Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Wednesday, July 22, 2015

ஜமாய் பாபு !!! தொடர் [3]

ஜமாய் பாபு !!! தொடர் [3]


இன்னம்பூரான்
ஜூலை 22, 2015

அந்தப்புரங்களில் கூடகோபுரங்களும் உண்டு; மாடமாளிகைகளும் உண்டு; வானளாவும் உப்பரிகைகளும், புஷ்பமாரி பொழியும் நந்தவனங்களும் உண்டு. எங்கும் காதலும், காமமும் ஆட்சி செலுத்துவதாக ஒரு மர்மமும் உண்டு. சீனியர், ஜூனியர், சப்ஜூனியர் ராணிமார்கள் கோலோச்ச நினைத்தாலும் அந்தப்புர ஓனர் ராசா ஒருத்தன் தானே. அவனால் எத்தனை ராணிமார்களை தாக்குப்பிடிக்க முடியும்?
நமது மாண்புமிகு மக்கள் மன்றத்தை ராசாவாக பாவித்தால், ஒதுக்கப்பட்ட உப்பரிகைகளுக்கு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் மக்கள் பிரதிநிதிகளால் எத்தனை வீண்செலவு! 47 ஜமாய் பாபுகள்! ஜாலினா ஜிம்கானா என்று விருந்தினர் விடுதிகளிலும், நக்ஷத்திர ஹோட்டல்களிலும், படா படா பங்களா ஒதுக்கப்பட்டபின்னும், ஜொலிக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் 'SD Bandi vs Divisional Traffic Officer, KSRTC & others' (Civil Appeal number 4064 of 2004) என்ற வழக்கில் தீர்வு கண்டபடி பழையன ஒரு மாதத்திற்குள் கழிந்தால் தான் புதியன புக முடியும் என்பதால், பல பங்களாக்களில், உரிமம் இழந்த பின்னும் குந்தியிருக்கும் மாஜிகளிடமிருந்து 47 ஜமாய் பாபுகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு செலவான ரூபாய் 24 கோடியை வசூல் செய்ய வேண்டும். அஜீத் சிங் போன்ற மாஜி அமைச்சர்கள் போடாத சண்டை கிடையாது. எல்லாம் மக்கள் செலவில் சொகுசு வாழ்க்கை நடத்த ~சட்டவிரோதமாக. தயார் நிலையில் உள்ள இல்லங்களுக்கு செல்லாமல், ஐந்து நக்ஷத்திர சொகுசு வாழ்க்கை நடத்துபவர்களிடமிருந்தும் வசூல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு இல்லத்தில் பெரும்பாலோர் இப்படி வாசம் செய்கிறார்கள். என்னத்தை செய்ய?


உசாத்துணை

சித்திரத்துக்கு நன்றி: http://img1.myhomeideas.timeinc.net/sites/default/files/image/2008/new/1662790_living-room_xl.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, July 20, 2015

பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [2]



பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [2]



இன்னம்பூரான்
ஜூலை 20, 2015

குடியரசு புரிவது என்றால் அது ஒரு வகையான ‘பினாமியா’ என்ற வினா எழுகிறது. தேர்தல் நடக்கவேண்டும்; அதை முறையே நடத்தவேண்டும்; அமங்கலமும் வேண்டா; திருமங்கலமும் வேண்டா; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ‘பினாமி’ போல் இல்லாமல், பொது நலனுக்கு பாடுபடவேண்டும். ஆனால் பாருங்கள். பஞ்சாயத்துத் தலைவிக்கு பினாமி அவருடைய கணவர் பல இடங்களில். முனிசிபல் கெளன்சிலருக்குக் கைத்தடிகள் மெய்/பொய் காப்பாளர்கள். துட்டு புரளும். எம். எல். ஏ என்றால் தடபுடல் தான். அழுத குழந்தை வாயை மூடும். அடுத்த வீட்டுக்கிழவி சாபமிடுவாள். இந்த கரை வேட்டிகள் வெட்டியா படுத்தற பாடு, பல வருஷங்களாக பிரசித்தம். கரை மாறும். உறை மாறாது. எம்.பி. என்றால், அவர் எதிர்வீட்டு எதிராஜுவாக இருந்தாலும், ஆகாயத்துக்கும் அந்தரத்துக்கும் குதியா குதிப்பார். பார்லிமெண்ட் காண்டீனில் வயிறார உண்டு களிப்பார்கள். சுத்துப்படை படுத்தற பாடு இந்த பரமனுக்கே பொறுக்காது. இதற்கும் ஒரு மேல்சாதி ஒன்றுண்டு. அது தான் அமைச்சரின் அருமந்த காரியதரிசி குழு. மணலை கயிறாக திரித்து, தக்ளியில் அதை நூல் நூற்று, சிட்டம் போட்டு காந்திஜியின் கதர் என்று விற்று விடுவார்கள். 

