Tuesday, September 20, 2016

சிவகாமியின் செல்வன் 16




சிவகாமியின் செல்வன் 17

இன்னம்பூரான்

20 09 2016

"நான் பழனியிலிருந்து திரும்பி வரும்போது, ஶ்ரீ ராஜாஜியையும், ஶ்ரீ என்.கோபாலசாமி ஐயங்காரையும் இழிவு படுத்தும் கடிதம் ஒன்றை யாரோ ஒருவர், வண்டி நின்ற ஒரு இடத்தில், என்னிடம் கொடுத்து, தமக்கு எதிராக இயங்குபவர்களை என்னை அணுகவிடப்போவதில்லை என்று சொன்னார்கள். நடந்தது என்னமோ நேர் மாறாக என்று நான் அறிவேன். சொல்லத்தகுந்தது எதையும் சொல்ல விரும்புபவர்களை என்னை அணுகவிடாமல்/என்னுடன் பேச விடாமல்/ எனக்கு எழுத முடியாமல் தடுப்பது இயலாத காரியம். அந்த கடிதத்தை என்னிடம் கொடுக்கமுடிந்ததே, அவர்களின் குற்றச்சாட்டை முறியடிக்கிறது. இந்த ஸ்பெஷல் ரயிலில் ஶ்ரீ காமராஜ நாடாரும் என் கூட இருந்தார். பழனி கோயிலிலும் அவர் என் கூட இருந்தார்.எனினும் இந்த பயணத்தில் ராஜாஜியும் கோபால்சாமியும் என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதில் ஐயம் ஒன்றும் கிடையாது.இந்த பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர்கள் தான்.ராஜாஜி என்னுடைய நெருக்கமான நண்பர் மட்டுமல்ல;அவர் தான் என்னுடைய நிலைப்பாடுகளுக்கு உகந்தவாறு சொல்லிலும்,செயலிலும் அழுத்தந்திருத்தமாக இயங்குபவர்.பாகிஸ்தான் விஷயத்தில் என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டு, ஜூலை 15, 1942 அன்று காங்கிரசை விட்டு விலகியவர், அவர் என்பது எனக்கு தெரியும் . சற்றும் தயக்கமின்றி என்னுடன் கருத்து வேறுபாடு கொண்டதை பொதுமன்றத்தில் அவர் வைத்தததை, அவரை பாராட்டுகிறேன். அவர் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி. தன் மனசாக்ஷிக்கு உகந்த படி துணிவுடன் நடப்பவர்.அவருடைய அரசியல் ஞானமும், நாணயமும் கேள்விக்கு உட்படுத்த முடியாதவை.எனவே அவருக்கு எதிராக ஒரு கும்பல் (clique)இயங்குவது எனக்கு வேதனை அளிக்கிறது.மதராஸ் காங்கிரஸில் இந்த கும்பலின் ஆதிக்கம் தான் செல்லுபடி ஆகிறது. மக்கள் என்னமோ ராஜாஜி பக்கம். என்னால் தான் இத்தனை பெரிய கூட்டங்கள், வரவேற்புக்கள் என்று நினைக்கும் அளவுக்கு நான் அகந்தை கொண்டவனோ, முட்டாளோ அல்ல. அவருக்குத்தான் (ராஜாஜி)அந்த ஈர்ப்பு. தென்னிந்திய காங்கிரஸ்காரர்கள் அவரவர் கருத்துக்கிணஙக் செயல் படுவார்கள். ஆனாலும் மற்றவர்கள் யாவராலும் தாங்கமுடியாத பொறுப்பை ஏற்கக்கூடிய சக்தியுடைய ராஜாஜியின் பணியை தவறவிட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பது என் கடமை.

மோ.க. காந்தி
ஃபெப்ரவரி 5, 1942
ஹரிஜன்: 10.2.1932


“Clique” – Kamaraj vs Rajaji (& Gandhi)

CURIOUS
On my return journey from Palani, someone gave me at one of the halts a letter reviling Shri Rajaji and Shri Gopalaswami (N. Gopalaswami Iyengar, Chairman, Jubilee Celebration Committee of the Dakshina Bharat Hindi Prachar Sabha, Madras) , and informing me that they would not allow anyone against them to come near me. Now I know to the contrary. No one who wanted to say anything worth-while could be prevented from seeing me or writing to me. The delivery of the very letter disproves the allegation. Shri Kamaraja Nadar was with me on the same special. He was with me in the Temple on the Palani Hill. But there is no doubt that both Rajaji and Gopalaswami were closest to me during the journey. They had arranged it. Rajaji is one of my oldest friends and was known to be the best exponent in word and deed of all I stand for. That, in 1942, he differed (On the issue of demand for Pakistan, Rajagopalachari, resigned from the Congress Party on July 15, 1942) from me, I know. All honour for the boldness with which he publicly avowed the difference. He is a great social reformer, never afraid to act according to his belief. His political wisdom and integrity are beyond question. I was, therefore, pained to find a clique against him. It is a clique that evidently counts in the official Congress in Madras. But the masses are devoted to Rajaji. I am neither vain nor foolish enough to feel that I could have had the huge public demonstratations all along the route of the pilgrimage, if he had no influence with the masses in Tamil Nadu. Congressmen in the South will act as they think best. But I would be less than loyal to the organization, if I did not warn them against losing the valuable services which no one can shoulder as Rajaji can at the present moment.
En route TO WARDHA, February 5, 1946
Harijan, 10-2-1946
பின் குறிப்பு: 1942ல் நான் பத்தாம் வகுப்பில். வீட்டில் அரசியல் அலசல்கள் எனக்கும் என் தந்தைக்கும் நடக்கும் என்பதால், இது நினைவில் இருக்கிறது. மேலும், அவர் அடிக்கடி புது சொற்களை சொல்லிக்கொடுப்பார். 'clique' என்ற சொல்லுக்கு அகராதியை பார்க்க வைத்தார்.
சித்திரத்துக்கு நன்றி:
http://www.searchforgandhi.com/img/writer/Harijan_img_heading.jpg

