Friday, March 1, 2013

அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 5 ‘கல கல’ சாமியார்

GmailInnamburan Innamburan


அன்றொரு நாள்: ஃபெப்ரவரி 5 ‘கல கல’ சாமியார்
16 messages

Innamburan Innamburan Sun, Feb 5, 2012 at 8:30 AM
To: mintamil , thamizhvaasal


அன்றொரு நாள்:  ஃபெப்ரவரி 5
‘கல கல’ சாமியார்

இன்று மஹரிஷி மஹேஷ் யோகியின் நினைவஞ்சலி தினம். ஃபெப்ரவரி 5, 2008 அன்று கிட்டத்தட்ட 90 வயதில், முதுமையின் காரணமாக, உறங்கும்போது, அமைதியாக மரணம் அடைந்தார். அவரை பற்றிய, எள்ளும் அரிசியும் கலந்தாற் போல் புகழுரையும், இகழுரையும் எண்ணில் அடங்கா. அவற்றை நான் ஆராயப்போவதில்லை. சிரித்துக்கொண்டே பேசுவதால், அவருக்கு ‘கல கல’ சாமியார் என்று பெயர். உலகளவில் டன் கணக்கில் ஆன்மீகத்தால் செல்வம் ஈட்டமுடியும், நற்பெயரை பெரிதும் கெடுத்துக்கொள்ளாமல் என்று நிரூபித்தவர், இவர். ஆழ்நிலை தியானத்தை உலகளவில் பரப்பி நல்லதை தொடர்ந்தே செய்துகொண்டே, உலக அரசு, படா படா கல்வி அமைப்புகள், மின்னல் சிஷ்யகோடிகள், அந்தரத்தில் பறப்பது போன்ற விந்தை வித்தைகளிலும் குதித்து அசத்திய ஹிந்து மதத் துறவி. இவரை விட அதிகம் சொத்து சேர்த்தது ஆசார்ய ரஜனீஷ்/ ஶ்ரீ ஶ்ரீ சத்ய சாயி ஆக இருக்கலாமோ? என்னவோ? இந்த வகை சாமியார்கள் அபார சொத்துடமையாளர்கள். அவர்களின் உபதேசங்கள் நன்முத்துக்கள். கண்ட இடமெல்லாம் மாவு மிஷின்கள்! அவர்களின் சிஷ்யகோடிகள் நம்ம பெண்டை நிமிர்த்தி விடுவார்கள். இதையெல்லாம் பெரிது படுத்தவேண்டாம். 
மிகவும் அபூர்வமாக, மஹரிஷி மஹேஷ் யோகி லேரி கிங் என்ற அமெரிக்கன் தொலைக்காட்சி நேர்முக மன்னனுக்கு மே 12, 2002 அன்று ஒரு பேட்டி அளித்தார். லேரி கிங்குக்கு எல்லாரும் தள்ளுபடி; எல்லாரும் வரும்படி. அவர் மஹரிஷிக்கு அதீத மரியாதை கொடுக்கவில்லை. அந்த நீண்ட பேட்டியிலிருந்து சில துளிகள்:
  1. நாம் செய்வதை திறம்பட, ஏற்புடைய வகையில் செய்யும் வழியே, ஆழ்நிலை தியானம்; மனதின் நுட்பங்களை இனங்கண்டு, அதிநுட்ப எண்ணங்களையும் கடந்து மேலே பயணிக்கும் பாதை, அது. அதை தான் சுய புரிதல் சேதனம் எனலாம்.அதுவே வாழ்வின் வாய்மை, படைப்பின் ஆதார ஸ்ருதி. வாழ்வியலின் நிர்வாகத்தின் அடித்தளம். இந்த பிரபஞ்சத்தின் வெளிப்பாடு அதுவே. (‘...Transcendental meditation is something that can be defined as a means to do what one wants to do in a better way, in a right way, for maximum results. It's a program that the mind begins to experience its own finer impressions, finer thoughts, and then finally transcends the finest thought. And that is the level of what they call self-referral pure consciousness, which is the ultimate reality of life, pure intelligence from where the creation emerges, from where the administration of life is maintained, from where physical expression of the universe has its basis...’)