கீர்த்தனாரம்பம் இப்படி இருக்கையிலே, வியத்தகு நிகழ்வு ஒன்று எமக்கு மன மகிழ்வு அளித்தது,எமது அன்பார்ந்த பந்து மித்திர சோதரர்காள்! மொகல்சராய் ஒரு பெரிய ரயில்வே சந்திப்பு. ஜாமான்கள் பொட்டிப்பொட்டியாக, மலைபாம்புகள் போல வந்து போகுமிடம். அவ்விடத்து பிரதிநிதி பப்பன் சிங் செளஹான் தன் எல்லைக்குட்பட்ட அலிநகருக்கு ஈத் வாழ்த்துக்கள் கூற, கெளன்சிலர் மூர்ஷிதா பேகத்தின் கணவருடன் போய், வசமா மாட்டிக்கிட்டாரு. அங்கு மின்வெட்டும், மின் தட்டுப்பாடும் அன்றாட வாடிக்கை. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயிலாண்டி இல்லையா? கிராமப்புறம் என்றால் இளப்பம் தான். தருமமிகு சென்னை மால் தோறும் கண்ணைப்பறிக்கும் ஜகஜ்ஜால லாந்தர்கள். தாம்பரம் தாண்டினா பம்பரமாக சுற்றினாலும் மருண்ட உலகமே. அப்டின்னா உத்தர் பிரதேச கிராமம் என்றால், அதலபாதாளம் தான். ஆனால் இந்தக்காலத்து ‘விழிப்புணர்ச்சி’ குடிமகன் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறான். ஆக மொத்தம், அலிநகர் மாந்தர்கள் கேட்டது, ‘ஓய்! ரொம்ப நாளாக அந்த விவசாய கனெக்ஷனை அவிழ்த்து விட்டு நகரம் நோக்கி நகரும் இணைப்பு கொடுங்கள். அலி நகர் மொகல்சராயில் உள்ள பேட்டை தானே என்று கரடியா கத்தறோம். கம்னு இருக்கேயே. சொல்லு பதில்.’ என்று அதட்டிக்கேட்டவுடன், சினம் மிகுந்த பப்பன் சிங் செளஹான் எம்.எல்.ஏ. அவர்கள், ‘நான் தான் கலைக்டர் கிட்டேயும், பொறியாளர் கிட்டேயும் சொல்லிட்டினே.’ என்று திருப்பி அதட்ட, கோபாவேசம் தலை தூக்க, மக்கள் அவர்கள் இருவரையும் கயிற்றால், அமர்ந்திருந்த நாற்காலிகளில் கட்டி விட்டனர். நாலுமணி நேரம் கேரோ! கலைக்டர் கிட்டேயும், பொறியாளர் கிட்டேயும் கதறினார்கள். ஊஹூம். நோ ஹெல்ப். அப்றம் போலீஸ் வந்து சமரசம் செய்தார்களாம். ஆனால் பாருங்கள், பந்து மித்திர சோதரர்காள் ! அந்த பப்பன் சிங் செளஹான் எம். எல். ஏ. ஹிந்து இதழிடம் சொன்ன பொன் வாக்கு, “ நான்கு மணி நேரம் கட்டுண்டு இருந்தோம். உதவி வரவில்லை. சட்டசபையில் புகார் செய்வேன்!!!!!!!!!”. டொண்டானுக்குண்டொய்!!!

சர்வ வல்லமையுடைய பாரதமாதாவே! உனக்கு இத்தகைய மைந்தர்கள் தேவையா???
-#-

Sunday, July 19, 2015

அந்தோ பரிதாபம்!!! தொடர் [5]


அந்தோ பரிதாபம்!!! தொடர் [5]



