Thursday, April 4, 2013

நூறு வருஷங்களுக்கு முன்னால் - 2



Tuesday, July 14, 2009
நூறு வருஷங்களுக்கு முன்னால் - 2



கமலம் சொல்றா, உணர்ச்சிவசப்படாதங்கோன்னு. சரியாத்தான் பட்றது. ஆனா, ஒரு சின்ன விஷயம்னாக்கூட உள்வாங்க்கிம்ம, ரசிக்கமுடியுமா? ரசிக்கத்றுன்னா, ‘பேல! பேல! ேபஷ்!’ ன்னு தோடி ஆலாபைனையயோ, குழந்ைத அழகா அைரமண்டிபோட்டு நாட்டியமாடறைதயோ சிலாகிக்கறது மட்டுமில்ைல, ஸ்வாமி. அதிெல ரொம்ப நுட்பம் இருக்குங்காணும்! நவரஸமும் அனுபவிக்க கத்துண்டாத் தான், அதுெல ஒரு பூர்ணம், ஒரு முழுைமயா இருக்குமாம். தினோம் மூணாம் பிைற பாத்திண்ட்ருக்கமுடியுமோ? ெபளர்ணமியும். அமாவைசயும் வந்து வந்து போகலயா? ஏன்! இப்பல்லாம் மத்ராஸ்ேல ஸூர்யன் எப்போ அஸ்தமனம் ஆவான்னு காத்திண்டிருக்குேம. அப்படி பொசுக்கறது. இைத விடுங்கோ. நவரஸங்களுக்குள்ேள ஆயிரம் ரசைன இருக்குங்கறார், அது தான் ெவள்ைளக்காரான் சொல்றர ஏஸ்ெதடிக்ஸ் (aesthetics) டி.ேக.சி. சிதம்பரநாத முதலியார். ராஜாஜீக்கு ரொம்ப அன்யோன்யமாம், அவர்.
விஷயத்துக்கு வருவோம். அந்தக்காலத்திெல, ைமலாப்பூர் எப்படி இருக்கும்னு நிைனக்கிேறள். இப்போ குளத்ைத சுத்தி இப்படி ெநரிசலா இருக்ேக, அப்பல்லாம் வீெடல்லாம் கப்பல் மாதிரி ெபரிசு. கோச் வண்டி, குதிைர, பசுமாடு இெதல்லாம் எல்லாெரத்துேலயும். இவ்வாள்ளாம், ஐயங்காரோ, ஐயரோ பிரபலமான வக்கீலா இருப்பா. ஹால் கல்யாண மண்டபம் மாதிரி இருக்கும். ‘ேஜ ேஜன்னு கட்சிக்காராக் கூட்டம். ஜமீந்தாைரக்கூட குமாஸ்தா டபாய்ப்பான்.ரகஸ்யமா துட்டும் பாத்துடுவான், மாமா ஸ்னானம் பண்ராரா, பூைஜ பண்றாரான்னுக்கூட சொல்லமாட்டான். திடீர்ன்னு வருவார்; கச்ேசரிக்கு போய்விடுவார். சாயரைக்ஷல்ேல பாக்கலாம்னு நிைனக்காதங்காணும். அவா க்ளப்புக்கு
page9image10712 page9image10872 page9image11032 page9image11192

page9image12040
போய்டுவா. அதுவும் கச்ேசரி தான்ன்னு சொல்வான், அந்த நக்ஷத்ரயன், கோபாைலயர். எல்லாம் உண்டுன்னு சொல்லிட்டு, ‘ஓஹோன்னு சிரிப்பான். ேபருக்கு தான் அவன் குமாஸ்தா. சப்ஜாடா அவனுக்கு மனப்பாடம். சொல்லிப்பா. அவன் தான் ஸாருக்கு லா பாயிண்ட் எடுத்து தருவான்னு. மாமா பெனண்டு மணிக்கு தள்ளாடிண்டு வரச்ேச, யாரும் இருக்கப்டாது. மாமீ தான் ைகத்தாங்கலா, ெசல்லமா வசுண்ேட உள்ேள கூட்டிண்டுப்போவா.
மாமாைவ விடுங்கோ. மாமி காலாம்பற கோயிலுக்கு கிளம்பர ஆரவாரம் இருக்ேக? முதல்ேல, மாமாவுக்கு எல்லாம் மாமி தான் எடுத்துைவக்கணும். இல்ேலன்னா, ஆகாத்தியம் பண்ணிடுவார். அப்பறம். சைமயலுக்கு ஆர்டர் பறக்கும். ேநத்திக்கு ரஸத்திேல உப்பு தூக்கல், ைமசூர்பாகு பொடியாபோய்டுத்து, அப்படி, இப்படின்னு முதல்ேல ஒரு குற்றப்பத்திரிக்ைக தாக்கல். ெரட்ைட நாடி ேதஹமா. மூச்சு வாங்கும். மாமிக்கு தனி எண்ட்ரன்ஸ்ஸா. வாசல் பக்கெமல்லாம் வரமாட்டா. படி தாண்டா பத்தினியாச்ேச. முத்து, இரட்ைட மாட்டு வண்டியோட, காத்திண்டுருப்பான், ரண்டு எட்டுெல இருக்கிற கபாலீஸ்வரர் கோயிலுக்கு போரத்துக்கு. பண்ற டிேலெயல்லாம் பண்ணிட்டு, ‘சீக்கிரம் போடா, கடங்காரா! தீபாரதைன ஆயிடப்போறதுஅப்படிம்ப்பா. அவனும் தார்க்குச்சிையப்போட்டு, மாட்ைட விரட்டுவான், சிரிச்ெசண்ேட. இன்னும் விஷயத்துக்கு வரல்ேல, பாத்துக்குங்கோ. வயசாயிடுத்து இல்ைலயோ!
(அத்ைத வருவாள்)
பின்குறிப்பு:
எனது ஃபாண்ட் சரியாக ெதரிவதில்ைல என்றார்கள். அதான் அட்டாச்ெமண்ட். இன்னம்பூரான்
[Quoted text hidden]
நூநூறுறு வருருஷங்ங்களுளுக்க்குகு முமுன்ன்னால்ல்.doc 37K
Tthamizth Tthenee  Reply-To: minTamil@googlegroups.com To: minTamil@googlegroups.com
Tue, Jul 14, 2009 at 3:08 PM
page10image11008 page10image11168 page10image11336 page10image11496 page10image11656 page10image11816
ஆஹா ஜமாய்க்கேறள்
ைமலாப்பூர்ெல இருந்து வாசம் பண்ணவாளோட வாசத்ைதெயல்லாம் நன்னா வாசம் பிடிச்சிருக்ேகள் வாசம் எங்ேக வசமாறதுன்னு இப்போ புறிஞ்சு போச்............
அன்புடன் தமிழ்த்ேதனீ
[Quoted text hidden]
N. Kannan  Reply-To: minTamil@googlegroups.com To: minTamil@googlegroups.com
ஜோர்..ஜோர்..பேல..பேல.. கச்ேசரி தூள்! நாவன்னாகானா

