Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

Friday, April 17, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” 1,2,3,




"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” 1, 2, 3, 

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’[அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை ‘முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

இறை வணக்கம்

தர்மமிகு சென்னைக்கு அருகில் உள்ள வைணவத் தலமாகிய திருநின்றவூர், ‘திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று.’ என்கிறது தல புராணம். இவ்விடம் அருள் பாலிக்கும் இலக்குமிப் பிராட்டிக்கு, ‘என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி‘ என்று பெயர். நம் மீது திரு வைத்திருக்கும் கனிவுக்கு ஏற்ற காரணப்பெயர் எனலாம். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை தெய்வ சன்னிதானத்தில் காண்கிறோம். அண்ணல் பக்தவத்ஸலன்; அன்னை பெற்ற தாயார். இதை விளக்கி காஞ்சி முனிவர், ‘இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள் (ஒளவை). ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.’ என்று அருளமுதம் தந்துள்ளார். 

உனது நாமகரணம்

எமது தேசத்தை பாரதமாதா என்று விளித்து, வணங்குவது சாலத்தகும். பாரதம், இந்தியா, ஹிந்துஸ்தான் என்ற பெயர்களை தாங்கும் தீபகற்பம் ஒரு தெய்வத்திரு. மஹாகவி சுப்ரமணிய பாரதியார் ‘மன்னும் இமயமலை/ இன்நறு நீர் கங்கை/ உபநிடநூல்/ பாரத வீரர்/ நாரத கானம்/ பூரண ஞானம்...’ எல்லாமே பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே; 
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!’  என்று என்றோ 

தீர்க்கதரிசனம் தந்துருளினாரல்லவா! அதன் தொடர்பாக, நானும் 

பாரதமாதா என் அன்னை, அவளே இந்தியத் தாய் என்று 
தொழுது வணங்குகிறேன்.
(தொடரும்)

Saturday, January 18, 2020

பெருங்களத்தூர் நோட்ஸ் 3

பெருங்களத்தூர் நோட்ஸ் 3
இன்னம்பூரான்


எனது சிறுவயதில் மைலாப்பூரில் வசித்து வந்தோம். அப்போது பழைய மாம்பலம் சென்று வர ஒரு நாள் பிடிக்கும். துரைசாமி ரயில்வே கேட்டில் மணிக்கணக்காக தவம் கிடக்க வேண்டும். தயவு தாக்ஷிண்யம் இல்லாமல் எல்லா ரயில் வண்டிகளும், இரு பக்கத்திலிருந்து கட்கடா கட்கடா என்று தடாலடியாக எம்மை கடந்து செல்லும். அப்படி தாண்டி சென்றாலும், குண்டும் குழியுமாக ரோடு. இந்த அழகில் மழை சாக்கடை சுரங்கங்கள் வேறு. தற்காலம், சென்னை நடுமையங்களில் அது ஒன்று.

தாம்பரமோ வெகுதூரம். ஆனாலும் மின்சார ரயில் வண்டி தொடர்பு இருந்ததினால், போக்கு வரத்து இருந்தது. ஆனாலும், சென்னை வாசிகளுக்கு அது வெளியூர். 1970 களில் குடும்ப பொறுப்பின் பொருட்டு, வேளச்சேரி வழியாக கிழக்குத் தாம்பரம் வருவோம். கப்பி ரோடு. ஒத்தைப்பாதை. அனேகமாக, என்னுடைய மோட்டார் வண்டி மட்டும் பல தடவை பயணிக்கும். தற்காலம், படா, படா ராஸ்தாக்கள். தாங்கொண்ணா மோட்டார், லாரி, பஸ் எல்லாம் அனவரதமும் பாய்ச்சல்.

பெருங்களத்தூரோ செங்க்ல்பட்டு தூரத்தில் பாதி. மேற்கு பெருங்களத்தூரில் கோயில்,குளம் உண்டு. ஜனத்தொகை உண்டு. ஆனால், சென்னை வந்து போவதுற்குள் பாதி உயிர் போய்விடும் எனலாம். புது பெருங்களத்தூர் பிற்கால ஜனனம். கூட்டம் அதிகம், தற்காலம். பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்ட் கோயாம்பேடு போல் தோற்றம் அளிக்கும். அத்தனை நீண்டதூரம் பயணிக்கும் பஸ்கள் தாறுமாறாக நிற்கின்றன.

(தொடரும்)


10 comments:


  1. Hey outstanding website! Does running a blog like this require a massive
    amount work? I have no understanding of coding but I was hoping
    to start my own blog in the near future. Anyways, should you have any recommendations or tips for new blog owners please share.

    I know this is off topic but I just wanted to ask.

    Many thanks!
    Reply 
    Many thanks! A lone operator, I do no coding.
  2. Excellent beat ! I wish to apprentice while you amend your website, how can i subscribe for a blog website?
    The account aided me a acceptable deal. I had been a little bit
    acquainted of this your broadcast offered bright clear concept
    Reply
    Many thanks! You are welcome.
  3. Hello there! I know this is somewhat off topic but I
    was wondering which blog platform are you using
    for this website? I'm getting sick and tired of Wordpress because I've had problems with hackers and I'm looking at alternatives for another platform.
    I would be awesome if you could point me in the direction of a
    good platform.
    Reply 
    Many thanks! I use Google platform.
  4. I know this web page offers quality depending articles and other data, is there any other web page which gives these kinds of information in quality?
    ReplyMany thanks! I do not know bout others.
  5. It's genuinely very complex in this full of activity life to listen news on TV, so I
    just use world wide web for that reason, and obtain the most recent information.
    Reply 
    Many thanks!

