடர்பாக அம்பாள் மீது உள்ள பக்தி தோத்திரங்கள் அளித்ததும் ஒரு முன்னுரை போல:

அவர் மேலும் சொல்வதின் முதல் பகுதி:

" இப்போது நான் 'ஜீவகாருண்யம்', 'பரோபகாரம்' என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப்பார்த்தேன். அந்த இரண்டு வார்த்தையும் தப்பு தான். ஏனென்றால், காருண்யம் -கருணை காட்டுவது -என்றால் இப்படிக்கருணை காட்டுபவர் ஒரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்கு பாத்திரமாபவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிர்யும் தொக்கி நிற்கிறது. நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விடத் தாழ்த்தியாக இருக்கிறார். நாம் 'கருணை'காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. உபகாரம் செய்வதின் பயனாக நமக்கு எளிமை அடக்கம் உண்டாக வேண்டும். மாறாக, உபகாரம் பண்ணும் போது, போனால் போகிறது என்று யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், அது அஹங்காரத்துக்கு இடமாகி விடுகிறது. உபகாரத்தால் தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்வதற்கு நேர் மாறாக ஆத்மஹானியே உண்டாகி விடும்...".



" இப்போது நான் 'ஜீவகாருண்யம்', 'பரோபகாரம்' என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப்பார்த்தேன். அந்த இரண்டு வார்த்தையும் தப்பு தான். ஏனென்றால், காருண்யம் -கருணை காட்டுவது -என்றால் இப்படிக்கருணை காட்டுபவர் ஒரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்கு பாத்திரமாபவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிர்யும் தொக்கி நிற்கிறது. நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விடத் தாழ்த்தியாக இருக்கிறார். நாம் 'கருணை'காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. உபகாரம் செய்வதின் பயனாக நமக்கு எளிமை அடக்கம் உண்டாக வேண்டும். மாறாக, உபகாரம் பண்ணும் போது, போனால் போகிறது என்று யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், அது அஹங்காரத்துக்கு இடமாகி விடுகிறது. உபகாரத்தால் தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்வதற்கு நேர் மாறாக ஆத்மஹானியே உண்டாகி விடும்...".
"கருணை, காருண்யம் என்கிற வார்த்தையை சொல்வதை விட, அன்பு என்று சொல்லி விட்டால், இந்த ஏற்ற தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடையே நாம் ஸ்வபாவமாகச் செய்கிற காரியம். இதிலே, போனால் போகிறது என்று யாரோ அன்னியருக்கு இரக்கம் காட்டுகிறமாதிரியான் அஹங்கார எண்ணம் இல்லை.


ஆனாலும் கூட நடைமுறை உலகில் இப்படி நம்மவர், அசலார் என்ற பேதமேயில்லாமல் ஸகலைரையும் ஒரே போல் பாவித்து, தாரதம்மியம் இல்லாமல் ஸ்வாபாவிகமான அன்பைச் செலுத்துவது  என்றால், அது ஆரம்பகாலத்தில் சாத்தியம் இல்லாமல் தான் இருக்கிறது. இந்த பொது இயற்கையை ஒப்புக்கொள்வது போலத்தான் திருவள்ளுவர் கூட அன்பு, அருள் (அருள் என்பதை கருணை என்று வைத்துகொள்ளலாம்) என்று பிரித்து, (distinction) சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்:
'அன்பு ஈன்ற குழந்தையே அருள் என்று அர்த்தம்.

~ இது வரை மீள்பதிவு.இனி, தொடர்:

இப்போது நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை மட்டும் நினைத்துக்கொண்டு அன்பு செலுத்துகிறோம் அல்லவா? இந்த 'வேண்டியவர்களை' நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக்கொண்டே போனால், அன்பிலிருந்தே படிப்படியாக அருள் பிறக்கிறது. அப்புறம், இப்படி அருள் புரிகிறவனைப் பொறுத்த மட்டில் அது 'அருள்', 'கருணை'என்றெல்லாம் உயர்வு மனப்பான்மையை (Superiority Complex)காட்டுகிற விஷயமாக இல்லாமல்,ஸ்வபாவமான, சகஜமான அன்பாகவே ஆகிவிடுகிறது. ஆனாலும் இந்த அன்பை பெறுபவர்களோ, அது சாதாரண நன்பர்களிடையே, பந்துக்களிடையே இருக்கிற அன்பு மாதிரி இல்லாமல், நல்ல கனிவு பெற்ற தெய்வமான ச்கதி பெற்றிருப்பதாக உணர்கிறார்கள். இந்த பக்குவமான அன்பை 'அருள் அருள்' என்கிறார்கள். 

'எல்லா உயிர்களும் ஒன்றே; எல்லாவற்றிலும் ஈச்வரன் இருக்கிறான்.' என்ரு ஒருத்தன் உணர்கிறபோது தான் அவனுக்கு அருள் உண்டாகிறது. இவன், தன் மனுஷ்யர்களுடன் சமமான நிலையில் இருந்து கொண்டு பிரியம் காட்டுவதை விட இன்னும் ஒரு படி கீழே இறங்கி, தன்னை குறைத்துக்கொண்டு, மற்றவனை ஈச்வரனாக நினைத்துக்கொண்டு தான் சேவை செய்கிறான். 'நைச்சியம்' என்று வைஷ்ணவர்கள் இதை விசேஷித்துச் சொல்வார்கள். தன்னை தாழ்ந்தவனாக, நீசனாக, நினைத்து இன்னொருத்தனுக்கு சேவை செய்வது தான் 'நைச்யம்'.இவன் இப்படி த்ன்னை குறைத்துக்கொள்கிற போது தான், இவனுடைய அன்பு வெறும் பேச்சாக, எண்ணமாக மட்டுமில்லாமல், அதற்குக் காரிய ரூபத்திலேயே தெய்வீகமான சக்தி உண்டாகி, அது 'அருளாக' ஆகி விடுகிறது. கொஞ்சம் கூட மமதையே இல்லாமல், 'நாம் பெரியவர்; உபகாரம் பண்ணுகிறோம் என்ற அகந்தையே இல்லாமல், இவன் சமஸ்த பிராணிகளிடமும் ஈச்வர ஆராதனையாக அன்பை செலுத்தும்போது, அதுவே இவனை சகல பிராணிகளுக்கும் மேலே உயர்த்தி விடுகிறது. இவனுடைய அன்பு வெறும் பேச்சாகவும் எண்ணமாக மட்டுமில்லாமல், காரியத்திலேயே ஈச்வர அனுக்ரஹத்தை வாங்கித்தரக்கூடிய அருட்சக்தியை பெற்று விடுகிறது. 

