Showing posts with label கோவா. Show all posts
Showing posts with label கோவா. Show all posts

Sunday, July 19, 2015

கஜானா காலி !!! தொடர் [1]

அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]
ஜமாய் பாபு !!! தொடர் [1]
கஜானா காலி !!! தொடர் [1]
பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]
இன்னம்பூரான்
ஜூலை 17, 2015
*

.

அன்றாடம் பற்பல தகவல் களஞ்சியங்கள் கூறையை பிரித்து கொட்டுவதால், மேற்கண்ட தலைப்புகளில், சுவாரஸ்யமானவை தந்தி போல் சுருக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்படும். சட்புட்னு எழுதுவதால், உசாத்துணை மிஸ்ஸிங் ஆகலாம். இஷ்டப்பட்ட போது வரும்.

இங்கே:



கஜானா காலி !!! தொடர் [1]
இன்னம்பூரான்
19 07 2015

எங்கே போச்சு அந்த 38 கோடி ரூபாய் வரிப்பணம்?

ஆட்டைத்தூக்கி மாட்டிலெ போட்டுட்டு, மாட்டைத்தூக்கி காட்டுப்பன்றி மேல் போட்டானாம் என்பது நவீன சொலவடை. இந்த பாழாய் போன ஆடிட்டர் ஜெனெரல் வருஷம் தவறாமல் என்ன தான் இடித்துரைத்தாலும், இந்த மானங்கெட்ட ஜென்மங்கள் அரசு கரன்ஸியை காய் மறைவா, இலை மறைவா, துஷ்பிரயோகம் செய்து விடுவார்கள். வாய் கிழிய சால்ஜாப்புக்கள் ஊற்றெடுக்கும். தப்புத்தண்டா செய்தவர்கள் எனப்படும்:  முகம்மது அலி, சுரேஷ் கல்லுமாடி, ஆனானப்பட்ட ராசாக்கள், தேனொழுக பேசுபவர்கள், பெயரளவில் கிருஷ்ண பரமாத்மாக்கள், தாத்தா பாட்டிகள்,கதிரோனதிபதிகள் போன்றோரை பாருங்கள். தலை நிமிர்ந்து, புன்னகைப் பூத்துப் போஸ் கொடுப்பார்கள்.  சரி, பிலாக்கணம் போதும். விஷயத்துக்கு வருவோம்.

கோவா மாநிலம் ஒரு சமஸ்தானம் மாதிரி. யதேச்சையதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். தமிழ்நாடு போன்ற மா மாநிலங்கள் என்ன வாழ்ந்து விட்டன என்று கேட்காதீர்கள். உங்களுக்குத் தெரியாததா?  கோவாவில் அதிகம் பேசப்படும் கொய்யா, அடுத்த வருடம் நடக்கப்போகும் தேசீய விளையாட்டு பந்தயங்கள். அதற்கு அதிகப்படியாக 285 கோடி ரூபாய் வேணும்னு மத்திய அரசுக்கு மனு போடப்பறங்களாம், கஜானா காலி என்ற கெஞ்சலோடு.  
ஏற்கனவே பெற்றுக்கொண்ட மான்யம் 110 கோடி + 12 கோடி + 70 கோடி + மான்யம் போன்ற கடன் 28 கோடி. கொடுத்தக் காசுக்குக் கணக்குக் கொடுக்கவில்லை என்பதால், 2012-13க்கு பிறகு நோ மான்யம். சமய சந்தர்ப்பம் தெரியாமல் இந்த ஆடிட்டர் ஜெனெரல் " 38 கோடி ரூபாயை அந்த விளையாட்டு வாரியத்துக்குக் கொடுக்காமல், 11% வட்டிக்கு 50 கோடி ரூபாயை கடன் வாங்கச் சொன்னது ‘இன்னா நாயம்?’ என்று எளுதிப்போட்டு வத்தி வச்சுட்டார் என்று அவர் மேலே காட்டம். தேசீய விளையாட்டு வாரியமோ 324 கோடி செலவழிச்சுட்டு, வழிச்சுக்கிணு நிக்கறொம் என்று ஓலமிடுகிறார்கள். 

எங்கே போச்சு அந்த 38 கோடி ரூபாய் வரிப்பணம்? மர்மம் நீடிக்கிறது.
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com