Showing posts with label என்னத்தைச் சொல்ல. Show all posts
Showing posts with label என்னத்தைச் சொல்ல. Show all posts

Sunday, August 23, 2015

என்னத்தைச் சொல்ல? -8 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6

என்னத்தைச் சொல்ல? -8 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (6)

இன்னம்பூரான்
ஆகஸ்ட் 23, 2015

தாடி பத்தி எறியச்சே, பீடிக்கு நெருப்பு கேட்டானாம்! நம் நாட்டில் நடக்கும் விநோதங்களில்
சில, சிரிக்கவும் முடியாது: அழவும் முடியாது. தலைலெ துண்டுப் போட்டுக்கொண்டுட்டுக்கொண்டு, வங்காள விரிகுடாவில் முழுக்கு போடவேண்டியது தான். பாடியை வச்சுக்கிணு, விதண்டாவாதம் செய்வார்கள் தண்டல்காரர்கள்.

சூடான செய்தி. செருப்பை கையில் எடுத்துக்கொள்ளவும். அடிக்கணும் இல்லையா? விஷாலக்கிளமையில் காலை 6.18 க்கு பரைய்லி எனப்படும் ஸ்டேஷன் பக்கத்து ஷம்ஷான் பூமி ( தெரிஞ்சு தான் பேர் வச்சாங்களோ!!!), தண்டவாளத்தில் விழுந்து, ரயில் ஏறி, நசுக்கி ஒரு இளைஞர் செத்துப்போனான். பாடியை எடுப்பதில் தகற்ற்றாறு. ஜிஆர்பி போலீசும், பரைய்லி போலீசும் லத்திச்சண்டை போடல்ல. அதான் பாக்கி. வாயால் ஒருவரை ஒருவர், யார் பாடியை எடுக்க ஜூரிஸ்டிக்‌ஷன் பற்றி வாய்ச்சண்டை மணிக்கணக்காக போட, அந்த சவத்தின் மீது 16 ரயில் வண்டிகள் ஓடி விட, சவம் சபித்துக்கொண்டே ஓலமிட்டது என்று தோற்றம். ஆறு மணி நேரம் கழித்து வந்த டாப் ஆபீசர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் லடாய்! அப்றம் சவத்தை மூட்டையாகக் கட்டி, சவக்கிடங்கில் எறிந்தார்கள். பரிசோதனை நடந்ததாம். எதை என்ன பண்ணி அறுக்கமுடிந்தது என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்! அப்றம் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் நடக்குமாம். மண்ணாங்கட்டி! தெருப்புழுதி! அறிவு கெட்ட மாந்தர்கள்.

இந்த மாதிரி தான் அன்றொரு நாள் ஒரு கயவன் அடையாறு பகுதியில் தன்னை பெற்ற அன்னையை தெருவில் செம்மையாக அடித்து, சாக்கடையில் தள்ளி பேயாட்டம் ஆடினான். குடிக்க காசு தரவில்லையாம். இரண்டு போலீஸ்காரர்கள் ( சாஸ்திரி நகர் & பெசண்ட் நகர்) பீடி குடித்துக்கொண்டு நின்று இருந்தனர். நான் புகாரித்தேன். என் பதவியை அறிவித்து, டி.ஜி. என் சக மாணவர். அந்த கழுதையை அரெஸ்ட் செய்யுங்கள் என்றேன். ‘சார்! உங்களுக்கு ஏன் வம்பு. இவன் பெரிய புள்ளி’ என்றார்கள். நான் குறுக்கிடப்போனேன். எனக்குத் தெரிந்த கடைக்காரர் ஒருவர், என்னை இழுத்துப் பூட்டி, ‘சார்! அவன் ரெளடி ஷீட்டர். கொலையும் செய்வான்’ என்று கை கூப்பி வேண்டிக்கொண்டார். வீட்டுக்கு ஃபோன் செய்து, அவர் புகாரிக்கவே, நமக்கு செம டோஸ்! 

என்னத்தைச் சொல்ல!
-#-
உசாத்துணை: 
Dna_Article_Middle_300x250_BTF

சித்திரத்துக்கு நன்றி: http://www.vinavu.com/wp-content/uploads/2008/11/சாரு-நிவேதிதா-ஜெயமோகன்.jpg

இன்னம்பூரான்

Wednesday, February 11, 2015

என்னத்தைச் சொல்ல? -7 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (5)

என்னத்தைச் சொல்ல? -7 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (5)


இன்னம்பூரான்
11 02 2015

மாமாங்கத்துக்கு மாமாங்கம் சால்ஜாப்பு சொல்லுவோம். 
ஜாமத்துக்கு ஜாமம் ஊரை நாசமடிப்போம்.
ஏமாத்து வேலைக்கு ஜால்ரா போடுவோம். விளக்கு
மாத்தாலெ அடிச்சாலும் சுரணை கிடையாது.