  6. Hi it's me, I am also visiting this website regularly, this web site is
    actually pleasant and the viewers are really sharing fastidious thoughts.
    Reply
  7. Hey! I know this is kinda off topic but I was wondering which
    blog platform are you using for this site? I'm getting fed up of Wordpress
    because I've had issues with hackers and I'm looking at alternatives for another
    platform. I would be great if you could point me in the direction of a good platform.
    Reply
  8. Many thanks! I use Google platform.
    I all the time used to study article in news papers but now as I
    am a user of internet so from now I am using net for posts, thanks to
    web.
    Replu: 
  9. Many thanks! 
    I do not know if it's just me or if everybody else encountering
    problems with your site. It appears as if some of the written text
    within your content are running off the screen. Can somebody else
    please comment and let me know if this is happening to them as well?
    This might be a problem with my browser because I've had this happen before.
    Thanks
    Reply 
  10. Many thanks! I shall check up.
    This website truly has all of the info I needed concerning this
    subject and didn't know who to ask.
    Reply 

    Many thanks! I use Google platform.
Today, I went to the beach with my kids. I found
a sea shell and gave it to my 4 year old daughter and said "You can hear the ocean if you put this to your ear." She placed the
shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear.
She never wants to go back! LoL I know this is entirely
off topic but I had to tell someone!
Reply You are,of course, welcome. I shall creat a blog from that story, giving credit to your daugher and you.

Monday, December 15, 2014

ஆலம்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 9 என்னத்தைச் சொல்ல! 7


ஆலம்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 9
என்னத்தைச் சொல்ல! 7
இன்னம்பூரான்
15 12 2014
கிணற்றுத்தவளை ஒன்று ஒரே தாவலில் ஓடோடி குளம், குட்டை, கண்மாய் எல்லாவற்றையும் கன கச்சிதமாக அனுமார் போல தாண்டி, கடலிலேயே கலந்து உறவாடியமாதிரி, மத்தியப்பிரதேசத்து மாமனிதர் கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நோபல் பரிசு வாங்கினார். உலக பிரசித்தமானார். மனமுருக சொற்பொழிவு ஆற்றினார். சிறார்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆபத்பாந்தவனான அவரை அறியாதவர்கள் இருப்பது, அந்த மத்தியப்பிரதேசம் எனப்படும் கிணற்றில் ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும்’ பிரபலங்களின் வாழ்க்கை நெறி! ஆண்டவா! 

மத்திய பிரதேச சட்டசபையில் கைலாஷ் சத்யார்த்தி அவர்களை போற்றி ஒரு தீர்மானம் நிறைவேறிய பின்னும், அவருக்கு பர்த்தியாக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு வாழ்த்துரை மடல்கள், நோபல் பரிசு பெற்றதற்கு! 

வழங்கிய மேதைகள்:

“ நமது சகபாடி அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது நமக்கெல்லாம் பெருமை தருகிறது. அவர் செய்த சமூகசேவையை பாராட்டவேண்டும்.” -அமைச்சர் குஸும் மாஹ்டெலெ. ஆஹா!

“ கைலாஷ் விஜயவர்கியாவை போல சாதனையாளர்கள் எங்கள் கட்சியின் பல அங்கத்தினர்கள்!” - அமைச்சர் ஞயான் சிங். ( இவர் கலாச்சாரத்தின் விசிறி. ஆன்மீக இசை வித்தகர்.) பேஷ்!

திலீப் சிங் பரிஹார், ரஞ்சீத் சிங் என்ற சட்டசபை அங்கத்தினர்கள் விஜயவர்கியாவை போன்ற சாதனையாளர்கள் இந்தூரில் செய்த சமூக சேவைக்கு பரிசில் கொடுத்த நோபெல் கமிட்டியின் அருமை பெருமைகளை பாராட்டினார்கள். இதை கண்டு பொறுக்காத எதிர்கட்சி பெருமகனார் ஒருவர் விஜயவர்கியாவுக்கு நோபெல் பரிசு கொடுக்கப்பட்டதே மத்திய அரசும், மாநில அரசும் செய்த சதி என்று குற்றம் சாட்டினார். சத்ய பிரகாஷ் என்ற ‘உண்மை விளம்பி’ விஜயவர்கியாவை தாக்கிப்பேசினார்.

ஒரு ‘கைலாச’ குழப்பம். அரசியல் துறையில் முதுகலைபட்டம் பெற்றிருந்த சஞ்சய் பதக் என்பவர் ‘தபக்’ என்று ஒரிஜனல் கைலாஷை மறந்து விட்டு கைலாஷ் விஜயவர்கியாவுக்கும்  கைலாஷ் சாவ்லாவுக்கும் கன்ஃப்யூஸ் செய்து கொண்டு, யாரை பாராட்டுவது என்ற ‘தொபக்கட்டீர்’ வியாகூலத்தில் ஆழ்ந்தார். அஞ்சாநெஞ்சனாகிய அமைச்சர் பூபேந்திர சிங் இதையெல்லாம் ‘ஃபூ..பூ...’ ஊதி விட்டார். கைலாஷ் விஜயவர்கியா எல்லா புகழுரையும் ஜாலியாக வாங்கிக்கொண்டாலும் எதிர்க்கட்சிகளின் மனநிலையை குறை கூறினார்.

இந்த கந்தரகூளங்களை ஊடகங்கள் எள்ளல் செய்ததை பொறுக்காத இந்த ஆட்சி மேலாண்மை மவுனம் காத்தனர். நம்ம கிராம ஊழியர்கள் தேர்வு வைத்தால் இதுகள் தோல்வி தழுவுங்கள். அதை விடுவோம். மாபெரும் சாதனையாளர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களை விதீஷா என்ற உள்ளூர் வாசிகள் கண்டு கொள்ளவேயில்லை. அவர் விளம்பரம் நாடாத உழைப்பாளி. அவரால் பல உதவி பெற்றவர்களே அவரை மதிக்கவில்லை. சிறார்களுக்கு அவர் இத்தனை பாடுபட்டபின்னும் உள்ளூரில் இன்று கூட சிறுவர்களை வேலை வாங்குகிறார்கள், விதீஷாவில்.

