Saturday, June 22, 2013

மாணவர் தளம்: தமிழார்வம்





மாணவர் தளம்: தமிழார்வம்
Published:http://www.மாணவர் தளம்: தமிழார்வம்.Jean-Luc Chevillard (ழான்) wrote on 24 October, 2012, 19:11



Innamburan Innamburan Wed, Oct 24, 2012 at 12:45 PM



மாணவர் தளம்
தமிழார்வம்

Inline image 2

1.முகவுரை

1.1. இன்று விஜயதசமி. வித்யாரம்பத்திற்கு உகந்த சுபதினம். துவஜாரோகணம். கொடியேற்றத்துடன் துவங்குவோமாக.

1.2. மாணவர்கள் படிக்கும்போதுக் குறிப்பு வைத்துக்கொள்வது நல்ல பழக்கம். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது அந்த நல்ல பழக்கத்தின் அடுத்த கட்டம். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினால், இந்த பயிற்சி மேன்மை பெறும். அதற்கு எல்லை என்பது இல்லை. தொடுவானம், நெருங்க நெருங்க, எட்டக்கூடாமல் நகருவதைப் போல், கற்றுக்கொள்வதற்கு விண்மீன்களை போல கணக்கற்ற விஷயங்கள் உளன. கற்றது கைமண்ணளவு: கல்லாதது உலகளவு. வாழ்நாள் முழுதும் தொடரக்கூடியது, கல்வி ஒன்றே. ஏன்? அதற்கு பின்னும் கல்வியின் அரும்பணி தொடருகிறது. அதனால் தான் 2012ல் கம்பனுக்கு விழா எடுக்கிறார்கள். இந்த எல்லை கடந்த யாத்திரையை ‘தமிழார்வம்’ துவக்கி வைப்பது ஒரு நன்நிமித்தமே.  

1.3. தமிழ் மொழி தொன்மையானது. அதனுடைய இலக்கியத்தின் எழிலும், இலக்கணத்தின் கட்டுக்கோப்பும், வழுவமைதியும், நீதி நூல்களின் நன்கொடையாகிய நன்னெறியும் நம் தாய்மொழியாகிய தமிழுக்கு ஒளி வட்டமாயின. காப்பியங்களின் விசால தளங்களும், இயல், இசை, நாடக கலைகளின் கவின் வசீகரமும், பக்தி இலக்கியத்தின் ஆழமும், அதற்குக் கட்டியம் கூறின. பரண்களில் தூங்கிய ஏட்டுச்சுவடி கருவூலங்களும், சி.வி.தாமோதரம் பிள்ளை, தமிழ்த்தாத்தா போன்ற சான்றோர்களின் திருப்பணியால், அச்சுக்கு வந்தன. தமிழார்வலர்களின் உழைப்பினால், இன்று பல நூல்கள் மின் கருவூலங்களில் சேகரிக்கப்படுகின்றன. 

1.4. நூறாண்டுகளுக்கு முன்னால், குடத்திலிட்ட தீபம் போல் ஆங்காங்கு தமிழ் மணம் பரப்பிய புலவர் பெருமக்கள் பலர். அவர்களின் தமிழ்த்தொண்டு, தமிழன்னைக்கு மாலை மரியாதை செய்து, வணங்கியது. குருகுலவாசமும், திண்ணைப்பள்ளிக்கூடங்களும், அணி வகுத்து, அவளை ஆராதித்தன. அதற்கு பின் வந்து நூதனமாக வந்த தமிழ் உரை நடை, நாளொரு மேனியாகவும், பொழுதொரு வண்ணமாகவும், விரைவாகவே வளர்ந்தது. 

1.5. செழித்து வளரும் தமிழுக்கு மெருகேற்றிய புதின/கட்டுரை/ சிறுகதை/மொழியாக்க/புதுக்கவிதைப் படைப்பாளர்களின் நுட்பமான அணுகுமுறையையும், கற்பனைத்திறனையும், படைப்பாற்றலையும், பிரதிபலிப்பு மென்மையையும் பாராட்டுவோமாக. எப்படி? நாம் அவற்றை திறனாய்வு செய்தது மிகக்குறைவு. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா போன்ற விமர்சகர்கள் தற்காலம் தென்படுவதில்லை. தமிழுலகில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், தமிழ் மொழி வளர்ச்சி/ அதன் மீது ஆர்வம்/ கல்வித்தரம்/ வரலாற்று பதிவுகள்/ இலக்கிய தாகம் ஆகியவை போதவே போதாது. தயங்கி, தயங்கி, இப்படி ஒரு அரில் அகற்ற நினைத்தபோது, எதிர்பாராமல், ஆதரவு வந்து சேர்ந்தது. அதை அனுபந்தமாக இணைத்திருக்கிறேன்.   புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை ஒன்றை படிக்க நேர்ந்தது. அதில் கூறப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியதால், அதை அடுத்து இடுகையில், அதை பதிவு செய்கிறேன்.   நம்மால் இயன்றதை செய்வோம். வருங்காலத்தில் தமிழ் பிரகாசிக்கட்டும்.


1.6. ‘மாணவர் தளத்தில்’ இயல்பாகவே குற்றம் குறைகள், தவறுகள் இருக்கலாம். திசை மாற்றாமல் அவற்றைக் களைந்தும், மேலதிக விவரங்களை அளித்தும், மேன்மை படுத்துவோர்க்கு என் நன்றி உரித்ததாகுக. 

1.6. அடுத்து வருவது, முதலாவதாக மூலிகைத்தமிழ்.

(தொடரும்)

இன்னம்பூரான்
24 10 2012
*
அனுபந்தம் :மாணவர் தளம்: தமிழார்வம்

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு ஒன்றிலிருந்து:
‘தமிழியல் ஆய்வானது இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, தொல்லியல், மானுடவியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட பன்முகத்தன்மையைக் கொண்டதாக விளங்குகிறது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் தமிழியல் ஆய்வுகள் என்பவை இப்பன்முகத்தன்மையை வெளிக்கொணரும் வகையில் நடைபெறுகின்றபோதிலும், அவை தனித்தனி தீவுகளாகவே இருந்துவருகின்றன. ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து வேறு பல்கலைக்கழக ஆய்வாளர்களில் பெரும்பான்மையினருக்குப் போதிய அறிமுகம் இருப்பதில்லை. சமகால ஆய்வுப் போக்குகள் குறித்து பரஸ்பர புரிதல் இல்லாத சூழலே இன்றளவும் தமிழியல் ஆய்வுலகில் நிலவிவருகிறது. அவ்வாறான புரிதலை வளர்த்தெடுப்பதற்கான அக்கறையும் அரிதாகவே காணப்படுகிறது.
ஒரு பொருண்மை குறித்து முன்னர் நடைபெற்ற அல்லது சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆய்வுகள், அவற்றில் பின்பற்றப்படும் ஆய்வு முறைமைகள், ஆய்வு முடிவுகள் என இவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாத சூழலில் மேற்கொள்ளப்படும் ஆய்வு என்பது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். மாறாகச் சமகால ஆய்வுப் போக்குகளை உள்வாங்கிக்கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வானது ஆய்வுப் பொருண்மை குறித்த புரிதலை மேம்பட்ட நிலைக்குக் கொண்டுசெல்வதாக அமையும்.
பலதரப்பட்ட பொருண்மைகளில் தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர்கள் ஆய்வு தொடர்பான தங்களது கருத்துகளை, ஆய்வு முறைமைகளை, ஆய்வுலகில் சந்திக்கும் சிக்கல்களை இன்ன பிறவற்றைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வெளியை உருவாக்குவது இன்றைய தமிழியல் ஆய்வுலகில் அவசியத் தேவையாக உள்ளது.இத்தகு வாய்ப்புகளை ஆய்வாளர்களுக்கு உருவாக்கித்தருவதன் மூலம் அவர்களது சிந்தனையையும் ஆய்வு தொடர்பான புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முடியும்.
தமிழியல் ஆய்வுலகில் இருக்கும் ஆய்வாளர்கள் தங்களுக்குள் ஆய்வு தொடர்பான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், தமிழியலின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் ஒரு களத்தை அமைத்துத்தருவதாகக் கருத்தரங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அந்த வகையில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும், பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும் இணைந்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12, 13 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத் தமிழியல் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஒரு கருத்தரங்கை முன்னெடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கருத்தரங்கமும் ஒருங்கிணைக்கப்படுகிறது.’
Retrieved with thanks,on October 24, 2012 and acknowledging their copyright, from
சித்திரத்திற்கு நன்றி: http://img129.imageshack.us/img129/7631/tamil3qe.gif
Jean-Luc Chevillard (ழான்) wrote on 24 October, 2012, 19:11
Dear Innamburan,
I am very glad to see your comments on the workshop at the IFP. This shows that the generous idea of Jean Filliozat (“http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BE”) [1906-1982] to establish two French research center in Pondicherry (the EFEO {“http://www.efeo.fr/base.php?code=227″} and the IFP {http://www.ifpindia.org/-en-.html} was both generous and fruitful. Of course, the fact that he was for many years both the director of the EFEO (implanted nowadays in 17 Asian countries) and the IFP (which is in a sense the Indian “brain child” (or தம்பி) of the EFEO) helped him overcoming possible bureaucratic difficulties. The next step is for adding an international dimension to such workshops, in order to meet with the expectations of European scholars.

