Tuesday, September 11, 2018

பேஷ்! பேஷ்!! [11]




பேஷ்! பேஷ்!! [11]

தம் தமா தம்! 
ஷிகாகோ மாநகரில் உலக ஹிந்து காங்கிரஸ் மாநாடு சுபமாக நடந்தேறியது, சண்டை சச்சரவுகளுக்கு நடுவில். அதை பற்றி ஒரு அருமையான கேலிச்சித்திரம்: 

1893: ‘எனது அமெரிக்க சோதரர்களே, சோதரிகளே! சிங்கங்களாகிய நீங்கள் ஆட்டுமந்தையாயினேரே! ... [ஸ்வாமி விவேகாநந்தா]

2018: ‘காட்டுநாய்கள் சிங்கத்தை தாக்குகின்றன...[மோஹன் பகவத்]

காப்புரிமை பொருட்டு அந்த கேலிச்சித்திரத்தை இங்கு பதிவு செய்ய அனுமதி கிடைக்கவில்லை. 

தகவல்: 
ஹிந்து ஒற்றுமையையும், எழுச்சியையும் ஓங்கி வளருவதை ஆதரித்த இந்த மாநாட்டில் விநோதமான அறிவுரைகளும் வழங்கப்பட்டன. 
1. பதினாறும் பெற்று ஹிந்து ஜனத்தொகையை பெருக்கவேண்டும் என்ற அறைகூவல்!!!! - சாது மது பண்டித தாசா.
2. ஹிந்துக்கள் அடிக்கடி தாக்கப்படுவதால், அவர்கள் வன்மையை கடைபிடிக்கவேண்டும். - எஃப் காத்திய(ர்). 
3. தற்காலம் இதை எதிர்கொள்ள  ஈ.வே.ரா. அவர்கள் இல்லையே என்ற தாபமும் இருந்திருக்கலாம் என கேள்வி.
4. திலீப் அமீன் என்ற தர்ம தூதர்பிரான் ‘கலப்பு மணம் ஒழிக!’ என்ற வாசகங்களுடன் தொங்கவிடப்பட்ட படங்கள் அகற்றப்பட்டன.
5. மாநாட்டில் கலந்து கொண்ட உபஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு அவர்கள், நல்ல வேளை, இந்த அறிவுரைகளை அரசு ஆதரிக்க வில்லை என்றார். நானும் மூச்சை இழுத்து விட்டேன்.
6. அமெரிக்கா வாழ் சட்ட நிபுணர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அருமையாக உரை ஆற்றினார். யாவரும் ஸ்வாமி விவேகானந்தரின் போதனைகளை மட்டும் பின்பற்றவேண்டும் என்றார். கவனிக்கவும். காழ்ப்புணர்ச்சியை அறவே ஒழிக்கவேண்டும் என்றார். அவருடைய நண்பர்கள் அவரை தடுத்தாட்கொண்டபோதும், நற்செய்திகளையும், பொன்வாக்குகளையும் அளிக்கத்தவறக்கூடாது என்ற நெறியுடன் அவர் பேசியது, இன்று உலகெங்கும் பேசப்படுகிறது. 
7.ஷிகாகோ ட் ரிப்யூன் இதழில் எதிர்வாதங்கள் முழங்கும் விளம்பரம் வெளிவந்தது.
8. கைகலப்பு நடந்ததாக சொல்கிறார்கள். 
யாமொன்றும் அறியேன், பராபரமே!
பேஷ்! பேஷ்!! 

-#-




















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, September 10, 2018

பேஷ்! பேஷ்!! [9]

