Showing posts with label சிவகாமியின் செல்வன். Show all posts
Showing posts with label சிவகாமியின் செல்வன். Show all posts

Saturday, October 8, 2016

சிவகாமியின் செல்வன் 20

சிவகாமியின் செல்வன் 20

இன்னம்பூரான்
அக்டோபர் 8, 2016

'...இது இவ்வாறு இருக்க,1963லிருந்தே இறங்குமுகம் கண்ட காங்கிரஸ், 1967ல் காங்கிரஸ்ஸின் தூணாகிய காமராஜர் அவர்களே தேர்தலில் ஒரு மாணவனால் தோற்கடிக்கப்பட்ட அவலத்தையும் சந்தித்தது. அதற்கு பல காரணங்கள் சாங்கோபாங்கமாக கூறப்பட்டாலும் அது பற்றி காமராஜரும், ராஜாஜியும் கூறியவற்றை அடுத்த பதிவில் பார்த்த பின்னர் தான் ஓரளவு பின்னணி தெரிய வரும்.'

~சிவகாமியின் செல்வன் 19ன் இறுதி வரி.

எதிர்பாராத இன்னல்களாலும், இன்றியமையாத இதர பணிகளாலும் தொடரில் தொய்வு ஏற்பட்டதால், மேற்கண்ட நினைவூட்டல். முழுமை காண, இதுவரை வந்த தொடர், இணைப்பில்.

காமராஜர் அவர்களே தேர்தலில் ஒரு மாணவனால் தோற்கடிக்கப்பட்ட அவலம் பலவிதமான ஊகங்களுக்கும், வதந்திகளுக்கும், காளான்களின் உற்பத்திக்கும் வித்திட்டது. ஒரு தீப்பொறி போதும், ஊரை கொளுத்த. அத்தகைய தீப்பொறிகளும் பிறந்தன;பறந்தன;துரத்தி அடித்தன, நாம் ஆகிய மக்களை. தீப்பொறிகளுக்கு பிறகு வருவோம். 

காந்திஜி, ‘clique’(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’ ~தமிழ் லெக்சிகன்) என்ற சொல்லை வழக்கம் போல் நன்கு சிந்தித்த பின் தான் பயன்படுத்தினார்.'சிவகாமியின் செல்வன் 19' என்ற பதிவில் உள்ள படத்தை பாருங்கள். காமராஜர் காந்திஜியின் அருகில் தான் அமர்ந்திருக்கிறார். எல்லாம் நடந்த பின் தாக்காமல், தன் இயல்பு படி காந்திஜி காமராஜரிடன் தன் உள்மனதை கூறியிருந்தால், தமிழ்நாட்டின் தலை விதி இத்தனை பாடுபட்டிருக்காது என்பதில் ஐயமில்லை. அரசியல் நல்லதொரு ராஜபாட்டையில் பயணித்திருக்கலாம். இது நிற்க.

பிற்காலம் ஹிந்தி எதிர்ப்பதில் ஆர்வம் காட்டிய ராஜாஜி சுதந்திரா கட்சியை துவக்கினார. அத்துடன் நில்லாமல், 1964ம் வருட சென்னை மகராட்சித் தேர்தலில், தி.மு.க. வுடன் கூடா நட்பை வளர்த்துக்கொண்டார். காங்கிரஸ் தோற்றது. 1965ல் தி.மு.க. ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது. என் போன்றவர்களுக்கு அக்காலத்து அரசி தட்டுப்பாடு நினைவில் இருக்கிறது. மக்களுக்கு ஒரு 'கச கச' கசப்பு. இந்த பின்னணியில் தான் 1967, வருட தேர்தல். காமராஜர் கூறிய 'ஒரே குட்டையில் அழுகிய மட்டைகளுடன்' ராஜாஜி, ம.பொ.சி., காயிதே மில்லத், மார்க்ஸிஸ்ட் ஆகியோரும் பிரசன்னம். இந்த கூட்டணி வஸ்தாத் காங்கிரஸை தோற்கடித்தது. போயும், போயும் விருதுநகரில் பெ.சீனிவாசன் என்ற மாணவன் காமராஜரை தோற்கடித்தார். இந்த தொடரின் முதல் இதழில் சுட்டியபடி, அங்குமிங்குமாக திராவிடகட்சி நோக்கில் தொகுத்து, காமராஜரை மற்றொரு பெரியார் போல சித்தரித்த “வானவில்” ஆடி 2016 இதழ், பக்கம் 12-13 போல, காளிமுத்து, கோபால்சாமி போன்றோர் 'அரிசி பஞ்சம்' 'மாணவர்களை சுட்டு விட்டார்கள் என்றெல்லாம் செய்த கலப்பட பிரச்சாரம் கை கூடியது என்று தான் பலர் பேசிக்கொண்டார்கள். ஆனால், சீனிவாசனை நிறுத்திய அறிஞர் அண்ணாவுக்கு உள்ளூர கொஞ்சம் வருத்தம் தான். இது இப்படியிருக்க, சீனிவாசனின் தலைகால் தெரியாமல் குதிக்கும் நிகழ்வுகள் அண்ணாவுக்கு பிடிக்கவேயில்லை. அமைச்சர் நமைச்சல் பிடித்த சீனிவாசன் ஓரம் கட்டப்பட்டார். அவர் ராஜாஜியிடம் சிபாரிசு நாடினார். ராஜாஜிக்கும் அண்ணாவுக்கும் அப்படியென்ன தாக்ஷிண்யம் என்று கேட்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் எல்லாம் சகஜம் தான். ஆனாலும் ராஜாஜி ஒரு காரியம் நடக்கவேண்டாம் என்றால் தனது சிபாரிசு போதும் என்று தன்னையே கேலி செய்து கொள்வார். ராஜாஜி சீனிவாசனிடம் சொன்னது வைர வரி: 

"...கென்னடி ரொம்ப ரொம்ப பெரிய மனுஷன் தான். ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளைக்கீழே சாய்ச்சுடுச்சு, அதுக்காக அந்த புல்லட்டை எடுத்துவச்சி அங்கே எவனாவது கொண்டாடினா?என்ன...?"
(கென்னடிக்காக டில்லியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் ராஜாஜி, வஸந்தா, நான் மூவரும் ஒரே வரிசையில் நின்று கையெழுத்து இட்டது நினைவுக்கு வருகிறது.) ~ இது ராஜாஜி.