சிவகாமியின் செல்வன் 15

சிவகாமியின் செல்வன் 15

இன்னம்பூரான்
20 09 2016

பெருந்தலைவர் காமராஜரை பற்றி தேடிப்படிக்கும் போதெல்லாம், நாம் அவரிடம் கற்கவேண்டியதை கற்றுக்கொள்ளவில்லை என்ற ஆதங்கம் எழுகிறது. காங்கிரஸ் கட்சியின் எதிர்துருவங்கள் ராஜாஜியும் காமராஜரும், அணுகும் முறையில். இருவரும் தேசபக்தர்கள் தான். மாஜியான காலகட்டத்திலும் அவர்கள் தான் ஒரிஜினல் காங்கிரஸ்காரர்கள். 1950/60 களில் இதெல்லாம் வெளிப்படையாக ஊடகங்களால் விமரசிக்கப்பட்டவை. முதலமைச்சரான காமராஜர் முரண்பாடு கொண்டவர்களை, தன்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் உடனடி பதில் சொல்வதில்லை என்ற வழித்தடத்தில் இயங்கினார்.

அரசு இயந்திரம் என்றுமே தானியங்கி. தியாகராய நகரில் இருந்த புகழ் வாய்ந்த ராஜாஜி சேவா சங்கக்கட்டிடத்தை, சிடி இம்ப்ரூவ்மெண்ட் ட்ரஸ்ட் அதிகாரிகள், புதிய கட்டிடம் கட்டுவோம் பேர்வழி என்று, அடியோடு இடித்துத் தரைமட்டம் ஆக்கி விட்டார்கள்.நம்மூர் வாசிகளை தெரியாதா என்ன? இது காமராஜரின் வேலை என்று அடித்துப் பேசிக்கொண்டார்கள்.  சங்கத்தை சேர்ந்த டி.என். சோமசுந்தர நாயரும் மற்றவர்களும் இடிபாடுகளின் படங்களை எடுத்துக்கொண்டி முதல்வரை சந்தித்தார்கள். அவர் 'ஆகட்டும்! பார்க்கலாம்' என்று சொல்லாமல், ' நீங்க போயிட்டு வாங்க. இது ப்த்தி நான் விசாரிக்கிறேன்.' என்றதுடன் நிற்காமல், அந்த தான்தோன்றி அதிகாரிகளை கண்டித்து, அவர்கள் மூலமே ராஜாஜி சேவா சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுத்தார். சிவகாமி ஆத்தா தன் திருமக்னை 'ராசா' என்றழைத்தது பொருத்தமே.

இந்த நிகழ்வு மற்றொன்றை நினைவு படுத்துகிறது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டீஷ் ராயல் விமானப்படை உலகபுகழ் வாய்ந்த கொல்ன் கதீட்ரலை தாக்கி உடைத்து விட்டது, குறி வைத்துத் தாக்காவிடினும். போர் முடிந்த பின்னர், அந்த ராயல் ஏர்ஃபோர்ஸ் ஊழியர்களே சந்தா வசூல் செய்து அந்த கதீட்ரலை மராமத்து செய்து, முன்மாதிரியே கட்டி கொடுத்தனர்.

அந்த பெருந்தன்மையை இழந்து நிற்கிறார்கள், தமிழ் மக்கள், இன்று.

சித்திர்த்துக்கு நன்றி:

Monday, September 19, 2016

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:V

Innamburan S.Soundararajan

 ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி

'Innamburan S.Soundararajan' innamburan@gmail.com [aalappaakkamakkampakkamum] 


ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்:V



இன்னம்பூரான்
20 09 2016

மீள்பதிவுகள் தொடர்புக்கு மட்டும் என்பதால், அவற்றை பிடிஎஃப் கோப்பாக இணைத்து,ஶ்ரீ  சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்  (பெரியவா) அசுவமேத யாகத்தை பற்றி சொல்லியதின் சாராம்சம் இங்கே.

