Showing posts with label April 2. Show all posts
Showing posts with label April 2. Show all posts

Tuesday, April 2, 2013




அன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ! மந்திரக்காளி! காட்சி 4:
4 messages

Innamburan Innamburan Fri, Apr 6, 2012 at 3:54 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஏப்ரல் 2:
சூ! மந்திரக்காளி!
காட்சி 4:
(என்ன பேச்சு மூச்சு காணும் என்று பாத்தா,எல்லாம் கோணாமாணான்னு படுத்துத் தூங்கி வழிகிறதுகள்).
அதுகளுக்குஇல்லாத கதை உமக்கா? நோ. வேணும்னா நாளை வாங்கோ. வரோமா இல்லையா என்று சொல்லுங்கோ.
(வந்துட்டேளா! தொடர்கிறது)
அதிரூபசுந்தரியான ராஜகுமாரியை பாத்துண்டே இருந்தான், நம்ம சிப்பாய். அவள் ஆழ்ந்த தூக்கத்தில். ஆசையுடன் ஒரு முத்தம் இட்டான். அந்த நாய் குலைத்தது. அவள் அலங்க மலங்க முழித்தாள். அரைதூக்கத்தில். ‘லபக்’ என்று அந்த நாய் அவளை தூக்கிண்டு போய்டுத்து. பசங்க எல்லாம் அந்த சத்தத்தில் விழித்துக்கொண்டு ராஜகுமாரி எங்கே? எங்கே? என்று கேட்க, அவளோ, அரண்மணையில், ராஜா-ராணியிடம் ‘முத்தம்’ என்ற கனவை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். ராணியம்மா கெட்டிக்காரி. அவள் ஒரு தாதியை கூப்பிட்டு, ராஜகுமாரியை ராத்திரி கவனித்துக்கொள் என்றாள். நாய் வந்து, அவளை லபக்கிக்கொண்டு போன போது, பின்னாலேயே ஓடினாள். சிப்பாய் வீட்டுக்கதவில் ஒரு சின்னம் வரைந்து விட்டு வந்து விட்டாள். அந்த நாய் ஒரிஜினல் அய்யம்பேட்டை பக்கத்து நாய்! அது ஊரில் இருந்த எல்லா வீட்டுக்கதவுகளிலும், அதே சின்னத்தை வரைந்து விட்டது! மறு நாள் காலை, அரண்மணையில் ஒரே குழப்பம். கண்டு பிடிக்க முடியவில்லை. ராணியோ கும்போணத்துப் பொன்ணு. கெட்டிக்காரத்தனமாக, இளவரசியின் இடுப்பில், தூங்கச்சே ஒரு பையை கட்டிப்பிட்டா. அதில் அரசிமாவு. வழி நெடுக சிந்திக்கிடந்ததா? கண்டு பிடிச்சுட்டாஹ. அந்த சிப்பாயை, குண்டுக்கட்டா கட்டி ஜெயில்லெ போட்டுட்டா. சோறு தண்ணி கிடையாது. பக்கத்திலெ மைதானமா. அங்கே ஒரு மேடை கட்டிண்டு இருக்கா, அடிச்சுப்பிடிச்சுண்டு. ஒத்தன் தண்டோரா போட்டுண்டு போரான், ‘நாளைக்காலை 5 47 மணியில், நம்ம அதிரூபசுந்தரியான ராஜகுமாரியை முத்தமிட்ட சிப்பாயை தூக்கில் போடப்போறோம். எல்லாரும் வருக. இலவசமாக நன்னாரி ஷர்பத் வினியோகம்.’ என்று கூவிக்கொண்டே.
டண்டணக்கா டண் டண்...
(தொடரணுமா?)
இன்னம்பூரான்
02 04 2012/06 04 2012
பி.கு. சித்திரம்: உபயம் தமிழ்த்தேனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ: அவரே போடுவார்.

திவாஜி Sat, Apr 7, 2012 at 4:46 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
பின்னே?


Geetha Sambasivam Sat, Apr 7, 2012 at 4:58 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
பி.கு. சித்திரம்: உபயம் தமிழ்த்தேனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ: அவரே போடுவார்.//

அவர் பார்க்கலை போலிருக்கே!  இணையம் இல்லையோ என்னவோ! :(  நீங்க கதையைத் தொடருங்க. 

