Monday, April 8, 2013

சமச்சீர் போஜனசாலை




சமச்சீர் போஜனசாலை
9 messages

Innamburan Innamburan Thu, Sep 2, 2010 at 6:21 PM
To: mintamil

சமச்சீர் போஜனசாலை

ஓர் அறிவிப்பு

இடம்: சாப்பாட்டுராமன் மேன்ஷன்ஸ் அனெக்ஸ், கடங்காரன் தெரு, திருவல்லிக்கேணி.

நேரம்: வைகறை 5 மணி (அளவில்) - நடுநிசி 12 மணி வரை

நல்வரவு: கட்டைபிரம்மசாரிகள் (முன்னுரிமை, மேன்ஷனாருக்கு), வழிப்போக்கர்கள், கிழம்ஸ், கிருஹஸ்தாள் (அவர்கள் மட்டும் ஸ்திரீஜனங்களை கூட அழைத்து வரலாம்; குடும்ப அறை கட்டாயம்: கட்டணம் உண்டு. அதை கட்டிவிட்டால், திருமணச்சான்றுகள் கேட்கப்படமாட்டா. )

மெனு: 
  • காலை 5 மணி (அளவில்): ஏலக்காய், கிராம்பு, ஜாதிபத்திரி, பட்டை தட்டிப்போட்டு காய்ச்சி, அஸ்ஸாம் தேயிலை (தூள் அல்ல) தோய்த்து, பசும்பாலில் கலந்த கொதிக்கும் தேனீர். ரேடியோவில் ருத்ரம். எனவே நீவிர் மெளனம்; சத்தமில்லாமல் பிராணாயமம் செய்யலாம்
  • காலை 8 17 மணி (அளவில்): பரங்கி, காரட், வெள்ளரி, முருங்கை, பட்டாணி, தக்காளி ஆகியவை பொடி, பொடியாக துண்டடித்து கசக்கிய கருகவேப்பிலையும், நசுக்கிய இஞ்சியும், (வெங்காயம், பூண்டு ஆப்ஷனல்), ஒரு கரணைமுட்டை நல்லெண்ணையில் கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு வெடித்து, சீரகம், பெருங்காயம், மல்லிபவுடர், சிறிது மஞ்சள் பொடி, மிதமாக கல்லுப்பு ஆகியவையுடன் ஸூப்பர் தாளிகை செய்து, கலவையை அரைவேக்காடு செய்து, கொத்தமல்லி தழையை தூவி, பொடித்த மிளகு சேர்த்து, கொஞ்சம் எலுமிச்சை பிழிந்து, இரு ப்ரெளன் ப்ரெட் பலகைக்குள் இட்டு சாண்ட்விச் செய்து தரப்படும். மென்று சாப்பிட்டால், ஆனை பலம் உத்தரவாதம்.
  • அத்துடன் ஃபில்டர் காஃபி.
  • மதியம் உச்சி வேளை (அளவில்) ஒரு பிடி பாசுமதி அரிசியில், முறைக்கும் சாதம், சாம்பார், ரஸம் (ஐயங்கார் ஸ்டைல்), கறியமுது, கூட்டு, சுட்ட அப்பலம், கடைந்த தயிர். சில தினங்களில் டாங்கர் பச்சடி அல்லது கோசுமல்லி.
  • மாலை 4 49 (அளவில்) சுண்டல், ஹெர்பல் டீ.
  • இரவு 8 03 (அளவில்) மல்லிப்பூ இட்லி 3 வித் தேங்காய்/வெங்காய சட்னி/ எள்ளு மொளகாய் பொடி
  • நடு நிசி என்று சும்மா போட்டோம். கதவு 8 57க்கு அடைக்கபடும்.
  • விலை பட்டியல்:; நாள் கணக்கு, தொட்டாலும், தொடாவிட்டாலும். வரவுக்கு ஏற்றபடி வேறுபடும். உள்ளே விசாரிக்கவும்.  மாதாந்திர அச்சாரம்: பத்தாயிரம் ரூபாய் (துல்லியமாக அட்ஜஸ்ட் செய்யப்படும்). 
  • டயபட்டீஸ்காரர்கள் குறைத்து சாப்பிட்டாலும், சலுகை கிடையாது.
  • விளக்கம்: எங்கள் விலை அதிகமாகப்பட்டாலும், இந்த உயர் தரம் எங்கும் கிடைக்காது.
- பிரத்யேக கெளரவ ஆலோசகர்: நளமாமணி திருமதி கீதா சாம்பசிவம்.
- ஏகபோக உரிமையாளர்: இன்னம்பூரான்.



செல்வன் Thu, Sep 2, 2010 at 9:23 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

மென்யுவை படித்தாலே சாப்பிடணும் மாதிரி இருக்கு:-)

--
செல்வன்


Innamburan Innamburan Fri, Sep 3, 2010 at 12:46 AM
To: mintamil@googlegroups.com
முந்துங்கள்! முந்துங்கள்! திடீர் சலுகை!
செல்வன் போன்ற அர்த்தராத்திரி...களுக்கு, நடு நிசியில், காஷ்மீர் குங்குமப்பூ போட்டு சுண்டக்காய்ச்சிய எருமைப்பால்! ரூம் சர்வீஸ்! இலவசம்!

எச்சரிக்கை!
அவா அவா கூட்டிண்டு வர பொண்டுகளுக்கு, அவா அவாளே பொறுப்பு!

இன்னம்பூரான்

[Quoted text hidden]

ஆராதி Fri, Sep 3, 2010 at 1:26 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
என்ன திடீர் என்று இன்னம்பூரார்  மெஸ் ஆரம்பித்துவிட்டார்? வேண்டியவர் என்றாலும் என்னைப் போல் அசலூர்க்காரன் என்ன செய்வது?
அன்புடன்
ஆராதி
[Quoted text hidden]

vadivelu kaniappan Fri, Sep 3, 2010 at 3:23 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா! கழுக்குன்றத்திலிருந்து நான் வரலாமா? மெனுவைப் படித்துப் பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறுதே. அனுமதி உண்டா? என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.

3 செப்டெம்ப்ர், 2010 5:56 am அன்று, ஆராதி <aaraathi@gmail.com> எழுதியது:
[Quoted text hidden]
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Sep 3, 2010 at 4:02 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அட??? இதைக் கவனிக்கவே இல்லையே?? நல்ல வேலை தான்.  எனக்குப் பிடிச்சதும் கூட.  நல்லாச் சமைச்சு பசியோட இருக்கும் ஒருத்தருக்குப் போட்டுட்டு அவங்க சாப்பிடறதைப்  பார்த்தாலே போதும், கண்ணீர் மட்டும் வராது. மனசு, வயிறு எல்லாம் நிறைஞ்சு போகும். நிறைய அநுபவம் உண்டு. அதனால் தாராளமா தயக்கமே இல்லாமல் ஏத்துக்கறேன்.  நன்றி. 

2010/9/2 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
[
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Sep 3, 2010 at 4:05 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
திருவல்லிக்கேணி பெரிய தெருவிலேயும், சாமிப்பிள்ளை தெருவிலேயும் (முன்னால் ரத்னா கஃபே இருந்ததுக்கு அடுத்த சந்து)  இருந்த என்னொட பெரியப்பா அங்கே இம்மாதிரி உள்ள ஒரு மெஸ்ஸில் தான் கிட்டத் தட்டப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டு வந்தார். எத்தனை வருஷங்கள்னு கணக்குத் தெரியலை.  ரிடையர் ஆகி இரு முறை வேலையில் நீட்டிப்புக் கிடைச்சுக் கடைசியா மதுரையில் அவர் செட்டில் ஆனது, 74-ம் வருஷம்னு நினைக்கிறேன். அது வரை திருவல்லிக்கேணி மெஸ் சாப்பாடுதான். எங்களையும் அழைச்சுப் போயிருக்கார். சுக்கு, மல்லிக் காபி பிரமாதமா இருக்கும்! சுண்டலும் உண்டு. 


[Quoted text hidden]

Swarna Lakshmi Fri, Sep 3, 2010 at 7:52 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
i will take care of bangalore branch :)




Innamburan Innamburan Mon, Sep 6, 2010 at 8:56 AM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan

இன்னும் முக்யமானவா - த.தே, ஷைலஜா, மீனா முத்து போன்றவர்களின் அறிவுரைக்குக் காத்திருக்கிறேன். மற்றபடி அறிவிக்கை 2 தயார். என்னே கற்பனை சக்தி! என்னை தான் சொல்கிறேன்! திருவல்லிக்கேணி மான்ஷன்ஸ் பற்றி திருமதி கீதாவின் ஃப்லாஷ்பேக் பார்த்த பிற்கு தான் தெரியும். ஆனா, தெரிஞ்சாப்லே அவிழ்த்து விட்டிருக்கேன், பாருங்கள். ஃப்ரான்ச்சைஸ் திருமதி. ஸ்வர்ணலக்ஷ்மிக்கு  ரிஸெர்வ்ட்.

இன்னம்பூரான்


சித்திரத்துக்கு நன்றி: 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEindnFHvk_D43cENWe2K-ia7DstRPCW0WehUv4r_Z0t5ivxJywHjGCGXEmxbcXiyfVku12jiCkhIB6ZPJHdXyHLSFKOo9-rHhnD_3qzMsXsSZAAZRlZXKoK0I4XT7Erh3wbeCSEBS2GAPA/s1600/51.jpg

No comments:

Post a Comment