பேஷ்! பேஷ்!! [9]                    
இன்னம்பூரான்
10 09 2014
எத்தனை நாட்கள் இது ஓடுமோ தெரியவில்லை. நாட்தோறும், ‘பேஷ்! பேஷ்!!’, ‘சபாஷ்! சபாஷ்’, ‘பலே! பலே!!’, ‘அடடா!’, ‘பின்னிட்டாள் (ர்)டா!’ தகவல்கள் ஆயிரம் தடா வந்துக்கொட்டிக்கொண்டிருக்கின்றன. எதை விட்டால் நிந்தனை குறையும் என்ற கவலை வாட்டி எடுக்கிறது. இன்றைய தகவல்:
கல்லிடைக்குறிச்சியின் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலிலிருந்து 600 வருடம் வயதான ஒரு நடராஜர் சிலை 1982ல் அபேஸ். அந்த கோயிலினால் என்ன பயன், அந்த சிலையினால் என்ன பயன் என்று எல்லாம் வல்ல சுயமரியாதை அன்பர்கள் கேட்டால், எனக்கு பதில் தெரியாது. ஆகமொத்தம், அது 30 கோடி ரூபாய்க்கு ஆஸ்ட்ரேலியாவுக்கு விற்கப்பட்ட கற்சிற்பம். ஒரு சமயம் அந்த நாட்டில் ஏன் இதற்கு மவுசு  என்ற வினா எழும். கூட போக்கடிக்கப்பட்டது, சிவகாமி அம்மன். திரும்பி வந்தது சிவகாமியின் சிலையா அல்லது ஃபேக்கா? என்ற  ஐயம் தீரவில்லை. மேலும், மாணிக்கவாசகர் சிலை ஒன்றும், ஶ்ரீ பலி நாயகர் சிலை ஒன்றும் கவரப்பட்டாலும், இரண்டே வருடங்களில், போலீஸ் கேஸை கச்சிதமாக முடித்துக்கொண்டது. தற்காலத்து சிற்பமீட்டாளர் திரு.பொன். மாணிக்கவேல் அவர்களின் குழு, இந்த பாண்டியர் காலத்து சிற்பத்தை மீட்டு விட்டது. அவர்களுக்கு, இந்த சிலைகளை கடப் செய்தவர்கள் யார் என்று தெரியுமாம். அவர்களை பிடிச்சு பிச்சு உதறவேண்டும்.
                                பேஷ்! பேஷ்!! [9]      
-#-


Sunday, September 9, 2018

பேஷ்! பேஷ்!! [8]


பேஷ்! பேஷ்!! [8]
இன்னம்பூரான்
செப்டம்பர் 10, 2018
மனிதனொருவன் மாதொருவளுடன் தொடர்பு வைத்திருந்தான். அவர்களுக்குள் பிணக்கம் ஏற்பட்டதால், உறவும் உடைந்தது. அவளும் அவன் மேல் பாலியல் வன்புணர்வு வழக்குத் தொடுத்தாள். அவனை கைது செய்தார்கள். 1955ல் பானிப்பெட் கோர்ட்டாரும் அவனுக்கு ஏழு வருட சிறை தண்டனை அளித்தார்கள். மூன்று வருடங்கள் சிறை வாசத்த்துக்கு பிறகு, சட்டரீதியாக தற்காலிக விடுதலை பெற்ற அவன், திரும்பவே இல்லை. அங்குமிங்குமாக பல உணவு விடுதிகளில் பாத்திரம் கழுவி, வயிறு கழுவி வந்த அவனை, 19 வருடங்களுக்குப் பிறகு லூதியானா ரயில் நிலைய உணவகத்தில் வேலை செய்து வந்த காலகட்டத்தில் தன் குடும்பத்தைப் பார்க்கவந்த போது பிடித்து விட்டார்கள், போலீஸார். இந்த போலீஸ் தரப்பு செய்தியில், இவன் மேல் தொடரப்பட்ட வழக்கின் உண்மை நிலை பற்றி செய்தி இல்லை!
பேஷ்! பேஷ்!!
-#-











இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com










Wednesday, September 5, 2018

பேஷ்! பேஷ்! [7]



பேஷ்! பேஷ்! [7]

சொல்லலாகுமோ, ஐயா? காலத்தின் கோலத்தை
பொல்லாப்பு வந்தால் என் செய்வது, சொல்லுமய்யா,
சொல்லலாகுமோ, ஐயா? தன் மானத்தை இழக்கலாகுமோ?
மொள்ளலாமோ, ஐயா, ஆலகால நஞ்சுப் பொட்டலத்தை?
பேஷ்! பேஷ்!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com






Tuesday, September 4, 2018

பேஷ்! பேஷ்!! [6]



பேஷ்! பேஷ்!! [6]
இன்னம்பூரான்
செப்டம்பர் 4, 2018

தண்டல்காரன் [போலீஸ்] என்றால்  'தூத்துக்குடி பீதி' என்றாலும், பொதுவாக மக்கள் அவனை தள்ளித்தான் வைக்கிறார்கள். அவர்கள் படும் அவதியும், ஆற்றாமையும் வெளியில் தென்படுவதில்லை. உயர் அதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலை செய்கிறார்கள் என்பதும் உலகமறிந்த விஷயம் தான். ஒரு சமயம் கனம் கோர்ட்டார்கள் ஆணைக்கு உட்பட்டு நிறுத்தி விட்டார்களோ என்பதை யான் அறியேன். அவர்கள் சங்கம் அமைத்து கம்யூனிஸ்ட் வழியில் போராடவும் முடியாது. அவர்களில் ஒருசாராரை அரசு படுத்துவதாக கோர்ட்டாருக்கு தெரிய வந்துள்ளது. நியாயமான தீர்ப்பை வழங்கிவிட்டார்கள்.