சித்திரத்துக்கு நன்றி:

(தொடரும்)

[1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்தது.]
-#-

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VIII


ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VIII

இன்னம்பூரான்
24 09 2016

1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்ததில் ஒரு பகுதி:

" இப்போது நான் 'ஜீவகாருண்யம்', 'பரோபகாரம்' என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப்பார்த்தேன். அந்த இரண்டு வார்த்தையும் தப்பு தான். ஏனென்றால், காருண்யம் -கருணை காட்டுவது -என்றால் இப்படிக்கருணை காட்டுபவர் ஒரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்கு பாத்திரமாபவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிர்யும் தொக்கி நிற்கிறது. நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விடத் தாழ்த்தியாக இருக்கிறார். நாம் 'கருணை'காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. உபகாரம் செய்வதின் பயனாக நமக்கு எளிமை அடக்கம் உண்டாக வேண்டும். மாறாக, உபகாரம் பண்ணும் போது, போனால் போகிறது என்று யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், அது அஹங்காரத்துக்கு இடமாகி விடுகிறது. உபகாரத்தால் தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்வதற்கு நேர் மாறாக ஆத்மஹானியே உண்டாகி விடும்...".

~ இது வரை மீள்பதிவு.இனி, தொடர்:

"கருணை, காருண்யம் என்கிற வார்த்தையை சொல்வதை விட, அன்பு என்று சொல்லி விட்டால், இந்த ஏற்ற தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடையே நாம் ஸ்வபாவமாகச் செய்கிற காரியம். இதிலே, போனால் போகிறது என்று யாரோ அன்னியருக்கு இரக்கம் காட்டுகிறமாதிரியான் அஹங்கார எண்ணம் இல்லை.

ஆனாலும் கூட நடைமுறை உலகில் இப்படி நம்மவர், அசலார் என்ற பேதமேயில்லாமல் ஸகலைரையும் ஒரே போல் பாவித்து, தாரதம்மியம் இல்லாமல் ஸ்வாபாவிகமான அன்பைச் செலுத்துவது  என்றால், அது ஆரம்பகாலத்தில் சாத்தியம் இல்லாமல் தான் இருக்கிறது. இந்த பொது இயற்கையை ஒப்புக்கொள்வது போலத்தான் திருவள்ளுவர் கூட அன்பு, அருள் (அருள் என்பதை கருணை என்று வைத்துகொள்ளலாம்) என்று பிரித்து, (distinction) சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்:
'அன்பு ஈன்ற குழந்தையே அருள் என்று அர்த்தம்.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி:



Thursday, September 22, 2016

சிவகாமியின் செல்வன் 17

சிவகாமியின் செல்வன் 17

இன்னம்பூரான்

22 09 2016

காந்திஜியின் ஹரிஜன் பதிவு ஒரு பெரிய கலவரத்தையே ஏற்படுத்தி விட்டது. ராஜாஜி மீது அவர் வைத்திருந்த மதிப்பு யாவரும் அறிந்ததே. ஆனால், அவர் மேடையில் அருகில் அமர்ந்திருந்த காமராஜரை இவ்வாறு மறைமுகமாக கண்டித்த விதம் வியப்பையும், திகைப்பையும், எதிர்ப்பையும் சந்தித்தது.
ஹிந்து நாளிதழுக்கு 15/16-2-1946 அளித்த பேட்டியில் காமராஜர்,

" காந்திஜியின் கட்டுரைக்ககு பிறகு பார்லிமெண்ட் போர்டிலிருந்து ராஜிநாமா செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை.ஏனெனில், இந்த கருத்துப்போர் பார்லிமெண்ட் போர்டின் செயல் பொருட்டு எழுந்தது. நேற்று அதன் கூட்டம் கூடியது. காந்திஜியின் கட்டுரையை நாம் கவனித்து செயல்படவேண்டும் என்பதால், அந்த கூட்டத்தை ஒத்திப் போட்டேன். எனக்கு அந்த கட்டுரை ஒரு ஷாக். தமிழ் நாட்டு காங்கிரசின் தலைவன், நான்.அதன் விதிமுறை படி தான், நான் செயற்குழுவை நியமித்தேன். எனவே, காந்திஜி கூறியது என்னை பற்றி தான். அவருக்கு மரியாதை செலுத்திய நான், சென்னையிலும், தமிழ் நாடு சுற்றுப்பயணத்திலும் அவருக்குக் கூப்பிடு தூரத்தில் தான் இருந்தேன்.செயற்குழு அங்கத்தினர்களும் அப்படித்தான் இருந்தனர். காந்திஜி எங்கள் ஒருவரிடமும் காங்கிரஸ் விவகாரங்களை பற்றி பிரஸ்தாபிக்கவில்லை என்பது எனக்கு மனவலியை அளிக்கிறது. 'கும்பல்' என்ற சொல்லை அவர் பிரயோகம் செய்தது என்னை மிகவும் பாதித்தது. என்னுடைய செயற்குழுவும் நானும் விடுதலை போராட்டத்துக்கு உற்ற வழியாக மட்டுமே இந்த பார்லிமெண்ட் போர்ட் வழிமுறையை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நான் சிறையிலிருந்து விடுபட்ட பின், என்னுடைய அணுகுமுறையை பற்றி பல மேடைகளில் பேசியிருக்கிறேன். எனக்கு பதவி ஆசை இல்லை.