‘பீஸ் சால் கே பாத்’ (20 வருடங்களுக்கு பிறகு) என்ற ஒரு சினிமா அந்த காலத்தில் பிரபலம். பேரை மட்டும் வாங்கிக்கிறேன், ஒரு முப்பது வருட கொலைக்களத்து பிலாக்கணம் பாட:

1996ம் வருடம் உச்ச நீதி மன்றத்துக்கு முன்னால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கொடுத்த சபதம் இது:

"It is submitted that there are 584 tanneries in North Arcot Ambedkar District vide annexure 'A' and 'D'. Out of which 443 Tanneries have applied for consent of the Board. The Government were concerned with the treatment and disposal of effluent from tanneries. The Government gave time upto 31.7.1985 to tanneries to put up Effluent Treatment Plant (E.T.P.). So far 33 tanneries in North Arcot Ambedkar District have put up Effluent Treatment Plant. The Board has stipulated standards for the effluent to be disposed by the tanneries."

அந்த சபதத்தை மீறி, கண்ட கழுதைகளுக்கு ஆதரவு அளித்து, அண்ணல் காந்தியின் தரித்ர நாரயணனை அவர் கொலையுண்ட தினத்தில், கொலை செய்தவர்களை என்ன செய்யலாம்? நடந்தது என்ன? முப்பது வருடங்களுக்கு பிறகு:

ராணிபேட்டையில் ஒரு சாக்கடை. அந்த ‘சாக்கடை’ எனப்படுவது சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ஒரு சாயகழிப்பறை. நஞ்சு கலந்த சாயக்கழிவுகளால் காந்தி மகான் அஞ்சலி தினமன்று அங்கு ஒரு பிணக்குவியல். அந்த ஹெக்ஸாவெல்ண்ட் க்ரோமியம் அந்த பிராந்தியத்தில் குடிநீர் குடிப்பவர்களையும் கொன்றுவிடுமாம். எத்தனை அப்பாவிகள் செத்தனரோ? அந்த வெள்ளிக்கிழமையில் இறந்த பத்து பேர்களில் ஒன்பது பேர் வறுமையின் காரணமாக மேற்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த அன்றாடங்காய்ச்சி இளைஞர்கள். அவர்களை கொன்று குவித்த முதலாளிகளுக்கு தேசீய சுற்றுப்புறசூழல் நீதிமன்றம் ரூபாய் 75 லட்சம் தண்டனை அளித்திருக்கிறது. அதில் 50 லட்சம் அரசுக்கு; பாக்கி கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு. வரிப்பணத்தில் கைவைக்காமல், மாசுபடுத்தியவர்களிடமிருந்து நஷ்ட ஈடு வாங்கியது சரி தான் என்றாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரங்கெட்ட அதிகாரிகள்  இதற்கெல்லாம் உள்கை.  கொலையில் அவர்களுக்கும் பங்கு உண்டு. அந்த வாரியத்தின் தலைமை குற்றத்தை ஒத்துக்கொண்டு இருக்கிறது. 

உசாத்துணை;








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, January 6, 2015

என்னத்தைச் சொல்ல?! ~7: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [3]

என்னத்தைச் சொல்ல?! ~7: 




ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [3]

இன்னம்பூரான்
ஜனவரி 6, 2015

பல வருடங்களுக்கு முன் மும்பையில் சொற்பசம்பளத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில் ஒரு ஆபத்பாந்தவன் வந்து சேர்ந்தார். அவர் நடத்தும் தர்மஸ்தாபனத்துக்கு சில ஆயிரங்கள் காசோலை மூலம் நன்கொடை அளித்தால், கறாராக அதை முழுதும் காசாகவே திருப்பிக்கொடுப்பேன். உங்களுக்கு வரிச்சலுகை. எனக்கு நிறமாற்றம் (கருப்பிலிருந்து வெள்ளை). எப்படி ஐடியா என்று கொக்கரித்தார். இது அதர்மமில்லையோ என்ற என்னை புழுவைப்போல் துச்சமாகப் பார்த்தார். பத்து வருடங்கள் முன்னால் இந்திய மக்கள் ஆலோசனை மன்றம் துவக்கவேண்டும் என்ற வீராப்புடன் மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் தரமுயர்ந்த தன்னார்வக்குழுக்களுடன் கலந்தாலோசனை செய்தேன். அடிப்படை ஊழியம் செய்ய ஆள் கிடைக்கவில்லை. ஆனால் யாரோ பதினொரு ஆசாமிகளை கொணர்ந்து என்ஜீவோ சிறகு சொருக பல சில்லறைகள் தயாராக இருந்தன. போட்ட கைப்பணம் போச்சு என்று நானும் வாகை சூடா மன்னனாக இங்கிலாந்து திரும்பினேன். எதற்கு இந்த பீடிகை என்றா கேட்கிறீர்கள்?

