Showing posts with label 14. Show all posts
Showing posts with label 14. Show all posts

Wednesday, August 22, 2018

பேஷ்! பேஷ்! சீரீஸ் [2]

பேஷ்! பேஷ்! சீரீஸ் [2]


இன்னம்பூரான்


‘கலியிலே எலியும் புலியாகும்.’ என்ற கிலி நிஜமாயிடுத்தாம். காந்திமண்டபத்திற்கு எதிரில் இருக்கும் அண்ணாவின் பெயரை கெடுக்கவதற்கே இயங்கிவரும் பல்கலையில் ஒரு பரிக்ஷை நடந்தது. பெரிய வீட்டுப்பிள்ளையோ, ரவுடி வீட்டுத்தத்தாரியோ, ஒரு பையன் வாங்கிய மார்க் 24. அவனை கீர்த்தியுடன் கெலித்ததாகக்காட்டுகிறேன் என்று கை நீட்டி கையூட்டு வாங்கிய பரீக்ஷாதிகாரி அவர்களுக்கு தன் மதீப்பீடு கறார் என்ற அகந்தை உண்டு. மேலும்,அந்த விடைதாள் மறு பரீசீலனைக்கு உட்பட்டால், குட்டு வெளிப்படலாம் என்ற அச்சமும் உண்டு. பார்த்தார். பேனாக்கூட்டீல் தேடித்தேடி, அதே நிறத்தில் எழுதும் எழுதுகோலை எடுத்தார். கட கட என்று நீலகிரி எக்ஸ்பெரஸ் போல சரியான விடைகளை, மாடல் ஆன்ஸர்புக்கிலிருந்து எடுத்து எழுதினார். 14ஐ மனசாட்சியின் உதவியுடன் 94 ஆக்கினார். நல்ல வேளை. இவன் மெக்கானிகல் எஞ்சினியரிங் மாணவன். அதிகப்படியாகப்போனால், அவனால் மாவு மிஷினை ரிப்பேர் செய்யமுடியாது. அவனே மருத்துவ மாணவனாக இருந்திருந்தால் எத்தனை கொலை செய்வானோ! ‘அறிவியலார்’ நம்பாத நரியை பரியாக்கின கதையை விட அதிசயமாக இல்லை, இந்த மாதிரியான வாத்தித் தொழில்💣
*
பின் குறிப்பு: விசாரணை நடந்ததாம். மேலா உத்தரவின் பேரில் மனசாட்சியை அடகு வைத்தாராம். மேலா பெயரை பகர்ந்தாராம். ஏன் அதை ஊடகங்கள் மறைக்கின்றன. அவர் சத்திய பிரமாணம் செய்து தன்னைலை விளக்கம் தாக்கல் செய்யவேண்டும். அது நிரூபிக்கப்பட்டால், மேலா ஜெயிலுக்கு போகவேண்டும். இல்லையெனில், இவர் ஜெயிலுக்குப் போக வேண்டும். இதை எல்லாம் சொல்ல ஊடகங்கள் ஏன் லஜ்ஜை படுகின்றன? அடுத்து வருவது நல்ல மகிழ்ச்சி தரும் சமாச்சாரம்
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


வல்லமை பிரசுரம்

Friday, September 16, 2016

சிவகாமியின் செல்வன் 14

Innamburan S.Soundararajan

சிவகாமியின் செல்வன் 14

Innamburan S.Soundararajan Fri, Sep 16, 2016 at 8:57 PM



சிவகாமியின் செல்வன் 14

"...ஏங்க...நீங்க ஒரு போலீஸ் அதிகாரி தானே...?சட்டம், ஒழுங்கு ஒங்க கையிலே தானே இருக்கு...? தப்பு செய்யறவன் யாரா இருந்தாலும் பிடிச்சித் தண்டிக்க வேண்டியது தானே...குற்றவாளியை பிடிக்கிறதா வேணாமான்னு சீஃப் மினிஸ்டரு கிட்ட கேக்குறதுக்கா விருதுநகர்லேருந்து கிளம்பி வந்துருக்கீங்களான்னேன்..?... தவறு செய்யறவன் யாராயிருந்தா என்ன? சட்டப்படி நடவடிக்கை எடுங்க...! என்னை மாமா, தாத்தான்னு ஆயிரம் பேர் சொல்லுவாங்க...ஜாதியை கூட சொல்வாங்க...இதையெல்லாம் காதிலே வாங்க வேண்டாம்ன்னேன். அப்படிச்செய்யலேன்னா அந்த பொறுப்புக்கே நீங்க தகுதியில்லேன்னு அர்த்தம்...!