*
சித்திரத்திற்கு நன்றி: http://www.appusami.com/HTML/htmlv83/images/rusha5.gif


நூறு வருஷங்களுக்கு முன்னால் : 1




நூறு வருஷங்களுக்கு முன்னால்: 1
23 messages

Innamburan Innamburan Sun, Jun 14, 2009 at 6:33 PM
To: minTamil@googlegroups.com


6/14/2009 10:55 PM IST
நூறு வருஷங்களுக்கு முன்னால் : 1


ஒரு நூறு வருஷங்களுக்கு முன்னாலே போக முடியுமோ? அப்படின்னா இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் போக முடியுமே! ஏன்? யுகராம்பத்துக்கே போகலாம். அப்படி மனசு சஞ்சாரம் பண்ணும்போது, செந்தமிழ், பேசும் தமிழ் என்றெல்லாம் பார்க்கமுடியுமா? உணர்ச்ச்சி ஆறா பெருக்கெடுத்துட்டா, கையா எழுதறது? மனசுன்னா இந்த ‘ப்ளான்ச்செட்’ ன்னு சொல்றாளே, ஆவி சொல்ல சொல்ல எழுதறமாதிரி, கையை ‘மூவ்’ பண்றது. இந்த மனோவேகம் இருக்கே, அது கொஞ்சம் கூட தயா தாக்ஷ்ண்யம் பாக்காது. மடை வெள்ளம் திறந்த மாதிரி, விரட்டும். மத்த வேலயையெல்லாம் திரஸ்காரம் பண்ணிட்டு, உடனே எழுதறான்னு, அழுச்சாட்யம் பண்ணும். நான் இந்த மாதிரி எழுதறது சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதனாலே, ‘விட்டுப்பிடிறா’ன்னு பட்டறிவு குரல் கொடுத்திண்டே இருக்கு. காதுல்லே விழுந்தாத் தானே?  
பத்து நிமிஷம் முன்னாலே பொதிகையிலே ஒரு சின்ன நாடகம். பத்து பதினெஞ்சு நிமிஷம் தான். குலைந்து போய்விட்டேன். இன்னும் கையும் காலும் பதறறது. நடந்த்ததா? கற்பனையா? தெரியல்லை. வரவள்ளாம், அந்த காலத்திலே இருந்தவா. பெரிய மனுஷான்ன்னா அவா தான் பெரிய மனுஷா. வீரேசலிங்கம் பந்துலு, மடிசஞ்சிக்கெல்லாம் அவர் சிம்ம சொப்னம். ஜி.சுப்ரமண்ய ஐயர், சுதேசமித்திரன்னு. மஹாத்மா காந்தி ஜி.சுப்ரமண்ய ஐயரோட அந்திமக்காலத்திலே, தலையை கோதிக்கொடுத்து ஆஸ்வாசபடுத்தினார்.  ஆனா, கதையின் தலைவி சந்திரிகாங்கற குட்டிப்போண்ணு, அவ அத்தை விசாலாட்சியெல்லாம் கற்பனையாத்தான் படறது. கதை எழுதினது ஒரு ஆவேசக்காரன். ஒரே படப்படப்புத்தான். ஆசுகவி. மனசிலே பட்டதை ‘தீம் தரிகெடெத்தோம்’னு இடியும் மின்னலுமா கொட்டொ கொட்டுன்னு எல்லாரையும் ஆட்டிபடைத்து ஆகாத்தியம் பண்ணும் பேர்வழி. பேர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார். இந்த் கதையை சின்ன வயசில்லே படிச்சது நன்னா ஞாபகம் இருக்கு.
அது சரி. படம் பிடிச்சவா, அவரோட மனசுக்குள்ளே புகுந்து தான் இந்த படத்தைப் பிடிச்சிருக்கா. பெரிய கதை ஒன்னும் இல்லை. ஒரு பொண்ணு பால்ய விதவை. ஊர் தூத்தறது. பட்டிக்காடு. அப்பா தர்மிஷ்டன். அவ மட்ராஸுக்கு, அப்பாட்ட சொல்லிட்டு வந்துறாரா, அநாதைப்பொண்ணு சந்திரிகாவோட. அதோட அம்மா அல்பாயுசுலே போய்ட்டா. ஜி.சுப்ரமண்ய ஐயர் கிட்ட அடைக்கலம். அவர் தன் விதவைப்பெண்ணுக்கு அந்தக்காலத்திலேயே மறுவிவாகம் பண்ணி, ஹிந்து பத்ரிகைல்லேருந்து விலகறமாதிரின்னா ஆயிடுத்து. அவர் இவளை நிராகரிப்பாரா? ஒரு லெட்டர் கொடுத்து, பந்துலுகாரு கிட்ட அனுப்பறார். 
இந்த சினிமாக்காரா, அவ கிராமம், அப்பாவோட ஆசாரம், இவளோட தடபுடல் கல்யாணம், வண்டிக்காரனோட ஆதுரமான பேச்சு, ஆசிகள், பந்துலுவோட சம்சாரத்தின் கரிசனம் எல்லாத்தையும் தத்ரூபமா காட்றதானலத்தான், தெரிஞ்ச கதையும், சிசு அம்மா வயத்துக்குள்ளே உதைச்சுக்கரமாதிரி, என்னை ஆட்டிவச்சுடுத்து. கடைசில்லெ ஆம்பிள்ளை தான் ஜெயிக்கிறான். கோபால ஐயங்கார்ன்னு ஒரு கவர்ன்மெண்ட் ஆஃபீஸர். ஐ.சீ.ஸ் மாதிரி வைச்சுக்க்கோங்கோ. ஒரு விதவைப்பொண்ணைத்தான் பண்ணிப்பேன்னு தலைகீழா நிக்கறான். பந்துலுகாரு அந்த சம்பந்த்தத்தை முடிக்கப்பாக்கறார். போறாத காலமோ, இல்லை இன்னோத்தரோட போறர காலமோ, சந்துனுவுக்கு மச்சகந்தி மேல கண்ணு விழுந்தமாதிரி, ஐயங்காருக்கு அகஸ்மாத்தா பாத்த வேலைக்காரப்பொண்ணு மேல மோஹமாயிடுத்து. இதான் கதை.
உன்னை ஏன் இந்த கதை இப்படி பாதிச்சுறத்துன்ண்ணு கேப்பேள். என்ன பண்றது? பாரதி பைத்தியம் ஒருபக்கம் இருக்கட்டும். இன்னொரு அத்தையின் கதையைப் படித்து, ஒரு நாள் பூரா மூட் அவுட். அதை சொன்னா அதிசயிச்சுப்போயிடுவேள்.  சொல்றதா, வேண்டாமான்னு தான் தெரியல்லே.

இன்னம்பூரான்





Subashini Tremmel Tue, Jun 16, 2009 at 12:44 PM
To: Innamburan Innamburan
---------- Forwarded message ----------
From: meena muthu
Date: Jun 15, 2009 7:05 PM
Subject: [MinTamil] Re: நூறு வருஷங்களுக்கு முன்னால்
To: minTamil@googlegroups.com
அடடா! என்ன ஒரு எழுத்து!அப்படியே எதிர்க்க உக்காந்து பேசறமாதிரி!!