இதோ. இந்தியாவில் கோடிக்கணக்கான ரூபாய்களில் புரளும் 25 லக்ஷம் தன்னார்வக்குழுக்களில் 10 % தான் சட்டத்திற்கு உட்பட்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்கள் என்ற இந்திய புலன் விசாரணை கழகத்திடம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு ஹெ.எல்.டத்து அவர்களின் தலைமையில்  அமைக்கப்பட்ட நீதிபதிகள் குழு, ‘எல்லா தகவல்களையும் உடனுக்குடன் தொகுக்கவும்.பிறகு, உங்கள் உங்கள் வாதங்களை முன்வைக்கலாம். இந்த தன்னார்வக்குழுக்கள் அவர்களை ஆவணப்படுத்திய மையங்களுக்கு முழுமையாக கணக்கு வழக்கு தரவேண்டும் என்ற விதி என்ன ஆனது? அப்போது தான் வெளிப்படுத்தல் ஒழுங்காக நடைபெறும்.” என்று அறிவுரை அளித்தது. 

புள்ளியியல் கூறுவது: ஒன்பது மாநில தன்னார்வக்குழுக்களிலிருந்து தகவல் இல்லை. தமிழ் நாடும் அவற்றில் ஒன்று. 20 மாநிலங்களில் 23 லக்ஷம் குழுக்களில் 2.23 லக்ஷம் குழுக்கள் தான் கணக்கு வழக்கு அளித்தன.கிட்டத்தட்ட வருடம்தோறும் 950  கோடி அரசு மான்யம் பெறும் குழுக்கள் 2002 -2009 ல் பெற்ற மான்யம்: 6654  கோடி ரூபாய். மத்திய அரசின் நேரடி அரசாட்சி பெறும் பிராந்தியங்களில், டில்ல் பதில் சொல்லவில்லை மற்றவையில் கணக்குக் கொடுத்தவர்கள்: நூறில் ஒன்று. (1%). 22 ஆயிரம் குழுக்கள் பெற்ற வெளிநாட்டுக்கொடை $ 3.2 பில்லியன்.

இதெல்லாம் தோண்டித்துருவிய பெருமை எம்.எல். சர்மா என்ற வழக்கறிஞருக்கு உரியது. ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை என்ற அன்னா ஹஜாரேயின் தன்னார்வக்குழுவை பற்றி அவர் விவரங்கள் கேட்க, இரண்டு வருடங்களுக்கு முன் உச்ச நீதி மன்றம் புலன் விசாரணைக்கு ஆணையிட, இத்தனை தேள், புழு, பூரான், நட்டுவாக்கிளி எல்லாம் தெரிய வந்தது.
எனக்கு என்னமோ சம்சயங்க:
  1. எந்த தைரியத்தில் அத்தனை அழுச்சாட்டியம் நடந்தது?
  2. உடன்கட்டை ஏற்றப்படுபவர்கள் யாரார்?
  3. கேட்க வேண்டியவர்கள் செத்து விட்டார்களா?
  4. தமிழ் நாட்டு தன்னார்வத்துக்கு தெனாவட்டு ஏன்?
  5. இந்த தன்னார்வக்குழுக்களை சீஏஜியை விட்டு தணிக்கை செய்தாலாகாதா?
அடுத்த ஐந்து கேள்விகளை நீங்கள் தான் கேட்கணும்.‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?’ என்று குந்திக்கிணு இருந்தா எப்படீங்க!
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.pambazuka.net/images/articles/500/hakima_abbas/gado_ngo_cashcow.jpg





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, December 19, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 11

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 11

என்னத்தைச் சொல்ல! 8


இன்னம்பூரான்
19 12 14

‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்...’ என்று ‘நல்வழி’ யில் ஒளவைப்பாட்டி பாடினார். அது அவ்வாறு இருக்க, தனது உயிரை தானே மாய்த்துக்கொள்ளும் தற்கொலைகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. மனநிம்மதியை குலைக்கின்றன.  இன்றைய செய்திகளில் எடுத்துரைக்கப்பட்ட தற்கொலைகளின் பின்புலமும், பயங்கரமான செய்முறைகளும், அவலங்களும் நம்மையே தற்கொலை செய்துகொள்ள தூண்டிவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது.

பாண்டிச்சேரியின் முக்கியத்துவம் ஶ்ரீஅரவிந்தர் ஆசிரமம் தான். ஶ்ரீஅரவிந்தர் நிறுவிய அந்த ஆன்மீக மையம் அண்மையில் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. அங்கு வசித்து வந்த ஐந்து சகோதரிகளுக்கும் ஆசிரம பொறுப்பாளர்களுக்கு ஒவ்வாமை, சண்டை. கோர்ட் வாசற்படி ஏறினார்கள்.  உச்சமன்றம் அவர்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் என ஆணையிட, அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஐவரும் அவர்களது பெற்றோரும் தற்கொலை செய்ய கடலில் குதித்தனர். மூவர் காலி. மூவர் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவர் தன்னை காப்பாற்றியவரே தன்னை பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கினர் என்று புகார் அளித்தார். தந்தை பெரியார் திராவிடகழகத்தினர் ஆசிரமத்தைத் தாக்கினர்.