இன்னம்பூரான்
ஜூலை 19, 2015

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்/ மாண்டார் வருவரோ மாநிலத்தீர் ...’ என்று நல்வழியில் ஒளவைபாட்டி உணர்த்தினார். தானே நாண்டு கொண்டு மாண்டவர்களை பற்றி பரிதாபப்படுவதைத் தவிர, யாது செய்ய முடியும்? கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் ஒரு சிறுமி பூப்படைந்தாள். உதிரப்போக்கு அவளை நிலைகுலைய செய்தது. அத்தனை திகில்! மென்மையாக உணர்த்த யாரும் இல்லை போலும். தாங்கொண்ணா மன அழுத்தம் உந்த, தன்னை மாய்த்துக்கொண்டாள். இதன் பொருட்டு, சிந்தித்த ஒருவர் துவக்கிய Befriender International அமைப்பு எத்தனையோ தற்கொலைகளை தடுத்து நிறுத்தி, அந்த மாந்தர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. சென்னையிலும் அத்தகைய அமைப்பு பற்பல வருடங்களாக, இந்த பணியை சிறப்புற செய்து வருகிறது. எனினும், போன வருடம் 16,122 நபர்கள் [16.2%: இந்தியா] தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டனர். எனக்கு அரைகுறையாக தெரிந்தவர் ஒருவரும் தன்னை மாய்த்துக்கொண்டார். அந்த 16, 122 நபர்கள் வறுமை, கஞ்சா, சாராயம் போன்ற லாகிரி, இல்லறச்சிக்கல், தீரா வியாதி என பல காரணங்களால் உந்தப்பட்டனர் என்று ஆய்வு கூறுகிறது. காதல் தோல்வி: 506. தற்கொலை செய்து கொண்டவர்களில், பெரும்பாலோர் எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. 16,122 ல் 11,738 நபர்களுக்கு வருட வருமானம் ஒரு லக்ஷத்துக்குக் குறைவு; அவர்களில் 3,880 நபர்கள் அன்றாடம் காய்ச்சிகள்; 166 நபர்கள் திவாலானவர்கள். 5,155 பெண்மணிகளில், 2,143 பெண்மணிகள் இல்லத்தரசிகள். என்ன அரசியோ! 36 நபர்களுக்கு சீதனக்கொடுமை; 853 மாணவர்கள் தற்கொலை; அவர்களில் 247 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள். 70% தற்கொலையாளர்கள் திருமணம் ஆனவர்கள். 552 நபர்கள்  லாகிரி சாவு என்று ஒரு ஆய்வு. எய்ட்ஸ் பொருட்டு 18 நபர்கள் தற்கொலை. 
தற்கொலை தலைநகரம் சென்னை, பின்னர் பெங்களூரு, டில்லி, மும்பை.

சரி, தடுக்க/ கட்டுப்படுத்த/ புத்துயிர் கொடுக்க என்ன செய்யலாம். ‘ஸ்நேகா’ என்ற புகழ் வாய்ந்த அமைப்பு சென்னையில் நாட்தோறும், இடை விடாமல், நேரிலும், தொலை பேசி மூலமாக ஆலோசனை வழங்கி ஆயிரக்கணக்கான தற்கொலைகளை தடுத்து உளது.

ஸ்நேகா சினேகத்துடன் சொல்வதை கேளுங்கள்.
*

விலாசம்:

SNEHA
11, Park View Road,
R.A. Puram,
Chennai-600028. 

Helpline Phone
91-44-2464 0050 [HOT LINE]
91-44-2464 0060

Helpline Email
help@snehaindia.org

Admin E-mail
admin@snehaindia.org

சித்திரத்துக்கு நன்றி: http://ivanhanigan.github.io/images/sneha-ad.jpg


-#-

கஜானா காலி !!! தொடர் [1]

அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]
ஜமாய் பாபு !!! தொடர் [1]
கஜானா காலி !!! தொடர் [1]
பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]
இன்னம்பூரான்
ஜூலை 17, 2015
*

.

அன்றாடம் பற்பல தகவல் களஞ்சியங்கள் கூறையை பிரித்து கொட்டுவதால், மேற்கண்ட தலைப்புகளில், சுவாரஸ்யமானவை தந்தி போல் சுருக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்படும். சட்புட்னு எழுதுவதால், உசாத்துணை மிஸ்ஸிங் ஆகலாம். இஷ்டப்பட்ட போது வரும்.

இங்கே:



கஜானா காலி !!! தொடர் [1]
இன்னம்பூரான்
19 07 2015

எங்கே போச்சு அந்த 38 கோடி ரூபாய் வரிப்பணம்?

ஆட்டைத்தூக்கி மாட்டிலெ போட்டுட்டு, மாட்டைத்தூக்கி காட்டுப்பன்றி மேல் போட்டானாம் என்பது நவீன சொலவடை. இந்த பாழாய் போன ஆடிட்டர் ஜெனெரல் வருஷம் தவறாமல் என்ன தான் இடித்துரைத்தாலும், இந்த மானங்கெட்ட ஜென்மங்கள் அரசு கரன்ஸியை காய் மறைவா, இலை மறைவா, துஷ்பிரயோகம் செய்து விடுவார்கள். வாய் கிழிய சால்ஜாப்புக்கள் ஊற்றெடுக்கும். தப்புத்தண்டா செய்தவர்கள் எனப்படும்:  முகம்மது அலி, சுரேஷ் கல்லுமாடி, ஆனானப்பட்ட ராசாக்கள், தேனொழுக பேசுபவர்கள், பெயரளவில் கிருஷ்ண பரமாத்மாக்கள், தாத்தா பாட்டிகள்,கதிரோனதிபதிகள் போன்றோரை பாருங்கள். தலை நிமிர்ந்து, புன்னகைப் பூத்துப் போஸ் கொடுப்பார்கள்.  சரி, பிலாக்கணம் போதும். விஷயத்துக்கு வருவோம்.

