Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: ஜனவரி: 5 கூண்டோடு பூலோக கைலாசம்




அன்றொரு நாள்: ஜனவரி: 5 கூண்டோடு பூலோக கைலாசம்
16 messages

Innamburan Innamburan Thu, Jan 5, 2012 at 1:33 PM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88 , coral shree , anantha narayanan nagarajan , Soumya Srinivasan
அன்றொரு நாள்: ஜனவரி: 5
கூண்டோடு பூலோக கைலாசம்

ஒரு பிரச்னை. இன்று எதைப்பற்றி எழுதுவது? ~ விஞ்ஞானம், ஆன்மீகம், இலக்கியம், கிரிக்கெட், சமூக நாற்று நடப்பட்ட வரலாறு. இறுதியில் சொல்லப்பட்டது தான் கெலித்தது. ஜனவரி 5, 1985 அன்று ஊடகங்களில் கசிந்த செய்தி ஒன்று உலகையே வியப்பில் ஆழ்த்தியது. பூகோள எல்லைகளை கடந்த தேசாபிமானம், இனப்பற்று, புலன் பெயர்தல், திறன்மிகு திட்டம், அதை நிறைவேற்றிய சாமர்த்தியம், அடுத்த கட்டம் எல்லாமே , அது வரை வரலாறு காணாத அச்சாணி நிகழ்வுகள்.