அன்றொரு நாள்: ஜூன் 23




அன்றொரு நாள்: ஜூன் 23
                                                               


Image Credit:http://farm3.staticflickr.com/2047/2228879068_0968f66313.jpg
23 06 2013


Innamburan Innamburan Wed, Jun 22, 2011 at 7:54 PM





http://www.youtube.com/watch?v=rwgF2-C83hc

அன்றொரு நாள்: ஜூன் 23 


தரணியாள வேண்டுமெனில், நிலத்தை பறிக்கவேண்டும் - நிறம் கம்மி, மூக்குச்சப்பை, அது, இது என்று நொண்டிச்சாக்குச் சொல்லி. அசிங்கமாக இல்லை, இது?

- மார்லோ கூறுவதாக:  ஜோசஃப்  கோன்ராட்:  இருண்ட இதயம்.

“அடடா! என்ன பிழைப்பு இது?  ஊரை ஏமாற்றி? ஒரே சிக்கல்...”
  • - ஸர் வால்டர் ஸ்காட்: மார்மியன், கண்டம் 6, செய்யுள் 17 

வாமனாவதாரத்தில் கூட பெருமாள் மூன்று அடிகள்  நிலம் தான் கேட்டார். இந்த ஆங்கிலேயனோ, மேற்கத்திப்பக்கம் சூரத்தில் இறங்கி டேராப்போட்டு, அப்படியே தென்னாட்டுப்பக்கம் தலை வைத்துப் படுத்து, கிழக்கோரம் சூழ்ச்சிகள் பல செய்து, வடக்கு வாசலில், பாதுஷாவை கடத்திச் சென்று, இந்திய உபகண்டத்தை கைபற்றினான். உங்களுக்கு பொலாசி தெரியுமோ? கொல்கத்தாவுக்கும், மூர்ஷிதாபாத் நகருக்கும் நடுவிலே உள்ள சதுப்பு நிலத்தில் ஒரு கிராமம் இது. அங்கு, இன்றைய தினம் (1757) காலை ஏழு மணிக்கு தொடங்கிய ஒரு போலி யுத்தம் தான் வரும் இரு நூறு ஆண்டுகளுக்கு [சரி: 190] பாரதமாதாவின் தலை விதியை அடிமையாக நிர்ணயித்தது.  வங்காள நவாப் ஸிராஜ் உத் தொளலாவின் 15,000 புரவிகளும், 35 ஆயிரம் துருப்புகளும், நாற்பது பீரங்கிகளும் கொண்ட படையின் தளபதி மீர் ஜாஃபர், மதியத்திற்கு முன்னாலேயே, வெறும் மூவாயிரம் துருப்புக்களுடன் வந்திருந்த ராபர்ட் கிளைவிடம், ரகசியமான முன்னேற்பாடின் படி சரணடைந்தான், தன் எஜமானனுக்கு துரோகமிழைத்து. லஞ்சப்பேய் தலைவிரித்தாடையது. காசு வாங்கிக்கொண்டு, மீர் ஜாஃபரின் படையினர், ஆயுதங்களுடன் எதிரியின் பக்கம் சாய்ந்தனர். நாற்பது பீரங்கிகளும் அநாதையாயின.  நவாப் தரப்பில் 500 வீரர்கள் மாண்டனர்; கிளைவ் தரப்பில் 22 இந்திய சிப்பாய்கள்!  “ ராஜ துரோகமும், பித்தலாட்டமும் ராபர்ட் கிளைவுக்கு பின்பலம். இந்தியாவின் ஆளுமையை ஆங்கிலேயர் பிடித்ததே, இப்பேர்ப்பட்ட அநாகரீகச்செயல்களால். அதனால் ஏற்பட்ட கசப்பு நீங்கவேயில்லை.” என்றார், ஜவஹர்லால் நேரு.

ஆம். 23 06 1767 அன்று நடந்த இந்த போலி யுத்தம் தான், இந்திய சாம்ராஜ்யத்தை இங்கிலாந்துக்கு தத்து கொடுத்தது. போர்க்களத்திலிருந்து புறமுதுகு காட்டி ஒடிய நவாப், அவருடைய தளபதியும் துரோகியுமான, மீர் ஜாஃபரின் மகன் மீரானால் கொலையுண்டார். மீர் ஜாஃபருக்கு கிளைவின் தயவினால் முடி சூடப்பட்டது. கிழக்கிந்திய கம்பேனிக்கு வங்காளம், பீகார், ஒரிஸ்ஸாவில் கட்டற்ற வணிக உரிமை அளிக்கப்பட்டது. வரி விலக்கு வேறே!  24 பர்காணா ஜமீந்தாரியும் போனஸ். மீர் ஜாஃபரின் கஜானா சூறையாடப்பட்டது, இந்த ஆங்கிலேய நண்பர்களால். இதை கண்டு மிரண்டு போன மீர் ஜாஃபர் அடம் பிடிக்க, அவரும் தூக்கி அடிக்கப்பட்டார். அவரின் மாப்பிள்ளை மீர் காசிமுக்கு அடித்தது யோகம். மறுபடியும் ஒரு சுற்று, லஞ்சம். நவாப் ஸிராஜ் உத் தொளலாவுக்கு துரோகம் செய்தவர்கள்: மீர் ஜாஃபர், ஜகத் சேத் என்ற லேவாதேவி, காதிம்கான் என்ற ‘பிரபு’. கொல்கத்தா கொத்தவால் மாணிக் சந்த், அமீன் சந்த் என்ற வியாபாரி, நவாபின் பொக்கிஷதாரன், ராய் துர்லப், அவருடைய சித்தி க்வாசிதி பீகம். இது போததா?

கிளைவுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம்: பத்து லக்ஷம் பொற்காசுகள். வயிறு எரியுது அல்லவா. இந்த போலி யுத்தம், அதன் பின்னணி துரோகங்கள், லஞ்ச லாவண்ய விளைவுகள் எல்லாம், ‘கணக்கு’ என்று போடப்பட்டால், ஒரு பெரிய தொகை நஷ்டம் என்று சொல்ல முடியாது. இழந்ததோ பாரத திரு நாட்டை. 1757லிருந்து 1947 வரை நமது இழப்பை இத்தனை தம்பிடி, இத்தனை காசு, இத்தனை ரூபாய் என்று கணக்கு சொல்லமுடியுமோ? 

இது ஒரு வரலாற்றுத்தொடரல்ல. 23 06 1757ல் நிகழ்ந்த ஒரு அழுச்சாட்டியம். அவ்வளவு தான். பக்சாரில் நடந்த போர், தரங்கம்பாடி யுத்தம், ஹைதர் அலி, மொகலாய சாம்ராஜ்யம் அழிந்த அலங்கோலம் என்றெல்லாம், இங்கு எழுதப்படவில்லை. அதற்கு உரிய தருணம் வந்தால்... 
இன்னம்பூரான்
23 06 2011
பின்குறிப்பு: இது கூகிள் மொழிபெயர்ப்பு அல்ல. ஏன்? மொழிபெயர்ப்பே இல்லை. என் நினைவில் இருப்பவை; சரி பார்த்தவை; பொறுப்பு எனதே. விளாசவும்.

Geetha Sambasivam Thu, Jun 23, 2011 at 2:45 AM



ஹூம், இந்தியாவில் லஞ்சம் தினசரி வாழ்வின் முக்கிய அங்கமாக இருந்திருக்கிறது, இருக்கிறது, இன்னமும் இருக்குமோ??

இந்தச் செய்திகளுக்கு நன்றி ஐயா.  மீண்டும் சரித்திரப் பாடத்தை நினைவு கூர வைத்துவிட்டீர்கள்.  ஆனால் வடநாட்டில் குறிப்பாக ராஜ்புத் எனப்படும் ராஜபுத்திரர்கள் ஜெயசந்திரனையே நாம் நாட்டை அந்நியரிடம் இழக்க நேரிட்டதற்குக் காரணமாகக் கூறுகின்றனர்.   அவர்களில் பலரும் ஜெயசந்திரன் என்ற பெயரைக் கூடத் தங்கள் குடும்பத்தினரில் எவருக்கும் வைப்பதில்லை. தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

கீழ்க்கண்ட வரலாற்றுச் செய்திகளை எங்கள் எகனாமிக்ஸ் ஆசிரியர் மிக அருமையாக விளக்கிச் சொல்லி இருக்கிறார்.  மனதில் ஆழமாய்ப் பதிந்த விஷயங்கள். :(((((((((((((



Innamburan Innamburan Thu, Jun 23, 2011 at 6:14 AM



மேலும், மேலும் கீதா போன்ற வாசகர்கள் விஷயதானம் செய்தால், ஒரு நிறைவு. ஒரு நாள் ஜெயச்சந்திரனை பற்றி எழுதுகிறேன். தேசத்துரோகிகளை பற்றி ஒரு செய்தி. இரண்டாம் உலகயுத்தத்தின் போது அமெரி என்றொரு அமைச்சர், இங்கிலாந்தில். அவருடைய மகன், ஹிட்லருடன் சேர்ந்து கொண்டு, தாய் நாட்டுக்கு விரோதமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மாட்டிக்கொண்டார். தூக்குத்தண்டனை. தந்தையோ அமைச்சர். அவர் பிரதமர் சர்ச்சிலிடம் மன்றாடினார், 'அவனை சுட்டு விடுங்கள். தூக்கிலிட்டால், குடும்பத்திற்கே களங்கம்.' என்று. வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
நன்றி, வணக்கம்.

நன்றி, வணக்கம்.



இன்னம்பூரான்

Tthamizth Tthenee Thu, Jun 23, 2011 at 6:22 AM



"என் நினைவில் இருப்பவை; சரி பார்த்தவை "

உமது  பொக்கிஷ அறையை திறக்க திறக்க
எமக்கு பொக்கிஷங்கள்  கிடைக்கும் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது
ராஜபாட்டை
அன்புடன்
தமிழ்த்தேனீ

கி.காளைராசன் Thu, Jun 23, 2011 at 1:29 PM


Reply-To: mintamil@googlegroups.com

To: mintamil@googlegroups.com
ஐயா வணக்கம்.




உமது  பொக்கிஷ அறையை திறக்க திறக்க
எமக்கு பொக்கிஷங்கள்  கிடைக்கும் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது


உண்​மைதான் ஐயா,
எடுக்க எடுக்கக் கு​றையாத ​பொக்கிஷம் அது.

அன்பன்

கி.கா​ளைராசன்

செல்வன் Fri, Jun 24, 2011 at 7:46 AM



வங்காள நவாப் ஸிராஜ் உத் தொளலாவின் 15,000 புரவிகளும், 35 ஆயிரம் துருப்புகளும், நாற்பது பீரங்கிகளும் கொண்ட படையின் தளபதி மீர் ஜாஃபர், மதியத்திற்கு முன்னாலேயே, வெறும் மூவாயிரம் துருப்புக்களுடன் வந்திருந்த ராபர்ட் கிளைவிடம், ரகசியமான முன்னேற்பாடின் படி சரணடைந்தான், தன் எஜமானனுக்கு துரோகமிழைத்து. லஞ்சப்பேய் தலைவிரித்தாடையது. காசு வாங்கிக்கொண்டு, மீர் ஜாஃபரின் படையினர், ஆயுதங்களுடன் எதிரியின் பக்கம் சாய்ந்தனர். நாற்பது பீரங்கிகளும் அநாதையாயின.  நவாப் தரப்பில் 500 வீரர்கள் மாண்டனர்; கிளைவ் தரப்பில் 22 இந்திய சிப்பாய்கள்!  “ ராஜ துரோகமும், பித்தலாட்டமும் ராபர்ட் கிளைவுக்கு பின்பலம். இந்தியாவின் ஆளுமையை ஆங்கிலேயர் பிடித்ததே, இப்பேர்ப்பட்ட அநாகரீகச்செயல்களால். அதனால் ஏற்பட்ட கசப்பு நீங்கவேயில்லை.” என்றார், ஜவஹர்லால் நேரு.
*
எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் வார் அன்ட் லவ் என்பார்கள்.

எப்படி ஒரு யுத்தத்தை ஜெயிக்கணும்னு கிளைவிடம் கத்துக்கணும்.

--
செல்வன்


Innamburan Innamburan Fri, Jun 24, 2011 at 9:21 AM
To: mintamil@googlegroups.com
அதற்காக காமஸூத் ரம் சொல்லிச்சுன்னு பக்கத்தாத்து மாமியை ஃபேர்ரா லவ்வமுடியுமோ?
நன்றி, வணக்கம்.



இன்னம்பூரான்


coral shree Fri, Jun 24, 2011 at 12:38 P


ஹ...ஹா.......சார்ர்ர்ர்ர்..........எப்புடீசார் இப்படீல்லாம்..........ஜோக் அடிக்க முடியுது?
[Quoted text hidden]
--

                                                              

                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் penneswaran@gmail.com via googlegroups.com 
6/23/11


to thamizhvaasal
வரலாற்றுப் பிரக்ஞை கொண்ட பதிவுகள்.

உங்களுக்கு என் தலைவணக்கங்கள் இ சார்.

அன்புடன்

பென்
-----------

Friday, June 21, 2013

1. ஆயிரம் உண்டிங்கு சாதி...சாதிகள் இல்லையடி பாப்பா.