கந்துவட்டி துன்பம் தாங்காமல் கரூரில் இரு சகோதர்கள் நஞ்சுண்டு செத்துப்போனார்கள். இருளப்பசாமி என்ற விவசாயி தன் தந்தை காசிராஜனிடம் உரம் வாங்கக்கொடுத்தப் பணத்தில் கள்ளை குடித்து விட்டு வந்தார், தந்தையார். மகன் அதைக் கண்டிக்க, அப்பன் தீக்குளித்து மரணம் அடைந்தார். கலப்பு மணம் செய்து கொண்ட ஒரு யெளவன தம்பதியை, இரு தரப்பிலும் வீட்டார் ஒதுக்கி வைத்தனர். தன்னுடைய வளைகாப்பு வைபவத்துக்கு ஒருவரும் வரவில்லை என்று மனைவி தூக்கில் தொங்க, அதை கண்டு மனமுடைந்த கணவனும் தூக்குப்போட்டுக்கொண்டான்.  தேனியில் தலைமை ஆசிரியை தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணி ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் தீக்குளித்தான்.  மேலதிகாரி ஒருவர் தலைமை ஆசிரியை மீது குற்றம் என்றார். அந்த அம்மையும் ரஜாவில் போய்விட்டார்.

தமிழகமே! நீ எங்கே போகிறாய்? Quo Vedis?

Image Credit:

http://www.notable-quotes.com/s/suicide_quote.jpg

Monday, December 15, 2014

ஆலம்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 9 என்னத்தைச் சொல்ல! 7


ஆலம்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 9
என்னத்தைச் சொல்ல! 7
இன்னம்பூரான்
15 12 2014
கிணற்றுத்தவளை ஒன்று ஒரே தாவலில் ஓடோடி குளம், குட்டை, கண்மாய் எல்லாவற்றையும் கன கச்சிதமாக அனுமார் போல தாண்டி, கடலிலேயே கலந்து உறவாடியமாதிரி, மத்தியப்பிரதேசத்து மாமனிதர் கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நோபல் பரிசு வாங்கினார். உலக பிரசித்தமானார். மனமுருக சொற்பொழிவு ஆற்றினார். சிறார்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆபத்பாந்தவனான அவரை அறியாதவர்கள் இருப்பது, அந்த மத்தியப்பிரதேசம் எனப்படும் கிணற்றில் ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும்’ பிரபலங்களின் வாழ்க்கை நெறி! ஆண்டவா! 

மத்திய பிரதேச சட்டசபையில் கைலாஷ் சத்யார்த்தி அவர்களை போற்றி ஒரு தீர்மானம் நிறைவேறிய பின்னும், அவருக்கு பர்த்தியாக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு வாழ்த்துரை மடல்கள், நோபல் பரிசு பெற்றதற்கு! 

வழங்கிய மேதைகள்:

“ நமது சகபாடி அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது நமக்கெல்லாம் பெருமை தருகிறது. அவர் செய்த சமூகசேவையை பாராட்டவேண்டும்.” -அமைச்சர் குஸும் மாஹ்டெலெ. ஆஹா!

“ கைலாஷ் விஜயவர்கியாவை போல சாதனையாளர்கள் எங்கள் கட்சியின் பல அங்கத்தினர்கள்!” - அமைச்சர் ஞயான் சிங். ( இவர் கலாச்சாரத்தின் விசிறி. ஆன்மீக இசை வித்தகர்.) பேஷ்!

திலீப் சிங் பரிஹார், ரஞ்சீத் சிங் என்ற சட்டசபை அங்கத்தினர்கள் விஜயவர்கியாவை போன்ற சாதனையாளர்கள் இந்தூரில் செய்த சமூக சேவைக்கு பரிசில் கொடுத்த நோபெல் கமிட்டியின் அருமை பெருமைகளை பாராட்டினார்கள். இதை கண்டு பொறுக்காத எதிர்கட்சி பெருமகனார் ஒருவர் விஜயவர்கியாவுக்கு நோபெல் பரிசு கொடுக்கப்பட்டதே மத்திய அரசும், மாநில அரசும் செய்த சதி என்று குற்றம் சாட்டினார். சத்ய பிரகாஷ் என்ற ‘உண்மை விளம்பி’ விஜயவர்கியாவை தாக்கிப்பேசினார்.

ஒரு ‘கைலாச’ குழப்பம். அரசியல் துறையில் முதுகலைபட்டம் பெற்றிருந்த சஞ்சய் பதக் என்பவர் ‘தபக்’ என்று ஒரிஜனல் கைலாஷை மறந்து விட்டு கைலாஷ் விஜயவர்கியாவுக்கும்  கைலாஷ் சாவ்லாவுக்கும் கன்ஃப்யூஸ் செய்து கொண்டு, யாரை பாராட்டுவது என்ற ‘தொபக்கட்டீர்’ வியாகூலத்தில் ஆழ்ந்தார். அஞ்சாநெஞ்சனாகிய அமைச்சர் பூபேந்திர சிங் இதையெல்லாம் ‘ஃபூ..பூ...’ ஊதி விட்டார். கைலாஷ் விஜயவர்கியா எல்லா புகழுரையும் ஜாலியாக வாங்கிக்கொண்டாலும் எதிர்க்கட்சிகளின் மனநிலையை குறை கூறினார்.