கோவா மாநிலம் ஒரு சமஸ்தானம் மாதிரி. யதேச்சையதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். தமிழ்நாடு போன்ற மா மாநிலங்கள் என்ன வாழ்ந்து விட்டன என்று கேட்காதீர்கள். உங்களுக்குத் தெரியாததா?  கோவாவில் அதிகம் பேசப்படும் கொய்யா, அடுத்த வருடம் நடக்கப்போகும் தேசீய விளையாட்டு பந்தயங்கள். அதற்கு அதிகப்படியாக 285 கோடி ரூபாய் வேணும்னு மத்திய அரசுக்கு மனு போடப்பறங்களாம், கஜானா காலி என்ற கெஞ்சலோடு.  
ஏற்கனவே பெற்றுக்கொண்ட மான்யம் 110 கோடி + 12 கோடி + 70 கோடி + மான்யம் போன்ற கடன் 28 கோடி. கொடுத்தக் காசுக்குக் கணக்குக் கொடுக்கவில்லை என்பதால், 2012-13க்கு பிறகு நோ மான்யம். சமய சந்தர்ப்பம் தெரியாமல் இந்த ஆடிட்டர் ஜெனெரல் " 38 கோடி ரூபாயை அந்த விளையாட்டு வாரியத்துக்குக் கொடுக்காமல், 11% வட்டிக்கு 50 கோடி ரூபாயை கடன் வாங்கச் சொன்னது ‘இன்னா நாயம்?’ என்று எளுதிப்போட்டு வத்தி வச்சுட்டார் என்று அவர் மேலே காட்டம். தேசீய விளையாட்டு வாரியமோ 324 கோடி செலவழிச்சுட்டு, வழிச்சுக்கிணு நிக்கறொம் என்று ஓலமிடுகிறார்கள். 

எங்கே போச்சு அந்த 38 கோடி ரூபாய் வரிப்பணம்? மர்மம் நீடிக்கிறது.
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


Saturday, July 18, 2015

அந்தோ பரிதாபம்!!! தொடர் [3] & [4]



அந்தோ பரிதாபம்!!! தொடர் [3]
இன்னம்பூரான்
ஜூலை 18, 2015

‘ஆவின்’ பாலில் கண்ட கண்ட இடங்களிலிருந்து எடுத்த தண்ணீர் கலந்த வைபோகமும், ஒரு அமைச்சர் வேலையிழந்த அலங்கோலமும் பழங்கதை. இன்றைய செய்தி: 

நங்கநல்லூர் லோகேஷ்வர் ராவ்  வாங்கிய ஆவின் பாலை காய்ச்சி அருந்திய சில நிமிடங்களிலேயே அவருக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டதாம்; ஆவின் பால் வாங்கிய கடையிலும், ஆவின் நுகர்வோர் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்த அவருக்கு சரியான பதில் கிடைக்காததால், நேரடியாக ஆவின் நிறுவனத்தில் புகார் கூறியுள்ளார்.
அந்த பால் பாக்கெட்டுகள் சோழிங்கநல்லூர் கிளையிலிருந்து தயாரிக்கப்பட்டதால், உடனே அந்த கிளையிலிருந்து வந்த ஆவின் நிறுவன அலுவலர் பாலின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பியுள்ளார். இதேபோன்று, நங்கநல்லூர் பகுதியில் வாங்கிய பால் பாக்கெட்டில் மண்ணெண்ணெய் கலந்திருப்பதாக, மேலும் சிலரும் புகார் தெரிவித்துள்ளனர். ஆமாம்! மண்ணெண்னெய் காசு கொடுத்து வாங்கணுமே. இந்தக்கலப்படம் தாக்குப்பிடிக்குமோ!
-#-

அந்தோ பரிதாபம்!!! தொடர் [4]

