Friday, March 8, 2013

அன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என உணர்ந்து,மிக்கோய், இதைப் புறமறிப் பாராய்!.."




அன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என உணர்ந்து,மிக்கோய், இதைப் புறமறிப் பாராய்!.."
4 messages

Innamburan Innamburan Wed, Nov 23, 2011 at 6:40 PM
To: mintamil

அன்றொரு நாள்: நவம்பர் 23
“..மக்கள் யாக்கை இது, என உணர்ந்து,மிக்கோய், இதைப் புறமறிப் பாராய்!.."
~ மணிமேகலையில் சுதமதி
சுதமதி உதயகுமரனுக்கு வழங்கிய அறிவுரையை, மில்டன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்துக்கு வழங்கிய அறிவுரையுடன் ஒப்புமை செய்ய, முனைவர் ராஜத்தின் நேற்றைய மணிமேகலை தொடர் உபயமளித்தது. நன்றி.
“சிறந்த நூல் என்றால், அதுவே ஜீவனின் இரக்ஷண்ய யாத்திரீகம் என்க. அதுவே இம்மைக்கும், மறுமைக்கும் ஆதாரஸ்ருதி.’ 
~ ந்யூயார்க் நூலகத்தில்   மில்டனின் Areopagitica என்ற நூலிலிருந்து மேற்கோள்.
(ஆங்லிலத்தில் bloodstream என்ற சொல்லை இரக்ஷண்ய யாத்திரீகம் என்று தமிழில் எழுதியதற்கு பொறுப்பு எனது.)

கருத்து, சிந்தனை, எண்ணங்கள், ஆற்றல், படைப்பு, வெளிப்பாடு ஆகியவை, வாய்மொழியாகவோ, எழுத்து, சித்திரம், கலை மூலமாக நிகழ்வதை ராஜாங்கமும், அவர்களின் நிழல் எஜமானர்களும் வரவேற்காமல் போகலாம். தடை செய்ய நேரலாம். 
இன்றைய இந்திய அரசியல் சூழ்நிலையில், 
மக்களின் பிரிதிநிதிகளில் பலர் ஏகோபித்தவகையில் பெருத்த ஏமாற்றம் அளித்து வரும் காலகட்டத்தில், 
இதழியல், தெனாலிராமன் குதிரை போல, இரண்டடி முன் சென்று நான்கு அடி பின்வாங்குவதை, நோக்குங்கால்,   
இங்கிலாந்தில் இதழியலையும் நூல்களையும் கடுமையாகக் கட்டிப்போட்ட 1643ம் வருட இதழியல் லைசன்ஸிங்க் சட்டத்தைத் தளர்த்தக்கோரி, பிரபல கவிஞர் ஜன் மில்டன், நாடாளுமன்றத்துக்கு நவம்பர் 23, 1644 அன்று விடுத்த மடல், இறவா வரம் பெற்றது எனலாம். அமெரிக்க அரசியல் சாஸனத்தின் உரிமை பட்டியலின்/ இந்திய அரசியல் சாஸனத்தின் அடிப்படை உரிமைகளின் அஸ்திவாரம் எனலாம். அந்த மடலின் பெயர் தான் Areopagitica. அந்த நூலின் முகப்பில் ஒரு பொன்மொழி:
‘உகந்த அறிவுரையை மக்களுக்கு அளிப்போருக்கு புகழும், இயலாமையால் அமைதி காப்போருக்கு நிம்மதியும் கிடைக்கும் வகையில் பேச்சுரிமை அமையவேண்டும். இல்லையெனில் சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதற்கு மேலான நியாயமுண்டோ?’ 
யூரிபிடீஸ்: கிரேக்க  தத்துவ ஞானி 
கிரேக்க/ரோமானிய சமுதாயங்களில் இல்லாத மட்டுறுத்தல் ஏன் என்பது அவரது கேள்வி. அதனுடைய பின்னணி: விவாகரத்து பற்றிய மில்டனின் முற்போக்குக் கருத்துக்கள் தடை செய்யப்பட்டதே. இந்த மடலிலிருந்து கவிஞரும் சொல்லாட்சி மன்னரும் ஆன மில்டன் ஒரு அரசியல் பேச்சாளரும் என்று தெரிகிறது. நாடாளுமன்றம் அவருடைய மடலை மதிக்கவில்லை. அவர் ஏற்கனவே அதை வம்புக்கிழுத்தவர் என்பதால் இருக்கலாம். என்ன தான் விவிலியத்திலிருந்து மேற்கோள்கள் கொடுத்த வண்னம் இருந்தாலும், மில்டன் பத்தாம்பசலி சம்பிரதாயத்தை ஒதுக்கியவர் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த காலத்தில் மடலாடும் போது திசைமாற்றும் தொட்டில் பழக்கம் இருப்பது போல, அந்த காலத்தில் தலையை சுற்றி தான் மூக்கை தொடுவார்கள். ஜவ்வு மிட்டாயாக இழுத்து, அனுமார் வாலாக நீட்டி, பட்டி மன்றமாக முழங்கி தான் எழுதுவார்கள். அலுத்து போகும் வரை சொல் ஆடி வரும். எனவே, உங்கள் சுகானுபவத்தை முன்னிட்டு, இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
23 11 2011
n_eragny.jpg

உசாத்துணை:


Geetha Sambasivam Wed, Nov 23, 2011 at 8:20 PM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
புதிய செய்திகள் ஐயா.  பகிர்வுக்கு நன்றி.

2011/11/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 23
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
23 11 2011


உசாத்துணை:

Seethaalakshmi Subramanian Wed, Nov 23, 2011 at 8:41 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளத்தரட்டும்
எத்தனை பேர்களால் இப்படி செய்திகளைப் படித்து, படித்த பின்னரும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அரிய தகவல்களைத் தருகின்றீர்கள்.தங்கை உறவுக்கு மேலாக நானும் வாசகி என்ற முறையில் வாழ்த்துகின்றேன். 
கன்பூசியஸ்  தத்துவங்களை இரு நாள் குறிப்பிடுங்கள்
அன்புத் தங்கை
[Quoted text hidden]
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Nov 23, 2011 at 10:56 PM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
நன்றி இருவருக்கும். ஒரு சமாச்சாரம் கவனித்தீர்களோ? ஒவ்வொரு இழையிலும் வரலாறு  இந்தியாவுக்கு/தமிழ் நாட்டுக்கு/ தமிழகத்துக்கு சேதி சொல்லுது; எச்சரிக்குது; ஆராய்ச்சி மணி அடிக்குது. சங்கு ஊதுது. பட்டாசும் வெடிக்கும். கன்பூசியஸ் பற்றி எழுதுகிறேன், சீதா. 50 வருஷம் முன்னாலே Everyman Library Seriesலெ சீன தத்துவ ஞானிகள் என்ற நூல் வாங்கினேன். Some one has taken it in Chennai. மனசுலெ ஆயிடுத்து இல்லையா. எழுதுகிறேன்.
நன்றி,
இன்னம்பூரான்
2011/11/23 Seethaalakshmi Subramanian <seethaalakshmi@gmail.com>
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளத்தரட்டும்
எத்தனை பேர்களால் இப்படி செய்திகளைப் படித்து, படித்த பின்னரும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அரிய தகவல்களைத் தருகின்றீர்கள்.தங்கை உறவுக்கு மேலாக நானும் வாசகி என்ற முறையில் வாழ்த்துகின்றேன். 
கன்பூசியஸ்  தத்துவங்களை இரு நாள் குறிப்பிடுங்கள்
அன்புத் தங்கை


2011/11/23 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
புதிய செய்திகள் ஐயா.  பகிர்வுக்கு நன்றி.

2011/11/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 23
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
23 11 2011

அன்றொரு நாள்: நவம்பர் 19:பொன்மொழி இணைப்பில்.


அன்றொரு நாள்: நவம்பர் 19:பொன்மொழி இணைப்பில்.
33 messages

Innamburan Innamburan Sun, Nov 20, 2011 at 5:38 PM
To: mintamil , thamizhvaasal


அன்றொரு நாள்: நவம்பர் 20
பொன்மொழி இணைப்பில்.

“சாந்தி நிலவவேண்டும் என்று வாழ்த்துக்கூறுவது எமது மரபு. எமது உணர்ச்சிகளையும், அபிலாஷைகளையும் அது பிரதிபலிக்கிறது. இது எமது மனோவாக்கு.”
~நோபல் பரிசு விழாவில் எகிப்திய அதிபர் அன்வர்-எல்-சாதத்: 1978
“அதிபர் அன்வர்-எல்-சாதத் அவர்கள் ஒரு வீரனாக போருக்குத் தலைமை தாங்கினார்; எனினும், அசாத்திய தைரியத்துடன் அமைதி நாடினார். ஜன்மவைரிகளான எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டி, முதலடி எடுத்து வைத்து, உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார்., அவர் இன்று நம்மிடையில் இல்லையெனினும், அவருடைய மனிதநேயமும், பொறுப்புணர்ச்சியும் நமக்கு மார்க்கபந்துக்கள். மென்மையான போக்கு உடைய மூதறிஞர் அன்வர்-எல்-சாதத் அவர்களை என்றுமே ஒரு கதாநாயகனாக அமெரிக்க மக்கள் போற்றுவர்.”
~அமெரிக்க அதிபரின் சுதந்திர மெடல் விழா:26 03 1984: விருது மொழி: 
மறைந்த தந்தையின் சார்பில் பெற்றுக்கொண்டது: கமால் எல்-சாதத். 

எனக்கு பிடித்த இஸ்லாமிய சமயம் சார்ந்த சொல், ‘ரஹம்’; பொருள்: தனிப்பெருங்கருணை. மனித இனம் ஓரினமே. அன்யோன்யத்திற்கும், மனித நேயத்திற்கும் ‘ரஹம்’ தான் அடித்தளம். அதை புரிந்து கொள்ளாமல் ‘பத்து நாள்’ தாயாதிகள் பத்துத் தலைமுறைகளுக்கு பகைமை பாராட்டுவர். துவாரகையில் யாதவர்கள் உலக்கைத்தாக்குதல் நடத்தி தங்கள் குலத்தையே அழித்துக்கொண்டமாதிரி, தம்மையே மாய்த்துக்கொள்ளுவர். என்றோ ஒரு நாள் விவேகம் தலையெடுத்து விமோசன காண்டம் தொடங்கினால், அண்ணன் தம்பியென கட்டி மகிழ்வர். அதுவும் காலாவதியானால், வீராவேசம், பரவசம், உணர்ச்சி பிரவாகம், போர்க்களம், வெட்டு, குத்து, குண்டு வெடிப்பு. ‘இது தாண்டா உலகம்’ என்று அரட்டையடிப்பவர்களும் உண்டு. எதற்கும் இதையும் பாருங்கள். நாடு கடந்த தேசாபிமானம் யூதர்களுக்கு உண்டு;ஏனெனில் அவர்களுக்கு நாடென்று ஒன்றுமில்லையே! வல்லரசுகளின் உபய/ உபாயமாக இஸ்ரேல் நாடு நிறுவப்பட்டது என்றும், அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் பாலஸ்தீனிய இஸ்லாமியர் என்றும், அதன் பொருட்டு இஸ்லாமிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்வது மிகையன்று. இஸ்ரேலியர்களின் தேசாபிமானத்தை உடும்புப்பிடி எனலாம். இந்த பின்னணியில்...

காசி மாநகரம் போல, எகிப்திய தலை நகரம் கெய்ரோவும் பழைய பெருமை நிறைந்த, தென்மதுரையை போல ராப்பகலும் கூட்டம் நெருக்கும் நகரம், நவம்பர் 21,1977 அன்று இரவு தத்தளித்துக்கொண்டிருந்தது; அப்டியொரு ஜே ஜே கூட்டம். ஆயிரக்கணக்கான மக்கள், ஏதோ ஒரு வேலன் வெறியாட்டம் நடந்தது போலதொரு லாஹிரியில் மயங்கி, ‘சதத்~அமைதி நாயகனே! வாழ்க நீ எம்மான்!’ என்றெல்லாம் பாடி, 20 11 1977 அன்று இஸ்ரேல் சென்று, அமைதி நாடி, வாகை சூடி திரும்பிய அதிபரை அமர்க்களமாக வரவேற்றனர் என்று ந்யூ யார்க் டைம்ஸ் சொல்கிறது. நடை நடையாக நடந்து, ‘மதியாதார் தலை வாசல் மிதியவேண்டாம்’ என்ற அறிவுரையை, பொது நலம் கருதி, தள்ளி வைத்து, ராஜாஜி மு.கருணாநிதியின் வீட்டுக்கு வந்து ‘மதுவும், கள்ளும், சாராயமும், தேறலும் வேண்டாமப்பா’ என்று கெஞ்சியது நினைவில் வந்தது. சான்றோர்கள் தன்னலமும் கருதமாட்டார்கள்; சுயமரியாதையை பொது நலனுக்கு பலியிடுவார்கள். அம்மாதிரி: கேளும் பிள்ளாய்!

‘கத்தியை சுழட்டி கண்ட சுகம் என்ன? என்ன?
புத்தியை தீட்டி பகைவனுக்கு அருள்வோம் அப்பனே!
சத்தம் போடாமல் சமாதானம் பேசுவுமே என்று,
பத்திரமாகவே இஸ்ரேலுக்கு போனாரே, ஐய்யன் சாதத்.

‘வாங்க! அண்ணாச்சி! அப்டீனார் தம்பித்துரை அவுகளும்,
அங்கிட்டு  பிரதமர் மெனெச்சம் பெகின் ஐயாவை சொல்றேனுங்க.
சங்கதியெல்லாம் பேசிக்கிட்டாஹ, ஆனந்தமாகவே!
பொங்கப்பானையும் மங்களம் பாடியதே.

நல்லது நடக்கும் என்றால் நாலு பேருக்கும் சம்மதம். தன்னுடைய நோபல் சொற்பொழிவில் அதிபர் சாதத் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்கு நன்றி கூறியது சாலத்தகும். அன்னாரின் நல்லெண்ண யாத்ரீகம் பயன் அளித்தது. ஐ.நா.வின் தீர்மானங்கள் 242ம் 338ம் வழி வகுத்தன. மார்ச் 26, 1979 அன்று இரு நாடுகளும் ஒரு அமைதி உடன்பாட்டில் கையொப்பமிட்டன. அண்ணனுக்கும், தம்பிக்கும் 1978ம் வருட நோபல் பரிசு கிடைத்தது. அந்த விழாவில் எகிப்திய அதிபர் சாதத் அவர்களின் அருமையான சொற்பொழிவின் ஈற்றடி:

‘...யாவரும் என்னுடைய பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள். உலகெங்கும் சாந்தி நிலவட்டும். நியாயமும், தர்மமும், மனித உரிமையும் தலை நிமிர்ந்து பீடு நடை போடட்டும். மனித இனம், ஆங்காங்கே, தன்னுடைய வாழ்வியலை வகுத்துக்கொள்ளட்டும். அவரவருடைய வருங்காலத்தை நிர்ணயித்துக்கொள்ளட்டும். உலகின் சுபிக்ஷம் செழிக்கட்டும்.’