உலகெங்கும் பரவி வாழும் யூதர்களின் இனம் பழமை வாய்ந்தது. ஆற்றலால் முக்கியத்துவமும், ஒதுங்கி/ ஒதுக்கப்பட்டு வாழ்வதால், பலவீனமும்  வாய்த்த மெனாரிட்டி என்று அன்றொரு நாள்: நவம்பர் 29: இதழில் ‘தேசமில்லா நேசம்!’ என்ற உப தலைப்புடன், ‘...பல நூற்றாண்டுகளாக, ‘இல்லாத நாட்டின்’ மீது அபார பற்று. நவம்பர் ...பால்ஃபோர் பிரகடனம் 1917ல் பிரிட்டன் யூதர் நாடு இது என்று சொன்னதும், அதே சமயம் அரேபியர்களுடன் அவர்களின் உரிமைக்குரலுக்கு சம்மதம் தெரிவித்து மடலாடியது...நவம்பர் 29, 1947ல் ஐ,நா.பொது மன்றம் இயற்றிய தீர்மானம் 181னின் வருகையாக,‘எரெஸ் இஸ்ரேல்’ (The Land of Israel:ஹூப்ரூ: אֶרֶץ יִשְׂרָאֵל‎‎ ʼÉreṣ Yiśrāʼēl, Eretz Yisrael) எனப்படும் புதியதொரு நாடு உயிர்ப்பிக்கப்பட்டது...’ என்று படித்திருப்பீர்கள்.. யூத இனத்து வரலாறு மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே சிறப்புடன் கோலோச்சியது என்றாலும். அவர்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்தது 1947ல். இன்று வரை பாலஸ்தீனியர்களுடன் தீராத பிரச்னை. யூதர்கள் பட்ட கொடுமையை பற்றியும், உடும்பு பிடி தேசாபிமானத்துடன் இணைந்த இனப்பற்று பற்றியும், அசகாய வேலைகளில் நிகரற்றவர்கள் என்பதையும் அன்றொருநாள்: ஆகஸ்ட் 04:I, ஜூலை 4, ஸெப்டம்பர் 5 இழைகளில் நீங்கள் கவனித்து இருக்கலாம். 
எத்தியோப்பியாவும் பழமையான சமுதாயம். ஹைல் சலீஷி என்ற எத்தியோப்பிய மன்னர் சென்னை வந்தது நினைவில் இருக்கிறது. கவர்னர் ஶ்ரீ.ஶ்ரீ பிரகாசாவின் மகன் இறந்துவிட்டதால், அவர் சென்னையில் இல்லை. எதிர்க்கட்சி தலைவரான ராஜாஜியை, ஹைல் சலீஷியை சம்பிரதாயமாக வரவேற்க நேரு பணித்தார். அவரும் மனமுவந்து அதை செய்தார். இது உபகதை. அந்த நாட்டில் நடந்த புரட்சி ஒன்றில் ஹெல் சலீஷி  பதவி இழந்தார். அவரை வீழ்த்தி, சர்வாதிகாரியான கர்னல் மென்ஜிஸ்டு ஹைல் மரியம் சிறுபான்மை யூத இனத்தினரை கொடுமைப்படுத்தினார்.  அவர்கள் சமயத்திற்கும், மொழிக்கும் தடை விதித்தார். இத்தனைக்கும், எத்தியோப்பிய யூதர்களின் சாலமன் அரசர் வம்சத்தினர் என்று சொல்லப்படுகிறது. நாட்டில் கொடும் பஞ்சம். பஞ்சப்பரதேசிகளான ஆயிரக்கணக்கான யூதர்கள், கொடுமையை தாங்கமுடியாமல், பசியும், பட்டினியாக, கால் நடையாகவே, சூடான் நாட்டுக்கு புலன் பெயர்ந்தனர், ஸெப்டம்பர் 1984ல். அவர்களில் கிட்டத்தட்ட நாலாயிரம் பேர் வழியிலேயே இறந்தும் போயினர். (நம்மில் சிலருக்கு, பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு கால் நடையாக வந்தவர்களை பற்றி தெரிந்து இருக்கலாம்.) இஸ்லாமிய ஆளுமை நிறைந்த சூடானுடன் எப்படியோ ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, நவம்பர் 21, 1984 அன்றிலிருந்து ஜனவரி 4, 1985 வரை இருந்த குறுகிய காலத்திற்குள் எட்டாயிரம் எத்தியோப்பிய யூதர்களை, விமானம் மூலம், ரகசியமாக இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றனர். திட்டத்தின் பெயர் ‘ஆபரேஷன் மோசஸ்’. செய்திக்கசிவு தற்காலிகமாகத்தான் தடை செய்துள்ளது; மறுபடியும் தொடர்வோம்
என்றார், இஸ்ரேலிய பிரதமர் ஷைமன் பெரஸ். விடாக்கொண்டனாக. அடுத்த வருடமே ஆபரேஷன் ஷீபா. 1989ல் எத்தியோப்பியாவுடன் வெளிநாட்டு உறவை பலப்படுத்திக்கொண்டு, மே 25, 1991 அன்று தொடங்கி 36 மணி நேரத்துக்குள் 14, 324 யூத அகதிகளை 34 விமானங்களில் அழைத்துச்சென்றது, இன்று வரை மாபெரும் சாதனையாக அறியப்படுகிறது.
இஸ்ரேலின் நண்பனான அமெரிக்காவும் ஆபரேஷன் ஜோஷுவா என்ற திட்டப்படி பல எத்தியோப்பிய யூதர்களை காப்பாற்றியது. இன்னும் 10,000 ~15,000 யூதர்கள் எத்தியோப்பியாவில் வாடுவதாக 2004ல் செய்தி. நிறம் இருக்கிறதே, அது பாடாய் படுத்தும்.  செல்வ நிலையும் அப்படித்தான். ஏழைகளும், கறுப்பர்களும் ஆன எத்தியோப்பிய யூதர்கள், இனபேதமின்றி கலப்பதில் சிக்கல்கள் இருந்தாலும், அவர்களை பெருமளவு ராணுவத்தில் எடுத்துக்கொண்டது, அந்த பிரச்னையை இஸ்ரேல் தணித்துள்ளது.
ஒரு கேள்வி: இந்தியாவில் பல சமூக பிரிவினை சிக்கல்கள் தென்படுகின்றன. 19வது வயதில் கட்டாய ராணுவச்சேவை இருந்திருந்தால், அவை தணிந்து இருக்குமா? 
ஒரு வேண்டுகோள்: கேள்விக்கு பதில் சொல்லும்போது, கட்டுரையை பற்றியும் விமர்சனம் இருக்கவேண்டும், திசை மாறாமல் இருக்க.
நன்றி,
இன்னம்பூரான்
 05 01 2012
Jewish+Ethiopian+Immigrants+Reunite+Families+0M0IXYbR4j7l.jpg

உசாத்துணை:


Geetha Sambasivam Thu, Jan 5, 2012 at 1:43 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
மிகவும் கனமான விஷயம். அதிலும் அதிகம் delicate ஆனதும் கூட;  பல நுணுக்கங்களை உள்ளடக்கியது.  யூதர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட விஷயம் குறித்த ஒரு திரைப்படத்தைப் பார்த்தே பல நாட்கள் மனம் வருந்தித் தவித்திருக்கிறேன்.  புலம் பெயர்தல் என்பது கொடுமையான ஒன்று.  உலகில் பல நாடுகளில் அரங்கேறி இருக்கிறது; அரங்கேறியும் வருகிறது. 