டாஸ்மாக் வசனம்: குடி குடியை கெடுக்கும். அது குடியை கொளுத்தும் என்று இனி எழுதப்பட வேண்டும். ராமதுரை நடுத்தெரு வாசி-  நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலான்குளம் நடுத்தெரு. மனைவி முத்துலெட்சுமிக்கும் ஆறு வருடமாக, மதுமிதா, ஜெகதீஸ் என்ற இரு குழந்தைகள் பிறந்த பின்னும், நாட்தோறும் லடாய்.  தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த ராமதுரை மிடாக்குடியன்.  இதனால் அவர் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது குடித்து வந்தார். இதனால் ராமதுரையின் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் ராமதுரை கடன் வாங்கியும் குடிக்க ஆரம்பித்தார். இதில் அவருக்கு ரூ.70 ஆயிரம் கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் முத்துலெட்சுமியிடம் வந்து பணத்தை திருப்பி கேட்டனர். இதுகுறித்து அவர் தனது கணவர் ராமதுரையிடம் கூறினார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. மாறாக, குடித்து விட்டு வந்து மனைவி-குழந்தைகளை அடித்து உதைத்தார். இந்நிலையில் நேற்று சின்னகோவிலான் குளத்தில் உச்சிமா காளியம்மன் கோயில் விழா நடந்தது. ராமதுரை வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் அடித்தார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த அவரிடம் முத்துலெட்சுமி ஏன் குடித்து அழிக்கிறீர்கள் என சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராமதுரை சாப்பிடாமல் வெளியே சென்று படுத்து விட்டார். வீட்டினுள் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகளும் படுத்து தூங்கினர். இரவு 11 மணிக்கு எழுந்த ராமதுரை சமையல் அறைக்கு சென்று மண்ணெணைய் கேனை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு சென்று விட்டார். உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் உயிருக்கு போராடி அலறினர். ஆனால் கோயில் திருவிழா நடந்ததால் அவரின் அலறல் சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டிக்குள்ளேயே உடல் கருகி இறந்தனர். போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்த ராமதுரை சின்னகோவிலான்குளம் காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். குடிப்பழக்கம் குடும்பத்தையே அழித்துவிட்டது என அப்பகுதி மக்கள் வேதனைப்பட்டனர்.

-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, April 15, 2013

இன்னம்பூரான் பக்கம் – 15




இன்னம்பூரான் பக்கம் – 15
 update: 16 04 2013
Innamburan S.Soundararajan Mon, Apr 15, 2013 at 2:12 PM