எதற்கும் அலங்காத காமராஜர் உதகமண்டலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். காங்கிரஸ் பெருந்தலைகள் அவரை சந்தித்தபோது, பலவிதமான ஊகங்களையும், வதந்திகளையும், காளான்களின் உற்பத்தி ஆகியவற்றை பட்டியல் இட்டார்கள். அவற்றை எல்லாவற்றையும் நிராகரித்த நம் தலைவர் இது வியாபாரிகள் சம்பந்தப்பட்டது என்றார். அவர் சொன்ன காரணங்கள்: காங்கிரஸ் கட்சியின் பத்து அம்ச திட்டம் மக்கள் நலனுக்கு. அதன்படி உணவு தானிய மொத்த வர்த்தகத்தை அரசு எடுத்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது, விருது நகரில் இருந்த 40-50 வியாபாரிகளுக்கு பிடிக்கவில்லை. அந்த வகையில் நாலாயிரம் ஓட்டுக்கள் பிறழ்ந்து அளிக்கப்பட்டதில் இருமடங்கு நஷ்டம், தோல்வி என்றார்.ஒரு கார் விபத்தினால் தன்னுடைய பிரசாரம் தடை பெற்றதையும் கூறினார். தமிழ்நாட்டு மக்களின் மனதையே உள்ளங்கை நெல்லிக்கனியாக வைத்திருந்த காமராஜர் தப்புக்கணக்கு போடுபவர் அல்ல. இந்த காரணம், இந்திய அரசியல் உலகத்தின் சாபக்கேடான தீப்பொறி.

சிவகாமியின் செல்வன் 1-19:





(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி:
Attachments area

Saturday, October 1, 2016

சிவகாமியின் செல்வன் 19 [தொடர்ச்சி]

சிவகாமியின் செல்வன் 19 [தொடர்ச்சி]



இன்னம்பூரான்
அக்டோபர் 2, 2016

Published: October 2, 2016 02:41 IST | Updated: October 2, 2016 02:54 IST  
SUNDAY SPECIAL

Mahatma was read out of context, says granddaughter

Gandhiji’s granddaughter Ela Gandhi, who is a peace activist. File photo: K.K. Najeeb
Gandhiji’s granddaughter Ela Gandhi, who is a peace activist. File photo: K.K. Najeeb

Gandhi was never a racist, says Ela after row over his statue in University of Ghana

Mahatma Gandhi wasn’t racist, communal or casteist, says his granddaughter Ela Gandhi. 
The defence may seem startling, given that few associate him with those terms. But it comes in response to academics in Africa who have launched a campaign to remove Gandhi’s statue from the University of Ghana. 
The protesters have linked their demand to a “global movement towards self-respect”, and are planning protest marches on Sunday even as the world marks Mahatma Gandhi’s birthday.
“People have differing views about others. Indeed not even Jesus Christ has been spared from detractors so why should they not have differing views about Gandhiji?” said Ms. Gandhi. A former Member of Parliament in South Africa and peace activist based in Phoenix, Ms. Gandhi has responded to the founders of the ‘Gandhi Must Come Down Movement” in a letter that has been made available exclusively to The Hindu
“If they do not want his statue then by all means remove it. But I would suggest very humbly do not discard the notion of non-violence, of compassion, of ubuntu and of respect for fellow human beings and for nature and the whole of the universe simply because these were the ideals Gandhiji stood for and was assassinated for,” Ms. Gandhi said in a letter responding to the ‘Gandhi Must Come Down Movement, contents of which were made available exclusively to The Hindu
The protests and an online petition were started by a group of professors at the University of Ghana in Accra. In their petition, the professors, who are influential academics, claim that a statue of the Mahatma, unveiled by President Pranab Mukherjee in June this year, was installed by the Indian embassy without the University consulting any of them. “It is better to stand up for our dignity than to kowtow to the wishes of a burgeoning Eurasian super-power,” the petition said, referring to India’s growing influence in the country. 
When the protests were launched in September, the Ministry of External Affairs is understood to have taken up the matter with the Ghanaian government through its embassy in Accra. 
“The Government of Ghana fully supports the statue. The attempts by some sections of the University to have it removed is a minority view,” a government source said. 
Derogatory references
The petition that has more than 1,700 signatures so far, refers to a few quotes of Gandhiji made mostly during his early career with a legal firm in South Africa, where arrived in 1893 as a 24-year-old. Among those quotes are references to Africans under colonial rule as “Kaffirs” and “savages” that were made between 1893-1896. " 
“How will the historian teach and explain that Gandhi was uncharitable in his attitude towards the black race and see that we’re glorifying him by erecting a statue on our campus?” wrote a professor in the petition.
The movement, that parallels a similiar movement in the US, has sparked a debate across many African countries after a new book by Ashwin Desai, a professor at the University of Johannesburg called “The South African Gandhi: Stretcher-Bearer of Empire”, painted a negative portrait of the Mahatma using his words from those years and also alleged that he propagated the caste system in India. 
“To say that he wanted to perpetuate the caste system to his death is a total misrepresentation of what he said.,” retorts Ms. Gandhi, adding, “He said there should be no hierarchy in society. That we must do away with such notions. He objected to a separate voters roll for Dalits which he felt would perpetuate the caste system while the Dalit leaders spurred by the British asked for a separate voters roll for Dalits.”
Stood up to Imperialism
Eventually, Ms. Gandhi writes that Mahatma Gandhi must be judged not by those words made as a young lawyer, but as the man who stood up to British imperialism worldwide, a freedom fighter and the champion of rights for the downtrodden that he became after began his activism in South Africa, that also became the inspiration for Mandela’s movement against apartheid. 
“So do we regard him as racist? Do we judge people from one or two statements especially when there are many other quotes which point to the exact opposite?” Ms. Gandhi said adding that, “The claims…are based on opinions expressed by a few scholars who have interpreted some quotes he made in his younger days and in the context of the work he was doing at the time and the ethos in the country.”

சிவகாமியின் செல்வன் 19

சிவகாமியின் செல்வன் 19



இன்னம்பூரான்
அக்டோபர் 2, 2016

இன்று காந்தி ஜெயந்தி. காமராஜருக்கு அஞ்சலி செலுத்தும் தினம். இருவரும் திடமான கொள்கைகளை கொண்டவர்கள். சற்றே திரையை விலக்கி, அண்ணல் காந்தியை பற்றிய இன்று வந்துள்ள எகானமுக்ஸ் டைம்ஸ் கட்டுரையை நோக்குவோமாக. அது திசையை மாற்றாது. புரிதலுக்கு உதவும்.காப்புரிமை பெற்ற அந்த கட்டுரையை இங்கே படிக்கலாம்.

Wednesday, September 28, 2016

சிவகாமியின் செல்வன் 18

சிவகாமியின் செல்வன் 18

இன்னம்பூரான்
28 09 2016

காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவரும் முதலமைச்சராக இருந்தவரும், காமராஜருடன் பல விஷயங்களில் ஒத்துப்போகாதவரும் ஆன டி.பிரகாசம் அவர்களும் ஃபெப்ரவரி 13, 1946 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்குக் கொடுத்த பேட்டியில், ‘பார்லிமெண்ட் அரசியலுக்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது,எந்த ஒருவர் மீதும் தனக்கு ஆதரவு இல்லை என்று பலமுறை கூறி வந்த மஹாத்மா காந்தி, முறையாக நிறுவப்பட்ட தமிழ்நாட்டு காங்கிரஸை ‘clique’(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’ ~தமிழ் லெக்சிகன்) என்று வருணித்தது மாபெரும் தவறு என்றும், காந்திஜி இந்த தவறை நீக்கவேண்டும் என்று தான் கருதுவதாகவும், ஒரு அரசியல் கோட்பாட்டுக்காக சிறந்த முறையில் போராடிய காமராஜர் தமிழ் நாடு மாகாண பார்லிமெண்டரி போர்டிலிருந்து ராஜிநாமா செய்தது சரியே என்றும் கூறினார்.