இந்த கந்தரகூளங்களை ஊடகங்கள் எள்ளல் செய்ததை பொறுக்காத இந்த ஆட்சி மேலாண்மை மவுனம் காத்தனர். நம்ம கிராம ஊழியர்கள் தேர்வு வைத்தால் இதுகள் தோல்வி தழுவுங்கள். அதை விடுவோம். மாபெரும் சாதனையாளர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களை விதீஷா என்ற உள்ளூர் வாசிகள் கண்டு கொள்ளவேயில்லை. அவர் விளம்பரம் நாடாத உழைப்பாளி. அவரால் பல உதவி பெற்றவர்களே அவரை மதிக்கவில்லை. சிறார்களுக்கு அவர் இத்தனை பாடுபட்டபின்னும் உள்ளூரில் இன்று கூட சிறுவர்களை வேலை வாங்குகிறார்கள், விதீஷாவில்.

தமிழ்நாட்டு அமைச்சர்கள் இந்த ரகம் அல்ல. சுதாரித்துக்கொள்வார்கள். 1970ம் வருடம் ஏ.ஜீ ஆஃபீஸில் ஒரு கலை நிகழ்வு. ஒரு அமைச்சர் சிறப்புரை ஆற்றினார், தேனீர் ஆற்றுவது மாதிரி!
கலையை பற்றி பேசுவதில் இடைச்செருகலாக, ‘நாங்கள் உங்களுக்கு அகவிலைப்படி வாங்கிக்கொடுத்தோம். நன்றி செலுத்துக’ என்று ஒரு ஊசிப்பட்டாசு வீசினார். மத்திய அரசு துறையான அந்த அலுவலக ஊழியர்கள் முணமுணத்தார்கள், உரத்த குரலில். அமைச்சர் தப்புத்தவறி தலைமை தாங்கிய நான் இதை அவரிடம் விளக்கி, இந்த ஆடிட் பசங்க ஒரு டோண்ட் கேர் டைப் என்றேன். புன்னகை பூத்த அமைச்சர் பிரான் அடுத்து சொன்னது, ‘ புதுக்கோட்டை அருகில் இருக்கும் சித்தன்ன வாசலிலே... என்று அரை மணி நேரம் ஒரு பிடி பிடித்த லாகவம். இல்லை லாவகமா?

மாரல்: கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்திருக்கலாம்.






pastedGraphic.pdfSatyarthi is still to be recognised for his work in his home state. Reuters image

Satyarthi is still to be recognised for his work in his home state. Reuters image

Monday, November 24, 2014

என்னத்தைச் சொல்ல! – 6: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் 6


ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் 6


என்னத்தைச் சொல்ல! – 6
Monday, November 24, 2014, 6:36



–இன்னம்பூரான்.
வாலு போச்சு! கத்தி வந்தது




பாலில் தண்ணீர் கலந்தார்கள். அதை மாதக்கணக்காகக் கச்சிதமாகவே செய்தார்கள். மனசாக்ஷியை அடகு வைத்தார்கள். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை லஞ்சாபரணங்கள்.
அதற்கு முன்னால், செங்குன்றத்திலியோ, கருங்குளத்திலியோ, குதிரை சாணம் கலந்த தேயிலை சக்கைப் போடு போட்டது. சாயா குடிக்க எனக்கு பயம். அதற்கு முன்னாலே, அரிசியில் கல் கலந்தார்கள். இந்த மாபாவிகள் சுண்டைக்காயை கல்யாணபரங்கி என்று கூட விற்றுவிடுவார்கள். அல்லது, சில வருடம் முன் சொல்லப்பட்டப்படி கலப்பட மருந்துகளையும் காலாவதி மருந்துகளையும் விற்று கொலை செய்தார்கள். மஞ்சள்பொடி தான் க்ளோரோமைசிட்டீன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இன்றைய கலப்படம்: நெய்க்கு வந்த சோதனை. இரண்டு வருஷம் முன்னால் திருநெல்வேலியில் நடந்தது. இப்போது அதருமமிகு சென்னையின் சந்தைக்கடை தி.நகரில் கண்ணம்மா பேட்டை. அங்கு சுடுகாடுகள் இரண்டு உள்ளன. ஒன்றில் இறந்தவர்களுக்குக் கொள்ளி வைப்பார்கள். மற்றொன்று முத்துரங்கன் தெருவில் இருப்பதாக ஹிந்து இதழில் இன்று செய்தி. ஊரை சொன்னவங்க பேரை சொல்லாமல் விட்டுட்டாங்க. அந்த தெரு கடைக்காரன் நம்மை எல்லாம் உயிரோடு கொளுத்தும் இனம். அவனிடமிருந்து பிடித்த ஏழு டன் நெய்யில், நிறம் மாற்றிகள், டால்டா, பாம் ஆயில் போன்றவை 90%. மேலே தடவிய நெய் 10%. இதில் தான் நான் வாங்கி சாப்பிட்ட தீபாவளி மருந்து கூட. இப்ப புரியுது, ஏன் என் வயிறு கொதித்தது என்று. இந்த அழகில் கறுப்புப் பணாதிபதிகளைப் போல பினாமி விலாசங்கள். எல்லாம் பொய். வியாபாரம் அண்ணா நகரில் கொடி கட்டிப் பறந்தது. ஒரு சமாச்சாரம் புரிந்து கொள்ள வேண்டும். வியாபாரி அயோக்யன் என்றாலும், கலந்தது, பொய் சீட்டு டப்பாவில் ஒட்டியது, சில்லறை வியாபாரம் எல்லாரும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே. அவர்களால் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே.
என்னத்தைச் சொல்ல !
வாலு போச்சு!
கத்தி வந்தது !
இன்னம்பூரான்

