Tuesday, December 31, 2019

இன்னுயிர் தந்தெமை !!! (தொடர் 001)

இன்னுயிர் தந்தெமை !!! (தொடர் 001)

இன்னம்பூரான்
25 07 2015

மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் கற்பனையும், பரவசமும், இலக்கியசுவையும், நாட்டுப்பற்றும், மனிதாபிமானமும், என்னை அவரது சொல்வளத்தின் நன்முத்து ஒன்றை தலைப்பாக வைக்கத்தூண்டியது. என்ன தான் குறை கண்டாலும், நமது பராம்பரியமும், பண்பும், அளவு கடந்த பரிவும், நேசமும் போற்றத்தக்கன. போற்றுவுமாக.

சில சமயங்களில் தெய்வசன்னிதானம் கட்டாந்தரையில் வைபோகமாக அற்புத நடனம் ஆடுகிறது. கண்டு களிப்பீர்களாக. திருவனந்தபுரத்தில் ஶ்ரீ சித்திரை திருநாள் ஆஸ்பத்திரி புகழ் வாய்ந்தது. அங்கு திரு.நீலகண்ட சர்மா ஆவி துறக்காமல், இறந்து விட்டார். இங்கு முரண் யாதுமில்லை. அவரது மூளை முற்றும் செயலற்றுப்போகவே, இனி அவர் உயிர் தரித்திருந்தாலும், அவருக்கு வாழ்க்கைக்குத் திரை போடப்பட்டுவிட்டது. தற்காலம் உறுப்பு தானம் யாவரும் அறிந்ததே. மரணத்தை வென்றுவிட்டோம். யாவரும் சிரஞ்சீவியே. சடலாமாயினும் கண் தானம் செய்யலாம்; சிறுநீரகம் தானம் செய்யலாம். அவை, மருத்துவ உதவியுடன்,கூடு விட்டு கூடு பாய்ந்து மற்றும் பலராக மலர்ந்து புது வாழ்க்கையை தடங்கலின்றி தொடங்கலாம். சர்மாவின் குடும்பம் உடனுக்குடன் உறுப்பு தானத்துக்கு சம்மதிக்கவே, அவருடைய இதயம் இந்திய கடற்படையின் விமானத்தில் கொச்சிக்கு பறந்து போய், அங்குள்ள லிஸ்ஸி ஆஸ்பத்திரியில், இதய நோயினால் அவஸ்தைப்பட்ட மாத்யூ அச்சதன் என்ற ஆட்டோ ஓட்டுனர் நெஞ்சகத்தில் குடி புகுந்தது. ஐந்து மணி நேரம் எடுத்துக்கொண்ட இதய இரவல் அறுவை சிகிச்சை முடிந்தவுடனே நான்கு மணி நேர கெடுவுக்குள் கொச்சிக்குக்கொணரப்பட்டு, மாத்யூவின் உடலில் சர்மாவின் இதயம் துடிக்கிறது. இந்த ஆத்மதரிசனத்துக்கு, ஆஸ்பத்திரிகள், வாகனம், அரசு விமானம், கேரள முதல்வர் எல்லாரும் எடுத்துக்கொண்ட பணிகள் போற்றப்படவேண்டும். இதே மாதிரி சென்னையில் நடந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. டில்லி அருகே உள்ள குட்காவ்ன் என்ற இடத்திலிருந்து, கசகச போக்குவரத்து சாலைகளில், ஊரையை கட்டிப்போட்டுவிட்டு, ஒரு இதயம் 29 நிமிடங்களில் நூறு மைல் வேகத்தில் பயணித்து, ஓக்லாவில் உள்ள ஃபோர்டிஸ் ஆஸ்பத்திரியில் ஒரு 16 வயது இளைஞனின் நெஞ்சக்த்தில் புகுந்தது.

ஏன்? இந்த திங்கட்கிழமை அன்று சென்னை பொதுஜன ஆஸ்பத்திரியிலிருந்து, எக்கச்சக்க போக்குவரத்தை கச்சிதமாக ஒதுக்கி 14 நிமிடங்களில் அடையாரு ஃபோர்டிஸ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லவே, புதிய உடலில், பழைய இதயம் இன்பத்துளிராகத் துடித்து, ‘தெய்வம் மனுஷ ரூபேண’ (மனிதனாக தெய்வம்) என்று புதிய வாழ்க்கையை தொடங்கியது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. [குறள் 327]

விளக்கம்:
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

இடம், பொருள், ஏவல் கருதி, சற்றே மாற்றி:

தன் உயிரை இழக்க நேரிட்டால், அஞ்சேல்.  அது வேறு உடம்பில் குடி போகட்டும். அப்போது, அது இழப்பு அல்ல. வாழ்வு நிரந்தரம்.

-#-

யாவருக்கும் இதுவே புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 
தொடர் புதன் கிழமை தோறும் பதிவு செய்யப்படும்.


இன்னம்பூரான்

2 comments:

  1. It's appropriate time to make some plans for the future and it
    is time to be happy. I have read this post and if
    I could I desire to suggest you few interesting things or advice.
    Maybe you could write next articles referring to this article.
    I desire to read even more things about it!
    Reply: Thanks and welcome. I shall benefit by your suggestions. 

    1. Do you mind if I quote a few of your articles as long as I provide credit and sources back to your
      site? My blog is in the very same area of interest as yours
      and my visitors would certainly benefit from some of the information you present here.
      Please let me know if this ok with you. Thanks!
      Reply: Thanks and welcome. I shall benefit by your suggestions.  You are welcome to share my articles, citing credit. I am glad we share the same interest. 