ஆயிரம் உண்டிங்கு சாதி...சாதிகள் இல்லையடி பாப்பா...1

Innamburan S.Soundararajan Fri, Jun 21, 2013 at 11:01 PM

ஆயிரம் உண்டிங்கு சாதி...சாதிகள் இல்லையடி பாப்பா...1
Inline image 1

மஹாகவி பாரதியாரின் வாக்கு பொய்க்காது. இந்த தொடருக்கும், எனக்கும் கவசம் அவர் தான். ஆம். சர்ச்சை பயின்று வரும், தட தடவென்று. எனவே, எப்படிப்பட்ட கருத்துக்கள் யாரிடமிருந்தும் வரலாம். வராமலும் இருக்கலாம். ஆனால், தொடர் அதன் போக்கில் தனிமொழியாக பயணிக்கும். கருத்துக்களுக்கு பதில் பிற்காலம் என்றோ நாளில் தான்.

‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்று உதட்டளவில் கூறி ஊரை இரண்டு படுத்துவது நாம் பலமுறை கண்ணால் கண்டும் காணாத காட்சி. இந்த அழிவுபாதையிலிருந்து திரும்பி, நாம் சமத்துவ ராஜபாட்டையில் பீடு நடை போடும் தினம் தான் நமக்கு உண்மையான விடுதலை தினம்.  அதை நாடுகிறது, இந்த தொடர்.

ஐம்பது வருடங்கள் முன்னால், அலுவலகத்தில் கெஜட் என்ற அரசு நாளிதழ் எங்களிடையே வலம் வரும். ஆயிரம் உண்டங்கு செய்திகள்- அலுத்து, சலித்து போக வைக்கும் அரசு செய்திகள். திரைப்படங்களை தணிக்கை செய்யும் குழுவின் தீர்மானங்கள் அப்பட்டமாக வரும். சுவாரசியமாக இருக்கும். சான்றாக: ‘கட்! கதாநாயகியின் உதடுகள் மோஹனமாக புன்னகைப்பதை! ஒரு பிரதியில் அற்புதமாக ஒரு வரலாற்று செய்தி கிடைத்தது. அதனால் உந்தப்பட்டு, அலுவலக நூலகத்தில் ஒரு நாள் தேடியதில் திருநெல்வேலி கெஜட்டியர் என்ற தடிமனான செல்லரித்த நூல் கிடைத்தது. அடேயப்பா! வரலாற்று கருவூலம்; ஆய்வு களஞ்சியம். நான் ஒருவன் தான் அவற்றையும், ஜனத்தொகை கணக்கெடுப்பு வெளியீடுகளையும் படித்த பைத்தியம் என்று நினைக்கிறேன்.  

இது ஒரு நீண்ட தொடர், தலைப்பை ஒட்டி. ஜனத்தொகை கணக்கெடுப்பு வெளியீடுகளை படித்ததின் பயனாகவும், சில தொகுப்பு நூல்கள் கிடைத்ததாலும். பாசஞ்சர் ரயில். எல்லா ரயில் நிலையங்களில் நிற்கும். சரக்கு வண்டி. மெதுவாகத்தான்  ஊர்ந்து வரும். என்னுடைய கருத்துக்களும், மூலநூல்களை பற்றிய விவரங்களும் கடைசி இழையில் தான். 
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்

21 06 2013
சித்திரத்துக்கு நன்றி :http://4.bp.blogspot.com/-aNEUBLpx6qc/T6VGlgxHcPI/AAAAAAAAB0I/kFEaCqD4xG8/s1600/file1.JPG

அன்றொரு நாள்: ஜூன் 22





அன்றொரு நாள்: ஜூன் 22

சித்திரத்துக்கு நன்றி: http://bks2.books.google.com/books?id=b_hBAAAAYAAJ&pg=PP5&img=1&zoom=1&sig=ACfU3U13jh2NWoKu43Sp9bEGIrvT1zGSIQ



Innamburan Innamburan Tue, Jun 21, 2011 at 7:47 PM




அன்றொரு நாள்: ஜூன் 22

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா! என்று கேட்காதீர்கள். இரண்டும் ஓருடலின் அவயவங்கள் தானே. வரலாற்று நதி கூட மேலும் கீழுமாகப் பாயக்கூடியது தான். பாருங்களேன். யான் வாழும் போர்ட்ஸ்மத் நகரவாசி சர் ஜோசையா சைல்ட் நினைவு தினமிது (1699). அவர் செல்வம் ஈட்டியது, புரட்டியது எல்லாம், சென்னையில் எனலாம். வரலாறு அறிவதின் பயன் யாதெனில், நம் முன்னோர்களின் வாழ்வியலை பற்றி புரிந்து கொள்ளலாம் என்பதே. சர் ஜோசையா சைல்ட் கிழக்கிந்திய கம்பேனியின் தூண்களில் ஒருவர் என்பதால், ஒரு பின்னணி. 1608ல் சூரத் நகரில் வணிகம் தொடங்கிய கிழக்கிந்திய கம்பேனி, 1639ல் தான் மேற்கிலிருந்து கிழக்குப்பக்கம், அதாவது தென் கிழக்குப்பக்கம் - கொரமாண்டெல் கடலோரம் - கால் வைத்தது. ஃபிரான்சிஸ் டே மதராஸ் பட்டினத்தில் (சென்னை) ஜார்ஜ் பெயரில் கோட்டையும் கொத்தளமும் அமைத்தார். சொல்லப்போனால், வெள்ளைக்காரனின் இந்திய மண்ணாசை தலை எடுத்தது, இங்கு தான். மதராஸ் மாகாணத்தின் ஜென்மம். தடபுடலாக, வணிகம், தட்டிப்பறித்தல், நாடு பிடித்தல், கடன் உடன், படையெடுப்பு, சூழ்ச்சி, வாரிசு நியமனம் என்றெல்லாம் சொத்து சேர்த்த அந்த கம்பெனி 1640 வாக்கில், கிட்டத்தட்ட திவால். கஜானா காலி. வந்த வெள்ளைக்காரன் எல்லாரும் ‘உண்டகத்துக்கு இரண்டகம்’ செய்து, (இப்போ மாதிரின்னு சொல்றது நீங்க; நான் ஒண்ணும் சொல்லலை!) கம்பெனியை அதோகதியாக்கி விட்டனர். அவதாரபுருஷராக வந்தாரையா, நம்ம சைல்ட் துரை, 1860லே. போர்ட்ஸ்மத் துறைமுகத்தில் கப்பல் தரை தட்டாது, அப்போ. தள்ளி நின்று சங்கூதும். தண்ணீர், தண்ணி, முட்டை, மீன் எல்லாம் சப்ளை செய்வது, இவரு. ‘சுண்டைக்காய் ஒரு பணம்; சுமைக்கூலி பத்துப்பணம்’ என்ற வகையில் ஓஹோன்னு சம்பாதிச்சார், முப்பது வயதிற்க்குள். அதை இந்த கம்பெனியில் முதலீடு செய்து, பெரிய மனிதரானார்; நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பெல்லாம், இங்கேயும் திருமங்கலம் மாதிரி, ஒரு சின்ன அளவுக்கு எனலாம். நம்ம ‘ஆவ்சம் அமெரிக்கா செல்வன்’ மாதிரி, இவருக்கு, தன்னிச்சை சந்தையில் (ஃப்ரீ மார்க்கெட்) அபார மோஹம்! போதாக்குறைக்கு அதற்க்குள் ஒரு பொடி வைத்தார்! காலனிகளுடன் இங்கிலாந்து தான் ஏகபோக வணிகம் என்ற ஃப்ரீ இல்லாத மார்க்கெட்டுக்கு வக்காலத்து வாங்கினார். இவர் பெருமளவில் முதல் திரட்டி, சார்லஸ் II மன்னரிடம் புதிய பிரகடனம் வாங்கி, கிழக்கிந்திய கம்பேனியை புனருத்தாரணம் செய்தார். தலைவனுக்கு எத்தனை முக்யம் பாருங்கோ. 69 வயதில் செத்தாலும் செத்தார், 1699ல்; பாண்டிச்சேரியில் ஃபிரன்ச்சுக்காரன் தண்டல் எடுத்து, இங்கிலாந்துக்காரர்களை பாடாய் படுத்தினான்.
அதெல்லாம் போகட்டும். ஏழைபங்காளன் என்று அவருக்குக் கீர்த்தி உண்டு. இல்லாட்டா, எழுதுவேனா?
இன்னம்பூரான்
22 06 2011