-#-
சித்திரத்துக்கு நன்றி: மாலைமுரசு



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, November 6, 2014

என்னத்தைச் சொல்ல?! ~6: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [2]

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [2]
I am figuring out a way for simultaneous English/Tamil versions. Please bear with me till then. This is about the empty coffers in many a secret accout abroad.

என்னத்தைச் சொல்ல?! ~6




‘நாய் விற்ற பணம் குரைக்குமா?’ என்று அசட்டையுடன் அசட்டுத்தனமாக கேட்டே, பல கோடி ரூபாய்களை இழந்த ‘மகா கனம்’ஜனம், லாயத்தை விட்டு குதிரை ஓடி பற்பல மாமாங்கங்கள் ஆன பிறகு தான் அடுத்த வீட்டுக்காரன் வீட்டு லாயத்தை நோட்டம் விட்றேன் பேர்வழி என்று சால்ஜாப்புகளை அள்ளி வழங்கியது, பிற்கால அரசின் செயல்பாடாக. தற்கால அரசும் வீராப்புடன் தேர்தலுக்கு முன்னால் சவால் விட்டது. சமாளிப்போம் என்றது. ஆனால், இப்போது உச்சநீதிமன்றத்திலேயே, கை கட்டி, வாய் புதைத்து, தெனாலி ராமன் குதிரை மாதிரி ஜகா வாங்கியது. பட்டியல் கொடுத்தால் போதுமா? காசுல்ல திரும்பி வரணும். எதற்கும் பிரதமர் ‘நான் விடாப்பிடி’ என்கிறார். நல்லதே நடக்கட்டும்.

ஆனால், அப்டேட் உதைக்கிறதே. ஸ்பெஷல் டீம் [Special Investigation Team (SIT)] போட்டாங்க இல்லை. கசியும் தகவல் யாதெனின்:

  1. 600 அக்கவுண்ட்லெ காசில்லை, பணமில்லை, சில்லறை கூட இல்லை. பணம் படைத்து, அதை ஒளித்த பணமூட்டைகள் ரகசியமா எடுத்து வேறு எங்கேயே ஒளித்து வைத்துக்கொண்டார்கள் போல.
  2. 200 பெயர்கள், பாதிக்கு பாதி ரிபீட், இரண்டு தலை மண்ணுளி பாம்பா என்ன? எல்லாரும் எஸ்கேப்? இது ஒரு சிக்கல்.
  3. HSBC வங்கி தான் இந்த சந்தேஹோபஸ்த ஆசாமிகளை கையாண்டது. 289 கேஸ்களில் கஜானா காலி.122 கேஸ்களில் ரிபீட் மஹாத்மியம்.
  4. வருமானவரி துறை 628 கேஸ்களில், பாதிக்கும் குறைவாக 300 கேஸ்களில் மட்டுமே தாவா பண்ண போறாங்களாம்!
  5. ஒரு கேஸிலாவது அவர்கள் காசை கையாண்ட முறை பற்றிய தகவல் இல்லை.
  6. இருந்தாலும், இன்றைய நிலைமையில் ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்த்தான்’ என்ற வகையில், பழைய ‘இரண்டும் கெட்டான்’ உடன்படிக்கைகளை மாற்றப்போறாங்களாம்.