Saturday, November 30, 2019

தத்துவ விசாரணை - 1 -4



தத்துவ விசாரணை - 1

அன்றாட வாழ்க்கையில் தத்துவம் அங்கம் வகிக்கவில்லை என்று தான் பெரும்பாலாகக் கருதப்படுகிறது. எனினும் அது, நமது செய்கைகளில் அன்றாடம் பிரதிபலிக்கிறது. சான்றாக, விட்டுக்கொடுக்கும் தாராள மனப்பான்மையில் நாம் தத்துவத்தின் துகள்களை காண்கிறோம். ஒரு படி மேலே போனால், ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடுவதில்’ ஒரு தத்துவ விசாரணை நிழலாடுவதை, உன்னிப்பாகக் கவனித்தால், காண இயலும். பழமொழிகளிலும், குறள்களிலும், சூத்திரங்களிலும், செய்யுள்களிலும், தத்துவம் பேசப்படுகிறது. இந்த தொடரின் பின்னணி எளிது. நான் அன்றாடம் சிந்தனை செய்வதையும், தத்துவ விசாரணையை, முடிந்த வரை, திறந்தமனதுடன் செய்ய விழைகிறேன். பாடங்களை பகிர்ந்து கொள்கிறேன். இங்கு மொழிப்பிரச்னை கிடையாது. எம்மொழியும் சம்மதம். இலக்கு: இயன்ற வரை புரிந்து கொள்ள முயல்வதும், திரும்ப, திரும்ப, விசாரணையை முன்னும், பின்னும் புரிந்து கொள்ளும் வரை, தொடர்வது.
இன்னம்பூரான்
*
I came across ‘LAO TZU: TAO TEACHING: WATKINS: 2002,2016’ today. Last night, a friend and I read Socrates together. Another book discussed ‘The Concept of Man’ under different religious traditions. 
தத்துவ விசாரணைக்கு எல்லை இல்லை. விரைவு பாதையும் கல்லும், முள்ளும் நிறைந்தது. முதற்கண்ணாக, LAO TZU எடுத்துக்கொள்வோம்.

TAO என்ற சொல், தமிழாக்கத்தில், கிடைக்கவில்லை. அது ஒரு பாதையை, ராஜபாட்டையை, ஒரு ராஸ்தாவை, ஒரு வழிமுறையை, ஒரு செயல்முறையை, ஒரு குறிக்கோளை குறிப்பிடுகிறது எனலாம். எப்படி சொன்னாலும் ‘தாவோ’ (tao) எளிதில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இயங்காது . இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகள்களையும் படைத்து, பராமரிப்பது தான்
இந்த தாவோ. அதை விசாரணை செய்தவர்கள் பலர். ஒரு முக்கியமான கருத்து, இங்கே:

There was something undefined and complete, coming into existence before Heaven and Earth... (Chapter 25, James Legge.)

pastedGraphic.png

The Chinese word for Tao is made of two characters: head and foot (meaning walking). The ideas suggested are "conscious walking" or the way of ruling of the ancient sovereigns.

உருவம் இல்லாத தாவோவை காண இயலாது. இத்தனைக்கும் அது எதையும் விட்டு வைக்க வில்லை. தாவோ ஒரு spirit. அது சீடர்களுக்கு ஒரு முன்னோடியாக விளங்குகிறது. (s wu-wei (nondoing) and wu (emptiness). அது மட்டுமல்ல; வில்லாளி, பாடகன், ஓவியன், ஏன் கசாப்புக்கடைக்காரன் போன்ற திறனாளிகளும் இதனுள் அடங்குவர். மேற்படி தத்துவத்தை கன்ஃபூஷியஸின் அலசலிலும் காணலாம். அவ்விடம் அது பழங்காலத்து மன்னர்களின் நன்னடத்தையையும், மனிதநேயத்தையும் குறிக்கிறது.
இந்த பின்னணியில் முதல் பாடத்தை காண்போம். விசாரணை பின்னர்.

1
TRANSCENDING
The Tao that can be told
is not the Universal Tao.
The name that can be named
is not the universal one

(தொடரும்)

தத்துவ விசாரணை - 2
01 12 2019
‘தாவோ’ என்ற ஒற்றையடி பாதையை என்ன தான் விளக்க முயன்றாலும், அதன் உலகளாவிய தன்மை சொல்லில் அடங்காது. ‘தாவோ’ என்று முத்திரை பதித்தாலும், அதனுள் உலகளாவிய தன்மை முத்திரையை கடந்து பயணிக்கும்.
(தொடரும்)
2
In the infancy of the universe,
there were no names.
Naming fragments of the mysteries of life
into ten thousand things and their manifestations.

பிரபஞ்சத்தின் குழந்தைப்பருவத்தில்,
வாழ்வினுள் ஒளிந்து கிடக்கும் மர்மங்களை,
பல்லாயிர விஷயங்களாகவும், அவற்றின் பரிமாணங்களையும்
பெயரிட்டு அழைப்பது இல்லை, ஐயா.
(தொடரும்) 
3
Yet mysteries and fascinations
spring from the same source:
The Great Integrity
which is the mystery within manifestation,
the manifestation within the mystery,
the naming of the unnamed,
and the un-naming of the named.

நாணயம் என்ற சொல் ஒன்று உண்டு. சற்றே தள்ளி நின்று பார்த்தால் சிறிதளவு
விளங்கும். அண்ணல் காந்தி வாய்மையே இறையாண்மை என்றார். நாணயமும், வாய்மையும் வேறு வேறு அல்ல எனலாம்.

