Thursday, April 11, 2013

மனோதர்மம்


மனோதர்மம்
8 messages

Innamburan Innamburan Sat, Sep 18, 2010 at 5:29 PM

மனோதர்மம்


     மனம், மனது, மனசு போன்ற சொற்கள் ஒரே சொல்லின் திரிபுகள் என்று இலக்கணத்தார் உரைத்தாலும், என் மனம், மனது, மனசு சொல்வது வேறு. மனம் யோசிக்கும்; மனது அசை போடும். மனசு அடிச்சுக்கும். ஒன்றை மற்றொன்று பாதிக்கும். சிலது புலப்படும். சிலது தேடினால் சிக்கும். சிலது ஆழ்மனதில் (அது என்ன ஆழம்!) புதையுண்டு கிடக்கும். திடீரென்று விஸ்வரூபமெடுத்து, ஆட்டி படைக்கும். இத்தனைக்கும் திரை மறைவில் ‘மனோதர்மம்’ இருக்குமாமே! உடனக்குடன் விமர்சனங்கள்: அது ஆளுக்கு ஆள் வேறுபடும்; அது யாவருக்கும் ஒரே நிலைப்பாடே; காலத்துக்கு காலம் வெவ்வேறு மனோதர்மங்கள்; இடத்தின் இனம் கண்டு மாறும், இது. ஏவிப்பாருங்கள்! தோசை திருப்புவது போலல்லவா, அது உம்மை திரும்பிப்பார்த்து ஏவும். இது உத்தரவாதமையா, என்றார் ஒரு தத்துவஞானி. 

     எதற்கு ஐயா அடிப்பாரம் போட்றீர்? தன்னை கேட்க வேண்டிக்கொள்வதை எம்மை ஏன் கேட்கிறீர்? இல்லை, யாம் அறியாததை சொல்லிவிட்டீர்களா? பல குரல்கள்: என் மனோதர்மம், உண்மை விளம்பல்; என் மனோதர்மம் பணி செய்து கிடப்பது; என் மனோதர்மம் கடமை; என் மனோதர்மம் மனித நேயம்; என் மனோதர்மம் இல்லறம் பேணுவது; என் மனோதர்மம் விட்டேற்றியாக துறவு பூண்டு, ஞானம் தேடுவது. ஒரு நூறு பக்க ஜாபிதா போட நேரம் பிடிக்காது. ஒரு தொடரை புரிந்து கொள்ள யுகாந்திரங்கள் போதாது. ஒருவர் கேட்டார், ‘நீண்ட பீடிகை உம் மனோதர்மமோ?’ என்று. அவருக்கு புரியவில்லை என்பது திண்ணம். எனக்கு புரியாமலிருக்கலாம் என்பது ஐயம். ‘யான் யானே’ என்ற மாயம் உளதே. என் செய்வேன்? நீங்களும் என் செய்ய இயலும்? தடம் மாறுகிறது. ‘ஸ்டாப்!’ கயல்விழி சொன்னதாக, முரசொலி ஒலித்தது போல்!

      பத்து வருடம் முன்னால், என் பையன் Illich [1971] CELEBRATION OF AWARENESS: London: Calder & Boyers என்ற நூலை படிக்கக்கொடுத்தான். எழுதாத விதி: எடுத்த இடத்தில் வைக்கவேண்டும். கையில் கொடுத்ததால்,அது இங்கே. மொழி பெயர்க்கவேண்டிய சிறிய நூல். முன்னுரையில் எரிக் ஃப்ரோம் என்ற ஞானி இறுதியில் கூறுவது, “...[இல்லிச்சின்] சிந்தனைகள் புதுமையான தரவுகளை சுட்டுவதால், மனத்தை தளையிலிருந்து விடுவிக்கின்றன. பழக்கப்பட்டுப்போன, கழுவப்பட்ட, முன்பதிவு பெற்ற அபிப்ராயங்கள் தான் அந்த தளை. விடுவித்ததும் அல்லாமல், புதிய பாட்டை அல்லவா அமைத்திருக்கிறார்.” இது மனோதர்மத்துக்கு ஒரு அறிமுகம் மட்டுமே. 

     எனக்கு தெரிந்தவரை, இச்சொல் இசையுலகில் நடமாடுகிறது. கல்கி, “...தினம் பொழுது விடிந்தால் கச்சேரிதான். தம்பியின் வாசிப்போ நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருந்தது. இதற்கு முன்னாலெல்லாம் நான் பணத்துக்காகத் தவுல் வாசித்துக் கொண்டிருந்தேன். தம்பிக்கு வாசிக்க ஆரம்பித்த பிறகு, என்னை மறந்து பரவசமாய் வாசித்தேன், ஸ்வாமி! அது என்ன மனோதர்மம்? அது என்ன கற்பனை? அது என்ன பொருளுதயம்? - இத்தனைக்கும் தம்பி, பெரியவர்கள் காட்டிய வழியிலிருந்து அந்தண்டை இந்தண்டை நகரவில்லை. இந்தக் காலத்திலே போல், ஒத்துக்குப் பதில் தம்புரா சுருதி வைத்துக் கொள்ளவில்லை. தவுலுக்குப் பதில் தபலா, அப்புறம் பக்க வாத்தியத்துக்கு ஹார்மோனியம், மோர்சிங்கு - இப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது...” என்றார் ஒரு இடத்தில். அந்த மனோதர்மம் யாது?

     தொடரப்போவது யாரு?

அன்புடன்,
இன்னம்பூரான்
18 09 2010

ஆராதிSun, Sep 19, 2010 at 1:32 AM


திரு இன்னம்பூராரே
என் மனசாட்சிப்படி சொல்வதென்றால், உங்களுடைய எழுத்துத் திறமையை நீங்கள் யாருக்கும் கொஞ்சத்தில் காட்ட மாட்டேன் என்று ஒளித்து வைத்துக்கொண்டு அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் காட்டி, எங்களைக் கெஞ்ச வைக்கிறீர்கள். இதுமனோதர்மம் ஆகுமா? மனசு கேட்கமாட்டேன்கிறது. அதனால் இதைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. ‘காட்டி காட்டி மறைத்துக் கொள்ளும் சுயநலம்‘ எதற்கு? எல்லார் மனதையும் கோகுல கிருஷ்ணன் குழல் போல் உங்கள் எழுத்துக்கள் மயக்குகின்றன.  எழுத்துக்களைத் தளையிலிருந்து அவிழ்த்து விடுங்கள் எல்லார் மனமும் மகிழ்ச்சி அடையும்.

அன்புடன்
ஆராதி

2010/9/18 Innamburan Innamburan <innamburan@googlemail.com>

Tthamizth Tthenee Sun, Sep 19, 2010 at 8:38 AM



மனோதர்மம்  ஆளாளுக்கு  தகுந்தாற்ப் போல் மாறுகின்ற  தன்மையுடையது
திரு இன்னம்புரார் அவர்களுக்கு கிணறு ரொம்பி வழிந்தாலும்
கவலை ஏறி இறங்க ஸ்ரமப்படுகிறது
கவலையேற்றம் கடினமானதுதான்
அன்புடன்
தமிழ்த்தேனீ


Dhivakar Sun, Sep 19, 2010 at 9:33 AM



>>எல்லார் மனதையும் கோகுல கிருஷ்ணன் குழல் போல் உங்கள் எழுத்துக்கள் மயக்குகின்றன.  எழுத்துக்களைத் தளையிலிருந்து அவிழ்த்து விடுங்கள் எல்லார் மனமும் மகிழ்ச்சி அடையும்.<<ஆராதியுடன் ஒத்து ஊதுகிறேன்.
மின் ’தமிழாள்’ மகிழ்ச்சியடைய’ வேண்டாமா.. இ தொடர்ந்தால்தான் அது இனிக்கும்

தி

Innamburan Innamburan Sat, Nov 13, 2010 at 4:46 AM

கிட்டத்தட்ட இரண்டு மாதம் காத்திருந்தேன், யாராவது தமிழ்த்தேனியின் 'பச்சோந்தி மனோதர்ம' கருத்தை விமர்சனம் செய்வார்களா என்று. ஆராதியும், திவாகரும் எழுதுவதற்கு இணையாக எழுத இயலாது எனினும், அவர்கள் வீண்புகழ்ச்சி செய்யாதவர்கள் என்பதால், எனக்கு நன்றியுணர்வும், ஆர்வமும் கூடுகிறது. 'பச்சோந்தி வண்ணத்திறனை' இழந்த பிறகு தான், மனோதர்மமே பிறக்கிறது. அது பற்றி சில வார்த்தைகள்:

  1. நம்மில் ஒருவரும் மனோதர்ம கவசத்துடன் பிறக்கவில்லை; பெற்றோர், கல்வி, சான்றோர், சமுதாயம், பயணம் போன்றவை அதை அளிக்கமுடியும்; மறுக்கமுடியும்; குழப்பமுடியும்; முரண்படுத்தமுடியும். 
  2. கர்ப்பவாசத்திலும், குழவிப்பருவத்திலும் அம்மையின் அரவணைப்பு அன்பை ஊட்டும்; மற்றவை வரும் பின்னே. பிறகு பார்க்கலாம்.
  3. தற்காப்பு இயல்பானது; அத்யாவசியம்; போஷிக்கவேண்டிய தன்மை. அது க்ஷணத்தில் தன்னலமாக முதல் 'பச்சோந்தி வண்ணமாக' எளிதில் மாறிவிடுகிறது. அண்ணன் தம்பியை, கோலிக்குண்டுக்காக, அடிக்கிறான். 
மற்றவை பிறகு பார்க்கலாம்.

இன்னம்பூரான்



Tthamizth Tthenee Sat, Nov 13, 2010 at 9:04 AM


தமிழ்த்தேனியின் 'பச்சோந்தி மனோதர்ம' கருத்தைகடுமையாக ஆட்ஷேபிக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ



[Quoted text hidden]

Innamburan Innamburan Sat, Jun 4, 2011 at 6:31 PM


அன்றொரு நாள் வந்திருந்த நண்பர், என் மாஜி இல்லத்தை பர்ணசாலை என்றார். இத்தனைக்கும் அது காங்க்ரீட் கட்டிடம்! ஆனால், மாஞ்சோலை, வேப்பமரத்துக்காற்று, மொட்டை மாடி, இறைந்து கிடக்கும் புத்தகங்கள். அவரே, மற்றொரு நாள் திகைத்துப்போனார், என்னுடைய சாக்ரட்டீஸ் மனோசஞ்சாரத்தைக் கண்டு; அது பற்றி அவர் மனமகிழ்ந்த பதிவு ஒன்று செய்தார். ஐயா! நன்றி. ஒரு காரணார்த்தமாக அதை இணைக்கிறேன்; பிறகு பேசப்படும். அது அப்படி இருக்க, இந்த இழையில் இருவருக்கும் புரிதல் நிகழவில்லை. இழையும், திரு. ஆராதியும், திரு. திவாகரும், திருமதி. பவளாவும் 
விரும்பிக்கேட்டபிறகும், நின்று போனது. நிற்கட்டுமே. மனோதர்மத்தை மற்றொரு திசையில் முன்னிறுத்தலாமோ!

திரு. வினோத் ராஜனின் ஆய்வு என்னை சற்று சிந்திக்க வைத்தது. ஆணும் பெண்ணுமாக, இளைஞர்களும், முதியோர்களும், புலவர்களும், ஆசிரியர்களும், வல்லுனர்களும், விற்பன்னர்களும், என்னை போன்ற மாணவர்களும் மின் தமிழில் வலம் வருகிறார்கள்.  சிலர் அடிக்கடி; பலர் படிப்பதாகக் கேள்விப்படுகிறேன். வாழ்வியலை பற்றி, நிச்சயமாக, பல தரப்பட்ட கருத்துக்கள் இருக்கும்; அனுபவங்கள் வெவ்வேறு.  கேட்டதெல்லாம் எல்லாருக்கும் கிடைத்தது இல்லை. கிடைத்ததையெல்லாம் அனுபவித்தது இல்லை, பலர். ‘இல்லை’ பாட்டும், அதன் நாராச எதிரொலியும் சங்கீதம் பாடுகின்றன. அதிர்ஷ்டவசமாக, எல்லாம் கை கூடி வந்தால் கூட, வாழ்க்கையை ரசித்து, அனுபவித்து, பகிர்ந்து, பூரணத்துவத்தை அடைய முடிவதில்லை, பெரும்பாலோருக்கு. ஒரு வழி எனக்கு, மந்த கதியில், ஒரு சிறிய அளவு, ஒரு விளிம்பு போல், மங்கலாக, புலனாயிற்று. ஆனால், ஒரு தயக்கம். வேதாந்தம் அறியேன்; சித்தாந்தம் வெகு தூரம்; தோத்திரங்களும், இலக்கிய ரசனையும், இலக்கண ஆய்வுகளும், பல பட்டரை தகவல்களும், சர்ச்சைகளும், ஓவியமும், சிற்பமும், இசையும் நிறைந்த தளத்தில், மூதாதையார்களின் நிறைவாழ்வு பற்றிய அறிவுரைகள் எடுபடுமோ? மனோதர்மத்தை மற்றொரு திசையில் முன்னிறுத்தலாமோ! அஷ்டதிக்குகளில் முன்னிறுத்தலாமோ? யானறியேன். நீவிர் சொல்லும்.
இன்னம்பூரான்
04 06 2011


சாக்ரட்டீஸ்.pdf
68K

Geetha Sambasivam Sun, Jun 5, 2011 at 9:58 AM

காத்திருக்கோம்.


* சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFo8IYFRE1IzhwMPQw_P8tWSmx9aPnqmvNRK67SNDKsPFB7ihpR5ey3L1TJRN-RgcJX5PHj2B9r8D-T6VuiChLpbaBC9odPQ1xIkSRVsqErelsT8d05EULq3OsYRW2gJOv7FCfSG4E_DVD/s1600/Creative+Food+Photos+by+Vanessa+Dualib_024.jpg

No comments:

Post a Comment