இன்னம்பூரான்
நவம்பர் 6, 2014



சித்திரத்துக்கு நன்றி







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, October 3, 2014

என்னத்தைச் சொல்ல! – 5

என்னத்தைச் சொல்ல! – 5


இன்னம்பூரான்
அக்டோபர் 3, 2014

சட்டமீறலுடன் உடன்படும் பொதுமக்களின் பேராசையும், குறுக்குவழி அணுகுமுறையும், சுயநலமும் தான், பெரும்பாலும், லஞ்சலாவண்யங்களின் ஊற்று என்று நான் சொல்லிவருவதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. இன்றைய ஹிந்து அப்டேட் செய்தியை (http://www.thehindu.com/news/cities/bangalore/size-of-fake-experience-certificate-scam-growing/article6466529.ece?homepage=true)பாருங்கள். குற்றவியல் துறை பொய் சான்றுரைகளை அளித்ததற்காக ஏழு கம்பெனிகள் மீது படையெடுத்திருக்கிறார்கள், பெங்களூரில். அதை கண்டு வியந்த ஒரு உலகளாவிய ஆய்வுக்களம் அம்மாதிரி 9500 கம்பெனிகள் இந்தியாவில் இருப்பதாகவும், அந்த பிரச்னை பூதாகாரமாக வளர்வதாகவும் கூறியதுடன் நிற்காமல், போலீஸ் கமிஷனருக்கு வரைந்த மடலில் கூறும் தகவல்கள்:
  1. கல்வி, வேலைவாய்ப்பு,முகவரி விஷயங்களில் அவை புகுந்து விளையாடுகின்றன.
  2. படித்த ‘மேதைகள்’ தாம் அவற்றை நடத்துகிறார்கள்.
  3. இம்மாதிரியான ‘டுபாக்கூர்’ கம்பெனிகளில் சில அரசு துறையில் பதிவு செய்து கொண்டவை; சில வருமான வரி கட்டுகின்றன. சில வலைத்தளம் வைத்து கொழிக்கின்றன. ஆனால் அவை யாவும் நிழல் குட்டிச்சாத்தான்கள்.
  4. இவற்றுக்கு பின்னால் ஒரு மாபெரும் மாஃபியா உளது.
  5. போலீஸிடம் புகார் செய்தோம். மேலதிக விவரம் தருவதாக சொன்னோம். எல்லாம் கிணற்றில் போட்ட கல்.
  6. எனவே, இந்த கழிசாடை விவரங்கள் எல்லாவற்றையும் எங்கள் தளத்தில் (http://rezorce.com) போட்டுவிட்டோம். அவை எல்லாம் இப்போது பொது மன்றத்தில்.
  7. போலீஸ் வருமுன்காப்போனாக செயல்பட வேண்டும். அது தான் முக்கியம்

அப்டேட்டுக்கு அப்டேட்: இத்தருணம், குற்றவியல் துறை பொய் சான்றுரைகளை அளித்ததற்காக 50 கம்பெனிகள் மீது கண் வைத்துள்ளார்கள், பெங்களூரில்.

மனிதன் விழைகிறான். இராக்கதன் தருகிறான். தேவன் மெள்ள மெள்ள வருகிறான்.

என்னத்தைச்சொல்ல !
-#-


சித்திரத்துக்கு நன்றி: http://www.freemanart.ca/images/Dali_Certificate_authenticity_web_001.gif

Monday, September 8, 2014

என்னத்தைச் சொல்ல! 3

என்னத்தைச் சொல்ல! 3

இன்னம்பூரான்
06 09  2014
பிரசுரம்: வல்லமை மின்னிதழ்:http://www.vallamai.com/?p=50274
பகை படையெடுக்கலாம். உள்ளிருந்தும் புகையலாம். ஏன்? பாலிலும் வரலாம். சூடான செய்தி: ஆவின் பாலில் இலவச குளிர்பானமாக வந்து அமைச்சர் தலையை காவு வாங்கலாம் ! வாங்கிடிச்சுண்ணு சில மணி நேரம் முன்னால் தினமலர் கூறியது. 
செய்தித்துகள் கூட்டம்:
 ‘மேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, வேலூர், ஆவினில் வேலை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஜ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்... சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது...கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர். திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர்.இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்தது... தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன... பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் மார்க் ட்வைய்ன் சங்கேத மொழிகள் தான். நல்லவேளை, ‘பாலில் தண்ணீர் கலப்பதாகச் சொல்லப்படுகிறதாம். தண்ணீரில் பால் கலப்பதாகவும் கேள்விப்படுகிறோம். ஆவினம் ஆவின் மீது வழக்குத் தொடரப்போகிறதாம். தருமமிகு சென்னையின் மஹாலிங்க நகரில் வாந்தி பேதியாம். அதற்கு காரணம் பாலில் கலந்த சாக்கடை நீர் என்று சில ஊடகங்கள் கூறுவதை வன்மையாகக் கண்டித்த ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் காரணம் கூற அடக்கத்துடன் மறுத்து விட்டனவாம். வாம்! வாம்!’ என்று எந்த நாளிதழும் எழுதவில்லை.’ கற்பனை போதும்.
இந்த நாசகார வேலையில் எத்தனை பேர் எத்தனை வருடங்களாக ஈடுபட்டிருந்தனர்? அந்த காலத்தில் அரசியில் கல்லும் கிராமஃபோன் ஊசியும் கலப்பது உண்டு. தேயிலையில் குதிரைச்சாணி கலப்பதற்கே என்று இருந்த களவு தொழிற்சாலைகள் என்ன ஆயின? ஆகமொத்தம் மக்களுக்குத் தெரியாமலா இந்த கலவை நடந்திருக்கும்? 
இது எல்லாம் உள்ளிருந்து புகைச்சலா? என்னத்தைச் சொல்ல?
-#-

சித்திரத்துக்கு நன்றி:http://photos.thenews.com.pk/tasveer_images/2012-11-17/large/2_201211170304100202.jpg