 அந்த நாணயம்/வாய்மை/ நீதி வழுவாமை தான் மர்மங்களுக்கும், பலவிதமான
நப்பாசைகளுக்கும் ஊற்றுக்கண். மர்மம் நப்பாசைக்குள் உறைவது போல, நப்பாசைகளும், மர்மங்களின் ஆழத்தில் அமர்ந்து இருக்கும், என்கிறது ‘தாவோ’. பெயரில்லாவற்றுக்கு பெயர் வைப்பதும், பெயர் இருந்த இடத்திலிருந்து அதை பெயர்த்து..  என்கிறது ‘தாவோ’. புரியவில்லை என்றாலும், தாமதித்துப் பார்ப்போம்.
(தொடரும்)
4
The Great Integrity is an endless abyss
Yet it is the inexhaustibly fertile
source of the Universe.

It blunts all sharpness,
unties the entangled
and merges with the dust.

Hidden but ever present-
this parent of the gods-
Whose child it may be?

பெயரில் என்ன இருக்கிறது. கண்ணியம் என்பர் சிலர்;
நாணயம் என்மனார் பலர்; நேர்மை என்பது அதன் அடித்தளம்.
ஆங்கிலத்தில் INTEGRITY. அது ஒரு ஆழங்காணாத குகை.அதுவே இந்த
பிரபஞ்சத்தின் வளம் பொருந்திய ஊற்று.

அது கூர்மையை மங்கச் செய்யும்; சிக்கல்களை அவிழ்க்கும்; தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும்.

மறைந்திருந்தாலும், எங்கும் நிறைந்து இருக்கும் இது தெய்வங்களின் தாய் அல்லவோ?
ஆம். இது தான் யாருடைய சிசு?

[பொழிப்புரை] அண்மையில் வானவியல் நிபுணர்கள் பல்லாயிருக்கணக்கான கதிரவன்கள் ஒளி வீசுவதை பற்றியும், பிரபஞ்சத்தில் கடுகௌ அளவு கூட இல்லா த இந்த பூவுலகம் போல் கணக்கற்றவை இருப்பதாகவும் சொல்கிறார்கள். இத்தனைக்கும் சந்திரனை தொடுவதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது. அந்த பிரும்மாண்ட பிரபஞ்சத்தின் தூண்/ அடிப்பாரம்/நங்கூரம், அதாவது உடும்புப்பிடிப்பு கண்ணியம் என்ற உன்னதமான பண்பு தான். அது தான் அமர தாரா; அமுத சுரபி; அக்ஷயபாத்திரம்; வற்றா நதி. அதன் திறன் தான் என்னே! குத்தும் கத்தியை/ கடுஞ்சொல்லை/ வக்கிர கதியை/ வன்முறையை மங்க செய்துவிடும்; மனித இனத்தின், ஏன்?, ஜீவராசிகளின் சிக்கல்களை அவிழ்த்து விடும். அந்த தெய்வீகத்தொண்டில் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும். எங்கும் நிறைந்து இருக்கும் இந்த கண்ணியம்/நாணயம்/நேர்மை, நம் கண்களுக்கு தென்படாமலும் இயங்கும். தெய்வங்களின் தாய் போன்ற அதனை ஈன்றெடுத்தது ஆர் என்று யாம் அறியோம் என்க.

(தொடரும்)
01 01 2020
இன்னம்பூரான்.
 இந்த தொடர் இனி வியாழன் தோறும் பதிவு செய்யப்படும்.
-x-












Tremendous issues here. I am very glad to peer your post.
Thanks a lot and I am having a look forward to contact you.
Will you please drop me a mail?
~ Thank You, My friend. You are welcome. I do not know your ID, as you have posted as Anonymous. Mine is here. You may write to me giving reference to this.
Innamburan

16 comments:


  1. Tuy nhiên nó vẫn có hiệu quả cho những loại da khác.
    Reply 
    English or Tamil Please.
  2. Tremendous issues here. I am very glad to peer your post.
    Thanks a lot and I am having a look forward to contact you.
    Will you please drop me a mail?
    Reply
  3. What's Taking place i am new to this, I stumbled upon this I have discovered It absolutely useful and it has
    aided me out loads. I am hoping to give a contribution & assist other users like its aided me.
    Good job.
    Reply 
    Welcome. Thank You. I Your contributions welcome.
  4. Thank you for the good writeup. It in reality was once a leisure account it.
    Look advanced to more delivered agreeable from you! By the way, how could we communicate?
    Reply 
    Welcome. Thank You. I You are welcome to mail me.
  5. Hello i am kavin, its my first time to commenting
    anywhere, when i read this piece of writing i thought i could also create comment
    due to this sensible paragraph.
    Reply 
    Welcome. Thank You. I
  6. Cách này có tác dụng rất tốt đối với da bị cháy
    nắng.
    Reply 
    English or Tamil Please.
  7. Cùng nhau tìm hiểu cách làm trắng da bằng nghệ nhé.
    Reply
    English or Tamil Please.
  8. Nhờ đó mà da bạn sẽ được cung cấp một độ ẩm hoàn hảo.
    Reply 
    English or Tamil Please.
  9. I visited several websites however the audio feature for audio songs existing at this website is truly superb.
    Reply 
    Welcome. Thank You. I
  10. Làm sạch da xong thì dùng mặt nạ này đắp lên mặt.
    Reply 
    English or Tamil Please.
  11. I was recommended this website by my cousin. I am not sure whether this post is written by
    him as nobody else know such detailed about my difficulty.

    You are amazing! Thanks!
    Reply Welcome. Thank You. I
  12. I’m not that much of a internet reader to be
    honest but your sites really nice, keep it up! I'll go ahead and bookmark your site to come back down the road.
    Cheers
    Reply 
    Welcome. Thank You. I
  13. Useful info. Lucky me I discovered your web site by chance, and I'm
    shocked why this coincidence didn't happened in advance!