On Fri, Apr 6, 2012 at 8:24 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:


Tthamizth Tthenee Sat, Apr 7, 2012 at 8:01 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
 
 
ஒரு சித்திரம் வரைய வேண்டுமென்றால்  எந்த  கருவுக்கு வரைகிறோமோ  அதற்கு ஏற்றார்போல் முதலில் சித்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
 
பிறகுதான் வரைய முடியும்.
 
வரைந்தால் தானே சித்திரம் வரும்
வரைந்து அனுப்பி இருக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

Hanging soldire.jpg
40K

Monday, April 1, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ! மந்திரக்காளி!




அன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ! மந்திரக்காளி!
10 messages

Innamburan Innamburan Mon, Apr 2, 2012 at 1:54 PM
To: mintamil , thamizhvaasal

*
அன்றொரு நாள்: ஏப்ரல் 2:
சூ! மந்திரக்காளி!

இன்று காலை உலாவும்போது ஒரு வீட்டில் வாசலில் குட்டிப்பெண்கள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தனர். இங்கெல்லாம் மற்றவர் குழந்தைகளை தொடக்கூடாது. ஆபத்து. ஜெயிலில் போட்டாலும் போட்றுவாஹ. ஆனால், நன்மக்கள். அதனால், தள்ளி நின்று பார்த்தேன். இனி உரையாடல்.
காட்சி 1:
வீட்டு எஜமானி அம்மா, நான், ஒரு வாண்டு, குட்டிப்பெண்கள்: ஹெலன், லீஸா, ரோஸி, சாந்தி, கதீஜா, ‘சிப்பாய்’, ‘மாயாஜாலி’ எனப்படும் சூ! மந்திரக்காளி.
எ: வாங்கோ. இந்த குட்டி ஹெலனுக்கு பிறந்த நாள். மத்ததுகள் ராத்தங்கல் இங்கே. ஒரே லூட்டி.
நா: ஹெலனுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் கதை சொல்வீங்களா?
எ: மூணாங்கிளாஸ் படிக்கிறதுகள். ஹாரி பாட்டர் அத்துப்படி.
வாண்டு: நான் தான் ஹாரி பாட்டர்!
நா. என்ன ஹெலன்! பெர்த்த்டே கதை வேணுமா?
ஹெ: உன் பேரென்ன?
நா: ‘ராஜ்’.
வா: ராஜ்! கதை சொல்லு. நான் அதை விட பெரிய கதை அப்றம் சொல்றேன்.
நா: ‘டக்’ ‘டக்’! ஒரு சிப்பாய் வரான், ரோட்டில். மார்ச் பண்றான். கத்தி வச்சுண்டு இருக்கான். ஒரு சூ! மந்திரக்காளி! மாயாஜாலி! வழிலே நிக்றா. அவ சொல்றா.
சூ: அப்பா சிப்பாய்! தோரணையாத்தான் இருக்கே. கத்தி வேறே. உனக்கு வேண்டிய பணம் வராப்லெ ஒரு வழி சொல்றேன்...
சி: நன்றி. உனக்கு எத்தனை கருணை!
சூ: அந்த மரத்தைப்பாரு. ஒரே போல். உள்ளே ஓட்டை. நீ உள்ளே இறங்கு. நான் உன் இடுப்பை சுற்றி ஒரு கயத்தைக் கட்டி இழுத்துடுவேன்.
வாண்டு: கயுறு அறுந்து போனா?
லீசா: போடா! முட்டாள். அது நைலான் கயிறு.
சிப்பாய்: இறங்கினா இருட்டா இருக்குமே. பாம்பு இருந்தா?
சாந்தி: அவன் செத்துப்போயிட்டானா?
எஜமானி அம்மா, ஆர்வத்துடன் வாசற்படியில் உட்கார்ந்து கொண்டாள்.
நா: அந்த சிப்பாய் என்ன பன்ணனும் என்று கேட்டான்.
சூ: நீ இறங்கின இடத்தில் ஒரு பெரிய ஹால் இருக்கும். எக்கச்சக்க லைட்டு, லஸ்தர், அலங்கார பல்பு, நீளவாட்டு ட்யூப், பத்தாயிரம் வாட்டு குளோப்பு எல்லாம் எரியும்.
கதீஜா: அப்றம் பயம் என்ன? பாம்பு இருந்தாத் தெரியுமே.
வாண்டு: நானா இருந்தா, ஒரு கழியும் எடுத்துண்டு போயிருப்பேன். கத்தியை எடுக்றத்துக்குள்ளே, பாம்பு கடிச்சுட்டு ஓடிப்போயிடும்.
சூ: அங்கே மூணு கதவு இருக்கும். சாவியும் மாட்டி இருக்கும். நீ திறக்கலாம். ஆனால்....’
ரோ: ஒரே சமயத்திலெ மூணு கதவையும் திறக்கமுடியாதே.
எ: ரோஸி! பேசாமெ கதையை கேளு.
சூ: முதல் அறைக்குள் போ. ஒரு பெரிய நாய் ஒக்காண்டிருக்கும். முறம் மாதிரி கண்கள். பயப்படாதே. தகரியாம அதை தூக்கி, நான் கொடுத்திருக்கும் கம்பளத்து மேல் உட்காரவை. அப்றம் அங்கெ இருக்ற பெட்டியை திற. நிறைய செப்புக்காசுகள் இருக்கும். வேண்டியதை எடுத்துக்கோ.
ஹெ: அப்றம்.
சூ: அப்றம், அடுத்த கதவை திற. அங்கே இருக்கறது பெரிய நாய். பொல்லாது. வண்டிச்சக்ரம் மாதிரி காதுகள். மெல்ல தூக்கி, நான் கொடுத்த சால்வை மேல் உட்காரவை. அப்றம் அங்கெ இருக்ற பெட்டியை திற. நிறைய வெள்ளிக்காசுகள் இருக்கும். வேண்டியதை எடுத்துக்கோ.
லீசா: அவனாலெ தூக்கமுடியாது. அது அவனை தின்னுடும்! 
வா: அடிலெ பிடிச்சு தூக்கணும், லீசா அசடு.
லீசா அவனை அடிக்றா. அவன் அவள் கையை கடிச்சுட்றான். ரகளை. எஜமானி அம்மா ஒரு பாடாக, அவர்களை சமாதானம் செய்து விட்டு, தேனீர் கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றாள். எனக்கு இந்த கதை அரைகுறையா தெரியும். ஆனா, உமது கைச்சரக்கு, இடைச்செருகல்...*
[திரை விழுகிறது]
காட்சி 2: வரலாமா? விட்றுலாமா?
இன்னம்பூரான்
02 04 2012
  • நீங்கள் சொன்னப்றம், அந்த மாமிInline image 1 சொன்னதை சொல்றேன். வர்ரட்டா....!