MONDAY APRIL 15TH 2013


MONDAY APRIL 15TH 201Monday April 15, 201Monday April 15th 2013



Inline image 1

பசி தீர உணவும், தாகம் அடங்க சுத்த நீரும், உடுத்த ஆடையும் பெறவேண்டி ஊதியம் நாடி, அதற்காக பற்பல ஊழியம் செய்து, அன்றாட வாழ்க்கையை ஓட்டுகிறோம். சிந்திக்க நேரமில்லை என்கிறோம். அறுசுவை நாடி, தேறல் சுவைக்க, ஆடம்பரமும், அலங்காரமும் அழைக்க, ஊதியம் கூட வேண்டும் என்று, கடுமையாக உழைக்கிறோம்; சிலர் வாய்மை என்ற கற்பையும் இழக்கிறார்கள். சிந்திப்பதாவது! அவசர உணவும், அஜீர்ணமும், தேறலின் கிறக்கமும், ஆடை உடை பாவனைகளும், இயல்பான வாழ்க்கையை கூட பாதித்து விடுகின்றன. இப்படி அடுக்கிக்கொண்டே போய், அப்ரஹாம் மாஸ்லோவின், கார்ள் ரோஜர்ஸ்ஸின் நான்காவது உளவியல் துறைக்கும் போகலாம், தக்கதொரு தருணம் கிட்டினால். வணக்கத்துக்குரிய தலை லாமா அவர்கள் சொன்ன மாதிரி, நாம் திரவியம் தேடுவதில் உடல் நலம் பேணுவதில்லை; பின்னர் நோயற்ற வாழ்வு நாடி, சேகரித்த திரவியத்தை இழக்கிறோம். ‘வாலு போச்சு! கத்தி வரலை!’
இன்று பேசப்படுவது தத்துவத்தின் ஆணி வேர்.
“ …தத்துவத்தின் ஜனனம், வியப்பிலே தான்…”. (ப்ளேட்டோ)
ஒலி, சொல், பொருள், கருத்து, கற்பனை வளம், விசாரணை, விமர்சனம், மீள்பார்வை,  சிந்தனைகள், அவற்றை சிலாகிப்பது, நிந்திப்பது, அலசி தீர்வுகள் காண்பது போன்ற மேதாவிலாசம், மனித இனத்துக்கு வரப்பிரசாதம். விலங்கினம் ஒரு படி கீழ் தான். மற்றபடி, எல்லா ஜீவிதங்களும் ஒன்று தான். மனித இனத்தில், பெரும்பாலோரிடம் இந்த மேதாவிலாசம் புலப்படுவது இல்லை என்பது தான் வரலாறு கூறும் செய்தி. மனித இனம் தோன்றியபின் அவதரித்தக் கோடானுகோடி மக்களில், தன் சுயசிந்தனையால் உலகின் போக்கை மாற்றியவர்கள் மிகக்குறைவு. இத்தனைக்கும், ஆதி மனிதனின் இயற்கையின் ஊடே, இடியிலும், மின்னலிலும், அடைமழையிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், கரும்பின் இனிப்பிலும், அரவத்தின் நச்சிலும், வேட்டையிலும், வேளாண்மையிலும் கண்டது வியப்பும், திகைப்பும் தான்.
சற்றே நிதானித்து அவதானம் செய்தோமானால், அந்த வியப்பும், திகைப்பும் குறைய, குறைய, சிந்தனாசக்தியையும், கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக, நாம் கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறோமோ என்று தோன்றுகிறது. அதுவும், அவசரயுகமான கடந்த இரு நூற்றாண்டுகளில் பெரும்பாலோர் சிந்தனையில் ஆழ்வதில்லை என்றும், கல்வித்துறை ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறதோ!’ என்ற வியாகூலமும் எழுகிறது.
ஆங்கிலத்தில் ஃபிலாஸஃபி என்பதை, இங்குத் தத்துவம் என்ற சொல் குறிக்கிறது. தத்துவம் பன்முகமுடையது. வாழ்வாதாரம் பொருட்டு இயங்கும் எல்லா துறைகளிலும் அதனுடைய பாவும், இழையும் ஓடும். அரசியல் என்று எடுத்துக்கொண்டால், ‘சுதந்திரம்’, ‘சமுதாய நீதி’, ‘சமத்துவம்’, ‘உரிமை’, ‘மக்களாட்சி’ வகையறா சொற்களும், அவற்றின் பொருட்களும், கருத்துக்களும் சிந்தனைக்கும், கருத்துபரிமாற்றத்துக்கும் உகந்தவையே. சர்ச்சைகளும், விவாதங்களும், ஏன்? விதண்டாவாதங்களும் அடுத்த கட்டங்கள். அதே மாதிரி, சட்டமும், நீதியும், சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டால், ‘தர்மம்’, ‘நியாயம்’, ‘குற்றத்தின் பின்?’, ‘சட்டம்’, ‘சட்ட நிர்வாகம்’ என்றெல்லாம் கேள்விகள் எழும். மருத்துவம் என்று பார்த்தோமானால், ‘எது பூரண ஆரோக்கியம்?’ என்ற வினாவே சிக்கலானது.  டாக்டர்கள் ‘நோய் தடுப்பு/நிவாரணம்/ பக்க விளைவுகள்/ செலவு/ சமுதாய ஒத்துழைப்பு/ ஆய்வு/ பல மருத்துவ சாத்திரங்கள் ஆகியவற்றை பற்றி அன்றாட தீர்மானங்கள் எடுக்கும்போது, தார்மீக சிந்தனைகளும், அறம் சார்ந்த சிக்கல்களும் குறுக்கிடுவது சகஜம். எந்த அளவுக்கு மருத்துவ உலகம் அவற்றை விளக்கும் தத்துவ ரீதியில் இயங்குகிறார்கள் என்பதே, பெரிய கேள்விக்குறி.
வித்யாதானம் என்று சான்றோர்கள் சொல்லிவிட்டார்களே தவிர, கல்வித்துறையை போன்ற சிக்கலான துறையே இல்லை எனலாம். ஒரு பக்கம் பணம் விளையாடுகிறது.   மற்றொரு பக்கம் ‘ஏட்டுச்சுரைக்காய் கவைக்கு உதவாமல்’ வியர்த்தமாகி விடுகிறது. அடிப்படை கல்வி உரிமை, விடுதலை பெற்ற சுதந்திர இந்தியா மணிவிழா கண்டபின்பும், பகற்கனவாயிற்று. மேற்படிப்புத்துறைகளில் உன்னதமும் உண்டு; மட்டரகமும் உண்டு. இன்றைய காலகட்டத்தில், உலகளாவிய முறையில் தேடினால், கல்வி சார்ந்த சிந்தனைகளும், தத்துவ விசாரணைகளும் நன்முத்துக்குவியல்களை போல நம் முன்னே கொட்டி கிடக்கின்றன. நாம் ஏன் அவற்றின் பயனை, இலவசமாகக் கிடைக்கும் பயனை மக்களுக்கு அளிக்க முடியவில்லை?
இவ்வாறாக, நாம் எந்தத் துறையின் பக்கம் சென்றாலும், அவற்றின் தத்துவ ஆணி வேர்களும், விழுதுகளும் நம்மை கூவி அழைக்கின்றன. தத்துவத்தின் இலக்கணம் சுளுவானது. அடிப்படை கருத்துக்கள், கோட்பாடுகள், வழிமுறைகள் என்று வகுத்துக்கொள்வது சராசரி மனிதனின் திறனுக்கு அப்பாற்பட்டதல்ல. அவற்றின் பட்டியல் வகுப்பது முதல் கட்டம். லோயர் கே.ஜி. அவற்றை அலசுவதும், வினா எழுப்பி விடை காண்பதும், திறந்த மனதுடன், காழ்ப்புணர்வை ஒழித்து, கருத்து பரிமாற்றம் செய்து தீர்வுகள் காண்பது தான் முக்கியம். அதற்கு, நாம் காரணம் தேடும் கலையை கற்கவேண்டும். சிந்தனையின் பிரதிபலித்தலை (ரெஃப்ளெக்ஷன்) இனம் கண்டு, அதை செயல்களில் இயக்குவதை கற்றுக்கொள்ள வேண்டும்.
சுருங்கச்சொல்லின், சர்வ வியாபியான தத்துவ போதனையும், தேடிய சிந்தனையும், திறந்த மனதும், பிரதிபலித்தல் வருகையும் ( மேற்கத்திய உலகில் எல்லாத் துறைகளிலும் பிரதிபலித்தலின் செயலாற்றல் அதிகரித்து வருகிறது.) நமக்கு உறுதுணை. மற்றதெல்லாம் இரண்டாம் பக்ஷம். பீடிகை முற்றிற்று, இப்போதைக்கு.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: http://sriramakrishnavijayam.files.wordpress.com/2012/06/00015.jpg


