Tuesday, June 28, 2016

இன்னம்பூரான் பக்கம் 1 [4] சமுதாயமும், நீயும், நானும், அவரும். [4.1]

இன்னம்பூரான் பக்கம் 1 [4] 
சமுதாயமும், நீயும், நானும், அவரும். [4.1]



பிரசுரம்: http://www.vallamai.com/?p=69992

Wednesday, June 29, 2016, 5:20

இன்னம்பூரான்
ஜூன் 28. 2016
‘…முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க..’

என்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் வாழ்த்திய பாரத சமுதாயத்தின் தற்கால பொது உடைமை, சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை நாமே சற்று பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும்.

நமது பொதுவுடமை நாட்டுப்பற்றும், சமத்துவமும், தருமமிகு வாழ்க்கையும் எனலாம். நாடு விடுதலை அடைவதற்கு முன் இருந்த நாட்டுப்பற்று இன்று காணக்கிடைக்கவில்லை. 1947லிருந்து எழுபது ஆண்டுகளுக்குள், பிரிவினை வாதங்கள் ஓங்கி வளர்ந்து விட்டன. பாரதசமுதாயமே சற்று நீர்த்துப்போனமாதிரி தான் காட்சி. பாரதியார் கனவில் உதித்த பாரத சமுதாயம் மனத்தளவிலாவது திரும்பி வரவேண்டும். இன்று இதை முன்வைப்பதற்கு ஒரு காரணமுண்டு –

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்தது. பிரிந்ததா என்பதே ஒரு கேள்விக்குறியாக திரிகிறது. ஒரு கோணத்தில் பார்த்தால், அந்த நாட்டு மக்கள் அவ்வாறு விலகுவதின் தாக்கம் பற்றி , முடிவு எடுத்த பின் தான் அறிந்து கொள்ள விழைந்தார்களாம்! நமது அருமை நண்பர் திரு.நரசய்யா அவர்களின் பேத்தி செல்வி தீக்ஷா ரமேஷ் ஒரு பிரபல இதழில், புதுமையான ஆய்வு ஒன்று செய்த பின், நேற்று இவ்வாறு அறிவித்திருந்தார்.

பொது ஜன அபிப்ராயம் என்பது எளிதில் காட்சி தருவதில்லை. நிமிடந்தோறும் நிறம் மாறும். விடுதலை பெற்ற போது பாரத தேசம் இருந்தது; இந்தியா கேள்விக்குறி தான். அதாவது நாம் தேசீய வேட்கையில் ஒன்று பட்டிருந்தாலும், குறுநிலமன்னராட்சிகளும், கலோனிய அரசின் தாக்கங்களும், பாகிஸ்தான் பிரிவினை காயங்களும், பல உட்பிரிவுகளை முன் நிறுத்தின. பின்னர், மொழிவாரி மாநிலங்கள், கோரிக்கைகள், பல கலாச்சார வித்தியாசங்கள் எல்லாம் நமது தேசீய வேட்கையின் வீரியத்தை குறைத்துவிட்டன என்று சொன்னால், மிகையாகாது. மேலும், ருசி பார்த்த பூனை போல, பற்பல உட்பிரிவு சமுதாயத்தினர், சுயநலத்திற்காக, பாரத சமுதாயத்தின் மேன்மைக்கு உழைக்கவில்லை.

எனினும், வலுவான இந்திய அரசியல் சாஸனமும், மத்திய அரசு/ மாநில அரசுகள் என்ற பாகுபாடும், விடுதலை வேள்வி அளித்த வரப்பிரசாதங்களும், நீதி, தணிக்கை, கண்காணிப்பு, தேர்தல் நிர்வாஹம் போன்ற துறைகள் மத்திய அரசிடமோ, மாநில அரசுகளிடமோ, கை கட்டி சேவகம் புரியாததால், ‘பாரத சமுதாயத்தின்’ பொதுவுடைமையை கட்டிக்காப்பாற்ற இயலும். இந்த அளவுக்கு மட்டுமே, மக்களிடம் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால், சமத்துவத்தையும், தருமமிகு வாழ்க்கையையும் நாம் படைத்துக்கொள்ளலாம்.
அவற்றின் நுட்பங்களையும், சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை அலசுவது பற்றியும் வாசகர்கள் கருத்து அறிந்த பின் எழுதுவது சாலத்தகும்.

நன்றி.

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Caught on Camera

http://www.ndtv.com/mumbai-news/caught-on-camera-drunk-woman-assaults-cops-ransacks-police-station-1424239

Credit NDTV 

Sunday, June 26, 2016

பெண்ணியம்: புதிய பார்வை [3/2]இன்னம்பூரான் பக்கம் [7]

இன்னம்பூரான் பக்கம் [7]
 பெண்ணியம்: புதிய பார்வை [3/2]

p
Sunday, June 26, 2016, 14:51
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=69914
இன்னம்பூரான்
ஜூன் 26, 2016
கட்டுரையை தொடர்வதற்கு முன் ஷாக்: இன்று சென்னையில் ஐந்து பெண்மணிகள் (நான்கு பெண்கள் 30 வயதுக்குள்) கொடூரமாகத் தாக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் 24 வயது யுவதி. கணினி பணியாளர். நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் கொலை. ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஒரு அன்னையும் அவரது மூன்று மகளிரும் கொல்லப்பட்டு, வீட்டிலேயே சடலங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. இதையெல்லாம் கேட்டு, பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், ‘பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பு இல்லை; வெளியிலும் இல்லை. அவர்கள் தற்காப்பு சண்டைகள் கற்றுக்கொள்ள வேண்டும். ‘ என்கிறார்.

“,,,இன்று கட்டுரையின் முன்னறிவிப்பு மட்டும் தான். வாசகர்கள் இருந்தால், முழுதும் வெளியாகும். அத்தருணம் படித்த கட்டுரையின் இணைப்பும் கொடுக்கப்படும். அது வரை, சாரு பஹ்ரீக்கும், லான்ஸெட்டுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.”
(தயக்கத்துடன் தொடருக்குத் திரும்புகிறோம்.).

சாரு பஹ்ரீ இந்த கொடுமையின் நிவாரணம் பொருட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விவரிக்கும்போது, கூறுவது:
உலக சுகாதார மையம் [WHO] உலகின் மூன்றில் ஒரு பங்கு பெண்பாலார் தனது வாழ்க்கையில் வன்முறையால் துன்பம் அடைகின்றனர் என கூறுகிறது. இந்தியாவில் வீட்டிற்குள் வன்முறை அவதிப்படும் பெண்களே மூன்றில் ஒரு பங்கு என்பதால் உலக பிரச்னை, இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு மாபெரும் பிரச்னையாகி விட்டது. முதற்கண்ணாக, விழிப்புணர்ச்சி தலையெடுக்கவேண்டும். இந்திய மத்திய அரசின் சுகாதார இலாக்கா 850,000 நபர்களை முன்னிலை சமுதாய ஆலோசகர்களாக (Accredited Social Health Activists (ASHAs)—front-line community health workers—to create awareness of what constitutes violence against women, the consequences, and its identification and prevention.) நியமனம் செய்து, பயிற்சி அளித்து, வன்முறைக்கு உட்படுத்த பெண்களுக்கு தக்கதொரு ஆலோசனை, அடைக்கலம், சட்ட உதவி, வருமானம் தரும் சிறு தொழில்கள் கற்றுக்கொடுப்பது, குழந்தை பராமரிப்பு ஆகிய உதவிகள் செய்வார்கள்.’ என்ற திட்டம் பற்றி விவரம் கொடுத்திருக்கிறார், இத்தகைய சங்கிலித்தொடர் உதவிகள் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்கிறார். பொது மக்கள் இவற்றீன் மீது கவனம் வைத்து இவர்களின் பணியை தணிக்கை செய்யவேண்டும்.

என்ன உதவி செய்தாலும் அவை உடனுக்குடன் நம்பகத்தனமான முறையில் கிட்ட வேண்டும் என்பதற்காக, புது டில்லியில், எல்லா விதமான உதவிகளும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.

மாநிலங்களில் இத்தகைய சேவை மன்றங்கள் எதிர்ப்பார்த்த அளவு உருவாகவில்லை. காரணம், வேறு அமைச்சரகம் என்ற ஐயம் ஏற்படுகிறது. எனினும் 33 மையங்கள் இருப்பது ஒரு அளவு வரவேற்கத்தக்கதே. மூன்றே வருடங்களில் ஒவ்வொறு மாவட்டத்திலும் இவை சேவை செய்யும் என்று மத்திய அரசு உறுதி கூறுகிறது. மற்றும் பல உத்திகளை கையாளப்போவதாக மத்திய அரசும் தன்னார்வக்குழுக்களும் திட்டம் போடுகின்றனர்.
பார்க்கலாம்.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: https://i.ytimg.com/vi/aHjoqG8R6Dg/hqdefault.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com