Friday, December 20, 2013

பெருவெள்ளம்: சிறுதுளி

பெருவெள்ளம்: சிறுதுளி

இன்று ஒரு சிறு துளி. ஒரு பெருவெள்ளத்தைப் பற்றி. மணிக்கொடி காலத்து தமிழிலக்கிய மாமனிதனாகிய ஸ்வாமிநாத ஆத்திரேயன் அவர்கள் 19 12 2013 அன்று தனது 94 வது வயதில் விண்ணுலகம் எய்தினார். தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு ஆகியோரின் நண்பராகிய ஸ்வாமிநாத ஆத்திரேயன் அவர்கள் எழுதிய 28 சிறுகதைகளில் 16 காணக்கிடைக்கவில்லை. செவிக்கு விருந்தாகவும், மனதுக்கு ஆதரவாகவும், ஆவிக்கு நிம்மதியாகவும் விளங்கும் துளசி ராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்தார். தியாகையாவின் கீர்த்தனைகளை சுவைபட அருந்திய ஸ்வாமிநாத ஆத்திரேயனின் சமர்த்த ராமதாஸ் சரித்திரமும் ஹனுமார் கோயில் வரலாறும் அருமையான படைப்புகள். சிறு துளி: உமையாள்புரம் ஸ்வாமிநாத பாகவதரின் உபன்யாசங்களில் மாணவன் ஸ்வாமிநாத ஆத்திரேயன் தியாகையாவை பற்றி கேட்ட செய்திகள். பெருவெள்ளம்: ஸ்வாமிநாத ஆத்திரேயன் அவர்களின் இசை/மொழி/இலக்கிய யாத்ரீகம்.
~ இன்றைய ஹிந்து இதழில் ஒரு துளி.
*
தஞ்சை ஸ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேயர் ஸம்ஸ்கிருதத்திலும். தமிழிலும் ஆழ்ந்த புலமை உள்ளவர், தியாகராஜரின் இசையில் ஆழ்ந்தவர், தஞ்சை போகும் பொழுதெல்லாம் நான் எனது குருவுடன் சென்று அவரை சந்தித்துப் பயனடைந்திருக்கிறேன், இலக்கிய விஷயங்கள் மட்டுமல்லாமல் இசையின் நுட்பங்களையும் விளக்குவார், “ஸ்ரீரகுவர தாசரதே” என்ற ஆனந்த பைரவி கீர்த்தனையை என் குருவுடன் நானும் பாடம் செய்தேன்.
[1967-இல் தஞ்சை கிருஷ்ணன் கோவில் கச்சேரியில் தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களுக்குச் செய்யப்படும் மரியாதை. புகைப்படத்தில் பாலக்காடு மணி ஐயர், வயலின் சிக்கல் பாஸ்கரன், எம்பார் விஜயராகவாச்சாரியார், ஸ்வாமிநாத ஆத்ரேயன் (பின்னணியில்) ]
ஸ்ரீ ஆத்ரேயர் அவரது தஞ்சை வீட்டில் (பாலோபா சந்து) ஸ்ரீராமர், ஸீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் விக்ரகங்களை வைத்து தினமும் பூஜை செய்பவர். ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியன்று சிறப்பாகத் திருமஞ்சனம். அலங்காரம் பூஜை எல்லாம் ஆத்மார்த்தமாகச் செய்வார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிடிக்கும். ஊரிலிருந்தால் ஆண்டு தோறும் எனது குரு அந்த பூஜையின் போது ஸன்னிதியில் தியாகராஜ கிருதிகளைப் பாடுவார். பல ஆண்டுகள் எனக்கும் அவருடன் பாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
என் குருவின் சங்கீதத்தைப் பற்றி ஸ்ரீஸ்வாமிநாத ஆத்ரேயர் கூறிய பாராட்டு என் நினைவில் இன்றும் பசுமையாகவே உள்ளது:
“கோயிலில் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, ஆடை அணி ஆபரணங்களுடன் படிப்படியாக எப்படி அலங்காரம் செய்வாரோ அப்படித்தான் அவரது பாட்டும். பால் தேன் தயிர் பன்னீர் என்று பல பொருள்களால் திருமஞ்சனம் செய்து, பலவித ஆபரணங்களாலும் புஷ்ப மாலைகளாலும் அழகுபடுத்தி, பெருமாளை எப்படி தரிசனம் செய்து வைப்பாரோ அப்படியே படிப்படியாக ராக விஸ்தாரம் செய்து, விதவிதமாக நிரவல் செய்து அலங்கரித்து ஸ்வரக் கோர்வை என்ற மலர்களால் அர்ச்சிப்பார்.”
தன்னுடைய மாமனாரின் ஊரான வரகூர் பெருமாளுக்கு என் குரு அலங்காரம் செய்வதை ஊரே பாராட்டும். அந்தவிதத்தில் ஸ்வாமிநாத ஆத்ரேயர் சொல்லியிருக்கும் பாராட்டு வெகு பொருத்தமானதாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
பெரிய துளி:
தம்புராவின் மெளனம்
மஞ்சரி | இதழ் 46 | 25-03-2011| sourced from Solvanam.
Image Credit:http://i1.ytimg.com/vi/nP8ktqFZCYY/hqdefault.jpg
http://www.youtube.com/watch?v=nP8ktqFZCYY