அண்ணல் காந்தி அளந்து பேசுபவர். நேதாஜியை தோற்கடிக்க முயன்ற போது காந்திஜியே ஒரு ‘clique’ன்(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’ ~ லெக்சிகன்) சூத்ரதாரி என்பதும் உலகறிந்த விஷயம். அப்போதும் அளந்து பேசிய காந்திஜி, தான் பகர்ந்த 'க்ளிக்' என்ற சொல்லை வாபஸ் பெற முடியாது என்று விட்டார். காந்திஜி, ராஜாஜி, காமராஜர் ஆகியோர் மாசற்ற தேசபக்தர்கள் என்பதில் ஐயம் யாதும் இல்லை. ஆனாலும் தொடக்கத்திலிருந்து 2016 வரை உட்குழு மஹாத்மியம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி இயன்றது கிடையாது. சூரத் காங்கிரஸ்ஸில் செருப்புகள் பறந்ததை மஹாகவி பாரதியார் அருமையாக விவரித்திருக்கிறார். காங்கிரஸை நிறுவியது அலான் ஆக்டேவியன் ஹ்யூம் என்று ஹை ஆக்டேவில் வரலாறு படைத்தவர்கள், அதற்கு சென்னை பிரம்ம ஞான சபையில் சர். எஸ்.சுப்ரமணிய அய்யர் அவர்கள் வித்திட்ட பணியை கண்டுகொள்வதில்லை.

‘clique’(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’) சமாச்சாரம் இப்படி அவ்வபொழுது சூடு பிடிப்பது உண்டு. காமராஜர் தமிழ் நாடு மாகாண பார்லிமெண்டரி போர்டிலிருந்து ராஜிநாமா செய்தது பற்றிய தகவல்களில், முற்றிலும் பாரபக்ஷமில்லாதவையை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். இது இவ்வாறு இருக்க,1963லிருந்தே இறங்குமுகம் கண்ட காங்கிரஸ், 1967ல் காங்கிரஸ்ஸின் தூணாகிய காமராஜர் அவர்களே தேர்தலில் ஒரு மாணவனால் தோற்கடிக்கப்பட்ட அவலத்தையும் சந்தித்தது. அதற்கு பல காரணங்கள் சாங்கோபாங்கமாக கூறப்பட்டாலும் அது பற்றி காமராஜரும், ராஜாஜியும் கூறியவற்றை அடுத்த பதிவில் பார்த்த பின்னர் தான் ஓரளவு பின்னணி தெரிய வரும்.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி:
http://sd.keepcalm-o-matic.co.uk/i-w600/keep-calm-and-don-t-mess-with-my-clique.jpg
-#-
இன்னம்பூரான்

Thursday, September 22, 2016

சிவகாமியின் செல்வன் 17

சிவகாமியின் செல்வன் 17

இன்னம்பூரான்

22 09 2016

காந்திஜியின் ஹரிஜன் பதிவு ஒரு பெரிய கலவரத்தையே ஏற்படுத்தி விட்டது. ராஜாஜி மீது அவர் வைத்திருந்த மதிப்பு யாவரும் அறிந்ததே. ஆனால், அவர் மேடையில் அருகில் அமர்ந்திருந்த காமராஜரை இவ்வாறு மறைமுகமாக கண்டித்த விதம் வியப்பையும், திகைப்பையும், எதிர்ப்பையும் சந்தித்தது.
ஹிந்து நாளிதழுக்கு 15/16-2-1946 அளித்த பேட்டியில் காமராஜர்,

" காந்திஜியின் கட்டுரைக்ககு பிறகு பார்லிமெண்ட் போர்டிலிருந்து ராஜிநாமா செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை.ஏனெனில், இந்த கருத்துப்போர் பார்லிமெண்ட் போர்டின் செயல் பொருட்டு எழுந்தது. நேற்று அதன் கூட்டம் கூடியது. காந்திஜியின் கட்டுரையை நாம் கவனித்து செயல்படவேண்டும் என்பதால், அந்த கூட்டத்தை ஒத்திப் போட்டேன். எனக்கு அந்த கட்டுரை ஒரு ஷாக். தமிழ் நாட்டு காங்கிரசின் தலைவன், நான்.அதன் விதிமுறை படி தான், நான் செயற்குழுவை நியமித்தேன். எனவே, காந்திஜி கூறியது என்னை பற்றி தான். அவருக்கு மரியாதை செலுத்திய நான், சென்னையிலும், தமிழ் நாடு சுற்றுப்பயணத்திலும் அவருக்குக் கூப்பிடு தூரத்தில் தான் இருந்தேன்.செயற்குழு அங்கத்தினர்களும் அப்படித்தான் இருந்தனர். காந்திஜி எங்கள் ஒருவரிடமும் காங்கிரஸ் விவகாரங்களை பற்றி பிரஸ்தாபிக்கவில்லை என்பது எனக்கு மனவலியை அளிக்கிறது. 'கும்பல்' என்ற சொல்லை அவர் பிரயோகம் செய்தது என்னை மிகவும் பாதித்தது. என்னுடைய செயற்குழுவும் நானும் விடுதலை போராட்டத்துக்கு உற்ற வழியாக மட்டுமே இந்த பார்லிமெண்ட் போர்ட் வழிமுறையை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நான் சிறையிலிருந்து விடுபட்ட பின், என்னுடைய அணுகுமுறையை பற்றி பல மேடைகளில் பேசியிருக்கிறேன். எனக்கு பதவி ஆசை இல்லை.