ராஜாஜி மீது பொதுஜன கிளர்ச்சிக்குக் காரணம், அவருடைய பாகிஸ்தான் பற்றிய தீர்மானமும் , ராஜிநாமாவும், காங்கிரஸ் கட்சியிலும் பொது மக்களிடமும் ஏற்படுத்திய எதிர்வினை தான்.காந்திஜியின் கட்டுரைக்கு பிறகு பார்லிமெண்ட் போர்டிலிருந்து ராஜிநாமா செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை. திருவாளர்கள் டி.எஸ்.அவினாசிலிங்கம், என்.முத்துரங்க முதலியார், ஓ.பி.ராமசாமி ரெட்டியார், திருமதி.ருக்மணி லக்ஷ்மிபதி ஆகீயோரும் என்னுடன் வெளியேறுவதாக இருந்தாலும், தேர்தல் பணிகளுக்கு சொற்ப நாட்கள் மட்டுமே இருப்பதால், ஒட்டுமொத்தமான ராஜிநாமா உதவாது என்பதால், அவர்களை ராஜிநாமா செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு சம்மதித்த அவர்களுக்கு என் நன்றி. என்னை பின்பற்றி வெளியேற அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

நான் வெளியேறத்தான் வேண்டும். வேறு வழியில்லை. இருபது வருடங்களாக, அண்ணல் காந்தி எனக்கு தலைவர். அவரை பின்பற்றுவதிலும், அவர் மீது எனக்கு உள்ள அசையாத நம்பிக்கையும் மாறாதவை. அவருக்கு மனவலி கொடுத்தது நான் தான் என்பதால்,நான் இந்த முடிவுக்கு வர நேர்ந்தது. இங்கும், மத்திய குழுவாலும் எடுக்கப்பட்ட பார்லிமைண்ட் குழுவின் தீர்மானங்கள் என்னை கட்டுப்படுத்தும். முழுமனதுடன் அவற்றை நிறைவேற்றுவேன்." 

 



 




Wednesday, September 21, 2016

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VII

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VII



ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் செய்தார்கள். அது பற்றி ருத்ரா ஒரு கவிதை எழுத, பெரியவா அலுத்து, சலித்துக்கொண்டதை பற்றி எழுதி, அந்த நிகழ்வு மடத்துக்கு சோபை தரவில்லை என்றேன். சித்திரமும் வந்தது. இந்த நிகழ்வை பற்றி பெரியவா பகர்ந்த கருத்தை நான் தேட முயன்றபோது, டாக்டர் கணேசன், தற்செயலாக, அதை பதிவு செய்தார். சித்திரத்த்துக்கு விளக்கமாக அது அமைந்து விட்டதால், 1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்ததை பிறகு பதிக்காலாம் என்று, டாக்டர் கணேசன் அளித்ததை, நன்றியுடன், இங்கு பதிவு செய்கிறேன். 
இன்னம்பூரான்
22 09 2016


வைதிக மதம்
அநாதியான வேத தத்துவம் அதன் மூல ரூபத்திலேயே என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஜோதியை, தீவர்த்தியை, தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற மசால்ஜி (சேவகன்) யாகப் பிராம்மணன் இருக்க வேண்டும். இப்போதுள்ள சமஸ்தப் பிரஜைகளுக்கும் எதிர்கால வாரிசுகளுக்கும் (posterity) இவன் செய்தே தீரவேண்டிய கடமை இது.