தமிழ்நாட்டு அமைச்சர்கள் இந்த ரகம் அல்ல. சுதாரித்துக்கொள்வார்கள். 1970ம் வருடம் ஏ.ஜீ ஆஃபீஸில் ஒரு கலை நிகழ்வு. ஒரு அமைச்சர் சிறப்புரை ஆற்றினார், தேனீர் ஆற்றுவது மாதிரி!
கலையை பற்றி பேசுவதில் இடைச்செருகலாக, ‘நாங்கள் உங்களுக்கு அகவிலைப்படி வாங்கிக்கொடுத்தோம். நன்றி செலுத்துக’ என்று ஒரு ஊசிப்பட்டாசு வீசினார். மத்திய அரசு துறையான அந்த அலுவலக ஊழியர்கள் முணமுணத்தார்கள், உரத்த குரலில். அமைச்சர் தப்புத்தவறி தலைமை தாங்கிய நான் இதை அவரிடம் விளக்கி, இந்த ஆடிட் பசங்க ஒரு டோண்ட் கேர் டைப் என்றேன். புன்னகை பூத்த அமைச்சர் பிரான் அடுத்து சொன்னது, ‘ புதுக்கோட்டை அருகில் இருக்கும் சித்தன்ன வாசலிலே... என்று அரை மணி நேரம் ஒரு பிடி பிடித்த லாகவம். இல்லை லாவகமா?

மாரல்: கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்திருக்கலாம்.






pastedGraphic.pdfSatyarthi is still to be recognised for his work in his home state. Reuters image

Satyarthi is still to be recognised for his work in his home state. Reuters image

Sunday, November 9, 2014

தொபக்கட்டீர் !

தொபக்கட்டீர் ! Monday, November 10, 2014, 5:38

– இன்னம்பூரான். 
stickman-falling-md‘… விபரீத புத்தி!’ பழமொழிகளை, அதுவும் வடமொழி கலப்பிலே எழுத அச்சமாக இருக்கிறது. ஆனாலும் அவை இயல்பாகவே உண்மை உரைக்கின்றன. சில ஜந்துக்கள் திருட்டு ஏணியில் வானமேறி, தன்மானம் இழந்தவர்கள். அந்த வெள்ளைக்காலர் திருடர்கள் அபரிமிதமாகவே குழப்பி, ஆட்டைத் தூக்கி மாட்டில் போடுவார்கள். மாட்டைத் தூக்கி ஆட்டில் போடுவார்கள். தலைகீழ் நிற்பார்கள். அர்த்தராத்திரியில் பிடித்தக் குடையை அநாமதேய பினாமிகளுக்கு பரிசளிக்கும் பேமானி ஆவார்கள். எதிர்வீட்டில் அடகு பிடிப்பார்கள். பக்கத்தூர் வங்கியிலே, இல்லாளுக்குக்கூடத் தெரியாமல், மர்ம நம்பர் கணக்கு வைப்பார்கள். ஹவாலாவில் மூழ்கி எழுவார்கள். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து, பெற்ற பிள்ளைக்குக் கூட கிடைக்காதபடி, முடக்கிப் போடுவார்கள். கடந்த சில வருடங்களில் தலை விரித்து பேயாட்டம் ஆடி, பொது சொத்தை அபகரித்து, விதிமுறைகளை மீறி, பொய்க்கணக்கு எழுதி, பொல்லாதவர்களுடன் கூட்டமைத்த கஜானா களவாளிகள் எக்கச்சக்கம். அவர்களில் பலர் உங்களுக்கு அறிமுகமான பிராணிகள் தான். புலியையும், எலியையும் கூண்டில் வைக்கும் மக்கள், கொசுவையும், ஈயையும் நசுக்கும் நாம், இந்த இராக்கதர்களை உலவ விட்டிருக்கிறோம். வேலி நம் நிலத்திலும், அடுத்தவன் நிலத்திலும், புறம்போக்கு நிலத்திலும் மேய்கிறது, கேட்பார் இல்லாமல். எந்த தனிமனிதரையும் சுட்டாத இந்த பொது அறிமுகம் முற்றிற்று. இனி அடைமொழிகள் வாரா. இது இந்த தொடருக்கு சிறப்புப்பாயிரம் என்க. ஒவ்வொரு இழையிலும் இதுவும், ஈற்றடியும் திரும்ப, திரும்ப வரும்.
இனி, நவம்பர் 7, 2014 தகவலையும் அதன் பின்னணியையும் பார்ப்போம். ஆவணங்களும், சான்றுகளும் இல்லாத சேதி ஒன்றும் எழுதப்படமாட்டாது. நம் நாட்டின் முதல் பிரதமரும், தேசாபிமானியுமான பண்டித ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேத்தி பிரியாங்காவின் கணவர் ராபர்ட் வடேரா தன் சொத்துப்பத்துக்களை காபந்து பண்ணுவதாக செய்தி. எப்படி? அவர் தலைமையில் இயங்கும் 1. Lifeline Agrotech, 2. Greenwave Agro, 3.Rightline Agriculture, 4.Future Infra Agro, 5. Best Seasons Agro and 6.Primetime Agro என்ற கம்பெனிகளில் நான்கை கலைத்து விட்டார்; இரண்டை கலைத்துக் கொண்டிருக்கிறார். இது கம்பெனி இலாக்காவினால் நேற்று அறிவிக்கப்பட்ட செய்தி. இத்தனைக்கும் இந்த பட்டியலில் இல்லாத ஸ்கைலைட் என்ற கம்பெனி போன வருடத்துக்கு முந்திய வருடம் ஈட்டிய லாபம் ரூபாய் 33 கோடி. முப்பத்துமூன்று கோடி தேவர்கள் கூட இப்படி செல்வம் ஈட்ட முடியாது. ஏன் கலைத்தார்? யார் யாராருக்கு நஷ்டம்? இந்த கூடாநட்பின் மற்ற பிரகிருதிகள் யார் யார்? அவர்கள் வாளாவிருந்தனரா? போன வருடம் எப்படி இந்த லாபத்திற்கு பதில் ரூபாய். 2.3. கோடி நஷ்டம்? இவருடைய தொழிலே வேளாண்மையை ஒழித்துக்கட்டி, வீட்டுமனை போட்டு,எக்கச்சக்கமான லாபம் அடைவதே. எதற்காக இந்த வேளாண்மை அடைமொழி? இதற்கெல்லாம் விடை காண இயலவில்லை. அவரை கேட்க இயலாது. தக்கதொரு காரணமில்லாமல் வீ.வீ.ஐ.பி. யாக திகழ்ந்த இந்த மனிதர், குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன என்று வினவிய ஊடகத்தானை இம்மாதம் முதல் தேதியன்று, ஒலிப்பெருக்கியை பிடுங்கி, கன்னா பின்னா என்று வைது ஒரு வழி செய்துவிட்டார். அதன் எதிரொலியாகவா அவருடைய மாமியார் ஸோனியா காந்தி மாப்பிள்ளையின் வீட்டுக்கு சென்றார்? யாமறியோம். ஆனால், கம்பெனிகள் கலைகின்றன!
சரி, சரி, இதற்கெல்லாம் அடிப்பாரமான, ஆடிட்டர் ஜெனெரல் அலுவலகம் சொல்வது என்ன? ஊடகச்செய்தி படி முதல் நிலை ஆய்வு ஆவணம் (முதல் நிலை ஆவணங்கள் திருத்தப்படலாம்; அவை ஊடகத்திடையே உலவுவதே வியப்புக்குறிய சமாச்சாரம்.) கூறுவதாக சொல்லப்படுவது:
‘வெறுங்கையை வைத்து முழம் போடுவது போல்’ திரு. வடேரா ஒரு லக்ஷம் ரூபாய் முதல் போட்டு, அரசியல் ஆதரவின் பயனாக, தம்மாதூண்டு பணம் போட்டு (7.5 கோடி ரூபாய்) வாங்கிய நிலத்தை டி.எல்.எஃப் கம்பெனிக்கு ரூ. 58 கோடிக்கு விற்று ரூ.43.66 கோடி லாபம் ஈட்டினார். ஹரியானா அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கைப் படி கட்ட வேண்டிய ரூ.41.5 கோடியை கபளீகரம் செய்து விட்டார். இதற்கு ஹரியானா காங்கிரஸ் அரசு உறுதுணை. திரு. வடேரா முதலில் போட்ட முதல் ஆகிய ரூ.7.5. கோடி கூட அவருடைய பணமில்லை என்கிறார், அந்த அரசினால் துன்புறுத்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. கேம்கா.
ஆக மொத்தம் தொபக்கட்டீர் !
எந்த புற்றில் எந்த பாம்போ?!
யாரு கண்டா?