Geetha Sambasivam Wed, Jun 22, 2011 at 5:53 AM


ஆவ்சம் அமெரிக்கா செல்வன்’ //

ஹாஹாஹாஹா, நல்லா இருக்கு.  அது சரி, ஏழைப்பங்காளன் எப்படி?? அதைப் புரிஞ்சுக்க முடியலையே எனக்கு????? :(




அதெல்லாம் போகட்டும். ஏழைபங்காளன் என்று அவருக்குக் கீர்த்தி உண்டு. இல்லாட்டா, எழுதுவேனா?

இன்னம்பூரான்
22 06 2011

Innamburan Innamburan Wed, Jun 22, 2011 at 8:08 AM

இந்த மாதிரியான கேள்விகளினால் மகிழ்ச்சி. Interactive Forum ஆகிவிடுகிறது அல்லவா. அது தான் என் இலக்கு. அதனால் தான் ஆடிப்பாடி, பின்னூட்டத்துக்கு தாளம் போடுகிறேன். சர் ஜோசையா சைல்ட் காலத்தில் இங்கிலாந்தில் தொழிலாளர்களை கொடுமைப்படுத்துவது தொடங்கியது எனலாம். ஏற்கனவே ஆண்டை-அடிமை உறவு. இவர் சில புரட்சிகரமான வழிகள் மூலம் அவர்களுக்கு வழி வகுத்தார் என்று பீ பீ ஸீ சொல்கிறது. அதனால் கீர்த்தி என்றேன்.
நன்றி, வணக்கம்.



செல்வன் Fri, Jun 24, 2011 at 7:50 AM


. நம்ம ‘ஆவ்சம் அமெரிக்கா செல்வன்’ மாதிரி, இவருக்கு, தன்னிச்சை சந்தையில் (ஃப்ரீ மார்க்கெட்) அபார மோஹம்! போதாக்குறைக்கு அதற்க்குள் ஒரு பொடி வைத்தார்! காலனிகளுடன் இங்கிலாந்து தான் ஏகபோக வணிகம் என்ற ஃப்ரீ இல்லாத மார்க்கெட்டுக்கு வக்காலத்து வாங்கினார்.

ப்;ரி மார்க்கட்டு செல்வனுக்கு பிடிக்கும்

இந்தாளுக்கு ப்ரி இல்லாத மார்க்கட்டு பிடிக்கும்

அப்புறம் எப்படி ஜோசையா சைல்ட் ஆவ்சம் ஆவாரு?:‍)
--
செல்வன்

"தொழிலாளிகளுக்கு வேலையும், சம்பளமும், வாழ்க்கையும் த‌ரும் தெய்வமே முதலாளி.முதலாளி இல்லையெனில் தொழில் இல்லை, தொழிற்சாலை இல்லை, வேலை இல்லை,தொழிற்சங்கமும் இல்லை.நியாயமா பார்த்தால் ஒவ்வொரு தொழிற்சங்கமும் அந்த தொழிலை நடத்தும் முதலாளியின் உருவபடத்தை மே 1 அன்று வைத்து கும்பிட்டு பூசை நடத்தி போற்றி புகழ வேண்டும்.ஆனால் அதுக்கு பதில் அவர்கள் "முதலாளி ஒழிக" என்கிறார்கள். முதலாளி ஒழிந்தால் தொழிற்சங்கமும் அல்லவா ஒழிந்துவிடும்?"- செல்வன்


Innamburan Innamburan Fri, Jun 24, 2011 at 9:18 AM

முன்வினை பயனாக, பிற்காலம் ஏழை பங்காளன் ஆனதனாலே! ஆமாம்! ஆமாம்!


நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்


இரு துரும்புகள்





இரு துரும்புகள்


Innamburan Innamburan Fri, Jun 22, 2012 at 11:42 AM


‘இரு துரும்புகள்’ என்ற என் கட்டுரையை ‘வல்லமை’ இதழில் பிரசுரித்துள்ளார்கள். நான் அனுப்பிய ஃபோட்டோ,  தொழுகைக்குரிய தலை லாமா அவர்களுடைய தளத்திருந்து. உடனுக்குடன் அதை விட பொருத்தமான ஃபோட்டோவை பதித்த வல்லமை ஆசிரியருக்கு போனஸ் நன்றி.

இன்னம்பூரான்
22 06 2012


இரு துரும்புகள்
Friday, June 22, 2012, 9:13
இன்னம்பூரான்
பொதுமக்களுக்குச் சான்றோர்களின் சந்திப்புப் பற்றி அறிய ஆர்வம் மிகும் என்று சொல்வார்கள். ஆங்க் ஸான் ஸூ க்யி கடார நாட்டின் (மியான்மார் அல்லது பர்மா) பிரபலம். தொழுகைக்குரிய தலை லாமா, நாடு கடந்து வந்த திபெத்திய மத/சமுதாய தலைவர். இருவரும் ஜூன் 19 அன்று லண்டனில் சந்தித்துக்கொண்டதாக, இன்றைய செய்தி. ஜூன் 19-ம்தேதி ஆங்க் ஸான் ஸூ க்யி அவர்களின் பிறந்த தினம். அன்றொரு நாள் தொடரில் அவரைப் பற்றியும், அவருடைய தந்தையைப் பற்றியும், இந்தியாவுக்கும் அவருக்கும் உள்ள அன்யோன்யத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறேன்.
1988ல் இங்கிலாந்திலிருந்து உடல்நலம் குன்றியிருந்த தன் அன்னையைப் பார்க்க வந்த ஆங்க் ஸான் ஸூ க்யி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 24 வருடங்களாக அங்கு தவம் கிடந்தார். வெளிநாடு சென்றால், திரும்பி வர விட மாட்டார்கள், மியான்மாரின் ராணுவ ஆட்சி. சைனாவுக்கும் மியான்மாருக்கும் போதாத காலம் இப்போது. ஆங்க் ஸான் ஸூ க்யி பாராளுமன்ற அங்கத்தினராகும் அளவுக்கு, சைனாவுக்கு உகந்த சர்வாதிகாரப்போக்கை இந்த ராணுவ ஆட்சி சற்றே தணித்தது குற்றம் தான், சைனாவின் கணக்கில்.
போதாக்குறைக்குப் போன வருடம் தான் சைனாவின் உதவியுடன் கட்டப்பட்ட மின் உற்பத்திச்சாலை நிறுத்தி வைக்கப்பட்டது. அடடா! மற்ற நாடுகளுடன் மியான்மார் சேர்ந்தால், தன்னுடைய ஆளுமை குறைந்து விடுமே என்று சைனா கருதும் வேளையில், இந்தத் தலை லாமாவை இவர் சந்தித்தது சைனாவுக்குச் சவால் போல ஆகி விட்டது. இவருடைய தேசீய ஜனநாயக கட்சி சைனாவின் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய காலகட்டத்தில், இது ஒரு நெருடல்.
தலைலாமாவைச் சைனாவுக்கு அறவே பிடிக்காது. யானை வரும் பின்னே. மணியோசை வரும் முன்னே. தலைலாமா வருவார் பின்னே. சைனாவின் வசை வரும் முன்னே. அவர் இங்கிலாந்துக்கு வந்ததைக் கடுமையாக விமரிசித்தது, சைனா. ஒலிம்பிக் வீரர்களை வாபஸ் பெறுவோம் என்று கர்ஜித்தது. தலைலாமா இதையெல்லாம் சைனாவின் சம்பிரதாய எதிர்ப்பு என்று உதறி விட்டார். போன மாதம் பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரான் தலைலாமாவைப் பார்த்ததற்கு, கண்டபடி சைனாவால் நிந்திக்கப்பட்டார். உலகநாயகனாக விளங்கும் தலைலாமா சைனாவின் பார்வையில் ஒரு பேய்.
சரி. இதையெல்லாம் தவிர்க்க முடியாது. விளம்பரம் இல்லாமல் நடந்த இந்தச் சந்திப்பின் போது, ஆங்க் ஸான் ஸூ க்யியின் தைரியத்தைத் தான் பாராட்டுவதாகச் சொல்லி. ஆசிகள் பல வழங்கினாராம், தலைலாமா அவர்கள். அவளோ பெளத்தமதத்தினள். இவரோ பெளத்த மதகுரு. இந்த ஆசி நன்மை பயக்கும். சைனா சம்பந்தப்பட்டவரை இருவரும் துரும்புகள். உலகம் இருவரையும் கரும்புகள் எனக் கருதுகிறது.
இந்தக் கட்டுரை எதற்கு என்று தோன்றலாம், சிலருக்கு. நாமும்தான் எத்தனை வருடங்கள் கிணற்றில் தவளை நீச்சல் அடிப்பது என்ற ஆதங்கம். இந்தத் தகவல் பல இதழ்களில் இன்று வந்துள்ளன. 




