Saturday, May 11, 2013

’பரமபத சோபானம்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -36




’பரமபத சோபானம்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -36

Innamburan S.Soundararajan Sat, May 11, 2013 at 9:55 PM

19 02 2010

 ’பரமபத சோபானம்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -36

Inline image 1
இந்த டீ.எல்.டபிள்யூவை எல்.பீ.டபிள்யூ ஆக்கறது தானே, என் கடன், அமல்!
அதற்கு, 'லாக்புக் லகான்' அற்புதமா வேலை செஞ்சது. ரயில்வேக்காரனுக்கு இனப்பற்று ஜாஸ்தி. மெகானிகல் எஞ்சினியர் பப்ளிக் ரிலேஷன் ஆஃபீசரோடு பேசறது சொல்பம். ஆடிட்காரன் பஹுதூரம் இல்லையோ? அதோடே, நல்லவேளை, பாலின வேற்றுமை இடம் பெறவில்லை. (எனவே, பிரச்னைகள் வேறு!) இப்போ, 'அப்பாடான்னு பெருமூச்சு விட்டங்களா!; க்ளப்லே முகம் கொடுத்துப் பேச ஆரம்பிசச்சாங்க. 'நல்வரவே ஆகுக' என்று இருந்து விட்டேன். இப்படியாக காலதேசவர்த்தமானம் இருக்கச்சே, காண்ட்ராக்ட்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.


இப்போ, பட்டி தொட்டிலே, பேட்டைக்கு பேட்டை, பஞ்சாயத்துக்கு பஞ்சாயத்து, டவுனுக்கு டவுன், மாவட்டத்துக்கு மாவட்டம், மாநிலத்துக்கு மாநிலம் துஷ்பிரயோகம் பண்றாளே, அந்த டெண்டர் முறையின் எளிய பதிப்பு தான், அப்போ ஐம்பது வருடங்களுக்கு முன் தெரிந்த ஏற்பாடு. ஆனா, மாண்ட்வாடிலே கட்றது பெரிய டீஸல் எஞ்சின் தொழிற்சாலை; அமெரிக்கா கம்பெனி ஆல்கோ ஒப்பந்தக்காரார்,கூட்டாளிஏற்கனவே, ரயில்வே போர்ட் மன்னாதிமன்னர்களால் முடிக்கப்பட்டவை. 'பொன்னியின் செல்வத்தை' விட தடிமன் ஆன காண்ட்ரேக்ட்கள்;பக்கம் பக்கமாக நுண்ணிய எழுத்துக்களில், ஆங்கிலமில்லாத, ஆனால் ஆங்கில'சொற்கள்; புரியமாதிரி இருக்கும்; புரியாது. எல்லாபக்கங்களிலும், இரு தரப்பினரும் 'டொட்டாய்ங்க்' ந்னு நெடிய கையெழுத்து. நமக்கு தான் வேலை குறைச்சலா! அதையெல்லாம் படித்து, பித்து பிடித்து, பாயைப் பிராண்டி, வினா தொடுத்தபிறகு தான் தெரிந்தது, அவர்களுக்கும் புரியவில்லை என்று!

  • எனக்கு ஜவாப் சொல்றதுக்கு ஒரு அமெரிக்கரை அனுப்பினார்கள். கொஞ்சம் அசமஞ்சம். பக்கோடா சாப்டிண்டு பேசறமாதிரி அவர் பேசினாலும், அவரிடமிருந்து உண்மையை கறக்கமுடிந்தது. பரமபதசோபானப்படத்திலே ஏணி காண்பித்த அளவு தான் ஏறும். சர்ப்பத்தின் வாலும் கண்ணுக்கு தெரியும். இவர்களது ('இவா' ந்னு எழுதவில்லை, அமல்.) காண்ட்ராக்ட்டில், இரண்டு ஏறுமுகம் - கூலி உயர்வது, விலைவாசி உயர்வது. சிக்கல் சிக்கலான சூத்திரங்கள், நடைமுறையுடன் ஒவ்வாதவை, இறங்குமுகத்தைப்பற்றி பேச்சே இல்லை. சுருங்கசொல்லின், கேட்டதை கொடுக்கறமாதிரி. நமக்கு இதெல்லாம் ஒத்து வருமோ? 'நீங்கள் கொடுக்க நினைப்பதை தடுக்கவில்லை; சட்டரீதியான பிரச்னைகள் எழலாம். பிறகு தணிக்கை செய்கிறேன்' என்றேன். 'த்ராட்லே மாட்டிட்டுட்டையே' என்றார், ரயில்வே நிதித்துறைத்தலைவர். காசிக்கு பக்கமோல்லியோ. அவர்கள் அதிர்ஷ்டம், இந்த அடிப்படையில் பில் போடுவதற்கு முன், எனக்கு மாற்றல் பூதம் வந்து விட்டது. ஆனால், இந்த பக்கோடாப்படிப்பு, பிற்காலம் எனக்கு உதவியது. இது நிற்க

இந்த மாதிரி காலம் தள்ளிக்கொண்டிருக்கையில், எங்கள் ஆடிட்டர் ஜெனெரல், ஏ.கே.ராய் அவர்கள் கல்கத்தா வந்தார். அருமையான மனிதர்.அவர் அந்த பார்ட்டியில், இந்த ஏறுமுகம் காண்டிராக்டுக்கள் பற்றி சரியான விளக்கம் கொடுத்தார், எனக்கு. பிற்காலம், ஒரு பயணத்தில், அவருடன் சவாரி செய்தேன்; மனிதநேயத்தின் இலக்கணத்தை கண்டேன். வேளை வந்தா சொல்றேன்.

சரி. தாம் தூம்னு க்ரேட் ஈஸ்டர்ன் ஹோட்டலில் பார்ட்டி. சந்தாவும் அதிகம் .தண்ணியும் ஆறா ஓடித்து. எனக்கும் வஸந்தாவுக்கும் இதெல்லாம் புதிசு. ஃபோட்டோக்குட எங்கயோ இருக்கு; பார்த்தேன். வெள்ளி முளைக்க, பார்ட்டியும் முடிந்தது. எனது மேலதிகாரி திரு. ஹெச்.கே.மைத்ராவுக்கு, நான் பிள்ளை மாதிரி. அவருக்காகவே தனியாக ஒரு கார் கொண்டு வந்திருந்தேன்.


"Sir, You are not driving; it is an order" என்றேன். அவாத்து மாமிக்கு ரொம்ப சந்தோஷம். இதிலே ஒரு பாயிண்ட் இருக்கு ஸ்வாமி. இது சும்மா காக்காப்பிடிக்கிறது இல்லை. அவர் என் மீது அக்கறை காண்பித்தது ஆயிரம்; நான் செய்த யதார்த்த பணீ ஒரு பின்னம். அந்தக்காலத்தில், மேலதிகாரிகள் சின்னப்பசங்களை வழி நடாத்துவதில் மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள்.

இன்னம்பூரான்

2010/2/18 devoo
கஜ கர்பத்திற்குக் கொசுறு  கத்தரிக்காய் ஜோக் !

ஆண்டு விழாவின்போது திவாஜீ மின்னாக்கம் பற்றிக் கூறும்போது  ஒவ்வொரு
முறையும் பக்கத்தைப் புரட்டி வைத்து எழுந்து நின்றுகொண்டு படம் பிடிப்பதை
விளக்கினார்; முட்டு வலித்தால் தடவிக்கொள்ள balm வைத்துக்கொள்ளுமாறும்
விளையாட்டாக அறிவுறுத்தினார். இன்னம்பூரான் சார் மெதுவாகப்
புகைப்படத்துக்கு  அருகில் வந்து நின்றுகொண்டு ‘இங்கு balm bottle
ஒன்றையும் காணோமே’ என்று கூறியது சிரிப்பலைகளைக் கிளப்பியது

தேவ்


On Feb 18, 6:07 am, Geetha Sambasivam  wrote:
> கத்தரிக்காயை விடலை, காசிக்குப் போயும்![?][?][?][?]
>
> 2010/2/18 Tthamizth Tthenee
>
> > காசிக்குப் போனதே  இல்லையோ..?
>
> > அன்புடன்
> > தமிழ்த்தேனீ
>
> > 18-2-10 அன்று, Geetha Sambasivam  எழுதினார்:
>
> >>  [?][?][?][?][?][?][?]எனக்குக் கத்தரிக்காய் ரொம்பப் பிடிக்கும்!
>
> >> 2010/2/15 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
> >> 15 02 2010
____________
இன்னம்பூரான்
11 05 2013 

அன்றொரு நாள்: மே 12: எங்கிருந்தோ வந்தாள்!




அன்றொரு நாள்: மே 12: எங்கிருந்தோ வந்தாள்!
10 messages

Innamburan Innamburan Sun, May 13, 2012 at 4:57 PM

ன்றொரு நாள்: மே 12:
எங்கிருந்தோ வந்தாள்!
சென்னை மந்தைவெளியில் ஒரு குடில். நூறாண்டுகளுக்கு மேல், ஒரு வரலாற்று நாயகனாக, நிறைவுடன் வாழ்ந்து, ஒரு அமைதியான, உலகளாவிய, இந்திய தொன்மை பண்பின் சிகரமாகத் திகழும் யோகமந்திரத்தை நிறுவிய மஹான் திருமலை கிருஷ்ணமாச்சாரியாரிடம், ஒரு சினிமாக்காரி வருகிறாள்.
அந்த யோகமந்திரம் இன்றளவும், மன/தேஹ/ஆத்ம ஆரோக்கியத்துக்கு அரிய சேவை செய்து வருகிறது. தந்தைக்கு உகந்த மகனார், திரு. தேசிகாச்சாரியார். முதுகு வலியா?, நொந்த மனமா?,உளம் குழம்பிய குளம் ஆயிற்றா? நிவாரணம் உண்டு. அங்கு போனால், பதஞ்சலி மஹரிஷியின் ஆசியில், நல்லதெல்லாம் நடக்கும். எல்லா பணியாளர்களும் வாலெண்டியர்கள். ஸ்தாபகரின் மறுமகன் யோக குரு பீ.கே.எஸ். ஐயங்கார் அவர்கள் புவியனைத்திலும் யோகமந்திரத்தை ஒலிக்கச்செய்தார். இது ஒரு பக்கம்.