ராஜாஜி மீது பொதுஜன கிளர்ச்சிக்குக் காரணம், அவருடைய பாகிஸ்தான் பற்றிய தீர்மானமும் , ராஜிநாமாவும், காங்கிரஸ் கட்சியிலும் பொது மக்களிடமும் ஏற்படுத்திய எதிர்வினை தான்.காந்திஜியின் கட்டுரைக்கு பிறகு பார்லிமெண்ட் போர்டிலிருந்து ராஜிநாமா செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை. திருவாளர்கள் டி.எஸ்.அவினாசிலிங்கம், என்.முத்துரங்க முதலியார், ஓ.பி.ராமசாமி ரெட்டியார், திருமதி.ருக்மணி லக்ஷ்மிபதி ஆகீயோரும் என்னுடன் வெளியேறுவதாக இருந்தாலும், தேர்தல் பணிகளுக்கு சொற்ப நாட்கள் மட்டுமே இருப்பதால், ஒட்டுமொத்தமான ராஜிநாமா உதவாது என்பதால், அவர்களை ராஜிநாமா செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு சம்மதித்த அவர்களுக்கு என் நன்றி. என்னை பின்பற்றி வெளியேற அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

நான் வெளியேறத்தான் வேண்டும். வேறு வழியில்லை. இருபது வருடங்களாக, அண்ணல் காந்தி எனக்கு தலைவர். அவரை பின்பற்றுவதிலும், அவர் மீது எனக்கு உள்ள அசையாத நம்பிக்கையும் மாறாதவை. அவருக்கு மனவலி கொடுத்தது நான் தான் என்பதால்,நான் இந்த முடிவுக்கு வர நேர்ந்தது. இங்கும், மத்திய குழுவாலும் எடுக்கப்பட்ட பார்லிமைண்ட் குழுவின் தீர்மானங்கள் என்னை கட்டுப்படுத்தும். முழுமனதுடன் அவற்றை நிறைவேற்றுவேன்." 

 



 




Tuesday, September 20, 2016

சிவகாமியின் செல்வன் 16




சிவகாமியின் செல்வன் 17

இன்னம்பூரான்

20 09 2016

"நான் பழனியிலிருந்து திரும்பி வரும்போது, ஶ்ரீ ராஜாஜியையும், ஶ்ரீ என்.கோபாலசாமி ஐயங்காரையும் இழிவு படுத்தும் கடிதம் ஒன்றை யாரோ ஒருவர், வண்டி நின்ற ஒரு இடத்தில், என்னிடம் கொடுத்து, தமக்கு எதிராக இயங்குபவர்களை என்னை அணுகவிடப்போவதில்லை என்று சொன்னார்கள். நடந்தது என்னமோ நேர் மாறாக என்று நான் அறிவேன். சொல்லத்தகுந்தது எதையும் சொல்ல விரும்புபவர்களை என்னை அணுகவிடாமல்/என்னுடன் பேச விடாமல்/ எனக்கு எழுத முடியாமல் தடுப்பது இயலாத காரியம். அந்த கடிதத்தை என்னிடம் கொடுக்கமுடிந்ததே, அவர்களின் குற்றச்சாட்டை முறியடிக்கிறது. இந்த ஸ்பெஷல் ரயிலில் ஶ்ரீ காமராஜ நாடாரும் என் கூட இருந்தார். பழனி கோயிலிலும் அவர் என் கூட இருந்தார்.எனினும் இந்த பயணத்தில் ராஜாஜியும் கோபால்சாமியும் என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதில் ஐயம் ஒன்றும் கிடையாது.இந்த பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர்கள் தான்.ராஜாஜி என்னுடைய நெருக்கமான நண்பர் மட்டுமல்ல;அவர் தான் என்னுடைய நிலைப்பாடுகளுக்கு உகந்தவாறு சொல்லிலும்,செயலிலும் அழுத்தந்திருத்தமாக இயங்குபவர்.பாகிஸ்தான் விஷயத்தில் என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டு, ஜூலை 15, 1942 அன்று காங்கிரசை விட்டு விலகியவர், அவர் என்பது எனக்கு தெரியும் . சற்றும் தயக்கமின்றி என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டதை பொதுமன்றத்தில் அவர் வைத்தததை, அவரை பாராட்டுகிறேன். அவர் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி. தன் மனசாக்ஷிக்கு உகந்த படி துணிவுடன் நடப்பவர்.அவருடைய அரசியல் ஞானமும், நாணயமும் கேள்விக்கு உட்படுத்த முடியாதவை.எனவே அவருக்கு எதிராக ஒரு கும்பல் (clique)இயங்குவது எனக்கு வேதனை அளிக்கிறது.மதராஸ் காங்கிரஸில் இந்த கும்பலின் ஆதிக்கம் தான் செல்லுபடி ஆகிறது. மக்கள் என்னமோ ராஜாஜி பக்கம். என்னால் தான் இத்தனை பெரிய கூட்டங்கள், வரவேற்புக்கள் என்று நினைக்கும் அளவுக்கு நான் அகந்தை கொண்டவனோ, முட்டாளோ அல்ல. அவருக்குத்தான் (ராஜாஜி)அந்த ஈர்ப்பு. தென்னிந்திய காங்கிரஸ்காரர்கள் அவரவர் கருத்துக்கிணஙக் செயல் படுவார்கள். ஆனாலும் மற்றவர்கள் யாவராலும் தாங்கமுடியாத பொறுப்பை ஏற்கக்கூடிய சக்தியுடைய ராஜாஜியின் பணியை தவறவிட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பது என் கடமை.

மோ.க. காந்தி
ஃபெப்ரவரி 5, 1942
ஹரிஜன்: 10.2.1932


“Clique” – Kamaraj vs Rajaji (& Gandhi)

CURIOUS
On my return journey from Palani, someone gave me at one of the halts a letter reviling Shri Rajaji and Shri Gopalaswami (N. Gopalaswami Iyengar, Chairman, Jubilee Celebration Committee of the Dakshina Bharat Hindi Prachar Sabha, Madras) , and informing me that they would not allow anyone against them to come near me. Now I know to the contrary. No one who wanted to say anything worth-while could be prevented from seeing me or writing to me. The delivery of the very letter disproves the allegation. Shri Kamaraja Nadar was with me on the same special. He was with me in the Temple on the Palani Hill. But there is no doubt that both Rajaji and Gopalaswami were closest to me during the journey. They had arranged it. Rajaji is one of my oldest friends and was known to be the best exponent in word and deed of all I stand for. That, in 1942, he differed (On the issue of demand for Pakistan, Rajagopalachari, resigned from the Congress Party on July 15, 1942) from me, I know. All honour for the boldness with which he publicly avowed the difference. He is a great social reformer, never afraid to act according to his belief. His political wisdom and integrity are beyond question. I was, therefore, pained to find a clique against him. It is a clique that evidently counts in the official Congress in Madras. But the masses are devoted to Rajaji. I am neither vain nor foolish enough to feel that I could have had the huge public demonstratations all along the route of the pilgrimage, if he had no influence with the masses in Tamil Nadu. Congressmen in the South will act as they think best. But I would be less than loyal to the organization, if I did not warn them against losing the valuable services which no one can shoulder as Rajaji can at the present moment.
En route TO WARDHA, February 5, 1946
Harijan, 10-2-1946
பின் குறிப்பு: 1942ல் நான் பத்தாம் வகுப்பில். வீட்டில் அரசியல் அலசல்கள் எனக்கும் என் தந்தைக்கும் நடக்கும் என்பதால், இது நினைவில் இருக்கிறது. மேலும், அவர் அடிக்கடி புது சொற்களை சொல்லிக்கொடுப்பார். 'clique' என்ற சொல்லுக்கு அகராதியை பார்க்க வைத்தார்.
சித்திரத்துக்கு நன்றி:
http://www.searchforgandhi.com/img/writer/Harijan_img_heading.jpg