அரசு -2 மக்கள் எழுச்சி
13 messages

Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 12:14 PM

To: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com, tamilpayani@googlegroups.com
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88

அரசு -2
மக்கள் எழுச்சி
Inline image 1
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். நாடும் கொள்ளாது எனலாம். வரலாற்றில் முதல் காட்சி: ஃப்ரென்ச் புரட்சி. ‘ரொட்டி கிடைக்கவில்லையென்றால் அப்பம் சாப்பிடு.’ என்ற பொருள்பட மேரி அண்டாய்னட் சொன்னதாக ஆதாரமில்லாத வதந்தி. மக்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். பிறகு, பல புரட்சிகள். புரட்சிகளே யதேச்சதிகாரத்துக்கு வித்தாக அமைந்த கூத்துக்களும் நிகழ்ந்துள்ளன. அது வேறு விஷயம். ‘அன்றொரு நாள்’ தொடரில் அது பற்றி விவரங்களை காணலாம். சில நாட்களாக பிரேசில் நாட்டில் நடுத்தரவகுப்பு மக்களையும் அரசையும் எதிரும் புதிருமாக வைத்துள்ள அமைதியின்மை கவலையளிக்கிறது. ஒரு பார்வை:
சிறு துளி பெரு வெள்ளம் என்பதை விட, சிறியதொரு தீப்பொறி ஊரையே கொளுத்தி விடும் என்பதே சரியான உவமை. கால்பந்து விளையாட்டு பிரேசில் மக்கள் விரும்பும்  பொழுது போக்கு என்றாலும், உலகளாவிய கால்பந்து விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டுமானச்செலவுகள்/ஊழல்கள் மீது மக்களுக்கு அதிருப்தி. இந்தியாவின் காமென்வெல்த் விளையாட்டு மோசடிகளை, இது நினைவுபடுத்துகிறது. அதிருப்தி, அலைகளை போல மோதி, மோதி வலுத்துவிடும். பிறகு பஸ்/சப்வே கட்டணங்கள் ஏற்றப்பட்டது மேல் அதிருப்தி. ஆயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களில் அமைதியாக கூடி போராடும்போது, அதை வன்முறையால் அடக்குவது கடினம். காந்திஜியும், மார்ட்டின் லூதர் கிங்கும், நெல்சன் மண்டேலாவும் இதற்கு சாக்ஷி. பிரேசிலில் தற்பொழுது அமைதியான புரட்சி அலை கரை புரண்டுவிட்டது என்று தோற்றம், கமீலா ஸேனா என்ற நிடொராய் நகரத்து 18 வயது யுவதி கூறியது போல: ‘விலையேற்றத்தை எதிர்த்த காலகட்டம் கடந்து விட்டது. நாட்டு நடப்பு, அரசு தன்மை (சிஸ்டம்)  கேவலமாக இருக்கிறது. எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. அதை சப்ஜாடா மாற்றியமைக்க வேண்டும்... பணத்தை கொண்டுபோய் ஊழலில் வீணடிப்பதைக் கண்டு கொதித்தெழுந்தோம்’.
ஊருக்கு ஊர் பஸ்/சப்வே கட்டணங்களை குறைத்தும், மக்களின் ஆத்திரம் குறையவில்லை. ஃபோர்டெலெஸா என்ற ஊரில் 15 ஆயிரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசிடம் அடி வாங்கினர். கல்வி உரிமை வேண்டும், சுகாதாரப்பணிகள் மேன்படவேண்டும் என்று கோஷமிட்டனர்.
இந்தியாவுக்கு வருவோம். எத்தனையோ ஊழல்களை அமைதியாக ‘கண்டும் காணாத மக்கள்’ கொதித்தெழுந்தனர், இமாலயத்தின் மடியில் வாழும் மக்கள். கங்கை நதியின் உபநதிகளான ருத்ரபிரயாக், அலக்நந்தா வரலாறு காணாத வகையில் பிரவாஹம் எடுத்தோடின. அடிப்பட்டது கிராமவாசிகள். பார்வையிட வந்த முதல்வர் விஜய் பஹுகுணாவும் அவரது கூட்டாளிகளும், பொது மக்களின் உணர்ச்சிகரமான எதிர்ப்பை தாங்கமுடியாமல் 15 நிமிடங்களில் புறங்காட்டி ஓடினர், ஹெலிகாப்டர்களில்.
கொசுறு செய்தி: ஆங்கிலேய கலோனிய அரசை கனவிலும் மக்களாட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் கட்டிவைத்த வாய்க்கால்கள் வெள்ளத்தைத் தணித்தன. ‘ரோடு போடுகிறோம், அழகூட்டுகிறோம்’ என்று சொல்லி அவற்றை அடைத்தது, மக்களால் தேர்ந்தெடுப்பட்ட ஆட்சி! ஹூம்!
இன்னம்பூரான்
20 06 2013
சித்திரத்துக்கு நன்றி: http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article1247510.ece/alternates/w460/q5.jpg

Geetha Sambasivam Thu, Jun 20, 2013 at 12:44 PM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
உத்தராஞ்சலில் மலையை வெடி வைத்துத் தகர்த்தார்கள்.  மண் அரிப்பைத் தடுக்கும் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள்.  அரசாங்கம் எங்கே வீடுகள் கட்டிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை கொடுத்திருந்ததோ அங்கே அரசாங்கத்துக்குத் தெரியாமல் வீடுகள் கட்டிக் கொண்டார்கள்.  ஒரு வகையில் ஆக்கிரமிப்பு எனலாம். மனிதன் ஏற்படுத்திய அழிவே உத்தராஞ்சலில் !  மக்கள் கொதித்தெழுந்து என்ன செய்ய? இதை எல்லாம் ஆரம்பத்திலேயே இதே மக்கள் தடுத்திருக்க வேண்டும். ஆக தவறு இருபக்கமும்.