"இந்த காலத்தில் இருக்கிற நாம் எல்லாரும், அச்வமேத யாகம் செய்ய முடியுமா?...பழைய காலத்திலேயே க்ஷத்திரிய வர்ணத்தில் பிறந்த மஹாராஜாக்கள் இரண்டொருத்தர் தான் அச்வமேத யாகம் செய்ய முடிந்திருக்கிறது...நம்மில் யாராவது அச்வமேத யாகம் செய்ய முடியுமா? என்று கேட்பதே அசம்பாவிதம் தான்...முடியுமா, முடியாததா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எதற்காக அச்வமேத யாகம் செய்யவேண்டும்? நம் பதவியையும், பவிஷையும் அது காட்டுகிறதே என்பதற்காகவா? அசுவமேதம் செய்தால் இந்திரலோகம் கிடைக்கும் என்பதற்கா? இதற்கெல்லாம் என்றால் அச்வமேதம் செய்யவே வேண்டாம். பதவு, பவிஷு, தேவ லோக செளக்கியம் எல்லாமே அஹங்காரத்தை வளர்த்துக்கொள்கிற காரியங்கள் தாம்; நம்மிடம் கொஞ்ச நஞ்சம் ஞானம் கூட சேரவொட்டாமல் இடைஞ்சல் செய்கிறவை தாம்...(அச்வத்தையும் (புரவி}, பகவன் நாமாவளி,ஶ்ரீ லலிதாம்பிகை தோத்திரம் பற்றி ஒரு நீண்ட உரை)...அச்வமேதம் செய்வதை விட்டு விட வேண்டியது தானா? இல்லை. நம் அனைவருக்கும் சாத்தியமான ஒரு அச்வமேதத்தை சாஸ்திரங்களில் சொல்லி இருக்கிறது. ஜீவகாருண்யத்தின் மேல் செய்யவேண்டிய அனேக பரோபகாரங்களை சொல்லிக்கொண்டே போய், அவற்றுக்கெல்லாம் சிகரம் மாதிரி ஒன்றைச் சொல்லி , இதுவே அச்வமேதத்தின் பலனை அடையக்கூடியது  என்கிறது. அது என்ன?

(தொடரும்)

[1932ம் வருஷத்திலிருந்து பெரியவர்கள் வழங்கிய உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்தது.]
சித்திரத்துக்கு நன்றி:









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
__._,_.___

Posted by: "Innamburan S.Soundararajan" <innamburan@gmail.com
Reply via web postReply to sender Reply to group Start a new topicMessages in this topic (1)
This Group is restricted to Invitees only for ensuring compliance with the Terms, Guidelines & Privacy conditions of Yahoo and this Group and to guard against phishing. Most members of this Group are from an Elder Community in Aalapaakkam.
Respecting their wishes, all may refrain from commenting upon the community and its administrations.
Yahoo! Groups
• Privacy • Unsubscribe • Terms of Use
.

__,_._,___

II& III & IV-செல்வன்:சுபாஷிணி:இன்னம்பூரான் .pdf
87K 

பாமரகீர்த்தி [3] இன்னம்பூரான் பக்கம் [8]

Innamburan S.Soundararajan

பாமரகீர்த்தி [3] இன்னம்பூரான் பக்கம் [8]

Innamburan S.Soundararajan Tue, Sep 20, 2016 at 6:58 AM



பாமரகீர்த்தி [3] இன்னம்பூரான் பக்கம் [8]

-இன்னம்பூரான்
18 09 2016
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=72071

  • Monday, September 19, 2016, 5:35


innamburan

சமுதாயத்தையே பல நூற்றாண்டுகளாகப் பாமரனைப் பற்றிய மறதி நோய் பரவலாக ஆட்கொண்டிருப்பதைக் கண்டு வருந்தினோம். பகிர்வார்கள் தென்படாததால், நேற்றைய பாமரனின் கீர்த்தியைப் பாடாவிடின், இன்றே அவரை மறந்துவிடுவார்கள் என்பது திண்ணம். அதனால்தான் அவசரம், பொறுமையின்மை. சமுதாய அக்கறையின்மையைப் பொறுத்தார் பூமி ஆளலாம்; தரிசு பூமியை. ஆனால், அவர்களால் தரணி ஆள முடியாது.
உங்களுக்கு மாரியப்பனை தெரியுமோ? தெரிந்திருக்காது. தற்பொழுது பாழடைந்த மண்டபத்தின் தூண்கூட, ‘அவன் இங்கு தான் இளைப்பாறினான்; ஒரு கல்வெட்டு பதிக்க, ஒரு கோடி ரூபாய் கொடுங்கள்.‘என்று அறை கூவும். நம்ம நோபெல் பரிசு வெங்கட்ராமனுக்குக் கூட (தற்காலம் அவர் தான் உலகப்புகழ் இங்கிலாந்து ராயல் சொஸைடி தலைவர்)  இப்படித்தான் ஆச்சு. அவன் சூடிகையான பையன். படிக்காமலே மார்க் வாங்குவான். அவனுக்கு நாலு வகுப்பிலும் நான்தான் வாத்தி. அன்றே நோஸ்ட்ரடமாஸ் மாதிரி, இவன் நோபெல் பரிசு வாங்குவான் என்று என் பெண்டாட்டியிடம் சொன்னேன். நீங்கள் எப்டி அப்டி சொன்னேள் என்று மூக்கிலே விரலை வைக்கிறாள் என்றெல்லாம் ‘புரட்டுக்கதை’ கட்டிய பேராசிரியர்கள் பலர். வெங்கட், பாவம், நான் அந்த ஊர்ப்பக்கமெல்லாம் தலை என்ன? உள்ளங்கால் கூட வைக்கவில்லை என்று அங்கலாய்த்துக்கொண்டார். அவர் தருமமிகு சென்னயின் ம்யூஸிக் சபாவுக்கு அநாமதேயமாக க்யூவில் நின்றதை கண்ட ஹிந்து ரவி அவரை முன்வரிசைக்கு அழைத்து வருவதற்குள் அவருடைய தாத்தாவின் ‘பால்ய சினேகிதர்கள்’ ‘பிலுபிலு’ என்று மொய்த்து விட்டார்களாம். அந்த மாதிரிதான் மாரியப்பன் கதையும்னேன்.
ஆம். மாற்றுத் திறனாளியான மாரியப்பன் ரியோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் T 42 High Jump at Paralympics உயரக் குதிக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, அழியாப் புகழும், கோடிக்கணக்கான ரூபாய் பரிசுகளும் பெற்ற பெரியவடுகம்பட்டி பாமர இளைஞர். வயது 21.  அவர் வாகை சூடியதைப் போற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயம், அவருக்கு சான்ஸே இல்லை என்பதுதான். வாழ்நாள் முழுதும் எதிர்நீச்சல் தான். அவன் பள்ளிப்படிப்பின் போதே, தாங்கமுடியாத கடன்சுமை, சகோதரியின் திருமணம் பொருட்டு. தந்தை தங்கவேலு, இவர் மழலையாக இருக்கும்போதே, விலகி, கண் காணாத இடத்துக்குப் போய்விட்டார். இப்போது வந்து நிற்கிறார். நற்றாய் சரோஜா செங்கல் சூளையில் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றினார். சகோதரி சுதாவோ ஒரு தியாகி. தன் படிப்பை நிறுத்தி விட்டுத் தன் உடன்பிறப்புகளைக் கவனித்துக்கொண்டார். ஐந்து வயதில், ஒரு பஸ் ஏறிய விபத்தில் இவருக்கு காலில் நல்ல அடி. நிரந்தர ஊனம். 15 வருடம் கழிந்த பின்னும், அந்த வழக்கு ‘ஜிவ்’வுன்னு இழுத்துக்கொண்டே போகிறதாம்! எனினும் எல்லா விளையாட்டுக்களிலும் பங்கு எடுத்து வந்தார். ஆனால், சகபாடிகளின் கொடுமை தாங்காமல் தனித்துச் சிறப்புத்தரக்கூடிய ஹை ஜம்ப் மட்டுமே நாடி,அதைப்பயின்றார். அந்தத் திருப்புமுனைக்கு வித்திட்டது அவர் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நல ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன். பல இன்னல்களைக் கடந்து, ஏற்கனவே லண்டன் பாரா ஒலிம்பிக்ஸ் 2012இல் பங்கேற்கத் தேர்ந்தெடுத்த பின்னர், நிதி நெருக்கடியால், இவருக்கு லண்டன் போக முடியவில்லை. அடுத்த வருடம் போக ஆர்வத்துடன் இருக்கிறார். தமிழ்நாட்டு முதல்வர் ரூபாய் இரண்டு கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சரகம் ரூபாய் 75 லக்ஷமும் இவருக்குப் பரிசாக கொடுத்தனர். கார்களும், மோட்டார் சைகிள்களும், துட்டும், ஓடி வந்த வண்ணம்.
நம்ம மாரியப்பன் தன்னடக்கத்துடன், ஏமாற்றுவித்தைக்காரர்கள் கையில் சிக்காமல், நிறைவு வாழ்க்கை வாழ்ந்து, பல வெற்றிகள் அடைந்து நம் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பாராக.
-#-
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, September 18, 2016

வீராங்கனை பாக்யா




வீராங்கனை பாக்யாவை ராஜஸ்தானுக்கு அனுப்பலாமா?
இன்னம்பூரான்
Printed from

Cauvery water row: Woman who burnt 42 buses is only 22

Bangalore Mirror Bureau | Sep 17, 2016, 11.08 PM IST
Cauvery water row: Woman who burnt 42 buses is only 22
The city police have identified and arrested the mystery woman allegedly controlling and instigating the mob that torched 42 vehicles belonging to Tamil Nadu-based private travel firm, KPN, at D'souza Nagar on Monday. She was arrested at her home on Thursday night.

The accused is 22-year-old C Bhagya, from Yadgir, in North Karnataka. She is staying with her parents Chandrakanth and Yellamma in Girinagar, close to the KPN garage.

She is a daily-wage labourer, who moved to the city with her parents two years ago.

"Bhagya was arrested on Thursday night, based on CCTV footage recorded in the vicinity of the incident. She was produced before a local court on Friday and was taken into police custody as her exact role and motive behind the torching of the buses and instigating the mob is yet to be ascertained. Since she is a woman, she cannot be kept in the police station overnight and has been sent to a remand home in Madiwala. She will be brought to RR Nagar police station on Saturday morning by a team of women police personnel and will be interrogated," said an officer who is part of the investigation.

After her interrogation, she will be remanded to judicial custody and her chances of getting bail for the next six months are slim. The accused, who is from a poor economic background, is finding it difficult to hire a lawyer to fight her case. The city's advocates association, however, has offered free legal aid for those arrested while fighting for the Cauvery water cause and Bhagya might be one who avails of the offer.


Preliminary investigations and CCTV footage show Bhagya supplying diesel and petrol to the accused and throwing it on the buses. The police are yet to ascertain if she is a habitual offender and part of a pro-Kannada organisation.


She has been booked for attempt to murder (IPC 307), unlawful assembly (IPC 143), rioting (IPC 147), rioting with deadly weapon (IPC 148), voluntarily causing hurt by dangerous weapons or means (IPC 324), causing damage (IPC 427), damage by fire or explosive substance (IPC 435) and Column 2 of Prevention of Destruction and Loss of Property Act of 1981. Bhagya's involvement came to light after the RR Nagar police arrested seven youths, of whom five were from D'souza Nagar. The accused told police that they were instigated to commit the acts of arson by an unidentified woman. This confession led to Bhagya's arrest.


When contacted, KP Natarajan, the Salem-based owner of KPN travels, said his employees had informed him of the arrest and also stated that his injured drivers had confirmed that it was the same woman instigating the mob that set his vehicles ablaze.