renuka rajasekaran Mon, Apr 2, 2012 at 2:07 PM
To: Innamburan Innamburan
வாவ் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது
கொஞ்சம் பணி நிமித்தம் கடுமையான நேரம் 
விவரமாக எழுத இயலவில்லை 
சென்ற பகுதி - சார்லி பரௌனின் இணையதள வசதியை எவ்வாறு பயன் படுத்துவது?
தெரிவிக்கவும் 

வணக்கம்
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Mon, Apr 2, 2012 at 2:12 PM
To: 
Tk U, Renuka,
You have also fallen a prey! A retd director of IIT and many others have also fallen a prey. The best way to spread a lie is to mix it with truth. While my son in law's tenure is true. Charlie Brown is An April Fool joke.
Innamburan
[Quoted text hidden]

Tthamizth Tthenee Mon, Apr 2, 2012 at 2:26 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
அன்புடன்
தமிழ்த்தேனீ


4959.jpg
53K

Tthamizth Tthenee Mon, Apr 2, 2012 at 2:27 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
உங்களுக்காக  நானே வரைந்தது

அன்புடன்
தமிழ்த்தேனீ


[Quoted text hidden]

renuka rajasekaran Mon, Apr 2, 2012 at 2:52 PM
To: Innamburan Innamburan

Oh!
Believe it?
I went online searched for it and was even asking my son to explore!
You are great!
There was not even a clue of you doing it!
That is interesting and the lighter side of you!!
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Mon, Apr 2, 2012 at 3:22 PM
To: 
I am temperanmentally more on the lighter side. Physically and mentally also. Some of my hilarious writings were well received in the Internet.
[Quoted text hidden]

Innamburan Innamburan Mon, Apr 2, 2012 at 3:24 PM
To: mintamil , thamizhvaasal
நன்றி பல, நண்பரே! உமது கையொப்பம் உளது. அதை நான் லவட்டிக்கொள்ளலாமா?
இன்னம்பூரான்
[Quoted text hidden]

Tthamizth Tthenee Mon, Apr 2, 2012 at 3:45 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com

கீழ்க்கண்ட படத்தை உபயோகியுங்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

[Quoted text hidden]


renuka rajasekaran Mon, Apr 2, 2012 at 4:30 PM
To: Innamburan Innamburan
That is great!
I love to read them all!
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran