Saturday, March 23, 2013

இன்னம்பூரான் பக்கம் – 13




இன்னம்பூரான் பக்கம் – 13
7 messages

Innamburan S.Soundararajan Mon, Mar 18, 2013 at 9:17 AM
To: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com
இன்னம்பூரான் பக்கம் – 13
‘…இந்த Authenticity பற்றி சில மேற்கோள்களை எழுதி வைத்துக்கொண்டேன். அது
என்னை படுத்திய பாடு பற்றி, இன்னம்பூரான் பக்கம் -13ல் எழுதுகிறேன். இந்த
கட்டுரை நீண்டு விட்டது…’ என்று 12வது பதிவில் கூறப்பட்ட நிகழ்வுக்கு
இப்போது மணி விழா எடுக்கலாம். அறுபது வருடங்கள் சுற்று ஒன்று முடிந்து
விட்டதல்லவா!

அந்த மேற்கோள்கள் Jean Paul Sartre என்ற ஃப்ரென்ச் சிந்தனையாளரின்
கருத்துக்கள். அதற்கு வருமுன் அவர் ‘சொற்கள்’ என்ற தலைப்பில் தன்னுடைய
பாலப்பருவத்தைப் பற்றி எழுதிய ஒரு கவிதையை சற்றே பார்ப்போம். ‘ஓதாமல்
ஒருநாளும் இருக்கவேண்டாம்’ என்ற வைரவரியை ஒரு சமயக்கோட்பாடு போல அவர்
அந்த சிறுவயதிலேயே போற்றியது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய தாத்தாவின்
நூலகம் தான் தன்னுடைய அறிவை வளர்த்தது என்று நினைவுகளை அசை போதும் அவர்
அந்த தேட்டல் தன் வாழ்நாள் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டது என்கிறார்.
சிறுபிள்ளை விளையாட்டுகளில் அவர் மனம் செல்லவில்லை. ‘புத்தகங்களே
எனக்குப் பக்ஷிகள், பறவைக்கூடுகள், எனக்குப் பிரியமான பிராணிகள், டேரா,
நந்தவனம்… இவ்விந்தையுலகின் வண்ணத்தையும், உருவங்களையும் சதா
மாற்றிக்கொண்டே இருக்கும் மாயக்கண்ணாடி, இந்த நூலகம்’ என்கிறார். அந்த
விந்தையை பார்த்து விடுவோம்.
இடைவிடாதத் தத்துவ விசாரணையும், கடைந்தெடுத்த சிந்தனை கருவூலங்களும்,
இலக்கியபடைப்பின் உன்னதமும், பிற்காலத்தில் அரசியல் அலசல்களும், அவருக்கு
ஆதரவு அளிக்கத் தயங்கினாலும், புகழை வாரிக்கொடுத்தன. எட்மண்ட் ஹோசர்ல்
என்ற ஜெர்மானிய சிந்தனையாளரின் சிந்தனைக்களம் தான் இவருடைய தத்துவ
விசாரணையின் வேர். எட்மண்ட் ஹோசரிலின் சிந்தனைக்களத்தின் ஊற்று தொன்மையான
இந்திய வேதாந்த விசாரணைகள் என்பதும் யாவரும் ஒத்துக்கொண்ட உண்மை. நாம்
இந்தக் கட்டுரையில் அந்தப்பக்கம் போனால், திசை மாறி விடுவோம். மனோதத்துவ
சாத்திரத்தில் (உளவியல் என்ற சொல் எனக்கு சம்மதம் இல்லை.) ஒரு நான்காவது
ராஜபாட்டை அது. முன்னுரைக்கே நூறு கட்டுரைகள் தேவை. எனவே, இந்த
Authenticity பற்றி மட்டுமே இன்று சிந்தனை பரிமாற்றம். ஆங்கில சொற்களை
கலப்பது இன்றியமையாதத் தேவை. பொறுத்தாள்க.
மனது வேறு;சித்தம் வேறு. சேதனா, பிரஞ்ஞை என்ற வடமொழிச்சொற்கள்
உணர்ச்சியையும், விழிப்புணர்வையும், மனத்தின் சிந்தனையை சித்தம்
அலசியபின் கிடைக்கும் மகத்துவத்தையும் உள்ளடக்கியும், கடந்தும் இயங்கும்
உயர் நிலைகள். அவற்றில் எது முதலில் வரும் என்று சொல்ல இயலாது. மனம்
இல்லாமல் சித்தம் இல்லை; சித்தம் இல்லாமல் சேதனம் இல்லை; சேதனம் இல்லாமல்
பிரஞ்ஞை இல்லை; பிரஞ்ஞை இல்லாமல் நிறைவாழ்வே இல்லை என்றால் அது
மிகையாகாது. அது மோனம் என்ற உச்சியை தொடவும் இல்லை. மோனம் பற்றிய
மேற்கத்திய சிந்தனைகள் அறிய ஆல்டோஸ் ஹக்ஸ்லீ என்ற சிந்தனையாளரின்
‘Perennial Philosophy’ படிக்க வேண்டும். அது முக்காலும் முச்சூடும்
ஹிந்து சனாதன கோட்பாடு என்பதால், முனைவர் பீ.டீ.ராஜுவின் ‘வேதாந்த
சித்தாந்தங்களும்’, ஜோசஃப் காம்ப்பெல்லின் மறை பொருள்
வ்யாக்யானங்களுக்குச் செல்ல வேண்டும். அதற்கெல்லாம் எப்போது காலம் வருமோ,
யான் அறியேன்.
அந்த சேதனா/ பிரஞ்ஞைக்கு ‘ஈகோ‘ எனப்படும் சுயமரியாதை கிடையாது.
‘நல்வழிக்கு ஒரு கையேடு‘ என்ற நூலில் Jean Paul Sartre இது சம்பந்தமான
ஆத்மவிசாரணை சிக்கல்களை அவிழ்க்க மிகவும் பிரயாசை
எடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் empirical ego என்று சொல்வது சேதனா
என்றும், அவர் transcendental ego என்று சொல்வது பிரஞ்ஞை என்றும்
எனக்குத் தோன்றுகிறது. மற்றவர்கள் விளக்கம் அளித்தால்,
நன்றியுடையவனாவேன். அவர் “accessory reflection.” என்ற சொல்லை
புகுத்தியுள்ளார். ஆம். அதுவும் சரி தான். இந்த சேதனா ஒரு புழு. அது
பிரஞ்ஞை என்ற பட்டாம்பூச்சியாக உருவெடுக்கும் முன் இந்த “accessory
reflection.” என்ற ‘ஊசலாடும் கருத்தரங்கம்’ தேவைப்படுகிறது. இல்லையெனில்,
அவரவர் செயல்களுக்கு மானசீக பொறுப்பு ஏற்றுக்கொள்வதிலிருந்துத் தப்பி விட
சாத்தியமாகிறது.
Jean Paul Sartre நம்மிடமிருந்து நாம் தப்பிச்செல்வது எப்படி என்பதை
விவரித்துத்தான் Authenticity என்ற கருத்தை விளக்குகிறார். ‘நான்’ என்ற
தன்மையிடமிருந்து விலக வேண்டும் என்கிறார். அது ஒரு விடுதலை என்கிறார்.
அந்த கருத்தை விளக்க, ipseity என்ற சொல்லைப் புகுத்துகிறர். அதுவும் ஒரு
விதத்தில் சுயம் தான். தனக்குத் தானே அளித்துக்கொள்ளும் மரியாதையை
விலக்கிய சுயபாவம் தான் ipseity. இதை புரிந்துகொள்வது எளிது அல்ல.
சுகபிரம்மரிஷியை நினைத்துக்கொண்டால், ஓரளவு புரியலாம். இந்த சுயபாவம்
தான் படைபாற்றலையும், சத்தியமான விடுதலையையும், தாராள மனப்பான்மையையும்
அளிக்கிறது என்பது அவருடைய கூற்று. அது தான் Authenticity. அது ஒரு
மெருகேற்றிய சிந்தனை மட்டுமே. அதில் ஆழ்ந்த சிந்தனை இல்லை என்று
சொல்பவர்களும் உண்டு. அதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனால், அது ஒரு
பட்டிமன்ற விவாத அணுகுமுறை மட்டுமே. சிந்தித்துப் பார்த்தால், அது ஒரு
வாழ்நெறி என்பது புலப்படும் என்பதற்கு, நான் பட்ட பாடு நல்ல உதாரணம்.
அந்த புத்தகம் வாங்கியதில், கையில் இருந்த காசு காலி. அடுத்த வேளை
சோற்றுக்கு வழியில்லை. ஆனால், Jean Paul Sartre என் முழுமனதையும்
ஆக்ரமித்துக்கொண்டார். அவருடைய Authenticity சிந்தனைகள், சேதனா, பிரஞ்ஞை
ஆகியவை தான் என்னை தத்துவ விசாரணையில் ஆழ்த்தியது. லெளகிக உலகில் அந்த
விசாரணை மிகவும் உதவியது. ஒரு தேர்வின் போது நேர்காணலில் அளவளாவிய
விஷயங்களுக்கு இவை தான் எனக்குத் துணை. வெற்றி கிடைத்தது. என் இலக்கு
நோக்கி வாழ்வியலை அமர்த்திக்கொள்ள முடிந்தது. அது பழைய கதை. இன்றளவும்
அந்த நான்காவது ராஜபாட்டையில் நடப்பது மனதுக்கிசைவாக இருக்கிறது. ஆக
மொத்தம் ஆத்மவிசாரணை நல்லதொரு பாதை.
எந்த அளவுக்கு இம்மாதிரியான கட்டுரைகளை வாசகர்கள் வரவேற்கிறார்கள் என்று
தெரியவில்லை. அடுத்தப்பக்கத்தில் தடம் மாறும்.
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk

உசாத்துணை:
http://www.jeanpaulsartre.org/index.html
நன்றி: அதீதம் March 18 03 2013:
http://www.atheetham.com/?p=4252

பழமைபேசி Mon, Mar 18, 2013 at 11:45 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
விடுப்பு நாளில்தான் இருந்து படிக்கணுமுங்க ஐயா. வாசித்தால் மட்டும்
போதாது என்பதால்!!

On Mar 18, 5:17 am, "Innamburan S.Soundararajan"
[Quoted text hidden]
--


Innamburan S.Soundararajan Mon, Mar 18, 2013 at 11:47 PM
To: mintamil@googlegroups.com
ரைட்டு, தம்பி.
[Quoted text hidden]

sk natarajanWed, Mar 20, 2013 at 1:38 AM
To: vallamai@googlegroups.com
Cc: mintamil , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
அருமையான பகிர்வு ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

2013/3/18 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
இன்னம்பூரான் பக்கம் – 13

வித்யாசாகர் Wed, Mar 20, 2013 at 8:59 PM
To: vallamai@googlegroups.com
Cc: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
//நான்’ என்ற தன்மையிடமிருந்து விலக வேண்டும் என்கிறார்.

அது ஒரு விடுதலை என்கிறார்.
தனக்குத் தானே அளித்துக்கொள்ளும் மரியாதையை
விலக்கிய சுயபாவம் தான் ipseity.
அது ஒரு
மெருகேற்றிய சிந்தனை மட்டுமே. சிந்தித்துப் பார்த்தால், அது ஒரு
வாழ்நெறி என்பது புலப்படும் என்பதற்கு, நான் பட்ட பாடு நல்ல உதாரணம்//

தாரணம் சொல்லி எழுதுங்கள் ஐயா. இதுபோல் எழுதுவது அழியாநிலையைக் கொண்டது. யாருக்குள்ளேனும் ஒரு வரி, ஒரு வார்த்தை பற்றிக்கொண்டு எரியும். பீறிடும் வெளிச்சத்தைக் காட்டும் சிறு துவாரம்போன்ற வார்த்தைகளுக்கு அந்த துவாரத்தின் வழியேத் தெரியும் அகண்ட வானம்' வண்ணமய உலகத்தைப் போல' பல அர்த்தங்கள் கிடைக்கலாம். அதற்கான சிறுகீற்றுகளை வார்த்தைகளின் வழியே பட்டுத் தெரிக்கச் செய்யுங்கள். உங்களின் வழ்பனுபவத்தின் வழியேப் பேசுங்கள். இன்னும் எளிமையாகப் புரியவரும். எங்களுக்கும் வழிகாட்டும். உடல்நலம் இடம் தருமெனில் நிறைய எழுதுங்கள். நன்றியாயிருப்போம்..

உடல்நலத்திற்கும் நிறைய வேண்டிக்கொள்கிறோம்..

வணக்கமும் அன்பும் ஐயா...

வித்யாசாகர்




Innamburan S.Soundararajan Wed, Mar 20, 2013 at 10:40 PM
To: 
Cc: vallamai@googlegroups.com, mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள்
உங்கள் அன்புக்கு நன்றி, வித்யாசாகர். இன்று மத்தியானம் என் மகனுடன்
அளவளாவும் போது, 'நான்' என்ற தன்மையிலிருந்து நான் முற்றிலும் விலக
முடியவில்லை என்ற எண்ணம் தலை தூக்கியது. நான் ஒரு சராசரி பலவீனமான
மனிதன்.


இந்த நான் ‘விலகும்’ தன்மை 'அடாது மழை பெய்தாலும் விடாது நடைபெறும்'
நிகழ்வு எல்லாருடை வாழ்விலும். விலக முயற்சி செய்வதிலேயே வாய்மை
திகழ்கிறது. நீங்கள் கேட்டதினால் இந்த மேற்கோள் என்னை உசுப்பிய நிகழ்வு
ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். என் தம்பிக்கு 30 வருடங்கள் முன்னால்
சிறுநீரகங்கள் இரண்டும் பழுதடைந்தன. உடன் பிறந்தவர்கள் குறைவில்லை
என்றாலும், 50 வயது ஆன நான் தானம் செய்தால் தான் உண்டு என்ற நிலை. என்
மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. மகவுகள் தலையெடுக்க வில்லை. டாக்டர் ஒரு
வாய்மை மனிதர். உன் உயிருக்கும் ஆபத்து உண்டு என்று திட்டவட்டமாக
சொல்லிவிட்டார். அவருடைய சொல்,' உன் உடலுக்கு, எங்கள் கத்தியும் ஒன்று
தான். பிச்சுவாவும் ஒன்று தான். உனக்கு ஏற்கனவே நீரழிவு வியாதி....'.
ஆகவே அச்சம் மேலோங்கியது. என் நலம் பேணுபவர்கள் யாவரும் எதிர்த்தனர்.
இந்த சூழ்நிலையில் எப்படியோ நடந்து முடிந்தது, வெற்றிகரமாக. இன்று அந்த
தம்பி இவ்வுலகில் இல்லை என்றாலும், நடந்தது வாய்மைக்கும் ஒரு பரிக்ஷை.
சிறுநீரக தானம் ஒரு தொடர்கதை. மருத்துவ அறிவுரைப்படி அவ்வப்பொழுது என்
ரத்தத்தை மூன்று முறை, சில மாதங்களுக்குள் செலுத்தி, அவனுடைய உடலை
பழக்கப்படுத்த வேண்டும், முறையாக செய்தால். அதற்கு நான்
அஹமதாபாத்திலிருந்து சில இரவுகளில் சென்னை  வந்து கொடுத்து விட்டு, உடனே
திரும்பினால் தான், என் குடும்பத்தை கவனிக்க முடியும். அப்படி வரும்போது
எல்லாம் தனிமை. எங்காவது ஓடிப்போய்விடலாமா என்று தோன்றும். வாய்மை என்ற
சொல்லை authenticity என்ற பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன்.

அன்புடன்,

இன்னம்பூரான்
20 03 2013

http://innamburan.blogspot.co.uk

வித்யாசாகர் Thu, Mar 21, 2013 at 2:03 PM
To: "Innamburan S.Soundararajan"
Cc: vallamai@googlegroups.com, mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
ல்லவராய் வாழ்தல் ஒரு சுகம் ஐயா. உண்மையாய் இருக்கையில் சூழ்நிலைக்காட்பட்டு விழும் ஒரு துளி கண்ணீரும் கடலின் கனத்தைக் கொண்டதாயிருக்கிறது. மனதில் உறையும் பெருந்தன்மை ஆத்ம சாந்தியை பெறுக்கிவிடுகையில் காணும் உலகம் மிகச் சிறியதாகிப் போகிறது. ஒரு ஆன்மாவாக நாம் உலக ஜீவராசிகளிலெங்கும் வியாபித்து நிற்குமொரு பெருமனசு பரமசுகத்தின் பாடுபொருள். அது எல்லோருக்கும் அத்தனை வாய்த்துவிடுவதில்லை. உங்களுக்கு நிறைய வாய்த்திருப்பதை அந்த ரயில் பயணத்தின் தனிமைகள் சன்னலோரம் பார்க்குமந்த சோகப் பார்வையுள் பொதித்திருப்பதை அறிந்திருப்பீர்களோ. நான் அறிகிறேன். இம்மடலை படித்தோர் அறிந்திருப்பர். மனதிற்குள் நம் நட்புறவுகள் அனைவருக்கும் ஒரு பிரார்த்தனை கசிந்திருக்கும்...

கடவுள் புரிந்துகொள்வார் ஐயா..

வித்யாசாகர்
2013/3/21 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
[Quoted text hidden]



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்: 
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழைமாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்




ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்
3 messages

Innamburan S.Soundararajan Fri, Mar 22, 2013 at 3:44 PM
To: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com


ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்
Inline image 1

சில நிமிடங்களுக்கு முன் வந்த செய்தி என்னை உலுக்கி எடுத்து விட்டது. ஆம். சினுவா அசெபே (Albert Chínụ̀álụmọ̀gụ̀ Àchèbé) தனது 82வது வயதில் காலமானார். அலெக்ஸ் ஹேலியின் ‘வேர்கள்’ என்ற நூலைப் போல என்னை மிகவும் பாதித்த நூல், இவர் எழுதிய ‘உடைந்து போன ஜாமான்’ (‘Things Fall Apart’). அந்த சில மணித்துளிகளுக்குள் , உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் இரங்கல் வந்து குவிந்தன. அவர் எழுதிய 20 நூல்களில் புதின உருவில் பாமர கீர்த்தி பரிமளித்தது. நைஜீரியாவில் எத்தனையோ மாற்றல்கள், நல்லதும்,கெட்டதுமாக, கலந்து கட்டி. ஆப்பிரிக்க இலக்கியத்தின்  பிதாமஹனான சினுவா அசெபே அவர்கள் படைத்த ஓகன்குவா என்ற விவசாயி அங்கு நிரந்தர பிரஜை. ‘உடைந்து போன ஜாமான்’ என்ற அழியாச்சுடரான நூலின் தலைமாந்தரான ஓகன்குவா கலோனிய ஆட்சிக்கு எதிர்நீச்சல் அடித்து பழமையான மரபுகளை காப்பாற்றுகிறார். ( தமிழா! கவனி.) அந்த நூல் 10 மிலியன் பிரதிகள் விற்றன. பல மொழிகளில் பிரசுரம். உலகெங்கும் பல பள்ளிகளில் பாடபுத்தகம். ஏன்? அதில் ஒரு வாய்மை (authenticity) இருந்தது. அனாயசமாக பழமொழிகளையும், தேசாபிமான கருத்துக்களையும், அடிமைத்தளை களைவதை பற்றியும் எழுதிய, அவரை பற்றி ஓரளவாவது கூற ஒரு நூலே எழுத வேண்டும். ஜோசஃப் கோன்ராட் பிரபல எழுத்தாளர். அவருடைய இனமோகத்தை சினுவா அசெபே கண்டித்ததின் விளைவாக, கான்ராடின் புகழ் மேற்கத்திய நாடுகளிலேயே மங்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தன்னுடைய தாய்நாடாகிய நைஜீரியாவின் ஊழல்களையும், திறனற்ற நிர்வாகத்தையும் கண்டித்து எழுதிய சினுவா அசெபே, அந்த அரசின் விருதுகளை நிராகரித்து விட்டவர்.
சில புகழுரைகள்: 
நெல்சன் மண்டேலா: சினுவா அசெபே ஆப்பிரிக்காவை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். அவருடன் இருந்தால், சிறையின் மதில்கள் சிதைந்து விடும்.
நைஜீரியன் அதிபதி குட்லக் ஜொனாதன்:  சினுவா அசெபே நைஜீரியாவின் இலக்கியத்தின் தந்தை, கலாச்சார குரு, தேசாபிமானி, கலைஞர். என்றும் எங்கள் மக்களின் மனதில் வாழும் அமரர். அவரது வாய்மை எங்களுக்கு பெருமிதம் தருகிறது...’
அவரது குடும்பம்:’  அவருடைய ஞானமும், தைரியமும் எல்லாருக்கும் ஊக்கமளித்தது.
தன்னை பற்றி சினுவா அசெபே ஒரு நேர்காணலில் 1994ல் சொன்னது: ‘ சிங்கங்களுக்கு அந்த இனத்து வரலாற்றாசிரியன் வரும் வரை, எல்லா வரலாறும் வேட்டைக்காரனின் மெய்கீர்த்தி பாடும்.’ என்று எங்கள் பழமொழி ஒன்று கூறுகிறது. அது என்னை வரலாற்று ஆசிரியனாக்கி விட்டது. நான் மட்டும் ஆசிரியன் அல்ல. எல்லாரும் கலந்து எழுதியது. வேட்டைக்காரன் எழுதியதும் வேண்டும். அப்போது தான் சிங்கத்தின் பெருமிதம், தைரியம், இன்னல்கள் எல்லாம் தெரியும்.
என் வருத்தம் எனக்கு; இரங்கல் கட்டுரை முற்றிற்று.
இன்னம்பூரான்
22 03 2013
படித்தது: பல ஊடகங்கள்



Tthamizth Tthenee Fri, Mar 22, 2013 at 3:51 PM
To: tamizhsiragugal@googlegroups.com
Cc: mintamil , Manram , thamizhvaasal , vallamai@googlegroups.com, Innamburan Innamburan

 
சிலரின் மறைவு பாதிக்கும்
உணர்ந்தோரை  சோதிக்கும்
 
நானும் உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2013/3/22 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

 

sk natarajanSat, Mar 23, 2013 at 2:28 AM
To: tamizhsiragugal@googlegroups.com
Cc: mintamil , Manram , thamizhvaasal , vallamai@googlegroups.com, Innamburan Innamburan
சினுவா அசெபே அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2013/3/22 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

ஒரு ஜனனத்தின் அஸ்தமனம்

அன்றொரு நாள்: அக்டோபர் 4: சுப்ரமண்ய சிவா




 அன்றொரு நாள்: அக்டோபர் 4: சுப்ரமண்ய சிவா

I
 அன்றொரு நாள்: அக்டோபர் 4
------------------------

From: Innamburan Innamburan <innamburan@gmail.com>
Date: 2011/10/4
To: mintamil <minTamil@googlegroups.com>
Cc: Innamburan Innamburan <innamburan@googlemail.com>


அன்றொரு நாள்: அக்டோபர் 4
‘லொட்!லொட்! ‘லொட்!லொட்!  ‘லொட்!லொட்!
இது என்ன ஊன்றுகோலா? அடிக்கற பெருந்தடியா? அதை விட்றா! அவர் கண்களிலிருந்து தீப்பொறி பறக்கிறதே. பயமா இருக்கு. தொள, தொளன்னு சொக்காய். பஞ்சகச்சம். கோணலா தலைப்பா. உள்ள நுழையறபோதே அதட்டறாரே! அதுவும் சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார். அதுவா? சுப்ரமண்ய சிவா வந்திருக்கார். வேப்பமரத்தடிக்கு கூட்டிண்டு போ. அவரோட பேச்சுக்கொடுக்காதே. அவா பேசிக்கட்டும். இடம்: சாது அச்சுக்கூடம்.நவசக்தி ஆபீஸ். திரு.வி.க. தான் சின்ன முதலியார். அவ்வப்பொழுது நவசக்தியில் எழுதும் சிவா அவர்கள் சண்டை போட வந்திருக்கிறார். பரதநாட்டிய நர்த்தகி ருக்மணி தேவியை ஜார்ஜ் சிட்னி அருண்டேல் திருமணம் செய்வதை ஆதரித்த திரு.வி.க. அவர்களை நாவினால் சுட வந்திருக்கிறார், இந்த தீப்பொறி.
(தனிச்செய்தி: ஹிந்து, சுதேசமித்திரன் எல்லாம் இந்த விஷயத்தில் திரு.சிவா கட்சி.)

[‘Saunters in Subramania Sivam (Sivam) (1884-1925), the spit-fire patriot clad in a loose shirt, furled dhoti and tilted turban tut-tuting his inseparable staff. The staff and his flowing beard remind one of a domineering Moses. Having shattered the calm in Navasakthi [4] office, he aggravates the situation by loudly hailing for the ‘castor-oil Mudaliyar’, his epithet for ThiruViKa. His other epithets for him are, ‘vendaikkai’ and ‘vazha vazha’, all insinuating that there is no ‘cut and thrust’ to his writings. A contributor to the weekly himself, he had come to tongue lash him for supporting an Indian marrying a foreigner. Rukmini Devi (1904-1986), the classical dancer, was marrying George Sidney Arundale (1878-1945), the Theosophist. Leading lights like the Hindu and Swadesamithran had deplored it.] 

ஒழுங்கா இருக்கு! போங்கோ! திரு.வெ.சாமிநாத சர்மா அவர்கள் எழுதியதை ஆங்கிலாக்கம் செய்து, அதை தமிழாக்கம் செய்தது மேலே. எல்லாம் அடியேன் உழவாரப்பணி தான்.


அக்டோபர் 4, 1884 சிறைப்பறவையும், விடுதலை வீரரும், ஆன்மிக எழுத்தாளரும் ஆன சுப்ரமண்ய சிவா அவர்களின் அவதார தினம். அவர் நீதி மன்றத்தில் அளித்த வாக்குமூலங்களில் ஒன்று:

''நான் ஒரு சந்யாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தில் முக்கியாவது - அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம் அதை அடையும் மார்க்கம். புறக்கணிப்பது - சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் - சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேச கல்வி இவையேயாகும்.''

நான் சம்பந்தப்பட்டவரை இவரை போன்ற சான்றோர்கள் அவதார புருஷர்களே. அப்படித்தான் எழுதுவேன். நாற்பதே வருடங்கள் வாழ்ந்து, ஜூலை 23, 1925ல் மறைந்தார். அதில் 14 வருடங்கள் [1908 -22] ஜெயிலுக்குப் போக வேண்டியது;வரவேண்டியது. குஷ்டரோகம் வேறு சிறைச்சாலை தந்த பரிசு. அது பெருவியாதியாம். ரயிலில் ஏற அனுமதி இல்லை. சிவா அவர்கள் கால்நடையாகவும், கட்டை வண்டியிலும், தமிழ் நாடு முழுதும் சுற்றினார். 2011 ஜூலை மாதம் பேப்பர்க்காரங்க ந்யூஸ்: இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவு; 48 அடி உயர கோபுரம். 40 லக்ஷம் ரூபாயாம். பெண்ணாகரத்தில் சிவா அவர்களுக்கு மணிமண்டபமாம்! அவருக்கு தெரிஞ்சா என்ன சொல்வாரோ? ஏன்னா நீங்க ம.பொ.சிவஞான கிராமணி என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ? பெரிய மீசையும், பெரிய ஆசையும் ( நாட்டின் மேல் தான், ஸ்வாமி!) வச்சவருக்கு கின்னஸ் பரிசு என்றால், இவருக்குத் தான் போகும்! அவர் ஒரு புத்தகம் போட்டார், "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' என்று. சிலப்பதிகாரம் பற்றி இந்த ‘சிலம்புச்செல்வர்’் எழுதிய சில நூல்களை, ஒரு மின் தமிழருக்கு பரிசளிக்க வாங்கியபோது, "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' இல் படித்தது

"...சிதம்பரம் பிள்ளையவர்களுடைய அந்திம நாட்கள் வறுமையால் வாடிப்போனதாக நேர்ந்தது தமிழ்நாட்டின் தப்பிதமேயாகும். அடிமைத்தனம் மிகுந்து விலங்கினங்கள் வசிக்கும் காடாந்தகாரமாக இருந்த தமிழ் நாட்டில் கல்லையும் முள்ளையும் களைந்து படாத துன்பங்களைப் பட்டுப் பண்படுத்தி தேசாபிமானம் என்ற விதையை நட்டுப் பயிர்செய்து பாதுகாத்த ஆதி வேளாளனாகிய சிதம்பரம் பிள்ளை துன்பம் நிறைந்த சிறைவாசத்தையும் கழித்து வெளியே வந்தபோது தமிழ்நாடு அவரைத் தக்கபடி வரவேற்று ஆதரிக்கத் தவறிவிட்டது...
சுப்ரமண்ய பாரதியார் சோறின்றி வாடிக்கொண்டே பாடிக்கொண்டு மறைந்தார். சுப்ரமண்ய சிவா ஊரூராகச் சென்று பிச்சைக்காரனைப்போல் பிழைத்து மாண்டார். தமிழ்நாட்டுத் தியாகிகளுள் தலைவரான சிதம்பரம் பிள்ளை வறுமையில் வாடியும் ஓசையில்லாமல் தமது கடைசி நாட்களைக் கஷ்டங்களிலேயே கழித்து ஒழித்தார்''.

அணிந்துரையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: (1946 ம் வருட இரண்டாம் பதிப்பு)
"அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் அனுமதியுடன் டாக்டர் பட்டாபி சீதாராமய்யா வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில் செüரிசெüரா சத்தியாக்கிரகம், நாகபுரிக் கொடிப்போர், பர்தோலி வரிகொடா இயக்கம் ஆகிய சிறுசிறு இயக்கங்களைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளனவே தவிர, சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரிகூட, ஏன் ஒரு வார்த்தைகூட இல்லை'' என்பதை "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. பதிவு செய்யும்போது அன்றும் எனக்கு விழியில் நீர்கோத்தது; இன்றும் கோத்தது...’
ஆறாம் திணையில் படித்ததில் ஒரு பகுதி:
வ.உ.சி.யையும் பாரதியையும் பற்றித் தமிழகம் அறிந்தளவிற்கு சிவம் கண்டறியப்படவில்லை. சுப்பிரமணிய சிவம் (1884-1925) தமிழக சமூக அரசியல் ஆன்மிகக் கருத்தியல் தளங்களில் இயங்கிய முனைப்பு தீவிர பரிசீலனைக்கும் கவனிப்புக்கும் உரியது. வழக்கு விசாரணையின்போது நீதிபதியின் முன் சிவம் கொடுத்த வாக்குமூலம், அவரது நோக்கு? அவர் யார்? என்பதை நன்கு தெளிவாக்குகிறது.

தமிழ் நேஷன் என்ற கழட்டிவிடப்பட்ட இணைய தளத்தில்:

‘...சுதந்திர போராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும்.
இதில் விடுபட்டுப்போன பெயர்களும் நிகழ்ச்சிகளும் ஏராளம். எத்தனையோ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை...

...சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார்...இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை )... 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை...

...1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்...

சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர்... சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்ச சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கெலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்ழய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மொசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வை கூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.

1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர்...தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்...1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார்.
சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் - காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார்...அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, பொராட்டங்களோ இல்லை என்றெ சொல்லலாம். அவற்றில் எல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துணிச்சல் மிக்கவர்.
காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம்... தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்...சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வார்ழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முழத்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார். அவரும் நாடகத்தில் பங்கெற்று நடித்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார். 
எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.
இன்னம்பூரான்
04 10 2011

SubramaniyaSiva.jpg
உசாத்துணை:

.http://www.dinamani.com/edition/story.aspx?Title=இந்த%20வாரம்%20%20கலாரசிகன்&artid=379074&SectionID=179&MainSectionID=17

----------
From: Geetha Sambasivam
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com


சத்தியம்.  பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் படிக்கச் சுவை.  நன்றி பகிர்வுக்கு.

2011/10/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>
எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.
இன்னம்பூரான்
04 10 2011

உசாத்துணை:

.http://www.dinamani.com/edition/story.aspx?Title=இந்த%20வாரம்%20%20கலாரசிகன்&artid=379074&SectionID=179&MainSectionID=17

From: Nagarajan Vadivel
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com


 
 
 
//சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார்//
காஞ்சிபுரம் முதலியார்களுடன் விளக்கெண்ணெய்க்கு என்ன தொடர்பு? ஏண் விளக்கெண்ணெய் என்ற அ்டைமொழி ஒட்டிக்கொண்டது?
ஒரு புனைவு முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்பார்கள்.  அதற்கு இரு விளக்கங்கள்
1. சரியான ஊணவுண்ணப் பசை இல்லாதபோதும் உண்ட இலையை வெளியில் எறியும்போது அதில் விளக்கெண்ணெய் தடவி நெய்ச்சோறு உண்டதாக ஜம்பம் காட்டுவார்கள்
2. பொருள் வசதி இல்லையென்றாலும் வறுமையில் இருந்தாலும் அவர்கள் முற்றத்தில் உள்ள விளக்குக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டு ஜம்பம் காட்டுவார்கள்
காஞ்சிபுரத்தி்ல் பிறந்தாலும் அவர் முன்னோர் பிறந்த திருவாரூரைப் பெயரில் வைத்துள்ளதும் அவர் இசையில் சிறந்து விளங்கியதும் அவர் மைக்கோளர் அல்லது சைவ முதலியாராக இல்லாமல் இசை வேளாளராக இருந்திருக்கலாம் 
திருவாரூரில் பிறந்த்த இன்னொரு இசைவேளாளர் கலைஞர் கருணாநிதி குடும்பமும் முதலியார் என்றே கூறிக்கொள்வர்
எனவே சுப்ரமணிய சிவா திட்டும்போது சின்ன முதலியார் விளக்கெண்ணெய் வழவழ வெண்டைக்காய் என்று சரியாகத்தான் திட்டியிருக்கிறார்
கட்டுரையின் மற்ற பகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்
நாகராசன்
காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்
2011/10/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>


----------
From: Innamburan Innamburan <innamburan@gmail.com>
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com


நன்றி பல. திரு.வி.க. அவர்கள் சைவ வேளாளர் தாம். நான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினேன். பிரசுரம் செய்வது எப்படி என்று தெரியவில்லை, திடீரன்று இங்கு வந்து விட்டதால்.  திரு.வி.க. அவர்களின் அலைவரிசையும், சிவா அவர்களின் அலை வரிசையும் சிறிது வேறுபட்டவை. அதனால் தான் இந்த அடை மொழிகள். இந்த நிகழ்வை ஆவணப்படுத்தியவர் திரு.வெ, சாமிநாத சர்மா. தற்காலம், தமிழ் மரபு கட்டளைக்கு இந்த பாமர கீர்த்திகளை ஆதாரத்துடன் கூறக்கூடியவர், திரு.பெ.சு.மணி. அவரை நேர் காணல் செய்து பயன் பெறலாம். எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர்.
இன்னம்பூரான்
04 05 2011

----------
From: N. Ganesan
Date: 2011/10/4
To: மின்தமிழ் <mintamil@googlegroups.com>





On Oct 4, 7:54 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> //சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார்//
> காஞ்சிபுரம் முதலியார்களுடன் விளக்கெண்ணெய்க்கு என்ன தொடர்பு? ஏண்
> விளக்கெண்ணெய் என்ற அ்டைமொழி ஒட்டிக்கொண்டது?
> ஒரு புனைவு முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்பார்கள்.  அதற்கு இரு
> விளக்கங்கள்
> 1. சரியான ஊணவுண்ணப் பசை இல்லாதபோதும் உண்ட இலையை வெளியில் எறியும்போது அதில்
> விளக்கெண்ணெய் தடவி நெய்ச்சோறு உண்டதாக ஜம்பம் காட்டுவார்கள்
> 2. பொருள் வசதி இல்லையென்றாலும் வறுமையில் இருந்தாலும் அவர்கள் முற்றத்தில்
> உள்ள விளக்குக்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டு ஜம்பம் காட்டுவார்கள்
> காஞ்சிபுரத்தி்ல் பிறந்தாலும் அவர் முன்னோர் பிறந்த திருவாரூரைப் பெயரில்
> வைத்துள்ளதும் அவர் இசையில் சிறந்து விளங்கியதும் அவர் மைக்கோளர் அல்லது சைவ
> முதலியாராக இல்லாமல் இசை வேளாளராக இருந்திருக்கலாம்
> திருவாரூரில் பிறந்த்த இன்னொரு இசைவேளாளர் கலைஞர் கருணாநிதி குடும்பமும்
> முதலியார் என்றே கூறிக்கொள்வர்
பாரதிதாசனாரும் இசைவேளாளர். மிக இளமையிலேயே
சங்கீதம், முருகன் மீதும், கீர்த்தனைகள் பாடியவர்.
சீகாழி முத்துதாண்டவர், தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை,
... தமிழின் இசைவளம் கூட்டியவர்கள் இசைவேளாளர்களே.
தமிழ் சினிமாவின் முதல் 50 ஆண்டுகளில் நடிகைகள்
பலரும் காவிரிக்கரை கிராமங்களின், மற்ற ஊர்களின்
நட்டுவனார் குடும்பங்கள். குலத்தொழிலாக சங்கீதமும்,
தமிழும் பின்னி இருந்தது சினிமா, டிவி போன்றவற்றால்
வளர சாத்தியம் ஆனது. ஏ. ஆர். ரகுமானின் தந்தையாரும்
சென்னைக்கருகே உள்ள சிற்றூரின் பழங் கோயிலில்
இசை வளர்த்த குடும்பத்தவரே. அவர்களும் முதலியார்
என்பார்கள்.

நா. கணேசன்


----------
From: Innamburan Innamburan <innamburan@gmail.com>
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com


To be exact, திரு.வி.க. துளுவ வேளாளர்.

----------
From: Nagarajan Vadivel
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com


முதலியார் என்ற ஜாதி தமிழகத்தின் பல பகுதிகளில் மற்ற ஜாதியினரையும் குறிப்பிடுவதா்க அமைந்து குழப்பத்தை உருவாக்குகிறது
ஆற்காட் முதலியார், கைக்கோளர், செங்குந்தர் இசை வேளாளர், துளுவ வேளாளர் என்று பல பெயர்கள்.  உயர்ஜாதி பிற்பட்டோர் என்று சமூகத்தில் முன்னேறியவர் பின் தங்கியவர் என்ற இரு நிலைகள்
 
நீதிக்கட்சியின் கடாட்சத்தால் கல்விபெற்று அரசு அலுவலகத்தில் முக்கிய பதவிகளைப் பெற்று ஒரு வலிமைபெற்ற குழுவாக உருவானது
சுய்ரியாதை சுதந்திரப்போராட்டம் காங்கிரஸ் திராவிட அரசுகளில் முதல்வர் பதவிவரை கைவசப்படுத்திய சாதனை என இந்த சாதிப்பிரிவு தமிழகத்தின் சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றது பெருமைக்குரிய ஒன்றாகும்
நாகராசன்
2011/10/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>
To be exact, திரு.வி.க. துளுவ வேளாளர்.