மற்றவர்களை அதட்டிக் கொண்டு, 'தனக்கு உயர்த்தி கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிரம்மண்யம்'. சமூகத்தின் மசால்ஜி (peon) வேத விளக்கைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டுவதற்காகத்தான் அது இருக்கிறது. 'விளக்கை அனைத்து லோகம் முழுவதையும், நம்மோடு மட்டுமில்லாமல் எதிர்காலம் முழுவதற்கும் இருட்டாகிவிடாதீர்கள்' என்று பிராம்மண சமூகத்தைக் கேட்டுக் கொள்வதற்காகத் தான் நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறேன்.
பட்டணங்களில்தான் இப்படி ஆயிரக்கணக்கில் ஜனங்கள் வருகிறீர்கள். அதனால், நான் எங்கேயோ உட்கார்ந்துகொண்டு, யாரோ ஒரு சிலரிடம் சொல்லி, அவர்கள் மற்றவர்களிடம் சொல்லுவது என்று சுற்றி வளைக்காமல், நேராக நானே நிறைய ஜனங்களுக்குத் தெரிவித்துவிட முடிகிறது. இதை உத்தேசித்தே, மடத்து ஆசாரங்களுக்குத் பட்டணங்களில் எத்தனையோ பங்கம் ஏற்பட்ட போதிலும் பட்டணங்களுக்கு வருகிறேன். நான் நினைத்ததை விடவும் ரொம்ப ஜாஸ்தி கூட்டமாக இருக்கிறது. சிரமப்படுகிறேன்; உங்களையும் சிரமப்படுத்துகிறேன்!
நீங்கள் எத்தனையோ செலவழித்து பேட்டைக்குப் பேட்டை பெரிதாகக் கொட்டகை, பந்தல் போட்டு என் பேச்சுக் கச்சேரியை கேட்க வேண்டும் என்றே எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவே வருகிறீர்கள். உங்கள் தப்பைச் சொல்லி மனஸைக் கஷ்டப்படுத்தாமல் கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாம் என்றால் அதற்கு மனசு இடம் தரமாட்டேன் என்கிறது. உங்கள் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு உங்களுக்கும் ஊருக்கும் உலகத்துக்கும் எது நல்லது என்று எனக்கு தோன்றுகிறதோ அதைச் சொல்லாமல் போய்விட்டால் பிரயோஜனமே இல்லை என்று படுகிறது. அதனால்தான் 'வேதத்தை ரக்ஷியுங்கள், பிராசீன தர்மங்களை அநுஷ்டியுங்கள்' என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன். உங்களை அப்படி செய்யும்படி பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறதோ இல்லையோ. 'செய்யுங்கள், செய்யுங்கள்' என்று உங்கள் காதில் போடவாவது என்னால் முடிகிற மட்டும், இப்படிக் காதில் போட்டுக் கொண்டிருக்கலாமே என்றுதான் வந்திருக்கிறேன்.
எனக்குக் கனகாபிஷேகம், பீடாரோஹண உத்ஸவம் எல்லாம் ரொம்பவும் விமரிசையாகப் பண்ணுகிறார்கள். மிகுந்த அன்பினால் பண்ணிப் பார்க்கிறார்கள். இதற்காகக் கமிட்டி போடுகிறார்கள். வசூலிக்கிறார்கள். ராப்பகல் உழைக்கிறார்கள். ஆனால் இந்தக் கனகாபிஷேகம் மடத்துக்கு இனிமேல் வருகிற ஆச்சாரியார்களுக்கு சாசுவதமாக நடப்பது எப்படி? வேதம் இல்லாவிட்டால் மடம் எதற்கு மடாதிபதி எதற்கு? ஆகவே இப்போது என் கனகாபிஷேகத்துக்கும், பீடாரோகணத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி, அதற்காகக் கமிட்டி, திட்டம் எல்லாம் வசூல் செய்யுங்கள் என்கிறேன்.
வேத ரக்ஷணத்தை அடுத்த சந்ததிக்கு ஜீவிய கர்மமாக, ஆயுட்காலப் பணியாக வைக்க முடியாவிட்டால் கூடப்போகிறது. எட்டு வயசிலிருந்து ஆரம்பித்து அப்புறம் பத்து வருஷங்களுக்கு தினம் ஒரு மணி இளம்பிள்ளைகளுக்கு வேத மந்திரங்களிலும் பிரயோகங்களிலும் வகுப்பு நடத்தப் பேட்டைக்கு பேட்டை கூட்டுறவு அடிப்படையில் ஏற்பாடு பண்ணுங்கள் என்கிறேன். இதுதான் எனக்கு வாஸ்தவமான கனகாபிஷேகம், உத்ஸவம் எல்லாம்.
சிரமம் இல்லாமல் எந்தக் காரியமும் இல்லை. நாமாக ஒரு காரியத்தை இழுத்துப் போட்டுக் கொண்டால் அதற்காக எத்தனை கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் சகித்துக் கொண்டிருக்கிறோம்? ஏதோ ஒரு கண்டத்தில் உள்ள ஏதோ ஒரு யூனிவர்ஸிடியில் ஏதோ ஒரு படிப்பு பார்த்தால் பெரிய உத்தியோகம். பணம் கிடைக்கிறது என்கிறபோது உடனே 'ஸிலபஸ்' வரவழைத்து விடுகிறோம் - அங்கே போய் பரிட்சை எழுத ஏற்பாடெல்லாம் செய்கிறோம். நமக்கென்றே ஏற்பட்ட தர்மத்தை கஷ்டம் இருக்கிறது என்று விட்டுவிடலாமா? கஷ்டம் இருந்தும் செய்தால்தான் ஜாஸ்தி பலன், ஜாஸ்தி பெருமை.
இப்படி உங்களை கஷ்டப்படுத்தத்தான் வந்திருக்கிறேன். நான் சொன்ன பிரகாரம் செய்வதாக நீங்கள் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை முடித்து வருகிற வரையில், இங்கேயே உட்கார்ந்து கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தால் என்ன என்று கூட நினைக்கிறேன். எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு யாரையாவது உபத்திரவப்படுத்தத்தானே வேண்டும்? இங்கேதான் உட்கார்ந்து உபத்திரவம் பண்ணுவோமே என்று தோன்றுகிறது.
பட்டணங்களில் பஜனை, கோயில் திருப்பணி, புராணப்பிரவசனங்கள் எல்லாம் ரொம்பவும் விருத்தியாகியிருப்பதைப் பார்க்க, சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இவற்றுக்கொல்லாம் வேர்-மூலமான வேதம் - மட்கிப் போகவிட்டால், இவை அப்புறம் எத்தனை நாளைக்கு ஜீவிக்க முடியும்? வேதத்தை அப்பனிடமிருந்து பெற்று பிள்ளைக்குத் தரவேண்டும் என்கிற பெரிய தர்மந்தான் அஸ்திவாரம். அதை மறந்ததாலேயே இப்படி மதம் ஆட்டம் கண்டிருக்கிறது. பிராம்மணன் வேதத்தை விட்டதால் இன்றைக்கு லோகத்தில் உள்ள அத்தனை கோளாறுகளும், கஷ்டங்களும், விபரீதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
ஜாதி அழிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. லோக க்ஷேமம் போகிறதே என்றுதான் கவலைப் படுகிறேன். வேத ரக்ஷணம் விட்டுப்போனால் இந்தப் பரம்பரையை மறுபடியும் உண்டு பண்ணவே முடியாதே என்றுதான் கவலைப்படுகிறேன்.” - காஞ்சி முனிவர்
-#-

சித்திரத்துக்கு நன்றி:

Tuesday, September 20, 2016

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VI




ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:VI



இன்னம்பூரான்
21 09 2016

வினா ஒன்றை எழுப்பி தானே அதற்கு பதில் அளிப்பது ஒரு உத்தி. பெரியவா அசுவமேத யாகத்தையும், அதன் தொடர்பாக அம்பாள் மீது உள்ள பக்தி தோத்திரங்கள் அளித்ததும் ஒரு முன்னுரை போல:
அவர் மேலும் சொல்வதின் முதல் பகுதி:

" இப்போது நான் 'ஜீவகாருண்யம்', 'பரோபகாரம்' என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப்பார்த்தேன். அந்த இரண்டு வார்த்தையும் தப்பு தான். ஏனென்றால், காருண்யம் -கருணை காட்டுவது -என்றால் இப்படிக்கருணை காட்டுபவர் ஒரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்கு பாத்திரமாபவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிர்யும் தொக்கி நிற்கிறது. நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விடத் தாழ்த்தியாக இருக்கிறார். நாம் 'கருணை'காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்யும் உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. உபகாரம் செய்வதின் பயனாக நமக்கு எளிமை அடக்கம் உண்டாக வேண்டும். மாறாக, உபகாரம் பண்ணும் போது, போனால் போகிறது என்று யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், அது அஹங்காரத்துக்கு இடமாகி விடுகிறது. உபகாரத்தால் தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்வதற்கு நேர் மாறாக ஆத்மஹானியே உண்டாகி விடும்...".

(தொடரும்)

[1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்தது.]