    I bookmarked it.
    Reply 
    Welcome. Thank You. I
  14. Kích thích quá trình tái cấu trúc và lành da.
    Reply English or Tamil Please.
  15. I useɗ to be really upsеt and i needed help, ѕߋ i looked
    for help online and I got here acrosѕ an іnternet site that recommended
    that LⲞRD JUMA will help get ex bаck fast.
    Reply 
    Welcome. Thank You. I
  16. Hey there! I just wish to offer you a huge thumbs up for the excellent information you
    have here on this post. I am coming back to your
    site for more soon.
    Reply Welcome. Thank You. I

Tuesday, November 19, 2019

சாஸ்தாப் பிரீதி: அ.மாதவையா Comments replied to

சாஸ்தாப் பிரீதி: அ.மாதவையா
செங்கோட்டைக்கும் கொல்லத்துக்கம் இடையிலே, தென்னிந்தியா இருப்புப்பாதை சுமார் இருபது மைல் நீளத்துக்கு, குறிஞ்சிநிலத்தை ஊடுருவிச் செல்கின்றது. அந்தப் பிரதேசம், மலைவளத்திலும் இயற்கைக் காட்சியின் வனப்பிலும், இத்தேசமெங்குமே இணை எதிர் இன்றிச் சிறந்ததாகும். நெடுகவே பலவளஞ் செறிந்து விளங்கும் மேற்குமலைத்தொடர், இப்பாகத்திலே கண்கவர் அழகுடன் செல்வவளமும் மலிந்து,

சந்தனமரம், தேக்குமரம், காப்பிக்கொட்டை, தேயிலை, சாதிக்காய், ஏலக்காய், மிளகு, கிராம்பு முதலிய பல்வேறு பொருள்களை விளைவிக்கும் குளிர்ந்த பசிய சோலைகளுடன் பொலியாநிற்கும். மெதுவாகவே செல்லும் ரயில்வண்டியிலிருந்து இருபுறமும் மலைக்காட்சியைக் காண மனோகரமாயிருக்கும். சில சமயங்களில் காட்டுயானைகள் அங்கே வருவதுண்டு. இப்பாதையிலுள்ள ஆரியன் காவு என்னும் ஸ்தலம் மிகவும் அழகானது. அதன் சமீபத்தில் ரயில் வண்டி சற்றேறக்குறைய மூவாயிரம் அடி தூரத்துக்கு மலையை ஊடுருவித் தோண்டியுள்ள குகைமார்க்கமாகச் செல்கின்றது. ஆயின் நம்கதை நிகழ்ந்த காலத்திலே, குகைவழியும் இல்லை, ரயிலும் இல்லை. அந்தப் பிரதேசத்துக்கு ரயில் வந்து கொஞ்சகாலம்தான் ஆகிறது. ஆரியன் காவு என்னும் பெயர், அங்குள்ள ஆரியன், ஐயன், ஹரிஹரபுத்திரன் என்னும் சாஸ்தாவின் கோயிலை ஒட்டி வந்தது.
அசுரர்கள் அமிர்தத்தைப் பானஞ் செய்து நித்தியத்துவம் பெற்றுவிடாதபடி, அவர்களை ஏமாற்றும் பொருட்டு, மகாவிஷ்ணு மோகினி அவதாரமெடுத்த பொழுது, அந்த மோகினிக்கும் பரமசிவனுக்கும் ஹரி ஹர புத்திரன் உற்பவித்த புராண கதையைப் பலர் அறிந்திருக்கலாம். காட்டு யானைகள் சஞ்சரிக்கும் வனப்புமிக்க அம் மலைப்பாங்கிலே, அந்த ஹரிஹர புத்திரர் கோயில்கொண்டு வாழ்வதும், வர்ண பேதமின்றிப் பல்லாயிரம் பக்தர்கள் அவரை வழிபட்டுக் கொண்டாடுவதுமே, நம் கதையைச் சார்ந்த விஷயங்களாகும். திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து செங்கோட்டை - கொல்லம் வழியாக மலையாளம் செல்லும் பிராமணப் பிரயாணிகளுக்கு, ஆரியன் காவில் மலையாளத்து மகாராசா ஏற்படுத்தியிருக்கும் ஊட்டுப்புரை, வழித்தங்கலுக்கு வசதியான இடம். ஆகவே, ஆண்டாண்டுதோறும் அக்கோயிலில் நடக்கும் சாஸ்தாப் பிரீதி என்னும் விசேஷச் சடங்குக்கும் விருந்துக்கும், பிராமணர்கள் திரள் திரளாகக் கூடுவதுண்டு. பிரக்கியாதி பெற்ற சாஸ்தாவின் தரிசன மகிமையும், அன்று நிகழும் விருந்துச் சாப்பாட்டின் சிறப்பும் யாவரும் அறிந்தனவே. செல்வச் சுருக்கமும் சீரண சக்திப் பெருக்கமும் ஒருங்கே வாய்ந்து, ஆங்காங்குள்ள பல புண்ணியஷேத்திரங்களைச் சென்று தரிசித்து, அவ்வவ்விடங்களில் ஏற்பட்டிருக்கும் ஊட்டுப்புரை, சத்திரம், கோயில்களில் பணச்செலவின்றி வயிறுபுடைக்க உண்டுகளித்து, தாம் கண்ட பற்பல தெய்வங்களின் ஏற்றத்தாழ்வையும் வரசக்திகளையும் பற்றிக் கதைபேசியும் வாதாடியும் ஒருநாள்போலப் பல நாளையும் ஆண்டுகளையுங் கழிக்கும் பிராமணோத்தம கோஷ்டிகள் எல்லாம், கிழக்கேயுதிக்கும் ஞாயிறு மேற்கே உதிக்கினும், ஆரியன் காவு சாஸ்தாப் பிரீதியன்று, அங்கு கூடாதொழியார். இத்தகைய கோயில் பெருச்சாளிகளின் யதார்த்தமான தெய்வ பக்தியும் விசுவாசமும் ஆழ்ந்து பரிசோதிக்கத் தக்கதன்று. ''பனங்காட்டு நரி சலசலப்பை அஞ்சாது.''
ஆரியன் காவில் அன்று சாஸ்தா பிரிதி. மணி பன்னிரண்டாகிவிட்டது. வெயில் கடூரமாய் இருந்தது. இலை அசங்கவில்லை. மேற்குத் திக்கிலிருந்து வரும் இரண்டு பிராமணர், ஆரியன் காவை நோக்கி மூச்சிழைக்க நடந்து வந்துகொண்டிருந்தார்கள். மலையேற்றம் அதிகம் இல்லை. ஆனால் தொந்திகளின் பெருமையினால், அவர்கள் வியர்த்து விருவிருத்து, வாய்திறந்து மூச்சு விட்டு, வெகு சிரமத்துடன் நடந்து வந்தார்கள். கோயில் இன்னும் அரை மைலுக்கு மேலிருக்கும். பொழுதாகி விட்டது. ஆகவே அவர்கள் இயன்றமட்டும் அவசரமாக நடந்தார்கள். கடைசியில் ஆரியன் கோயிலை அடைந்தவுடன், அவர்களில் ஒருவர் களைப்புற்று, குளத்தின் கரையில் கீழே விழுந்துவிட்டார். மற்றவர் பரபரப்பாய் விசாரித்ததில், இன்னும் சடங்கு முடியவில்லை, அவர்கள் வந்தது நல்ல சமயந்தான் என்று தெரிய வரவே, களைப்புற்றவரைத் தேற்றி, அவசரப்படுத்திக் கையுதவினார். பின்பு, இருவரும் வேகமாய் நீராடி, சந்தியாவந்தன ஜபங்களை முடித்துக்கொண்டு, கோயிலுக்குள் நுழைந்தார்கள். பழைய பெருச்சாளிகளாகிய அவர்களுக்கு, எங்கே உட்கார்ந்தால் நல்ல சாப்பாடு போதுமானபடி கிடைக்கும் என்பது தெரியும். ஆனால், கோயிலில் கூட்டம் அதிகமாயும், இவர்கள் உட்கார உள்ளங்கை யகலமுள்ள இடம் கிடைப்பதும் அரிதாயுமிருந்தது. யாவரும் சளசளவென்று பேசிக்கொண்டு மிருந்தனர். விருந்துச் சமையல் முடிந்து, சாஸ்தாவின் பூசையும் முடிந்தாய்விட்டது. ஆயின், வழக்கம்போல், ஐயன் இன்னும் எவர்மேலும் ஆவேசமாகி வந்து பிரசன்னமாகி, தான் திருப்தி யடைந்ததை வெளியிட்டு, பிரசாதம் கொடுக்கவில்லை. அதன்பொருட்டு எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர். கோயிலில் வெளிப் பிராகாரத்துக்குள் ஒரு நாய் வந்துவிட்டது. அதனால் பூஜையும் விருந்தும் அசுத்தமாகி விட்டது. அதனால்தான் ஐயனுக்குக் கோபம், என்றார் சிலர். சிலர், வந்தது பூனைதான், நாய் இல்லை, அதனால் அசுத்தமில்லை, என்றனர். வேறு சிலர், கோயில் சுயம்பாகிகளில் ஒருவன் கையில், ஒரு நாயர் ஸ்திரீஒரு முறத்தைக் கொடுக்கும்பொழுது அவள் கை அவன்மேல் பட்டும், அவன் ஸ்நாநம் செய்யாமல் மடைப்பள்ளியில் வேலை செய்ததனால்தான் ஐயனுக்குக் கோபம் என்றனர். பின்னும் சிலர், ஊட்டுப்புரைகளிற் சிலவற்றை அடைத்துவிடுவது என்ற திருவாங்கூர் சமஸ்தானத்தாரின் யோசனைதான், தீன தயாளுவாகிய ஐயனது கோபத்துக்குக் காரணமென்றனர். இவ்வாறாக, பலர் பலவண்ணம் கூக்குரலிட்டு வாதாடிக் கொண்டிருப்பினும், எங்கே இடம் போய்விடுமோ என்ற பயத்தினால், ஒவ்வொருவரும், தத்தம் ஸ்தானத்திலேயே நிலையாயிருந்தனர். ஆகவே, இரட்டையிரட்டை வரிசைகளாய் உள்ள பந்திகளினூடே, நூதனமாய் வந்த பிராமணர் இருவரும், திரிந்து திரிந்து பார்த்தும், அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அதே சமயத்தில், முன்பு களைப்புற்றுக் கீழே விழுந்தவரும் இப்பொழுதுகொடும் பசியினால் வருந்திக் கொண்டிருப்பவருமான கிருஷ்ணையருக்கு, முரட்டு யுக்தி ஒன்று தோன்றிற்று. உடனே அவர், தன் நண்பர் இராமையர் காதில் அதை ஊதினார். கசுகசுவென்று இருவரும் சில நிமிஷம் அந்தரங்கமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு, ஆபத்துக்குப் பாவமில்லை யென்று நினைத்தோ, அல்லது சாகத் துணிந்து விட்டால் சமுத்திரம் முழங்கால் என்று எண்ணியோ, தங்கள் குயுக்தியை நிறைவேற்றத் துணிந்துவிட்டனர்.
பூசை முடிந்து ஒருமணி நேரமாய் விட்டது. பூசாரி நைவேத்யஞ் செய்த தேங்காய் பழம் முதலிய பிரசாதங்கள், அப்படியே திரள் திரளாய் இருந்தன. மூச்சு முட்டும்படி, பூசையறை, தூப தீபங்களால் நிறைந்திருந்தது. நாவில் நீரூறும்படி மணக்க மணக்கச் செய்து வைத்திருந்த போஜன பதார்த்தங்களெல்லாம், ஆறிக்கொண்டிருந்தன. பிராமணப் பாடகர்கள் மூவர், ஐயனது திவ்ய மங்கள குணங்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர். ஐயன் மனமிரங்கி, இன்னும் எவர்மேலும் ஆவேசமாகிப் பிரசன்னமாக வில்லை. எல்லாருக்கும் அலுப்பும் பசியும் அதிகரித்துக் கொண்டிருந்தன. இங்கனமிருக்கும் பொழுது, அதோ அந்த பிராமணரைப் பாருங்கள்! அவர் தொந்தியினும் பருத்த தொந்தி அங்கு எவருக்குமில்லை. ஒரு தூணிற் சாய்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டு, இராமையரால் அணைக்கப்பட்டு, கிருஷ்ணையர் உடலெல்லாம் உதறி நடுங்கினார். முதலில் ஒருவரும் அவரைக் கவனிக்கவில்லை. ஆயின், அடுத்த நிமிஷத்தில் ''அதோ ஐயன் வருகிறான்!'' ''ஐயன் வருகிறான்!'' ''ஐயன் வந்துவிட்டான்!'' என்ற சந்தோஷகரமான பேரொலி கோயிலெங்கும் முழங்கிற்று. பாடகர்கள் தங்களுக்கெட்டிய மட்டும் உயர்ந்த குரலில் ஐயனைப் புகழலானார்கள். ஐயனது ஆவேசத்தைப் பார்க்கும் வண்ணம், பலர் எழுந்து வந்தனர். தாசிக்குத் தண்ணீர்க் குடத்திற் கண், என்னும் மூதுரை விளங்க, அங்ஙனம் எழுந்து வந்தோரெல்லாம், தத்தம் ஸ்தானத்திலே மேல்வேஷ்டியோ, துண்டோ, போட்டுவிட்டே வந்தனர். ''உவாய்! உவாய்! உவாய்!'' என்று, அப்பெரு முழக்கமும் அடங்கும்படி கர்ச்சித்தார் கிருஷ்ணையர். இப்பொழுது பார்த்தால், சற்று நேரத்துக்கு முன், மலையேறி வருவதில் மூச்சிளைத்துக் களைத்து விழுந்தவர் இவர்தானோ என்று சந்தேக முண்டாகும். ஐயன் உள மகிழ்ந்து ஆவேசங் கொண்ட மகா புருஷனை, பிரதானிகரான ஐந்தாறு பிராமணர்கள் சூழ்ந்து, அணைத்துப் பிடித்து, பூசையறைக்குள் ஐயன் சந்நிதிக்கு மெதுவாகக் கொண்டு சென்றனர். கிருஷ்ணையரோ, கண்மூடி, கால்களை உதறிக்கொண்டு, பிரக்ஞையின்றி, வலிப்புற்றவர் போலவே இன்னும் தோன்றினார். பூசையறைக்குள், சந்நிதிக்கும் பிரசாதங்களுக்கும் நடுவே, ஒரு பலகையின் மேல் அவரை உட்கார வைத்தனர். அப்பொழுது, அவர், வெறியயர்ச்சியின் வேகம் சற்று தணிந்து, பலகையி லிருந்தபயே சுழன்று, ஆடலானார். மற்றவர்கள், கைகட்டி, வாய்புதைத்து, வெகு வணக்கத்துடனும் மரியாதையுடனும் திருவுளக் கருத்தை விசாரிக்கலாயினர். ''சுவாமி! ஐயனே! உன் குழந்தைகள் நாங்கள். ஒன்றும் அறியாதவர். உன்னைத் தவிர வேறு கதியில்லை. தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் ஏதாவது செய்துவிட்டால் நீயே பொறுத்தருள வேண்டும். தன் பிள்ளைகளுக்கு வேண்டிய புத்தி சொல்லி அவர்களைத் திருத்துவது, தந்தையின் கடமை யன்றோ? எங்கள் ஐயனாகிய நீயே கோபம் கொண்டுவிட்டால், நாங்கள் மற்றென் செய்வோம்? நீ என்ன உத்திரவு கொடுத்தாலும் நாங்கள் செய்யச் சித்தமா யிருக்கிறோம். ஏழைகளாகிய எங்கள்மேல் இரங்க வேண்டும். உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கதி யார்?''
இவ்வாறு பிராமணர் வருந்தி வேண்டிக் கொண்டதை ஒருசிறிதும் கவனியாது, ஐயன் ஆடிக் கொண்டிருந்தான். அப்பொழுது, இராமையர் சிறிது கோபத்துடன், ''சுவாமி! இது தர்மமா? வெகு தூரத்திலிருந்து உன் கியாதியைக் கேள்வியுற்றுத் தரிசிக்க வந்த பிராமணோத்தமர்க ளெல்லாம், மிக்க பசியுடன் உன் உத்திரவை எதிர்பார்த்து நிற்கின்றனர். சூரியனும் அஸ்தமிக்க லாயிற்று. அவர்கள் மேல் உனக்கு இரக்கமில்லையா? பிரசாதத்தை அநுக்கிரகஞ் செய்து, பிராமண போஜனம் மேல் நடக்கும்படி உத்திரவு செய்ய மாட்டாயா? இவ்வளவு ஆலசியம் போதாதா?'' என்று சொன்னார்.
உடனே ஐயன், ''உவாய்! உவாய்! உவாய்!'' என்று மறுபடியும் ஓலமிட்டு, தன் இரு கைகளையும் கீழே ஓங்கி அறைந்து, ஆவசத்தின் உக்கிரக மத்தியிலே, பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளினான். ''பிராமணர்கள் - பிராமணர்கள் - பட்டினியே - பட்டினியே - கிடந்தால் - என் பிசகா? என் பிசகா? உங்கள் பிசகுதான்! உங்கள் பிசகுதான்! ஆம்! முக்காலும் மூன்று தரம் உங்கள் பிசகுதான்! அதற்கு - நீங்கள் - பிரசாயச் சித்தம் - பிராயச் சித்தம் - செய்தாலன்றி - எனக்கு - திருப்தியாகாது. நான் போகவும் மாட்டேன். செய்கிறீர்களா? சொல்! செய்கிறீர்களா?'' உடனே ஊட்டுப்புரைக் கணக்கர் எதிரே வந்து, என்ன அபராதம் விதித்தாலும் தான் தண்டமிறுக்கச் சித்தமாயிருப்பதாகச் சொல்லி, மேல் உத்திரவை வேண்டினார்.
''இந்தப் பிராமணாள் - இந்தப் பிராமணாள் - ஒவ்வொருவருக்கும் - கூட ஒவ்வொரு சக்கரம் - அதிக தக்ஷணை - அதிக தக்ஷணை - கொடுக்க வேண்டும். கொடுக்கிறாயா? - கொடுக்கிறாயா?''
''சுவாமி! உத்திரவுப்படியே கொடுக்கிறேன்'' என்றார் ஊட்டுப்புரை அதிகாரி.
''அந்தப் பரிசாரகப் பயல் - அந்தக் கொலைபாதகப் பயல் - அச்சியை - ஒரு சூத்திர ஸ்திரீயை - தொட்டுவிட்டு - குளியாமல் - என் மடைப்பள்ளிக்குள்ளே - இருந்த பயல் - கொண்டு வா அவனை இங்கே! கொண்டு வா இந்த நிமிஷம்!''
உடனே ஐந்தாறு பேர் கோயில் மடப்பள்ளிக்கும் மற்றப் பாகங்களுக்கும் சென்றோடிப் பார்த்தனர். ஆனால் அந்தக் 'கொலை பாதகப் பயல்' அகப்பட வில்லை.
''சுவாமி! அவன் ஓடிப்போய் விட்டான்'' என்றார் ஊட்டுப்புரை அதிகாரி.
''பிழைத்தான்! பிழைத்தான் இந்த விசை! இல்லாவிட்டால் அவனை - இல்லாவிட்டால் அவனை! - நல்லது - சவம் போகிறான் - இனிமேல் அவன் என் வேலை செய்ய வேண்டாம். என் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க வேண்டாம், அந்தப் பயல்.''
''சுவாமி! ஆக்ஞைப்படி அவனை நீக்கி விடுகிறேன்'' என்றார், ஊட்டுப்புரை அதிகாரி.
பின்பு, பஜனமாகவோ, நோன்புக் கடனாகவோ, வந்திருந்த சிலர், தங்கள் தங்கள் முறைபாடுகளை ஐயனிடம் தெரிவித்துக் கொண்டனர். அவர்களில் இரண்டொருத்தருக்கே அநுகூலமான உத்திரவு கிடைத்தது. சிலர் மறுபடியும் வரும்படி உத்திரவு பெற்றார்கள். சிலர்க்கு உத்திரவு கிடைக்கவில்லை. விபூதியும் பிரசாதங்களும் கை நீட்டியவருக்கு ஐயன் உதவியபின், ஆவேசம் ஓய்ந்து முடிந்தது. மற்றவர் அப்பொழுது கவனியாவிட்டாலும், நாம் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்றும் நிகழ்ந்தது. பிரசாதம் பெற்றவர் பெரும்பாலார்க்கும், ஒரு வாழைப்பழமோ, ஒரு மூடித் தேங்காயோ, சிறிது விபூதியோ, இரண்டொரு புஷ்பமோதான் கிடைத்தது. நிற்க. ஆனால், இராமையர் பாகத்துக்கு மட்டும் ஏழெட்டுத் தேங்காய் மூடிகளும், இருபது முப்பது பழங்களும் கிடைத்தன. ஐயனாரின் ஆவேசப் பாத்திரமாகிய கிருஷ்ணையரும், அவர் நண்பர் இராமையரும், அக்கிர ஸ்தானங்களில் மணைகளின் மேல் வீற்றிருந்து, கோயில் அதிகாரிகளால் மிக்க மரியாதையுடன் உபசரிக்கப்பட்டு, திருப்தி போஜனம் செய்தனர். சாப்பாடான பின், ஊட்டுப்புரை அதிகாரியே அவர்களுக்குச் சந்தனாபிஷேகம் செய்து, ஜோடி தாம்பூலமும், வேசேஷ தக்ஷிணையும் உதவினார்.