வழக்கு:
பாபுலால் மித்தரலால் என்ற டில்லி போலீஸ் கான்ஸ்டபிள் அவர்களுக்கு ஒரு மன அழுத்தம், கவலை, 
அவமானம், பட்ஜெட்டில் உதைக்கிறது, மனைவிக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்று கேட்டால், அவருடைய மாத சம்பளம் 2006க்கு பிறகு வந்த கான்ஸ்டபிள்களை விட ரூ.1900 குறைவு. அரசு பணியில் உள்ளவர்களுக்கு தனியாக அமைந்துள்ள நீதி மன்றத்தில் தாவா தொடர்ந்து வெற்றி பெற்றார். அவருடைய வக்கீல், தொழிற்சங்கங்கள் இருந்தால், இவ்வாறு பாதிக்கப்பட்ட 4000 நபர்களும் ஒரு வழக்குப்போட்டு நியாயம் பெறலாம். ஆனால், போலீசார் சங்கம் நிறுவ முடியாதே. என்று போட்டு உடைத்தார். சர்வ வல்லமையுடன், அங்கேயும், இங்கேயும் அரசாளும் மத்திய அரசு, கஜானா காலி என்று கையை விரித்து, பாபுலாலுக்கு மட்டும் ஈடு செய்தார்கள். அப்பனே! இது அரசியல் சாஸனத்துக்கு விரோதம் என்று உயர் நீதி மன்றம் டோஸ் கொடுத்தது. தேவையா?
பேஷ்! பேஷ்!! [6]
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com














Saturday, September 1, 2018

பேஷ்! பேஷ்!! [5]

பேஷ்! பேஷ்!! [5]
இன்னம்பூரான்
ஸெப்டம்பர் 2, 2018-09-02

சுப்பராயநாதனும், சையது ஒமரும், ஹாசனும் கூட்டுக்களவாணி பயசங்க. ஒத்தன் ஜட்காவண்டி ஓட்ரவன். ஒத்தன் மினி ஜவுளி வியாபாரி. கடசி பொடிப்பய வெட்டிப்பய. மே 17 தேதி அன்று முதல் ஆசாமியின் ஜட்காவில் 6 வீசை 31/2 பலம் கஞ்சா கடத்திப்போவதை மோப்பம் பிடிச்சு, பிடிச்சுப்பிட்டாங்க. மாஜிஸ்ட்ரேட் எசமானும் அவங்களுக்கு அவராதம் போட்டாரு. கட்டாட்டா காராகிருகம் அப்டின்னு கறாரா சொல்லிட்டாரு. கசக்குதா என்ன? காசைக்கட்டிப்பிட்டு, காட்டுக்குப்போய் கஞ்சா பறிச்சு அடுத்த ராஸ்தாலெ போய் கஞ்சாவை காசாக்கினாங்க.

சத்யா ராவும், சீநியும் ஜனவரி 8 2013 அன்று கெளரிப்பட்டினம் கிட்ட போலீஸ்லெ 

மாட்டிக்கிட்டாங்க. ஒரு காரில் 475 கிலோ கஞ்சாவை படேரு கிராமத்திலிருந்து 

விசாகப்பட்டினத்துக்குக் கடத்திட்டு போறாங்க. அப்பத்தான் மாட்டிக்கிட்டாங்க. இது 

எத்தானாவாது தடவையோ? வந்த கோபத்தில் ஜட்ஜ் ஐயா 14 வருஷம் ஜெயில் என்று சொல்லிப்போட்டார்.

மகாஜனங்களே! என்ன முன்னேற்றம் பாருங்க. ஆறு வீசையை நாதனோட ஜட்காவில் கடத்தியது 

மே 17, 1918. 475 கிலோவை காரில் கடத்தியது ஜனவரி 8,2013.