பாவி மனுஷா! இத்தனை நல்லவனாக இருப்பாயோடா?
சாவி கொடுத்த பொம்மை மாதிரி அண்டை அரேபிய விரோதமடா!
ஆவி பறித்த சண்டாளர்கள், சுட்டுத்தள்ளினார்களடா.
கேவி, கேவி அழுதது எகிப்திய பிரஜைகளடா.’
இன்னம்பூரான்
20 11 2011
பின் குறிப்பு: இது 20 11 1979 தின நிகழ்வை பற்றி மட்டும். தலைமாந்தர்களின் வரலாறு அன்று. பக்கம் பக்கமாக எழுதலாம். தகும். ஒரு  நண்பர் கேட்டார், ‘யாருக்காக இதையெல்லாம் எழுதுகிறீர்கள்?’ என்று. பாயிண்ட் மேட். எனக்கு தெரியவில்லை. ஒரு சமயம் எனக்காகவே எழுதுகிறேனோ என்றும் தோன்றுகிறது. ஒரு சமயம் ‘புதியது தருவோம்’ என்ற அவா என்றும் தோன்றுகிறது. Que sera sera. 

993_001.jpg
... after '1979 Peace Treaty' with Israel signed by President Anwar Sadat.




Sadat.pages
37K

Geetha Sambasivam Wed, Nov 23, 2011 at 10:15 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
‘மதியாதார் தலை வாசல் மிதியவேண்டாம்’ என்ற அறிவுரையை, பொது நலம் கருதி, தள்ளி வைத்து, ராஜாஜி மு.கருணாநிதியின் வீட்டுக்கு வந்து ‘மதுவும், கள்ளும், சாராயமும், தேறலும் வேண்டாமப்பா’ என்று கெஞ்சியது நினைவில் வந்தது. சான்றோர்கள் தன்னலமும் கருதமாட்டார்கள்; சுயமரியாதையை பொது நலனுக்கு பலியிடுவார்கள்//
 
நடு நடுவே இம்மாதிரியான மசாலாக்களைத் தூவுவது மெருகு ஏற்றுகிறது.  யாருக்காக எழுதறீங்கனு யார் கேட்டாங்களோ தெரியாது; என் மாதிரியான நிரக்ஷரகுக்ஷிக்கள் ஓரளவாவது பலனடைவோம்.
2011/11/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>

பின் குறிப்பு: இது 20 11 1979 தின நிகழ்வை பற்றி மட்டும். தலைமாந்தர்களின் வரலாறு அன்று. பக்கம் பக்கமாக எழுதலாம். தகும். ஒரு  நண்பர் கேட்டார், ‘யாருக்காக இதையெல்லாம் எழுதுகிறீர்கள்?’ என்று. பாயிண்ட் மேட். எனக்கு தெரியவில்லை. ஒரு சமயம் எனக்காகவே எழுதுகிறேனோ என்றும் தோன்றுகிறது. ஒரு சமயம் ‘புதியது தருவோம்’ என்ற அவா என்றும் தோன்றுகிறது. Que sera sera. 



Innamburan Innamburan Wed, Nov 23, 2011 at 10:27 PM
To: G
நன்றி, கீதா. என் மீது யாருக்கு ஆளுமை தற்காலம் என்றால், அது, 'அன்றொரு நாள்'. அது எனக்கு டிஸ்கவரி ராஜபாட்டையாக அமைந்து விட்டது. அப்றம் ஒரு சீக்ரெட். தினம் உங்கள் கருத்தை எதிர்நோக்கிய நான், ராஜம், சீதாலக்ஷ்மி, ஸுபாஷிணி கருத்துக்களையும் நாட துவங்கிவிட்டேன். நானொரு வரலாற்று பைத்தியம்.
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Nov 23, 2011 at 10:35 PM
To: Innamburan Innamburan
அனைவரும் படிக்கிறார்கள் ஐயா.  அவங்கல்லாம் கொஞ்சம் பிசி என்பதால் பின்னூட்டம் இட முடிந்திருக்காது.  இப்போது சுபாஷிணியும், சீதாம்மாவும், ராஜம் அம்மாவும் தினம் பின்னூட்டம் இட ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியாவும் இருக்கிறது.  பல்நோக்குப் பார்வையில் படிக்கவும் முடிகிறது.
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Nov 23, 2011 at 10:46 PM
To: 
I wish to enhance the contents from others' contribution, as I am one of the many.
Thanks & Regards,
innamburan
[Quoted text hidden]

Subashini Tremmel Fri, Nov 25, 2011 at 8:42 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram

2011/11/23 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
..எழுதறீங்கனு யார் கேட்டாங்களோ தெரியாது; என் மாதிரியான நிரக்ஷரகுக்ஷிக்கள்
 
நிரக்ஷரகுக்ஷிக்கள்  எபப்டி இருப்பார்கள் ??? 
 
சுபா
 
ஓரளவாவது பலனடைவோம்.
2011/11/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>

பின் குறிப்பு: இது 20 11 1979 தின நிகழ்வை பற்றி மட்டும். தலைமாந்தர்களின் வரலாறு அன்று. பக்கம் பக்கமாக எழுதலாம். தகும். ஒரு  நண்பர் கேட்டார், ‘யாருக்காக இதையெல்லாம் எழுதுகிறீர்கள்?’ என்று. பாயிண்ட் மேட். எனக்கு தெரியவில்லை. ஒரு சமயம் எனக்காகவே எழுதுகிறேனோ என்றும் தோன்றுகிறது. ஒரு சமயம் ‘புதியது தருவோம்’ என்ற அவா என்றும் தோன்றுகிறது. Que sera sera. 



Innamburan Innamburan Fri, Nov 25, 2011 at 9:11 PM
To: mintamil@googlegroups.com


திருமதி.கீதா சாம்பசிவம் ஒரு சூப்பரக்ஷரகுக்ஷிணி, அபார நளபாகினி, அருமருந்து பின்னூட்டினி.  இது நிற்க.

நிரக்ஷரகுக்ஷி ஆண்பால். படிக்காத மேதை. எழுத்தறியா கழுத்தறுப்பு கனவான். தனித்தமிழில் தற்குறி. சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்.
[Quoted text hidden]

Geetha SambasivamFri, Nov 25, 2011 at 9:18 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நன்றி ஐயா,  பல சிறப்புப் பெயர்களைத் தாங்கி வந்திருக்கும் இந்த மடலுக்குப் புத்தம்புதிய மடிக்கணினியில் இருந்து, முதல்முறையாகப் பதிலளிக்கிறேன்.  பையர் சொந்தமாய் எனக்கே எனக்கென வாங்கித்தந்திருக்கிறார்.  தாங்க்ஸ் கிவிங்  நாளுக்கான பரிசு.
2011/11/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Nov 25, 2011 at 9:51 PM
To: mintamil@googlegroups.com
அடி சக்கை! உங்களுக்கு வாழ்த்துக்கள், பையருக்கு வாழ்த்துக்கள். கணினி (பெண்பால்)க்கு வாழ்த்துக்கள். போய்ட்டுப்போறதுன்னு சாம்பசிவத்துக்கும் வாழ்த்துக்கள். 
இன்னம்பூரான்
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Nov 25, 2011 at 9:54 PM
To: mintamil@googlegroups.com



2011/11/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
 
[Quoted text hidden]

Geetha SambasivamFri, Nov 25, 2011 at 11:33 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நன்றி.
[Quoted text hidden]

Hari Krishnan Sat, Nov 26, 2011 at 2:05 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2011/11/26 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நிரக்ஷரகுக்ஷி ஆண்பால். படிக்காத மேதை. எழுத்தறியா கழுத்தறுப்பு கனவான். தனித்தமிழில் தற்குறி. சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்.
இன்னம்பூரான்

Manager, Director என்பனபோல் பாலில்லாப் பெயர்ச்சொல்.  இதன் நேரடிப் பொருள் வேடிக்கையானது.  நிர் அக்ஷர குக்ஷி.  குக்ஷி என்றால் வயிறு.  வயித்துல எழுத்தில்ல. தொப்பைல ஏன் ஒரு எழுத்தையும் காணும்?  ஏன்னா இது எந்த எழுத்தையும் இதுவரைக்கும் தின்னு தொலைக்கல. அதான் குக்ஷி நிர் அக்ஷரமா இருக்கு.  எழுத்தையே இன்னமும் கற்காதவன்.  (எழுத்தைக் கற்றால்தானே படிக்கிற கஷ்டம்?)  கல்வியோ கேள்வியோ அற்ற வயிறன்.  என் ஸ்டைல்ல மொழிபெயர்த்தால் நிரக்ஷரகுக்ஷி=இடாகுடர்.  