----------
From: rajam
Date: 2011/10/4
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan <innamburan@googlemail.com>


சத்தியம்! ஏகப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு! நன்றி! 

--

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1




அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1
8 messages

Innamburan Innamburan Sat, Sep 10, 2011 at 7:38 PM

To: thamizhvaasal
Cc: Innamburan Innamburan


அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1
இறை வணக்கம்:
‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்; 
சீர்பெற்றிட நீ யருள் செய்வாய்,
வையந் தனையும் வெளியினையும்
வானத்தையு முன் படைத்தவனே!
ஐயா, நான் முகப் பிரமா,
யானைமுகனே, வாணிதனைக்
கையாலணைத்துக் காப்பவனே,
கமலா சனத்துக் கற்பகமே.’
~ மஹாகவி பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை: விருத்தம்

குரு வந்தனம்:

பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி, அவ்வப்பொழுது, குட்டியும், தட்டியும், மஹாகவியை பற்றி, திலகர் மடலில், ‘அதிக’ பிரசங்கிக்க வைத்து, கல்விக்கனல் மூட்டிய பாலு சாரை நெடுஞ்சாங்கிடையாக தெண்டன் சமர்ப்பிவித்த விஞ்ஞாபனம். அன்றைய நாள் செப்டம்பர் 11, 1939/40? அல்லது அவருடைய ஜன்மதினம்? நினைவில்லை. ஆனால், ஒரு பெரியவர் மேடை ஏறி வந்து, என்னை ஆரத்தழுவி ‘ஓ’ என்று அழுதார். ஆனந்தக்கண்ணீர். ஆத்துக்கு வந்த பின், சித்தியாவும் அழுதார். அத்தையும், சித்தியும் சுத்திப்போட்டா. இப்போ புரியது, பாலு சார். கல்வியும் தொடருகிறது. கனலும் கணகணப்பு. பக்தியும் பரவசம்.

கவி வந்தனம்:
~ தமிழன்னையின் அருமந்த புதல்வனும், 
உயர் ஆஸனத்தில் அமர்ந்து எமையெல்லாம் 
பாலிக்கும் கவிஞர் குல விளக்கும் 
ஆகிய மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் 
~ பராக்! பராக்! 
~ ராயப்பேட்டை வேப்பமரத்தடி தமிழ் மொழியும், தேசபக்தியும் கலந்த திருக்கண்ணன் அமுதாகிய தேசபக்தன் இதழ் அச்சாபீஸ்ஸில். வந்துட்டார்! வந்துட்டார்! இது பரலி.சு.நெல்லையப்பர். 
வருணனை:வெ.சாமிநாத சர்மா. 
போதிமரத்தடி தென்றல்: திரு.வி.க.

‘வந்தாரே அமானுஷ்யன்; 
சட்டையில் காலரில்லை; 
ஆனா டை கட்டி தொங்குதடா, 
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு, 
தோளின் மேல் சவாரி, 
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே. 
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல. 
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு. 
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே! 
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு? 
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா? 
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு? 
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா; 
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி!  ஆதி பராசக்தி! 
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி. 
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!

(கவிதை நடை இல்லை. யதுகை? மோனை? பாலு சார் அதை சொல்லித்தரல்லை. வினோத்தின் மென்பொருள் வரலையப்பா, அப்போது! நான் என்றோ ஆங்கிலத்தில் பதித்த வருணனை:வெ.சாமிநாத சர்மா தான் மூலம். இது நிஜம்.)

இன்றைய தினம் 1921ம் வருடம் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அமரரானார். அவரை பற்றி எழுத பல சான்றோர்கள் இருக்கும் இந்த அவையில் மாணவனாகிய எனக்கு எழுத தயக்கம். காலதேசவர்த்தமானம் கருதி, ஒரு சொல் பேசி விட்டு, நகர்ந்து விடுகிறேன். பழித்து அறிவுறுத்துகிறார், ‘நடிப்புச் சுதேசிகள்’ என்ற கிளிக்கண்ணி கவிதை ஒன்றில். இன்று பாரதமாதாவை வற்புறுத்தி, இற்செறித்து, கண் கலங்க வைத்திருக்கும் நடிப்பு சுதேசிகளை என்றோ எடை போட்டு,
‘உரமும், திறமும் அற்றவர்கள், வாய்ச்சொல்லில் மட்டும் வீரம், கூவுவதோ பிதற்றல், அந்தகன், அலி, கண்ணிருந்தும் குருடன், மந்திரத்தில் யந்திரம் தேடுபவன், செய்வதறியாதவன், ஆன்மிகம் பேசும் நாத்திகன்,பேதை, அஞ்சி நடுங்குபவன், ஊமை, வாழத்தகுதியற்ற ஈனன், பொய்யன், ஆஷாடபூதி, அற்பன், செம்மை அறியாதவன், சோம்பேறி, வெத்து வேட்டு என்று பொருள்பட, வெளிப்படையாக, எளிய தமிழில், கண்டனம் செய்திருக்கிறார். ஈற்றடியில் ‘...அதை மனத்திற் கொள்ளார்’ என்று சாடியிருப்பதையாவது நாம் கவனத்துடன் பார்த்து, சுய விமரிசனம் செய்து கொள்வது சாலத்தகும்.. 

ஆம். நெஞ்சில் உரம் இருந்திருந்தால், ஊழல் மிகுந்திருக்காது. திறன் இருந்திருந்தால், லஞ்சத்தை ஒழித்திருப்போம். வாய்ச்சொல்லிலும் மட்டும் இல்லாமல், மனவுறுதியிலும், உடல் வலிமையிலும், வீரம் இருந்திருந்தால், அயலார் மிரட்டமுடியாது. பிதற்றி, பிதற்றியே, உலக அரங்கில் தன்மானமிழந்தோம். கண் கூடாக அதர்மங்களை கண்டும், கண்ணில்லா கபோதியென மண்ணில் வீழ்ந்து கிடந்தோம்.கட்டை பஞ்சாயத்துக்குத் தொடை நடுங்கினோம். சாதி மத பேதம் வளர்க்கும் பேதைகள் ஆனோம். முகமூடி அணிந்த கொள்ளையர் போல் சொத்து சேர்ப்பவர்களின் மெய்கீர்த்தி இசைத்தோம், வறுமை தீராதப் பாணர்களைப்போல அல்லாமல், அற்பத்தனமாய் ஏழையின் உணவை திருடுவோருடன் கூட்டு சேர்ந்தோம். 