லேரி கிங் எளிதில் மசியும் ஆசாமி இல்லை. புரியவில்லை. கடினமாக இருக்கிறதே என்கிறார். (ஹி! ஹி! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.)[முறையாக, பதஞ்சலி சூத்ரங்களின் உபதேசம் பெற்றவர்களின் அலை வரிசையே வேறு.] 40/50 வருடங்களாக சொல்லிக்கொடுக்கிறேன். எளிது என்கிறார், யோகி. நல்வழியில் செல்லு என்ற தோரணையில் போதனை தொடங்குகிறது. லேரி கிங் அசகாயமாக பேச்சை மாற்றி, மரணத்தை பற்றி வினவுகிறார்.
மஹரிஷி: மரணம் ஒரு பயணத்தொடக்கம் என்க. சிறிது காலம், பூதவுடல் அப்படியே கிடக்கும். பிறகு, வேறு ஒரு பூதவுடல். அப்படி பல பூதவுடல்கள். இறுதியில் விடுதலை. மேலுலகில் அடைக்கலம் என்க. இங்கு முழுமையின் தரிசனம். வாழ்வின் உள்ளடக்கமே இது தான். வாழ்வின் பிரபஞ்ச உள்ளடக்கமே இது தான். இறவா வரம். சிரஞ்சீவி. அமரத்துவம்....(‘’..What do you believe happens upon death?_ MAHARISHI: Death is just a -- it gives a new start for a new journey. In the process of evolution, the body lasts for some time and then will take other body and take other body and take other body until the final redemption from diversity is transcended. The totality is found. This is the potential of life, cosmic potential of life, immortality in its field of counting it in terms of time. Immortality.)
இப்படி உரையாடல் வழி தெரியாமல் ஓடும் நதி போல, அங்குமிங்கும் பாய்ந்தோடி அலைகிறது. 9/11 பற்றியும், மஹரிஷியின் ப்ரம்மச்சர்யத்தை பற்றியும், கேள்விகள் நேரடி, பதில்கள் அவ்வாறு அல்ல. போயிட்டுப் போறது. 
முழு நேர்காணலையும், உசாத்துணையில் ஆங்கிலத்தில் படிக்கலாம். விக்கிப்பீடியாவில் இவரை பற்றி விவரமான கட்டுரை உளது.
இன்னம்பூரான்
05 02 2012.

MMY_passport.jpg
உசாத்துணை:

Dhivakar Sun, Feb 5, 2012 at 11:34 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
மஹரிஷியின் பங்கு உலக அளவில் இந்திய முறைக் கல்விக்கு அமோகமான அளவில் இருந்தது. அதுவும் ஆரம்பப் பாடசாலைகளின் நிலையிலிருந்து ஆரம்பித்தவர். வேறு யாருமே இந்த அளவில், அதுவும் இந்திய பண்பாடு நிறைந்த கல்விச் சாதனை உலக அளவில் செய்ததில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், கிராம அளவில் இல்லாவிட்டாலும் தாலுகா அளவில் கல்விச்சாலை அமைக்கவேண்டும் என்பது இவர் எண்ணம்.

2012/2/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Sun, Feb 5, 2012 at 4:51 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இ சார்

குருதேவ் அவர்கள் அருளிய ஆழ்நிலைத் தியானத்தை முறைப்படி கற்றவன் நான்.

TM-Siddhi எனப்படும் மேல்நிலையும் கற்றிருக்கிறேன்.    மத்திய பிரதேசத்தில் உள்ள பஞ்சமடி என்னும் அழகிய மலை வாசஸ்தலத்தில் அமைந்துள்ள அவருடைய ஆஸ்ரமத்தில சில நாட்கள் தங்கியிருந்து தியானம் கற்பித்தலையும் கற்றிருக்கிறேன்.

நீங்கள் சொன்னது போல இந்த தியான முறை குறித்தும் குருதேவ் குறித்தும் பல எதிர்மறையான விஷயங்கள் இணையத்தில் குவிந்துள்ளன.

அவற்றில் பலவும் கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் இணைய தளங்கள் என்பதையும் பார்க்க நேர்ந்தது.

எழுதுபதுகளின் துவக்கத்தில் குருதேவ் அவர்களின் தியான முறைகள் மற்றும் யோக சூத்திரங்கள் பிரபலம் ஆவது கண்டு அமெரிக்கர்கள் கொஞ்சம் அதைரியமடைந்தார்கள்.  குறிப்பாக அமெரிக்க கிறிஸ்துவ மிஷனரிகள் கொஞ்சம் பதட்டப்பட்டார்கள்.  இதனை நான் எவ்வித காழ்ப்பு உணர்ச்சியோ அல்லது மத ரீதியான வகையிலோ சொல்லவில்லை. 

எண்பதுகளின் துவக்கத்தில் குருதேவ் டெல்லி வந்திருந்தார். 

குருதேவ் அவர்களின் ஆழ்நிலை தியானத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த தியானத்தை பல ஆண்டுகள் விட்டு விட்டு மீண்டும் துவங்கினாலும் அற்புதமான பயன்கள் தொடரும்.