சமூகநலன் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் செவ்வனே பணிபுரியவேண்டும் என்று காமராஜர் கடைபிடித்த நன்னடத்தையுடன் பிற்கால நிகழ்வுகளில் சிலவற்றை நினைத்தாலே மனம் பதைபதைக்கிறது.

சிலநாட்களுக்கு முன் வழங்கிய தீர்ப்பில் உச்சமன்றம் 2008ம் வருடம் திமுக ஆட்சி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து விட்டது. அந்த அரசாணைப்படி அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை சாக்கிட்டு ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 1,400 கைதிகளை விடுதலை செய்தது. அப்போதே, இது விஷயமாக பலத்த குதிரைபேரங்கள் நடந்ததாக பேச்சு பரவலாக இருந்தது. 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த சேகர் என்பவரை, இதை முன்னுதாரணமாகக் கூறி விடுதலை செய்ய சொல்லி ஒரு மனு 2015ல் தாக்கல் செய்யப்பட்டது. 1,400 பேருக்கு ஒரு நீதி, ஒருவருக்கு மட்டும் மற்றொரு நீதியா என்ற கேள்விக்கு பதில் அளித்து அவரை விடுதலை செய்ய உத்திரவிட்ட கோர்ட்டார் கூறிய கருத்து:

"குற்றவாளிகளை மன்னித்து விடுதலை அளிக்கும் கவர்னரின் அதிகாரத்தை(அரசியல் சாஸனத்தின் 161 வது  பிரிவு)சகட்டுமேனிக்கு ஒட்டுமொத்தமாக பிரயோகிப்பது சரியல்ல. ஒவ்வொரு நபர் விஷயத்திலும் தனித்தனியாகப் பரிசீலித்து இருக்கவேண்டும்."

2008ல் விடுதலையான இந்த குற்றவாளிகள் வெளிவந்த பின் செய்த அட்டுழியங்கள் பற்றி விவரம் இல்லை. ஆனால், கொடுமையான குற்றங்கள் நாள்தோறும் நிறைவேறி வருகின்றன. இத்தகைய அரசாணையை காமராஜர் பிறப்பித்திருப்பாரா என்ற அசட்டுக்கேள்விக்கு பதில், 'நிச்சயம் அப்படி பிறழ்ந்து சட்டத்தையும் ஒழுங்கையும் காற்றி பறக்க விட்டிருக்கமாட்டார் என்று தான் தோன்றுகிறது. அண்ணாவும் காமராஜர் மாதிரி தான் முடுவு எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.

ஒரு உபரி கேள்வி: 2008ம் வருடத்து செல்லுபடி ஆக தகுதியற்றது என்று இன்று சொல்லப்படும் அரசாணையை 2016ல் ரத்து செய்வதால், மீண்டார் வருவரோ கூண்டில் அடைபட? 

2006ம வருட புள்ளி விவரப்படி, அக்காலகட்டத்தில், தமிழ் நாட்டில் விசாரணைக்கு காத்திருந்த குற்றம் சாற்றப்பட்ட அண்டர் ட்ரையல் கைதிகள் 15.5% சிறைச்சாலைகளின் மொத்த ஜனத்தொகையில். ரிமாண்டில் வைக்கப்பட்டவர்கள் 45.1 %. இவர்கள் குற்றவாளி என அறிவிக்கப்படாதவர்கள். காமராஜரின் கவனம் இவர்கள் மீது தான் சென்றிருக்கும்.

தமிழ்நாட்டுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை போலும்!

சித்திரத்துக்கு நன்றி:







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com