Friday, March 1, 2013

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 16 ‘எம்டர்’

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 16 ‘எம்டர்’
12 messages


Innamburan Innamburan Wed, Feb 15, 2012 at 6:34 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: ஃபெப்ரவரி 16
‘எம்டர்’
மருங்காபுதூர் முனிசிபாலிடியின் சேர்மன், ஆறுமுகம் சேர்வை. தற்குறி. அதனாலென்ன? ஊருக்கு பெரியமனுஷன். கமிஷனர், சுப்பையா பிள்ளை பி.ஏ.பி.எல்.யோக்கியஸ்தன். கொஞ்சம் அலட்டிக்குவார். அவரை கூப்பிட ஆள் அனுப்பிய சேர்வைகாரர் சொல்லினுப்பினார், ‘யாருப்பா, அங்கே? சேர்மர் கூப்டார்னு அந்த கமிஷனனை வரச்சொல்லு.’ அந்தமாதிரி எம்டனுக்கும் தண்ணி காட்றமாதிரி, அந்த ரேஞ்சுக்கு, ஒரு பிரிட்டீஷ் போர்க்கப்பல் ஆட்டிவைத்தது என்றால். அது ‘எம்டர்‘ தானே,திவாகர்காரு? என்ன சொல்றேள்?
கடற்படை போர் என்றால், சண்டைக்கோழி, வின்ஸ்டன் சர்ச்சில். விமானப்போரிலும், தரைப்படைப்போரிலும் சண்டைக்கோழி தான். இரண்டாவது உலகயுத்தம் தொடங்கிய சமயம், ஹிட்லரின் அட்மிரல் க்ராஃப் ஸ்பீ என்ற குட்டி போர்க்கப்பலும், அல்ட்மார்க் என்ற அதனுடைய ‘கூஜா’வும் (Supply ship) வணிகக்கப்பல்களை மூழ்கடித்து, மாலுமிகளை ‘கூஜா’வில் சிறைப்படுத்தினர். இனி டைம்லைன்: 
  • 6th August 1939: அல்ட்மார்க், இங்க்லீஷ் கால்வாயை திருட்டுத்தனமாகக் கடந்து, தெற்கு அட்லாண்டிக்கில், அட்மிரல் க்ராஃப் ஸ்பீ க்கு அருமையாக, கூஜா தூக்க, நேச நாடுகளின் வணிகக்கப்பல்கள் பல ‘தொபக்கட்டீர்’.
  • 13th December 1939: எக்ஸெடர், அஜாக்ஸ் & அக்கெலெஸ் என்ற மூன்று ‘எம்டர்களால்’ துரத்தப்பட்ட அட்மிரல் க்ராஃப் ஸ்பீ தென்னெமரிக்காவின் மாண்டிவிடியோ துறைமுகத்தில் ஒளிந்து கொண்டது. வெளி வந்தாகவேண்டும். இந்த எம்டர்களிடம் மாட்டிக்கொள்வதை விட கடலாழமே பரவாயில்லை என்று தற்கொலை செய்து கொண்டது.
  • 12th February 1940: அதிர்ஷ்டம் தான். கூஜா அல்ட்மார்க், உலகெல்லாம் சுற்றி, நடுநிலை வகிக்கும் நார்வே அருகில் வந்தடைந்தது.
  • 13th February 1940: ஜமா சேர்ந்தது. அரோரா என்ற கப்பலிலிருந்து டெக்னிகல் படையுடனும், கொஸ்ஸாக் என்ற எம்டருக்கு, அரேதூஸா, சீக், நுபியன், ஐவன்ஹோ, இன்றெபிட் என்ற மினி எம்டர்கள், கை காரியத்துக்கும், வந்து நின்றன. எல்லாம் கூப்பிடு தூரத்தில். எங்கேயோ சுற்றப்போவதாக உலவிய வதந்தியை யாரும் நம்பவில்லை. நேரம் நெருங்குதுடோய்! நடுநிசியில் எல்லா கப்பல்களும் பலே திட்டம் போட்டு, ஆங்காங்கே காவல் தெய்வங்களாக நின்றன, கப் சிப் கபர்தாராக.