(டிஸ்கி: ‘நீ டாக்டரா‘ என்று அடிக்கடி கேள்விகேட்கும் கனவானுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ‘இந்தத் துறையில் போதுமான பயிற்சி இருக்கிறது என்ற தகுதியே போதுமானது’ என்று சிலமுறை நான் சொல்வது இங்குள்ள டாக்டர் பெருமக்களுக்கு வருத்தத்தை அளிப்பதாக அறிந்தேன்.  நான், அளிப்பது தன்னிலை விளக்கம்.  அது மெய்நிலை டாக்டர்களை பரிகசிப்பதாகக் கொள்ளத் தக்கதன்று.  அந்த நோக்கத்திலும் செய்யப்படுவதன்று.  எல்லா டாக்டர் பட்டம் பெற்றவர்களையும் மதிக்கிறேன்.  பெறாதவர்களையும் மதிக்கிறேன். Kindly understand me and my predicament and kindly do not distort and brush me with another shade)
--
அன்புடன்,
ஹரிகி.
[Quoted text hidden]

rajam Sat, Nov 26, 2011 at 2:19 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நான் "நிரக்ஷர குஷி" ஆக இருக்க விரும்புகிறேன்! அப்படிப்பட்ட நிலையில் எனக்கு-னு எதாவது ஒரு பட்டம் குடுங்கோ, ஹரீ! :-) :-) :-) 
[Quoted text hidden]
[Quoted text hidden]

rajam Sat, Nov 26, 2011 at 2:23 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ம்ம்ம் ... கீதா பையர் வீட்டிலெ எதோ திட்டம் நடந்திருக்கு! மாமியார் கைலெ கணினியெக் கொடுத்தாச்சுன்னா ... மத்தவங்களுக்கு கொஞ்சம் தனிமை கிடைக்குமில்லெ! :-) :-) -)
எதுன்னாலும், நல்லதே நடந்திருக்கு! மகிழ்ச்சி! :-) :-) :-)

On Nov 25, 2011, at 1:18 PM, Geetha Sambasivam wrote:

நன்றி ஐயா,  பல சிறப்புப் பெயர்களைத் தாங்கி வந்திருக்கும் இந்த மடலுக்குப் புத்தம்புதிய மடிக்கணினியில் இருந்து, முதல்முறையாகப் பதிலளிக்கிறேன்.  <35b .gif=""><35b .gif=""><35b .gif=""><35B.gif><35b .gif=""><35b .gif="">பையர் சொந்தமாய் எனக்கே எனக்கென வாங்கித்தந்திருக்கிறார்.  தாங்க்ஸ் கிவிங்  நாளுக்கான பரிசு.<03d .gif=""><03d .gif=""><03d .="" wbr="">gif>
2011/11/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>


திருமதி.கீதா சாம்பசிவம் ஒரு சூப்பரக்ஷரகுக்ஷிணி, அபார நளபாகினி, அருமருந்து பின்னூட்டினி.  இது நிற்க.

நிரக்ஷரகுக்ஷி ஆண்பால். படிக்காத மேதை. எழுத்தறியா கழுத்தறுப்பு கனவான். தனித்தமிழில் தற்குறி. சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்.
இன்னம்பூரான்


Hari Krishnan Sat, Nov 26, 2011 at 2:31 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2011/11/26
நான் "நிரக்ஷர குஷி" ஆக இருக்க விரும்புகிறேன்! அப்படிப்பட்ட நிலையில் எனக்கு-னு எதாவது ஒரு பட்டம் குடுங்கோ, ஹரீ! :-) :-) :-) 
ஐ!  ஆசைப்பட்டாலும் கிடைக்காதாக்கும்.  நீங்க ஸர்வக்ஷர குக்ஷி; ஸாதக பக்ஷி; ஸரஸ்வதி என்னை ரக்ஷி. :D
[Quoted text hidden]

Nagarajan Vadivel Sat, Nov 26, 2011 at 2:50 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
//Kindly understand me and my predicament and kindly do not distort and brush me with another shade)//
இடாக்குதர் இட்டகுடர் டாக்டர், ஹானரிஸ் காசா டாக்டர், நிழல் டாக்டர், டாக்டர் ஆக விரும்பாதோர், டாக்டர் ஆக வாய்ப்பில்லாதோர், டாக்டருக்கு ஆசைப்பட்டு அது நிறைவேராமல் போனவர் என சகல் (அறிவு)ஜீவ ராசிகளுக்கும் ஆதரவு தரும் அரசியல் கட்சி நடத்தும் தலைவியே,
ஒங்களைத் தப்பாச் சொன்னா தப்பிலையா

அருள் கூர்ந்து இன்னம் பூரனார் அரசியலிக் கொஞ்சம் கவனியுங்கள்

நிரக்ஷரகுக்ஷி Manager, Director என்பனபோல் பாலில்லாப் பெயர்ச்சொல் உங்கள் கட்சி
நிரக்ஷரகுக்ஷி ஆண்பால்
கணினி பெண்பால்
நிரக்ஷரகுக்ஷிக்குப் பொருந்துமா என்று நிங்கள் சொல்லவேண்டும்
Electronic chips cannot fill empty bellies
                                             - by Dr.Lalitha Ramdoss, Chair, International Adult Education Association
Hungry ... cannot understand Bhagavat Gita
                                              - byMahatma Gandhi
வயிற்றுக்குச்  சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் (முதலில்) பின்பு பயிறுப் பல கல்வி கற்றுப் பாரில் (டாஸ்மாக் அல்ல) உயர்த்திடவேண்டும்

//படிக்காத மேதை. எழுத்தறியா கழுத்தறுப்பு கனவான். தனித்தமிழில் தற்குறி. சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்.//
தமிழகத்தில் வாழும் எண்னற்ற படிக்க எழுத வாசிக்கத் தெரியாதவர்களும் படிக்க எழுத வாசிக்கத் தெரியாதவர்களும் ஒன்றாக இணயும் இடம் நிரக்ஷரகுக்ஷி
பிறந்த எல்லாத் தமிழர்களும் நிரக்ஷரகுக்ஷி
நாகராசன்
[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Nov 26, 2011 at 2:53 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நீங்க வேறே அம்மா; :)))  அப்படி நடக்கட்டும்; காத்திருக்கோம்.  ஆளுக்கு ஒரு கணினியை வைச்சுட்டு உட்காரத் தான் இந்த யோசனையோனு எனக்கு சந்தேகம்.  


2011/11/25
ம்ம்ம் ... கீதா பையர் வீட்டிலெ எதோ திட்டம் நடந்திருக்கு! மாமியார் கைலெ கணினியெக் கொடுத்தாச்சுன்னா ... மத்தவங்களுக்கு கொஞ்சம் தனிமை கிடைக்குமில்லெ! :-) :-) -)
எதுன்னாலும், நல்லதே நடந்திருக்கு! மகிழ்ச்சி! :-) :-) :-)

On Nov 25, 2011, at 1:18 PM, Geetha Sambasivam wrote:
நன்றி ஐயா,  பல சிறப்புப் பெயர்களைத் தாங்கி வந்திருக்கும் இந்த மடலுக்குப் புத்தம்புதிய மடிக்கணினியில் இருந்து, முதல்முறையாகப் பதிலளிக்கிறேன்.  <35b .gif=""><35b .gif=""><35b .gif=""><35B.gif><35b .gif=""><35b .gif="">பையர் சொந்தமாய் எனக்கே எனக்கென வாங்கித்தந்திருக்கிறார்.  தாங்க்ஸ் கிவிங்  நாளுக்கான பரிசு.<03d .gif=""><03d .gif=""><03d .="" wbr="">gif>

2011/11/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>


திருமதி.கீதா சாம்பசிவம் ஒரு சூப்பரக்ஷரகுக்ஷிணி, அபார நளபாகினி, அருமருந்து பின்னூட்டினி.  இது நிற்க.

