Tuesday, April 9, 2013

மனித நேயம் 1




மனித நேயம் 1
29 messages


Innamburan Innamburan Wed, Nov 18, 2009 at 12:35 AM
To: mintamil

நேற்று சென்னையில் ஒரு அற்புதம் நடந்தது. சென்னையை தாயகமாகக் 

கொண்ட வடநாட்டு முதியவரொருவர் (79) இயற்கை எய்தினார். கண் தானமும் 

நடந்தது. தற்காலம், இந்த பணி அதிகரித்துவருவது நற்செய்தியென ஒரு 

பக்கமிருக்க, இச்ச்சான்றோனின், ஒரு கண்ணை எடுத்தது, அவரது திருமகனார். 

மற்றொன்றை எடுத்தது, வீட்டிற்கு வந்த திருமகள். அவர்கள் இருவரின் 

மனநிலை எவ்வாறு இயங்கியிருக்கும் என்று நினைக்கவே நம் மனம் 

கலங்குகிறது. அந்த முதியவரின் பெயர்: டாக்டர் அகர்வால், பிரபல கண் 

மருத்துவர்.

இன்னம்பூரான்

Tthamizth Tthenee Wed, Nov 18, 2009 at 3:42 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
பஞ்ச பூதங்களுடன் மீண்டும்  கலக்கும் இந்த உடலை  இந்த உலகில் வாழும் மற்றவர்க்கு உபயோகப்படும்படி   தானம் செய்தல் உண்மையான  மனிதாபிமானம்
 
அதில் வரும் இது போன்ற  சில வருத்தங்களை நாம் சமாளிக்க வேண்டியதுதான்
 
அப்போது நாம் ஒரு பெரிய அரிய செயலைச் செய்த த்ருப்திக்கு ஆளாவோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
18-11-09 அன்று, Innamburan Innamburan <innamburan@googlemail.com> எழுதினார்:



Venkatachalam Subramanian Wed, Nov 18, 2009 at 4:58 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஓம்.
உறுப்புதானம் செய்யும் நற்பணி தற்போது செயறேபடுகின்றது.. உறுப்புதானத்தின் விளைவாய் தமிழுக்கு ஒரு புதிய சொல் கிடைத்திருக்கிறது.

’உதானம்= உறுப்பு தானம்.’

என்தாயார் மாதுஸ்ரீ சங்கரிஅம்மாள் அவர்களின் விருப்பப்படி அவர்களது கண்கள் இரண்டும் இரண்டு பார்வையற்றோருக்கு தலா ஒன்றாகப் பொருத்தப்பட்டுள்ளன.

எவருக்கு தரப்பட்டது என்பதை மறைபொருளாக வைக்கச் சட்டம் சொல்கிறது போலும்.ஏனெனில் பின் தொடர்ச்சி செய்வோர் உளர் என்றபதும் ஒருவகையில் சரிதான்.

இதில் மிகுந்த சிரமம் என்னவெனில், இறந்தவர் விரும்பினாலும், அங்கு குழுமும் சுற்றம் போதிய விழிப்புணர்வின்மையின் காரணத்தால் கண் தானம் செய்வது பாபம் என்பது போன்று ஓங்கிப் பேசித்  தடுக்கும். அதையும் மீறி செயற்பட உரிமையான நெருக்கம் மறுக்கும்.
தானம் செய்ய விருப்பம் உள்ள குடும்பத்தினர் உடனடியாகச் செய்ய வேண்டியட்வை:
  • கண்மருத்துவ மனையின் தொலைபேசியுடன் தொடர்புகொண்டு நம் முகவரியை தெளிவாகக் கூறி, வந்தடைவதற்கு தேவையான இடவிளக்கம்,அருகில் உள்ள அனைவருக்கும் தெரிகின்ற அடையாளங்கள் (லேண்ட் மார்க்) தெரிவிக்கவேண்டும்.
  • இறந்தவரின் இருகண்களிலும் சிப்ளாக்ஸ் கண்மருந்தை ஊற்றி இரு விழிகளையும் மூடவேண்டும்.
  • சிறிது ஐஸ் எடுத்து சர்ஜிகல் பஞ்சில் வைத்து விழிகளின் இமையின் மிது ஒற்றித் துடைத்தாற்போன்று வக்கவேண்டும்.
  • தலைப்பாகம் உடலை விட சற்று உயரத்தில் இருக்குமாறுஒரு தலையின் அடியில் தலையணையை வைக்கவேண்டும்.
  • மருத்துவ குழு தேவையான உபகரணங்கள் தர்மோஸ் பிளாக்ஸ் ஆகியவற்றுடன் வந்தவுடன் எவ்வளௌ விரைவாக அவர்களுக்கு உதவ முடியுமோ உதவிசெய்து அனுப்பவேண்டும்.
  • இவை சரிவர முடிந்தபின்னர் இதர நடைமுறைக் காரியங்கள்  செய்யலாம்.


  • அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Nov 19, 2009 at 3:50 AM
To: mintamil@googlegroups.com
வழக்கம் போல, ஓம் அவர்கள் நடைமுறை விளக்கமும் கொடுத்துள்ளார். நன்றி. இந்த இழையின் நோக்கம், மனிதநேயத்தின் நல்வரவுகளை, யாவரையும் பதிவு செய்ய வேண்டுவது. 

சான்று 2: 

விசனத்தில் ஆழ்ந்தோருக்கு, தக்கதொரு ஆறுதலும், ஆலோசனையும், முடிந்தால் அடைக்கலமும், வழங்குவது. ஓம் அவர்கள் இங்கிலாந்து நாகரீகம் பற்றி இரு அருமையான இணைப்பு அளித்துள்ளார். அந்த நாட்டின் மரபு ஒன்று, இருக்க இடமில்லாதோர்க்கு அடைக்கலம் அளிப்பது. பொதுவுடமை தத்துவத்தின் தந்தையான கார்ல் மார்க்ஸ், தனது நாட்டிலேயிருந்து துரத்தப்பட்டு, இங்கிலாந்தில் அடைக்கலம் நாடினார்
ஆஸ்திரிய முதல்வரோ, 'இவன் மஹாராணி விக்டோரியாவை கொலை செய்ய வருகிறான். துரத்தி விடுங்கள்' என்று ரகசியக்கடிதம் எழுதினார். அதை குப்பையில் போட்டுவிட்டு, அவருக்கு அடைக்கலம் அளித்தது, பிரிட்டீஷ் அரசு. பின் வந்த வரலாறு, உலகே அறியும்.
இன்னம்பூரான்

No comments:

Post a Comment