  • 14th February 1940: நார்வேயின் ரோந்து கப்பலொன்று அல்ட்மார்க் கப்பலில் ஏறி, அவர்கள் தாங்கள் நிரபராதி எண்ணெய் கப்பல் என்று சொன்னதை, ‘சமத்தாக’ ஒப்புக்கொண்டு, விட்டு விட்டனர். காலம் அப்படி. இத்தனைக்கும், பிரிட்டன், அந்தக் கப்பலில் மாலுமி கைதிகள் இருக்கின்றனர் என்று சொன்னது, செவிடன் காதில் ஊதிய சங்கு. நங்கூரம் பாய்ச்சுகிறேன் என்று பாவ்லா காட்டி விட்டு ஓடப்பார்த்த அல்ட்மார்க் மீது மற்றுமொரு சோதனை: அதுவும் பாவ்லா! டென்ஷன்! அல்ட்மார்க் அல்டாப்பாக நடந்து கொண்டதால், நார்வே உதவ தயக்கம்.அதற்குள், இங்கிலாந்தின் போர்ட்ஸ்மத் கடல்படை தலைமைக்கு போர்க்குணம் கூடியது. யாரு தலைவர்? சர்ச்சில்.
   ஆணை: ‘அல்ட்மார்க் இருக்குமிடம், கிட்டத்தட்ட, இது. அவளை(கப்பல் பெண்பால்.)  கடலுக்குள் விரட்டு.  கப்பலில் ஏறி, நம்மாட்களை விடுதலை செய். ஓவர்.’
  • எங்கு பார்த்தாலும் கப்பல்கள். பிடித்து விசாரணை செய்ததில் ஒன்று கூட அல்ட்மார்க் அல்ல.
  • 15th February 1940: 0825: விமான சர்வே:பல கப்பல்கள் அங்குமிங்கும்;
  • 15th February 1940: 14 45: அல்ட்மார்க் நேசக்கப்பல்களை கண்டு விட்டது. அவை இட்ட ஆணைகளை கண்டு கொள்ளவில்லை. லண்டனில் காபினெட் மீட்டிங்; (இது தாங்க, சரியான பார்லிமெண்ட் கவர்மெண்ட். சர்ச்சில் படா அமைச்சர் தான். ஆனால், கேபினெட் தான் முடிவு எடுக்கும். நார்வேயின் நடுநிலை மாட்டிக்கொண்டிருக்கிறதே.)
  • 15th February 1940: 15 15: ‘இன்றபிட்’, ‘ஐவன்ஹோ’ என்ற எம்டர்கள் அல்ட்மார்க்கை நெருங்கிவிட்டனர். ‘இன்றபிட்’ ‘அஹோ வாரும் பிள்ளாய்’ என்றிட்ட கட்டளையை மீறியது, அல்ட்மார்க். ‘இன்றபிட்’ குண்டு வீசத்தொடங்கினாள். நார்வே கப்பல்கள் இடை மறித்தன. அல்ட்மார்க் ஓடி ஒளிந்தாள், ஜோஸிங்ஃபோர்ட் என்ற ஒரு பொந்தில். மூன்று நார்வே போர்க்கப்பல்கள் வந்து சேர்ந்தன, சால்ஜாப்பு சொல்லி அல்ட்மார்க்கை தப்ப விட. சர்ச்சில் திட்டவட்டமாக ஆணையிட்டார். நார்வேயின் கப்பல்களுடன் கறாராக பேசு. அவற்றை சுடவேண்டாம், முடிந்த வரை. ஆனால், சந்தர்ப்பம் யாதாயினும் அல்ட்மார்க்கில் ஏறி, கைதிகளை விடுவி.
  • 15th February 1940: 22 00: எம்டர் காஸ்ஸாக்கின் கேப்டன் வியான் கறாராகப்பேசியும், நார்வே கப்பல்கள் ஒத்துழைக்கவில்லை.
  • 15th February 1940: 23 12: அவர், ஒரு சிறு படையுடன், அல்ட்மார்க்கில் ஏற முயன்றார். அல்ட்மார்க் அலட்டிக்கொண்டது. சின்ன கலாட்டா. எம்டர் காஸ்ஸாக் கெலித்தது. ஆனால், அல்ட்மார்க் தரை தட்டியது. (புரியணும் என்றால், ஒரிசா பாலுவை கேளுங்கள்.) குடைந்து, குடைந்து, ஒரு குதிருக்குள் கூவினார்கள், ‘இங்க்லீஷ் ஆசாமிகள் இங்குண்டோ? என்று. 299 மாலுமிகள் அடைபட்டு கிடந்தனர். விடுவிக்கப்பட்டனர்.
  • 15th February 1940: 23 55: வாகை சூடிய எம்டர் காஸ்ஸாக் ஜாலியாக, ஊரை நோக்கி.
  • 16th February 1940: 00 00: ராயல் நேவியின் கப்பல் காஸ்ஸக் (HMS Cossack) எம்டரானாரே!
இன்னம்பூரான்
16 02 2012
Inline image 1