நிரக்ஷரகுக்ஷி ஆண்பால். படிக்காத மேதை. எழுத்தறியா கழுத்தறுப்பு கனவான். தனித்தமிழில் தற்குறி. சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்.
இன்னம்பூரான்

-- 

[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Nov 26, 2011 at 2:53 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
சரஸ்வதி கடாக்ஷம்
[Quoted text hidden]

Hari Krishnan Sat, Nov 26, 2011 at 3:51 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2011/11/26 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>
இடாக்குதர் இட்டகுடர் டாக்டர், ஹானரிஸ் காசா டாக்டர், நிழல் டாக்டர், டாக்டர் ஆக விரும்பாதோர், டாக்டர் ஆக வாய்ப்பில்லாதோர், டாக்டருக்கு ஆசைப்பட்டு அது நிறைவேராமல் போனவர் என சகல் (அறிவு)ஜீவ ராசிகளுக்கும் ஆதரவு தரும் அரசியல் கட்சி நடத்தும் தலைவியே,
ஒங்களைத் தப்பாச் சொன்னா தப்பிலையா

எப்பாலிற் சென்றாலும் எதிர்ப்பாலில் வந்துநிற்கும்
அப்பாலின் அரவரசா! ஆண்பாலும் பெண்பாலா?
தப்பாலும் தலைவிக்கா? தவறாத தலைவலி்க்கா?
இப்பாலில் என்செய்தேன்? என்றானேன் பெண்பால்நான்!
 

அருள் கூர்ந்து இன்னம் பூரனார் அரசியலிக் கொஞ்சம் கவனியுங்கள்

அது பெரிய அரசியல்தாங்கண்ணா.  பெரியவங்க அரசியல் பெருமாளுக்கே வெளிச்சம்.   நமக்கெதுக்கு வம்பு?


நிரக்ஷரகுக்ஷி Manager, Director என்பனபோல் பாலில்லாப் பெயர்ச்சொல் உங்கள் கட்சி

நிரக்ஷரகுக்ஷி ஆண்பால்
கணினி பெண்பால்
நிரக்ஷரகுக்ஷிக்குப் பொருந்துமா என்று நிங்கள் சொல்லவேண்டும்

திருச்சி, சிவகாசி, திருப்பதி எல்லாம் பெண்பால்; பாம்பன், முடிகொண்டான், எல்லாம் ஆண்பால்னா, கணினி பெண்பால்தாங்கண்ணா; நிரக்ஷரகுக்ஷி ஆண்பால் தானுங்கண்ணா.  

[Quoted text hidden]

K R A NarasiahSat, Nov 26, 2011 at 4:37 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கல்கி வ. ரா வை நிரக்ஷரக்க்ஷி எனக்குறிப்பிட்டார்!
நரசய்யா
[Quoted text hidden]
[Quoted text hidden]

Hari Krishnan Sat, Nov 26, 2011 at 4:55 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2011/11/26 K R A Narasiah <narasiah267@gmail.com>
கல்கி வ. ரா வை நிரக்ஷரக்க்ஷி எனக்குறிப்பிட்டார்!
நரசய்யா
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.  இது எந்தச் சந்தர்ப்பத்தில் நடந்தது என்று சொல்ல முடியுமா?  நல்லகவி-மஹாகவி போரில் இந்த அஸ்திரப் பிரயோகம் நிகழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.  (அந்தச் சமயத்தில் கல்கி எழுதிய கட்டுரைகள் தேவைப்படுகின்றன.  கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?  விடை கிடைத்தால் மிக்க நன்றியுடையவனாவேன்.)  
[Quoted text hidden]

K R A Narasiah Sat, Nov 26, 2011 at 5:33 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கணையாழியில் எழுதியுள்ளேன். விகடனில் வந்த கடிதங்கள் மூலம் தெரிந்தது. சாதாரணமனிதனிலும் பதிவு செய்துள்ளேன். 3-11-1935 அன்று கல்கி, தாமே இலக்கிய மாணாக்கன் என்றபெயரில் ஒரு கடிதம் ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு எழுதினார். அதற்குப் பதிலும் அவரே அளித்துள்ளார். இங்கே பார்க்கவும்image.png


அதற்கு அவர் எழுதிய பதில் இதோ:

image.png


தவிரவும் கல்கி சொன்னது:
பாரதி எழுதிய வள்ளிப்பாட்டை டால்ஸ்டாய் படித்திருந்தால் அபாரதியின் எல்லாபாட்டுகளையும் தீயில் போட்டு கொளுத்தியிருப்பார்!

விவரம் எல்லாம் கணையாழியில் எழிதியுள்ளேன்
நரசய்யா
[Quoted text hidden]

s.bala subramani B+ve Sat, Nov 26, 2011 at 7:00 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
மதிற்பிற்குரிய நரசையா அவர்களுக்கு 

சமிபத்தில் 59 களில் குமதத்தில் எழுதி பின்னால்  புகழ் அடைந்த பள்ளிஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 
வையவன்

 மற்றும் பல புனை பெயர்களில் எழுதி வந்த ம.ச.ப> முருகேசன் அவர்களை சந்தித்த போது நீங்கள் அவருக்கு எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டார் 

அன்புடன் பாலு



2011/11/26 K R A Narasiah <narasiah267@gmail.com>
கணையாழியில் எழுதியுள்ளேன். விகடனில் வந்த கடிதங்கள் மூலம் தெரிந்தது. சாதாரணமனிதனிலும் பதிவு செய்துள்ளேன். 3-11-1935 அன்று கல்கி, தாமே இலக்கிய மாணாக்கன் என்றபெயரில் ஒரு கடிதம் ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு எழுதினார். அதற்குப் பதிலும் அவரே அளித்துள்ளார். இங்கே பார்க்கவும்image.png


அதற்கு அவர் எழுதிய பதில் இதோ:

image.png


தவிரவும் கல்கி சொன்னது:
பாரதி எழுதிய வள்ளிப்பாட்டை டால்ஸ்டாய் படித்திருந்தால் அபாரதியின் எல்லாபாட்டுகளையும் தீயில் போட்டு கொளுத்தியிருப்பார்!

விவரம் எல்லாம் கணையாழியில் எழிதியுள்ளேன்
நரசய்யா
2011/11/26 Hari Krishnan <hari.harikrishnan@gmail.com>


2011/11/26 K R A Narasiah <narasiah267@gmail.com>
கல்கி வ. ரா வை நிரக்ஷரக்க்ஷி எனக்குறிப்பிட்டார்!
நரசய்யா
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.  இது எந்தச் சந்தர்ப்பத்தில் நடந்தது என்று சொல்ல முடியுமா?  நல்லகவி-மஹாகவி போரில் இந்த அஸ்திரப் பிரயோகம் நிகழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.  (அந்தச் சமயத்தில் கல்கி எழுதிய கட்டுரைகள் தேவைப்படுகின்றன.  கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?  விடை கிடைத்தால் மிக்க நன்றியுடையவனாவேன்.)  


--
அன்புடன்,
ஹரிகி.
]

Innamburan Innamburan Sat, Nov 26, 2011 at 9:12 AM
To: mintamil@googlegroups.com


அருள் கூர்ந்து இன்னம் பூரனார் அரசியலிக் கொஞ்சம் கவனியுங்கள்

‘கத்தியை சுழட்டி கண்ட சுகம் என்ன? என்ன?
புத்தியை தீட்டி பகைவனுக்கு அருள்வோம் அப்பனே!
சத்தம் போடாமல் சமாதானம் பேசுவுமே என்று,
பத்திரமாகவே இஸ்ரேலுக்கு போனாரே, ஐய்யன் சாதத்.