"I was told that the police have arrested a young woman in connection with the incident. My drivers have already confirmed her identity and stated that she was the one leading the mob during the attack. We do not know much about her. We are also planning to submit a petition to the chief minister of Karnataka seeking stern action against those responsible for the incident," Natarajan added when contacted on Friday evening.





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

சமுதாயத்தை தகனம் செய்யலாமா?


சமுதாயத்தை தகனம் செய்யலாமா?
மனிதர்கள் பெற்ற குழந்தைகளுக்கு இழைக்கும் இந்த கொடுமையை அரசும், சமுதாயமும், தனி மனிதர்களும் என்றோ தடுத்திருக்கவேண்டும். இது இந்தியாவில் எங்கும் ஓரளவாவது இருக்கிறது. சமுதாயத்தையே தகனம் செய்து விட்டால் என்ன?
இன்னம்பூரான்
19 09 2016
Printed from

366 children in Rajasthan 'divorcees': Census

TNN | Sep 18, 2016, 10.13 PM IST
366 children in Rajasthan 'divorcees': Census
JAIPUR: At least 366 children between 10 and 14 years in Rajasthan are 'divorcees', according to a Census report on marital status. The report also points out that there are 3,506 'widowed' and 2,855 'separated' children within the same age group.


The door-to-door survey identified the problems of separation, divorce and young widows in the state. It states that there are nearly 2.5 lakh and 13.62 lakh married persons in the age group of 10-14 and 15-19, respectively. As per the data, out of the 3.29 crore married persons across all age groups, around 4.95% of them are minors.


"Divorce and separation are a direct fallout of atrocities by the family, demands of dowry , birth of a baby-girl, incompatibility and even extra-marital affairs. If the census enumerator were given the questions to find out instances of polygamy among minors, the results would have been shocking," said Rajiv Gupta, former head of sociology department, Rajasthan University. The retired professor recalled his interviews with child bridesgrooms done for a research years ago. He said, "The life of a child who is divorced or widowed is worse than hell as she has to live with the stigma for years or forever."


A testimony to the prevalence of child marriage in India, the report sheds light on the failure of government schemes. Rajasthan sees mass child marriages on Akha Teej, and the government had started campaigns to discourage the practice.


However, sociologists believe that the government needs a holistic campaign as child marriages are not restricted to Akha Teej.








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்




 ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்



I.
காஞ்சி மடத்தை பற்றிய சுபாஷிணியின் தனிமடலின் பின்னூட்டங்கள் அசுவமேதை யாகத்தின் புரவியைப்போல திக்கெட்டும் கட்டுக்கடங்காமல் ஓடின. எனவே, அதிலிருந்து மூன்று பதிவுகளை மட்டும் தற்காலிகமாக மீள்பதிவு செய்து ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை பற்றி மட்டும்  அவருடைய 1932/33 வருட உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்து கல்கியில் 1976ம் வருடம் வழங்கப்பட்ட பதிவுகளை ஆதாரமாக வைத்து, எழுதுகிறேன். அவரை பற்றி, பெரியாரை பற்றி வந்தது போல ஏகப்பட்ட விஷய தானம் ஒலி/எழுத்து என வெளி வந்துள்ளது. அவற்றில் பரணீதரனும், வானதி பதிப்பகம் மூலமாக ரா.கணபதியும் எழுதிய ஆன்மீகக்கட்டுரைகள் ஆத்திகர்களால் போற்றப்பட்டாலும், நாட்தோறும் எல்லா இதழ்களும், தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றி செய்திகள் வந்த வண்ணம் உளன.கலவை இருக்கலாம். அவற்றை நாடாமல், இந்த தொடருக்கு, நம்பகமான அவருடைய 1932/33 வருட உரைகள், ஶ்ரீமுகங்கள், கட்டுரைகளிலிருந்து தொகுத்து கல்கியில் 1976ம் வருடம் வழங்கப்பட்ட பதிவுகளை மட்டும் முன்வைத்து, பணிவுடன், அந்த மாமுனிவரின் வாக்குக்களின் சாராம்சத்தை பதிவு செய்கிறேன். 13 வயதில் பீடத்தில் அமரவைக்கப்பட்டு, 87 வருடங்கள், அதை அவர் அலங்கரித்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை கணக்கிடுவது எளிது அல்ல. நான் இங்கு பதிவு செய்யப்போவது, இரு வருட தொகுப்பின் சாராம்சம். அவர்  ஒரே உரையில் பல விஷயங்களை பற்றி பேசுவார். பல உரைகளில் பக்தி, புராணம், வேதம், இதிஹாசம் ஆகியவை மற்றவையுடன் இடம் பெறும். அவற்றை எல்லாம் இங்கு அலசவில்லை. அவரை பற்றி அறிய உதவும் வகையில் இந்த பதிவு அமைகிறது. அவர் அந்தக்காலத்து மனிதர். 83 வயது ஆகும் நான் பிறந்த வருடம் 1933. அவருக்கு அப்போது அவருக்கு வயது கிட்டத்தட்ட நாற்பது. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முந்தைய சமாச்சாரம் எனலாம். 

அவரொரு அத்வைதி. காஞ்சி மடத்தில் அத்வைதிகள் பெரும்பாலாராக இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், அவர் பால் பிரண்டனையும், கிரேக்க ராணியையும், கிருபானந்த வாரியாரையும், வில்லுப்பாட்டு ஆறுமுகனாரையும், நானி பால்கிவாலாவையும், க்ரிஸ் ஆன்ஸ்ட்டூஸையும், மற்றும் எண்ணற்ற அத்வைதிகள் இல்லாதவர்களையும் ஆகர்ஷித்தவர்.