இதற்கு மிகச்சரியான உதாரணம் நான்.

தொண்ணூறுகளின் இடையில் டெல்லியில் கிருஷ்ணன் ஜி அவர்களிடம் ஆழ்நிலை தியானம் கற்றுக் கொண்டேன்.  தொண்ணூறுகளின் இறுதியில் என்னுடைய குடிப்பழக்கமும் புகைபிடித்தலும் உச்சத்துக்குப் போனது,. 

அன்னையின் அருள் மற்றும் குருதேவ் அவர்களின் திருப்பாதங்களின் பெருங்கருணை என்னை ஒரு திடீரென்று அனைத்தையும் முற்றாகத் துறக்க முடிந்தது.  குடியும் புகைபிடித்தலும் விட நினைத்தபோது பிடிவாதமாக தொடர்ச்சியாக இந்த தியானப் பயிற்சியை மீண்டும் மேற்கொண்டேன்.   ஏதோ மாயம் போல ஒரு வாரத்தில் அனைத்துப் பழக்கங்களில் இருந்தும் முற்றாக விடுபட்டேன்.  இன்றுவரை எதையும் மீண்டும் திரும்பிப் பார்க்கவில்லை.

பல ஜென்மங்களுக்கு குருதேவ் அவர்களுக்கும் ஆழ்நிலை தியான முறைக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இன்று எங்கள் குருதேவ் அவர்களை நினைவுபடுத்தி நெகிழ்ச்சி தந்திருக்கிறீர்கள்.

உங்கள் பாதங்கள் பணிந்து என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

ஜெய் குருதேவ்.

அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------





2012/2/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Innamburan Innamburan Sun, Feb 5, 2012 at 5:26 PM
To: thamizhvaasal@googlegroups.com
Bcc: innamburan88
மிக்க நன்றி, பென். எனக்கு நீங்கள் சொலவ்து எல்லாம் நல்வரவு. குருதேவின் அனுக்ரஹம் எனலாம். சொல்லப்போனால், இந்தத் தொடர் எனக்கு புலிவால் ஆகிவிட்டது! விடவும் முடியவில்லை. விடாமல் தொடர சக்தியும் இல்லை. Que Sera Sera.
இன்னம்பூரான்
2012/2/5 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswaran@gmail.com>
இ சார்

குருதேவ் அவர்கள் அருளிய ஆழ்நிலைத் தியானத்தை முறைப்படி கற்றவன் நான்.



திவாஜி Mon, Feb 6, 2012 at 1:05 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
விடாம பிடுச்சுக்குங்க சார்.
தினமும் படிக்கிறேன்.
கமென்ட் போடத்தான் நேரமில்லை!
:-|

2012/2/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>
சொல்லப்போனால், இந்தத் தொடர் எனக்கு புலிவால் ஆகிவிட்டது! விடவும் முடியவில்லை. விடாமல் தொடர சக்தியும் இல்லை. Que Sera Sera.



Innamburan Innamburan Mon, Feb 6, 2012 at 1:13 PM
To: thamizhvaasal@googlegroups.com
நன்றி திவாஜி. கமெண்ட் இல்லாவிடின், வால் நழுவுகிறது.
[Quoted text hidden]

திவாஜி Mon, Feb 6, 2012 at 1:16 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
:-))
2012/2/6 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நன்றி திவாஜி. கமெண்ட் இல்லாவிடின், வால் நழுவுகிறது.


[Quoted text hidden]

Tthamizth Tthenee Mon, Feb 6, 2012 at 1:19 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
லூகாஸ் டீ வீஎஸ் நிறுவனத்தில் நான் பணி புரியும்போது உயர்திரு மஹரிஷி மகேஷ் யோகி அவர்களின் தியானப் பயிற்சியை கற்பிக்க அவருடைய சீடர்கள் வந்திருந்தனர்.
 
அப்போது மஹரிஷி மகேஷ் யோகி அவர்கள் தியான முறையை கற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது.
 
அவர்கள் குறிப்பிட்ட தியான முறையை நான் கடைப்பிடித்துப் பார்த்தேன்
 
நம்புவீர்களோ இல்லையோ தெரியாது
 
நான் உட்கார்ந்திருந்த நாற்காலியிலி இருந்து நான் மேலே மிதப்பதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது உண்மை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2012/2/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>

[Quoted text hidden]

Innamburan Innamburan Mon, Feb 6, 2012 at 1:28 PM
To: thamizhvaasal@googlegroups.com
அப்றம்?