இது எல்லாம் உண்மை, ஐயா! ஆனாலும், மார்க்கமொன்று உண்டு. மனமிருந்தால், குணமும் கூடினால், மஹாகவியுடம் சேர்ந்து, ‘...பாரத தேசமென்று தோள்’ கொட்டலாம். அதற்கு தகுதி: தேசாபிமானம், விழிப்பு, கல்வி, தர்ம போதனை, சான்றோர் வாழ்க்கை அறிதல், வாய்மையும், நேர்மையும். இவற்றை பெறுவது, நம் கையில்:
~ தனியார்: கற்கலாம்; சிந்திக்கலாம்; தொண்டாற்றலாம். மோசம் போகாமல் இருக்கலாம்.
~ குடும்பம்: சிறார்களுக்கு அறிவுரை; நடந்துக் காட்டுவது; பாசம் வளர்ப்பது.
~ சமூகம்: பெரிய குடும்பமாக இயங்கலாம்; நியாயம் பார்க்கலாம். நேசத்தைக் கூட்டலாம்.
~ சமுதாயம்: கல்வி, சுகாதாரம், மரபு, நற்பண்புகள் என இலக்குகள் வைத்து, வாழ்நெறி இயக்கமாக, சமுதாய மேன்மை நாடலாம். கிலேசத்தைத் தணிக்கலாம்.
~ அரசு: தர்மபரிபாலனம்; தேச சம்ரக்ஷணை.
மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் ‘பலே பாண்டியா!’ என்று ஆசிகள் பல வழங்குவார். கிணற்றுத்தவளையாக இல்லாதபடி, உலக வழக்குகளும், வரலாறும், சிந்தனைகளும் அறிந்து கொள்ளேன் என்று சொல்லிவிட்டு ‘மாஜினியின் பிரதிக்கினை’ என்று பரவசமும் ஆவேசமும் கலந்துயர்ந்த குண்டலினி யோகத்திலே, பரமோனத்திலே பாடுவார்.
ஏனிந்த மாஜினிப்பாட்டு? வரலாற்றுப் போக்கில், மரபும், பண்பும், கலாச்சாரமும், நாகரீகமும் பளிச் என்று மிளிர்ந்த இத்தாலி நாடு அன்னியர் நுழைய, அழிய தொடங்கியது. அழுகல் துர்நாற்றம். அவயவங்கள் வாடி விழுந்தன. ஒற்றுமை பலிகடா ஆகி விட்டது. மக்களுக்கு தன்னம்பிக்கை ஒழிந்து போனது. இருந்தாலும், ஐரோப்பாவெங்கும் தேசாபிமானம் தலை தூக்கியது. ஃப்ரென்ச் புரட்சியின் தாகம் தீரவில்லை. தாரக மந்திரம்: விழிப்புணர்வு/ உரிமை போராட்டம்/ஒருமைப்பாடு/குடியரசு. மாஜினி, கரிபால்டி, கவூர் ஆகிய மூவர் இத்தாலி நாட்டுக்கு புத்துயிர் அளித்தனர். என்றைக்கு அவர்களை பற்றி எழுத முடியுமோ? Please read Sir Arthur Quiller-Couch: The Roll Call of Honour. மாஜினியின் எழுச்சி இன்றும் இந்தியாவுக்கு பாடம். எனவே, மஹாகவியின் ‘மாஜினியின் பிரதிக்ஞை’ யை இங்கே அளித்தேன்.
மாஜினியின் சபதம் பிரதிக்கினை
பேரருட் கடவுள் திருவடி யாணை,
பிறப்பளித் தெமையெலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என்னரு நாட்டின்
தவப்பெய ரதன்மிசை யாணை
பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்
பணிக்கெனப் பலவிதத் துழன்ற
வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த
விழுமியோர் திருப்பெய ராணை.
ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர்
யாவர்க்கும் இயற்கையின் அளித்த
தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த
சீருய ரறங்களி னாணை.
மாசறு மென்நற் றாயினைப் பயந்தென்
வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின்
ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ
அத்தகை யன்பின்மீ தாணை.
தீயன புரிதல் முறைதவி ருடைமை,
செம்மைதீர் அரசியல், அநீதி
ஆயவற் றென்னஞ் சியற்கையின் எய்தும்
அரும்பகை யதன்மிசை யாணை
தேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய
உரிமைகள் சிறிதெனு மில்லேன்,
தூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம்
துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்.
மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து
மண்டுமென் வெட்கத்தி னாணை.
முற்றிய வீடு பெறுகெனப் படைப்புற்று
அச்செயல் முடித்திட வலிமை
அற்றதால் மறுகும் என்னுயிர்க் கதனில்
ஆர்ந்த பேராவலி னாணை.
நற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந்
நலனறு மடிமையின் குணத்தால்.
வலியிழந் திருக்கும் என்னுயிர் கதன்கண்
வளர்ந்திடும் ஆசைமீ தாணை.
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்
மாண்பதன் நினைவின்மீ தாணை.
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்
வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை.
பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்
புன்சிறைக் களத்திடை யழிந்தும்
வேற்று நாடுகளில் அவர் துரத் துண்டும்
மெய்குலைந் திறந்துமே படுதல்
ஆற்ற கிலாராய் எம்மரு நாட்டின்
அன்னைமார் அழுங்கணீ ராணை.
மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும்
வகுக்கொணாத் துயர்களி னாணை.
ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே
யான்செயுஞ் சபதங்கள் இவையே.
கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்
கட்டளை தன்னினும் அதனைத்
திடனுற நிறுவ முயலுதல் மற்றித்
தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம்
உடனுறு கடமை யாகுமென் பதினும்
ஊன்றிய நம்புதல் கொண்டும்
தடநில மிசையோர் சாதியை இறைவன்
சமைகெனப் பணிப்பனேல் அதுதான்.
சமைதலுக் குரிய திறமையும் அதற்குத்
தந்துள னென்பதை யறிந்தும்
அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்
அன்னவர் தமக்கெனத் தாமே
தமையல தெவர்கள் துணையு மில்லாது
தம்மருந் திறமையைச் செலுத்தல்
சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக் கதுவே
சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும்,
கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும்
கருதிடா தளித்தலுந் தானே
தருமமாம் என்றும், ஒற்றுமை யோடு
தளர்விலாச் சிந்தனை கொளலே
பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற்
பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும்,
அருமைசால் சபத மிவைபுரி கின்றேன்
ஆணைக ளனைத்து முற்கொண்டே.
என்னுடனொத்த தருமத்தை யேற்றார்
இயைந்தஇவ் வாலிபர் சபை க்கே
தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம்
தத்தமா வழங்கினேன்; எங்கள்
பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச்
சுதந்திரம் பூண்டது வாகி
இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக்
குடியர சியன்றதா யிலக.
இவருடன் யானும் இணங்கியே யென்றும்
இதுவலாற் பிறதொழி லிலனாய்த்
தவமுறு முயற்சி செய்திடக் கடவேன்.
சந்ததஞ் சொல்லினால், எழுத்தால்,
அவமறு செய்கை யதனினால் இயலும்
அளவெல்லாம் எம்மவ ரிந்த
நவமுறு சபையி னொருபெருங் கருத்தை
நன்கிதன் அறிந்திடப் புரிவேன்.
உயருமிந் நோக்கம் நிறைவுற இணக்கம்
ஒன்றுதான் மார்க்கமென் பதுவும்
செயம்நிலை யாகச் செய்திடற் கறமே
சிறந்ததோர் மார்க்கமென் பதுவும்,
பெயர்வர எங்கள் நாட்டினர் மனத்திற்
பேணுமா றியற்றிடக் கடவேன்,
அயலொரு சபையி லின்றுதோ றென்றும்
அமைந்திடா திருந்திடக் கடவேன்.
எங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும்
இச்சபைத் தலைவரா யிருப்போர்
தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து
தலைக்கொளற் கென்றுமே கடவேன்,
இங்கென தாவி மாய்ந்திடு மேனும்
இவர்பணி வெளியிடா திருப்பேன்
துங்கமார் செயலாற் போதனை யாலும்
இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன்.
இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன்
மெய்யிது, மெய்யிது; இவற்றை
என்றுமே தவறு யிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக.
அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க
அசத்தியப் பாதகஞ் சூழ்க
நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம்யா னுழலுக மன்னோ!
வேறு
பேசி நின்ற பெரும்பிர திக்கினை
மாசி லாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி யருளு! ஏழையேற்கு
ஈசன் என்றும் இதயத் திலகியே.-

Bharati-Stamp2.jpg
இன்னம்பூரான்
11 09 2011
பி.கு: சாமியோவ்! மஹாகவிக்கு வர்ணஜாலம் பிடிக்கும். அதான்.