சிவகாமியின் செல்வன் 15

சிவகாமியின் செல்வன் 15

இன்னம்பூரான்
20 09 2016

பெருந்தலைவர் காமராஜரை பற்றி தேடிப்படிக்கும் போதெல்லாம், நாம் அவரிடம் கற்கவேண்டியதை கற்றுக்கொள்ளவில்லை என்ற ஆதங்கம் எழுகிறது. காங்கிரஸ் கட்சியின் எதிர்துருவங்கள் ராஜாஜியும் காமராஜரும், அணுகும் முறையில். இருவரும் தேசபக்தர்கள் தான். மாஜியான காலகட்டத்திலும் அவர்கள் தான் ஒரிஜினல் காங்கிரஸ்காரர்கள். 1950/60 களில் இதெல்லாம் வெளிப்படையாக ஊடகங்களால் விமரசிக்கப்பட்டவை. முதலமைச்சரான காமராஜர் முரண்பாடு கொண்டவர்களை, தன்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் உடனடி பதில் சொல்வதில்லை என்ற வழித்தடத்தில் இயங்கினார்.

அரசு இயந்திரம் என்றுமே தானியங்கி. தியாகராய நகரில் இருந்த புகழ் வாய்ந்த ராஜாஜி சேவா சங்கக்கட்டிடத்தை, சிடி இம்ப்ரூவ்மெண்ட் ட்ரஸ்ட் அதிகாரிகள், புதிய கட்டிடம் கட்டுவோம் பேர்வழி என்று, அடியோடு இடித்துத் தரைமட்டம் ஆக்கி விட்டார்கள்.நம்மூர் வாசிகளை தெரியாதா என்ன? இது காமராஜரின் வேலை என்று அடித்துப் பேசிக்கொண்டார்கள்.  சங்கத்தை சேர்ந்த டி.என். சோமசுந்தர நாயரும் மற்றவர்களும் இடிபாடுகளின் படங்களை எடுத்துக்கொண்டி முதல்வரை சந்தித்தார்கள். அவர் 'ஆகட்டும்! பார்க்கலாம்' என்று சொல்லாமல், ' நீங்க போயிட்டு வாங்க. இது ப்த்தி நான் விசாரிக்கிறேன்.' என்றதுடன் நிற்காமல், அந்த தான்தோன்றி அதிகாரிகளை கண்டித்து, அவர்கள் மூலமே ராஜாஜி சேவா சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுத்தார். சிவகாமி ஆத்தா தன் திருமக்னை 'ராசா' என்றழைத்தது பொருத்தமே.

இந்த நிகழ்வு மற்றொன்றை நினைவு படுத்துகிறது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டீஷ் ராயல் விமானப்படை உலகபுகழ் வாய்ந்த கொல்ன் கதீட்ரலை தாக்கி உடைத்து விட்டது, குறி வைத்துத் தாக்காவிடினும். போர் முடிந்த பின்னர், அந்த ராயல் ஏர்ஃபோர்ஸ் ஊழியர்களே சந்தா வசூல் செய்து அந்த கதீட்ரலை மராமத்து செய்து, முன்மாதிரியே கட்டி கொடுத்தனர்.

அந்த பெருந்தன்மையை இழந்து நிற்கிறார்கள், தமிழ் மக்கள், இன்று.

சித்திர்த்துக்கு நன்றி:

Friday, September 16, 2016

சிவகாமியின் செல்வன் 14

Innamburan S.Soundararajan

சிவகாமியின் செல்வன் 14

Innamburan S.Soundararajan Fri, Sep 16, 2016 at 8:57 PM



சிவகாமியின் செல்வன் 14

"...ஏங்க...நீங்க ஒரு போலீஸ் அதிகாரி தானே...?சட்டம், ஒழுங்கு ஒங்க கையிலே தானே இருக்கு...? தப்பு செய்யறவன் யாரா இருந்தாலும் பிடிச்சித் தண்டிக்க வேண்டியது தானே...குற்றவாளியை பிடிக்கிறதா வேணாமான்னு சீஃப் மினிஸ்டரு கிட்ட கேக்குறதுக்கா விருதுநகர்லேருந்து கிளம்பி வந்துருக்கீங்களான்னேன்..?... தவறு செய்யறவன் யாராயிருந்தா என்ன? சட்டப்படி நடவடிக்கை எடுங்க...! என்னை மாமா, தாத்தான்னு ஆயிரம் பேர் சொல்லுவாங்க...ஜாதியை கூட சொல்வாங்க...இதையெல்லாம் காதிலே வாங்க வேண்டாம்ன்னேன். அப்படிச்செய்யலேன்னா அந்த பொறுப்புக்கே நீங்க தகுதியில்லேன்னு அர்த்தம்...!

சமூகநலன் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் செவ்வனே பணிபுரியவேண்டும் என்று காமராஜர் கடைபிடித்த நன்னடத்தையுடன் பிற்கால நிகழ்வுகளில் சிலவற்றை நினைத்தாலே மனம் பதைபதைக்கிறது.

சிலநாட்களுக்கு முன் வழங்கிய தீர்ப்பில் உச்சமன்றம் 2008ம் வருடம் திமுக ஆட்சி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து விட்டது. அந்த அரசாணைப்படி அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை சாக்கிட்டு ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 1,400 கைதிகளை விடுதலை செய்தது. அப்போதே, இது விஷயமாக பலத்த குதிரைபேரங்கள் நடந்ததாக பேச்சு பரவலாக இருந்தது. 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த சேகர் என்பவரை, இதை முன்னுதாரணமாகக் கூறி விடுதலை செய்ய சொல்லி ஒரு மனு 2015ல் தாக்கல் செய்யப்பட்டது. 1,400 பேருக்கு ஒரு நீதி, ஒருவருக்கு மட்டும் மற்றொரு நீதியா என்ற கேள்விக்கு பதில் அளித்து அவரை விடுதலை செய்ய உத்திரவிட்ட கோர்ட்டார் கூறிய கருத்து:

"குற்றவாளிகளை மன்னித்து விடுதலை அளிக்கும் கவர்னரின் அதிகாரத்தை(அரசியல் சாஸனத்தின் 161 வது  பிரிவு)சகட்டுமேனிக்கு ஒட்டுமொத்தமாக பிரயோகிப்பது சரியல்ல. ஒவ்வொரு நபர் விஷயத்திலும் தனித்தனியாகப் பரிசீலித்து இருக்கவேண்டும்."

2008ல் விடுதலையான இந்த குற்றவாளிகள் வெளிவந்த பின் செய்த அட்டுழியங்கள் பற்றி விவரம் இல்லை. ஆனால், கொடுமையான குற்றங்கள் நாள்தோறும் நிறைவேறி வருகின்றன. இத்தகைய அரசாணையை காமராஜர் பிறப்பித்திருப்பாரா என்ற அசட்டுக்கேள்விக்கு பதில், 'நிச்சயம் அப்படி பிறழ்ந்து சட்டத்தையும் ஒழுங்கையும் காற்றி பறக்க விட்டிருக்கமாட்டார் என்று தான் தோன்றுகிறது. அண்ணாவும் காமராஜர் மாதிரி தான் முடுவு எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.