நல்லாத்தெரியறது  உணர்ச்சி ஆறாப்பெருக்கெடுத்து ஓடறது!

நீங்க பட படன்னு எழுதினா மாதிரி நானும் பர பரன்னு படிச்சுட்டேன்!

இப்படித்தான் எப்பவாவது வரும்போது பசக்குனு மனசுல பதிஞ்சுடும் கமலத்தோட எழுத்து மாதிரி ஒங்கொளோடதும்!

அடுத்ததையும் சீக்கிரமா(இதப்போலவே)எழுதிஅதிசயிக்கவையுங்கள். காத்திருக்கோம்.

மீனா
---------- Forwarded message ----------
From: நா.கண்ணன்
Date: Jun 16, 2009 1:16 AM
Subject: [MinTamil] Re: நூறு வருஷங்களுக்கு முன்னால்
To: மின்தமிழ் <minTamil@googlegroups.com>
On Jun 15, 5:51 pm, "innambu...@googlemail.com"
<innambu...@googlemail.com> wrote:
> உன்னை ஏன் இந்த கதை இப்படி பாதிச்சுறத்துன்ண்ணு கேப்பேள். என்ன பண்றது?
> பாரதி பைத்தியம் ஒருபக்கம் இருக்கட்டும். இன்னொரு அத்தையின் கதையைப்
> படித்து, ஒரு நாள் பூரா மூட் அவுட். அதை சொன்னா அதிசயிச்சுப்போயிடுவேள்.
> சொல்றதா, வேண்டாமான்னு தான் தெரியல்லே.
சத்தியமா இது இன்னம்பூரான் எழுத்தா? இல்லை, மேற்கோள் காட்டுகிறாரா?
இந்த நடை அவருடையதா? எங்கு போச்சு இத்தனை நாள்...
ம்ம்ம்..அதிசயத்து வாய் திறந்தவண்ணம்...

அசட்டுக்கண்ணன்
[Quoted text hidden]


Innamburan Innamburan Tue, Jun 16, 2009 at 4:35 PM
To: Subashini Tremmel
கண்ணன்,
தி.கே.சி. ஒரிடத்தலே சொல்றார், இது கடாக்ஷம் என்று. இது அடியேனின் உடனடி இடுகை. கடாக்ஷம் தான். இந்தமாதிரி அப்பப்போ எழுதினது  இருக்கு.
இன்னம்புறான்
சுபாஷினி,மீனா

நன்றி பல.
[Quoted text hidden]

S




Tthamizth Tthenee Wed, Jun 17, 2009 at 4:28 AM
Reply-To: minTamil@googlegroups.com
To: minTamil@googlegroups.com
இன்  அம்பு நடை
 
 
இன்னம்புரானின்  எழுத்துநடை
 
அதனால் விர்ரென்று பாய்ந்துவிட்டது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


ஏப்ரல் 4, 2013  அன்றைய பின்குறிப்பு. எனக்குத் தமிழில் எழுதி பழக்கம் இல்லை. அநேகமாக, Wed, Jun 17, 2009 at 4:28 AM காலகட்டத்தில், உறக்கம் வர மறுத்த அன்று எழுதியதின் மீள்பதிவு, இது. நண்பர்களில் சிலர் படித்திருக்கலாம், இங்கு கருத்துக்கூறிவர்கள் போல. தவிர, நேரமின்மையால், சக்தி போதாமல் போனதால், ப்ளாக் பதிவு பல வருடங்களாக தேக்கம். நூறு வருஷங்களுக்கு முன்னால் தொடரும். தமிழ் பசியின் காரணமாக பழங்கணக்குப் பார்க்கும்,
இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTZ8iSKzY1l4QPG7NkPp6rTycXfw4MIc_tTFRWu51FVBwkxSWxiGSAKOLEAkW2UY6ngimpwrRQUYp61P1Wx3Kde7Gh9CV3xidbjeYu8ltoTtSmhHBu3DtGCCP3naoX9mqkSeCM2k5jGAxy/s1600/DSC03809.JPG


இன்னம்பூரான்





 

 




n]

Wednesday, April 3, 2013

தொன்மை



தொன்மை

மந்திரம் மாங்காயை வீழ்த்தாது; மாங்கனியை அன்புடன் பிழிந்து மாம்பழரசத்தை பருகத் தரும். ஏனெனில், மந்திரமாவது மாயை. எல்லா கருத்துக்களையும் கவனத்துடன் படித்தேன். வியந்தேன். என்ன வியந்தேன்? மந்திரமோ அமுதசுரபி. நமது காதில் விழுவதோ பஞ்சசாரை. 
தொன்மை (Mythology) ஒலியின் நல்வரவு ~ டம்ரூ பாஜே!, பிரணவம் உற்பத்தியாச்சு. '...வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்...' என்று பாரதி பாடவில்லை. மந்திரோபதேசம் செய்தார். கடோபனிஷத், மாண்டூக்யோபனிஷத், பதஞ்சலி, எங்கு சென்றாலும் பிரணவ நாதம்.

இங்கு ஒரு பாகிஸ்தானி கடை இருக்கிறது. நாள் முழுதும் குரானும், அரேபிய மந்திரங்கள் ஓதியபடி. சிலசமயம், நான் கட்டுண்டு  கேட்பதுண்டு. என்னிடம் ஒரு திபெத்தியன் தாளவாத்திய கச்சேரியின் ஒலிப்பதிவு ஒன்று இருக்கிறது. நள்ளிரவில் மெல்லியதாக வைத்துக்கேட்டால், சுகமாக இருக்கும். அதை கேட்ட அன்பர் ஒருவர், இந்த காட்டுக்கூச்சலை நிறுத்து என்றார். கருவாடுக்கூடை கதை தான். என் செய்வது? 

கிரகேரியன் சேண்ட்ஸ் கேட்டிருக்கிறீர்களோ? வேத அத்யயனம் மாதிரி இருக்கும். 'Chanter' is German; Chanting is English; சந்தஸ்: சம்ஸ்கிருதம். 'சந்தம் : தமிழ்: விவிலியம் கூறுவதாவது:
 “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை [இயேசு] தேவனாயிருந்தது” என்று குறிப்பிடுகிறார் (யோவான் 1:1)

மந்திரம் எந்த மொழிக்கும், எந்த சமயத்திற்கும், எந்த சமூகத்திற்கும் ஏகபோக உரிமையல்ல. இவையெல்லாம் உற்பத்தி செய்யப்படும் தான்தோன்றி ஒலி, உச்சாடனம், மந்திரம். மனிதன் முதலில் அஞ்சியது ஒலி, வணங்கியது ஒலி,  அவரவர் மொழிக்கும், சமயத்திற்கும், சமூகத்திற்கும், சந்தர்ப்பத்துக்கும், அணைத்துக்கொண்டது, அரவணைத்ததும், மந்திரம்.
இந்த இடுகையை யாராவது 'நீயிரும் வம்மின்' இழையில் மீள்பதிவு செய்ங்களேன். மாங்கனியை அன்புடன் பிழிந்து மாம்பழரசத்தை பருகத் தருகிறதா என்று பார்ப்போம்.
இன்னம்பூரான்
25 01 2012
சித்திரம் பெறப்பட்டது: ஏப்ரில் 3, 2013. நன்றி

அன்றொரு நாள்: ஏப்ரல் 4: I வக்ஷஸ்தலே...