கிட்டத்தட்ட 95 வருடங்களில் என்னே முன்னேற்றம், லாகிரி வியாபாரத்தில்!

பேஷ்! பேஷ்!!


Monday, August 27, 2018

பேஷ்! பேஷ்! [4]


பேஷ்! பேஷ்! [4]
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 26, 2018
காவேரியும் கொள்ளிடமும் கரை புரண்டு பாய்ந்தோடுகிறமாதிரி தான் ஏழையின் காசு செல்வந்தனின் திரவியமாக நமது சோஷலிஸ்ட் குடியரசில் பாய்ந்தோடுகிறது, நாட்தோறும் பலவருடங்களாக. முப்பது வருடங்களுக்குள் இந்தியாவின் படா கோடீஸ்வரர்கள் (பில்லினையர்ஸ்) இரண்டு நபர்களிலிருந்து 120 நபர்களாக அதிகரித்துள்ளனர்(ஜேம்ஸ் க்ரேப்ட்ரீ).இந்த நதி கீழிருந்து மேலே பாயும். அதற்கு முந்திய முப்பது வருடங்களில் இத்தனை மோசமில்லை. அதாவது, பொது ஜனங்களாகிய நாம் வருமான வரி கட்டுகிறோம்; ஜிஎஸ்டி கட்டுகிறோம்; செல்வந்தர் வரி கட்டுகிறோம்; லஞ்ச வரி கட்டுகிறோம்.

ஒரு செய்தி: ‘இனி யாமார்க்கும் குடியல்லோம்.’ என்று சபதமிடுவது போல் ‘இனி அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு கமிஷன் தரப்போவதில்லை’ என்று பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் மதுரையில் கூடி முடிவு எடுத்துள்ளனர். கசிந்த கமிஷன் ரேட் பட்டியல்: தி.மு.க.ஆட்சியில் 3% கொடுத்தோம்; ஜெ. ஆட்சியில் அது 5 ஆனது. தற்பொழுது உள்ளூர் அமைச்சருக்கு 9%, எம்.எல்.ஏவுக்கு 5%ம், மாவட்ட செயலருக்கு 5%ம் கொடுக்கவேண்டியிருக்கிறது என்ற காண்டிராக் மகாஜனங்கள் ஜி.எஸ்.டி 12% கட்ட வேண்டியிருக்கிறது என்றும் அங்கலாய்த்தார்கள். அவர்களின் சங்கத்தலைவர் திரு. சுதர்ஷன் அவர்கள் பராமரிப்புப்பணி லஞ்சம் 35% என்றும், புதிய கட்டுமானப்பணி லஞ்சம் என்றும் கூறி இருக்கிறார். மேல்நோக்கி பாயும் இந்த கமிஷன் வெள்ளம், ஏழையை பரம ஏழையாக்கி, சீமானுக்கு அளப்பதற்கரிய செல்வத்தை வாரி வழங்கி…!

ஆமாம். லஞ்சம் கொடுப்பதும் தப்பாச்சே! அப்போ இவங்களை ஜெயிலில் போட்டு விட்டால், கண்மாய் தூர்ப்பரது ஆரு?, ரோடு போட்றது ஆரு. இது ஒரு துளி நஞ்சு; பத்திரப்பதிவு செய்யப்போனால், வீட்டைக்காணோம்💣 காரோட்ட லைசன்ஸ் வாங்கப்போனால் காரைக்காணோம்.🔕

கமிஷனுக்கு லகான் போட்டதால், லஞ்சத்துக்கு அழறப்பணத்தை கட்டுமானத்தில் போட்டு, லாபம் ஈட்டலாம். சட்டரீதியான வரியை கட்டலாம். நாடு கடைத்தேறும். மக்கள் செழிப்புடன் வாழ்வார்கள், ஓட்டுக்குத் துட்டு வாங்காவிட்டால். ( படித்தது: தினமலர்:ஆகஸ்ட் 23, 2018 +).
-#-
வால்:
ராஜாஜி பொதுப்பணித்துறையை தனது ஒண்ணாம் நம்பர் விரோதி என்று அசெம்பிளியில் கூறினார். ஹூம்! போய்ச்சேர்ந்த்தார் மஹானுபாவன்