-#-
பிரசுரம்: http://www.vallamai.com/?p=5225
சித்திரத்துக்கு நன்றி: http://www.clker.com/cliparts/0/4/T/8/n/6/stickman-falling-md.png
இன்னம்பூரான்


Saturday, September 13, 2014

என்னத்தைச் சொல்ல ! ~4


என்னத்தைச் சொல்ல! – 4
  1. Friday, September 12, 2014, 5:38

–இன்னம்பூரான்.
பிரசுரம்: http://www.vallamai.com/?p=50443



ைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில்  (10.09.2014) கல்லையும் கரைக்கும் உருக்கமான நிகழ்வு பற்றிய செய்தி: கும்முடிப்பூண்டி பகுதியில் மழை பெய்து தெருவில் நீர் தேக்கம். அதினுள் ஒரு உயிரோட்டமுள்ள மின்கம்பி. கடக்க முயன்றவர்களை பிள்ளைத்தாய்ச்சி நாய் ஒன்று பலமாக குரைத்து எச்சரித்ததை அந்த மாந்தர்கள் மதிக்கவில்லை. மனிதாபிமானத்துடன், அந்த மிருகம் தானே குதித்து ஆத்மதியாகம் செய்து, அவர்களை காப்பாற்றியது.  நன்றியுணர்வுடன், அந்த பேட்டை மக்கள் அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் அநாதையாக விட்டுச்சென்ற நாய்குட்டிகளை தத்து எடுத்துக்கொண்டார்கள். இங்கு ‘இட்டார் பெரியோர்’ என்று பார்த்தால், அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் தான் உயர் சாதி.  மெளலிவாக்கம் மாடிக்கட்டிடம் வீழ்ந்ததற்குக் காரணம், மனித நேயமற்ற மானிட மனப்பான்மை. புலன் பெயர்ந்து வந்த கூலிகளின் உற்ற தோழர்களாக வாழ்ந்த இரு தெரு நாய்களின் உத்தமபுருஷ தகுதியை சொல்லி மாளாது. போலீஸ் மோப்பநாய்கள் உண்மை ஊழியர்கள். இங்கிலாந்தில் ராணுவ மோப்பநாய்களுக்கு அபரிமித மரியாதை. இது நிற்க.
ஊடகங்கள் கேட்க மறந்த சில கேள்விகள்:
  1. உயிரோட்டமுள்ள மின்கம்பி அறுந்தது மின்சார துறைக்கு ஏன் தெரியவில்லை?
  2. அல்லது, தெரிந்தும் வாளாவிருந்தனரா?
  3. நாய் அபாயத்தைக் குறிக்கும்போது குரைக்கும் விதமே அலாதி. புத்தியுள்ள மாந்தருக்கு அது தெரியும். அப்படியானால், கடக்க விழைந்த மனித தெய்வங்களுக்கு புத்தியில்லையா?
  4. மின்கம்பி விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதா?
  5. அப்படியானால் என்ன முடிவு?
  6. இல்லையென்றால், ஏன்?
  7. நாய்க்குட்டிகளுக்கு அரசு மான்யம் கிடைக்குமா?
  8. ஆம் என்றால், அதை கண்காணிப்பார்களா?
  9. இல்லை என்றால், மனிதனுக்கு ஒரு விதியா? விலங்குகளுக்கு வேறு நடுவுநிலைமை ஒழிந்த சால்ஜாப்பு எப்படி நியாயப்படுத்தப்படும்?
என்னத்தைச் சொல்ல?