ஒரு உபரி கேள்வி: 2008ம் வருடத்து செல்லுபடி ஆக தகுதியற்றது என்று இன்று சொல்லப்படும் அரசாணையை 2016ல் ரத்து செய்வதால், மீண்டார் வருவரோ கூண்டில் அடைபட? 

2006ம வருட புள்ளி விவரப்படி, அக்காலகட்டத்தில், தமிழ் நாட்டில் விசாரணைக்கு காத்திருந்த குற்றம் சாற்றப்பட்ட அண்டர் ட்ரையல் கைதிகள் 15.5% சிறைச்சாலைகளின் மொத்த ஜனத்தொகையில். ரிமாண்டில் வைக்கப்பட்டவர்கள் 45.1 %. இவர்கள் குற்றவாளி என அறிவிக்கப்படாதவர்கள். காமராஜரின் கவனம் இவர்கள் மீது தான் சென்றிருக்கும்.

தமிழ்நாட்டுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை போலும்!

சித்திரத்துக்கு நன்றி:







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, September 12, 2016

சிவகாமியின் செல்வன் 13

சிவகாமியின் செல்வன் 13

Innamburan S.Soundararajan Tue, Sep 13, 2016 at 10:18 AM



சிவகாமியின் செல்வன் 13

இன்னம்பூரான்
செப்டம்பர் 13, 2016

"...ஏங்க...நீங்க ஒரு போலீஸ் அதிகாரி தானே...?சட்டம், ஒழுங்கு ஒங்க கையிலே தானே இருக்கு...? தப்பு செய்யறவன் யாரா இருந்தாலும் பிடிச்சித் தண்டிக்க வேண்டியது தானே...குற்றவாளியை பிடிக்கிறதா வேணாமான்னு சீஃப் மினிஸ்டரு கிட்ட கேக்குறதுக்கா விருதுநகர்லேருந்து கிளம்பி வந்துருக்கீங்களான்னேன்..?... தவறு செய்யறவன் யாராயிருந்தா என்ன? சட்டப்படி நடவடிக்கை எடுங்க...! என்னை மாமா, தாத்தான்னு ஆயிரம் பேர் சொல்லுவாங்க...ஜாதியை கூட சொல்வாங்க...இதையெல்லாம் காதிலே வாங்க வேண்டாம்ன்னேன். அப்படிச்செய்யலேன்னா அந்த பொறுப்புக்கே நீங்க தகுதியில்லேன்னு அர்த்தம்...!

சொல்லக்கேட்டதாக சொன்னவர்: சூலூர் லெக்ஷ்மணன்.

இடம், பொருள், ஏவல்: " ஐயாவோட சகோதரி மகன்கள் ரெண்டு பேர் விருதுநகரில் இருக்கின்றனர். அதில் ஒருவர் சரியில்லை...நாங்க கேட்டா 'காமராஜ் என் தாய்மாமன் தெரியுமா? என்று எங்களையே மிரட்டுகிறார்." என்ற கவலையுடன் பெரியவரின் அபிப்ராயம் கேட்க வந்த காவல் அதிகாரியிடம்.

என் குறிப்பு 1: 
பிரபலங்களின் வரலாறு மற்றவர்கள் மூலமாக வரும் போது, அவர் காந்திஜியாக இருந்தால் கூட வாயாவார்த்தையாக,யதார்த்தமான சொல்மாற்றம், மிகை, இடைச்செருகல், புரட்டுக்கதை இத்யாதி இடம் பெறலாம். காஞ்சி முனிவரை பற்றிக்கூட அவருடைய சீடர்களே மிகைப்படுத்தலாம். விரோதம் பாராட்டுபவர்களோ அதகளம் செய்வார்கள். அதே மாதிரி காமராஜரை பற்றியும் செய்திகள் புரளலாம். திரு.லெக்ஷ்மணன் செய்தி நம்பகத்தன்மை உடையது என்பது என் கருத்து. லவலேசமும் ஐயம் இருந்தால் அவற்றை போடமாட்டேன்.

என் குறிப்பு 2: 

எம்.ஓ.மத்தாய் என்று ஒருவர் நேருஜியின் காரியதரிசியாக இருந்தார். அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு நல்ல கடிதம் வந்திருக்கிற்து. ஆனால், அவர் எழுதிய 'டெல் ஆல்' புத்தகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறி தான். அதில் அவர் நேரு இந்திராவிடம், 'இந்த திருட்டு உன் பசங்களின் கைங்கர்யமா?என்று கேட்டதாக எழுதியிருக்கிறார்.பின்னணி: உளவுத்துறை ராஜீவும், சஞ்சய்யும் ஒரு காரை லவட்டியதாகவும், தாத்தா பெயர் சொல்லி தப்பியதாகவும், அவரிடம் போட்டுக்கொடுத்து இருக்கிறது. அப்படியிருந்தால், அது அவர்கள் கடமை என்க. இது எத்தனை தூரம் நிஜம் என்று தெரியாது.

என் குறிப்பு 3: 
இன்று ஒரு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அவருடைய வீட்டில் வருமானவரி சோதனை நடந்த பின். உளவுத்துறை, முன்னரே, வருமுன் காப்போனாக, உண்மை விளம்பியதா என்ற வினா எழுகிறது


-#-
சித்திரத்துக்கு நன்றி:



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, September 11, 2016

சிவகாமியின் செல்வன் 12

சிவகாமியின் செல்வன் 12


இன்னம்பூரான்
செப்டம்பர் 12, 2016

அரசியல் தலைவர்கள் உலா வந்தால், நம் சொந்தகாரியங்களுக்கு உலை வைத்து விடுவார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை. ஜனாதிபதி நேற்று வந்திருந்தார். மீனம்பாக்கம், அக்கம்பக்கமெல்லாம் வண்டிகள் நகரமுடியாமல் துக்கம் தான், மணிக்க்கணக்காக.பெளன்ஸர்ஸ் எனப்படும் குண்டாம்தடியர்கள் கூட ஈடுபடுத்தப்படுகிறார்கள். கறுப்புப்படை, நீலப்படை என்றெல்லாம் பூனை/புலிப்படைகள் வேறு. காமராஜருக்குப் பிடிக்காத விஷயமிது. முதுகளத்தூர் கலவரம் மூண்டிருந்த காலத்தில், அவருடைய காருக்கு முன்னும் பின்னும் கட்டியம் கூறும் வண்டிகள் பவனி வந்தன. 'சைரன்' ஒலி நாராசமாக பெரியவர் செவியை தாக்க, தன்னுடைய பாதுகாப்பு அலுவலகர் கிருஷ்ணனை பார்த்து, 'நான் உசிரோட தானேய்யா இருக்கேன்; அவன் என் முன்னாலே சங்கு ஊதிக்கிட்டுப்போறான்னேன். மொதல்ல அவனை நிறுத்தய்யா' என்று போட்டாரே ஒரு சப்தம். படோடாபத்தின் மீது அவருக்கு ஒவ்வாமை.

சித்திரத்துக்கு நன்றி:
http://www.clipartkid.com/images/822/police-car-clipart-panda-free-clipart-images-0mjFNz-clipart.gif

Saturday, September 10, 2016

சிவகாமியின் செல்வன் 8

சிவகாமியின் செல்வன் 8

 " தோழர்கேளஎனக்கோ  வயது  82 ஆகிறது ... இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம்   இரண்டாயிரம்மூவாயிரம் ஆண்டுகளில்  என்றுமே  நடந்தது  இல்லை. .நனது  மூவேந்தர்கள் அடுத்து  நாயக்க மன்னர்கள்மராட்டிய மன்னர்கள் முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லம் நமது கல்விக்கு வகை  செய்யப்படவில்லை. .தோழர்களே என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால்  இன்னும் பத்து ஆண்டுகளாவது. காமராசைர விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்.. அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள் காமராசைர  பயன் படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க  வேறு ஆளே சிக்காது.
 (இராமநாதபுர  மாவட்ட திராவிடக்  கழக நான்காவது மாநாடு. 9.7.1961-ல் தேவக்கொட்டையில் நடந்த பொது  தந்தை பெரியாரின் உரையின் ஒரு  பகுதி -17.7.1961 விடுதலை.
~ இது ஒரு நண்பர் அனுப்பியது. கீழே எனது பதிவு.

~  பெரியார் பெரியவர் காமராஜரை போற்றியது மட்டுமல்லாமல், அவருடைய வெற்றிக்கு அடி கோலியது: 1954லியே, அந்த 'ஏழு வருடங்களுக்கு' முன்பே. முதலமைச்சராக பதவியேற்ற பெரியவர் குடியாத்தம் தொகுதியில் இடைத் தேர்தலில் நிற்க விரும்பினார். யாவரும் அவருடைய வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் நிற்காமல், அவரின் சாதனை: அந்த இடை தேர்தலில் அவரை தோற்கடிக்க நினைத்த தி.மு.க., பெரியாரின் விருப்பப்படி, போட்டியிடவில்லை. பெரியவர்  கிட்டத்தட்ட நாற்பது ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிகழ்வு எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. 
இதற்கு பின்னர், பெரியாரின் சீடர்கள் அவருடைய பேச்சை கேட்டதாக வரலாறு இல்லை. காமராஜரை பற்றி அவர்கள் அவதூறுகள் பரப்பியதும் வரலாறு.

இன்னம்பூரான்
செப்டம்பர் 3, 2016


சிவகாமியின் செல்வன் 6

சிவகாமியின் செல்வன் 6

"ஐ ஆம் ஆன் ஆர்டினரி வொர்க்கர். யூ ப்ளீஸ் கோ அண்ட் மீட் மை லீடர்" என்று அடித்துச் சொல்லி விட்டார்.
அவர்களை அழைத்து வந்தவரிடம், "உனக்கு அறிவிருக்கா? போன் செய்துட்டு வரச்சொல்லமாட்டியா?" என்று கடிந்து கொண்டார்.
~ இதன் பின்னணி:

காங்கிரஸ் அலுவலக நிர்வாகியான் திரு. வி.எஸ் வெங்கட்ராமன், பெரியவர் ராஜாஜியை பார்க்க சென்ற நேரத்தில், மிகவும் வற்புறுத்திய ஒரு ஸ்விஸ் நிருபரையும், அவருடைய குழுவையும் அழைத்து வந்து போது நிகழ்ந்தது. பெரியவர் தலைவர் என்ற சொல்லியது திரு நிஜலிங்கப்பாவை பற்றி.பெரியவர் முதலில் சொன்னது, 
"நான் இப்போது காங்கிரசின் சாதாரணத் தொண்டன். எங்கள் தலைவர் நிஜலிங்கப்பா. அவர் தான் உங்களுக்கெல்லாம் செய்தி தரவேண்டுமே தவிர, நான் எதுவும் கூறுவது முறையாகாது.

Thursday, September 8, 2016

சிவகாமியின் செல்வன் 11

சிவகாமியின் செல்வன் 11


இன்னம்பூரான்
9 9 2016

வருடம் 1954: என் வாழ்க்கையில் திருப்பு முனை வருடம். அவ்வருடம் காமராஜர் முதலமைச்சரானார். ஏழு அமைச்சர்கள் மட்டும். விருப்பு, வெறுப்பு, ஜாதிக்கண்ணோட்டம் ஆகியவை இடம் பெறவில்லை. இரட்டைமலை சீனிவாசனின் பேரனாகிய திரு.பரமேஸ்வரனை அறநிலையத்துறை அமைச்சராக நியமித்தார்.'பறையன்' என்ற முத்திரையை சுமந்த இரட்டைமலை சீனிவாசன் வட்டமேஜை மாநாட்டுக்கு 'எஸ்.சி.' பிரதிநிதியாக சென்ற கல்விமான். ஆங்கிலேயர்கள் கைகுலுக்க வந்தபோது தீண்டாமையின் கொடுமையை அவர்களுக்குப் புரிய வைத்தவர். அவருடைய பேரனாகிய இந்து புது அமைச்சரை பற்றி பேச்சு எழுந்ததாம். ஆன்மீக செம்மல்களையும், பக்திப்பழங்களையும் விட்டு விட்டு... என்று பேச்சாம். பெரியவரிடம் கேட்டும் விட்டார்களாம். "ஆமான்னேன்...பரமேஸ்வரன் எஸ்.சி. என்று தெரிந்து தான் போட்டிருக்கேன்னேன்...எந்த நாலாஞ்சாதியை நீ உள்ளே விடமாட்டேன்னு சொன்னையோ, அதே நாலாஞ்சாதிக்காரனுக்கு பூரண கும்ப மரியாதை காட்டி, பரிவட்டம் கட்டி உள்ளே அழைச்சிக்கிடுப் போவியா இல்லியா? ...பரமேஸ்வரனை மந்திரியக்கி, ஒரு பறையனுக்குக்குப் பரிவட்டம் கட்ட வைக்கிறேன்ன்னேன்..." என்று விளக்கம் கொடுத்தார் என்று சொல்லக்கேட்டவர்?