Saturday, September 6, 2014

என்னத்தைச் சொல்ல! 2

என்னத்தைச் சொல்ல! 2

இன்னம்பூரான்
01 09  2014
இன்றைய செய்தி: பாரதியார் பல்கலைக்கழகத்தில் விதி மீறி 108 கல்லூரிகளுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளை ஆடிட்டர் ஜெனரல் குறை கண்ட அறிக்கை ஆகஸ்ட் 12, 2014 அன்று தமிழ்நாட்டு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதை பற்றி. ‘ஸ்டடி செண்டர்’ என்ற அமைப்புகளை பல்கலைக்கழகம் ஆய்வுக்கு உட்படுத்தவேயில்லை என்று அங்கு தகவல். மேதகு துணைவேந்தர் திரு.ஜான் பிச்சை அவர்களோ எழுத்து மூலம் அறிக்கை வரட்டும் என்று காத்திருப்பதாக சொல்கிறார் என்றும் இதழ்களில் செய்தி. இது விந்தையிலும் விந்தை அல்லவோ! 150 வருடங்களுக்கு மேலாக ஆடிட் நடைமுறை ஒரே மாதிரி தான். முதலில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வினா எழுப்பி விடை நாடுவார்கள். அவற்றை எல்லாம் சீர்தூக்கி அலசியபிறகு ஆடிட் அறிக்கையின் தீர்வுகளை துணைவேந்தரிடம் சமர்ப்பிவித்து, பேச்சு நடத்தியபின் தான், அது எடிட் செய்யப்படும். பதில்களும், விளக்கங்களும் அதில் அடக்கம். ஏற்புடையவைகளை ஒத்துக்கொள்வார்கள். சம்மதமில்லையெனில் காரணம் கூறுவார்கள். இது இப்படியிருக்க, அறிக்கை தாக்கல் செய்தபின் மேதகு துணைவேந்தர் எதை எதிர்பார்க்கிறார்? நடந்த விதிமீறல்களை அவர் அறியாதது உண்டோ?
இதில் என்ன விந்தை என்றா கேட்கிறீர்கள்? ஒரு உதாரணம்.
மன்னன் அமைச்சரிடம் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று வினவ அமைச்சரும் ‘ஆமாஞ்சாமி’ என்று சத்தியபிரமாணம் செய்தாராம். மன்னனுக்குப் பாவம் அந்தப்புரத்திலிருந்து வானம் தென்படவில்லை போல் இருக்கிறது, துணை வேந்தர் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை கண்டு கொள்ளாமல், வரப்போகாத எழுத்து ஆவணம் கேட்பது. ஆகமொத்தம் ;‘என்னத்தை சொல்ல?’
-#-

பிரசுரம்: http://www.vallamai.com/?p=49969 

Thursday, August 28, 2014

என்னத்தைச் சொல்ல! 1

என்னத்தைச் சொல்ல!

Friday, August 29, 2014, 5:18
இன்னம்பூரான்
 innam
‘The Devil quoting the Bible’ என்ற ஆங்கில சொலவடை இப்போது நினைவில் வருகிறது. என்னத்தைச் சொல்ல! பங்கு சந்தையில் புகுந்து கன்னா பின்னா அழுகுணி ஆட்டம் ஆடி ரூ.5600 கோடியை ஸ்வாஹா செய்த வினை NSEL & MCX-SX என்ற அபூர்வ சகோதர கில்லாடிகளை சார்ந்தது. அவற்றின் பிதாமஹராகிய ஜிக்னேஷ் ஷா சிறையில் அடைக்கப்பட்டார். நடந்ததை மறந்து எங்களுக்கு புதிய அவதாரத்துக்கு நாமகரணம் செய்ய வேண்டும் என்று அனுமதி வேறு கேட்டிருக்கிறது, MCX-SX. ‘அதெல்லாம் சும்மா உளவாங்காட்டிக்கு. ஆனாலும், அவர்களுக்கு தனியார் துறை ஆடிட்டர் கொடுத்த சான்றிதழ் மீது ஆனானப்பட்ட ஆடிட்டர் ஜெனெரல் கமெண்ட் அடிக்கவில்லை; எனவே நாங்கள் தவறிழைக்கவில்லை என்பது உறுதியாச்சு என்று தம்பட்டம் அடித்து ஒரு செய்தி! அரசு முதலீடு பொருட்டு, ஆடிட்டர் ஜெனெரல் செய்யும் இந்த அடுத்தக்கட்ட ஆடிட், அந்த தனியார் துறை ஆடிட்டர், சட்டரீதியான ஆடிட் செய்துள்ளனர் என்று தான் எதிர்வினை கருத்துத் தெரிவிக்கவில்லை. அதைப் போய் எங்கள் பரிசுத்தத்துக்கு அதுவே சான்று என்பது, ‘The Devil quoting the Bible’. அதாவது, ‘வசிஷ்டர் வாயாலெ பிரம்மரிஷி’ என்பதாகும். இதெல்லாம் ‘இடம்’ தகர்த்து, ‘பொருள்’ பேதம் செய்து, ‘ஏவலை’ திசை திருப்பும் சால்ஜாப்பே.
‘வல்லமையில்’ தணிக்கைத்துறை பற்றி எழுதிய கட்டுரைகளை, கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை இணைத்து, அரசியல் விழிப்புணர்ச்சி பொருட்டு ஒரு தொடராக எழுதலாமா/வேண்டாமா என்பதை வாசகர்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும். இல்லை, இம்மாதிரியான ‘நறுக்’ போதுமா?

பிரசுரம்: http://www.vallamai.com/?p=49792