இந்த தொந்தம் பந்தம் எல்லாம் ஸ்வர்க்கத்தில் படைத்தது என்று நினைக்கிறேன். இல்லாவிடின், பால் ப்ரண்டன் காஞ்சி முனிவரிடம் வருவானேன்? அவர் பால் ப்ரண்டனை பகவன் ரமண மகரிஷியிடம் அனுப்புவானேன்? நரேந்திரன் மஹரிஷியிடம் போவானேன்? அதன் நற்பயனாக, ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் போவானேன்? பாமரர்களான நமது வரத்துப்போக்குகளில் கூட, இது சில சமயங்களில் காணக்கிடைப்பதாக தெரிய வருகிறது. 1926ல், இன்றைய கதாநாயகி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரையை கேட்க வருகிறாள். 

(11 05 1918  அவருடைய ஜன்மதினம். எழுத விழைந்தேன், அவரை பற்றி. ‘அன்றொரு நாள்: மே 11: பரிவட்டம் துறந்த ஆசார்யன்’ என்ற தலைப்பில் கண்ணனை எழுத பணிக்கலாம் என்று நினைத்தேன். கண்ணனோ லண்டன் டவுனை ரவுண்ட் அடித்த வண்ணம்! நினைத்ததெல்லாம் நடப்பதில்லை.) 

ஜேகே அவர்கள் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை ஒலிக்கிறார். மகுடிக்கு மயங்கிய அரவம் போல, அவளும் செயலிழந்து விடுகிறாள். 


‘ என்றோ விட்டுப்போன அழைப்பு அல்லவோ இது? எனக்கு பழக்கமானது தான். ஆனால் வெகு தூரத்திலிருந்து, இப்போது. எனக்கு இது வாழ்வின் புதிய அத்யாயம்.புதிய பாதை. ஆம். அவருடைய உரையை கேட்க சென்றதே எனக்கு புரியாத செய்கை.

அந்த அனுபவம் உந்த, இந்தியா முழுதும் பயணம். அவளுக்கு பல இடங்கள் முன் பரிச்சியமாகத்தான் (deja vu ) தோன்றுகின்றன. பிரபல நர்த்தகி ஏனாக்ஷி ராமராவிடம் பயிற்சி. குறுகிய காலத்திலேயே, அவரிடமிருந்து பூரணத்துவம் அடைந்ததாக நற்சான்று. இந்த யோக வாழ்க்கை பாதை, அவ்வப்பொழுது தான், போடப்படுகிறதோ? சென்னை வந்தாள், இந்த நாட்டியக்காரி. பிரும்மஞான சபையில் இவளது நடனம். அது ஜவஹர்லால் நேருவின் கவனத்தை கவர்கிறது. பகவதி பிரசாத் மிஸ்ராவும், பிருத்வி ராஜ் கபூர் கதாநாயகனாக நடிக்கும் ஷேர்-ஏ-அராப் என்ற படத்தில் நடிக்க அழைக்கிறார்.  அந்த படம் ஜனவரி 1930ல் வெளிவந்தவுடன், இந்த நாட்டியக்காரி உலகப்புகழ் சினிமாக்காரியானாள். புதிய புனைப்பெயர்: இந்திரா தேவி, மே 12 1899 அன்று லாட்வியாவின் ரீகா என்ற நகரில் பிறந்த யூஜீன் பீட்டர்சனுக்கு. 15 வயதில் ‘யோகம்: 14 பாடங்கள்’ என்ற நூல் அவளுள் உறைய தொடங்கியது. இந்தியா தான் தன்னுடைய தாயகம் என்று உணர்ந்தாள். தன்னுடைய காதலனிடம் மோதிரத்தைத் திருப்பிக்கொடுத்து விட்டு, தன்னுடைய சில்லரை நகைகளை விற்று, அந்த பணத்தில், இந்தியாவுக்கு கிளம்பி விட்டாள்.
ஜான் ஸ்ட்டிரகட்டி என்ற செக்கோஸ்லாவக்கிய தூதரக அலுவலரை மணந்தாள். ஒரே பார்ட்டி மயம். ரபீந்தரநாத் தாகூர், நேரு, ரோரிச் தம்பதி ( அவர்களை தெரியுமோ?) போன்றோருடன் நட்பு.

ஒரு இனம் புரியாத வகையில் யோகத்தின் மூலமாக ஒரு நண்பரின் இதயநோயை குணப்படுத்துகிறார், பாரதமாதாவின் இந்த அபிமான புத்திரி. ஆனால் தனக்கு வந்த இதயநோய்க்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அவரே சொல்லட்டும்.
இந்திரா தேவி:

‘என்னுடனிருந்த ஒரு யோகா மாணவர் யோகிகளை அணுகச்சொன்னார். திருமலை கிருஷ்ணமாச்சிரியார் அவர்கள் மைசூரில் 1937 காலகட்டத்தில் மைசூர் யோகசாலை நடத்திக்கொண்டிருந்தார். அங்கு போய் சேர்ந்தேன். ஒரு கூரிய பார்வை. உதறிப்போனேன். என்னை திரஸ்கரித்து விட்டார். ‘பெண். அதுவும் விதேசி. தகுதியில்லை’ மூஞ்சியில் அடித்தமாதிரி. அவர் ஒரு யோகபுருஷன். தன் இதயத்துடிப்பை நிறுத்துவார். தொலைவில் உள்ள விளக்கை கண் பார்வையால் ஏற்றுவார். ஆனால், என்னை புறக்கணிக்க முடியவில்லை. மைசூர் மஹாராஜா வேறே சிபாரிசு. தயவு தாக்ஷிண்யமில்லாமல், ஆணென என்னை பாவித்து, கடுமையாக வேலை வாங்கினார்.

ஒரு நாள், ‘நீ பல படிகளை தாண்டி விட்டாய்’ என்று சிலாகித்து, என்னை தனியே அழைத்து சென்று மர்மமும் சிக்கலும் நிறைந்த பிராணாயமம் எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.

கணவனுக்கு சைனாவுக்கு மாற்றல். ‘நீ என் வாரிசு. யோக குரு தகுதி பெற்று விட்டாய். சொல்லிக்கொடு, அங்கே’ என்றார். இது 1938. ஒரே வருடத்தில் உச்சாணிக்கிளையில். 1939: சீனாவின் அதிபர் சியாங்க் கே ஷேக் அவர்களின் வீட்டில் பள்ளி. மாஜி சினிமாக்காரி. மாஜி நர்த்தகி. மாஜி பார்ட்டி கேர்லாக இருந்த யூஜீன் பொண்ணு இப்போது மாதாஜி குரு இந்திரா தேவி. உலகம் முழுதும், அதுவும் ஆன்மிக காழ்ழ்ப்புணர்ச்சி ரஷ்யாவிலும், எதையும் பிடித்துக்கொள்ளும் அமெரிக்கா, எங்கும் மாதாஜி + யோக தரிசனம். சிவப்புச்சட்டை கிராம்யுகோவே மாதாஜி கீர்த்தி பாடுகிறேன். ரஷ்ய அதிபர் தன்னை சிஷ்யன் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். மாதாஜி புவனமாதா எனினும், பிறந்த ரஷ்யா, பாரதமாதா, புலன்பெயர்ந்த அர்ஜெண்டினா தான் அவருக்கு இஷ்டதெய்வங்கள். திடீரென்று ஒரு நாள், திடகாத்திரமாக இருந்த அவரது உடல் நிலை கவலைக்கிடமாயிற்று. வயது 102: ஏப்ரல் 25, 2002. ஹிந்து மரபு நல்லடக்கம். 
என்னமோ சாதனை இயலுமா என்று கேட்கிறீர்களே. மாதாஜியின் அவதாரத்தை பற்றி என்ன சொல்ல! எழுத எவ்வளவோ இருக்கிறது. ஆனால் மலேஷியா போகவேண்டும். வரேன்.
இன்னம்பூரான்
12/13 05 2012
Inline image 1

உசாத்துணை:



Anna Kannan Sun, May 13, 2012 at 6:14 PM


உலகமயமாக்கம் என்று வருகிறபோது, அது இப்படி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் செல்லக்கூடும். மாதாஜி குரு இந்திரா தேவி பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

யோகக் கலையை உணர்ந்து பயில்வோம். உலகம் முழுதும் கற்பிக்க முயல்வோம். யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Geetha Sambasivam 
இவரும் அறியாதவரே.  யோக ஆசாரியர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால் இந்திரா தேவி குறித்து அறிந்ததில்லை.  தகவல்களுக்கு நன்றி.  மலேஷியப் பயணம் வெற்றி பெற வாழ்த்துகளுடன்.