அன்றொரு நாள்: ஏப்ரல் 4: I வக்ஷஸ்தலே...
2 messages

Innamburan Innamburan Wed, Apr 4, 2012 at 6:49 PM
To: mintamil , thamizhvaasal

  • அன்றொரு நாள்: ஏப்ரல் 4: I

வக்ஷஸ்தலே...
லக்ஷ்மி லக்ஷ்மிநரசிம்ஹரின் ஹிருதயவாஸினி. பெருமாளின் ‘வக்ஷஸ்தலே’ தாயார் வாசம் செய்கிறாள் என்றால், இருவரையும் காதலில் இணைத்து, பக்தனும், பக்தையும் வழிபடுகிறார்கள் என்று பொருள். ஒரு கைப்பிடி அளவில் மட்டும், ‘மூர்த்தி சிறிதானாலும்  கீர்த்திமானான’ இந்த ‘லப் டப்’ பம்புசெட்டுக்கு தொன்மை, ஆன்மீகம், பக்தி, இலக்கிய சுவை, நவரசங்கள், கலை, பேரின்பம், காமம் எல்லாம், விழுந்து, விழுந்து, கட்டியம் கூறுகின்றன. கட்டுண்டு நிற்கின்றன. எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்றாலும், சிறுநீரகம் தான் குருதி வெள்ளத்தை மேய்ப்பவன் என்று மருத்துவம் கூறினாலும், உள்ளங்காலுக்கு உச்சந்தலைக்குள்ள மரியாதையை கொடு என்று விவேகம் பாடம் படித்தாலும், மனிதனின் மனோவேகத்தில் கொடி கட்டி பறப்பது, இதயம். ‘லப் டப்’ பம்பானாலும், ஒப்பிலா அன்பின் உருவகமாக நம்மை ஆட்டி வரும் இந்த பாழாப்போன இதயம் துடிக்காவிடின் மரணம் சம்பவிக்கும். அதா அன்று. விபத்துகளில் மூளை மீளமுடியாத வகையில் திறன் இழந்து விட்டால், ஹிருதயம் தாக்குப் பிடித்துக்கொண்டு ‘லப் டப்‘ என சிறிது நேரம் இயங்கக்கூடும். ஹிருதயதானம் தருபவர்கள் தொலைத்து விட்டு, பிறகு மீட்ட இதயத்தின் கதையை கேட்கப்போகிறீர்கள்.
என் அதிர்ஷ்டம், ஒரு நாள் டாக்டர் கிறிஸ்டியன் பர்னார்ட் அவர்களை மும்பாய் தாஜ் ஹோட்டலில் தற்செயலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் அத்தகைய ஹிருதயம் ஒன்றை, டிசெம்பர் 3,1967 அன்று 55 வயதிய ஹிருதய சீக்காளிக்கு பொருத்தினார். அது மாபெரும் வெற்றி என்றாலும், ஆள் காலி, சில நாட்களுக்கு பிறகு. திருத்தங்கள் அமைக்கப்பட்டன. 1983க்குள், 68 ஹிருதயங்களை கூடு விட்டு கூடு மாற்றினார், அவர். பிற்காலம், ஆர்த்த்ரெட்டீஸ் காரணமாக, அவரால் இந்த அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை.
பலவிதமான ஆய்வுகள் தொடங்கின. டாக்டர் ராபெர்ட்.கே.ஜார்விக் செயற்கை இதயங்களை பரீக்ஷார்த்தமாகப்படைத்தார். முதல்முறையாக ஒரு செயற்கை இதயத்தை (பம்பு) தற்காலிக உபயோகத்துக்கு பொருத்திய தினம், ஏப்ரல் 4, 1969: டாக்டர் டெண்டன் கூலி; அதை வடிவு அமைத்தவர் டொமிங்கோ லியோட்டா. பலமான பின்னணி உளது. முதல் முதலில் மார்புக்கூட்டை திறந்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஸாவர்ப்ரூக், ஜெர்மனியில் புகழ் வாய்ந்த டாக்டர். யுர்குன் தோர்வல்ட் எழுதிய இவருடைய வரலாறு என்னை கவர்ந்த நூல். 1935ல் நோபல் வாங்கிய டாக்டர் அலெக்ஸிஸ் கெர்ரல் & அமெரிக்க விமானி சார்லஸ் லிண்ட்பெர்க் இருவரும் ஒரு இதய பம்ப் உருவாக்கினார்கள். நோபல் பரிசு வாங்கிய டாக்டர் அலெக்ஸிஸ் கெர்ரல் ‘நாம் அறியாத மனிதன்’ என்ற நூலை எழுதி, மெய்ஞானத்தில், விஞ்ஞானம் செழிப்பதை விளக்கியவர். இருவரை பற்றியும் ஒரு நாள் எழுத விருப்பம். பார்க்கலாம்.1957ல் டாக்டர் கோல்ஃபும், டாக்டர் டி.அகுட்ஸுவும் முற்றிலும் செயற்கை இதயத்தை வைத்து ஒரு நாய்க்கு பரீக்ஷார்த்த அறுவை செய்து பார்த்தனர். இவை எல்லாவற்றிலும் போதாக்குறைகள் பல இருந்தன. 1966ல் டாக்டர் மைக்கேல் டி பேக்கி மனிதர்களுக்கு உதவக்கூடிய இதயத்தின் இடது பக்க கீழ் அறைக்கு பினாமி பம்ப் ஒன்றை படைத்து பிரபலமானார்.
இந்த டெண்டன் கூலியும், மைக்கேல் டி பேக்கியும் அண்டை வீட்டுக்காரர்கள் மாதிரி. ஒரே ஊரை உலகத்தின் ‘ஹிருதய சிகிச்சை தலை நகராக’ நிறுவி, சூப்பர் பிரபலமானார்கள். பாரெங்கும் அவர்களின் புகழ் பாடப்பட்டது. இருவருக்கும் வைட்டிங் லிஸ்ட் ஒரு வருடத்துக்கு மேல். டாக்டர் மைக்கேல் பேக்கி,தன் மனைவியை இழந்த தினமே, ஆஸ்பத்திரி வந்து விட்டார். ‘என்னது இது’ என்று கேட்டவர்களிடம், ‘இன்று நான் வராவிட்டால், சிலருக்கு ஆபரேஷன் 18 மாதம் தள்ளிப்போகும். அதற்குள் அவர்களில் யாராவது இறந்து விட்டால்? என்றார் இந்த பூலோக பிரம்மா.
போச்சுடா! 1960லிருந்து நாற்பது வருடங்களாக இந்த செயற்கை ஹிருதய மாயாஜாலர்கள் பேசிக்கொள்வதில்லை. பூசாரி நெருங்க, நெருங்க ஓடும் சாமியை போல,இந்த செயற்கை ஹிருதய வள்ளல்கள் தங்கள் இதயங்களை தொலைத்து விட்டார்களோ? என்ன ஆச்சு? அதை அப்பறம் சொல்லலாமா?.
இன்னம்பூரான்
04 04 2012
Inline image 1