பி.கு: பி.பி.சி. வானொலி நிலையம் பொதுமக்களிடமிருந்து இரண்டாவது உலகயுத்தத்தை பற்றி பாமர கீர்த்திகள் வேண்டியது. 47 ஆயிரம் கீர்த்திகளும், 15 ஆயிரம் சித்திரங்களும் வந்தன. எம்டர் கீர்த்தி யான் வைத்த நாமகரணம் என்றாலும், கீழ்க்கண்ட குறிப்பு தரவேண்டும் என்ற வேண்டுகோளை மதிக்கிறேன்.:
உசாத்துணை:
The Altmark Incident By ateamwar:Background to story: 
Royal Navy
Article ID: 
A4507472
Contributed on: 
21 July 2005



Swarna Lakshmi Wed, Feb 15, 2012 at 6:45 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: "mintamil@googlegroups.com"
:)) very nice :)


From: Innamburan Innamburan <innamburan@gmail.com>
To: mintamil <minTamil@googlegroups.com>; thamizhvaasal <thamizhvaasal@googlegroups.com>
Cc: Innamburan Innamburan <innamburan@googlemail.com>
Sent: Thursday, 16 February 2012 12:04 AM
Subject: [MinTamil] அன்றொருநாள்: ஃபெப்ரவரி 16 ‘எம்டர்’

[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Feb 15, 2012 at 6:48 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
 அந்த ரேஞ்சுக்கு, ஒரு பிரிட்டீஷ் போர்க்கப்பல் ஆட்டிவைத்தது என்றால். அது ‘எம்டர்‘ தானே,திவாகர்காரு? என்ன சொல்றேள்? //

என்னத்தைச் சொல்றது!  ஒத்துக்க வேண்டியதுதான். அருமையான வரலாற்றுப் பகிர்வு. ஒரிசா பாலுவுக்கும், எம்டர் திவாகருக்கும் சமர்ப்பணம் பண்ணப்பட்ட பதிவுக்கு நன்றி.

2012/2/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 16
‘எம்டர்’
மருங்காபுதூர் முனிசிபாலிடியின் சேர்மன், ஆறுமுகம் சேர்வை. தற்குறி. அதனாலென்ன? ஊருக்கு பெரியமனுஷன். கமிஷனர், சுப்பையா பிள்ளை பி.ஏ.பி.எல்.யோக்கியஸ்தன். கொஞ்சம் அலட்டிக்குவார். அவரை கூப்பிட ஆள் அனுப்பிய சேர்வைகாரர் சொல்லினுப்பினார், ‘யாருப்பா, அங்கே? சேர்மர் கூப்டார்னு அந்த கமிஷனனை வரச்சொல்லு.’ அந்தமாதிரி எம்டனுக்கும் தண்ணி காட்றமாதிரி, அந்த ரேஞ்சுக்கு, ஒரு பிரிட்டீஷ் போர்க்கப்பல் ஆட்டிவைத்தது என்றால். அது ‘எம்டர்‘ தானே,திவாகர்காரு? என்ன சொல்றேள்?