Tthamizth Tthenee Mon, May 14, 2012 at 9:07 AM



காரண காரியமில்லாமல் இவ்வுலகில் எதுவும் நடப்பதில்லை.
ஆனால் காரணத்தை  நாம் அறிய இறைவன் இன்னமும் நமக்கு தெளிவை கொடுக்கவில்லை.
அன்புடன்
தமி்ழ்த்தேனீ
[Quoted text hidden]

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
மெய் சிலிர்க்கிறது இ சார்.

அருமையான விஷயத்தை மிக எளிமையாகத் தந்ததற்கு மிக்க நன்றி.

அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------

Nagarajan Vadivel Mon, May 14, 2012 at 10:56 AM


//ரோரிச் தம்பதி ( அவர்களை தெரியுமோ?)//
தெரிந்தென்ன பயன். இங்கே மலர்களைப் பற்ரிய இழையில் பங்களூருவில் உள்ள அவர்களின் எஸ்டேட்டில் உள்ள மலர்கள் என்று உள்ளே நுழைய இழைக்குத் தேவையில்லை என்று விரட்டி விட்டார்கள்
நாகராசன்

Swaminathan Venkat 
ரொம்ப நன்றி.  பல புதிய விஷயங்கள் அவ்வப்போது உங்கள் எழுத்தில் கிடைக்கின்றன.

ஆனால் இது இன்ற்ய்வரை நீங்கள் எழுதிய எல்லாவற்றையும் தூக்கி அடிக்கிறது. இவரைப் பற்றி தெரிவது இப்போது நீங்கள் சொல்லித்தான். 102 வய்து வரி வாழ்ந்து 2002-ல் ஹிந்துவாக மறைந்தவரைப் பற்றி ஒரு வரி கூட எங்கும் படித்ததாக இல்லையே. என் போதாமையா? இல்லை  நம் தகவல் சாதனங்களின் போதாமையா?
[

Nagarajan Vadivel 
மூல ஆவணம் மொழிபெயர்ப்பு கீழே. இன்னும் சில செய்திகளும் புகைப்படங்களும்.  சில தகவல் முரண்பாடுகளைக் காணலாம்

http://wildyogi.info/en/issue/one-who-put-world-head

அவர் பெயர் Zhenechka Peterson
படத்தின் பெயர் மற்றும் தகவல்

A star of “The Arabian Knight”

Indra Devi with friend
Eugenia sells all her not numerous jewelry and furs and again leaves for the Country of Elephants, forever, as she thought that time. The sum she gathered should be sufficient for several months according to her calculations, and after that… Well, you should not think further. “India… Whom do you have there?” – “Nobody”, - an old conversation with her mother in Petersburg is recollected.
Eugenia started to open India for herself, or to be exact, to “recall” it, because often it seemed to her, that all this have already happened to her earlier. So, once, having decided to study classical Indian dance, she went to a known dancer in the country - Inakshirama Rau. Several lessons later the girl was surprised when her teacher said that her training is finished. “You have already know everything”, - the dancer explained.
Once during a meeting of the Theosophical society in Adyar Eugenia was performing Indian temple dance and she was noticed by Jawaharlal Nehru. They got acquainted and an “enamored friendship”, as she called it, between the Russian dancer and Indian pandit was established for long years. In the same place, in Adyar, a known director Bhagvati Mishra offered her a role in a movie “The Arabian Knight”. The main hero was supposed to be played by Prithviraj Kapoor, a well-known founder of the Indian cinematographic dynasty. Eugenia agreed to participate in shootings: she was still short of money. Just in one day, after a premiere of “The Arabian Knight” in January 1930, she became a star of the Indian cinematography. There was no any Peterson-Labunskaya mentioned in captions, of course. Then the world has got acquainted with Indra Devi for the first time. As she recollected, the director Mishra simply gave Eugenia the list and suggested to choose a pseudonym, and she stuck with a finger randomly and became “a heavenly goddess” – that is how “Indra Devi” is translated from Sanskrit.
Events of this period of her life replace each other rapidly. During one of the secular evenings Eugenia got acquainted with the most enviable groom in Bombay, forty-years old chairman of the Club of Bachelors, an employee of Czechoslovak Consulate, Jan Strakati, and soon she became his wife. The next hypostasy of Eugenia is a colonial lady of the world. Receptions, balls, races… The spouses Strakati were invited by Rabindranath Tagore, by a family of Jawaharlal Nehru, the Roerichs, they met with participants of the Indian emancipating movement. “The only thing that I did not want to refuse, - recollected Indra Devi, - was my friendship with Hindus of all castes and ranks though it was breaking strict unwritten rules of the white people living in India. I was meeting with whom I wanted, and was receiving everyone I wanted”. Her spouse, being a person of wide outlook, gave her freedom in this respect.

http://www.youtube.com/watch?v=CNlb6amgbsU&feature=related
Tirumalai Krishnamacharya was 50 when this film was made and is arguably the most influential yogi in establishing what yoga has become today. His students include Pattabhi Jois the founder of Asthanga yoga, BKS Iyengar, Indra Devi, and his son Desikachar. Most of todays leading yogis have studied under one or more of Krishnamacharya students. Krishnamacharya was born in 1888 in a remote Indian village and lived to be over 100 years old until his death in 1989. He is known as not only as a most influential yoga teacher, but a scholar, and a healer. Krishnamacharya was known to be able to voluntarily stop his visible heart beat/ pulse for over two minutes, probably by drastically reducing venous return to the heart.
The Yoga Sutras of Patanajali spoken In Sanskrit by Kausthub Desikachar. This CD can be purchased at the Krishnamachuraya Yoga Mandiram www.kym.org.

'இ’ சார் கடவுள் மோஸசுக்க்குக் காட்சி தந்தமாதிரி
கொஞ்சம் அதுவும் பத்துக் கட்டளைமாதிரி பச்சுன்னு போட்டு விடுவார்.  தேடி எடுப்பது நம் பாடு
நாகராசன்



DEV RAJ Mon, May 14, 2012 at 12:30 PM


இ சார் பதிவும், நாகராஜர்  கொ(எ)டுத்த படமும்
அருமை; அறிந்திராத தகவல்


தேவ்

Innamburan Innamburan 
நாகராஜன் சமத்து.

[Quoted text hidden]
10 messages



'லகான்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -35




**லகான்**’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -35*
Innamburan S.Soundararajan Sat, May 11, 2013 at 2:27 PM

'லகான்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -35
Inline image 1

அன்னிக்குப்பிடிச்ச லகானை, அவன் இன்னும் விடவில்லை. அது மாதுரியானபையன், என்
மகன். நாலு வயது. படுகுஷியாக ஜட்கா குதிரையை. ஹாய்.ஹூய்' என்று விரட்ட, காசி
ஸ்டேஷனிலிருந்து மான்ட்வாடி கிராமத்துக்குப் பறந்தோம். கும்போணத்லே, நான், என்
மனையாளின் கைத்தலம் பற்றி ஐயங்கார் தெருவில் உலா வந்த போது, மாமிகள்
குச்சுலிருந்து எட்டிப்பாத்தமாதிரி, மாண்ட்வாடி ரயில்வே குடியிருப்பு
எங்களை வியப்புடன் நோக்கியது. அவுக ஜீப்லெ தான் போவாக. இல்லையா? இப்படியாக,
நான் எல்.ஸீ.டபிள்யூ/டீ.எல்.டபிள்யூ டபிள் சார்ஜ் ஏற்றுக்கொண்டேன்.

என்ஜின் உதிரிப்பாகங்களை உற்பத்திச் செய்ய ஆரம்பித்த 'வர வர மாமியார்
கழுதை போல் ஆனாளாம் ' என்றபடி L. C .W உருக்குலைய, ரயில்வே போர்ட், அந்த
இடத்தில் டீஸல் என் ஜின் உற்பத்தி தொடங்க நினைத்த வேளை அது. எனவே மூன்று
சார்ஜ். சித்தரஞ்சன் தொழிற்சாலையில் கற்றுக்கொண்ட (தணிக்கைத்துறையில் அல்ல.)
நுணுக்கங்கள் உதவின. என்க்கு பல செளகரியங்கள். புரியாத சித்தரஞ்சன்
நுணுக்கங்களை, லக்னெள ஆய்வு மையத்திலும், அங்கு புரியாதவையை, மான்ட்வாடியிலும்
கேட்டுத்தெரிந்து கொள்ள்லாம். மான்ட்வாடிக்கு சித்தரஞ்சன். புரியறதோ? அவங்களுக்கு உள்ள  உள்குத்து எல்லாம், நமக்கு சாதகம். அரசுக்கும் தான். ரொம்பநாள், மான்ட்வாடிக்காரங்கள் நான் பொறியாளர் படிப்பில் தேறியவன் என்று நினைத்து கொண்டிருந்தார்கள். நானும் மழுப்பிவிடுவேன். இப்படியாக குப்பை கொட்டிக்கொண்டிருக்கும்போது,
அதிகப்பிரசங்கித்தனமாக், ஒரு வேலை செய்தேன் திமிர் தான். ஒத்துக்கொள்கிறேன். ஒரு நாள், ஜி.எம். விருந்துக்கு
அழைத்தார். ஜீப்பிலிருந்து இறங்கினவுடன், வண்டியோட்டி, 'ப்ரைவேட்' என்று
எழுதுங்கள். நீங்கள் தானே தப்பு கண்டுபிடிக்கறவர்கள் என்றார். நாக்குலே சனி.
நான் வழக்கமாக, இந்த விஷயங்களில் கறராக இருப்பேன்; பணம் கட்டிவிடுவேன்
என்பது தெரிந்த விஷயம். வந்ததே, மூக்கு மேல் கோபம். எல்லா வண்டிகளின்
போக்குவரத்துக்கணக்கு பதிவுகளையும் (log books) பறிமுதல் செய்து, ஸீல்
போட்டு, சித்தரஞ்சனுக்கு எடுத்துக்கொண்டு போய், இரண்டு மாதம்
திரும்பவில்லை. எல்லாருக்கும் கணகணப்பு. என்ன பில் வருமோ? என்று. வந்தவுடன்,
ஜி.எம். கூப்பிட்டு அனுப்பினார்.

 *உரையாடல்: ***

 ஜி.எம். உனக்குத்தான் தெரியுமே. நாங்கள் அத்வானத்தில் இருக்கிறோம்.
கத்திரிக்காய் வாங்கக்கூட காசிக்கு போகணும்
(அங்கு விட்ருலாமே என்று சொல்ல நினைத்தேன்!  சொல்லவில்லை.) மெடிக்கல்
பிரச்னைகள் வேறே. இந்த விஷயம் ரயில்வே போர்ட் வரை போனால், பிடுங்கி எடுத்து
விடுவார்கள்.

அடியேன்: நான் அவற்றை கொண்டுவந்திருக்கிறேன். ஸீல் உடையவில்லை
என்பதைப்பார்த்துகொள்ள்வும். ஸீல் உடைத்தால் தானே தணிக்கை செய்ய?
ஜி.எம்: நான் நினைத்தேன், நீ அது மாதுரியான பையன் என்று.
 எல்.ஸீடபிள்யூ ஆட்டம் க்ளோஸ். டி.எல்.டபிள்யூ ஆரம்பம்.

இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி:http://2.bp.blogspot.com/-DMWZfL7rdT4/TeQszffzOYI/AAAAAAAAEEw/zhQk7ZS3O-8/s1600/horse+vandi.jpg
இன்னம்பூரான்
11 05 2013

Friday, May 10, 2013

அன்றொரு நாள்: மே 11: வாரிசு!




அன்றொரு நாள்: மே 11: வாரிசு!
14 messages

Innamburan Innamburan 
மு.கு: ஒரு வருடம் முன்னால் நான் எழுதியது:
'
ஆங்கிலத்தில் 'என்ரிச்' என்ற சொல்லொன்று உண்டு. நீங்கள் எல்லாரும் செய்த என்ரிச்மெண்ட் தான் எனக்கு தூண்டில். நன்றியெல்லாம் சம்பிரதாயம். அதான் இத்துடன் 'நிறுத்', ராஜத்தின் பாஷையில்.~இ.'
இன்று மறுபடியும் படித்தபோது, மற்றவர்கள் பகிர்ந்து கொள்வதின் பயன் மேலும் கண்கூடாகத் தெரிந்தது. இங்கும் அது வரட்டும்.
இன்னம்பூரான்
11 05 2013
Fri, May 11, 2012 at 7:05 PM


ன்றொரு நாள்: மே 11:
வாரிசு!
இன்று அவரது நூற்றாண்டு விழா. இந்தியாவின்/பாகிஸ்தானின் நாளிதழ்கள், வார இதழ்கள் எல்லாம் அவரது கீர்த்தியை பாடுகின்றனர். கெளரவர்களும், பாண்டவர்களும் கொண்டாடுகின்றனர். ஶ்ரீகிருஷ்ணன் யார் பக்கம்? அந்த மாதிரி தான். சில மனிதர்களை தேசாபிமானத்திற்குள் அடக்கி ஆளமுடியாது. வண்ணத்திப்பூச்சிக்கு, உன் தோட்டமென்ன? என் தோட்டமென்ன? அதனால், அதனுடைய அருமை குறைந்து விட்டதா? என்ன? இன்றைய கதைமாந்தன் வாழ்ந்தது என்னமோ 43 வருடங்கள் தான். அவர் தரணிமைந்தன். மதம், மாச்சரியம், கலாச்சாரம்,பிராந்திய எல்லைகள், நாட்டுப்பற்று ஒன்றுமே அவரை பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய சீதா தேவி, மனித இனம். அவருடைய சூர்ப்பனகை, மனித குணம். அவருடைய கெளஸல்யை, ‘அம்ருத்’ அமிருதசரஸ். அவருடைய கைகேயி,மும்முறை கொலைக்களமான துரதிர்ஷ்ட அமிருதசரஸ். அவருடைய மந்தரை, கலோனிய அரசு. அவருடைய அகல்யை, பாரதமாதா.

இனி அவருடைய தாடகையையும், பூதகியையும் பற்றி மட்டுமே பேச்சு. இந்தியா தாடகை என்றால், பாகிஸ்தான் பூதகி. பாகிஸ்தான் தாடகை என்றால், இந்தியா பூதகி. இரண்டுமே ராக்ஷசிகள். யார் தான் உளவியல் வல்லுனர் அல்ல? பிறந்த மனிதன், மனுஷி எல்லாரும் ஏதோ தான் தான் ஃப்ராய்டின் கொள்ளுத்தாத்தா/பாட்டி என்று மார் தட்டிக்கொள்கிறார்கள். இத்தனைக்கும் மனோதத்துவ சாத்திரத்தின் வாசற்படி கூட மிதித்ததில்லை. நம் கதைமாந்தன் தனக்கு விருதுகள் அளித்துக்கொள்ளவில்லை என்றாலும், மனிதனின் மனம் என்ற ஆழ்கடலின் இண்டு, இடுக்குகளில் புகுந்து,அய்யய்யோ!, அவனுடைய நிர்வாண அசிங்கங்களை, புரிந்து கொண்டவராச்சே. அவர் ஒரு உருது இலக்கியவாதி. அவருடைய சிறு கதைகள், புதுமை பித்தனுடையதை விட நூறு மடங்கு பச்சை மிளகாய். 1947 இந்திய பிரிவினை பொருட்டு அவர் எழுதிய சிறு கதைகள்: வரலாறு, இலக்கியம், தத்துவ சாத்திரம், மனோதத்துவம். அவருடைய முதல் கதையில் (‘சதைப்பிண்டம் -டண்டா கோஷ்த்’), ஒரு சீக்கிய யுவன் ஒரு இஸ்லாமிய பெண்ணை கற்பழிக்க விரும்பி, கடத்துகிறான். அவளோ பிணமாக கிடக்கிறாள். அந்த திகைப்பில் அவன் ஆண்மை இழந்து விடுகிறான். நான், ஒரு தீப்பிழம்பை, இரண்டு வரியில் சொல்ல முயன்றேன். கலோனிய அரசின் காலாவதி சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், இந்த இலக்கியத்தை, ‘அசிங்கம்‘ என்று தடை செய்தது. பிற்காலம், தபால் தலை வெளியிட்டு, அவரை சிறப்பித்தது. அவரது மனோவேகம், இலக்கியத்திறன், உண்மை விளம்பல் பற்றி நூல் வடிக்கலாம். ஒரு சிறிய கட்டுரை எழுதுவது கடினம். சொல்லப்போனால், உசாத்துணை யாவும், இந்த சிறிய அறிமுகத்தைப்போல, அரைகுறை. எனவே, நானும் நிறுத்திவிட்டேன்.
அவர் பெயர்: ஸாதர் ஹாஸன் மாண்டோ (May 11, 1912 – January 18, 1955) அவர் யாருடைய வாரிசு தெரியுமா?    அன்றொரு நாள்: ஜனவரி:28‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’
http://www.heritagewiki.org/index.php/அன்றொரு_நாள்:_ஜனவரி:28
என்ற இழையில் தரிசனம் தரும்: ‘பாரதகண்டத்திலே, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் நற்பெயருடன் அறியப்படும் அமைதியின் மறு உரு; புரட்சித்தூண்; ஆன்மீகச்செம்மல்; லெளகீக மார்க்கபந்து; கடலோடி விடுதலை தேடியவர்; மனோபலசாலி; தியாகத்தின் சிகரம்; மாசற்ற ஜோதி. பாஞ்சால சிங்கம்,’ என்றெல்லாம் புகழப்படும் லாலா லஜபதி ராய் அவர்களின் வாரிசாக, இவரை கருதுகிறேன். சமீபத்தில் மஹாகவி பாரதி-தாகூர் சம்பந்தமான இழையில் சுட்டப்பட்ட,’இளமை இந்தியா (எங் இந்தியா) என்ற இதழை துவக்கி அதனுடைய முதல் இதழில் (ஜனவரி 1918) டாக்டர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் அமெரிக்க அதிபருக்கு எழுதி, கலோனிய அரசை பாடாய் படுத்திய கடிதத்தை, அதில் பிரசுரித்தார்.’ பேராசிரியர் நாகராஜன் அதிலிருந்து மற்றொரு பொக்கிஷத்தை எடுத்தார். 1910 ~20 களில் இருந்த இந்திய உறவுகளை பாருங்கள். இவருடன் அரசியல் ஆய்வு செய்தது ஹார்திகர் ~மஹராஷ்ட்டிரர்; குருநாதர் ~எஸ்.சுப்ரமண்ய ஐயர். இவருடைய அமெரிக்க இதழில் கவிதை வடித்தவர் ~குருதேவ் ரபீந்த்ரநாத் டாகுர். முன்னுரை: பிரிட்டீஷார் ஜோசையா வெட்ஜ்வுட்,’ என்று ஜனவரி 28 அன்று நான் எழுதியதை,நானே சிலாகித்துக்கொள்கிறேன்
இன்னம்பூரான்
11 05 2012
Inline image 1
உசாத்துணை: கடந்த சில நாட்களாக, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வெளிவந்த நூற்றுக்கணக்கான இதழியல் கட்டுரைகள்.