2013/6/20 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>


இந்தியாவுக்கு வருவோம். எத்தனையோ ஊழல்களை அமைதியாக ‘கண்டும் காணாத மக்கள்’ கொதித்தெழுந்தனர், இமாலயத்தின் மடியில் வாழும் மக்கள். கங்கை நதியின் உபநதிகளான ருத்ரபிரயாக், அலக்நந்தா வரலாறு காணாத வகையில் பிரவாஹம் எடுத்தோடின. அடிப்பட்டது கிராமவாசிகள். பார்வையிட வந்த முதல்வர் விஜய் பஹுகுணாவும் அவரது கூட்டாளிகளும், பொது மக்களின் உணர்ச்சிகரமான எதிர்ப்பை தாங்கமுடியாமல் 15 நிமிடங்களில் புறங்காட்டி ஓடினர், ஹெலிகாப்டர்களில்.
கொசுறு செய்தி: ஆங்கிலேய கலோனிய அரசை கனவிலும் மக்களாட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் கட்டிவைத்த வாய்க்கால்கள் வெள்ளத்தைத் தணித்தன. ‘ரோடு போடுகிறோம், அழகூட்டுகிறோம்’ என்று சொல்லி அவற்றை அடைத்தது, மக்களால் தேர்ந்தெடுப்பட்ட ஆட்சி! ஹூம்!
இன்னம்பூரான்
20 06 2013
சித்திரத்துக்கு நன்றி: http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article1247510.ece/alternates/w460/q5.jpg

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

 


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

 

Geetha Sambasivam Thu, Jun 20, 2013 at 12:45 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
உத்தராஞ்சலில் மலையை வெடி வைத்துத் தகர்த்தார்கள்.  மண் அரிப்பைத் தடுக்கும் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள்.  அரசாங்கம் எங்கே வீடுகள் கட்டிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை கொடுத்திருந்ததோ அங்கே அரசாங்கத்துக்குத் தெரியாமல் வீடுகள் கட்டிக் கொண்டார்கள்.  ஒரு வகையில் ஆக்கிரமிப்பு எனலாம். மனிதன் ஏற்படுத்திய அழிவே உத்தராஞ்சலில் !  மக்கள் கொதித்தெழுந்து என்ன செய்ய? இதை எல்லாம் ஆரம்பத்திலேயே இதே மக்கள் தடுத்திருக்க வேண்டும். ஆக தவறு இருபக்கமும்.
2013/6/20 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>


இந்தியாவுக்கு வருவோம். எத்தனையோ ஊழல்களை அமைதியாக ‘கண்டும் காணாத மக்கள்’ கொதித்தெழுந்தனர், இமாலயத்தின் மடியில் வாழும் மக்கள். கங்கை நதியின் உபநதிகளான ருத்ரபிரயாக், அலக்நந்தா வரலாறு காணாத வகையில் பிரவாஹம் எடுத்தோடின. அடிப்பட்டது கிராமவாசிகள். பார்வையிட வந்த முதல்வர் விஜய் பஹுகுணாவும் அவரது கூட்டாளிகளும், பொது மக்களின் உணர்ச்சிகரமான எதிர்ப்பை தாங்கமுடியாமல் 15 நிமிடங்களில் புறங்காட்டி ஓடினர், ஹெலிகாப்டர்களில்.
கொசுறு செய்தி: ஆங்கிலேய கலோனிய அரசை கனவிலும் மக்களாட்சி என்று சொல்ல முடியாது. அவர்கள் கட்டிவைத்த வாய்க்கால்கள் வெள்ளத்தைத் தணித்தன. ‘ரோடு போடுகிறோம், அழகூட்டுகிறோம்’ என்று சொல்லி அவற்றை அடைத்தது, மக்களால் தேர்ந்தெடுப்பட்ட ஆட்சி! ஹூம்!
இன்னம்பூரான்
20 06 2013
சித்திரத்துக்கு நன்றி: http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article1247510.ece/alternates/w460/q5.jpg

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 1:23 PM
To: mintamil@googlegroups.com
நன்றி பல. இது மேலதிக செய்தி. சுந்தர்லால் பஹுகுணாவின் அமைதி புரட்சியை பற்றி எழுதியிருந்தேன் என்று ஞாபகம். உங்கள் இடுகையை கொஞ்சம் விஸ்தாரப்படுத்தினாலும், இவ்விழை மேலும் பயன் அடையும்.
[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 2:25 PM
To: mintamil@googlegroups.com

அப்டேட்:


  1. மூன்று வருடங்கள் முன்பே ஆடிட் ரிப்போர்ட்: (1) பாகீரதி/அலக்நந்தா நதிகளில் அரசு நிறுவி வரும் மின் நிலையங்களால் ( ஹைடல்) மலைகளுக்கு பேராபத்து. (2) இவற்றின் பயனாக திடீர் வெள்ளம் ஆபத்து அதிகரிக்கும்; (3) அதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். (4) வனங்களை அழிப்பது தொடருகிறது. இதுவும் மலைகளுக்கு ஆபத்து. (5) 38% அளவுக்கு, இந்த ப்ராஜெக்ட்களில் செடிகொடி நடுவது இல்லை. அந்த தவறு செய்தவர்களை அரசு தண்டிக்க வில்லை. ஆடிட் சொன்னால் கேட்கலாமோ? 
  2. இன்றைய தகவல்: உச்ச நீதிமன்றம்,பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய அரசும்,உத்தராகாண்ட் அரசும் சோறு, தண்ணி, மருந்து, எரிபொருள், மற்ற உதவிகள் எல்லாம், பாகுபாடு இன்றி, கொடுத்துதவவேண்டும் என்று, இன்று,ஆணையிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவதியில்.


ஆக மொத்தம்: அடிபடுவது மக்கள். ஏன் கொதித்தெழக்கூடாது?

இன்னம்பூரான்
20 06 2013


2013/6/20 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

Prakash Sugumaran Thu, Jun 20, 2013 at 2:32 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil

வணக்கம். இப்போதைய சூழலிலும், எதிர்வரும் காலங்களிலும் மக்கள் போராட்டம் என்பதெல்லாம் கனவுதான். அதிகபட்சம் ஒரு இயக்கம் தொடங்கி கொஞ்ச காலம் முட்டி மோதி பார்க்கலாம். அரசு அலுவலகங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தொண்டை நோக கத்தி விட்டு, உண்ணாவிரதம், உண்ணும் விரதம், வேலை நிறுத்தம், கடை அடைப்பு.. இப்படி பலவிதங்களில் எதிர்ப்பை காட்டிவிட்டு அடங்கி விட வேண்டியதுதான். இதையெல்லாம் ஒடுக்கவென்றே பல அரசுத் துறைகள் உள்ளன. நீதிமன்றக் கதவை தட்டுவது ஓரளவு பயன் தரலாம்.. ஆனால் நீதி அரசாங்கம் போடும் சட்ட விதிகளை பொறுத்தது.
ஒரு கொள்கை சார்ந்தோ, ஒருமித்த சிந்தனை சார்ந்தோ, குறிப்பிட்ட இலக்கை நோக்கிய பார்வையிலோ மக்கள் ஒன்று கூடி விடக் கூடாது என்பதில் பாரபட்சம் இல்லாமல் எல்லா அரசாங்கங்களும் தெளிவாக உள்ளன. மக்களின் முன்னேற்றத்துக்கு என ஏற்படுத்தப்பட்டுள்ள துறைகள் செயல்படாத நிலை குறித்து எப்போதும் கவலையே கொள்ளாத அரச கட்டமைப்பு இப்படியான மக்கள் திரளை கலைக்க உருவாக்கி வைத்துள்ள பல நுண் பிரிவுகள்  மீது மிக கவனம் கொடுத்து இதே மக்களின் வரிப்பணத்தில் பெரும்பான்மையை செலவிட்டு இயக்குகின்றன.
இவற்றை எல்லாம் மீறி ஆச்சரியப்படும் வகையில் இன்னும் தொடரும் ஒரே அறப்போராட்டம் கூடங்குளம் போராட்டம் மட்டுமே. இதுவே இறுதியான பெரிய மக்கள் போராட்டமாக இருக்கும் என சொல்ல முடியும். ஏனெனில் யாருக்கு லாபமோ இல்லையோ இந்தப் போராட்டத்திலும் பாடம் கற்றுக் கொண்டு விட்டது அரசு இயந்திரங்களின் நுண் அறிவு பிரிவுகளே.
[Quoted text hidden]
--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
[Quoted text hidden]