*
அடுத்தபடியாக, ‘நிரக்ஷரகுக்ஷி’ சுழல, சுழல,  திரு.நரசய்ய அளித்த அருமையான பழம்பொருள் காட்சி அளித்த சுகானுபவம் என்னே! என்னே!
இன்ன்ம்பூரான்
26 11 2011

Geetha Sambasivam Sat, Nov 26, 2011 at 11:07 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
"நிரக்ஷரகுக்ஷி" என்ற பதத்தின் மூலம் பல அருமையான விளக்கங்கள் கிடைத்தன.  அனைவருக்கும் நன்றி.

2011/11/26 Innamburan Innamburan <innamburan@gmail.com>



*
அடுத்தபடியாக, ‘நிரக்ஷரகுக்ஷி’ சுழல, சுழல,  திரு.நரசய்ய அளித்த அருமையான பழம்பொருள் காட்சி அளித்த சுகானுபவம் என்னே! என்னே!
இன்ன்ம்பூரான்
26 11 2011



Subashini Tremmel Sun, Nov 27, 2011 at 8:07 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
ஆஹா.. இந்த புத்தம் புது மடிக்கணினி கிடைத்திருக்கிறதா. அப்போது செல்லும் இடமெல்லாம் எடுத்துச் சென்று எழுதிக் கொண்டேயிருக்க் வாழ்த்துக்கள்.

சுபா


Subashini Tremmel Sun, Nov 27, 2011 at 8:09 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com



2011/11/26 Geetha Sambasivam
நீங்க வேறே அம்மா; :)))  அப்படி நடக்கட்டும்; காத்திருக்கோம்.  ஆளுக்கு ஒரு கணினியை வைச்சுட்டு உட்காரத் தான் இந்த யோசனையோனு எனக்கு சந்தேகம்.  

சரியா கண்டு பிடிச்சிட்டீங்க.. இப்போ எல்லோருக்கும் கணினிமேல் இருக்கும் மோகத்தைப் போல வேறெதிலும் இல்லை .. :-)

சுபா

 
[Quoted text hidden]

Nagarajan Vadivel Sun, Nov 27, 2011 at 8:24 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
எனக்கென்னவோ இரண்டு சிந்தனைகள்
1. ஒன்று கருப்பு வெள்ளியை ஒட்டி ஆடித்தள்ளுபடியைப்போல் 60%-80% வரை ஆடித் தள்ளிவிடுகிறர்கள்.  அந்த வலையில் இருந்து தப்புவது எளிதல்ல.  அதென்னவோ அமெர்க்காவில் இந்நாளில் அதிகம் கொடுப்பதும் பெறுவதும் மடிக்கணினியாகவே இருக்கிறது.  இந்தமுறை நோகணினி என்று சொல்லிவிட்டேன்
2. அந்தக் காலத்தில் காசைக் கரியாக்காமல் இருக்கு விரும்பும் விவரமானவர்கள் வீட்டுப் பெண்களுக்குக் கட்டாயம் கார் ஒட்டக் கற்றுக் கொடுத்து குறிப்பாக சேலை நகைக்கடை வழியாகப் பெண்களை ஒட்டச் செய்து அவர்களின் கவனம் கடைப் பக்கம் செல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்.  இப்போது அந்தபாச்சா பலிக்காதுபோகவே மடிக்கணியைப் பயன்படுத்தி அவர்களை இணையக் கயிற்றில் கட்டி விடுகிறார்கள்.   கூப்பிட்டாலும் எனக்கு மெயில் மடலாடல் வேலை இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்கள்
புதுக் கணினி எந்தச்  சிந்தனைக்குப் பொருந்தும் என்பதை அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடுகிறேன்
நாகராசன்
[Quoted text hidden]

coral shree Sun, Nov 27, 2011 at 8:39 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2011/11/27 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>
எனக்கென்னவோ இரண்டு சிந்தனைகள்
1. ஒன்று கருப்பு வெள்ளியை ஒட்டி ஆடித்தள்ளுபடியைப்போல் 60%-80% வரை ஆடித் தள்ளிவிடுகிறர்கள்.  அந்த வலையில் இருந்து தப்புவது எளிதல்ல.  அதென்னவோ அமெர்க்காவில் இந்நாளில் அதிகம் கொடுப்பதும் பெறுவதும் மடிக்கணினியாகவே இருக்கிறது.  இந்தமுறை நோகணினி என்று சொல்லிவிட்டேன்
2. அந்தக் காலத்தில் காசைக் கரியாக்காமல் இருக்கு விரும்பும் விவரமானவர்கள் வீட்டுப் பெண்களுக்குக் கட்டாயம் கார் ஒட்டக் கற்றுக் கொடுத்து குறிப்பாக சேலை நகைக்கடை வழியாகப் பெண்களை ஒட்டச் செய்து அவர்களின் கவனம் கடைப் பக்கம் செல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்.  இப்போது அந்தபாச்சா பலிக்காதுபோகவே மடிக்கணியைப் பயன்படுத்தி அவர்களை இணையக் கயிற்றில் கட்டி விடுகிறார்கள்.   கூப்பிட்டாலும் எனக்கு மெயில் மடலாடல் வேலை இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்கள்

சரியாகச் சொன்னீர்கள் ஐயா.. கரெக்டா பாயிண்ட்டைப் பிடித்த ஐயாவிற்கு ஒரு மடிக்கணினி இலவசம்....

 
புதுக் கணினி எந்தச்  சிந்தனைக்குப் பொருந்தும் என்பதை அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடுகிறேன்
நாகராசன்


2011/11/27 Subashini Tremmel <ksubashini@gmail.com>


2011/11/26 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
நீங்க வேறே அம்மா; :)))  அப்படி நடக்கட்டும்; காத்திருக்கோம்.  ஆளுக்கு ஒரு கணினியை வைச்சுட்டு உட்காரத் தான் இந்த யோசனையோனு எனக்கு சந்தேகம்.  

சரியா கண்டு பிடிச்சிட்டீங்க.. இப்போ எல்லோருக்கும் கணினிமேல் இருக்கும் மோகத்தைப் போல வேறெதிலும் இல்லை .. :-)

சுபா

 



செல்வன் Sun, Nov 27, 2011 at 8:47 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கருப்பு வெள்ளியை சாமர்த்தியமாக பயன்படுத்தினால் நிறைய காசை மிச்சபடுத்தலாம்.

வருடம் முழுவதும் நண்பர்கள்/எங்கள் பிறந்தநாள், ஏனிவெர்சரிகளுக்கு அளிக்கவேண்டிய பரிசு பொருட்களை கருப்பு வெள்ளியன்று வாங்கிவிடுவோம். இதனால் நிறைய பணம் மிச்சமாகிறது. அலைச்சலும் மிச்சம்.

--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"




[Quoted text hidden]

Geetha Sambasivam Sun, Nov 27, 2011 at 11:21 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நாள் என்னவோ கறுப்பு வெள்ளி. ஆனால் தள்ளுபடியில் வாங்கவில்லை. தள்ளுபடி சரக்கெல்லாம் காலை பத்துமணிக்குள் விற்றுவிடும் என்றார்கள்.  நான் போகவில்லை. :)))  கூட்டத்திற்கும் பயம்;  பையரோடும், மருமகளோடும் ஷாப்பிங் செய்யவும் பயம்.  :)))))


2011/11/27 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>


Nagarajan Vadivel Sun, Nov 27, 2011 at 1:11 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி. சிறு குழந்தைக் கணினி நாலு மடிக்கணினி மூனு ஏழில் அஞ்சு கருப்பு வெள்ளியில் கிடைத்தது
இப்பவும் நேற்று என் மகள் நியூயார்க் போயிருக்கிறாள். திங்கள் கூட்டம் முடிந்ததும் செவ்வாய் திரும்ப வரும்போது கணினி வேண்டாம் ஐபோன் வாங்கிவரச் சொன்னேன்.  இன்னொரு நண்பர் கனடாவிலிருந்து ப்ரீ-கிறிஸ்துமஸ் பர்சேஸ் பன்னி ஜனவரி 2-ஆம் தேதி கொண்டு வருவார் அவர் என்ன கொன்டு வருகிறாரோ நான் அறியேன்
இங்கே இந்தியாவில் இருக்கும்போதே கருப்பு வெள்ளி ஆன்லைன் மூலம் 60% தள்ளுபடிக்கு ஒரு செர்வர் ஸ்பேசும் வீடியோ தயாரிக்கும் மென் பொருளும் வாங்கினேன்
சென்றமாதம் என் மருமகன் சென்றபோது என்ன வேண்டும் என்று கேட்டார்.  அப்போ மின் தமிழில் நிறைய நறநறவென்று பல்லைக் கடிக்க வேண்டியிருந்தது.  இந்திய டென்டோபஃபிக்சர் தாக்கு பிடிக்க முடியாமல் பல் கழன்றுகொண்டே இருந்தது.  அவர் புன்னியத்தில் அரை டஜன் ட்யூப் கைவசம். நல்லா பல்லை நற நறவென்று கடிக்க முடிகிறது
நாகராசன்
[Quoted text hidden]

Geetha Sambasivam Sun, Nov 27, 2011 at 3:29 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நல்லாக் கடிங்க! :))))))

2011/11/27 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி. சிறு குழந்தைக் கணினி நாலு மடிக்கணினி மூனு ஏழில் அஞ்சு கருப்பு வெள்ளியில் கிடைத்தது
இப்பவும் நேற்று என் மகள் நியூயார்க் போயிருக்கிறாள். திங்கள் கூட்டம் முடிந்ததும் செவ்வாய் திரும்ப வரும்போது கணினி வேண்டாம் ஐபோன் வாங்கிவரச் சொன்னேன்.  இன்னொரு நண்பர் கனடாவிலிருந்து ப்ரீ-கிறிஸ்துமஸ் பர்சேஸ் பன்னி ஜனவரி 2-ஆம் தேதி கொண்டு வருவார் அவர் என்ன கொன்டு வருகிறாரோ நான் அறியேன்
இங்கே இந்தியாவில் இருக்கும்போதே கருப்பு வெள்ளி ஆன்லைன் மூலம் 60% தள்ளுபடிக்கு ஒரு செர்வர் ஸ்பேசும் வீடியோ தயாரிக்கும் மென் பொருளும் வாங்கினேன்
சென்றமாதம் என் மருமகன் சென்றபோது என்ன வேண்டும் என்று கேட்டார்.  அப்போ மின் தமிழில் நிறைய நறநறவென்று பல்லைக் கடிக்க வேண்டியிருந்தது.  இந்திய டென்டோபஃபிக்சர் தாக்கு பிடிக்க முடியாமல் பல் கழன்றுகொண்டே இருந்தது.  அவர் புன்னியத்தில் அரை டஜன் ட்யூப் கைவசம். நல்லா பல்லை நற நறவென்று கடிக்க முடிகிறது
நாகராசன்



n]

அன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே! யாழ்பாணத்துத் தமிழே! அழகின் உருவே! என் அன்னையே!


அன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே! யாழ்பாணத்துத் தமிழே! அழகின் உருவே! என் அன்னையே!
5 messages

Innamburan Innamburan Tue, Nov 8, 2011 at 6:29 PM
To: mintamil

அன்றொரு நாள்: நவம்பர் 8.2
தமிழே! யாழ்பாணத்துத் தமிழே! அழகின் உருவே! என் அன்னையே!
தமிழ் லெக்ஸிகனை பற்றி படிக்கும்போது, அந்த ஆய்வுக்குழு மதுரையில் இயங்கியதற்கு காரணங்களில் ஒன்று, யாழ்ப்பாணம் தொலைவில் இல்லை என்று படித்தேன். திரு.வி.க. அவர்களை ‘தமிழ்த்தென்றல்’ என்று விளித்தது யாழ்ப்பாணம். ஒப்பியல் இலக்கியம் என்றால், கலாநிதி.க.கைலாசபதி அவர்கள். ‘யாழ்ப்பாணமும் தமிழும்’ என்று அடுக்கிக்கொண்டே போகலாம். யாழ்பாணத்துத்தமிழின் அழகே அழகு! யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள புன்னாலைக்கட்டுவன் கிராமத்தில், தமிழ் மொழி இலக்கிய/இலக்கண/ஆய்வு/உரை/விளக்க மறுமலர்ச்சிக்கு வித்திடவே, அவதரித்த மேதை திரு.சி.கணேசையர் அவர்களின் சிரத்தாஞ்சலி தினம் இன்று: நவம்பர் 8, 1958. யான் செய்த பாக்கியம், அவரை பற்றிய நல்லதொரு கட்டுரை கிடைத்ததே. அதை அப்படியே, சில குறிப்புகளுடன், காப்புரிமை போற்றி, நன்றி கூறி, உசாத்துணை பகர்ந்து, உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என்ன தான் மகிழ்ச்சி என்றாலும், 1940களுக்கு பிறகு, அதுவும் தற்காலம், தமிழன்னையின் ஆராதனை, ஒளி குன்றி, அணியின்றி, ஒலி அடங்கி, மலர் வாடி, கனி அளிந்து, சோபையிழந்திருப்பதை கண்டு, என் மனம் பரிதவிக்கிறது. ஒரு காரியம் செய்வோம். தமிழன்னை ஆராதனையை, நம்மால் இயன்றதற்கும். சற்றே அதிகமாக செய்வோம். 
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
08 11 2011
1gane_w.jpg

உசாத்துணை:

*
தொல்காப்பிய ஆசான் யாழ்ப்பாணம் சி.கணேசையர்:தினமணி: பொ.வேல்சாமி: முதல் பதிவு: ஜூன் 7, 2009






pastedGraphic.pdf
தமிழின் தலைசிறந்த நூல் என்று நாம் கொண்டாடும் தொல்காப்பியம் 19-ஆம் நூற்றாண்டில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களே அறியாத நூலாக இருந்தது. அந்தக் காலத்தில் தமிழ்நாடு முழுமையிலும் தொல்காப்பியத்தைப் பாடம் சொல்கிற ஆசிரியர் "வரதப்ப முதலியார்' என்ற ஒருவர் மட்டும் இருந்ததாக சி.வை.தாமோதரம்பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர். 1847-இல் மழவை மகாலிங்கையரால் தொடக்கம் பெற்ற தொல்காப்பியப் பதிப்புப் பணி 1935-இல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையால் தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை-மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் போன்றவை வெளியிடப்பட்டவுடன் நிறைவடைந்தது. 1930-களின் பின்னர் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தொல்காப்பியம் பாடமாக வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் இதனைப் பாடம் சொல்வதற்கு ஆசிரியர்கள் பெருமளவில் இடர்ப்பட்டனர். இதற்கு தொல்காப்பியச் சூத்திரங்களை முறைப்படுத்த வேண்டும். உரையாசிரியர்கள் குறிப்பிடும் கருத்துகளைத் தெளிவுபடுத்தும் விளக்கங்கள் வேண்டும். தமிழ்நாட்டில்பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி எழுத்ததிகாரத்துக்கும் சொல்லதிகாரத்துக்கும் விளக்கக் குறிப்புகளை எழுதினார். வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் மூல பாடத்தில் பல நல்ல திருத்தங்களைச் செய்துள்ளனர். அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து சி.கணேசையர் என்பவர் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, பொருளதிகாரம் நச்சினார்க்கினியர்-பேராசிரியர் உரைகளுக்கு விளக்கக் குறிப்புகளை விரிவாக எழுதினார். அதே நேரத்தில் சுவடிகளுக்கு இடையேயான பாட வேறுபாடுகளையும் நுட்பமாக ஆராய்ந்து சரியானவற்றைக் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் கொடுத்தார். இன்றுவரை இந்த விளக்கங்களை விஞ்சக்கூடிய எதனையும் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள புன்னாலைக்கட்டுவன் என்ற கிராமத்தில் 1878-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி பிறந்தார் கணேசையர். இவருடைய தந்தை சின்னையர்-தாய் சின்னம்மாள். இவரது பெரிய தந்தை கதிர்காம ஐயர், புன்னாலைக்கட்டுவனில் நடத்தி வந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை தமிழும் வடமொழியும் படித்தார். அத்துடன் ஆறுமுகநாவலரின் சகோதரி மகனாகிய பெரும்புலவர் பொன்னம்பலம்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப் புலவர், கணேசையர் உறவினரும் சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமையாளருமாகிய காசிவாசி செந்தில்நாத ஐயர், வடமொழி அறிஞர் பிச்சுவையர் போன்றவர்களிடம் கல்வி பயின்றார். தமது 21-வது வயதில் இருந்து விவேகானந்த வித்தியாசாலை, நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை போன்றவற்றில் ஆசிரியராகப் பணி செய்தார். இவருடைய 32-வது வயதில் அன்னலட்சுமி எனும் அம்மையாரை மணந்தார். திருமணத்துக்குப் பின்னர் மணிமேகலை நூல் குறிப்பிடும் மணிபல்லவத்தீவு என்று கருதப்படுகின்ற நைனார் தீவில் ஆசிரியப் பணி புரிந்தார். 15-ஆம் நூற்றாண்டில், இலங்கை அரச வம்சத்தைச் சேர்ந்த "அரசகேசரி' என்பவர் காளிதாசனுடைய ரகுவம்சம் நூலை 2444 பாடல்களில் மொழிபெயர்த்தார். இந்த நூலின் 1506 பாடல்களுக்கு கணேசையர் உரை எழுதியுள்ளார். ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர்கள் சரித்திரம் போன்ற பல நூல்களை எழுதி இருப்பினும் கி.பி.1868, 1885, 1891-ஆம் ஆண்டுகளில் சி.வை.தாமோதரம்பிள்ளையால் முதன் முதலாக வெளியிடப்பட்ட தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களுக்கும் கணேசையர் செய்த திருத்தங்களும் விளக்கக் குறிப்புகளும் மிகவும் சிறப்பான பணியாகும். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் "செந்தமிழ்' பத்திரிகையில் 1905-ஆம் ஆண்டிலிருந்து இவர் எழுதிய "கம்பராமாயணத்தில் பாட வேறுபாடுகள்' என்ற கட்டுரைத் தொடராக வெளிவந்தது. இது இன்றும் பழந்தமிழ் நூல்களுக்கான செம்மையான பாடங்களை ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகக் கருதத்தக்க சிறப்புடையதாகும். 1937-இல் கணேசையர் தொல்காப்பியக் குறிப்பை வெளியிடுவதற்கு முன்பே சி.வை.தாமோதரம்பிள்ளை, ரா.ராகவையங்கார், கா.நமச்சிவாய முதலியார், வ.உ.சி.யுடன் இணைந்து வையாபுரிப்பிள்ளை, திரிசிரபுரம் கனகசபைப் பிள்ளையுடன் இணைந்து மன்னார்குடி சோமசுந்தரம்பிள்ளை முதலிய பல்வேறு அறிஞர்கள் தொல்காப்பியம் மூலபாடத்தையும் சிறுசிறு குறிப்புகளுடனும் பதிப்பித்து வெளியிட்டிருந்தனர். இத்தகைய அறிஞர்களின் உழைப்பிற்குப் பின்பும் தொல்காப்பியமும் அதன் உரைகளும் மேலும் திருத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே இருந்தன. இந்நிலையில் ஈழகேசரி பத்திரிகையின் அதிபரான நா.பொன்னையாபிள்ளை, சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவைப் போற்றும்படியான ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்று விரும்பினார். அதற்கு சி.வை.தாமோதரம்பிள்ளை வெளியிட்ட தொல்காப்பியத்தைத் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் செம்மையான பதிப்பாகவும் தேவையான விளக்கங்களுடனும் வெளியிடுவது சிறந்ததாகும் எனக் கருதினார். இந்தப் பணியை சிறப்பாகச் செய்யக்கூடிய அறிஞர் கணேசையரே என்று கருதி, இப்பணியைச் செய்து தருமாறு அவரிடம் வேண்டினார். தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெகு சிறப்புடன் செய்து முடித்தார் கணேசையர். தொல்காப்பியப் பொருளதிகாரம், பேராசிரியர் உரையை ஆராய்ச்சி செய்யும்போது இன்னும் பல திருத்தங்களைச் செய்ய வேண்டிய நிலையில், இலங்கை முழுவதிலும் இதற்கான திருத்தமான பிரதிகள் கிடைக்கவில்லை. எனவே, கணேசையர் தமிழ்நாட்டுக்கு வந்து, மதுரையில் டி.கே.இராமானுஜ ஐயங்கார் உதவியுடன் மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரதிகளைப் பார்த்துத் தம்முடைய குறிப்புகளைத் திருத்தம் செய்துகொண்டார். கடும் உழைப்புடன் தன் நுண்மையான அறிவைப் பயன்படுத்தி தொல்காப்பிய மூலத்திலும் உரையிலும் கணேசையர் பல திருத்தங்களைச் செய்தார். எடுத்துக்காட்டாக, பேராசிரியர் உரை எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாக்கள் 300,302,307,313,369,419,448,490,491 போன்றவற்றில் அறிவியல் பூர்வமான பல திருத்தங்களை கணேசையர் செய்துள்ளார். வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த கணேசையர், உடல்நலக் குறைவு காரணமாக 1958-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். என்றாலும், தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புகளும் திருத்தங்களும் இன்றளவும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது. தொல்காப்பியம் உள்ளவரை கணேசையரின் சீரிய தமிழ்த்தொண்டும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
  • #

Geetha SambasivamWed, Nov 9, 2011 at 1:50 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கேட்டதே இல்லை இவரைப் பற்றி இன்றே அறிந்தேன்.  இப்படிப் பல நல்ல அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் அறிமுகம் செய்து வைக்கும் உங்கள் பணி சிறக்கட்டும். நன்றி.

2011/11/8 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அயராது உழைத்த கணேசையர், உடல்நலக் குறைவு காரணமாக 1958-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். என்றாலும், தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புகளும் திருத்தங்களும் இன்றளவும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது. தொல்காப்பியம் உள்ளவரை கணேசையரின் சீரிய தமிழ்த்தொண்டும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
  • #
-- 

N. Kannan Wed, Nov 9, 2011 at 2:34 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
2011/11/9 Innamburan Innamburan <innamburan@gmail.com>
> ஒரு காரியம் செய்வோம். தமிழன்னை ஆராதனையை, நம்மால் இயன்றதற்கும். சற்றே அதிகமாக செய்வோம்.
>
ஆராதனை குறித்த என் அவதானங்களை என் சிங்கை இழையில் தொடர்கிறேன்.

நா.கண்ணன்
[Quoted text hidden]

annamalai sugumaran Wed, Nov 9, 2011 at 3:03 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
வர வர தங்கள் கட்டுரைகள் பொலிவுடன் திகழ்கின்றன .
நிறைய சிரமம் எடுத்தி*(பழைய )புதிய செய்திகளை தெரிவிக்கின்றீகள் .
நன்றி ஐயா 
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன்

2011/11/9 N. Kannan <navannakana@gmail.com>
[Quoted text hidden]


Subashini Tremmel Sun, Nov 13, 2011 at 6:08 PM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan , Subashini Kanagasundaram
அருமையான தகவல். நீங்கள் குறிப்பிடுவது போல யாழ்ப்பணத் தமிழின் அழகே அழகு தான்.

இப்பதிவில் நீங்கள் குறிப்பிடும் திரு.கணேசையரின் பேரன் தான் நமது குழுவில் இடம்பெற்றிருக்கும் சர்வேஸ்வரன். 

சுபா

2011/11/8 Innamburan Innamburan <innamburan@gmail.com>