2012/2/6 Tthamizth Tthenee <rkc1947@gmail.com>

நான் உட்கார்ந்திருந்த நாற்காலியிலி இருந்து நான் மேலே மிதப்பதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது உண்மை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


Geetha Sambasivam Tue, Feb 7, 2012 at 8:38 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
மஹரிஷி குறித்து அவ்வளவாய்த் தெரியாது;  உங்கள் மூலம் அறிந்தேன், நன்றி.  பலரும் இவரின் Simple Kundalini Yoga குறித்துக் கூறுவார்கள்.  அது சாத்தியமா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு.  எனினும் பலரும் போற்றும் வண்ணம் யோகக்கலைக்குப் புத்துயிர் கொடுத்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. அதே போல் பண்பாடு, கலாசாரம் செழிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் பலரிடமும் பரப்பினார்.  இவரைப் போன்ற சில குருக்களாலேயே நம் கலாசாரம் இன்னமும் முற்றிலும் சீரழியவில்லை என்றாலும் மிகையில்லை.  பலர் வாழ்க்கையிலும், படிப்புக்கும் பேருதவி செய்திருக்கிறார் என்பதிலும் சந்தேகம் இல்லை.  இவருடைய வாழ்க வளமுடன் என்ற கோஷமே கூட இலக்கணப் பிழை, கருத்துப் பிழை எனச் சொல்லப்படுவதையும் கேட்டிருக்கிறேன்.  ஆனால் நற்சொற்கள் தானே இவை எல்லாம் என்பதை எவரும் நினைத்துப் பார்ப்பதும் இல்லை. 

இந்தப் பதிவை அளித்தமைக்கு வாழ்க வளமுடன்.

2012/2/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்:  ஃபெப்ரவரி 5
‘கல கல’ சாமியார்




இப்படி உரையாடல் வழி தெரியாமல் ஓடும் நதி போல, அங்குமிங்கும் பாய்ந்தோடி அலைகிறது. 9/11 பற்றியும், மஹரிஷியின் ப்ரம்மச்சர்யத்தை பற்றியும், கேள்விகள் நேரடி, பதில்கள் அவ்வாறு அல்ல. போயிட்டுப் போறது. 
முழு நேர்காணலையும், உசாத்துணையில் ஆங்கிலத்தில் படிக்கலாம். விக்கிப்பீடியாவில் இவரை பற்றி விவரமான கட்டுரை உளது.
இன்னம்பூரான்
05 02 2012.


உசாத்துணை:


யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Wed, Feb 8, 2012 at 6:30 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
Geethamma

Neengal vedathri maharshi matrum maharishi mahesh yogi patri kuzhambi irukkireergal.

Nanum innamburan sir  pesuvathu maharishi mahesh yogi patri.

neengal sollum iru vishayangalum gurudev thodarbu udaiyathu illai.


anbudan

pen
--------------------------------------------------------------------------------------------------------------------



[Quoted text hidden]
[Quoted text hidden]

திவாஜிWed, Feb 8, 2012 at 11:51 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
யூஎஸ் போனதிலேந்தே தடுமாற்றம்தான்!

2012/2/8 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswaran@gmail.com>
neengal sollum iru vishayangalum gurudev thodarbu udaiyathu illai.




Tthamizth Tthenee Wed, Feb 8, 2012 at 12:05 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
நாராயண நாராயண நாராயண
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Feb 8, 2012 at 12:57 PM
To: thamizhvaasal@googlegroups.com
கல கல
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Feb 8, 2012 at 1:01 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
ஹிஹிஹிஹி, ஆமா, இல்ல?? அ.வ.சி.   

கொஞ்சம் குழப்பம் தான் உண்மையாவே.  அதிலே சரியாக் கவனிச்சுப் படிக்கலை. மன்னிக்கவும். :(

2012/2/8 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswaran@gmail.com>
Geethamma

Neengal vedathri maharshi matrum maharishi mahesh yogi patri kuzhambi irukkireergal.

Nanum innamburan sir  pesuvathu maharishi mahesh yogi patri.

neengal sollum iru vishayangalum gurudev thodarbu udaiyathu illai.


anbudan

pen
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005 
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com


You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamizhvaasal@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
[Quoted text hidden]

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்Wed, Feb 8, 2012 at 2:27 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
கொஞ்ச நாளா எனக்கு இப்படித்தான் நடக்குது.

நான் ஏதோ சொல்ல அடுத்தவங்க ஏதோ நினைச்சுக்கிட்டு...

எல்லாம் என்  கிரகக் கோளாறு.


பென்
--------------------------------------------------------------------------------------------------------------------


[Quoted text hidden]

No comments:

Post a Comment