பின் குறிப்பு:
இந்தியாவுக்கு இந்த கறை படிந்த நாடாளுமன்ற ஆளுமைக்கு பதில், 'துரைத்தனத்தார்' மக்கள் ஆலோசனை மன்றம்' என்ற நிர்வாகத்தை அளித்திருந்தால், நாம் மிகவும் நல்ல நிலைமையில் இருந்திருக்கக்கூடும். நான் இங்கிலாந்தில் அத்துறையில் தன்னார்வப்பணி புரிந்தபோது, அதை பற்றி அப்போது தான் துவக்கப்பட்ட முதுகலை படிப்பில் ஆழ்ந்து விட்டேன். இன்னலில் தவிக்கும் மக்களுக்கு எப்படி ஆலோசனை வழங்கவேண்டும் என்ற வினாவுக்கு அதன் பொருட்டான ஆய்வில் விடை தேடினேன். பின்னர், 'ஆலோசனை அளிப்பவரிடம் பொருத்தமான ஆலோசனை என்ற பவர் இருக்கிறது. அந்த பவரை ஆலோசனை கேட்க வந்தவருக்கு அளித்த பின் தான் ஆலோசனை தொடங்கவேண்டும் என்ரு முடிபு கூறினேன். அது வரவேற்கப்பட்டு, செயலில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்வு இப்போது மனதில் பட்டது. சொல்கிறேன்.

சித்திரத்துக்கு நன்றி:







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

சிவகாமியின் செல்வன் 16




சிவகாமியின் செல்வன் 17

இன்னம்பூரான்

20 09 2016

"நான் பழனியிலிருந்து திரும்பி வரும்போது, ஶ்ரீ ராஜாஜியையும், ஶ்ரீ என்.கோபாலசாமி ஐயங்காரையும் இழிவு படுத்தும் கடிதம் ஒன்றை யாரோ ஒருவர், வண்டி நின்ற ஒரு இடத்தில், என்னிடம் கொடுத்து, தமக்கு எதிராக இயங்குபவர்களை என்னை அணுகவிடப்போவதில்லை என்று சொன்னார்கள். நடந்தது என்னமோ நேர் மாறாக என்று நான் அறிவேன். சொல்லத்தகுந்தது எதையும் சொல்ல விரும்புபவர்களை என்னை அணுகவிடாமல்/என்னுடன் பேச விடாமல்/ எனக்கு எழுத முடியாமல் தடுப்பது இயலாத காரியம். அந்த கடிதத்தை என்னிடம் கொடுக்கமுடிந்ததே, அவர்களின் குற்றச்சாட்டை முறியடிக்கிறது. இந்த ஸ்பெஷல் ரயிலில் ஶ்ரீ காமராஜ நாடாரும் என் கூட இருந்தார். பழனி கோயிலிலும் அவர் என் கூட இருந்தார்.எனினும் இந்த பயணத்தில் ராஜாஜியும் கோபால்சாமியும் என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதில் ஐயம் ஒன்றும் கிடையாது.இந்த பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர்கள் தான்.ராஜாஜி என்னுடைய நெருக்கமான நண்பர் மட்டுமல்ல;அவர் தான் என்னுடைய நிலைப்பாடுகளுக்கு உகந்தவாறு சொல்லிலும்,செயலிலும் அழுத்தந்திருத்தமாக இயங்குபவர்.பாகிஸ்தான் விஷயத்தில் என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டு, ஜூலை 15, 1942 அன்று காங்கிரசை விட்டு விலகியவர், அவர் என்பது எனக்கு தெரியும் . சற்றும் தயக்கமின்றி என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டதை பொதுமன்றத்தில் அவர் வைத்தததை, அவரை பாராட்டுகிறேன். அவர் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி. தன் மனசாக்ஷிக்கு உகந்த படி துணிவுடன் நடப்பவர்.அவருடைய அரசியல் ஞானமும், நாணயமும் கேள்விக்கு உட்படுத்த முடியாதவை.எனவே அவருக்கு எதிராக ஒரு கும்பல் (clique)இயங்குவது எனக்கு வேதனை அளிக்கிறது.மதராஸ் காங்கிரஸில் இந்த கும்பலின் ஆதிக்கம் தான் செல்லுபடி ஆகிறது. மக்கள் என்னமோ ராஜாஜி பக்கம். என்னால் தான் இத்தனை பெரிய கூட்டங்கள், வரவேற்புக்கள் என்று நினைக்கும் அளவுக்கு நான் அகந்தை கொண்டவனோ, முட்டாளோ அல்ல. அவருக்குத்தான் (ராஜாஜி)அந்த ஈர்ப்பு. தென்னிந்திய காங்கிரஸ்காரர்கள் அவரவர் கருத்துக்கிணஙக் செயல் படுவார்கள். ஆனாலும் மற்றவர்கள் யாவராலும் தாங்கமுடியாத பொறுப்பை ஏற்கக்கூடிய சக்தியுடைய ராஜாஜியின் பணியை தவறவிட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பது என் கடமை.

மோ.க. காந்தி
ஃபெப்ரவரி 5, 1942
ஹரிஜன்: 10.2.1932


“Clique” – Kamaraj vs Rajaji (& Gandhi)

CURIOUS
On my return journey from Palani, someone gave me at one of the halts a letter reviling Shri Rajaji and Shri Gopalaswami (N. Gopalaswami Iyengar, Chairman, Jubilee Celebration Committee of the Dakshina Bharat Hindi Prachar Sabha, Madras) , and informing me that they would not allow anyone against them to come near me. Now I know to the contrary. No one who wanted to say anything worth-while could be prevented from seeing me or writing to me. The delivery of the very letter disproves the allegation. Shri Kamaraja Nadar was with me on the same special. He was with me in the Temple on the Palani Hill. But there is no doubt that both Rajaji and Gopalaswami were closest to me during the journey. They had arranged it. Rajaji is one of my oldest friends and was known to be the best exponent in word and deed of all I stand for. That, in 1942, he differed (On the issue of demand for Pakistan, Rajagopalachari, resigned from the Congress Party on July 15, 1942) from me, I know. All honour for the boldness with which he publicly avowed the difference. He is a great social reformer, never afraid to act according to his belief. His political wisdom and integrity are beyond question. I was, therefore, pained to find a clique against him. It is a clique that evidently counts in the official Congress in Madras. But the masses are devoted to Rajaji. I am neither vain nor foolish enough to feel that I could have had the huge public demonstratations all along the route of the pilgrimage, if he had no influence with the masses in Tamil Nadu. Congressmen in the South will act as they think best. But I would be less than loyal to the organization, if I did not warn them against losing the valuable services which no one can shoulder as Rajaji can at the present moment.
En route TO WARDHA, February 5, 1946
Harijan, 10-2-1946
பின் குறிப்பு: 1942ல் நான் பத்தாம் வகுப்பில். வீட்டில் அரசியல் அலசல்கள் எனக்கும் என் தந்தைக்கும் நடக்கும் என்பதால், இது நினைவில் இருக்கிறது. மேலும், அவர் அடிக்கடி புது சொற்களை சொல்லிக்கொடுப்பார். 'clique' என்ற சொல்லுக்கு அகராதியை பார்க்க வைத்தார்.
சித்திரத்துக்கு நன்றி:
http://www.searchforgandhi.com/img/writer/Harijan_img_heading.jpg