உசாத்துணை:

Geetha Sambasivam Sun, Apr 8, 2012 at 3:15 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
1960லிருந்து நாற்பது வருடங்களாக இந்த செயற்கை ஹிருதய மாயாஜாலர்கள் பேசிக்கொள்வதில்லை. பூசாரி நெருங்க, நெருங்க ஓடும் சாமியை போல,இந்த செயற்கை ஹிருதய வள்ளல்கள் தங்கள் இதயங்களை தொலைத்து விட்டார்களோ? என்ன ஆச்சு? அதை அப்பறம் சொல்லலாமா?.//

இதைப் பார்க்கவே இல்லை இத்தனை நாளா.  என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும்??? ஈகோ தான் காரணமா இருக்கும். மெதுவாச் சொல்லுங்க.

On Wed, Apr 4, 2012 at 11:19 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
.
போச்சுடா! 1960லிருந்து நாற்பது வருடங்களாக இந்த செயற்கை ஹிருதய மாயாஜாலர்கள் பேசிக்கொள்வதில்லை. பூசாரி நெருங்க, நெருங்க ஓடும் சாமியை போல,இந்த செயற்கை ஹிருதய வள்ளல்கள் தங்கள் இதயங்களை தொலைத்து விட்டார்களோ? என்ன ஆச்சு? அதை அப்பறம் சொல்லலாமா?.
இன்னம்பூரான்
04 04 2012


உசாத்துணை:

அன்றொரு நாள்: ஏப்ரல் 3: அச்சான்யம்!




அன்றொரு நாள்: ஏப்ரல் 3: அச்சான்யம்!
6 messages

Innamburan Innamburan Tue, Apr 3, 2012 at 12:41 PM
To: mintamil , thamizhvaasal
அன்றொரு நாள்: ஏப்ரல் 3:
அச்சான்யம்!

அமெரிக்காவில் அமரிக்கையாக அமர்ந்து கொண்டு அன்றொரு நாள்; ஏப்ரல் 3, 1968 அன்று நிகழ்ந்த ‘ஏசு பிரானின் கடைசி விருந்துணவு’ போன்ற கடைசி சொற்பொழிவு ஒன்றை பற்றி எழுதாவிடில், என் மனம் நிம்மதி பெறாது. அந்த உரையில் புதைந்து கிடந்த ஆன்மீகம், தொன்மையின் தாக்கம், மறை பொருள், தீர்க்கதரிசனம்,பிரக்ஞை, அச்சான்யம் (தீநிமித்தம்) எல்லாம் நம்மை உலுக்கி, குலுக்கி எடுத்து விடுகின்றன. அந்த உரையிலிருந்து சில பகுதிகள், சுருக்கமாக:
  1. ஏனிந்த ஹர்த்தால்?
அநீதி தலை விரித்தாடுகிறது...ஒரு ஜன்னல் உடைந்தாற் கூச்சல் போடுபவர்கள், 1,300 கடைநிலை ஊழியர்களுக்கு நகராட்சி இழைக்கும் அநியாயத்தைக் கேட்டால், அழிச்சாட்டியமாக மெளனம் சாதிக்கிறார்கள். நான் இதழ்களை குற்றம் சாட்டுகிறேன்... சத்தியத்திற்கு என்றும் தோல்வி கிடையாது. நாம் தியாகம் செய்வோம் அல்லவா. வெற்றி உத்தரவாதம்...

  1. மனித உரிமை:
அமெரிக்காவிடம் நாங்கள் கேட்பதெல்லாம், ‘சொன்னதை செய்’. சட்டப்புத்தகத்தில் போட்டு விட்டு,அதை கடாசினால் எப்படி,ஐயா? இது சைனாவோ.ரஷ்யாவோ இல்லை. பேச்சுரிமை, கூடி இயங்கும் உரிமை, ஊடக உரிமை, உரிமைக்குப் போராட உரிமை எல்லாம் இருக்கிறது என்று சொல்லி விட்டு, எங்கள் மேல் நாய்களையும் ஏவுவதும், தண்ணீர் பீச்சுவதும் தப்பு இல்லையா?... நாங்கள் விடப்போவதில்லை.

3.பொருளியல் ஹர்த்தால்:
நாங்கள் ஏழை தான். ஆனால், எங்கள் சமூகத்தின் செல்வம் கொஞ்சநஞ்சமில்லை. 30 பிலியன் டாலர் வருடத்துக்கு (1968). இது அமெரிக்காவின் ஏற்றுமதியை விட அதிகம். எங்களிடம் சக்தி இருக்கிறது. சேகரம் செய்ய இயலும். யாரிடம் கெஞ்சவும், கொஞ்சவும் தேவையில்லை. எங்களுக்கு அநீதி இழைத்தால், நாங்கள், உங்களுக்கு விற்கமாட்டோம்; உங்களிடம் வாங்க மாட்டோம். உங்கள் செல்வம் படுத்துப்போகும்.

4. பொது:
ஒரே புயல், மழை, ஊதகாற்று. இதற்கு அஞ்சாமல் கூடியிருக்கிறீர்கள்...இது சின்ன ஊர் தான். ஆனால். வரலாறு படைப்போம். நான் உலகம் முழுதும், பழங்காலத்திலிருந்து, உங்கள் முன், நடந்து காட்டப்போகிறேன். மனம் என்ற என் புஷ்பக விமானத்தில், எகிப்திலும், சிவந்த கடலிலும், காவற்காட்டிலும், இறைவன் வரன் அளித்த பூமியிலும், வானளாவவும், உம்மையும் அழைத்துக்கொண்டு உலாவுவேன். கிரேக்க நாடு, ஒலிம்பஸ் மலை,ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரட்டீஸ், யூரிபிடீஸ், அரிஸ்டோஃபேன், ரோமானிய ராஜாங்கம்,, புனர்மலர்ச்சி சகாப்தம், சமய சீர்திருத்தம் செய்த மார்ட்டின் லூதர், அப்ரஹாம் லிங்கன் வரை, உங்களை அழைத்துச் செல்கிறேன். அச்சமில்லை. அச்சமிருந்தால் தான் அச்சம். இல்லையா?
உங்கள் முன்னிலையில் ஆண்டவனிடன் பிரார்த்திக்கிறேன். ‘எனக்கு இந்த நூற்றாண்டில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. எனக்கு நீண்ட ஆயுள் தா.’