Geetha Sambasivam Thu, Jun 20, 2013 at 2:33 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஓஹோ, நான் நினைச்சது இப்போதைய வெள்ளப் பெருக்கைப் பத்திச் சொல்றீங்கனு.  பஹுகுணாவைப் பற்றிச் சொல்றீங்கனு புரிஞ்சுக்கலை.  தப்பு என்னோடது தான்.

CAG warned of hazards 3 years ago. 

The CAG, in an environmental assessment of the Bagirathi and Alaknanda, three years ago, had warned of hazards. It said hydel projects on the rivers were damaging hills and increasing possibility of flash floods.The devastation in the 

2013/6/20 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
[Quoted text hidden]
[Quoted text hidden]

Geetha Sambasivam Thu, Jun 20, 2013 at 2:34 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நீங்களே போட்டுட்டீங்க.  இதான் நான் சொல்ல வந்ததும்
[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Thu, Jun 20, 2013 at 2:42 PM
To: mintamil@googlegroups.com
 நன்றி, கீதா. ஒரே க்ஷணத்தில் நாமிருவரும் ஒரே செய்தியை விமரிசித்ததும் ஒரு மகிழ்வே.
நன்றி, பிரகாஷ். நீங்கள் கூறுவதின் யதார்த்தம் புரிகிறது. ஆனால், அலை வரிசைகள் வேறு. நான்
வரலாற்று நோக்கில் நீண்டகால பார்வையாக எழுதுகிறேன். அவ்வளவு தான். காந்திஜி, மார்ட்டின் லூதர் கிங்க், மாண்டேலா ஆகியோர் புரட்சிகளை நிகழ்த்திக் காண்பித்தவர்கள்.
[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Fri, Jun 21, 2013 at 12:02 PM

To: mintamil@googlegroups.com
Cc: "Innamburan S.Soundararajan"

அரசு 2: மக்கள் எழுச்சி:அப்டேட்:2
உத்தராகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த காட்டாற்று வெள்ளம் சுனாமி போன்ற பேராபத்து தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும், பூர்வோத்தரம் அறிந்து கொள்வது நல்லது. டாக்டர் கே.எல்.ராவ் என்ற பிரபல விஞ்ஞானி மத்திய அமைச்சரவையில் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். அவர் வகுத்த ‘மலர்மாலை’ நதிகள் இணைப்பு பெரிதும் பேசப்பட்டது; பின்னர் கடப்ஸில் போடப்பட்டது. இந்தியாவின் நதிகளின் நீரோட்டம், பிரவாகம், மேடுபள்ளம், வெள்ளங்களின் வரலாறு அவற்றையும், இந்த மலர்மாலை திட்டத்தையும் தழுவி மத்திய அரசு 1975ல் தயாரித்தத் திட்டத்தின் படி அமையும் சட்டத்தின் விதிப்படி, வெள்ள அபாயம் உள்ள இடங்களிலிருந்து குடியிருப்புகளை அகற்றலாம். ஆனால் குறுக்கே நின்றன, உத்தர்பிரதேச, பீகார், மேற்கு வங்காள மாநில அரசுகள். அந்த வகையில் பார்த்தால், இந்த பேராபத்தில் சிக்கிய பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டிருக்கும். ஆள்சேதம் குறைந்திருக்கும். கிட்டத்தட்ட 40 வருடங்களாக இந்த மசோதாவுக்கு பதில் அளிக்க ‘கின்னஸ் சாதனை’ மாநிலங்கள் தான் நமக்கு மேலாண்மை! மணிப்பூரும். ராஜஸ்தானும் மட்டுமே ‘ததாஸ்து’ கூறி, பின்னர் வாளாவிருந்து விட்டன. மசோதா மறுபரிசீலனையில். இந்த அழகில் மக்கள் மீது எப்படி பழி சாற்றலாம்?

அது போகட்டும். ஏப்ரல் 23, 2013 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆடிட் ரிப்போர்ட் வெளிப்படுத்திய உண்மை:
  1. உத்தராகாண்ட் மாநிலத்தின் ‘பேராபத்து நிவாரண மையம் 2007 ல் நியமிக்கப்பட்டது;
  2. அது இன்று வரை (ஏப்ரல் 2013) ஒரு தடவை கூட கூடவில்லை.
  3. அத்தகைய மையங்கள் தன்னுடைய கொள்கை, நடைமுறை, விதிகள் ஆகியவற்றை வரைந்தால் தானே இட்ட கடமையை செய்ய முடியும். அதைக்கூட செய்யவில்லை;
  4. பேராபத்து வந்தால் முதல் நிலை நடவடிக்கை பற்றிய திட்டம் ஒன்று கூட வரையவில்லை.
  5. பாதிக்கு மேல் பணியிடங்கள் காலி. 

இந்த களேபரத்திக்கு நடுவில் சாக்கோ என்ற ̀காங்கிரஸ் கட்சித்தலைவர் சாக்குப்போக்குகள் பல சொல்லி வினா தொடுத்தார். அவற்று பதில் அவரல்லவா சொல்லவேண்டும். அதான், நான் கொயட்டு.
இன்னம்பூரான்
21 06 2013
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Jun 21, 2013 at 12:17 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஜோஷி மட்டுக்கு வந்திருக்கும் மந்திரியை மக்கள் முற்றுகையிடுகின்றனர். அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

2013/6/21 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

அரசு 2: மக்கள் எழுச்சி:அப்டேட்:2

இந்த களேபரத்திக்கு நடுவில் சாக்கோ என்ற ̀காங்கிரஸ் கட்சித்தலைவர் சாக்குப்போக்குகள் பல சொல்லி வினா தொடுத்தார். அவற்று பதில் அவரல்லவா சொல்லவேண்டும். அதான், நான் கொயட்டு.
இன்னம்பூரான்
21 06 2013




-- 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

 
[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Fri, Jun 21, 2013 at 12:24 PM
To: mintamil@googlegroups.com

Innamburan S.Soundararajan Fri, Jun 21, 2013 at 7:09 PM
To: mintamil@googlegroups.com, Manram

'அரசு -2: மக்கள் எழுச்சி' என்ற முதல் இழை பிரேசில் நாட்டின் மக்கள் எழுச்சியை பற்றியது. சமகாலத்து இந்திய நிகழ்வு ஒப்புமைக்குக் கூறப்பட்டது. அதை பற்றி மட்டுமே இழைகள் தொடர்ந்தது வியப்பளிக்க வில்லை. மறுபடியும் பிரேசில் நாட்டுக்கு திரும்புகிறோம். பத்து நூறாகி, அதுவும் ஆயிரமாகி, பல்லாயிரமாக வளர்ந்து, இப்போது மிலியன் கணக்காக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தொலைக்காட்சியில் கண்டதை பகிர்ந்து கொள்கிறேன்.


2013/6/21 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
[Quoted text hidden]