பிரசுரம்: வல்லமை:http://www.vallamai.com/?p=87227#respond













இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, August 25, 2018


பேஷ்! பேஷ்! சீரீஸ் [3]
இன்னம்பூரான்
ஆகஸ்ட் 24, 2018

ஆங்கிலத்தில் அதிகப்படியாக ஒரு மைல் நடக்கவும் என்பார்கள். அதாவது உம்மிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடமையையும், அனுமார் கடலை தாண்டின மாதிரி, தாண்டி செயல்பட்டால் தான் மேன்மை என்பார்கள். என்னுடைய அனுபவத்தில் இந்த நல்வரவை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அரசு உத்யோகம் என்று மட்டுமில்லை. யாவருக்கும் - தோட்டியிலிருந்து தொண்டைமான்- வரைக்கும் இது பொருந்தும். 

‘செல்வகளஞ்சியமாக’ அங்கங்கே காப்பரேட் ஆஸ்பத்திரிகள் மடியில் கை போடும் இன்றைய சூழ்நிலையில், சென்னை பொது ஆஸ்பத்திரியில் (ராஜீவ் காந்தி நாமகரணம் பிற்காலத்தில். 400 வருடங்களுக்கு மேலாக பணி புரியும் தர்மாஸ்பத்திரிக்கு) அவசர மருத்துவ துறை 24x7 பரபரப்பாக இருக்கும்; எங்கு பார்த்தாலும் ரத்தம், ஓலம், ஒரு மாதிரியான அக்கறையின்மை, கீழ்த்தட்டு மக்களிடம் கீழ்த்தட்டு மக்கள் பணம் பிடுங்குவது, சாவு, சாவு கிராக்கி வகையறா.

கடந்த ஏழு மாதங்களுக்குள் மெச்சத்தக்க முன்னேற்றங்கள். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தேவையான தகவல் வருமுன் கொடுத்து விடுவதால், ஒரு டீம் தயார் நிலையில் வரவேற்று உரிய அவசர சிகிச்சை அளிக்கின்றனர். கத்திக்குத்துப்பட்டவரும், இதயக்கோளாறு நோயாளியும், சைக்கிளிலிருந்து விழுந்து லேசாக சிராய்த்துக்கொண்டவருக்கும் வரிசைப்படி ஒரே டீம் கவனிப்பு. அதற்குள் ஒருவர் செத்தால், அது அவர் தலைவிதி. அந்தக்காலம் போச்சு. அதி அவசரம்: சிவப்பு/அவசரம்: பச்சை/ அவசரமில்லை: பச்சை என்று மூன்று பிரிவுகள் தேவைக்கு ஏற்ப, செயல்படுகிறார்கள். நாட்தோறும் சரசரி 220 நபர்கள் வருகிறார்கள். ஏழுமாதங்களில், இறப்பவர்களின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்து விட்டது. சிகிச்சை நபர் வந்த 2/3 நிமிடங்களில் துவங்கி விடுகிறது. அவசர சிகிச்சைக்கு வேண்டிய மருத்துவ சாதனங்கள் கைக்கெட்டிய தூரத்தில் பொருத்தப்பட்டிருப்பதால், உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த புதிய ஏற்பாடு மிகவும் போற்றப்படுவதால், இதை முன்மாதிரியாக வைத்து, பரவலாக, மாநிலம் முழுதும் செயல் படுத்த ஒரு திட்டம் இருக்கிறதாம். வாழ்க: சென்னை பொது ஆஸ்பத்திரி.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, August 22, 2018

பேஷ்! பேஷ்! சீரீஸ் [2]

பேஷ்! பேஷ்! சீரீஸ் [2]