 மலையேறுகிறேன் என்றார், விவிலய தொன்மையில் மோசஸ்ஸின் மறைவையும், ஜோஷுவாவின் வரவையும் சுட்டினாற்போல். அவர் மேலும் சொன்னது: 

‘எனக்கு கொலை எச்சரிக்கைகள் வந்த வண்னம் உளன. நமது வெள்ளைய சகோதரர்களில் சிலர் என்ன கொடுமை செய்வார்களோ? நான் அஞ்சவில்லை. என்றோ நடந்தது போல், பரமபிதாவின் ஆணைக்கிணங்க மலை ஏறினேன். தேவதரிசனம் ஆச்சுது. நமக்கு அவர் வரனளிக்கும் நாட்டை பார்த்தேன். நாம் சேர்ந்து ஆன்மீக யாத்திரை  செய்வோம். எனக்கு மனித பயமில்லை...”

அந்தோ பரிதாபம்! அவர் சொல்லி முடிக்கவில்லை. மறுநாள் (ஏப்ரல் 4, 1968) அன்று நோபல் பரிசு வாங்கிய மார்ட்டின் லூதர் அவர்கள், 39 வயதில், டென்னஸி மாநிலத்தில் உள்ள மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அன்றொரு நாள்: ஜனவரி:15:முன்னம் அவனுடைய நாமம் கேட்டால்...’ என்ற இழையில் அவரை பற்றி விவரமாக எழுதியிருக்கிறேன். அவரது உடலில் குண்டு பாய்ந்தது. ஆத்மா நித்யவாசம். சிரஞ்சீவி.
வாழ்க அவர் நாமம்.
இன்னம்பூரான்
03 04 2012Inline image 1


உசாத்துணை:


Geetha Sambasivam Tue, Apr 3, 2012 at 12:54 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
மெம்பிஸில் இவர் சுடப்பட்ட இடத்தைப் போய்ப் பார்த்து வரச் சொல்லி இருந்தீர்கள்.  ஆனால் எங்கள் பெண், மாப்பிள்ளைக்கு அப்போது தான் காரின் ஜன்னலை உடைத்துத் திருட்டு நடந்திருந்ததால் வெளியே எங்கும் அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர்.  :(((( கிளம்பும் வரையிலும் எங்குமே செல்லவில்லை இம்முறை. :((((((

On Tue, Apr 3, 2012 at 5:11 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொரு நாள்: ஏப்ரல் 3:
அச்சான்யம்!



யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Tue, Apr 3, 2012 at 2:29 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இ சார்

இதெல்லாம் வெளிநாட்டில் ரூம் போட்டு யோசிக்கிறீர்களோ???

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------

Innamburan Innamburan Tue, Apr 3, 2012 at 3:48 PM
To: thamizhvaasal@googlegroups.com
உள் மனதில்,பென்.


2012/4/3 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
[Quoted text hidden]

Subashini Tremmel Fri, Apr 6, 2012 at 11:23 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
இந்த நாளில் இவரை நினைத்துப் பார்க்க வைத்த உங்கள் பதிவிற்கு நன்றி.

சுபா


Subashini Tremmel Fri, Apr 6, 2012 at 11:25 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram


2012/4/3 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
மெம்பிஸில் இவர் சுடப்பட்ட இடத்தைப் போய்ப் பார்த்து வரச் சொல்லி இருந்தீர்கள்.  ஆனால் எங்கள் பெண், மாப்பிள்ளைக்கு அப்போது தான் காரின் ஜன்னலை உடைத்துத் திருட்டு நடந்திருந்ததால் வெளியே எங்கும் அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர்.  :(((( கிளம்பும் வரையிலும் எங்குமே செல்லவில்லை இம்முறை. :((((((

ஹ்ஹ்ம்ம்.. அடுத்த முறைம் மெம்பிஸ் செல்லும் போது எந்த் அசம்பாவிதங்களும் நிகழாமல் நீங்கள் நிறைய பார்த்து படங்களும் கொண்டு வந்து பகிர்ந்து கொள்ளுங்கள் திருமதி கீதா.

சுபா

 

Commenting option enabled

Commenting option enabled, my friends. You are welcome

Innamburan

Tuesday, April 2, 2013




அன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ! மந்திரக்காளி! காட்சி 4:
4 messages

Innamburan Innamburan Fri, Apr 6, 2012 at 3:54 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஏப்ரல் 2:
சூ! மந்திரக்காளி!
காட்சி 4:
(என்ன பேச்சு மூச்சு காணும் என்று பாத்தா,எல்லாம் கோணாமாணான்னு படுத்துத் தூங்கி வழிகிறதுகள்).
அதுகளுக்குஇல்லாத கதை உமக்கா? நோ. வேணும்னா நாளை வாங்கோ. வரோமா இல்லையா என்று சொல்லுங்கோ.
(வந்துட்டேளா! தொடர்கிறது)
அதிரூபசுந்தரியான ராஜகுமாரியை பாத்துண்டே இருந்தான், நம்ம சிப்பாய். அவள் ஆழ்ந்த தூக்கத்தில். ஆசையுடன் ஒரு முத்தம் இட்டான். அந்த நாய் குலைத்தது. அவள் அலங்க மலங்க முழித்தாள். அரைதூக்கத்தில். ‘லபக்’ என்று அந்த நாய் அவளை தூக்கிண்டு போய்டுத்து. பசங்க எல்லாம் அந்த சத்தத்தில் விழித்துக்கொண்டு ராஜகுமாரி எங்கே? எங்கே? என்று கேட்க, அவளோ, அரண்மணையில், ராஜா-ராணியிடம் ‘முத்தம்’ என்ற கனவை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். ராணியம்மா கெட்டிக்காரி. அவள் ஒரு தாதியை கூப்பிட்டு, ராஜகுமாரியை ராத்திரி கவனித்துக்கொள் என்றாள். நாய் வந்து, அவளை லபக்கிக்கொண்டு போன போது, பின்னாலேயே ஓடினாள். சிப்பாய் வீட்டுக்கதவில் ஒரு சின்னம் வரைந்து விட்டு வந்து விட்டாள். அந்த நாய் ஒரிஜினல் அய்யம்பேட்டை பக்கத்து நாய்! அது ஊரில் இருந்த எல்லா வீட்டுக்கதவுகளிலும், அதே சின்னத்தை வரைந்து விட்டது! மறு நாள் காலை, அரண்மணையில் ஒரே குழப்பம். கண்டு பிடிக்க முடியவில்லை. ராணியோ கும்போணத்துப் பொன்ணு. கெட்டிக்காரத்தனமாக, இளவரசியின் இடுப்பில், தூங்கச்சே ஒரு பையை கட்டிப்பிட்டா. அதில் அரசிமாவு. வழி நெடுக சிந்திக்கிடந்ததா? கண்டு பிடிச்சுட்டாஹ. அந்த சிப்பாயை, குண்டுக்கட்டா கட்டி ஜெயில்லெ போட்டுட்டா. சோறு தண்ணி கிடையாது. பக்கத்திலெ மைதானமா. அங்கே ஒரு மேடை கட்டிண்டு இருக்கா, அடிச்சுப்பிடிச்சுண்டு. ஒத்தன் தண்டோரா போட்டுண்டு போரான், ‘நாளைக்காலை 5 47 மணியில், நம்ம அதிரூபசுந்தரியான ராஜகுமாரியை முத்தமிட்ட சிப்பாயை தூக்கில் போடப்போறோம். எல்லாரும் வருக. இலவசமாக நன்னாரி ஷர்பத் வினியோகம்.’ என்று கூவிக்கொண்டே.
டண்டணக்கா டண் டண்...
(தொடரணுமா?)
இன்னம்பூரான்
02 04 2012/06 04 2012
பி.கு. சித்திரம்: உபயம் தமிழ்த்தேனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ: அவரே போடுவார்.