இந்தியாவில் ராணுவச் சேவையைக் கட்டாயமாக்கி இருக்கலாம் என்பதே என் கருத்தும்.  தேசிய ஒருமைப்பாடு கொஞ்சம் வளர்ந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றும். முக்கியமாய்த் தமிழ்நாட்டுக்காரர்களுக்கு ராணுவச் சேவை குறித்த பூரண அறிவு கொஞ்சம் கம்மி என்றே நினைக்கிறேன்.

இழையை மாற்றும்படியாக எதுவும் எழுதவில்லை என எண்ணுகிறேன்.

2012/1/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி: 5
கூண்டோடு பூலோக கைலாசம்




கி.காளைராசன்Thu, Jan 5, 2012 at 3:36 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

On 1/5/12, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
> அன்றொரு நாள்: ஜனவரி: 5
அன்றும் வைகுண்ட ஏகாதசி தானோ?

> கூண்டோடு பூலோக கைலாசம்
> கிட்டத்தட்ட நாலாயிரம் பேர் வழியிலேயே இறந்தும் போயினர். (நம்மில் சிலருக்கு,
> பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு கால் நடையாக வந்தவர்களை பற்றி தெரிந்து
> இருக்கலாம்.)
எனது தந்தையார் அவரது தாயாரை அழைத்துக்கொண்டு நடந்தே வந்தவர்.  எவ்வளவு
கதைகள் சொல்லியுள்ளார்.  தந்தையார் சொல்லியகதை எல்லாம் காளைராசன் எழுதியே
ஆக வேண்டும்.

> ஒரு கேள்வி: இந்தியாவில் பல சமூக பிரிவினை சிக்கல்கள் தென்படுகின்றன. 19வது
> வயதில் கட்டாய ராணுவச்சேவை இருந்திருந்தால், அவை தணிந்து இருக்குமா?
நிச்சயமாக.
எல்லோருக்கும் உடனே செய்யமுடியாது என்றாலும்,
தேர்தலில் நிற்பவர் குறைந்தது ஐந்தாண்டுகளாவது இராணவத்தில்
பணியாற்றியவராக இருக்கவேண்டும் எனச் சட்டம் கொண்டு வரலாம்.
படிப்படியாக அனைவருக்கும் இதை அமலாக்கம் செய்யலாம்.

தேசப்பற்று அதிகமாகும்,
மக்கள் மொழியால்,மதத்தால் வேறுபடமாட்டார்கள்.
இப்போது ‘கிரிக்கெட்‘ இந்த வேலையை நன்கு செய்கிறது,

அன்பன்
கி.காளைராசன்

--

Innamburan Innamburan Thu, Jan 5, 2012 at 5:38 PM
To: mintamil@googlegroups.com

எனது தந்தையார் அவரது தாயாரை அழைத்துக்கொண்டு நடந்தே வந்தவர்.  எவ்வளவு
கதைகள் சொல்லியுள்ளார்.  தந்தையார் சொல்லியகதை எல்லாம் காளைராசன் எழுதியே
ஆக வேண்டும்.

~ ஏன் இத்தனை நாட்களாக எழுதவில்லை? சென்னை வந்தபோது என்னிடம் ஏன் சொல்லவில்லை. 

'பாமரகீர்த்தி ~இன்னம்பூரான்' என்ற இழையிலோ அல்லது பாமரகீர்த்தி - காளை ராஜன் என்ற புதியழையிலோ, உடனே துவக்கவும். அதில் '
பாமரகீர்த்தி ~இன்னம்பூரான்' என்ற் சொற்தொடரையிட்டால், தொகுப்பது எளிது.
இன்ன்ம்பூரான்

Geetha Sambasivam Thu, Jan 5, 2012 at 7:37 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
காளைராஜன் அவர்களே,
எவ்வளவு பெரிய விஷயத்தைச் சர்வ சாதாரணமாய்ச் சொல்லிட்டீங்க?  உடனே உங்க அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு எனக்கு!  எப்போவானும் முடியுமானு பார்க்கிறேன். உடனடியாக அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கிடைத்தற்கரிய சந்தர்ப்பம், கிடைத்தற்கரிய விஷயம்.