-#-


இன்னம்பூரான்
10 09  2014
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்

www.olitamizh.com

Monday, September 8, 2014

என்னத்தைச் சொல்ல! 3

என்னத்தைச் சொல்ல! 3

இன்னம்பூரான்
06 09  2014
பிரசுரம்: வல்லமை மின்னிதழ்:http://www.vallamai.com/?p=50274
பகை படையெடுக்கலாம். உள்ளிருந்தும் புகையலாம். ஏன்? பாலிலும் வரலாம். சூடான செய்தி: ஆவின் பாலில் இலவச குளிர்பானமாக வந்து அமைச்சர் தலையை காவு வாங்கலாம் ! வாங்கிடிச்சுண்ணு சில மணி நேரம் முன்னால் தினமலர் கூறியது. 
செய்தித்துகள் கூட்டம்:
 ‘மேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, வேலூர், ஆவினில் வேலை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஜ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்... சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது...கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர். திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர்.இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்தது... தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன... பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் மார்க் ட்வைய்ன் சங்கேத மொழிகள் தான். நல்லவேளை, ‘பாலில் தண்ணீர் கலப்பதாகச் சொல்லப்படுகிறதாம். தண்ணீரில் பால் கலப்பதாகவும் கேள்விப்படுகிறோம். ஆவினம் ஆவின் மீது வழக்குத் தொடரப்போகிறதாம். தருமமிகு சென்னையின் மஹாலிங்க நகரில் வாந்தி பேதியாம். அதற்கு காரணம் பாலில் கலந்த சாக்கடை நீர் என்று சில ஊடகங்கள் கூறுவதை வன்மையாகக் கண்டித்த ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் காரணம் கூற அடக்கத்துடன் மறுத்து விட்டனவாம். வாம்! வாம்!’ என்று எந்த நாளிதழும் எழுதவில்லை.’ கற்பனை போதும்.
இந்த நாசகார வேலையில் எத்தனை பேர் எத்தனை வருடங்களாக ஈடுபட்டிருந்தனர்? அந்த காலத்தில் அரசியில் கல்லும் கிராமஃபோன் ஊசியும் கலப்பது உண்டு. தேயிலையில் குதிரைச்சாணி கலப்பதற்கே என்று இருந்த களவு தொழிற்சாலைகள் என்ன ஆயின? ஆகமொத்தம் மக்களுக்குத் தெரியாமலா இந்த கலவை நடந்திருக்கும்? 
இது எல்லாம் உள்ளிருந்து புகைச்சலா? என்னத்தைச் சொல்ல?
-#-

சித்திரத்துக்கு நன்றி:http://photos.thenews.com.pk/tasveer_images/2012-11-17/large/2_201211170304100202.jpg

Sunday, August 17, 2014

My Evidence: Verma Committee

Dear Readers,

I depart from the conventions set by myself in this blog:

1. It is in English:
2. It is a reprint, so to say;
3. I never sought out comments. I ask now.

There is extensive, meandering , politically correct, self-righteous, conceived in error, hypocritical and also concerned and genuine comments in many blogs about violating the female. Agonised over that development, I place below my Evidence.

I find a certain global readership for my blog. I earnestly seek your comments, in all humility.

Here, we go.
Innamburan
17 08 2014

****************************
January 4, 2013

Dear Justice Verma Committee,
Welcoming your move to elicit public opinion and cognizant of the overwhelming response, I write as under:
My credentials are: (a) Being an observant and concerned citizen over six decades and (b) my having been privy to confidences on ‘Violation of the Female’ (my preferred expression for your wide-ranging Terms of References) in the workplace as a former Indian civilian and elsewhere as well, as a former Citizen Adviser in the UK. I made a special study of this deviant behavior, inter alia, for my Applied Sociological Work degree in the UK.  I had diligently kept track of this nettlesome issue over the long term and in the sad context in which this Committee was set up.
‘Violation of the Female’ is anatomically easy and quick; the male mind dwells on nothing else, most of the time. He can get away with it in no time.  Consequences do not visit on him. It is ubiquitous globally and over the centuries. Widespread and socially acceptable consensual sex among the adult population in the western world does empower the female and mitigates this deviant behavior, but it also brings in intractable problems, in its wake. India is not ready for any such experiment, except to the extent it is already prevalent.  We are too self-centered to come out of the shell of denial of stark truths. Family, neighborhood and the larger society had almost always acquiesced into the ‘Violation of the Female’ and will continue to do so, for reasons of the dubious ‘family honor’, hypocrisy masquerading as political correctness (no virtue either!), the denial-mode and pervert vicarious self-indulgence. Binge-drinking is most certainly deplorable for triggering this deviant behavior, most often. India is now infamous.
The criminal justice system ~ administration of Indian Penal Code, laxity and loopholes in enacted law, abhorrent record of the Law & Order establishment, heinous political interference, court delays that deny justice, widely prevalent defiance of the rule of law ~ is no less deviant than the perpetrators themselves.  Distance, instead of dimming, throws the spotlight in, sometimes. I cite an excerpt from myself on the ‘Obnoxious, but not Criminal’  vintage justice system from the distant USA, for flooding the spotlight in, on us.
[ ‘...This brings to one’s mind the story of an infamous trial in New York that shocked the Unites States. Acquitting 
three young white men of the charge of gang-raping a black woman, the foreman of the jury intoned that their 
conduct was “obnoxious” but not “criminal”. He brushed aside independent testimony that the victim had been unconscious most of the time and that she could not stand when she was conscious. He had no moral dilemma while pronouncing the verdict. To his mind, she was a ‘consenting partner’. The ugly parallel is too close to comfort. The thin dividing line will be crossed, for sure...’

Frontline: November 20, 1992: Economic Policy: “Obnoxious, But Not Criminal”: Public Sector Disinvestment. (S.Soundararajan) ]