Innamburan Innamburan Sat, Sep 10, 2011 at 9:13 PM

To: thamizhvaasal
Cc: Innamburan Innamburan
Bcc: Muruga poopathi

மஹாகவியின் வியாபகத்தால் , முதலில் அனுப்பியது படிக்கமுடியாமல் போயிருக்கலாம்.
அதான், இது.
[Quoted text hidden]
ஏனிந்த மாஜினிப்பாட்டு? வரலாற்றுப் போக்கில், மரபும், பண்பும், கலாச்சாரமும், நாகரீகமும் பளிச் என்று மிளிர்ந்த இத்தாலி நாடு அன்னியர் நுழைய, அழிய தொடங்கியது. அழுகல் துர்நாற்றம். அவயவங்கள் வாடி விழுந்தன. ஒற்றுமை பலிகடா ஆகி விட்டது. மக்களுக்கு தன்னம்பிக்கை ஒழிந்து போனது. இருந்தாலும், ஐரோப்பாவெங்கும் தேசாபிமானம் தலை தூக்கியது. ஃப்ரென்ச் புரட்சியின் தாகம் தீரவில்லை. தாரக மந்திரம்: விழிப்புணர்வு/ உரிமை போராட்டம்/ஒருமைப்பாடு/குடியரசு. மாஜினி, கரிபால்டி, கவூர் ஆகிய மூவர் இத்தாலி நாட்டுக்கு புத்துயிர் அளித்தனர். என்றைக்கு அவர்களை பற்றி எழுத முடியுமோ? Please read Sir Arthu Quiller-Couch: The Roll Call of Honour. மாஜினியின் எழுச்சி இன்றும் இந்தியாவுக்கு பாடம். எனவே, மஹாகவியின் ‘மாஜினியின் பிரதிக்ஞை’ யை இங்கே அளித்தேன்.
[Quoted text hidden]
[Quoted text hidden]

Geetha Sambasivam Sun, Sep 11, 2011 at 1:27 AM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இப்போ புரியது, பாலு சார். கல்வியும் தொடருகிறது. கனலும் கணகணப்பு. பக்தியும் பரவசம்//

நல்ல ஆசிரியர்.  எனக்கும் இப்படி ஒரு ஈஸ்வர வாத்தியார் கிடைச்சிருந்தார்.  பாரதி என்றாலே வீரம் பொங்கும் அவருக்கும். எனக்கு, பாரதியின் அறிமுகம் அவர் மூலமாகவே. கட்டுக்குடுமியோடும், பஞ்சகச்சத்தோடும், பாரதியின் அச்சமில்லை; அச்சமில்லை; அச்சமென்பதில்லையே! பாடலை அவர் பாடுகையில் உண்மையிலேயே அச்சமெல்லாம் பறந்தே போகும்! நல்லதொரு மலரும் நினைவுகளுக்கு நன்றி.  இன்று பாரதியின் நினைவுநாளுக்கு இடுகை ஏதேனும் போட எண்ணியே அதிகாலையில் இணையம் வந்தேன்.  உங்கள் இடுகையைக் கண்டதும் நான் எழுதுவதெல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றிவிட்டது.  உங்கள் சம்மதத்துடன் இதை என் வலைப்பக்கம் பகிர்ந்து கொள்கிறேன். அங்கே நிறையப் பேர் வருவார்கள்.  அனைவருக்கும் போகும்.  நன்றி.  வணக்கம்.


2011/9/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1
பேசி நின்ற பெரும்பிர திக்கினை
மாசி லாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி யருளு! ஏழையேற்கு
ஈசன் என்றும் இதயத் திலகியே.-

இன்னம்பூரான்
11 09 2011
பி.கு: சாமியோவ்! மஹாகவிக்கு வர்ணஜாலம் பிடிக்கும். அதான்.


Geetha Sambasivam Sun, Sep 11, 2011 at 1:45 AM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
http://sivamgss.blogspot.com/2011/09/blog-post_11.html

2011/9/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1
இன்னம்பூரான்
11 09 2011
பி.கு: சாமியோவ்! மஹாகவிக்கு வர்ணஜாலம் பிடிக்கும். அதான்.
[Quoted text hidden]

Geetha Sambasivam Sun, Sep 11, 2011 at 1:49 AM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
பிதற்றி, பிதற்றியே, உலக அரங்கில் தன்மானமிழந்தோம். கண் கூடாக அதர்மங்களை கண்டும், கண்ணில்லா கபோதியென மண்ணில் வீழ்ந்து கிடந்தோம்.கட்டை பஞ்சாயத்துக்குத் தொடை நடுங்கினோம். சாதி மத பேதம் வளர்க்கும் பேதைகள் ஆனோம். முகமூடி அணிந்த கொள்ளையர் போல் சொத்து சேர்ப்பவர்களின் மெய்கீர்த்தி இசைத்தோம், வறுமை தீராதப் பாணர்களைப்போல அல்லாமல், அற்பத்தனமாய் ஏழையின் உணவை திருடுவோருடன் கூட்டு சேர்ந்தோம். //

இவை அனைத்தும் இன்னமும் தொடர்கதைதான் ஐயா! சற்றும் மாறவில்லை! :(


2011/9/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 11:1
பேசி நின்ற பெரும்பிர திக்கினை
மாசி லாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி யருளு! ஏழையேற்கு
ஈசன் என்றும் இதயத் திலகியே.-

இன்னம்பூரான்
11 09 2011
பி.கு: சாமியோவ்! மஹாகவிக்கு வர்ணஜாலம் பிடிக்கும். அதான்.
[Quoted text hidden]

Innamburan Innamburan Sun, Sep 11, 2011 at 6:36 AM
To: thamizhvaasal@googlegroups.com
தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம். திருமதி கீதா. நன்றி.

[Quoted text hidden]

Geetha Sambasivam Sun, Sep 11, 2011 at 6:43 AM
To: Innamburan Innamburan

Blogger எல் கே said...
தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் என்றாய் இன்று மெகா சீரியல் இல்லையேல் போராடுவோம் என்கின்றனர் நீ கனவுக் கண்ட புதுமைப் பெண்கள் .

இதையெல்லாம் பார்க்க வேண்டாம் என்றுதான் இளம் வயதிலேயே சென்று விட்டாயோ
11 September, 2011
Delete
Blogger திவா said...
//நான் எழுதுவதெல்லாம் எதுவுமே இல்லை எனத் தோன்றிவிட்டது. //
அப்பாடா! இப்பவாவது தோணித்தே!:P:P:P:P:P
11 September, 2011
Delete
Blogger அப்பாதுரை said...
சிலிர்த்துப் போனேன்.
11 September, 2011
Delete
Blogger Ashvinji said...
அற்புதம். இன்சொல் இனிய இன்னம்பூராருக்கும், பகிர்ந்த கீதாஜீக்கும் நன்றி.
11 September, 2011
Delete
Blogger RAMVI said...
இன்னம்புரார் எழுதிய பதிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதர்க்கு நன்றி.
மிக விரைவில் ஊழல்கள் அற்ற புதிய பாரதம் மலரும்.நம்பிக்கையாக காத்திருப்போம்.
11 September, 2011
Delete
Blogger Lakshmi said...
நல்ல பகிர்வுக்கு நன்றி
11 September, 2011


உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் உங்கள் பார்வைக்கு.  தலைப்பு மட்டும் எனக்குப் பீடித்ததைத் தேர்ந்தெடுத்தேன். 
[Quoted text hidden]

Innamburan Innamburan Sun, Sep 11, 2011 at 6:51 AM
To: Geetha Sambasivam
நன்றி! எமது இங்கே.
என் பதில்:
நீங்கள் காட்டும் உத்வேகம் என்னை கட்டி இழுக்கிறது, என்ன அழகா தலைப்பு கொடுத்திருக்கிறார்கள், திருமதி கீதா சாம்பசிவம்! 
என்னுடைய அடுத்த பதில்:
சுதந்திர பிரஞ்ஞையுடன்  தொண்டு செய்யும் ஆளுமை வேணுமடா,பாரதி!, எனக்கு.
அன்புடன்,
இன்னம்பூரான்

[Quoted text hidden]