Showing posts with label . இன்னம்பூரான். Show all posts
Showing posts with label . இன்னம்பூரான். Show all posts

Monday, April 6, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1
இன்னம்பூரான்

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’   [அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] 
என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை 

முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ 

ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

(தொடரும்)

Fine beginning. 
Dr. Du Bois said he had concluded that "
"capitalism cannot reform itself; it is doomed to self-destruction."
"No universal selfishness can bring social good to all," he said. "Communism -- the effort to give all men what they need and to ask of each the best they can contribute -- this is the only way of human life.
"These aims are not crimes. They are practiced increasingly over the world. No nation can call itself free which does not allow its citizens to work for these ends"
=================================
How can we be un-biased when we see a 100 crore mansion and Dharaavi slum , side by side? 
Where is the data-analytic for virus affected and mortality in affluent NewYork and its Harlem?


Dear Mr.RS,
You have posted something unconnected with the blog. This is not a propaganda blog for you. Please reserve opinions for your blog. I did not delete this comment out of respect you. Not in the next time.
Innamburan

Friday, March 27, 2020

சுவரொட்டி 6 பழங்கதை 3

சுவரொட்டி 6
பழங்கதை 3
இன்னம்பூரான்
26 03 2020
இது ஆயிரங்காலத்துப்பயிர். நம்மில் அனேகர் நாட்தோறும் தியானஸ்லோகங்களை பக்தியுடன் பாராயணம் செய்வது போல, இந்த தகவலை நாம் இன்னும் ஆயிரம் வருடமாவது நாட்தோறும் தேசபக்தி பாராயணம் செய்வது சாலவும் தகும்.
நூறு வருடங்களுக்கு முன்னால் இதே தினம் அண்ணல் காந்தி அனுப்பிய சுற்றறிக்கை கூறுவது: ஏப்ரல் மாதம் 6 முதல் 13 தேதி வரை சத்யாக்ரஹ வாரம்  அனுஷ்டிக்க போவதாக சொன்ன என்னுடைய கருத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த வாரத்தில் குறைந்தது பத்து லக்ஷம் ரூபாய் தானம் பெறுவது கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன். யோக்கியதையும் நற்பண்பும் நிறைந்த தன்னார்வலர்கள் கிடைத்தால் ரசீது விவகாரம் இருக்காது; எல்லாரிடமிருந்து வசூலிக்கலாம். செல்வந்தர்கள் தங்கள் தங்கள் கூட்டங்களிலிருந்து எளிதில் வசூலிக்கமுடியும். அதை எல்லாம் விட முக்கியம் நாம் எப்படி அந்த வாரத்தை கொண்டாடப்போகிறோம் என்பதே. அது பற்றிய எனது அணுகுமுறையையோ அல்லது 13ம்தேதி நடந்த படுகொலையின் ஞாபகார்த்தமோ  சர்ச்சைக்கு உட்படாது என்று நம்புகிறேன். படுகொலையுண்ட மக்களின் ஞாபகார்த்தம், அந்த அட்டூழியத்தை (ஜாலியன்வாலாபாக் படுகொலை) விட முக்கியமான விஷயம். இந்த சத்தியாக்ரஹத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அதற்காக வசூல் செய்வதில் சுணங்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். இது சாராம்சம்.

இந்த சுற்றறிக்கை ஆயிரம் கோடி சூரிய சந்திர நக்ஷத்திர பிரபஞ்சத்தை விட பல்லாயிரம் கோடி வலிமை பெற்றது எனலாம். சென்னையிலும், இந்தியா முழுதும் சத்தியாக்ரஹ தினம் எப்படி கொண்டாடப்பட்டது என்று ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். தருணம் கிட்டும்போது மீள்பதிவு செய்கிறேன். இப்போது சொல்வது என்னவென்றால், இந்த சுற்றறிக்கை ஆங்கிலேய கலோனிய அரசை குழி தூண்டி புதைத்தது. இந்தியர்களிடம் ஒரு ஒருமைப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் ஒரு யாகத்தின் ஹோமாக்னி போல வளர்த்தது. அடிக்கடி, அதாவது குறைந்தது நாட்தோறுமாவது நாம் இந்த சுற்றறிக்கையை படித்து மனம் தெளிவு கொள்ளவேண்டும்.
-#-

நன்றி: ஹிந்து இதழ்.


I’m not that much of a online reader to be honest but your blogs
really nice, keep it up! I'll go ahead and bookmark
your site to come back down the road. Cheers
Reply
Thank You.

  • Fine way of telling, and pleasant post to take facts on the topic of my presentation focus, which i am going to deliver in school.


    I’m not that much of a online reader to be honest but your blogs
    really nice, keep it up! I'll go ahead and bookmark
    your site to come back down the road. Cheers
    Reply
  • Fine way of telling, and pleasant post to take facts on the topic of my presentation focus, which i am going to deliver in school.
    Reply
  • It's really a nice and useful piece of info. I am satisfied that you just shared this helpful info with us.
    Please keep us informed like this. Thanks for sharing.
    Reply
  • This web site definitely has all of the info I wanted about this subject and didn't
    know who to ask.
    Reply
  • I am very happy , my friends. I shall write what your students want. Please mail me. I thank you all for the encouragement. Hereafter my positing will be either podcasts or videos. At age 87, I find it difficult to type texts.

    Innamburan

    Tuesday, January 14, 2020

    பெருங்களத்தூர் நோட்ஸ் 2

    பெருங்களத்தூர் நோட்ஸ் 2
    இன்னம்பூரான்

    கருத்துக்களுக்கு நன்றி. பதிலும் அளித்துள்ளேன்.

    கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன் இங்கு உள்ளே நுழைய முடியவில்லை, பிரதான ராஸ்தாவிலிருந்து. அத்தனை காடு. அத்வானம். அடிச்சுப்போட்டா கேட்க நாதியில்லை. அந்த காலத்திலேயே, எழும்பூர் பக்கத்து வாராவதியில் அமர்ந்திருந்த சித்தர் ஒருவரின் பெயர் சதானந்த சுவாமிகள். பூர்வாசிரமத்தில் போலீஸ் கான்ஸ்டபளாக இருந்தவர் என்று கேள்வி. அவர் இங்கு வந்து
    ஒரு ஆசிரமம் அமைத்தார். அது பிரபலமாயிற்று. சில நாட்கள் முன்னால், ஒரு பிராது. அங்கு சிறார்கள் துன்புறுத்த படுகிறார்கள் என்று.  மகளிர் போலீஸ் விரைந்து வந்து அர்த்த ராத்திரியில் ஆய்வு செய்து, பிராது உண்மை என்று அறிந்து, சிறார்களை அழைத்து சென்று காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.  அதற்கு பின் நடந்த கதை தான் வினோதம். பிராது கொடுத்தவரை, ஆசிரமத்து பெண்மணிகள் பிடித்து, முடியை இழுத்து படாது படுத்தி விட்டதாக செய்தி. இந்தியாவில், அத்தகைய அடாவடி ஆசிரமங்கள் இருப்பதாக அறிகிறோம். பூலோக கைலாசபதி நித்யானந்தாவை பற்றி பல சர்ச்சைகள் வந்த வண்ணம் உளன. பீடி சாமியார், சாராயப்ரீதி சாமியார் என்றெல்லாம் பலர் தென்னகத்தே கொடி கட்டி பறக்கின்றனர். 