The thin dividing line has been crossed and the act denied, hundreds of time by our criminal justice system.  
In the above backdrop, I see your remit, as under:
1.As far as I discern, we do no have codified Human Rights Law. With due respect to the framers of our Constitution, I submit that the the contrived divide between the Fundamental Rights and the Directive Principles has done us no good. Please set things right, to the extent within your terms and commend enactment of the Human Rights Act, from the larger perspective.
2.Bring back a robust dose of Moral Studies in the schools, assisted by gradual teaching of Rights, Duties, Societal obligations and Rule of Law. This is for the long term.  Some move is afoot; it could by spiked by the vested interests. Hence, the request.
3. Paediophilia, Incest, Binge-drinking, Violation of the Female and prostitution are caged within one vicious trap . Please break it by suggesting the skeleton of a distinct Law to be enacted quickly for comprehensive and lucid coverage, by replacing the welter of law on these subjects. Punishment should be quick, deterrent and should not be amenable to remission of any kind. Parole should be prohibited. The latitude and discretion to the police officials should be minimal. Punishment for negligence of duty should be severe. Negotiation and bargaining at the instance of the police should be treated as abuse of power; it should be made criminal, not merely obnoxious.
4.These aspects, to my mind,  are very serious. I urge you to set up a sub-committee for framing the draft Bills on para 2 & 3 above and recommend that the Legislature pass it. Please include female legal luminaries in that sub-committee.
5.Revision of the Indian Evidence Act for facilitating fast track courts, a hard look at Tort Law for levying extortionate fines on the guilty for offenses listed in para 2 above is also an urgent need. I personally do not see virtue in the government always paying for the damage caused by the criminals. Local communities abet, at times. They should be heavily fined.
6.Transparency is one deterrent. The ‘Amanath’ outrage was too much in the open. Hence, the upheaval. I urge you to commend a code of conduct for the government, media, police and the NGOs, in this regard.
7.I do not favor capital punishment for larger reasons; nor do I favor chemical castration, as it is no deterrent and as the danger of miscarriage of justice looms large. In USA and some Western countries, anti-socials of this class and degree are jailed for the very long term, not merely as a punishment, but as their release is considered a danger to the society. You may like to consider laws leading to that effect; but, the real deterrent is the hard and strenuous labor being extracted from them during such incarceration.
We look to you most expectantly for exploring the causes and suggesting robust and practical remedies, in perspective.
I thank you for the opportunity to comment.
Thanking You, 
S.Soundararajan

Friday, August 1, 2014

பெருங்களத்தூர் நோட்ஸ் 1 அலை பாயுதே !

பெருங்களத்தூர் நோட்ஸ் 1
அலை பாயுதே !
இன்னம்பூரான்
01 08 2014

தர்மமிகு சென்னை நாலாபக்கமும் விரவி வருவதால், வண்டலூர் மிருக கண்காட்சி
சாலைக்கு அருகில் உள்ள பெருங்களத்தூர் என்ற மனித கண்காட்சி சாலையின்
மவுசு ஏறி வருகிறது. புதிய பெருங்களத்தூரின் பிறவி வேறு. அருகே கானகம்
வேறு மெருகேற்றுகிறது. சுற்று வட்டாரத்தில் வேங்கை நடமாடினாலும், இங்கு
புகலடைந்தேன். கிட்டத்தட்ட தமிழில் நாற்பது நூல்கள் எழுதிய சான்றோன்
ஒருவரின் நட்பு கிடைத்தது. அவர் ஜே.கே.யின் தத்துவங்களை பற்றி ஒரு
அருமையான நூல் படைத்திருக்கிறார். அதை படித்துக்கொண்டிருக்கிறேன்.இது வரை
எழுதியதற்கு அவருடைய முன்னுமதி இருப்பதால், எழுதிவிட்டேன்.  அவருடன்
அளவளாவுவது ஒரு இனிய அனுபவம்.

அவரும் நானும் பல விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். அத்தருணம், என்னுடைய
ஜனவரி 1953ம் வருட குறிப்பு ஒன்று தற்செயலாக கிடைத்தது. அதில் ‘The
Psychology of Study’,வீணடிக்கப்பட்ட நேரம், ஆனந்த விகடனில் தேவன் எழுதிய
கதையை பற்றிய விமர்சனம்,அரிஸ்டாட்டில், என்னுடைய சிநேகிதி, அண்ணல்
காந்தி, சர்தார் படேல், கன்ஃபூஷியஸ் எல்லாரும் உலவுகிறார்கள். இருவரும்
இதை படித்துவிட்டு, நினைவலைகளில் மிதந்தோம். அதன் நற்பயனாக, “Master
Kong” (Chinese: Kongzi), Confucius எனப்படும் சீன தத்துவ மேதையிடம்,
எங்கள் சிந்தனை அலை பாய்ந்தது. நண்பர் வயதானவர்.ஓய்வெடுக்க சென்று
விட்டார். கன்ஃபூசியஸ்ஸிடம் வசமாக மாட்டிக்கொண்டேன். தமிழில் அவரை பற்றிய
செய்திகள் குறைவாகத்தான் காணப்படுகின்றன. சாக்ரட்டீஸ் மாதிரி அவரும்
பெரிதும் புகழப்பட்டவர், நிந்திக்கப்பட்டவர்;அவரே தெய்வம்;அவரே சாத்தான்!
எனினும், உலகமெங்கும் சிந்தனைக்களங்களில் இன்றளவும் பேசப்படும் அந்த
ஞானியை பற்றியும் அவருடைய சூத்திரங்களை (Analects (Chinese: Lunyu)
பற்றியும் நாம் அறிந்தது சொற்பம் என்ற தோற்றம். எனவே, அபரிமிதமான
துணிவுடன், அவரை பற்றிய இந்த தொடரை துவக்கியுள்ளேன் பார்க்கலாம்!

இங்கு ஆசான் எனப்படுவது அவரே.அரசாங்கமும், பொது நடப்புகளும் என்ற
தலைப்பில் அவர் எழுதிய சூத்திரங்கள் இந்திய சமுதாய முன்னேற்றத்துக்கு
பொருத்தமானவை. இன்றைக்கு முதலாவது:

‘ஆயிரம் தேர்கள் ஆடி வரும் நாட்டில், கண்ணியம், சிக்கனம், கொடை,
காலத்துக்குகந்த வேலை வாய்ப்பு, தரமுயர்ந்த வணிகம் ஆகியவற்றின் மீது
தீவிர கவனம் தேவை என்று ஆசான் அவர்கள் கூறினார்.

‘The Master said: In ruling a country of a thousand chariots there
should be scrupulous attention to business, honesty, economy, charity,
and employment of the people at the proper season.’

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


-
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, July 24, 2014

கொலைகார பாவிகளா!