Geetha Sambasivam Sat, May 12, 2012 at 10:06 AM

ஜனவ்ரி 28 அன்று நான் எழுதியதை,நானே சிலாகித்துக்கொள்கிறேன்//

தப்பே இல்லை;  இந்த விஷயங்களெல்லாம் இன்று உங்கள் மூலமே அறிய முடிகிறது.  அதனால் சிலாகித்துக்கொள்வது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.  லாலா லஜ்பத் ராய் பற்றித் தெரியும்.  இவர் அவரோட வாரிசு எனத் தெரியாது. ஸாதர் ஹாஸன் மாண்டோ என்னும் இவர் பெயரையே இன்றுதான் கேள்விப் படுகிறேன்.  தகவல் சுரங்கமான உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

2012/5/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>

ன்றொரு நாள்: மே 11:

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Sat, May 12, 2012 at 10:25 AM



ஸதத் ஹஸ்ஸன் மண்ட்டோ அவருடைய சரியான பெயர்.
அவருடைய நான்கு கதைகளை மொழிபெயர்த்து இருக்கிறேன்.  நண்பர் ஒருவர் உருதுவில் வாசித்துக் காட்ட ஆங்கிலப் பிரதியின் துணையுடன் நான் செய்த மொழிபெயர்ப்புக்கள் அவை.  சனிமூலை வலைப்பூவில் இந்தக் கதைகள் படிக்கக் கிடைக்கும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோழர் பிரபாகரன் மண்ட்டோ பற்றி எழுதிய கட்டுரையை வடக்கு வாசல் இதழில் வெளியிட்டோம்.
அம்ருதா இதழில் நான் மொழிபெயர்த்த மண்ட்டோவின் கதை வந்திருக்கிறது.
அவருடைய உலகம் பிரமிக்க வைக்கக் கூடியது.  பிரிவினையின் அவலங்களை அவரைப் போல சொன்னவர்கள் வேறு யாரும் கிடையாது.  ஜி.நாகராஜன் படைப்புக்களைப் போல, பாலியல் தொழிலாளிகளின் அக உலகத்தையும் புற உலகத்தையும் மிகத் துல்லியமாகவும் உருக்கமாகவும் பதிவு செய்திருப்பார்.  அவருடைய நூறு வாட் பல்பு என்னும் சிறுகதை பளீரென்று முகத்தில் அறையும்.
அவருடைய மற்ற சிறுகதைகளைப் போலவே.
அன்புடன்
பென்னேஸ்வரன்

---------------------------------------------------------------

Geetha Sambasivam Sat, May 12, 2012 at 10:29 AM


மேல் அதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி.  சனிமூலையை முற்றுகை இடுகிறேன்.


Innamburan Innamburan Sat, May 12, 2012 at 11:54 AM

'பென்' நீ 'பொன்'



coral shree Sat, May 12, 2012 at 12:21 PM


அன்பின் ஐயா,

மிகச்சுவையான தகவல்கள்.

2012/5/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ன்றொரு நாள்: மே 11:
வாரிசு!
இன்று அவரது நூற்றாண்டு விழா. இந்தியாவின்/பாகிஸ்தானின் நாளிதழ்கள், வார இதழ்கள் எல்லாம் அவரது கீர்த்தியை பாடுகின்றனர். கெளரவர்களும், பாண்டவர்களும் கொண்டாடுகின்றனர். ஶ்ரீகிருஷ்ணன் யார் பக்கம்? அந்த மாதிரி தான். சில மனிதர்களை தேசாபிமானத்திற்குள் அடக்கி ஆளமுடியாது. வண்ணத்திப்பூச்சிக்கு, உன் தோட்டமென்ன? என் தோட்டமென்ன? அதனால், அதனுடைய அருமை குறைந்து விட்டதா? என்ன? இன்றைய கதைமாந்தன் வாழ்ந்தது என்னமோ 43 வருடங்கள் தான். அவர் தரணிமைந்தன். மதம், மாச்சரியம், கலாச்சாரம்,பிராந்திய எல்லைகள், நாட்டுப்பற்று ஒன்றுமே அவரை பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய சீதா தேவி, மனித இனம். அவருடைய சூர்ப்பனகை, மனித குணம். அவருடைய கெளஸல்யை, ‘அம்ருத்’ அமிருதசரஸ். அவருடைய கைகேயி,மும்முறை கொலைக்களமான துரதிர்ஷ்ட அமிருதசரஸ். அவருடைய மந்தரை, கலோனிய அரசு. அவருடைய அகல்யை, பாரதமாதா.

இனி அவருடைய தாடகையையும், பூதகியையும் பற்றி மட்டுமே பேச்சு. இந்தியா தாடகை என்றால், பாகிஸ்தான் பூதகி. பாகிஸ்தான் தாடகை என்றால், இந்தியா பூதகி. இரண்டுமே ராக்ஷசிகள். யார் தான் உளவியல் வல்லுனர் அல்ல? பிறந்த மனிதன், மனுஷி எல்லாரும் ஏதோ தான் தான் ஃப்ராய்டின் 
கொள்ளுத்தாத்தா/பாட்டி என்று மார் தட்டிக்கொள்கிறார்கள். இத்தனைக்கும் மனோதத்துவ சாத்திரத்தின் வாசற்படி கூட மிதித்ததில்லை.


உண்மைதான் ஐயா.... சரியாகச் சொன்னீர்கள். மனோதத்துவ சாத்திரத்தின் வாசற்படி மிதித்தவர்கள் மட்டும்தான் சகமனிதர்களின் வக்கிரங்களை புரிந்து கொள்ள இயலும் என்றால் பிறகு நாட்டில் அனைவரும் மனோதத்துவ மேதைகளுக்கு தூக்குத் தூக்கியாகத்தான் இருக்க முடியும்.. சில விசயங்கள் கடவுள் மனிதருக்குக் கொடுக்கும் வரங்கள் அல்லவா.... தாங்கள் அறியாததா ஐயா.. 


நம் கதைமாந்தன் தனக்கு விருதுகள் அளித்துக்கொள்ளவில்லை என்றாலும், மனிதனின் மனம் என்ற ஆழ்கடலின் இண்டு, இடுக்குகளில் புகுந்து,அய்யய்யோ!, அவனுடைய நிர்வாண அசிங்கங்களை, புரிந்து கொண்டவராச்சே. அவர் ஒரு உருது இலக்கியவாதி. அவருடைய சிறு கதைகள், புதுமை பித்தனுடையதை விட நூறு மடங்கு பச்சை மிளகாய். 1947 இந்திய பிரிவினை பொருட்டு அவர் எழுதிய சிறு கதைகள்: வரலாறு, இலக்கியம், தத்துவ சாத்திரம், மனோதத்துவம். அவருடைய முதல் கதையில் (‘சதைப்பிண்டம் -டண்டா கோஷ்த்’), ஒரு சீக்கிய யுவன் ஒரு இஸ்லாமிய பெண்ணை கற்பழிக்க விரும்பி, கடத்துகிறான். அவளோ பிணமாக கிடக்கிறாள். அந்த திகைப்பில் அவன் ஆண்மை இழந்து விடுகிறான். நான், ஒரு தீப்பிழம்பை, இரண்டு வரியில் சொல்ல முயன்றேன். கலோனிய அரசின் காலாவதி சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், இந்த இலக்கியத்தை, ‘அசிங்கம்‘ என்று தடை செய்தது.

புதிய செய்தி .வாசிக்கத் தூண்டும் செய்தி...

பிற்காலம், தபால் தலை வெளியிட்டு, அவரை சிறப்பித்தது. அவரது மனோவேகம், இலக்கியத்திறன், உண்மை விளம்பல் பற்றி நூல் வடிக்கலாம். ஒரு சிறிய கட்டுரை எழுதுவது கடினம். சொல்லப்போனால், உசாத்துணை யாவும், இந்த சிறிய அறிமுகத்தைப்போல, அரைகுறை. எனவே, நானும் நிறுத்திவிட்டேன்.
அவர் பெயர்: ஸாதர் ஹாஸன் மாண்டோ (May 11, 1912 – January 18, 1955) அவர் யாருடைய வாரிசு தெரியுமா?    அன்றொரு நாள்: ஜனவரி:28‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’
http://www.heritagewiki.org/index.php/அன்றொரு_நாள்:_ஜனவரி:28
என்ற இழையில் தரிசனம் தரும்: ‘பாரதகண்டத்திலே, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் நற்பெயருடன் அறியப்படும் அமைதியின் மறு உரு; புரட்சித்தூண்; ஆன்மீகச்செம்மல்; லெளகீக மார்க்கபந்து; கடலோடி விடுதலை தேடியவர்; மனோபலசாலி; தியாகத்தின் சிகரம்; மாசற்ற ஜோதி. பாஞ்சால சிங்கம்,’ என்றெல்லாம் புகழப்படும் லாலா லஜபதி ராய் அவர்களின் வாரிசாக, இவரை கருதுகிறேன். சமீபத்தில் மஹாகவி பாரதி-தாகூர் சம்பந்தமான இழையில் சுட்டப்பட்ட,’இளமை இந்தியா (எங் இந்தியா) என்ற இதழை துவக்கி அதனுடைய முதல் இதழில் (ஜனவரி 1918) டாக்டர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் அமெரிக்க அதிபருக்கு எழுதி, கலோனிய அரசை பாடாய் படுத்திய கடிதத்தை, அதில் பிரசுரித்தார்.’ பேராசிரியர் நாகராஜன் அதிலிருந்து மற்றொரு பொக்கிஷத்தை எடுத்தார். 1910 ~20 களில் இருந்த இந்திய உறவுகளை பாருங்கள். இவருடன் அரசியல் ஆய்வு செய்தது ஹார்திகர் ~மஹராஷ்ட்டிரர்; குருநாதர் ~எஸ்.சுப்ரமண்ய ஐயர். இவருடைய அமெரிக்க இதழில் கவிதை வடித்தவர் ~குருதேவ் ரபீந்த்ரநாத் டாகுர். முன்னுரை: பிரிட்டீஷார் ஜோசையா வெட்ஜ்வுட்,’ என்று ஜனவ்ரி 28 அன்று நான் எழுதியதை,நானே சிலாகித்துக்கொள்கிறேன்


அருமை ஐயா.நன்றி.