    Saturday, November 30, 2019

    தத்துவ விசாரணை - 1 -4



    தத்துவ விசாரணை - 1

    அன்றாட வாழ்க்கையில் தத்துவம் அங்கம் வகிக்கவில்லை என்று தான் பெரும்பாலாகக் கருதப்படுகிறது. எனினும் அது, நமது செய்கைகளில் அன்றாடம் பிரதிபலிக்கிறது. சான்றாக, விட்டுக்கொடுக்கும் தாராள மனப்பான்மையில் நாம் தத்துவத்தின் துகள்களை காண்கிறோம். ஒரு படி மேலே போனால், ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடுவதில்’ ஒரு தத்துவ விசாரணை நிழலாடுவதை, உன்னிப்பாகக் கவனித்தால், காண இயலும். பழமொழிகளிலும், குறள்களிலும், சூத்திரங்களிலும், செய்யுள்களிலும், தத்துவம் பேசப்படுகிறது. இந்த தொடரின் பின்னணி எளிது. நான் அன்றாடம் சிந்தனை செய்வதையும், தத்துவ விசாரணையை, முடிந்த வரை, திறந்தமனதுடன் செய்ய விழைகிறேன். பாடங்களை பகிர்ந்து கொள்கிறேன். இங்கு மொழிப்பிரச்னை கிடையாது. எம்மொழியும் சம்மதம். இலக்கு: இயன்ற வரை புரிந்து கொள்ள முயல்வதும், திரும்ப, திரும்ப, விசாரணையை முன்னும், பின்னும் புரிந்து கொள்ளும் வரை, தொடர்வது.
    இன்னம்பூரான்
    *
    I came across ‘LAO TZU: TAO TEACHING: WATKINS: 2002,2016’ today. Last night, a friend and I read Socrates together. Another book discussed ‘The Concept of Man’ under different religious traditions. 
    தத்துவ விசாரணைக்கு எல்லை இல்லை. விரைவு பாதையும் கல்லும், முள்ளும் நிறைந்தது. முதற்கண்ணாக, LAO TZU எடுத்துக்கொள்வோம்.

    TAO என்ற சொல், தமிழாக்கத்தில், கிடைக்கவில்லை. அது ஒரு பாதையை, ராஜபாட்டையை, ஒரு ராஸ்தாவை, ஒரு வழிமுறையை, ஒரு செயல்முறையை, ஒரு குறிக்கோளை குறிப்பிடுகிறது எனலாம். எப்படி சொன்னாலும் ‘தாவோ’ (tao) எளிதில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இயங்காது . இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகள்களையும் படைத்து, பராமரிப்பது தான்
    இந்த தாவோ. அதை விசாரணை செய்தவர்கள் பலர். ஒரு முக்கியமான கருத்து, இங்கே:

    There was something undefined and complete, coming into existence before Heaven and Earth... (Chapter 25, James Legge.)

    pastedGraphic.png

    The Chinese word for Tao is made of two characters: head and foot (meaning walking). The ideas suggested are "conscious walking" or the way of ruling of the ancient sovereigns.

    உருவம் இல்லாத தாவோவை காண இயலாது. இத்தனைக்கும் அது எதையும் விட்டு வைக்க வில்லை. தாவோ ஒரு spirit. அது சீடர்களுக்கு ஒரு முன்னோடியாக விளங்குகிறது. (s wu-wei (nondoing) and wu (emptiness). அது மட்டுமல்ல; வில்லாளி, பாடகன், ஓவியன், ஏன் கசாப்புக்கடைக்காரன் போன்ற திறனாளிகளும் இதனுள் அடங்குவர். மேற்படி தத்துவத்தை கன்ஃபூஷியஸின் அலசலிலும் காணலாம். அவ்விடம் அது பழங்காலத்து மன்னர்களின் நன்னடத்தையையும், மனிதநேயத்தையும் குறிக்கிறது.
    இந்த பின்னணியில் முதல் பாடத்தை காண்போம். விசாரணை பின்னர்.

    1
    TRANSCENDING
    The Tao that can be told
    is not the Universal Tao.
    The name that can be named
    is not the universal one

    (தொடரும்)

    தத்துவ விசாரணை - 2
    01 12 2019
    ‘தாவோ’ என்ற ஒற்றையடி பாதையை என்ன தான் விளக்க முயன்றாலும், அதன் உலகளாவிய தன்மை சொல்லில் அடங்காது. ‘தாவோ’ என்று முத்திரை பதித்தாலும், அதனுள் உலகளாவிய தன்மை முத்திரையை கடந்து பயணிக்கும்.
    (தொடரும்)
    2
    In the infancy of the universe,
    there were no names.
    Naming fragments of the mysteries of life
    into ten thousand things and their manifestations.

    பிரபஞ்சத்தின் குழந்தைப்பருவத்தில்,
    வாழ்வினுள் ஒளிந்து கிடக்கும் மர்மங்களை,
    பல்லாயிர விஷயங்களாகவும், அவற்றின் பரிமாணங்களையும்
    பெயரிட்டு அழைப்பது இல்லை, ஐயா.
    (தொடரும்) 
    3
    Yet mysteries and fascinations
    spring from the same source:
    The Great Integrity
    which is the mystery within manifestation,
    the manifestation within the mystery,
    the naming of the unnamed,
    and the un-naming of the named.

    நாணயம் என்ற சொல் ஒன்று உண்டு. சற்றே தள்ளி நின்று பார்த்தால் சிறிதளவு
    விளங்கும். அண்ணல் காந்தி வாய்மையே இறையாண்மை என்றார். நாணயமும், வாய்மையும் வேறு வேறு அல்ல எனலாம்.

     அந்த நாணயம்/வாய்மை/ நீதி வழுவாமை தான் மர்மங்களுக்கும், பலவிதமான
    நப்பாசைகளுக்கும் ஊற்றுக்கண். மர்மம் நப்பாசைக்குள் உறைவது போல, நப்பாசைகளும், மர்மங்களின் ஆழத்தில் அமர்ந்து இருக்கும், என்கிறது ‘தாவோ’. பெயரில்லாவற்றுக்கு பெயர் வைப்பதும், பெயர் இருந்த இடத்திலிருந்து அதை பெயர்த்து..  என்கிறது ‘தாவோ’. புரியவில்லை என்றாலும், தாமதித்துப் பார்ப்போம்.
    (தொடரும்)
    4
    The Great Integrity is an endless abyss
    Yet it is the inexhaustibly fertile
    source of the Universe.

    It blunts all sharpness,
    unties the entangled
    and merges with the dust.

    Hidden but ever present-
    this parent of the gods-
    Whose child it may be?

    பெயரில் என்ன இருக்கிறது. கண்ணியம் என்பர் சிலர்;
    நாணயம் என்மனார் பலர்; நேர்மை என்பது அதன் அடித்தளம்.
    ஆங்கிலத்தில் INTEGRITY. அது ஒரு ஆழங்காணாத குகை.அதுவே இந்த
    பிரபஞ்சத்தின் வளம் பொருந்திய ஊற்று.

    அது கூர்மையை மங்கச் செய்யும்; சிக்கல்களை அவிழ்க்கும்; தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும்.

    மறைந்திருந்தாலும், எங்கும் நிறைந்து இருக்கும் இது தெய்வங்களின் தாய் அல்லவோ?
    ஆம். இது தான் யாருடைய சிசு?

    [பொழிப்புரை] அண்மையில் வானவியல் நிபுணர்கள் பல்லாயிருக்கணக்கான கதிரவன்கள் ஒளி வீசுவதை பற்றியும், பிரபஞ்சத்தில் கடுகௌ அளவு கூட இல்லா த இந்த பூவுலகம் போல் கணக்கற்றவை இருப்பதாகவும் சொல்கிறார்கள். இத்தனைக்கும் சந்திரனை தொடுவதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது. அந்த பிரும்மாண்ட பிரபஞ்சத்தின் தூண்/ அடிப்பாரம்/நங்கூரம், அதாவது உடும்புப்பிடிப்பு கண்ணியம் என்ற உன்னதமான பண்பு தான். அது தான் அமர தாரா; அமுத சுரபி; அக்ஷயபாத்திரம்; வற்றா நதி. அதன் திறன் தான் என்னே! குத்தும் கத்தியை/ கடுஞ்சொல்லை/ வக்கிர கதியை/ வன்முறையை மங்க செய்துவிடும்; மனித இனத்தின், ஏன்?, ஜீவராசிகளின் சிக்கல்களை அவிழ்த்து விடும். அந்த தெய்வீகத்தொண்டில் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும். எங்கும் நிறைந்து இருக்கும் இந்த கண்ணியம்/நாணயம்/நேர்மை, நம் கண்களுக்கு தென்படாமலும் இயங்கும். தெய்வங்களின் தாய் போன்ற அதனை ஈன்றெடுத்தது ஆர் என்று யாம் அறியோம் என்க.