பி.கு: பி.பி.சி. வானொலி நிலையம் பொதுமக்களிடமிருந்து இரண்டாவது உலகயுத்தத்தை பற்றி பாமர கீர்த்திகள் வேண்டியது. 47 ஆயிரம் கீர்த்திகளும், 15 ஆயிரம் சித்திரங்களும் வந்தன. எம்டர் கீர்த்தி யான் வைத்த நாமகரணம் என்றாலும், கீழ்க்கண்ட குறிப்பு தரவேண்டும் என்ற வேண்டுகோளை மதிக்கிறேன்.:
உசாத்துணை:
The Altmark Incident By ateamwar:Background to story: 
Royal Navy
Article ID: 
A4507472
Contributed on: 
21 July 2005




s.bala subramani B+ve Wed, Feb 15, 2012 at 6:50 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
என் அப்பா இரண்டாம் உலக போரில் கலந்து கொண்டவர் , போர் முடிந்தவுடன் காந்தி  மீதுள்ள பற்றால் வேலையை விட்டு விட்டு , இம்பெரியால் பாங்கில்சேர்ந்து அந்த பேங்க் பின்னாளில் பாரதி வங்கியாக  இருந்தாலும் , ராணுவ உளவு துறைக்காக பணி ஆற்றியவர் , 

அவர் இறந்த அன்று தான் எங்களுக்கு தெரியும் , விழுப்புரம் வீட்டிற்கு ராணுவம் வந்த போது முதலில் நாங்கள் பயந்து விட்டோம் 
அம்மா அப்பாவின் பொருள்களை முறை படி கொடுத்த போது என் அம்மாவை அனைவரும் வித்தியாசமாக பார்த்தார்கள் 

நாட்டின் மீது மிகுந்த பற்று வைத்து இருந்தார் 
அவர் சொல்லி கொடுத்த பழக்கம் இன்றும் தேசிய கீதம் ஒலித்தால் யாருக்கும் தெரியாமல் அமைதியாக இருக்கும் பழக்கம் உண்டு 

சென்னையில் மிகவும் கிண்டல் பண்ணினார்கள் நான் கல்லூரியில் படிக்கும் போது 

ராணுவத்தில் சேர ஆசைப்பட்டு  scout , ncc இல் இருந்தேன் ஆனால் கண்ணாடி காலை வாரி விட்டது 

அந்த ஆசையை இப்பொழுது கோஸ்ட் guard  கப்பலில் சென்று ஆற்றி கொண்டு இருக்கிறேன் 



   . நிறைய அனுபங்கள்

2012/2/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]




s.bala subramani B+ve Wed, Feb 15, 2012 at 6:53 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
எம்டன் முதலாம்  உலக  போர் 

என் தாத்தா குடும்பம் விழுப்புரம்  சென்று திரும்பி வந்தார்கள் 

ஜப்பான் காரி குண்டு 
அப்பொழுதும் விழுப்புரம் காரில் சென்று திரும்பி வந்தார்கள் 


2012/2/16 Geetha Sambasivam




Dhivakar Thu, Feb 16, 2012 at 4:42 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Another classic one from Innamburan Sir! Great one too.

There were three to four emden vessels in 20th century. Actually the emden which participated in 2nd world war was biggest warship from Germany (She did her duty only around European seas). The name Emden derived from the small port city in Germany which itself got named after the river Ems. But in India, that too in South the name has gained different meaning just because of the first SMS Emden created such a havoc in the minds of British and also to certain extent Indians too.

Anbudan
Dhivakar

2012/2/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]


[Quoted text hidden]

K R A Narasiah Thu, Feb 16, 2012 at 6:08 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இந்த இடுகையில் எனக்கு உவப்பூட்டும் இரு சங்கதிகள்.
1. அச்சிலீஸ் என்ற ஆங்கிலேயர்களின் கப்பல் தான் ஐ. என். எஸ் டெல்லி யாக புனர் ஜன்மம் எடுத்தது. 1959 -60 ல் நான் அதில் சீஃப் ஆக பணியாற்றினேன். கேப்டன் கிருஷ்ணன் தான் கமாண்டிங்க் ஆஃபீசர்.
இ959 டிசம்பர் 31 நள்ளிரவு: பொழுது புலர்ந்தால் 1961 - கிருஷ்ணன் அன்று நன்கு சோமபானம் அருந்திவிட்டுச் சரியாக் 12 மணீயளவில்” இப்போதிருந்து ஒரு ஐந்து நிமிஷங்களுக்கு நரசய்யாதான் இந்தக் கப்பலின் கேப்டன்” என்று public annaouncement system என்று பிரகடனம் விடுத்தார்!

2. கிராஃப்ஸ்பீ முழுகடித்த படம் திரையாக்கப்பட்டபோது, ஏடன் அருகில் ஐ. என். எஸ் டெல்லியை அச்சிலீஸ் போல கொடியேற்றி சினிமாக படம் எடுத்தார்கள்!

3. எம்டன் ட்ரெஸ்டன் என்ற இரு ஊர்கள் பெயரில் ஜெர்மன் கப்பல்கள் இருந்தன். மொத்தம் மூன்று எம்டன்கள். 

4. வ வே சு அய்யர் லண்டனில் லிங்கன் இன்னில் சேர்ந்திருந்தபோது அரவிந்தருடன் தொடர்பு உண்டெனக் கருதி வர் மீது அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்தது. அப்போது அவர் லண்டனிலிருந்து தப்பியோடி பிரான்ஸ் வழியாகப் பாண்டிச்சேரி அடைந்தார். அவரது கதை வரும் மெட்ராஸ் ம்யூசிங்குக்கு எழுதிஉயுள்ளேன். அது பின் வருமாறு:

V. Venkatesa Subramaniam Aiyar, (April 2, 1881 – June 3, 1925)  popularly known as Va Ve Su Aiyar was a close associate of Bharati. Aiyar, studied law and qualified as a pleader (junior lawyer)  from Madras University in 1902. After a stint in Tiruchi, practicing law, he moved to Rangoon in 1906. He worked there as a junior to a British Lawyer. He left for London in 1907 and enrolled in Lincoln's Inn to become a Barrister-at-Law. But he came in contact with V. D. Savarkar in London and started taking active part in Freedom movement, which resulted in an arrest warrant against Aiyar. Fearing arrest, he fled to Paris as a political exile.

From there, he sailed to Pondicherry through Italy. From Rome, Aiyar sent a copy of Dante's Divine Comedy  by post to Mandayam Srinivasachari in Pondy. Aiyar disguised himself as a bearded Muslim, landed in Srinivasachari's house asking if he received a copy of the book Divine Comedy. The name of the book was the password!

நரசய்யா
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Feb 16, 2012 at 6:55 AM
To: mintamil@googlegroups.com
Bcc: innamburan88
பின்னூட்டம் தந்துருளிய அன்பர்களுக்கு நன்றி. திரு.நரசய்யா சுவை கூட்டியிருக்கிறார். இந்த தொடரின் இலக்கே, இப்படி கொக்கிப் போட்டு இழுப்பதே. நான் 'எம்டரை' தேர்ந்தெடுத்தே, எப்படி பாமரகீர்த்திகள் தொகுக்கப்படுகின்றன. அவை எப்படி வரலாற்றை  சுவையும், தகவுலும் கூட்டி மேன்மை படுத்துகின்றன (என்ரிச்சிங்க்) என்பதை பகிர்ந்து கொள்ள. அந்த படத்தைத் தேடித்தேடிப் போட்டேன். ஒரு சந்தில் புகுந்து கொண்டு, ஆட்டம் போட்டது.அல்ட்மார்க்! விடாக்கொண்டர் சர்ச்சில்.
திரு வ.வெ.சு. ஐயரை பற்றிய தகவலை உபயோகப்படுத்த்திக் கொள்கிறேன், திரு.நரசய்யா. அவர் ஓரிடத்தில் தன்பெயரை வி.வி.சிங் என்று சொன்னதாகவும் படித்திருக்கிறேன்.

ஆமாம்! எம்டரை கண்டுகொண்டவர்கள், சேர்மரை 'அம்போ' என்று விட்டு விட்டீர்களே! இது நியாயமா? தர்மமா? 
இன்னம்பூரான்
2012/2/16 K R A Narasiah <narasiah267@gmail.com>
இந்த இடுகையில் எனக்கு உவப்பூட்டும் இரு சங்கதிகள்.


Dhivakar Thu, Feb 16, 2012 at 7:25 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
>>ஆமாம்! எம்டரை கண்டுகொண்டவர்கள், சேர்மரை 'அம்போ' என்று விட்டு விட்டீர்களே! இது நியாயமா? தர்மமா? 
இன்னம்பூரான்<<

உங்கள் பதிவு ஒரு இனிப்பு பாற்கடல். அது கடையப்படும்போது என்னென்ன தேவையோ அது சேர்வோரிடம் போய் சேர்கிறது.

2012/2/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
பின்னூட்டம் தந்துருளிய அன்பர்களுக்கு நன்றி. திரு.நரசய்யா சுவை கூட்டியிருக்கிறார். இந்த தொடரின் இலக்கே, இப்படி கொக்கிப் போட்டு இழுப்பதே. நான் 'எம்டரை' தேர்ந்தெடுத்தே, எப்படி பாமரகீர்த்திகள் தொகுக்கப்படுகின்றன. அவை எப்படி வரலாற்றை  சுவையும், தகவுலும் கூட்டி மேன்மை படுத்துகின்றன (என்ரிச்சிங்க்) என்பதை பகிர்ந்து கொள்ள. அந்த படத்தைத் தேடித்தேடிப் போட்டேன். ஒரு சந்தில் புகுந்து கொண்டு, ஆட்டம் போட்டது.அல்ட்மார்க்! விடாக்கொண்டர் சர்ச்சில்.
திரு வ.வெ.சு. ஐயரை பற்றிய தகவலை உபயோகப்படுத்த்திக் கொள்கிறேன், திரு.நரசய்யா. அவர் ஓரிடத்தில் தன்பெயரை வி.வி.சிங் என்று சொன்னதாகவும் படித்திருக்கிறேன்.



2012/2/16 K R A Narasiah
இந்த இடுகையில் எனக்கு உவப்பூட்டும் இரு சங்கதிகள்.



[Quoted text hidden]

s.bala subramani B+ve Thu, Feb 16, 2012 at 4:21 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
 sir thanks for the cheque of rs 3000 sent from your chennai contacts received at evening

which is highly necessary for me at this situation .

in two days time i can encash being my bank is IOB

really greatful to you sir

-----------------------------------------------------------------------------------------------------------------------------

when indians talkinga bout world war , its difficuly to talk without churchil and his famous churuttu

i remember my father used to sent to regularly  dindukal churuttu in welwet box from 1955 to 1982 to his London  friends

inspite of freedom fighting he was a fan of churchill,

becasue of my dad  i too

http://en.wikipedia.org/wiki/Winston_Churchill
------------------------------------------------------------------------------------------------
let my internet get fast will start writing in tamil
[Quoted text hidden]
--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Feb 16, 2012 at 5:31 PM
To: "s.bala subramani B+ve"
I am very happy to be of some humble assistance to you, Balu. You are right. There is always the child in me. I sent 2000/- and the child in me wanted to surprise you by adding the 1000/- My best wishes to your family members.
All the best,
Innamburan

2012/2/16 s.bala subramani B+ve <sunkenland@gmail.com>
[Quoted text hidden]

s.bala subramani B+ve Fri, Feb 17, 2012 at 2:52 AM
To: Innamburan Innamburan
thanks sir. let me use for the right cause

No comments:

Post a Comment