(தொடரும்)






Friday, September 16, 2016

சிவகாமியின் செல்வன் 14

Innamburan S.Soundararajan

சிவகாமியின் செல்வன் 14

Innamburan S.Soundararajan Fri, Sep 16, 2016 at 8:57 PM



சிவகாமியின் செல்வன் 14

"...ஏங்க...நீங்க ஒரு போலீஸ் அதிகாரி தானே...?சட்டம், ஒழுங்கு ஒங்க கையிலே தானே இருக்கு...? தப்பு செய்யறவன் யாரா இருந்தாலும் பிடிச்சித் தண்டிக்க வேண்டியது தானே...குற்றவாளியை பிடிக்கிறதா வேணாமான்னு சீஃப் மினிஸ்டரு கிட்ட கேக்குறதுக்கா விருதுநகர்லேருந்து கிளம்பி வந்துருக்கீங்களான்னேன்..?... தவறு செய்யறவன் யாராயிருந்தா என்ன? சட்டப்படி நடவடிக்கை எடுங்க...! என்னை மாமா, தாத்தான்னு ஆயிரம் பேர் சொல்லுவாங்க...ஜாதியை கூட சொல்வாங்க...இதையெல்லாம் காதிலே வாங்க வேண்டாம்ன்னேன். அப்படிச்செய்யலேன்னா அந்த பொறுப்புக்கே நீங்க தகுதியில்லேன்னு அர்த்தம்...!

சமூகநலன் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் செவ்வனே பணிபுரியவேண்டும் என்று காமராஜர் கடைபிடித்த நன்னடத்தையுடன் பிற்கால நிகழ்வுகளில் சிலவற்றை நினைத்தாலே மனம் பதைபதைக்கிறது.

சிலநாட்களுக்கு முன் வழங்கிய தீர்ப்பில் உச்சமன்றம் 2008ம் வருடம் திமுக ஆட்சி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து விட்டது. அந்த அரசாணைப்படி அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை சாக்கிட்டு ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 1,400 கைதிகளை விடுதலை செய்தது. அப்போதே, இது விஷயமாக பலத்த குதிரைபேரங்கள் நடந்ததாக பேச்சு பரவலாக இருந்தது. 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த சேகர் என்பவரை, இதை முன்னுதாரணமாகக் கூறி விடுதலை செய்ய சொல்லி ஒரு மனு 2015ல் தாக்கல் செய்யப்பட்டது. 1,400 பேருக்கு ஒரு நீதி, ஒருவருக்கு மட்டும் மற்றொரு நீதியா என்ற கேள்விக்கு பதில் அளித்து அவரை விடுதலை செய்ய உத்திரவிட்ட கோர்ட்டார் கூறிய கருத்து:

"குற்றவாளிகளை மன்னித்து விடுதலை அளிக்கும் கவர்னரின் அதிகாரத்தை(அரசியல் சாஸனத்தின் 161 வது  பிரிவு)சகட்டுமேனிக்கு ஒட்டுமொத்தமாக பிரயோகிப்பது சரியல்ல. ஒவ்வொரு நபர் விஷயத்திலும் தனித்தனியாகப் பரிசீலித்து இருக்கவேண்டும்."

2008ல் விடுதலையான இந்த குற்றவாளிகள் வெளிவந்த பின் செய்த அட்டுழியங்கள் பற்றி விவரம் இல்லை. ஆனால், கொடுமையான குற்றங்கள் நாள்தோறும் நிறைவேறி வருகின்றன. இத்தகைய அரசாணையை காமராஜர் பிறப்பித்திருப்பாரா என்ற அசட்டுக்கேள்விக்கு பதில், 'நிச்சயம் அப்படி பிறழ்ந்து சட்டத்தையும் ஒழுங்கையும் காற்றி பறக்க விட்டிருக்கமாட்டார் என்று தான் தோன்றுகிறது. அண்ணாவும் காமராஜர் மாதிரி தான் முடுவு எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.

ஒரு உபரி கேள்வி: 2008ம் வருடத்து செல்லுபடி ஆக தகுதியற்றது என்று இன்று சொல்லப்படும் அரசாணையை 2016ல் ரத்து செய்வதால், மீண்டார் வருவரோ கூண்டில் அடைபட? 

2006ம வருட புள்ளி விவரப்படி, அக்காலகட்டத்தில், தமிழ் நாட்டில் விசாரணைக்கு காத்திருந்த குற்றம் சாற்றப்பட்ட அண்டர் ட்ரையல் கைதிகள் 15.5% சிறைச்சாலைகளின் மொத்த ஜனத்தொகையில். ரிமாண்டில் வைக்கப்பட்டவர்கள் 45.1 %. இவர்கள் குற்றவாளி என அறிவிக்கப்படாதவர்கள். காமராஜரின் கவனம் இவர்கள் மீது தான் சென்றிருக்கும்.

தமிழ்நாட்டுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை போலும்!

சித்திரத்துக்கு நன்றி:







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, September 15, 2016

எங்கே தொலைந்தது, இந்த சகிப்புத்தன்மை?

Innamburan S.Soundararajan

எங்கே தொலைந்தது, இந்த சகிப்புத்தன்மை?

Innamburan S.Soundararajan Fri, Sep 16, 2016 at 7:20 AM

எங்கே தொலைந்தது, இந்த சகிப்புத்தன்மை?

இன்னம்பூரான்
16 09 2016: 7 15 காலை


OPINION » COMMENT

Published: September 16, 2016 01:14 IST | Updated: September 16, 2016 03:45 IST  September 16, 2016

The atheist and the saint

  • thinking big: “Kundrakudi Adigalar would be the most unlikely friend of Periyar.” Periyar's 137th birth anniversary is on September 17.
    Photo: dravidar kazhagam 
    thinking big: “Kundrakudi Adigalar would be the most unlikely friend of Periyar.” Periyar's 137th birth anniversary is on September 17.

A deep mutual respect leavened their disagreements, bringing Periyar and Kundrakudi Adigalar closer during the caste ferment of the 1950s

In 1945, a novitiate of barely 20 years joined Dharumapuram Mutt, the renowned Saiva monastery. Soon he gained a deep knowledge of Saiva Siddhanta, Tamil literature, and Sanskrit. Kundrakudi Thiruvannamalai Mutt was in search of a junior pontiff and the pontiff’s eyes fell on the young monk. A monk switching a monastery was not common, but the reluctant Dharumapuram pontiff was persuaded to let this young monk go. Three years later, the young monk was anointed pontiff.
The new pontiff showed a strong reformist streak. Saiva monasteries, despite a formal avowal of Saiva precepts as the qualification for recruitment into the order, had in practice become the exclusive preserve of upper-caste Vellalars. He expressed his dissatisfaction, and soon became the first head of any monastery to enter an Adi Dravidar neighbourhood. A strong advocate of using Tamil for archanai (prayers and offerings), he would champion the abolition of caste restrictions for temple priests.
Earlier he had participated in the Quit India movement and would take an active part in the Bhoodan movement. Such was the respect that he commanded that he came to be called Kundrakudi Adigalar (1925-1995). This saint would be the most unlikely friend of Periyar E.V. Ramasamy, the great atheist and leader of the non-Brahmin party, the Dravidar Kazhagam (DK).
Pitted against each otherIn the mid-1950s, Periyar had launched major agitations to publicly break the idols of Pillaiyar and burn the images of the god Rama. These agitations evoked a swift response from Kundrakudi Adigalar. Through a forum called the Arul Neri Thirukkoottam, he responded with counter pamphlets. This forum encompassed the major mutts, including the Kanchi Mutt which evidently saw the advantage of fighting Periyar through a non-Brahmin religious leader. The Kanchi Mutt was soon to be disappointed.
Around the turn of 1955, Periyar toured Malaya. Kundrakudi Adigalar followed some weeks later — evidently planned as a counter. It was unusual for pontiffs to cross the seas, and Adigalar commented that only because of the “mischief of atheists” had he ventured to take a ship. He also expressed the hope that atheistic propaganda would have the beneficial effect of drawing more pontiffs out of their cloisters.
During his tour Adigalar demonstrated tact in addressing contentious issues. At a public meeting, he asserted that Saivism gave no scope for castes and polytheism. Periyar, as was his wont, commented on Adigalar’s tour shortly after his return to Chennai: “One ‘samiyar’ came there; and when I was asked about him, I said that he is one of us. Only because of the garb that he had adopted did he have to take such public positions. I advised our men not to cause him any trouble.” This was at least a grudging acknowledgment of Adigalar.
By then many well-wishers realised that a conflict between Periyar and Adigalar would not be in the larger interests of Tamil society. A secret meeting of the two was arranged in Erode.
Periyar offered to go himself. Adigalar was housed in the first floor; wondering if the old man could take a flight of steep stairs, he offered to meet Periyar on the ground floor. Periyar insisted that it was not murai, propriety and protocol, for the Mahasannidhanam to wait at the entrance. The proper way to address a Saiva pontiff was in the third person and Periyar would use the term Mahasannidhanam to refer to Adigalar all through their long association.
Meeting of mindsWhen Periyar reached Adigalar’s room, he rose from his seat. In his anxiety to respond to the greeting, Periyar’s walking stick slipped, even as he insisted all the while that Adigalar should take his seat. Adigalar was seated on a two-seater couch. When invited to sit along with him, Periyar refused. Throughout the meeting Periyar would demonstrate his respect for tradition and protocol despite the fact that the pontiff was some half-a-century younger to him!
Soon the two were left alone to have a frank discussion. Periyar launched a diatribe against god and religion which sanctioned caste-based oppression and untouchability. His impassioned outburst left Adigalar speechless. What answer can I provide, he wondered. Mulling over the chasm between precept and practice, he consoled himself that if only the ideas of the great Tamil saints Appar, Ramanuja and Ramalinga Adigal had been practised, there would have been no need for a Periyar.
Finally, Periyar said: “What personal quarrel do I have with god? I have not even set my eyes on him. My objective is that the indignities heaped on men should be wiped away.” “Let’s work together,” replied Adigalar. “But will your traditions give room for such cooperation?” asked Periyar. “Traditions are meant to change!” responded an optimistic Adigalar.
Tempers cooled down after this meeting. Soon after, in September 1956, Periyar’s birthday was celebrated by DK at Golden Rock, Tiruchy. Adigalar was invited to felicitate at the meeting. Initially hesitant to accept, he soon relented. It was the first time the two appeared together on stage. Periyar was elated, and frequently exchanged words with Adigalar. Often the two broke into smiles and barely suppressed laughter. The crowd was jubilant and photographers pounced on what was undoubtedly a great photo-op. After the meeting, when a photographer requested the two to come to his studio, Periyar reprimanded him that it was not appropriate for the Mahasannidhanam to be called to the studio.
At the meeting, one speaker launched the usual DK attack on religion. A visibly annoyed Periyar tapped his walking stick, hinting that the speaker soft-pedal the differences. When invited to felicitate, Adigalar wrapped a ponnadai (shawl) around Periyar, an act that would be criticised by both believers and the atheists. Adigalar first praised the great work of Periyar in the cause of eradicating caste inequities, and then provided a point-by-point rebuttal of the atheist criticism. Periyar was once again magnanimous in his acceptance speech. “Tamils are denigrated as Shudras. What do I care if that indignity is wiped away by god or by our Mahasannidhanam, as long as it is wiped out?… The Mahasannidhanam should understand our grievances, and not be offended by how we express them.”
Soon after the meeting the two travelled together in a car to Tirunelveli. When they alighted at Tirunelveli, they reiterated their commitment to eradicating caste and give Tamil its due.
Despite their disagreements this was to be the beginning of a great friendship that would last until Periyar’s death in 1973.
A.R. Venkatachalapathy, historian, is writing a biography of Periyar. Email: chalapathy@mids.ac.in




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, September 12, 2016

சிவகாமியின் செல்வன் 13

சிவகாமியின் செல்வன் 13

Innamburan S.Soundararajan Tue, Sep 13, 2016 at 10:18 AM



சிவகாமியின் செல்வன் 13

இன்னம்பூரான்
செப்டம்பர் 13, 2016

"...ஏங்க...நீங்க ஒரு போலீஸ் அதிகாரி தானே...?சட்டம், ஒழுங்கு ஒங்க கையிலே தானே இருக்கு...? தப்பு செய்யறவன் யாரா இருந்தாலும் பிடிச்சித் தண்டிக்க வேண்டியது தானே...குற்றவாளியை பிடிக்கிறதா வேணாமான்னு சீஃப் மினிஸ்டரு கிட்ட கேக்குறதுக்கா விருதுநகர்லேருந்து கிளம்பி வந்துருக்கீங்களான்னேன்..?... தவறு செய்யறவன் யாராயிருந்தா என்ன? சட்டப்படி நடவடிக்கை எடுங்க...! என்னை மாமா, தாத்தான்னு ஆயிரம் பேர் சொல்லுவாங்க...ஜாதியை கூட சொல்வாங்க...இதையெல்லாம் காதிலே வாங்க வேண்டாம்ன்னேன். அப்படிச்செய்யலேன்னா அந்த பொறுப்புக்கே நீங்க தகுதியில்லேன்னு அர்த்தம்...!

சொல்லக்கேட்டதாக சொன்னவர்: சூலூர் லெக்ஷ்மணன்.

இடம், பொருள், ஏவல்: " ஐயாவோட சகோதரி மகன்கள் ரெண்டு பேர் விருதுநகரில் இருக்கின்றனர். அதில் ஒருவர் சரியில்லை...நாங்க கேட்டா 'காமராஜ் என் தாய்மாமன் தெரியுமா? என்று எங்களையே மிரட்டுகிறார்." என்ற கவலையுடன் பெரியவரின் அபிப்ராயம் கேட்க வந்த காவல் அதிகாரியிடம்.

என் குறிப்பு 1: 
பிரபலங்களின் வரலாறு மற்றவர்கள் மூலமாக வரும் போது, அவர் காந்திஜியாக இருந்தால் கூட வாயாவார்த்தையாக,யதார்த்தமான சொல்மாற்றம், மிகை, இடைச்செருகல், புரட்டுக்கதை இத்யாதி இடம் பெறலாம். காஞ்சி முனிவரை பற்றிக்கூட அவருடைய சீடர்களே மிகைப்படுத்தலாம். விரோதம் பாராட்டுபவர்களோ அதகளம் செய்வார்கள். அதே மாதிரி காமராஜரை பற்றியும் செய்திகள் புரளலாம். திரு.லெக்ஷ்மணன் செய்தி நம்பகத்தன்மை உடையது என்பது என் கருத்து. லவலேசமும் ஐயம் இருந்தால் அவற்றை போடமாட்டேன்.

என் குறிப்பு 2: 

எம்.ஓ.மத்தாய் என்று ஒருவர் நேருஜியின் காரியதரிசியாக இருந்தார். அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு நல்ல கடிதம் வந்திருக்கிற்து. ஆனால், அவர் எழுதிய 'டெல் ஆல்' புத்தகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறி தான். அதில் அவர் நேரு இந்திராவிடம், 'இந்த திருட்டு உன் பசங்களின் கைங்கர்யமா?என்று கேட்டதாக எழுதியிருக்கிறார்.பின்னணி: உளவுத்துறை ராஜீவும், சஞ்சய்யும் ஒரு காரை லவட்டியதாகவும், தாத்தா பெயர் சொல்லி தப்பியதாகவும், அவரிடம் போட்டுக்கொடுத்து இருக்கிறது. அப்படியிருந்தால், அது அவர்கள் கடமை என்க. இது எத்தனை தூரம் நிஜம் என்று தெரியாது.

என் குறிப்பு 3: 
இன்று ஒரு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அவருடைய வீட்டில் வருமானவரி சோதனை நடந்த பின். உளவுத்துறை, முன்னரே, வருமுன் காப்போனாக, உண்மை விளம்பியதா என்ற வினா எழுகிறது


-#-
சித்திரத்துக்கு நன்றி:



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com