உசாத்துணை: கடந்த சில நாட்களாக, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வெளிவந்த நூற்றுக்கணக்கான இதழியல் கட்டுரைகள்.


யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
என் பாக்கியம் இ சார்.

பென்-----------------------------------------------------------------------------------------

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
இன்னொன்றும் சொல்ல மறந்து விட்டேன்.

அமெரிக்க அரசுக்கு அவர் Letter to Uncle Sam என்று  எட்டு  பாகங்களாக எழுதிய கடிதங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.   

மஹா கிண்டலாக இருக்கும் அக்கடிதங்கள்.  கூகுளில் சென்று தேடிப் படித்துப் பாருங்கள்.   பட்டையைக் கிளப்பி இருப்பார் மண்ட்டோ.

இந்தியா  மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் இவருடைய நூற்றாண்டைப் பெருமையுடன் கொண்டாடுகின்றன.

அன்புடன்

பென்

coral shree Sat, May 12, 2012 at 1:35 PM



சூப்பர் பென் சார்... இதோ.


பவளா.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
மிக்க நன்றி பவளா ஜி

மண்ட்டோவின் வாழ்க்கையைப் பார்க்கும்போது எனக்கு வங்காள இயக்குநர் ரித்விக் கட்டக் நினைவு வரும்.  அவருடைய திரைப்படங்கள் மெலோடிராமாவைக் கலைவடிவமாக்கி இருக்கும்.  மேகே டாக் தாரா என்னும் படத்தில் அவர் படமாக்கிய ஒரு ரயில்காட்சி இந்தியத் திரைப்படங்களில் இன்னும் காண முடியாத ஒன்று.  இந்திரா காந்தியை பெஹன் என்று அழைத்து வந்தார்.  எமர்ஜென்ஸியை தைரியமாக விமர்சனம் செய்தார். எமர்ஜென்ஸியை வறுத்தெடுத்த அவருடைய படம் ஒன்றைக் காணாமல் செய்தார்கள் நம் கலைக்காவலர்கள்.

அவரும் மண்ட்டோவைப் போல எப்போதும் குடிபோதையில் இருப்பார்.  ஒருமுறை மொரார்ஜி அவரை ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டாராம்.

கட்டக் தா, ஏன் இப்படிக் குடித்துத் தன்னையே அழித்துக் கொள்கிறாய்?

ரித்விக் சொன்னாராம்.  அதை இந்தியில் சொன்னால் அதன் அழகு கெடாமல் இருக்கும்

க்யா கரூன் மொரார்ஜி பாய்.  ஆப் கோ தூஸ்ரி டிரிங்க் பஸந்த் ஹை.  மேரேகு தூஸ்ரா பஸந்த்.  ஸப் அப்னி அப்னி பஸந்த் பே.


அன்புடன்
பென்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
இன்னோரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்.

நம்முடைய இயக்குநர் சிகரத்தின் பல படங்கள் ரித்விக் கட்டக் படங்களில் வந்த காட்சிகளின் மட்டமான நகல்கள்.

பென்

DEV RAJ Sat, May 12, 2012 at 7:33 PM

Reply-To: vallamai@googlegroups.com
To: வல்லமை
On May 12, 9:43 am, யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswa...@gmail.com>
wrote:
> *க்யா கரூன் மொரார்ஜி பாய்.  ஆப் கோ தூஸ்ரி டிரிங்க் பஸந்த் ஹை.  மேரேகு
> தூஸ்ரா பஸந்த்.  ஸப் அப்னி அப்னி பஸந்த் பே.*

:))
மொரார்ஜீ பாய்க்கு இது வேணுமா ?


தேவ்


DEV RAJ Sat, May 12, 2012 at 7:42 PM

Reply-To: vallamai@googlegroups.com
To: வல்லமை
மேகே டாக தாராவில் ஹம்ஸத்வநி -
http://www.youtube.com/watch?v=2Gmv-auw1rI&feature=related

Innamburan Innamburan Sat, May 12, 2012 at 9:42 PM

ஆங்கிலத்தில் 'என்ரிச்' என்ற சொல்லொன்று உண்டு. நீங்கள் எல்லாரும் செய்த என்ரிச்மெண்ட் தான் எனக்கு தூண்டில். நன்றியெல்லாம் சம்பிரதாயம். அதான் இத்துடன் 'நிறுத்', ராஜத்தின் பாஷையில்.

[Quoted text hidden]

தண்டோரா ~ 4




தண்டோரா ~ 4

Innamburan S.Soundararajan Fri, May 10, 2013 at 8:01 PM

தண்டோரா ~ 4


Inline image 1

தண்டோரா போடுவது ஒரு நுண்கலை; பகிரங்கத்தை நுட்பமாக பொதுமன்றத்தின் முன்னால் வைக்க வேண்டும். கொசு ஒழிப்பானாலும், கருத்தடையானாலும், ஜப்தி செய்வதானாலும், பஞ்சாயத்து மீட்டிங்க் ஆனாலும், அரசாணை பிரகடனமானாலும், ஒலி எழுப்பி சேதி சொல்வதும், அதை கூட்டிக்குறைக்காமல் விளம்புவதும் எளிதல்ல. மாமாண்டூர் மாடசாமிக்கு இது கை வந்த கலை; குடும்பச்சொத்து; கொள்ளுத்தாத்தா அடித்தத் தண்டோராவைத்தான், இவனும் அடிக்கறான்.

டைம் லைன்: 10 05 2013; இடம்: மாமாண்டூர்; நேரம்: ஆதவன் மறைய வில்லை. மணியடிச்சாச்சு, ஆரம்பப்பள்ளியில். கன்னா பின்னான்னு ஓடி வந்த பசங்க புடை சூழ மாடசாமி அரசமரத்தடிக்கு விரைந்து சென்றான். சென்றானா? ஊர்ப்பஞ்சாயத்துக் கூடிய வண்ணம். வெள்ளி வெற்றிலை செல்லத்தை ‘கூஜா’ குப்புசாமி கொண்டு வந்து வைத்தான். அதில் பண்டாரவாடை துளிர் வெற்றிலை, கும்போணம் நெய்ச்சீவல், சிவபுரி பிரமபத்திரம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஊருக்கே செவிலியாகவும், வீட்டுக்கு வீடு பிள்ளைப்பேறுப் பார்ப்பவளும், கோயில் பிரகாரங்களை பெருக்கித் துடைக்கும் ‘மதினி’ லச்சுமி ஒரு கெத்துடன் ஒய்யாரமாக வந்து, சொம்பையும் வைத்து, விரல்களை நெறித்து திருஷ்டிக் கழித்தாள். எல்லாரும் அவளை ஒருமாதிரி பார்த்து விட்டு, உருத்திராக்ஷப்பூனை போல் கண் மூடி தவமிருந்தனர், அது கபட வேஷமாயினும்.

சின்ன மைனர் சிவசாமி ஐயர் தலைமை என்று சிலர் சொல்வதால், ஜாதிபத்திரியும், ஒரு குட்டி புட்டியில் மூக்குப்பொடியும் இருந்ததைப் பாத்தேன் என்று நம்ம கிட்டா சத்தியம் பண்றான். நாட்டாமை ஆறுமுகம் சேர்வை, இந்த சேதியெல்லாம் வந்தப்றம் தான், வீட்டை விட்டு கிளம்பினார். இன்று அவர் தான் அக்ராசனம் என்ற எண்ணம் அவருடைய மனதில் அசையா இடம் பெற்றதால், ஆரவாரத்துடன், அந்த பத்தடி தூரத்துக்கு ஜல் ஜல் என்று இரட்டை மாட்டு வண்டியில் வந்து கோஷத்துடன் இறங்கி, ஐயரை அரியாசனத்திலிருந்து இறக்கி விட்டு, தாம்பூலம் தரித்துக்கொண்டு, உறையூர் சுருட்டு ஒன்றை பற்ற வைத்துக்கொண்டார். சிவசாமி அய்யர் முகத்திலும் புகை. மனதிலும் புகை & பகை. 

அது வரை, கட்சி மாறும் நம் அரசியல் குறுமன்னர்களைப்போல, காட்சி மாறுவதை கண நேரத்தில் உள்வாங்கிக்கொண்ட மாடசாமி நெடுஞ்சாங்கிடையாக சேர்வை ஐயா காலில் விழுந்து, ‘தண்டம், சாமியோவ். உத்தரவு’ என்று வினவும்போது, ‘மதினி’ லச்சுமிக்கு சாமி வந்து விட்டது. ‘ஓய்ய்ய்ய்’ என்று கூவி விட்டு, சுயநினைவை இழந்த மாதிரி பாவ்லா செய்து, ஐயரை உருட்டி விட்டாள். அவர் பாவம் நோஞ்சான். இது சேர்வையின் செட் அப் என்று மனதிலுள்ள புகையும், பகையும் ‘உள்-தண்டோரா’ போட்டாலும், சுதாரித்துக்கொண்டு, அவர் நாசி-உத்வேகத்தை வரவழைத்துக்கொண்டார். அடுத்த கட்டபஞ்சாயத்துக்குள்ளே, சேர்வை சாகமாட்டானா என்ற நப்பாசை!

இன்று ஒரு சிறிய உரையாடலுடன் பீடிகை மட்டும். 

சேர்வை: யாருடா அங்கே? மாடசாமிக்கு நாலு காசு கொடு. அவன் டாஸ்மாக்கிலே போய் குடிச்சுட்டுக் கிடக்கட்டும். நாம சாமியை கும்பிடுவோம். என்ன சரி தானே, மைனர்வாள்?
(மாடசாமி கிளம்பியாச்சு. இனி அவன் தண்டோரா அடிக்க நாலு நாள் இருக்கு.)

‘மதினி’ லச்சுமி மேல் வந்து ஆரோகணித்த அம்மன்: 
‘கேட்டுக்கங்கடா! 25 வருஷமா நேரு-காந்திக்குல்லாக்காரங்க செண்டர்லெ ஆட்சியில் இல்லை. அவனையும், இவனையும் கூட்டுச்சேர்த்துக்கிணு லூட்டி அடிக்கிறாக.

சிவசாமி அய்யர்: (தனிமொழி) லூட்டி இல்லையம்மா. லூட். பரிசுத்த லூட். 2014லெ அவங்கள் தேர்தலை சந்திக்கணும். 
தெய்வமாச்சே( பாம்புச் செவி) அது சொல்லுது:

‘அய்யரே! ஆம்பிளை அடிச்சா லூட்! பொம்பளை அடிச்சா லூட்டி! உம்ம மாப்பிள்ளை வந்திருக்காப்லெ, அவரு தான் ஜோஸ்யர் ஆச்சே. கேட்றுவோம். எதற்கும் நான் சொல்றதைக் கேட்டுக்கோ. 2014ம் வருடம் 2013லேயே வந்திரும். கர்நாடகா தேர்தலில் ஆளும் கட்சி மண்ணை கவ்வின மாதிரி, இவுகளுக்கும் சோதனைடா! இந்த மோடி பேச்சு வேறே அடி படறதா. காங்கிரஸ் மைனராகி விட்டால் ( அவள் சொல்வது மைனாரிட்டி. சாமியெல்லாம் இப்படித்தான் பேசும்.). தென்னாட்டு கட்சிகளை பாம்பென்று அடிக்கவும் முடியாது. பழுதென்று மிதிக்கவும் முடியாது. காரியம் ஆகணும்னா காலை பிடிப்பானுக. காரியம் ஆகிவிட்டால், கழுத்தைப் பிடிப்பானுக. கிழக்கே வேறே மாம்தாவின் மமதையும், மாயாவின் மாயாஜாலமும் காங்கிரஸை பின்னி பெடல் எடுக்குது.  போதாக்குறைக்கு, இன்னும் இருபது நாட்களில் மாஜியாகப்போற ஆடிட்டர் ஜெனெரல் படுத்தறான். ஆராசா போட்ற சத்தத்திலெ சாக்கோ ஷாக் ஆயிட்டார். ஒரு பேப்பர்க்காரன் சொல்றான்:‘பிஜேபிக்கு 150-160 ஸீட்: காங்கிரஸுக்கு 100.’ அப்டினு.
சொல்லி முடிக்கலை. சேர்வை பல்லை நற நறவென்று கடித்தார். சுருட்டை வீசி எறிந்தார். 

சேர்வை: அம்மா! தாயே! பரதேவதையே! அரசியல் எதுக்கம்மா, நமக்கு. இன்று பஞ்சாயத்து பெங்களுரு பற்றி தானே, அம்மா. நமக்கு ஏன் இண்டெரெஸ்டு? ஏதோ நாலு காண்டிராக்ட் எடுக்கலாம்லெ.

‘என்னடா சொன்னாய்? (அவளை அந்தப்புரத்தில் பாடாய் படுத்தும் அவரை விரட்ட இது தானே சாக்கு!) அங்கே, காங்கிரஸ் தலையெல்லாம் உருளுது. சித்தராமையா, மல்லிக்கார்ஜுன கார்கே,பரமேஷ்வரா, தேஷ்பாண்டே, சிவகுமார், சிவஷங்கரப்பா, ஜயச்சந்திரா, முனியப்பா, எண்ணிக்கிட்டையா, இப்டி எட்டுப்பேர் முதல்வர் போஸ்டுக்குப் போட்டாபோட்டி. நீ எதுக்கு ராசா காண்டிராக்ட் கெஞ்சணும். நீயும் போட்டிப்போடு’ என்றாளே பார்க்கலாம்!

மூலையில் நின்று கொண்டு வேடிக்கைப்பார்த்த வாத்தியார் அனந்து சார் ‘கொல்’ என்று சிரித்து விட, ‘ ஹோய்ய்ய்ய்’ என்று கூவிக்கொண்டு. சாமி மலையேறிவிட்டது. ‘மதினி’ லச்சுமி மூர்ச்சையாகி விழுந்து விட்டாள். அவளுக்கு சூடம் ஏற்றி ஆராதனை நடக்கும்போது, நம்ம அனந்து சார் சொன்னார்.
‘கர்நாடகா எம்.எல்.ஏ களில் 90% கோடீஸ்வரர்கள், எந்த கட்சியானாலும். ஒவ்வொத்தனுக்கும் சொத்து ஜன்னி கண்ட ஜுரம் மாதிரி எக்கச்சக்கமா ஏறிடுத்து, நாலு வருஷத்துக்குள்ளே. மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ மேலே கிரிமனல் கேசு இருக்கு அவங்களே எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். பெங்களுரிலே கிட்டத்தட்ட 60% ஓட்டு. பிஜேபி யை துரத்தி அடிச்சுட்டாங்க என்றாலும் சிலர் சொந்த மதிப்பினால் கெலித்திருக்கிறார்கள்.’
அவர் பேசி முடிக்கலை. நம்ம ஆண்டாளு பிள்ளை ‘அரும்பு மீசை’ சேஷாத்திரி, காலேஜ்லெ பெரிய கிளாஸ் படிக்கிறான் இல்லை. அவன் மடிக்கணினியை வைத்துக்கொண்டு, ‘அப்டேட்’ என்றான். அதற்குள் சந்தியாவந்தனம் பண்ணனும் என்று சிவசாமி அய்யர் எழுந்து போய்விட்டார். நாட்டாமை ஆறுமுகம் சேர்வையும் வண்டியேறினார். வண்டி பின்னாலேயே, தகரியமா, ‘மதினி’ லச்சுமி நடந்து சென்றாள். கூட்டமும் கலைந்தது. நாளை தண்டோரோ அடிக்கப்படும் என்று மக்களிடையே பேச்சு அடிபட்டது.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்



____________________________________________________________________________-_
அப்டேட்: வாலு போச்சு: பன்ஸலும், அஷ்வினி குமாரும் ராஜிநாமா. 
                கத்தி வந்தது. முப்பது வருஷத்துக்கு பிறகு மைசூருக்கு யோகம். சித்தராமையா முதலமைச்சர். ஆனால், அது எளிதில் வரவில்லை. அதற்கும் சீக்ரெட் ஓட்டெடுப்பு.
இன்னம்பூரான்
10 05 2013

தண்டோரா! ~3




 தண்டோரா! ~3

Innamburan Innamburan Sat, Feb 4, 2012 at 12:40 PM

thandora.jpg
மீண்டும் தண்டோரா!
ஹெச்சரீக்கா! மீண்டும் தண்டோரா! தண்டோரா-4 பெங்களூருலேயிருந்து தோம்! தோம்! னு மேளதாளத்தோட/பாண்டு வாத்தியத்தோடெ, தூள் கிளப்பிக்கிணு வந்த் கொண்டே இருக்கு. அப்டேட் கம்ப்ளீட்டு.
இன்னம்பூரான்
10 05 2013
2ஜி உரிமங்களை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் அளித்த தீர்வு ஆட்சிபீடத்தை ஆட்டிவிட்டது என்றாலும், நொண்டி சாக்குகளும், சால்ஜாப்புகளும் வெளி வந்த வண்ணமே இருக்கின்றன. எந்த அமைச்சரோ, பிரதமரோ ராஜிநாமா செய்வது பற்றி, அதிகார வட்டங்களில் பேச்சு எழவேயில்லை. இங்கிலாந்தில் முந்திய ஆட்சியின் உள்துறை அமைச்சர் டேவிட் ப்ளங்கட் பதவியிலிருந்து விலக நேரிட்டது: குற்றச்சாட்டு: தன் ஆசைக்கிழத்தியின் தாதியின் பயண அனுமதி பற்றி லேசாக விசாரித்தது. அவருடைய காதலை பற்றி யாருக்கும் கவலையில்லை. இங்கிலாந்து போற்றும் க்யூ முறையில் எட்டிப்பார்க்க முயன்றது; அதுவும் அவருடைய துறை அதிகாரிகளிடம் தான் விசாரித்தாராம்.
ஃபெப்ரவரி 3, 2012 அன்று இங்கிலாந்தில் க்ரிஸ் ஹூஹ்னெ என்ற அமைச்சர் விலக நேரிட்டது: குற்றச்சாட்டு: இங்கிலாந்தில் போக்குவரத்து விதிகளை மீறினால், கடுமையான தண்டனை, காரோட்டும் உரிமத்தில் குற்றம் பதிவு செய்து, மைனஸ் மார்க் போடப்படும். ஓரளவுக்கு மேல் மீறினால், கார் ஓட்டும் உரிமமே ரத்து செய்யப்படலாம். க்ரிஸ் ஹூஹ்னெ 2003ல், விதித்த வேகத்தை மீறினார். உரிமம் பறி போகுமோ என்ற அச்சத்தில், தன் மனைவி (இப்போது மாஜி) விக்கி ப்ரைஸ்ஸை குற்றத்தை ஒப்புக்கொள்ள சொன்னார். அவள் இப்போது குட்டை உடைத்து விட்டாள். போலீஸோ இருவரையும் தண்டிக்க ஹேது இருக்கிறது என்கிறது. குற்றச்சாட்டு: ்க்ரிஸ் ஹூஹ்னெ பொய் சொல்லிவிட்டார்; எங்களுக்கு பொய் சொன்ன அமைச்சர் வேண்டாம்.
என்னே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்!
இன்னம்பூரான்
04 02 2012
சித்திரத்துக்கு நன்றி:http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thiruvannamali/thandora.jpg
பிரசுரம்: வல்லமை

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 29





Innamburan S.Soundararajan Fri, May 10, 2013 at 9:11 AM

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 29
  1. Friday, May 10, 2013, 6:49
  1. Featuredஇலக்கியம்Inline image 1பத்திகள்


இன்னம்பூரான்
pastedGraphic.pdf

இன்றைய ஊடகங்களில் பலவற்றை ஊன்றி படித்தேன், ஒரு முட்டுக்கட்டையும் இன்னொரு முட்டுக்கட்டையும் மோதிக்கொள்வது போன்ற மாயத்தோற்றம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வை அவை விமர்சித்த அழகை (இது வஞ்சப்புகழ்ச்சி என்று சொல்லாமலே புரியும்!) கண்டு. ஊடகம் என்றாலே அவர்களுக்கு வாசகர்களை தட்டி எழுப்பவேண்டும், சுட்டி அளித்து, கட்டித் தழுவவேண்டும்; ஆருஷி மர்டர் கேஸ் என்றால், உடனடி ஆஜர். உச்ச நீதிமன்றம்/ஆடிட் மவராஜன் என்றால், சுவையான தகவல் நாடி, வபையான செய்திகளை கோட்டை விடவேண்டும். சர்குலேஷனும், சந்தாவும் கூடினால் போதும். இந்த குறையை நீக்குவது வெளி நாட்டு ஊடகங்கள் என்பது, இன்றைய எகானமிஸ்ட் இதழில் வெள்ளிடைமலை.
கனம் கோர்ட்டார் தீர்ப்புகளையும், ஆடிட் ரிப்போர்ட்களையும் ஊடகங்கள் சரிவர புரிந்துகொள்வதில்லை; துலாக்கோல் ஆய்வு செய்து, அவற்றின் சாராம்சங்களை அளிப்பது இல்லை என்ற கவலை எனக்கு பல வருடங்களாக உண்டு. வால்டர் லிப்மென் என்ற பிரபல இதழியல் வல்லுனர் ஊடகங்கள், மக்களின் கருத்துக்களை உருவாக்கும் பணியை நடுவு நிலையிலிருந்து, பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றார். நம் ஊடகங்கள் அதை மறந்து விட்டன என்று தான் பல நாளிதழ்களில், இன்றைய நிகழ்வறிக்கை தோற்றுவிக்கிறது.
அது என்ன? ஒரு பன்னாட்டு நிறுவனமும், இந்திய நிறுவனமொன்றும் சம்பந்தப்பட்ட பங்கு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசும், அதனுடைய பெட் ரோலிய கம்பெனியும் (ஓ.என்.ஜீ.சீ) எடுத்த முடிவின் மீது ஆடிட்டர் ஜெனெரல் குறை கண்டுள்ளார். அது தவறு. மத்திய அரசு செய்தது தான் சரி. தணிக்கத்துறை சொல்வது எல்லாம் வேதவாக்கு அன்று. தணிக்கை அறிக்கையை நாடாளுமன்றம் விவாதிக்கும். பொதுக்கணக்குக் கமிட்டி அலசும். பிறகு, அமைச்சரகம் சொல்வதை ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றம் தணிக்கை அறிக்கையை நிராகரிக்கக்கூடும் என்று கனம் உச்சநீதி மன்றத்தில் இன்று சொல்லிவிட்டார்கள். டும்! டும்! என்று ஹூங்காரத்துடன் தொடங்கி, ஆடிட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரு பொது நலவழக்கு இது, தணிக்கைத்துறையின் செயல்பாடுகளை கனம் கோர்ட்டார் விமரசிக்கவில்லை என்பதையெல்லாம் அடக்கி வாசித்தது, வால்டெர் லிப்மென் என்ற இதழியல் பிதாமகனின் அரிச்சுவடிக்கு முரண்.
சரி. கனம் கோர்ட்டார் சொன்னது தான் என்ன என்று அறிய உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பைப் படித்தேன். அன்றாடம் தீர்ப்புகள் வெளி வந்து விடுவது ஒரு பெரிய ஆறுதல்.
அருண் குமார் அகர்வால் என்ற விண்ணப்பதாரரின் பொது நலவழக்கு (ரிட் பெட்டிஷன் 69/2012) மீது இன்று (09 04 2013) நீதிபதிகள். திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் & தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில், தள்ளுபடி செய்யப்பட்டது. விண்ணப்பத்தில் தணிக்கை அறிக்கை சான்றாகக் கூறப்பட்டிருந்தது. 46 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில், முதல் 36 பக்கங்களில் தணிக்கை அறிக்கை பற்றிய பேச்சே இல்லை. அரசு எடுத்த முடிவுகள் பற்றி ய சாட்சியம், ஆவணங்கள், இரு தரப்பு வாதங்கள், அரசியல் நடைமுறைகள், பொருந்தும்/பொருந்தாத முன்னைய தீர்ப்புகள் பற்றி விவரமான, தெளிவான அலசல்கள் தான் இடம் பெற்றன. அடுத்த பத்து பக்கங்களில், ஆடிட்டர் ஜெனரல் பற்றி அரசியல் சாஸனம் கூறுவது, நாடாளு மன்றத்தின் மேலாண்மை, ஆடிட் வரலாறு, வல்லுனர்களில் கருத்து எல்லாவற்றையும் விலாவாரியாக அலசி, தொகுத்து அளித்து விட்டு, நான்கு வாக்கியங்களில், தணிக்கை அறிக்கையின் மீது நாடாளும் மன்றத்துக்கு உள்ள மேலாண்மையை கோர்ட்டார் ஸ்வீகரிக்கலாகாது என்பதை விளக்கும் போது, ஆடிட் கூற்றை வேதவாக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றாலும், இந்திய அரசியல் சாஸனம் அமைத்த தணிக்கைத்துறையின் அறிக்கையின் மதிப்பை குறைத்து எடை போடக்கூடாது; அதே சமயம் எதிர்வாதங்களில் நியாயம் இருந்தால் அதை புறக்கணிப்பதும் சரியல்ல என்று தீர்ப்பு கூறுகிறது. இதையே தான் தணிக்கைத்துறையும் ஒவ்வொரு அறிக்கையிலும் முன்னெச்சரிக்கையாக, பல வருடங்களாக தாக்கல் செய்து வருகிறது. இந்த வழக்கில் தணிக்கைத்துறை ஒரு கட்சிக்காரர் இல்லை. அதனால், இந்த விளக்கம் அளிக்க அவர்களுக்குத் தருணம் கிட்டவில்லை.
இந்த தீர்ப்பில், மற்றும் பல வகைகளில் முக்கியமானது.
அரசு தீர்மான கட்டங்கள் துல்லியமாக அலசப்பட்டுள்ளன;
நடைமுறை சாத்தியங்கள் அழகாக விவாதிக்கப்பட்டுள்ளன;
ஆடிட் வரலாறு நிரல் நிறையாக கொடுக்கப்பட்டுள்ளது;
குறிப்பிடப்பட்ட பழைய தீர்வுகள் மிகவும் தேவையானவை;
இன்றைய காலகட்டத்தில் -கர்நாடக தேர்தல் முடிவுகள், ஜேபிஸி வில்லங்கம், ஸீபீஐ வில்லங்கள் – இது மேலும் ஆய்வு செய்ய வேண்டிய ஆவணம்.
வாசகர்களுக்கு ஆர்வம் இருக்கும் பக்ஷத்தில், ‘கனம் கோர்ட்டார் அவர்களே!’ என்ற தொடரில் அவற்றை பற்றி எழுதுவதாக உத்தேசம். பார்க்கலாம்.
உசாத்துணை:

சித்திரத்துக்கு நன்றி:





பின்குறிப்பு: இது வல்லமை இதழில் அவ்வப்பொழுது தலை காட்டும் வேறு ஒரு தொடர். தொடர் 1 -28 பின்னர் வரும்.
இன்னம்பூரான்
10 05 2013