2012/1/5 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

O
எனது தந்தையார் அவரது தாயாரை அழைத்துக்கொண்டு நடந்தே வந்தவர்.  எவ்வளவு
கதைகள் சொல்லியுள்ளார்.  தந்தையார் சொல்லியகதை எல்லாம் காளைராசன் எழுதியே
ஆக வேண்டும்.

> ஒரு கேள்வி: இந்தியாவில் பல சமூக பிரிவினை சிக்கல்கள் தென்படுகின்றன. 19வது
> வயதில் கட்டாய ராணுவச்சேவை இருந்திருந்தால், அவை தணிந்து இருக்குமா?
நிச்சயமாக.
எல்லோருக்கும் உடனே செய்யமுடியாது என்றாலும்,
தேர்தலில் நிற்பவர் குறைந்தது ஐந்தாண்டுகளாவது இராணவத்தில்
பணியாற்றியவராக இருக்கவேண்டும் எனச் சட்டம் கொண்டு வரலாம்.
படிப்படியாக அனைவருக்கும் இதை அமலாக்கம் செய்யலாம்.

தேசப்பற்று அதிகமாகும்,
மக்கள் மொழியால்,மதத்தால் வேறுபடமாட்டார்கள்.
இப்போது ‘கிரிக்கெட்‘ இந்த வேலையை நன்கு செய்கிறது,

அன்பன்
கி.காளைராசன்

[Quoted text hidden]

கி.காளைராசன் Sat, Jan 7, 2012 at 12:01 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.


~ ஏன் இத்தனை நாட்களாக எழுதவில்லை? சென்னை வந்தபோது என்னிடம் ஏன் சொல்லவில்லை. 

ஐயா, நான் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்.  இது தங்களைப் போன்ற பெரியவர்களுக்குப் பெரிய விஷயமானது என்று அறியவில்லை.  எனது தந்தையார், அவருடைய வாழ்க்கை, மற்றும் கள்ளர் சமுதாயத்தினரின் வாழ்க்கை இவற்றை ‘அரணை‘க் கதையாகச் செல்லுவார்.  எல்லாவற்றையும், 
 
'பாமரகீர்த்தி ~இன்னம்பூரான்' என்ற இழையில்
அவசியம் எழுதுகிறேன் ஐயா.
அப்பத்தா படமும், தாத்தா படமும் என்னிடம் உள்ளன.
பர்மாவிற்கு எழுதிய கடிதங்கள்,
பர்மாவிலிருந்து வந்த கடிதங்கள் எல்லாம் அண்ணனிடம் பத்திரமாக உள்ளன.  அவற்றையும் வெளியிடுகிறேன் ஐயா,

தங்களது அன்பிற்கு அடியேன்

அன்பன்
கி.காளைராசன்

[Quoted text hidden]

கி.காளைராசன் Sat, Jan 7, 2012 at 12:11 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அம்மையார் கீதா அவர்களுக்கு வணக்கம்.

2012/1/6 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
உடனே உங்க அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு எனக்கு!  எப்போவானும் முடியுமானு பார்க்கிறேன்.

இரண்டாம் உலகப்போரின் போது அப்பா, அப்பத்தாவைக் கூட்டிக்கிட்டு நடந்தே இந்தியா வந்து சேர்ந்தவர்.  
எனது அப்பத்தா தான் “பர்மா ரிட்டர்ன்“.

எனது அம்மா தமிழகம்தான்.
மதுரை வந்தால் சொல்லுங்கள்,
நான் அம்மா அவர்களை அழைத்து வருகிறேன்.
அல்லது திருப்பூவணம் வாங்க,
மதுரை அருள்மிகு சொக்கநாதன் செய்து கொடுத்த சொக்கத் தங்கத்தில் செய்த திருப்பூவணம் உற்சமூர்த்தியை வழிபட்டுச் செல்லலாம்.
தாங்கள் வரும்போது அம்மை அவர்களையும் அழைத்து வருகிறேன்.

தங்களது அன்பிற்கு அடியேன்.