திவாஜி Sat, Apr 7, 2012 at 4:46 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
பின்னே?


Geetha Sambasivam Sat, Apr 7, 2012 at 4:58 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
பி.கு. சித்திரம்: உபயம் தமிழ்த்தேனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ: அவரே போடுவார்.//

அவர் பார்க்கலை போலிருக்கே!  இணையம் இல்லையோ என்னவோ! :(  நீங்க கதையைத் தொடருங்க. 

On Fri, Apr 6, 2012 at 8:24 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:


Tthamizth Tthenee Sat, Apr 7, 2012 at 8:01 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
 
 
ஒரு சித்திரம் வரைய வேண்டுமென்றால்  எந்த  கருவுக்கு வரைகிறோமோ  அதற்கு ஏற்றார்போல் முதலில் சித்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
 
பிறகுதான் வரைய முடியும்.
 
வரைந்தால் தானே சித்திரம் வரும்
வரைந்து அனுப்பி இருக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

Hanging soldire.jpg
40K

அன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ! மந்திரக்காளி! காட்சி 3:




அன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ! மந்திரக்காளி! காட்சி 3:
4 messages

Innamburan Innamburan Thu, Apr 5, 2012 at 2:55 AM
To: mintamil , thamizhvaasal
அன்றொரு நாள்: ஏப்ரல் 2:
சூ! மந்திரக்காளி!
காட்சி 3:
(குடுக்கையை) எடுத்துண்டு வந்தான். கொடுக்க இஷ்டமில்லை. சண்டை வந்தது. மாயாஜாலியை குத்தி கொன்று விட்டானா? அவள் செத்துப்போய்ட்டாள்!
அவனும் குடுக்கையையும், துட்டு எல்லாத்தையும் எடுத்துண்டு ஒரு டவுனுக்குப் போனான். ஜாலியா ஊர் சுத்தினான்.நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்! ஆனால், ராஜகுமாரியை பாக்கணும்னு ஆசை. ஊர்க்காரா சொன்னா, ‘நீ அவளை பாக்கமுடியாது. ராஜா அவளை போத்தி, போத்தி,காப்பாத்துறான். அவள் ஒரு சாதாரண சிப்பாயை கல்லாணம் கட்டிப்பா என்று ஆரூடம். ராஜாவுக்கு அது பிடிக்கல்லை. நம்ம சிப்பாய் ஊர் சுத்திண்டிருந்தான்.ஏழை பாழைகளுக்கு உதவி பண்ணினான். பைத்தியக்காரனை சுத்தி நாலு பேர் என்றால், பணக்காரனை சுத்தி பத்து பேர். தின்னே அழிச்சுப்பிட்டார்கள். இவன் மறுபடியும் ஏழை ஆனான். மச்சு வீட்டை காலி பண்ணிட்டு குச்சு வீட்டுக்குப் போய்ட்டான்.
( நம்ம வாண்டு கேட்டான்,’ குச்சு வீட்டு கூறை பிச்சுண்டுப் போனா! ஒரே அவுட்டு சிரிப்பு, குழந்தைகள் ஜோக் நமக்கு புரியவா போகிறது!)
பிள்ளையார் கோவில் பிச்சாண்டியான சிப்பாய் ஒரு நாள் அந்த குடுக்கையை தட்டினான். அந்த செப்புக்காசு நாய் வந்து நின்றது. காசு கொண்டா என்றான். அது வாய் நிறைய செப்புக்காசு கொண்டு வந்தது. இரண்டு தடவை தட்டினால், வெள்ளிக்காசு நாய். மூணு தடவை தட்டினா, பொன் காசு. மறுபடியும் பெரிய பணக்காரன் ஆனான். பெண்ணாசை ஏற, அந்த செப்புக்காசு நாயை, ராஜகுமாரியை கொண்டா என்றான். அதுவும் கொண்டு வந்ததா?
(என்ன பேச்சு மூச்சு காணும் என்று பாத்தா,எல்லாம் கோணாமாணான்னு படுத்துத் தூங்கி வழிகிறதுகள்).
அதுகளுக்குஇல்லாத கதை உமக்கா? நோ. வேணும்னா நாளை வாங்கோ. வரோமா இல்லையா என்று சொல்லுங்கோ.
(தொடரணுமா?)
இன்னம்பூரான்
02 04 2012


சிநேகிதி.jpg
487K

திவாஜி \Thu, Apr 5, 2012 at 4:50 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
ஹாஹ்ஹாஹ்ஹா!
நாளைக்கு அவசியம் வரணும்!


Geetha Sambasivam Thu, Apr 5, 2012 at 2:07 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
அருமையான சிநேகிதி.  தினமும் வரணும்.





அன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ! மந்திரக்காளி! காட்சி 2:



>

அன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ! மந்திரக்காளி! காட்சி 2:
4 messages