13 comments:

  1. Hello! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and say I really
    enjoy reading your articles. Can you suggest any other blogs/websites/forums that deal with the same topics?
    Thanks a ton! http://bit.ly/35auIwh
    Reply Thank You. I cite my references always. I am not aware of blogs on the same subject.
    Replies


    1. This candid stroy was penned hundred years agao. No known blog on this. other than mine. I shall maail about the other soon.

  2. This post is worth everyone's attention. How can I find out more?
    Reply : 

    13 comments:

    1. Hello! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and say I really
      enjoy reading your articles. Can you suggest any other blogs/websites/forums that deal with the same topics?
      Thanks a ton! http://bit.ly/35auIwh
      Reply
      Replies


      1. This candid stroy was penned hundred years agao. No known blog on this. other than mine. I shall maail about the other soon.

    2. This post is worth everyone's attention. How can I find out more?
      Reply I can suggest my threads only, as I am a lone operator. Thank You.

      13 comments:

      1. Hello! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and say I really
        enjoy reading your articles. Can you suggest any other blogs/websites/forums that deal with the same topics?
        Thanks a ton! http://bit.ly/35auIwh
        Reply I can suggest my threads only, as I am a lone operator. Thank You.
        Replies


        1. This candid stroy was penned hundred years agao. No known blog on this. other than mine. I shall maail about the other soon.

      2. This post is worth everyone's attention. How can I find out more?
        Reply I can suggest my threads only, as I am a lone operator. Thank You.
      3. WOW just what I was searching for. Came here by searching for mom&sonxxx
        Reply Thank You.
      4. Heya i am for the first time here. I came across this board and
        I find It truly useful & it helped me out much. I hope to give something back and
        help others like you aided me.
        Reply I can suggest my threads only, as I am a lone operator. Thank You.
      5. In fact no matter if someone doesn't understand then its up to other people that
        they will assist, so here it happens.
        Reply I can suggest my threads only, as I am a lone operator. Thank You.
      6. Hi, of course this post is actually nice and I have learned lot of things from it
        regarding blogging. thanks.
        Reply Thank You.
      7. Do you have a spam problem on this site; I also am a blogger, and I was wondering your situation; many of us have created some nice
        practices and we are looking to exchange methods with others, be sure to shoot me an e-mail if interested.
        Reply I can suggest my threads only, as I am a lone operator. Thank You. So far no spam problem. I shall always respond to you.
      8. Hello, its fastidious paragraph regarding media print,
        we all understand media is a fantastic source of information. http://bit.ly/35auIwh
        Reply  Thank You.
      9. Have you ever thought about adding a little bit
        more than just your articles? I mean, what you say is important
        and everything. However imagine if you added some great photos or video
        clips to give your posts more, "pop"! Your content is excellent but with
        pics and videos, this site could certainly be one of the most beneficial in its field.
        Very good blog!
        Reply I can suggest my threads only, as I am a lone operator. Thank You.
      10. Hello, I enjoy reading all of your article post. I wanted to write a little comment to support you.
        Reply You are welcome.
      11. That is very interesting, You are a very professional
        blogger. I have joined your feed and look ahead to in the
        hunt for more of your excellent post. Additionally, I have shared your site in my social networks
        Reply You are welcome to share it with ack. Thank you.
    3. WOW just what I was searching for. Came here by searching for mom&sonxxx
      Reply
    4. Heya i am for the first time here. I came across this board and
      I find It truly useful & it helped me out much. I hope to give something back and
      help others like you aided me.
      Reply
    5. In fact no matter if someone doesn't understand then its up to other people that
      they will assist, so here it happens.
      Reply
    6. Hi, of course this post is actually nice and I have learned lot of things from it
      regarding blogging. thanks.
      Reply
    7. Do you have a spam problem on this site; I also am a blogger, and I was wondering your situation; many of us have created some nice
      practices and we are looking to exchange methods with others, be sure to shoot me an e-mail if interested.
      Reply
    8. Hello, its fastidious paragraph regarding media print,
      we all understand media is a fantastic source of information. http://bit.ly/35auIwh
      Reply
    9. Have you ever thought about adding a little bit
      more than just your articles? I mean, what you say is important
      and everything. However imagine if you added some great photos or video
      clips to give your posts more, "pop"! Your content is excellent but with
      pics and videos, this site could certainly be one of the most beneficial in its field.
      Very good blog!
      Reply
    10. Hello, I enjoy reading all of your article post. I wanted to write a little comment to support you.
      Reply
    11. That is very interesting, You are a very professional
      blogger. I have joined your feed and look ahead to in the
      hunt for more of your excellent post. Additionally, I have shared your site in my social networks
      Reply
  3. WOW just what I was searching for. Came here by searching for mom&sonxxx
    Reply
  4. Heya i am for the first time here. I came across this board and
    I find It truly useful & it helped me out much. I hope to give something back and
    help others like you aided me.
    Reply
  5. In fact no matter if someone doesn't understand then its up to other people that
    they will assist, so here it happens.
    Reply
  6. Hi, of course this post is actually nice and I have learned lot of things from it
    regarding blogging. thanks.
    Reply
  7. Do you have a spam problem on this site; I also am a blogger, and I was wondering your situation; many of us have created some nice
    practices and we are looking to exchange methods with others, be sure to shoot me an e-mail if interested.
    Reply
  8. Hello, its fastidious paragraph regarding media print,
    we all understand media is a fantastic source of information. http://bit.ly/35auIwh
    Reply
  9. Have you ever thought about adding a little bit
    more than just your articles? I mean, what you say is important
    and everything. However imagine if you added some great photos or video
    clips to give your posts more, "pop"! Your content is excellent but with
    pics and videos, this site could certainly be one of the most beneficial in its field.
    Very good blog!
    Reply
  10. Hello, I enjoy reading all of your article post. I wanted to write a little comment to support you.
    Reply
  11. That is very interesting, You are a very professional
    blogger. I have joined your feed and look ahead to in the
    hunt for more of your excellent post. Additionally, I have shared your site in my social networks
    Reply