    (தொடரும்)
    01 01 2020
    இன்னம்பூரான்.
     இந்த தொடர் இனி வியாழன் தோறும் பதிவு செய்யப்படும்.
    -x-












    Tremendous issues here. I am very glad to peer your post.
    Thanks a lot and I am having a look forward to contact you.
    Will you please drop me a mail?
    ~ Thank You, My friend. You are welcome. I do not know your ID, as you have posted as Anonymous. Mine is here. You may write to me giving reference to this.
    Innamburan

    16 comments:


    1. Tuy nhiên nó vẫn có hiệu quả cho những loại da khác.
      Reply 
      English or Tamil Please.
    2. Tremendous issues here. I am very glad to peer your post.
      Thanks a lot and I am having a look forward to contact you.
      Will you please drop me a mail?
      Reply
    3. What's Taking place i am new to this, I stumbled upon this I have discovered It absolutely useful and it has
      aided me out loads. I am hoping to give a contribution & assist other users like its aided me.
      Good job.
      Reply 
      Welcome. Thank You. I Your contributions welcome.
    4. Thank you for the good writeup. It in reality was once a leisure account it.
      Look advanced to more delivered agreeable from you! By the way, how could we communicate?
      Reply 
      Welcome. Thank You. I You are welcome to mail me.
    5. Hello i am kavin, its my first time to commenting
      anywhere, when i read this piece of writing i thought i could also create comment
      due to this sensible paragraph.
      Reply 
      Welcome. Thank You. I
    6. Cách này có tác dụng rất tốt đối với da bị cháy
      nắng.
      Reply 
      English or Tamil Please.
    7. Cùng nhau tìm hiểu cách làm trắng da bằng nghệ nhé.
      Reply
      English or Tamil Please.
    8. Nhờ đó mà da bạn sẽ được cung cấp một độ ẩm hoàn hảo.
      Reply 
      English or Tamil Please.
    9. I visited several websites however the audio feature for audio songs existing at this website is truly superb.
      Reply 
      Welcome. Thank You. I
    10. Làm sạch da xong thì dùng mặt nạ này đắp lên mặt.
      Reply 
      English or Tamil Please.
    11. I was recommended this website by my cousin. I am not sure whether this post is written by
      him as nobody else know such detailed about my difficulty.

      You are amazing! Thanks!
      Reply Welcome. Thank You. I
    12. I’m not that much of a internet reader to be
      honest but your sites really nice, keep it up! I'll go ahead and bookmark your site to come back down the road.
      Cheers
      Reply 
      Welcome. Thank You. I
    13. Useful info. Lucky me I discovered your web site by chance, and I'm
      shocked why this coincidence didn't happened in advance!

      I bookmarked it.
      Reply 
      Welcome. Thank You. I
    14. Kích thích quá trình tái cấu trúc và lành da.
      Reply English or Tamil Please.
    15. I useɗ to be really upsеt and i needed help, ѕߋ i looked
      for help online and I got here acrosѕ an іnternet site that recommended
      that LⲞRD JUMA will help get ex bаck fast.
      Reply 
      Welcome. Thank You. I
    16. Hey there! I just wish to offer you a huge thumbs up for the excellent information you
      have here on this post. I am coming back to your
      site for more soon.
      Reply Welcome. Thank You. I