Innamburan Innamburan Mon, Apr 2, 2012 at 8:51 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஏப்ரல் 2:
சூ! மந்திரக்காளி!
காட்சி 2:
வரவேற்பு அறை: தேநீர், கேக்கு, பிஸ்கோத்து: வாண்டு மடியில் உட்கார்ந்துக்கொண்டான்.
சூ: அப்றம், அடுத்த கதவை திற. அங்கே இருக்கறது ராக்ஷஸ நாய். பொல்லாது. தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்து முடி போன்ற காதுகள். மெல்ல தூக்கி, நான் கொடுத்த பொன்னாடை மேல் உட்காரவை. அப்றம் அங்கெ இருக்ற பெட்டியை திற. நிறைய பொன் காசுகள் இருக்கும். வேண்டியதை எடுத்துக்கோ.
கதீஜா ‘தங்கக்காசு’, ‘தங்கக்காசு’  என்று குதிக்கிறாள். எல்லாம் கும்மி அடிக்கிறதுகள், வாண்டு சொல்றான், ‘அதுகள் எல்லாம் பொண்டுகள்!’ கட கடவென்று சிரிக்கிறான்.
சி: அம்மா மாயாஜாலி! அதெல்லாம் சரி தான். உனக்கு என்ன இதில் லாபம்? பங்கு கேட்பாயா?
சூ: எனக்கு தம்பிடி வேண்டாம். அங்கே ஒரு சின்ன ஓலை குடுக்கை இருக்கு. அதிலெ சிக்கிமுக்கிக்கல்லும், தீ பத்தவைக்க பஞ்சும் இருக்கு. என்னுடைய பாட்டி மறந்து போய் விட்டுட்டா. அதை கொண்டா. போதும்.
சரி என்றான் சிப்பாய். கயிற்றை கட்டிவிட்டாள், மாயாஜாலி. கம்பளம், சால்வை, பொன்னாடையெல்லாம் சுருட்டிக்கொடுத்தாள். அவற்றையும் இடுப்பில் சுற்றிக்கொண்டான்.
எல்லா பசங்களும் சிரிக்கிறது. என்னவென்று சொல்லமாட்டேன் என்கிறதுகள்.
சிப்பாய் இறங்கினான். 
சாந்தி: கிளு கிளு என சிரித்துக்கொண்டே: புடவை தடுக்கிடப்போறது! 
எல்லாரும் ஒரு ரவுண்ட் ரகளை.
மாமி அடக்கறா. 
நான்; சொன்னப்படியே, அந்த சிப்பாய் முதல் கதவை திறந்து, அந்த நாயை கம்பளத்தில் அமர்த்தி, எல்லா ஜேபிகளிலும் செப்புக்காசுகளை நிரப்பிக்கொண்டான். அடுத்தபடியாக, இரண்டாவது கதவை திறந்து, அந்த பெரிய நாயை சால்வையில் அமர்த்தி, எல்லா ஜேபிகளிலும் இருந்த செப்புக்காசுகளை கொட்டிவிட்டு, வெள்ளிக்காசுகளை நிரப்பிக்கொண்டான். அப்புறம், மூணாவது கதவை திறந்து, அந்த ராக்ஷஸ நாயை பொன்னாடையில் அமர்த்தி, எல்லா ஜேபிகளிலும் இருந்த வெள்ளிக்காசுகளை கொட்டிவிட்டு, பொன் காசுகளை நிரப்பிக்கொண்டான்.
படு குஷி. ஊரையே வாங்கலாம். அத்தையும் வாங்கலாம். இத்தையும் வாங்கலாம். குல்லா, செருப்பு எல்லாவற்றிலும் பொன் காசுகள்.
சி: மாயாஜாலி! என்னை மேலே இழு.
சூ: குடுக்கை எடுத்துண்டு வந்தியா?
சி. மறந்துட்டேனே.
சூ: அதெல்லாம் முடியாது. எடுத்துண்டு வா.
எடுத்துண்டு வந்தான். கொடுக்க இஷ்டமில்லை. சண்டை வந்தது. மாயாஜாலியை குத்தி கொன்று விட்டான்.
பசங்க போட்ட கூச்சலில், திரை பொதக்கட்டீர் என்று விழுந்து விட்டது. எனக்கு என்ன பண்றது என்று தெரியவில்லை. ஒரிஜினல் கதை எழுதினவர் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன்.பெரிய படைப்பாளர் - கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள். எல்லாம் முதல் தரம். அவருடைய சிறுவர்களுக்கான மாயா ஜாலக்கதைகள் (1835) உலகபிரசித்தம். இன்றும் அச்சாகின்றன. நாளையும் அச்சாகும். அவருடைய ரகசியம் என்ன தெரியுமா? எதையும் குழந்தையின் அகக்கண்களாலும், புறக்கண்களாலும் பார்த்தவர், அவர். 
அதையெல்லாம் விடுங்கள். அவரது மரணம் நெருங்கிய போது, ஒரு இசை அமைப்பாளரை கூப்பிட்டு, தன்னுடைய இறுதி சடங்குக்கு ஒரு பாடலை அமைக்கப்பணித்தார். அவரின் அபிலாஷை: “ என் சவ ஊர்வலத்தில் என் பின்னால் வருபவர்கள், பெரும்பாலும் சிறார்கள். சிறிய திருவடி.  அவர்களின் பாதம் சின்னது. அந்த சின்ன, சின்ன அடிகளுக்கு ஏற்றால் போல், சின்ன சின்ன சந்தம் உள்ள பாடல் அமையுங்கள்.” இன்று அன்னாரின் பிறந்த நாள் -ஏப்ரல் 2, 1805. வீீட்டு எஜமானி அம்மா, நான், வாண்டு, குட்டிப்பெண்கள்: ஹெலன், லீஸா, ரோஸி, சாந்தி, கதீஜா எல்லாரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினோம்.
உங்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு, கற்பனை, மிகை, நடந்தது, நடக்காதது எல்லாம் எழுதித் தள்ளி விட்டேன். அந்த குடுக்கையின் முழுக்கதை படிக்க விரும்புபவர்கள், உசாத்துணையை நாடுக. என் கைச்சரக்கும் சேர்க்கவேண்டும் என்று விரும்பினீர்களானால், காட்சி-3 போடலாம். சொல்லிப்போடுக.
என்னா சொல்றீங்க?
இன்னம்பூரான்
02 04 2012
உசாத்துணை:

renuka rajasekaran Tue, Apr 3, 2012 at 12:20 AM
To: Innamburan Innamburan
ஐயா 
அற்புதம் 
நல்ல காலம் பதிவு செய்தீர்கள்
இல்லையென்றால் இன்னொருமுறை இதே கதையைச் சொல்லவேண்டுமேன்றால்
அது வேறு மாதிரியாக வரும்
சுவாரசியமாகக் கதை சொல்லி - உணவை ஊட்டி விடவோ அல்லது கையில் பிசைந்த சோற்று உருண்டைகளை எங்கள்கையில் வைத்து பள்ளம பண்ணச் சொல்லி சொட்டு சொட்டாய் வற்றல் குழம்பு இட்டு மணக்க மணக்க - உணவும் - மயக்க மயக்க மாயக் கதையும் சொல்வதில் வல்லவரான எங்கள் பாட்டி பலசமயங்களில் எங்களிடம் இப்படித் தான் மாட்டிக்கொள்ளுவார்!

அந்த சுவாரசியமான சிறு பிராயப் பசுமைகளை மீண்டும் நினிவுக்குக் கொண்டு வந்தது
என்குள் பாட்டியிடம் கற்ற கதைகளை எனது குழந்தைகளுக்குச் சொல்லி பாட்டியைப் போலவே பல சமயங்களில் வகையாய் மாட்டிக் கொண்டதுண்டு!
ஆனால் பாட்டிக்கு இருந்த சமாளிப்பு எனக்கு வரவில்லை
எப்படியோ கதை கதையாம் காரணமாம் எனக் காரணமே இல்லாத பல கதைகளை வாய்பிளந்து கேட்கும் மழலைகளின் இராஜ்ஜியத்தில் நாம் சேவகர்கள் - எஜமானர்கள் அவர்களே   

[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Geetha Sambasivam Tue, Apr 3, 2012 at 12:40 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
ஓ, இது முதல் பாகம் அதாவது காட்சி 1 இன்னும் படிக்கலை. படிச்சுட்டு வரேன்.

On Tue, Apr 3, 2012 at 1:21 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொரு நாள்: ஏப்ரல் 2:
சூ! மந்திரக்காளி!
காட்சி 2:
என் கைச்சரக்கும் சேர்க்கவேண்டும் என்று விரும்பினீர்களானால், காட்சி-3 போடலாம். சொல்லிப்போடுக.


திவாஜி Tue, Apr 3, 2012 at 1:11 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
போடுங்க!
2012/4/3 Innamburan Innamburan <innamburan@gmail.com>
காட்சி-3 போடலாம். சொல்லிப்போடுக.
[Quoted text hidden]
4 messages