சித்திரத்துக்கு நன்றி:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxBOlDhMf7n1_iUQ-sjZlxkslnzklaQAnzcuS_HCJAg1hSrgPG0Xv_19QFurvAg83IwDD-GQeSIHxQJBqXteYzvCfFIVpwMmMjMJlsAYhvL-BOz_lL9MIUfydWp8CX39_HMlzIIYaseCbq/s1600/paari0011.JPG


Saturday, September 3, 2016

சிவகாமியின் செல்வன் 2

சிவகாமியின் செல்வன் 2

பெரியவர் தஞ்சை ஜில்லாவில் இருந்த பழைய கோயிலொன்றுக்கு சென்றார், அந்த ஊர் மக்களும் ,அதிகாரிகளும் அழைத்து செல்ல. ஆர்வத்துடனும், வியப்புடனும் அந்த கோயிலைச் சுற்றிப் பார்த்து விட்டு, 'இது யாரு கட்டினதுங்கிறே?' என்றார். எல்லாரும் வாயடைத்து நிற்க, ஒரு அதிகாரி மட்டும் இது பற்றி தெளிவான வரலாறு ஒன்றும் இல்லீங்கய்யா.' என்றார். சிர்த்துக்கொண்டே, மேலே இருந்த ட்யூப் லைட்டைபார்த்தவாறு, 'இத்தனை காலமா நிலைத்து நிக்கிற கோயிலைக் கட்டினவன் யாருன்னு தெரியல்லே; ஒரு மாசம் கூட ஒழுங்கா எரியாத இந்த லைட்டிலே... உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்கான் பாருன்னேன்!" என்றாரும். 

அவருக்கு சட்னு கோபம் வந்துரும்...
பிற பின்னர்.
[தொடரும்]

ஆதாரங்கள், மூலம் எல்லாம் இறுதியில் தரப்படும்.

Friday, September 2, 2016

சிவகாமியின் செல்வன் 7

சிவகாமியின் செல்வன் 7
இன்னம்பூரான்
செப்டம்பர் 2. 2016

“ஜீவாவை அனைவரும் போற்றினார்கள். காமராஜர் போற்றினார் - அவர் எப்படிப் போற்றினார் என்பதை நான் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கிறேன். ஒருகட்டத்தில், சென்னையில் தாம்பரம் பகுதியில் குடிசை வீட்டில்தான் வசித்தார். அந்த வீட்டில் மழை பெய்தால் குடிசை ஒழுகும். உள்ளே சேறும் சகதியுமாக இருக்கும். அப்படிப்பட்ட குடிசையில் தான் அவர் வாழ்ந்தார்.
அப்படி ஒருகட்டத்தில், அவர் கடுமையாகக் காங்கிரசை விமர்சித்துக் கொண்டு இருந்தார். 

காமராசர் முதலமைச்சர். அங்கே இருக்கின்ற ஒளவை ஆரம்பப் பாடசாலை ஆண்டு விழாவுக்கு வருகிறார். ஜீவா வசித்த குடிசை வீட்டுக்குப் பக்கத்தில் தான் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியே ஜீவா தொடங்கிய பள்ளிக் கூடம்தான். ஆனால், ஆண்டு விழாவுக்கு ஜீவாவுக்கு அழைப்பு இல்லை. வருடம் 1961. காமராசர் விழாவுக்கு வருகிறார். அப்பொழுது சென்னை கலெக்டராக இருந்த திரவியமும் அங்கே வருகிறார். அவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான்.
விழாவுக்கு வந்தவுடன் காமராசர் திடீரென்று ஓரிடத்தில் இறங்கி, தெருவில் நடக்க ஆரம்பிக்கிறார். நடந்தவர் ஓரிடத்தில் நின்று, இங்கே ஜீவானந்தம் வீடு எங்கே இருக்கிறது? என்கிறார். இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், அவர் நின்று கேட்கின்ற இடம் ஜீவாவின் குடிசை வீட்டு வாசல்தான். இங்கேதான் ஜீவானந்தம் இருக்கிறார் என்கிறார்கள். உள்ளே நுழைகிறார்.

வெளியூர் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்து, எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளிக்க வேண்டும் என்று இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு இருக்கிறார் ஜீவா. அரவம் கேட்டு, யாரது? என்கிறார். காமராசரை பார்க்கிறார். என்ன விஷயமாக நீங்கள் இங்கே வந்து இருக்கிறீர்கள்? என்கிறார். என்ன ஜீவா, ஒளவை பள்ளிக்கூடம் ஆண்டு விழா. நீங்கள் வரவில்லையா? என்கிறார் காமராசர்.
‘எனக்குத் தெரியாதே’ என்கிறார் ஜீவா. காமராசர் ஒரு பார்வை பார்க்கிறார். சட்டையைப் போட்டுவிட்டு வாருங்கள் என்று அழைத்துக் கொண்டுசெல்ல, காமராசருக்குப் போடப்பட்ட நாற்காலியில் ஜீவாவை அமர வைத்தார் காமராசர். (நான் வேறு இடத்தில் அறிந்து கொண்ட தகவல். தனக்கு இருந்த ஒரே உடுப்பை நனைத்து காயவைக்கிறார், ஜீவா. அதனால் பெரியவர் வைட்டிங்!}

அதை விட வேதனை என்ன தெரியுமா? மீண்டும் இன்னொருமுறை வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு வருகிறார். அந்தக் குடிசையின் நிலைமையைப் பார்க்கிறார். மழை கொட்டினால் உள்ளே தண்ணீர் பெருகிவிடும். அண்ணாந்து பார்த்தால் அந்த ஓட்டைக்குடிசை வழியாக வானத்தைப் பார்க்கலாம். என்ன ஜீவா நீங்கள் இந்தக் குடிசையில் இருக்கிறீர்கள். நான் ஒரு வீடு ஒதுக்க ஏற்பாடு செய்கிறேன். வருகிறீர்களா? என்கிறார் காமராசர்.

அதற்கு ஜீவாவோ, ‘இல்லை. இந்த நாட்டிலே வசிக்கின்ற எல்லா மக்களும் மாடி வீடு கட்டி வாழும்போது அடியேனும் அப்படிப்பட்ட வீட்டுக்கு வருவேன்.’ என்றாராம்.

‘தூக்குமேடைச் சிங்கம்’ என்று கவிதையில் ஜீவா எழுதுவார். காமராசர் சொல்கிறார், சிங்கமடா, அவர் பேச்சைக் கேட்க வேண்டுமே, எரிமலை வெடிப்பதைப்போல இருக்கும். அதுவும் கம்ப இராமாயணத்தை அவர் பேசக் கேட்க வேண்டுமே, எப்பேர்ப்பட்ட தலைவர்! தொழிலாளிகளுக்காகவே போராடி வாழ்ந்து, குடிசை வாழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டு இருக்கின்ற அந்த மனுஷன், இப்படி வந்து குடிசையில் கிடக்கிறாரே என்று காரில் திரும்பிச் செல்லும்போது காமராசர் தமது உள் ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டே போனாராம்.


~ வைகோ

பின்குறிப்பு
தொடர் தொடர்ந்து வரவில்லை. பிறகு சரி செய்கிறேன். எனக்கு ஜீவாவை தெரியும். அந்த ஆதங்கம். மன்னிக்கவும்.