Tuesday, December 17, 2013

கஷ்டோபனிஷத். [பகுதி 2 & 3]

௵2011: வரும்.
17 12 2013


அன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி.பி. 2056


Innamburan Innamburan 27 December 2011 14:08

அன்றொரு நாள்: டிசம்பர் 27:
ஒரு நூற்றாண்டு விழா: கி.பி. 2056
தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் இங்கு வந்திருக்கப்போவதில்லை. எனவே, அறிஞர் அண்ணாவை போல் நான் கடுஞ்சொற்கள் வீசாவிடினும், என்னுடைய கருத்துக்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அவர்களிடம் நான் வேண்டுவதெல்லாம், ஆக்கப்பூர்வமான கருத்துக்களும், ஆதாரத்துடன் என் கருத்துக்களுக்கு விமர்சனமும்:கண்டனமும் நல்வரவு, ஆதரவும் நல்வரவு. தாய்மொழியின் ஆளுமை நமது உயிர்நாடி. தயை செய்து, இந்த நீண்ட இழையை கவனமாக படியுங்கள். ஒரு விஷயம். ஆட்சிமொழியை வழி நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு; நற்பெயரும் கிட்டியது. மேலும், 1966ல் நான் குஜராத்தில் பணி செய்ய சென்றபோது, அங்கு இயல்பாகவே குஜராத்தி ஆட்சிமொழியாக பீடுநடை போட்டது. உயர் அதிகாரிகளில் பலர், தமிழர். சரளமாக, குஜராத்தி பேசினர்,எழுதினர். முதலில் தவித்தேன். ஆனால், பொது மக்கள் என்னை விட முக்கியம் என்பதும்,  தாய்மொழி ஆட்சி புரிவது முக்கியம் என்பதும் கண்கூடாகத் தெரிந்தது. காந்திஜி முதலில் குஜராத்தியில் தான் எழுதினார். ஓரளவுக்கு, அம்மொழியை கற்று மறந்தேன். இனி கஷ்டோபனிஷத்.
தமிழன் வரலாற்றுப்பிரியன். செவி வாய் வரலாறு என்றால் கரும்புச்சாறு. சுவை மிகுந்தால், அது வெல்லப்பாகு. ஆதாரஸ்ருதியில்லை இல்லாதது ஒரு பொருட்டு அல்ல. ‘கல் தோன்றி, மண் தோன்றா’ மரபு. ஆகவே, பயபக்தியுடன்,சொரணைமிக, நூற்றாண்டு விழாக்கள் எடுத்து,விறலியோரும்,பாணர்களும் மெய்கீர்த்தி பாடும்போது, திண்டுகளில் சாய்ந்து, அதை கேட்டு, களிப்புத்தேறலில் மயங்கி துயில் கொள்வோரின் தயவில், ‘தமிழன்னை அரியாசனம் அமர்ந்த திருவிழா’வின் நூற்றாண்டுவிழா தினத்தை 27 12 2056 அன்று கொண்டாடுவோமாக! Do you understand, Mr.Tamil Evangelist? பாதிக்கிணறுக்கு மேல் தாண்டிவிட்டோம். வடமொழியில் ‘திரிசங்கு சுவர்க்கம்’ என்பார்கள். ஒரு கால அட்டவணையிட்டு, அதை புகழ்வோம், கண்டு  மகிழ்வோம், இகழ்வோம், தலை குனிவோம்.
காலத்தின் கோலமடா, தம்பி!
௵2056: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா(த.நா.சட்டம்‍ 39/1956) சென்னை மாநில சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் நிறைவேறிய தினத்தின் நூற்றாண்டு விழா. 
கற்பனை 1: விழா மொழி தனித்தமிழ்: 
கற்பனை 2: விழா மொழி செந்தமிழ்: 
கற்பனை 3: விழா மொழி இயல்பாக வடமொழி/ஆங்கிலம்/ ஹிந்தி கொஞ்சமாகக் கலந்த எளிய தமிழ்: 
கற்பனை 4: விழா மொழி தங்க்லீஷ்:
கற்பனை 5: விழா மொழி: ஹிந்தி:
கற்பனை 7: விழா மொழி ஆங்கிலம்.

பொது கற்பனை: தாரை/கொம்பு/பறை காணாமல் போனதால் கேரள செண்டு மேளம் + நாதமுனி பேண்டு வாத்தியம் + ஷெனாய். விழா நடனம்: டப்பாங்குத்து; விழா இசை: லதா மங்கேஷ்கரின் வாரிசு: விழா வீரவிளையாட்டு: இழுபறியாட்டம்: விழா பந்தல் காண்ட்றாக்ட்: முதல்வரின் மாப்பிள்ளையின் சகலையின் வளர்ப்பு மகள். விழா நிதி: ஆட்சி மொழி அமைச்சரின் மெய்க்காப்பாளரின் ஆசைநாயகியின் கையில் ஆடிய வரிப்பணம்.

ஏகோபித்தத் தீர்மானங்கள்: ஓரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் தமிழன்னை சிலைக்கு வைரமூக்குத்தி; அடுத்த நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அமைச்சரகம்; தழிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் தடையேதுமில்லை என்றதோர் அன்புக்கட்டளை; ஐ.நா.வில் தமிழில் தான் பேசுவோம் என்ற வீராப்பு.
*
௵2011: "ஆட்சி மொழி" என்றால் அரசாணைகள் மொழி...1947 ஆகஸ்ட் 15 வரை ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தில்தான் ஆட்சி புரிந்தனர். அதன் பின் கூட பல வருடம் ஆங்கிலம் தான் ஆட்சி மொழி, இப்பொழுதும் கூட பல அரசு ஆவணங்கள் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன. தமிழ்நாடு அரசு சைட்டுக்கு சென்று பாருங்கள் தெரியும்...” (உசாத்துணை: மின் தமிழர் விஜயராகவன்: 09 08 2011)

௵2010:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது...சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விரைவில் தலைமை நீதிபதி நியமிக்கப்பட உள்ளார். அதன் பிறகு தமிழை வழக்கு மொழி ஆக்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும். என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். (உசாத்துணை: மின்தமிழர் தாரகை: 31 05 2010: தினமணியிலிருந்து)
௵2010: மே 8: தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும்!..இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழில் எழுதவேண்டும் என்று கெடு...தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும்! (உசாத்துணை: நக்கீரன் இதழ்)
௵2010: தமிழ்நாட்டு அரசின் இணையதளங்களில் பெரும்பாலும் ஆங்கிலப்பக்கங்கள்;தமிழ் பக்கங்கள் சரிவர இல்லை. சான்றாக, கிராமங்களின் எல்லை வகையறா ஆங்கிலத்தில் மட்டும். வாங்கும் ஊதியத்திற்கு உழைக்காமல், மற்றவர்கள் மீது தெளிவற்ற உரிமைவேட்டல் தேவையா? இதெல்லாம் ஒரு பலிகடா பாவ்லா! (உசாத்துணை: மின் தமிழர் விஜயராகவன்: 31 03 2010)