இன்னம்பூரான்


‘கலியிலே எலியும் புலியாகும்.’ என்ற கிலி நிஜமாயிடுத்தாம். காந்திமண்டபத்திற்கு எதிரில் இருக்கும் அண்ணாவின் பெயரை கெடுக்கவதற்கே இயங்கிவரும் பல்கலையில் ஒரு பரிக்ஷை நடந்தது. பெரிய வீட்டுப்பிள்ளையோ, ரவுடி வீட்டுத்தத்தாரியோ, ஒரு பையன் வாங்கிய மார்க் 24. அவனை கீர்த்தியுடன் கெலித்ததாகக்காட்டுகிறேன் என்று கை நீட்டி கையூட்டு வாங்கிய பரீக்ஷாதிகாரி அவர்களுக்கு தன் மதீப்பீடு கறார் என்ற அகந்தை உண்டு. மேலும்,அந்த விடைதாள் மறு பரீசீலனைக்கு உட்பட்டால், குட்டு வெளிப்படலாம் என்ற அச்சமும் உண்டு. பார்த்தார். பேனாக்கூட்டீல் தேடித்தேடி, அதே நிறத்தில் எழுதும் எழுதுகோலை எடுத்தார். கட கட என்று நீலகிரி எக்ஸ்பெரஸ் போல சரியான விடைகளை, மாடல் ஆன்ஸர்புக்கிலிருந்து எடுத்து எழுதினார். 14ஐ மனசாட்சியின் உதவியுடன் 94 ஆக்கினார். நல்ல வேளை. இவன் மெக்கானிகல் எஞ்சினியரிங் மாணவன். அதிகப்படியாகப்போனால், அவனால் மாவு மிஷினை ரிப்பேர் செய்யமுடியாது. அவனே மருத்துவ மாணவனாக இருந்திருந்தால் எத்தனை கொலை செய்வானோ! ‘அறிவியலார்’ நம்பாத நரியை பரியாக்கின கதையை விட அதிசயமாக இல்லை, இந்த மாதிரியான வாத்தித் தொழில்💣
*
பின் குறிப்பு: விசாரணை நடந்ததாம். மேலா உத்தரவின் பேரில் மனசாட்சியை அடகு வைத்தாராம். மேலா பெயரை பகர்ந்தாராம். ஏன் அதை ஊடகங்கள் மறைக்கின்றன. அவர் சத்திய பிரமாணம் செய்து தன்னைலை விளக்கம் தாக்கல் செய்யவேண்டும். அது நிரூபிக்கப்பட்டால், மேலா ஜெயிலுக்கு போகவேண்டும். இல்லையெனில், இவர் ஜெயிலுக்குப் போக வேண்டும். இதை எல்லாம் சொல்ல ஊடகங்கள் ஏன் லஜ்ஜை படுகின்றன? அடுத்து வருவது நல்ல மகிழ்ச்சி தரும் சமாச்சாரம்
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


வல்லமை பிரசுரம்

Tuesday, August 21, 2018

பேஷ்! பேஷ்! சீரீஸ்

பேஷ்! பேஷ்! சீரீஸ்


  • Monday, August 20, 2018, 5:04

சுருங்கச்சொல்வது நாகரீகமாகி விட்டது. ஒரு பக்கக்கதை, ஒரு வரி தத்துவம், படம் போட்டு ஃபிலிம் காட்டுவது, கேலிச்சித்திரம் வரைந்து மூக்கொடைப்பது எல்லாம் தற்கால வைர, முத்து, பவள ரத்னங்கள். ‘பேஷ்! பேஷ்!’ சீரீஸ் நாட்டுநடப்பு, நடவாத உடைப்பு, நடை, உடை, பாவனைகளில் புதைந்து இருக்கும் அவல நிலை, கோக்கு மாக்கு, செரிமான போக்கு, ‘கர்மம்’ என்று தலையில் அடித்திக்கொள்ளவேண்டிய மர்மம், ‘நாயை கடித்த மனிதன்’ போன்ற விந்தை செய்திகள் வகையறாவை, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக ‘பளிச்’ என்று பதிவு செய்யும். வாசகர்கள் இதை தந்தி போல் பாவித்து சிந்தனைப்பகிர்வு செய்து கொண்டால், துரித கதியில் கடுமா ( துரகம். சரி, குதிரை)
போல் நானும் ஓடலாம். இல்லையெனில் திருமால் போல படுத்துக்கிடக்கலாம்.
இன்னம்பூரான்
18 08 2018
பேஷ்! பேஷ்! [1]
மதுரை நகராட்சி மன்றம் வருடாவருடம் தந்தி அனுப்பிய செலவுகளை பதிவு செய்து இருக்கிறது.
2015-16 – ரூ.4,44,685/-
2016-17 – ரூ.1.74,132/-
பெரிசா சொல்றதுக்கு ஒன்றும் இல்லை.ஆனால், சார், தந்தி சேவையை தபால் துறை நிறுத்தியது ஜூலை,15, 2013 அன்று.
பேஷ்! பேஷ்!
இன்னம்பூரான்
18 08 2018
பிரசுரம்: வல்லமை:http://www.vallamai.com/?p=87064#respond