பிரசுரம் & நன்றி: http://www.atheetham.com/?p=4638

*


Subashini Tremmel
Apr 15 (1 day ago)
to மின்தமிழ்
2013/4/15 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

MONDAY APRIL 15TH 2013


MONDAY APRIL 15TH 201Monday April 15, 201
Monday April 15th 2013



.....சற்றே நிதானித்து அவதானம் செய்தோமானால், அந்த வியப்பும், திகைப்பும் குறைய, குறைய, சிந்தனாசக்தியையும், கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக, நாம் கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறோமோ என்று தோன்றுகிறது. அதுவும், அவசரயுகமான கடந்த இரு நூற்றாண்டுகளில் பெரும்பாலோர் சிந்தனையில் ஆழ்வதில்லை என்றும், கல்வித்துறை ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறதோ!’ என்ற வியாகூலமும் எழுகிறது.
நல்லதொரு கேள்வியை முன் வைக்கின்றீர்கள். சிந்தனா சக்தி என்பதை சற்று விவரித்து அதனை இழந்து வருவதற்கான காரணத்தை அலசுவதும் மேலும் இந்த விஷயத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் எனக் கருதுகின்றேன்.

சமூகத்தின் நிலையைப் பார்க்கும் போது அனைவருக்கும் பொதுவாக இருப்பதாக அங்கீகாரம் செய்யப்பட்ட விஷயங்களை ஏற்று அதன் அடிப்படையில் செல்வதற்கு சிந்தனை அவ்வளவாகத் தேவையில்லை. இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு செல்வது என்பது மட்டுமே இங்கு நிகழ்கின்றது. இருப்பதைப் பார்த்து, அது நமக்கு பொருந்துகின்றதா, இக்காலகட்டத்துக்கு பொருந்துகின்றதா, மாறி வரும் சூழலுக்குப் பொருந்துகின்றதா என சிந்திக்க விளையும் மனங்களுக்குத் தான் சிந்தனா சக்தி தேவைப்படுகின்றது; புதிய கோணங்களில் விஷயங்களைப் பார்க்க விளையும் போது சிந்தனை தேவைப்படுகின்றது. காரண காரியங்களை கண்டுகொள்ள விரும்பும் மனங்களுக்கும் சிந்தனை தேவைப்படுகின்றது. இது அற்ற நிலையில் இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு அது தானாகவே வாழ முற்படும் போது சிந்தனைக்கு இடமற்று போய்விடுகின்றது என நினைக்கின்றேன். 

சுபா

-- 
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
Innamburan S.Soundararajan 
9:37 PM (23 hours ago)
to mintamilme, bcc: innamburan88
நன்றி, சுபாஷிணி, என்னை மேலும் சிந்திக்கவைத்ததற்கு. இந்த பீடிகையும், சிந்தனா சக்தியின் விவரணையும், நாம் அதை இழந்து வருவதின் பின்னணியும், மீட்புப்பணியை பற்றிய கருத்துகளையும், முதுசொம் கல்வி மேடையில் (THF Study Circle) நான்காவது அலகு ஆக வைக்க விழைந்தேன். அங்கு எல்லாம் ‘கிணற்றில் போட்ட கல்’ மாதிரி இருப்பதால் இப்படி தலையை சுற்றி மூக்கைத் தொடுகிறேன். தருணம் கிட்டட்டும். தொடருவோம்.

நீங்கள் சிந்தித்துத் தொடுத்த அளித்தக் கருத்துக்களை அணுகும் முன்: 
சிந்தனாசக்தியின் ஆதிகால வருகையான உபநிஷதங்கள், தொல்காப்பியம், கிரேக்க/ரோமானிய கருவூலங்கள் ஆகியவற்றுக்கு இணை தற்காலம் தென்படுவது இல்லை. எனினும், ஜான் ட்யூவி, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், எம்.என் ஶ்ரீனிவாஸ், புதுமை பித்தன் போன்றோர் தற்காலத்தில் சிந்தனை விளக்கின் திரியை தூண்டியவர்கள். சிந்தனையியலில் என்னை முதலில் ஆழ்த்தியது R. H Thouless: Straight and Crooked Thinking (in 1952). Thereafter, RD Laing, Edward de Bono, Donald Schon, Jacques Derrida, Foucoult et al  சிந்தனையியலில் ஆர்வத்தைக் கூட்டினர். அது எல்லாம் சிந்தனா சக்தியின் விவரணைக்கு உதவும். இதற்கெல்லாம் காலம் தழைக்கவேண்டும்.  பார்க்கலாம்.
உங்கள் கருத்துக்கள்:

சமூகத்தின் நிலையைப் பார்க்கும் போது அனைவருக்கும் பொதுவாக இருப்பதாக அங்கீகாரம் செய்யப்பட்ட விஷயங்களை ஏற்று அதன் அடிப்படையில் செல்வதற்கு சிந்தனை அவ்வளவாகத் தேவையில்லை. இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு செல்வது என்பது மட்டுமே இங்கு நிகழ்கின்றது.

~ சரியாக சொன்னீர்கள். ஆனால், ‘பொது அங்கீகாரமே’ ஒரு மாயை; மூளைச்சலவை, அநேக சமயங்களில். சிந்திக்காமல் செயல்படுவது எளிது. அதனால் தான் இப்படி. 


இருப்பதைப் பார்த்து, அது நமக்கு பொருந்துகின்றதா, இக்காலகட்டத்துக்கு பொருந்துகின்றதா, மாறி வரும் சூழலுக்குப் பொருந்துகின்றதா என சிந்திக்க விளையும் மனங்களுக்குத் தான் சிந்தனா சக்தி தேவைப்படுகின்றது; 

~ ஆம்.

புதிய கோணங்களில் விஷயங்களைப் பார்க்க விளையும் போது சிந்தனை தேவைப்படுகின்றது.

~ ஆம்.

காரண காரியங்களை கண்டுகொள்ள விரும்பும் மனங்களுக்கும் சிந்தனை தேவைப்படுகின்றது.
~ ஆம். 

இது அற்ற நிலையில் இருப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு அது தானாகவே வாழ முற்படும் போது சிந்தனைக்கு இடமற்று போய்விடுகின்றது என நினைக்கின்றேன். 

~ ஆம். இழப்பு வாழ்வியலுக்கு; சிக்கல் தனிமனிதருக்கு; பிரச்னை: சமுதாயத்துக்கு.

நன்றி, வணக்கம்,

இன்னம்பூரான்

15 04 2013
செல்வன்
9:47 PM (23 hours ago)
to mintamilme
2013/4/15 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>

~ சரியாக சொன்னீர்கள். ஆனால், ‘பொது அங்கீகாரமே’ ஒரு மாயை; மூளைச்சலவை, அநேக சமயங்களில். சிந்திக்காமல் செயல்படுவது எளிது. அதனால் தான் இப்படி. 

கரெக்ட்.

பொது அங்கீகாரத்தை அதிகாரத்தில் இருப்பவர்கள் எளிதில் மேனிபுலேட் செய்யலாம். சுயசிந்தனயுடன் அனைத்தையும் கேள்வி கேட்க பழகினால் ஒழிய நமக்கு எது நல்லது என்பதை ஆய்வது சிரமம்