அன்பன்
கி.காளைராசன்

[Quoted text hidden]

rajam Sat, Jan 7, 2012 at 1:51 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: "\"கி.காளைராசன் krishnan\""
"பர்மா ரிட்டர்ன்ட் " அப்பத்தா படத்தைப் பார்க்க அடியேனுக்கு மிகவும் ஆவல்! அவர்களின் + தம்பி காளையின் தந்தையின் ... இரண்டுபேரின் காலின் வலிமைக்கும் மன உறுதிக்கும் வணக்கம் செலுத்துகிறேன். 
அன்புடன்,
ராஜம்
[Quoted text hidden]
[Quoted text hidden]

Tthamizth Tthenee Sat, Jan 7, 2012 at 3:21 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: "\"கி.காளைராசன் krishnan\""
நீங்கள் அவர்களைப் பற்றி எழுதினாலே  நம் பாரம்பரியத்தின் வலிமை
மக்களுக்குப் புரியும்

விவரமாக எழுதுங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/1/6 rajam <rajam@earthlink.net>:
[Quoted text hidden]

Santhanam Swaminathan Sat, Jan 7, 2012 at 5:18 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: "mintamil@googlegroups.com"
Cc: "கி.காளைராசன் krishnan"
Dear Kalairajan

Can you please send me more details about the golden statue at Tiruppuvanam.
I have never heard about the golden state of Tiruppuvanam.I had been to the temple 40 years ago.
I am going to write the sixth part of my article INDIA.....................THE RICHEST COUNTRY IN THE WORLD.
The first five parts are already in my blogs.

I am waiting for more information about KASI(Benares) ANNAPURNESWARY 
which is made up of gold and kept in the vault of RESERVE BANK OF INDIA.
It is displayed to the general public for three days during DEEEPAVALI.

No book ,No man in the world gives any information (except what I have said above) about this valuable statue.
Please send me any information about golden statues anywhere in India with the WEIGHT,HEIGHT,VALUE etc.

காளைராசன் அவர்களுக்கு
 உலகிலேயே பெரிய பணக்கார நாடு இந்தியாதான் என்று ஐந்து கட்டுரைகள் எழுதிவிட்டேன்.ஆறாவது பகுதி தயார்.ஆனால் காசியிலுள்ள தங்க அன்னபூர்ணேஸ்வரி தங்கச் சிலை குறித்து நான் மேலே எழுதியுள்ள இரண்டு விஷயங்களைத் தவிர வேறு ஒன்றும் யாருக்கும் தெரியவில்லை.அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். திருப்பூவனத்தில் சொக்கத் தங்க சொக்கநாதர் இருந்தால் அதன் எடை,உயரம்,மதிப்பு,காலம் ஆகியன குறித்து எனக்கு எழுதுங்கள்.நன்றி. மதுரை தொடர்பான எல்லா (தங்க) விஷயங்களையும் ஏற்கனவே எழுதிவிட்டேன். காண்க :THE WONDER THAT IS MADURAI MEENAKSHI TEMPLE in my blogs.
Swami
020 8904 2879
07951 370 697



From: rajam
To: mintamil@googlegroups.com
Cc: கி.காளைராசன் krishnan <kalairajan26@gmail.com>
Sent: Saturday, January 7, 2012 1:51 AM
Subject: Re: [MinTamil] அன்றொரு நாள்: ஜனவரி: 5 கூண்டோடு பூலோக கைலாசம்
[Quoted text hidden]
[Quoted text hidden]

DEV RAJ Sat, Jan 7, 2012 at 5:27 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
திருப்பூவணம் சொக்கநாதர் -

http://www.google.co.in/imgres?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&um=1&hl=en&sa=N&biw=1467&bih=691&tbm=isch&tbnid=iyTYvowzOEjm4M:&imgrefurl=http://veeluthukal.blogspot.com/2010/11/blog-post_12.html&docid=mE5B0sOcIIY7hM&imgurl=http://1.bp.blogspot.com/_pG-7cF7mbDA/TNqx7wtwMoI/AAAAAAAAAO4/Ar5-Kc_WYUQ/s1600/SDC11841.JPG&w=1600&h=1200&ei=CtYHT8nAHMbprAea9dXVDw&zoom=1&iact=rc&dur=839&sig=113650930190823651478&page=1&tbnh=155&tbnw=188&start=0&ndsp=20&ved=1t:429,r:9,s:0&tx=126&ty=108


http://veeluthukal.blogspot.com/2010/11/blog-post_12.html


தேவ்


Santhanam Swaminathan Sat, Jan 7, 2012 at 5:41 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: "mintamil@googlegroups.com"
Dear Dev
Thanks for quick action.
Still I will wait for the WEIGHT,HEIGHT,VALUE,AGE of the TIRUPPUVANAM Sokkanathar.

Is there anyway you can get me some information about Kasi Annapurna?
Myself and my brother have gone through several books published in the past fifty years or so.
Only two facts are available
1.It is kept in the vault of Reserve Bank of India
2.It is displayed for three days during Deepavali.

I want to know the value,weight,height etc.
Any help in this matter is greatly appreciated.
 
Swami
020 8904 2879
07951 370 697






கி.காளைராசன் Sat, Jan 7, 2012 at 6:19 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: rajam
Cc: mintamil@googlegroups.com
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அக்கா அவர்களுக்கு வணக்கம்.

2012/1/7 rajam
"பர்மா ரிட்டர்ன்ட் " அப்பத்தா படத்தைப் பார்க்க அடியேனுக்கு மிகவும் ஆவல்!
வீட்டில் பூசையறையில் இருக்கிறது.  ஒருநாள் எடுத்து ஸ்கேன் செய்து போடுகிறேன் அக்கா.

அவர்களின் + தம்பி காளையின் தந்தையின் ... இரண்டுபேரின் காலின் வலிமைக்கும் மன உறுதிக்கும் வணக்கம் செலுத்துகிறேன். 
நானும் வணங்கிக் கொள்கிறேன்.

இல்லையென்று சொல்லாத முகராசி
எட்டுப்பிள்ளைகள் பெற்றெடுத்த மகராசி.
எட்டாவதாகப் பிறந்தவர் என் அப்பா.
என் அப்பா பிறக்கும்போது மூத்தவருக்கு (மூத்தபெரியப்பாவுக்கு)த் திருமணம் ஆகியிருந்துள்ளது.

கண்னெதிரெ தன்பிள்ளையை(எனது இரண்டாவது பெரியப்பாவை)ச் சப்பான்காரன் துப்பாக்கியால் சுட்டதைப் பார்த்ததிலிருந்து சற்று புத்திசுவாதினமாகி விட்டது.  இந்தியாவிற்கு வந்தபிறகும்,  தன்பிள்ளைகள் பர்மாவில் எப்படி வாழ்கின்றார்களோ? என்ற கவலையிலேயே காலத்தை கழித்துள்ளார்.
விரைவில் விரிவாக எழுதுகிறேன் அக்கா.

அன்புடன் 
தம்பி
காளை

[Quoted text hidden]

கி.காளைராசன் Sat, Jan 7, 2012 at 6:23 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: Tthamizth Tthenee
Cc: mintamil@googlegroups.com
ஐயா தமிழ்த்தேனி அவர்களுக்கு வணக்கம்.

2012/1/7 Tthamizth Tthenee
நீங்கள் அவர்களைப் பற்றி எழுதினாலே  நம் பாரம்பரியத்தின் வலிமை
மக்களுக்குப் புரியும்
நிச்சயமாக எழுதுகிறேன் ஐயா, 

விவரமாக எழுதுங்கள்
ஐயா, எல்லாவற்றையும் கதையாகக் கேட்டதனால், வருடங்கள் ஏதும் இருக்காது.  ஆனால் நிகழ்வுகள் அனைத்தும் இருக்கும்.
நான் கேட்ட அனைத்துக் கதைகளையும் ‘இ‘னா அவர்களின் விருப்பப்படியும் தங்களது விருப்பப்படியும் விரைவில் எழுதிகிறேன் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

[Quoted text hidden]

கி.காளைராசன் Sat, Jan 7, 2012 at 7:32 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா, வணக்கம்

இழையின் தலைப்பிலிருந்து மாறாதிருக்கக் கருதி
திருப்பூவணம் தொடர்பான எனது கட்டுரையைத் 
தனியே இணைத்துத் தங்களுக்கு அனுப்பிவைத்துள்ளேன் ஐயா,.

அன்பன்
கி.காளைராசன்


-- 
[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Jan 7, 2012 at 10:00 AM
To: kalairajan krishnan
As my internet connection is lost, I mail this from the Library. Yours is a treasure. May be you can send some input in a private mail to me. I can, then, advise, the right approach, as one has to be careful, while writing on persons, with us now. I look forward to your gathering all the material, first. Then. I can give you, a Mind Map. Please mail your telephone number. I shall ring you up.
All the best,
Innamburan
2012/1/7 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.


 

No comments:

Post a Comment