கொலைகார பாவிகளா!
இன்னம்பூரான்
24 07 2014 
அன்பின் ஶ்ரீவித்யா, தும்மா விஷ்ணு, ஸ்ருதி, சரத், வஹீத், ரஜியா, நீருடி வம்ஷி, சிந்தாலா திவ்யா, சிந்தாலா சரண், வித்யா, கோலா மஹேஷ், சிந்தாலா சுமன், மேலும் உங்கள் சகபாடிகள் எட்டு பேர்,
நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். மண்டை வெடித்து, மூளை சிதறி, கைகால் உடைந்து, குடல் பிதுங்கி, குருதி வெள்ளத்தில் மூழ்கி செத்துப் போய்விட்டீர்கள். ஆம். கொலை செய்து விட்டார்கள். நாசமா போற கைபேசியில் பேசிக்கொண்டே, உங்கள் பஸ்ஸை ஓடும் ரயிலில் தலை கொடுத்து, உம்மையெல்லாம் கொன்று குவித்து, தன்னையும் பலி கொடுத்தார் வண்டி ஓட்டுனர் பிக்ஷாபதி கவுட். அப்பனும் ஆத்தாளும் வவுத்திலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். அமைச்சர்களும் அதிகாரிகள் படையெடுத்து வந்து பிலாக்கணம் பாடுவார்கள், மூக்கொலியால். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, பிலாக்கணம் பாடினாலும், நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். படுகாயம் அடைந்த 20 சகபாடிகளில் எல்லாரும் பிழைக்கவேண்டும் என்று தெய்வத்துடன் கலந்து விட்ட உங்களிடம் வரம் கேட்கிறோம். காலை பிடித்து கெஞ்சுகிறோம். பேச்சுக்கு சொன்னேன். உங்கள் கால்கள் தான் உடைந்து மூலைக்கு ஒன்று கிடக்கின்றனவே. உங்கள் பள்ளிக்கூடமாகிய தூப்ரான் காக்காத்தியா டெக்னோ பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள். குழந்தைகள் அழும். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். அரசு ஓடி வந்து அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் காசு கொடுப்பார்கள். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். இதழ்களில் உரத்த குரலில் வாதம் புரிவார்கள். ஆனால், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். கனம் கோர்ட்டார் மன்றங்களில் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தடிக்கும் வழக்குக்கள் நடக்கும். ஆனால், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள்.
நான் பச்சாதாபத்தினால் இதெல்லாம் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம் உண்மை. கும்பகோணம் பள்ளியில் தீயில் பிஞ்சுகள் கருகி செத்துப்போய் பத்து வருஷம் ஆச்சு. உடனே தீ வைத்து உங்களையெல்லாம் கொளுத்தினாங்களே தவிர, கேசு நடக்குது. வாரத்துக்கு ஒரு ஆழ்கிணறு பலி. குழந்தைகளையும், பெண்களையும் கொல்லும் பாரத நாட்டில் ஈவிரக்கம் கிடையாது. கீழ்வெண்மணியில் உயிருடன் தீ மூட்டினார்களே. அசட்டை உண்டு.
நண்டேட்- செகந்திராபத் ரயில் ஏற்கனவே நான்கு மணி தாமதம். உங்கள் பஸ் ஓட்டுனரை கெஞ்சினீர்களே. கேட்டாரா? ரயிலை முந்தணும், காவு கொடுத்தாலும். அது தான் அவருடைய இலக்கோ? முந்திட்டார். ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு உங்கள் பஸ் இழுத்துச்செல்லப்பட்டதாமே. என்னத்தைச் சொல்ல !
‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள்.
இது மசியல்ல. உலர்ந்த உங்கள் குருதி.
சித்திரமும் வேண்டாம். மண்ணங்கட்டியும் வேண்டாம். அடுத்த அசட்டை கொலைக்களமும் நடக்கும் என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது.

-#-

Monday, June 16, 2014

போன மச்சான்...

போன மச்சான்...
இன்னம்பூரான்
16 06 2014
மச்சான்களில் பலவிதம். சிலர் போகவும் மாட்டார்கள்; போனால் வரவும் மாட்டார்கள். சிலர் பிகு மாஸ்டர்கள்.  தாம்பூலம் வைத்து அழைத்தால் தான் வருவார்கள். சிலர் கூப்பிடாவிட்டாலும், வந்துத் தொலைப்பார்கள். போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்ற ரகமும் உண்டு.  மாற்றான் வீட்டு தோட்டத்துப் பூவா? என்று கேட்டு, என்னை மாட்டி விடாதீர்கள். மட்டறுத்து விடுவார்கள். ஆமாம். சொல்லிப்போட்டேன். எதையோ எழுத வந்து விட்டு எதையோ எழுதறேன்!
ஐயெஸீ 3 [ISEE-3: International Sun-Earth Explorer-3] என்றொரு விண்கலம், மண்கலமாகப்போறது, 36 வருடங்கள் பிரபஞ்ச சஞ்சாரம் செய்த பிறகு. 
பயோ-டாட்டா: 

தோற்றம் 1978: தாயுமானவர் நாஸா. ஊழியங்கள் பல. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே மெட்ரோ
மாதிரி வரத்துப்போக்கு. சூர்யோவாயு பற்றி தகவல் சேகரிப்பு, தடம் மாறி நிலவு தரிசனம், செப்டம்பர் 1985ல் ஜியகோபினி-ஜின்னர் என்ற வால் நக்ஷத்திரத்தின் வாலுருவதல் போன்ற பணிகள், பின்னர் போல்டாக, மறுபடியும் கிறுபடியும் கிரகசஞ்சாரம். நாஸா பிரகடனித்த ஓய்வு 1997. பிறகு, என் மாதிரி ஊர் சுற்றல். சும்மா. 1997லிருந்து கதிரவ பிரதக்ஷிணம். உலகம் நோக்கி  யாத்திரை, இப்போது. இரண்டு மாதத்தில் நெருங்கி விடும். மதியில்லாததால், மதியுடன் மோதிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. பின்னர் தடம் மாறி, திக்கு தெரியாமல் சூரியனை வலம் வந்து கொண்டிருக்குமோ என்ற ஐயமும் இருக்கிறது. என்ன பிரச்னை? சிக்கல் யாதும் இல்லை. ஆரோக்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் வழி நடத்தல் கையேடு [ஆபரேட்டிங் மேன்யுவல்] இல்லையே. {முனைவர் நா.கா., த.ம. அ.விடம் சொல்லியிருந்தால், மின்னாக்கம் செய்து வச்சுருப்போம் இல்லை!]
ஆபத்பாந்தவனாக வந்து இருப்பது, மிஸ்டர்.டென்னிஸ் விங்கோ என்ற ஆகாசகங்கை இஞ்சினீயர். மூடப்பட்ட ஒரு மக்டெனால்ட் சாப்பாட்டுக்கடை யிலிருந்து சக்கை போடு போடும் ஸ்கைக்கோர் கம்பெனி தான் அவருக்கு கை கொடுக்கிறது. சாண் கையில் முழம் அளக்கும் விந்தை மனிதரவர். போறப்போக்கை பார்த்தால், விண்கலத்தை மண்ணில் இறக்கிடுவாங்க போல் இருக்கு.
எல்லாரும் ஜோரா கை தட்டுங்கோ. ஐயெஸீ 3 மண்கலமானவுடன், சவுடால் பொருத்தமாக, ஒரு பாட்டுப்போடுவார். 
-#-
தகவல் உபயம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா 16 06 2014