சிவகாமியின் செல்வன் 15

சிவகாமியின் செல்வன் 15

இன்னம்பூரான்
20 09 2016

பெருந்தலைவர் காமராஜரை பற்றி தேடிப்படிக்கும் போதெல்லாம், நாம் அவரிடம் கற்கவேண்டியதை கற்றுக்கொள்ளவில்லை என்ற ஆதங்கம் எழுகிறது. காங்கிரஸ் கட்சியின் எதிர்துருவங்கள் ராஜாஜியும் காமராஜரும், அணுகும் முறையில். இருவரும் தேசபக்தர்கள் தான். மாஜியான காலகட்டத்திலும் அவர்கள் தான் ஒரிஜினல் காங்கிரஸ்காரர்கள். 1950/60 களில் இதெல்லாம் வெளிப்படையாக ஊடகங்களால் விமரசிக்கப்பட்டவை. முதலமைச்சரான காமராஜர் முரண்பாடு கொண்டவர்களை, தன்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் உடனடி பதில் சொல்வதில்லை என்ற வழித்தடத்தில் இயங்கினார்.

அரசு இயந்திரம் என்றுமே தானியங்கி. தியாகராய நகரில் இருந்த புகழ் வாய்ந்த ராஜாஜி சேவா சங்கக்கட்டிடத்தை, சிடி இம்ப்ரூவ்மெண்ட் ட்ரஸ்ட் அதிகாரிகள், புதிய கட்டிடம் கட்டுவோம் பேர்வழி என்று, அடியோடு இடித்துத் தரைமட்டம் ஆக்கி விட்டார்கள்.நம்மூர் வாசிகளை தெரியாதா என்ன? இது காமராஜரின் வேலை என்று அடித்துப் பேசிக்கொண்டார்கள்.  சங்கத்தை சேர்ந்த டி.என். சோமசுந்தர நாயரும் மற்றவர்களும் இடிபாடுகளின் படங்களை எடுத்துக்கொண்டி முதல்வரை சந்தித்தார்கள். அவர் 'ஆகட்டும்! பார்க்கலாம்' என்று சொல்லாமல், ' நீங்க போயிட்டு வாங்க. இது ப்த்தி நான் விசாரிக்கிறேன்.' என்றதுடன் நிற்காமல், அந்த தான்தோன்றி அதிகாரிகளை கண்டித்து, அவர்கள் மூலமே ராஜாஜி சேவா சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுத்தார். சிவகாமி ஆத்தா தன் திருமக்னை 'ராசா' என்றழைத்தது பொருத்தமே.

இந்த நிகழ்வு மற்றொன்றை நினைவு படுத்துகிறது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டீஷ் ராயல் விமானப்படை உலகபுகழ் வாய்ந்த கொல்ன் கதீட்ரலை தாக்கி உடைத்து விட்டது, குறி வைத்துத் தாக்காவிடினும். போர் முடிந்த பின்னர், அந்த ராயல் ஏர்ஃபோர்ஸ் ஊழியர்களே சந்தா வசூல் செய்து அந்த கதீட்ரலை மராமத்து செய்து, முன்மாதிரியே கட்டி கொடுத்தனர்.

அந்த பெருந்தன்மையை இழந்து நிற்கிறார்கள், தமிழ் மக்கள், இன்று.

சித்திர்த்துக்கு நன்றி:

Monday, September 19, 2016

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:V

Innamburan S.Soundararajan

 ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி

'Innamburan S.Soundararajan' innamburan@gmail.com [aalappaakkamakkampakkamum] 


ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:V



இன்னம்பூரான்
20 09 2016

மீள்பதிவுகள் தொடர்புக்கு மட்டும் என்பதால், அவற்றை பிடிஎஃப் கோப்பாக இணைத்து,ஶ்ரீ  சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்  (பெரியவா) அசுவமேத யாகத்தை பற்றி சொல்லியதின் சாராம்சம் இங்கே.

"இந்த காலத்தில் இருக்கிற நாம் எல்லாரும், அச்வமேத யாகம் செய்ய முடியுமா?...பழைய காலத்திலேயே க்ஷத்திரிய வர்ணத்தில் பிறந்த மஹாராஜாக்கள் இரண்டொருத்தர் தான் அச்வமேத யாகம் செய்ய முடிந்திருக்கிறது...நம்மில் யாராவது அச்வமேத யாகம் செய்ய முடியுமா? என்று கேட்பதே அசம்பாவிதம் தான்...முடியுமா, முடியாததா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எதற்காக அச்வமேத யாகம் செய்யவேண்டும்? நம் பதவியையும், பவிஷையும் அது காட்டுகிறதே என்பதற்காகவா? அசுவமேதம் செய்தால் இந்திரலோகம் கிடைக்கும் என்பதற்கா? இதற்கெல்லாம் என்றால் அச்வமேதம் செய்யவே வேண்டாம். பதவு, பவிஷு, தேவ லோக செளக்கியம் எல்லாமே அஹங்காரத்தை வளர்த்துக்கொள்கிற காரியங்கள் தாம்; நம்மிடம் கொஞ்ச நஞ்சம் ஞானம் கூட சேரவொட்டாமல் இடைஞ்சல் செய்கிறவை தாம்...(அச்வத்தையும் (புரவி}, பகவன் நாமாவளி,ஶ்ரீ லலிதாம்பிகை தோத்திரம் பற்றி ஒரு நீண்ட உரை)...அச்வமேதம் செய்வதை விட்டு விட வேண்டியது தானா? இல்லை. நம் அனைவருக்கும் சாத்தியமான ஒரு அச்வமேதத்தை சாஸ்திரங்களில் சொல்லி இருக்கிறது. ஜீவகாருண்யத்தின் மேல் செய்யவேண்டிய அனேக பரோபகாரங்களை சொல்லிக்கொண்டே போய், அவற்றுக்கெல்லாம் சிகரம் மாதிரி ஒன்றைச் சொல்லி , இதுவே அச்வமேதத்தின் பலனை அடையக்கூடியது  என்கிறது. அது என்ன?

(தொடரும்)

[1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்தது.]
சித்திரத்துக்கு நன்றி:









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
__._,_.___

Posted by: "Innamburan S.Soundararajan" <innamburan@gmail.com
Reply via web postReply to sender Reply to group Start a new topicMessages in this topic (1)
This Group is restricted to Invitees only for ensuring compliance with the Terms, Guidelines & Privacy conditions of Yahoo and this Group and to guard against phishing. Most members of this Group are from an Elder Community in Aalapaakkam.
Respecting their wishes, all may refrain from commenting upon the community and its administrations.
Yahoo! Groups
• Privacy • Unsubscribe • Terms of Use
.

__,_._,___

II& III & IV-செல்வன்:சுபாஷிணி:இன்னம்பூரான் .pdf
87K 

பாமரகீர்த்தி [3] இன்னம்பூரான் பக்கம் [8]

Innamburan S.Soundararajan

பாமரகீர்த்தி [3] இன்னம்பூரான் பக்கம் [8]

Innamburan S.Soundararajan Tue, Sep 20, 2016 at 6:58 AM



பாமரகீர்த்தி [3] இன்னம்பூரான் பக்கம் [8]

-இன்னம்பூரான்
18 09 2016
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=72071

  • Monday, September 19, 2016, 5:35


innamburan

சமுதாயத்தையே பல நூற்றாண்டுகளாகப் பாமரனைப் பற்றிய மறதி நோய் பரவலாக ஆட்கொண்டிருப்பதைக் கண்டு வருந்தினோம். பகிர்வார்கள் தென்படாததால், நேற்றைய பாமரனின் கீர்த்தியைப் பாடாவிடின், இன்றே அவரை மறந்துவிடுவார்கள் என்பது திண்ணம். அதனால்தான் அவசரம், பொறுமையின்மை. சமுதாய அக்கறையின்மையைப் பொறுத்தார் பூமி ஆளலாம்; தரிசு பூமியை. ஆனால், அவர்களால் தரணி ஆள முடியாது.
உங்களுக்கு மாரியப்பனை தெரியுமோ? தெரிந்திருக்காது. தற்பொழுது பாழடைந்த மண்டபத்தின் தூண்கூட, ‘அவன் இங்கு தான் இளைப்பாறினான்; ஒரு கல்வெட்டு பதிக்க, ஒரு கோடி ரூபாய் கொடுங்கள்.‘என்று அறை கூவும். நம்ம நோபெல் பரிசு வெங்கட்ராமனுக்குக் கூட (தற்காலம் அவர் தான் உலகப்புகழ் இங்கிலாந்து ராயல் சொஸைடி தலைவர்)  இப்படித்தான் ஆச்சு. அவன் சூடிகையான பையன். படிக்காமலே மார்க் வாங்குவான். அவனுக்கு நாலு வகுப்பிலும் நான்தான் வாத்தி. அன்றே நோஸ்ட்ரடமாஸ் மாதிரி, இவன் நோபெல் பரிசு வாங்குவான் என்று என் பெண்டாட்டியிடம் சொன்னேன். நீங்கள் எப்டி அப்டி சொன்னேள் என்று மூக்கிலே விரலை வைக்கிறாள் என்றெல்லாம் ‘புரட்டுக்கதை’ கட்டிய பேராசிரியர்கள் பலர். வெங்கட், பாவம், நான் அந்த ஊர்ப்பக்கமெல்லாம் தலை என்ன? உள்ளங்கால் கூட வைக்கவில்லை என்று அங்கலாய்த்துக்கொண்டார். அவர் தருமமிகு சென்னயின் ம்யூஸிக் சபாவுக்கு அநாமதேயமாக க்யூவில் நின்றதை கண்ட ஹிந்து ரவி அவரை முன்வரிசைக்கு அழைத்து வருவதற்குள் அவருடைய தாத்தாவின் ‘பால்ய சினேகிதர்கள்’ ‘பிலுபிலு’ என்று மொய்த்து விட்டார்களாம். அந்த மாதிரிதான் மாரியப்பன் கதையும்னேன்.
ஆம். மாற்றுத் திறனாளியான மாரியப்பன் ரியோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் T 42 High Jump at Paralympics உயரக் குதிக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, அழியாப் புகழும், கோடிக்கணக்கான ரூபாய் பரிசுகளும் பெற்ற பெரியவடுகம்பட்டி பாமர இளைஞர். வயது 21.  அவர் வாகை சூடியதைப் போற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயம், அவருக்கு சான்ஸே இல்லை என்பதுதான். வாழ்நாள் முழுதும் எதிர்நீச்சல் தான். அவன் பள்ளிப்படிப்பின் போதே, தாங்கமுடியாத கடன்சுமை, சகோதரியின் திருமணம் பொருட்டு. தந்தை தங்கவேலு, இவர் மழலையாக இருக்கும்போதே, விலகி, கண் காணாத இடத்துக்குப் போய்விட்டார். இப்போது வந்து நிற்கிறார். நற்றாய் சரோஜா செங்கல் சூளையில் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றினார். சகோதரி சுதாவோ ஒரு தியாகி. தன் படிப்பை நிறுத்தி விட்டுத் தன் உடன்பிறப்புகளைக் கவனித்துக்கொண்டார். ஐந்து வயதில், ஒரு பஸ் ஏறிய விபத்தில் இவருக்கு காலில் நல்ல அடி. நிரந்தர ஊனம். 15 வருடம் கழிந்த பின்னும், அந்த வழக்கு ‘ஜிவ்’வுன்னு இழுத்துக்கொண்டே போகிறதாம்! எனினும் எல்லா விளையாட்டுக்களிலும் பங்கு எடுத்து வந்தார். ஆனால், சகபாடிகளின் கொடுமை தாங்காமல் தனித்துச் சிறப்புத்தரக்கூடிய ஹை ஜம்ப் மட்டுமே நாடி,அதைப்பயின்றார். அந்தத் திருப்புமுனைக்கு வித்திட்டது அவர் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நல ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன். பல இன்னல்களைக் கடந்து, ஏற்கனவே லண்டன் பாரா ஒலிம்பிக்ஸ் 2012இல் பங்கேற்கத் தேர்ந்தெடுத்த பின்னர், நிதி நெருக்கடியால், இவருக்கு லண்டன் போக முடியவில்லை. அடுத்த வருடம் போக ஆர்வத்துடன் இருக்கிறார். தமிழ்நாட்டு முதல்வர் ரூபாய் இரண்டு கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சரகம் ரூபாய் 75 லக்ஷமும் இவருக்குப் பரிசாக கொடுத்தனர். கார்களும், மோட்டார் சைகிள்களும், துட்டும், ஓடி வந்த வண்ணம்.
நம்ம மாரியப்பன் தன்னடக்கத்துடன், ஏமாற்றுவித்தைக்காரர்கள் கையில் சிக்காமல், நிறைவு வாழ்க்கை வாழ்ந்து, பல வெற்றிகள் அடைந்து நம் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பாராக.
-#-
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, September 18, 2016

வீராங்கனை பாக்யா




வீராங்கனை பாக்யாவை ராஜஸ்தானுக்கு அனுப்பலாமா?
இன்னம்பூரான்
Printed from

Cauvery water row: Woman who burnt 42 buses is only 22

Bangalore Mirror Bureau | Sep 17, 2016, 11.08 PM IST
Cauvery water row: Woman who burnt 42 buses is only 22
The city police have identified and arrested the mystery woman allegedly controlling and instigating the mob that torched 42 vehicles belonging to Tamil Nadu-based private travel firm, KPN, at D'souza Nagar on Monday. She was arrested at her home on Thursday night.

The accused is 22-year-old C Bhagya, from Yadgir, in North Karnataka. She is staying with her parents Chandrakanth and Yellamma in Girinagar, close to the KPN garage.

She is a daily-wage labourer, who moved to the city with her parents two years ago.

"Bhagya was arrested on Thursday night, based on CCTV footage recorded in the vicinity of the incident. She was produced before a local court on Friday and was taken into police custody as her exact role and motive behind the torching of the buses and instigating the mob is yet to be ascertained. Since she is a woman, she cannot be kept in the police station overnight and has been sent to a remand home in Madiwala. She will be brought to RR Nagar police station on Saturday morning by a team of women police personnel and will be interrogated," said an officer who is part of the investigation.

After her interrogation, she will be remanded to judicial custody and her chances of getting bail for the next six months are slim. The accused, who is from a poor economic background, is finding it difficult to hire a lawyer to fight her case. The city's advocates association, however, has offered free legal aid for those arrested while fighting for the Cauvery water cause and Bhagya might be one who avails of the offer.


Preliminary investigations and CCTV footage show Bhagya supplying diesel and petrol to the accused and throwing it on the buses. The police are yet to ascertain if she is a habitual offender and part of a pro-Kannada organisation.


She has been booked for attempt to murder (IPC 307), unlawful assembly (IPC 143), rioting (IPC 147), rioting with deadly weapon (IPC 148), voluntarily causing hurt by dangerous weapons or means (IPC 324), causing damage (IPC 427), damage by fire or explosive substance (IPC 435) and Column 2 of Prevention of Destruction and Loss of Property Act of 1981. Bhagya's involvement came to light after the RR Nagar police arrested seven youths, of whom five were from D'souza Nagar. The accused told police that they were instigated to commit the acts of arson by an unidentified woman. This confession led to Bhagya's arrest.


When contacted, KP Natarajan, the Salem-based owner of KPN travels, said his employees had informed him of the arrest and also stated that his injured drivers had confirmed that it was the same woman instigating the mob that set his vehicles ablaze.


"I was told that the police have arrested a young woman in connection with the incident. My drivers have already confirmed her identity and stated that she was the one leading the mob during the attack. We do not know much about her. We are also planning to submit a petition to the chief minister of Karnataka seeking stern action against those responsible for the incident," Natarajan added when contacted on Friday evening.





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

சமுதாயத்தை தகனம் செய்யலாமா?


சமுதாயத்தை தகனம் செய்யலாமா?
மனிதர்கள் பெற்ற குழந்தைகளுக்கு இழைக்கும் இந்த கொடுமையை அரசும், சமுதாயமும், தனி மனிதர்களும் என்றோ தடுத்திருக்கவேண்டும். இது இந்தியாவில் எங்கும் ஓரளவாவது இருக்கிறது. சமுதாயத்தையே தகனம் செய்து விட்டால் என்ன?
இன்னம்பூரான்
19 09 2016
Printed from

366 children in Rajasthan 'divorcees': Census

TNN | Sep 18, 2016, 10.13 PM IST
366 children in Rajasthan 'divorcees': Census
JAIPUR: At least 366 children between 10 and 14 years in Rajasthan are 'divorcees', according to a Census report on marital status. The report also points out that there are 3,506 'widowed' and 2,855 'separated' children within the same age group.


The door-to-door survey identified the problems of separation, divorce and young widows in the state. It states that there are nearly 2.5 lakh and 13.62 lakh married persons in the age group of 10-14 and 15-19, respectively. As per the data, out of the 3.29 crore married persons across all age groups, around 4.95% of them are minors.


"Divorce and separation are a direct fallout of atrocities by the family, demands of dowry , birth of a baby-girl, incompatibility and even extra-marital affairs. If the census enumerator were given the questions to find out instances of polygamy among minors, the results would have been shocking," said Rajiv Gupta, former head of sociology department, Rajasthan University. The retired professor recalled his interviews with child bridesgrooms done for a research years ago. He said, "The life of a child who is divorced or widowed is worse than hell as she has to live with the stigma for years or forever."


A testimony to the prevalence of child marriage in India, the report sheds light on the failure of government schemes. Rajasthan sees mass child marriages on Akha Teej, and the government had started campaigns to discourage the practice.


However, sociologists believe that the government needs a holistic campaign as child marriages are not restricted to Akha Teej.








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com