சித்திரத்துக்கு நன்றி: http://yournewsticker.com/wp-content/uploads/2014/05/NASA-ISEE-3-1.jpg

Friday, June 13, 2014

சிரிச்சு மாளலெ 8

*
சிரிச்சு மாளலெ 8



இன்னம்பூரான்
ஜூன் 13, 2014

ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலெ, ஹிந்தி மொழியை அரசு அலுவலகங்கள் ஜோரா பயன்படுத்துகின்றனவா? என்று பீராந்து ஆராய பார்லிமெண்டரி கமிட்டிகள் வந்து உயிரை வாங்குவாங்க. நான் அவர்களிடம் இரு முறை சிக்கிக்கொண்டேன். அவர்களுக்கு எக்கசக்கமாக பரிசுகள் வாங்கவேண்டும். திண்டியா சோறு போடவேண்டும். நாங்களோ ஆடிட் பசங்க: அதுவும் குஜராத்தில்! சுஷ்கம் (கருமி). அதனாலெ, அவுங்களுக்குக் கடுப்பு. அலஹாபாத்துக்கு மேலெ ஹிந்தியில் பேசினாலும், கன்னா பின்னா வசவு கியாரண்டி. ஹைதராபாத்தில், ஸாலார் ஜங் ம்யூசியம் காட்றேன் பேர்வழி என்று காலம் கடத்தித் தப்பித்தேன். அஹமதாபாத்தில் வசமாக மாட்டிக்கொண்டேன். அங்கு குஜராத்தி தான் செல்லுபடி; ஹிந்தி அடுத்தபடி தான். ஃபார்முலா படி ஹிந்தி தட்டச்சு இயந்திரங்கள் ஏன் வாங்கவில்லை என்று வசை பாட ஆரம்பித்தவுடன், குஜராத்தி மிஷன்கள் தான் தேவை; ஹிந்தி மிஷின் வேஸ்ட் என்றேன், வாய் தவறி. தொலைந்தது! வசை மழை பொழிய தொடங்கியது. தாங்கமுடியாமல், ‘உரிய பதில் என்னிடம் இல்லை’ என்ற சால்ஜாப்பு பொருளில்,’மைம் தோ லாஜவாப் ஹூம்.’என்றேன். வழக்கு மொழியில், ‘எனக்கு நிகர் யாருமேயில்லை’ என்று அதற்கு பொருளாம். என் ‘அசட்டு தைரியத்தை’ கண்டு விக்கித்து போன கமிட்டியார் எனக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து, மீட்டிங்கை முடித்தார்கள். அதை கொண்டு வந்து கொடுத்தவர் ஒரு அ.தி.மு.க. எம்.பி. ‘நீங்க என்ன சொன்னீங்க? அந்த பிசாசுகள் நமட்டுச்சிரிப்பு சிரிக்கிறாங்க.’ என்றார், அவர். எனக்கும் மூச்சு வந்தது. எதற்கு இதை சொல்றேன். ஆமாம். இந்த மாதிரி கமிட்டிகளால், செலவு ஜாஸ்தி. பாருங்களேன். ரூபாய் 89 லக்ஷம் செலவில் ஆறு கோவா எம்.எல்.ஏ.க்கள் பிரேசீலுக்கு போய் கால்பந்து விளையாட்டுப்பார்க்கப் போறாங்களாம். முதல்லெ ‘அப்படித்தான் செய்வோம். இந்த பிரிதிநிதிகள் அங்கு போய் பார்த்து வந்து, கோவாவில் கால்பந்தாட்டம் பரவ, அதற்கு வேண்டியதை பரிந்துரைக்க, கூட்டத்தை மேய்க்க இத்யாதி கற்றுக்கொள்ள இந்த ‘ஜாலி’ பயணம் இன்றியமையாதது. ஆஹா ஊஹூ’ என்றார், முதல்வர். ஆனால், எதிர்ப்பு வளர்வதை கண்டு, அந்த பிரிதிநிதிகளே தங்கள் செலவை பார்த்துக்கொள்வார்கள் என்று முடிவாச்சாம். இல்லை. இல்லை. யாரோ இரு செல்வமிக்க கம்பெனிகள் தான் உபயம் செய்கிறார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், ஒரு சர்ச்சில் ஜோக் ஞாபகத்தில் வருது. இங்கிலாந்து எம்.பி.க்கள் பலர் ஒரு யாத்திரை போகோணும். இரண்டு விமானம் புக்ட். சர்ச்சில் இந்த பயணத்தை ரத்து செய்துவிட்டார், கிளம்பறசமயத்தில். எல்லாரும் போய் அவர்கிட்ட ரத்து செய்தததை ரத்து செய்ய சொல்லி கேட்டபோது, அய்யா சொன்னாராம், ‘ரோசனை பண்ணிப்பாரு. ஒரு விமானம் விழுந்தாக்கூட, எத்தனை பை-எலெக்ஷன் செய்யணும் என்ன செலவு ஆகும். அதை பாரு’ என்றாராம்!
ஒரே சமாச்சாரம். எத்தனை கோணங்களடா!
-#-\
சித்திரத்துக்கு நன்றி: