Tuesday, April 9, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 10: திரைகடலோடிய இந்தியா!




அன்றொரு நாள்: ஏப்ரல் 10: திரைகடலோடிய இந்தியா!
22 messages

Innamburan Innamburan Tue, Apr 10, 2012 at 4:48 PM
To: mintamil , thamizhvaasal
அன்றொரு நாள்: ஏப்ரல் 10:
திரைகடலோடிய இந்தியா!

‘...ஏடன் நகரத்தில் கலோனிய ஆட்சி புரிந்தது, இந்திய அரசு என்பது ‘ஏடாகூடமான பேச்சாக’த் தோன்றினால்...! என்று அன்றொரு நாள்: ஜனவரி:19:ஏடாகூடம்! இழையில் கூறப்பட்டதின் தொடர்பாக, இன்று எத்தியோப்பியா (அபிசீனியா) போகப்போகிறோம். தொன்மையும், வளமும், இனம், மொழி, கலாச்சார வித்தியாசங்கள் (80 வகை தொகைகள்) நிறைந்த நன்னாடு. இயற்கை வளமும், கானகங்களும், மலையும், மடுவும், பழங்கால நாகரீகமும் நிறைந்த பூமி. தொன்று தொட்டு வரும் கிருத்துவ சமயத்தின் ஆளுமை. புராணங்களில் பேசப்படும் மஹாராணி ஷேபாவின் பிரதேசம்.

இந்தியாவின் மொகலாய சாம்ராஜ்யத்தின் இறுதி நாட்களில், தடியெடுத்தவன் எல்லாம் தாண்டவராயர்களான மாதிரி, எத்தியோப்பாவிலும் 1769 -1855 காலகட்டத்தில் மூலைக்கொரு மகராசா வந்து, ராஜ்யத்தைக் குலைத்து, நாட்டாண்மையும், கட்டைபஞ்சாயத்தும் செய்து கொண்டிருந்தனர். 1855ல் லிஜ் காசா ஹைலு ( அருமையான பெயர்!) என்பவர் தன்னை சக்ராதிபதி திவொட்டரோஸ் II (தியோடர்?) என்று முடி சூட்டிக்கொண்டு, வரிசையாக எதிரிகளை வீழ்த்தி, பகை தேடிக்கொண்டார். நல்ல மனிதர்.  சோம்பேறி பிரபுக்களை உதைத்து, ஏழை பாழைக்கு உதவினார். அடிமை வணிகத்தை ஒழிப்பதில் கணிசமான வெற்றி. பிரஜை விரும்பிய ராஜா. ராணுவத்தை துப்பாக்கி, தளவாடங்கள் வாங்கி, தடபுடல் செய்ய பார்த்தார் மாவீரன். எல்லாம் தெரியும், ராஜ தந்திரத்தைத் தவிர. போறாக்குறைக்கு ஆத்திரக்காரன். அதனாலே புத்தி மட்டு. அதான் சாக்கு என்று திரைகடலோடி, இந்தியா எத்தியோப்பியாவை தாக்கியது. நடந்த கதை கேளும்.


renuka rajasekaran Tue, Apr 10, 2012 at 4:58 PM
To: Innamburan Innamburan

இப்படியும் நிகழ்ந்ததா!
எங்களைப் போன்றவர்களுக்கு இவையெல்லாம் தெரியாதே!
எத்தனைப் பொது இருட்டடிப்பிலே நாங்கள் வளர்ந்திருக்கிறோம்?
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Geetha Sambasivam Wed, Apr 11, 2012 at 1:03 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
சொல்லுங்க, கேட்டுக்கிறேன்.  இது குறித்து அரிச்ச்சுவடி கூடப் படித்ததில்லை. இந்தியாவும் இன்னொரு நாட்டைத் தாக்கியது என்பதே புதுச் செய்தி.

On Tue, Apr 10, 2012 at 9:18 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொரு நாள்: ஏப்ரல் 10:
திரைகடலோடிய இந்தியா

கி.காளைராசன்Wed, Apr 11, 2012 at 2:02 AM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/4/11 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
சொல்லுங்க, கேட்டுக்கிறேன்.  இது குறித்து அரிச்ச்சுவடி கூடப் படித்ததில்லை. இந்தியாவும் இன்னொரு நாட்டைத் தாக்கியது என்பதே புதுச் செய்தி. 
ஆமாம், அவசியம் சொல்ல வேண்டுகிறேன்.
இந்தியா எந்தஒரு நாட்டின் மீதும் போர் தொடுத்தது இல்லை என்றே நான் இதுவரை கேள்விப்பட்டுள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்



Innamburan Innamburan Wed, Apr 11, 2012 at 2:17 AM
To: mintamil , thamizhvaasal
கவனமாக இருந்த கீதாவுக்கும், காளைராஜனுக்கும் நன்றி.
[Quoted text hidden]

shylaja Wed, Apr 11, 2012 at 3:12 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan


2012/4/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஏப்ரல் 10:
திரைகடலோடிய இந்தியா!
‘...ஏடன் நகரத்தில் கலோனிய ஆட்சி புரிந்தது, இந்திய அரசு என்பது ‘ஏடாகூடமான பேச்சாக’த் தோன்றினால்...! என்று அன்றொரு நாள்: ஜனவரி:19:ஏடாகூடம்! இழையில் கூறப்பட்டதின் தொடர்பாக, இன்று எத்தியோப்பியா (அபிசீனியா) போகப்போகிறோம். தொன்மையும், வளமும், இனம், மொழி, கலாச்சார வித்தியாசங்கள் (80 வகை தொகைகள்) நிறைந்த நன்னாடு. இயற்கை வளமும், கானகங்களும், மலையும், மடுவும், பழங்கால நாகரீகமும் நிறைந்த பூமி. தொன்று தொட்டு வரும் கிருத்துவ சமயத்தின் ஆளுமை. புராணங்களில் பேசப்படும் மஹாராணி ஷேபாவின் பிரதேசம்.>>>>>

ஷேபா?  பேரே  புதுமையா இருக்கே. 




இந்தியா  எத்தியோப்பாவைத்தாக்கினதா?  இந்த வரலாறெல்லாம்தெரியாமல் என்ன ஹிஸ்டரி பாடம் படித்தேனோ என்று  இரு்க்கு சொல்லுங்க இ சார்  வாசிக்க காத்திருக்கோம். 




Geetha Sambasivam Wed, Apr 11, 2012 at 3:42 AM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal@googlegroups.com, Innamburan Innamburan
ஷேபா?  பேரே  புதுமையா இருக்கே. //

No. Rani Sheeba is very famous!  I know her name (at least)


Geetha Sambasivam Wed, Apr 11, 2012 at 3:44 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil
அறியாத ஒன்றைப் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி ஐயா.  எனக்குச் சரித்திரத்தில் ஈடுபாடு உள்ளதால் கவனம் எப்போதுமே இருக்கும். மற்றபடி அவ்வளவெல்லாம் புத்திசாலி இல்லை. 

On Wed, Apr 11, 2012 at 6:47 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
கவனமாக இருந்த கீதாவுக்கும், காளைராஜனுக்கும் நன்றி.

[Quoted text hidden]

rajam Wed, Apr 11, 2012 at 3:53 AM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
"Queen of Sheeba ('ஷீபா')," right? "Queen of Sheeba and Solomon" என்ற கதையில் வரும் அரசிதானே இவள்?  
"இ" சார் பல நாடுகளில் சூறாவளிச் சுற்றுப் பயணம். அதனால் ... இருக்கிற இடத்துக்கும் நேரத்துக்கும் ஏத்தபடி உச்சரிப்பும் மாறலாம் என்று நினைக்கிறேன். :-)




shylaja Wed, Apr 11, 2012 at 4:05 AM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
sheeba   தெரியும்     ஷேபான்னதால் கொஞ்சம் குழம்பினேன்!The Queen of Sheba - an exotic and mysterious woman of power - is immortalised in the world's great religious works, among them the Hebrew Bible and the Muslim Koran. She also appears in Turkish and Persian painting, in Kabbalistic treatises, and in medieval Christian mystical works, where she is viewed as the embodiment of Divine Wisdom and a foreteller of the cult of the Holy Cross. In Africa and Arabia her tale is still told to this day and, indeed, her tale has been told and retold in many lands!
[Quoted text hidden]
[Quoted text hidden]

Nagarajan Vadivel Wed, Apr 11, 2012 at 6:57 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அந்தப் பகுதியில் அலைந்தவன் என்ற முறையில் இந்தப் பாமரனின் கருத்து
நேப்பியர் அனுப்பிய கப்பல் (பாலு அவர்கள் கவனிக்க) சென்னையில் இருந்து கிளம்பி மறவர்கள் அடங்கிய போர்ப்படையுடன் எரித்ரியக் கரையை அடைந்தது
அவர்கள் அங்கிருந்து கால்நடையாக ஆஃப்ரிக்காவின் மேற்குக் கரையில் இன்றைய கானாவில் உள்ள அக்ரா என்ற மலைநகருக்குச் சென்றது.  அங்குள்ள சர்வாதிகாரி அரசருடன் போர் நடந்தது
எத்தியோப்பியாவில் இருந்து நேப்பியர் படை சென்ற பாதையில் இன்றும் கருப்பழகிகள் நீணட கூந்தலுடன் தமிழகக் கோவில் சிலைபோல் கொள்ளை அழகுடன் இருப்பதைக் காணலாம்
எல்லாம் நேப்பியர் படை வீர மறவர்களின் கொடை என்று பெருமையாகவும் சொல்லிக்கொள்கிறார்கள்
ஒருவர்கூட என்னைக் கெடுத்திட்டானே என்றூ கூச்சலிடவில்லை என்பது சிறப்பு என்று இன்ஸைட் ஆஃப்ரிக்கா என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்
இதன் நம்பகத்தன்மை நிறுவ என் பழைய குறிப்புகளைத் தேடவேண்டும் என் பழைய நண்பர்களைத் தொடர்பு கொள்ளவேண்டும்
இடையில் இந்தப் பாமரப்பதிவில்  ஏதேனும் கருத்துப்பிழை இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்
நாகராசன்


[Quoted text hidden]

செல்வன்Wed, Apr 11, 2012 at 7:03 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
எல்லாம் ஒத்துக்க முடியாத வாதம் இ சார். இந்த கணக்குபடி பார்த்தால் ப்ரிட்டிஷ் இந்தியா ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, துருக்கி, இத்தாலி, ஜப்பான், இராக் என பல நாடுகள் மேல் படை எடுத்துள்ளது. காலனிய இந்தியாவுக்கு எந்த சுதந்திரமும் இல்லை என்பதால் இது இந்தியா படை எடுத்த கணக்கில் வராது. ப்ரிட்டிஷ்காரன் கணக்கில் தான் வரும்
[Quoted text hidden]
-

Geetha Sambasivam Wed, Apr 11, 2012 at 7:15 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: தமிழ் வாசல்
கன்னாபின்னாவென செல்வனை ஆதரிக்கிறேன்.  இது எத்தனையாவது ஆதரவு????



செல்வன் Wed, Apr 11, 2012 at 7:18 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


:-)))...கூட்டணி வெச்சு தேர்தலை சந்திக்கும் அளவு ஆதரவு கொடுத்தாச்சு:-)

--
செல்வன்



Nagarajan VadivelWed, Apr 11, 2012 at 7:41 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கூட்டணி வச்சா அப்புறம் குழப்புவீங்களே
வெட்கப்படாம கிழக்கிந்தியக் கம்பெனி ஆண்டதையும் ஒத்துக்கனும்
மாட்சிமை தாங்கிய இங்கிலாந்து அரசியும் அரசரும் இந்தியாவின் அரசராக முடிசூட்டிக்கொண்டார்கள்
தமிழகத்திலிருந்து பலரும் டில்லியில் நடந்த மறு பதிப்புப் பட்டமளிப்பு விழாவிலே பங்கு கொண்டார்கள்
தன் இசையின் மீது மாறாத காதல் கொண்டு அவர் தேச பக்திப்பாடல்களைப் பதிப்பிக்க உதவி செய்த வி.கிருஷ்ணசாமி ஐயர் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியில் பதவி பெற்றதும் வெறுத்து ஒதுக்கிய பாரதியும் நான் ஆங்கில அரசாண்மையை ஏற்றுக்கொள்கிறேன் என்று வம்படியாக எழுதிக் கொடுக்கச் சொல்லி வாங்கியது பிரிட்டிஷ் அரசு
நேப்பியர் அனுப்பிய மறவர் படை பற்றி நிறையச் செய்திகள் உண்டு.
அப்படை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியாவின் படை
என் கூட்டணி ‘இ’ ஐயா பக்கமே
நாகக்ராசன்
[Quoted text hidden]

செல்வன் Wed, Apr 11, 2012 at 7:59 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/4/11 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>
கூட்டணி வச்சா அப்புறம் குழப்புவீங்களே
வெட்கப்படாம கிழக்கிந்தியக் கம்பெனி ஆண்டதையும் ஒத்துக்கனும்
மாட்சிமை தாங்கிய இங்கிலாந்து அரசியும் அரசரும் இந்தியாவின் அரசராக முடிசூட்டிக்கொண்டார்கள்
தமிழகத்திலிருந்து பலரும் டில்லியில் நடந்த மறு பதிப்புப் பட்டமளிப்பு விழாவிலே பங்கு கொண்டார்கள்


எவனோ முடிசூட்டி கொண்டால் அவனை நாங்க மன்னனா ஏத்துக்கணுமா நாகராசன் ஐயா? அவனை நம்ம மக்கள் யாரும் மன்னனா ஏற்கலை. அவனாதான் தான் மன்னன்னு சொல்லிகிட்டு இருந்தான். கிழக்கிந்திய கம்பனி இந்தியாவை காலனி ஆதிக்கதுகுட்படுத்தியது. ஆனால் அதன் படையெடுப்புக்கு எல்லாம் இந்திய மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. எத்தியோப்பியாவுக்கும், இத்தாலிக்கும், ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் என்ன பகை?அவர்கள் மேல் நாம் ஏன் படை எடுக்கணும்?
[Quoted text hidden]

Nagarajan Vadivel Wed, Apr 11, 2012 at 8:26 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
செல்வன் ஐயா
இப்ப இருக்குற ஆட்சி மட்டும் பெரும்பான்மையான மக்கள் விருப்பத்தோடு தேர்ந்தெடுத்த ஆட்சியா என்ன?
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம்போட்டிருந்த பல மன்னர்கள் இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை என்பதே உண்மை
சர்தார் பட்டேலின் இரும்புக்கரம் கொண்ட அணுகுமுறையில் மட்டுமே இந்திய மன்னர்கள் சுதந்திர இந்தியாவுக்குள் வந்து இணைந்தனர்
அவ்வாறு முயற்சி செய்தபோது வடகிழக்கில் உள்ள மேகாலயா அரசர் டில்லியில் தான் இந்தியாவுடன் இணைவதற்குமுன் தன் குடிகளை அழைத்து அவர்கள் கருத்தறிந்து சொல்வதாகச் சொல்லிச் சென்றார்
அங்கு அவர் குடிமக்கள் மரபு வழியாக வரும் மன்னர் ஆட்சிமுறையை விலக்கி இந்தியக் குடியாக இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டனர்
அவரும் டில்லியில் சென்று தன் குடிமக்களின் கருத்தைக் கூறினார்
ஒரு துளியூண்டு நிலத்தில் உள்ள பழங்குடிமக்களின் கருத்தை அறிந்து வியந்த நேரு அவர்கள் இந்தியாவில் அவர்கள் இணைந்தபின்னும் அவர்களின் அரசரும் அவர் தர்பாரும் தொடரும் என்றும் மன்னர் வழக்குகளைப் பைசல் செய்ய முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் அந்த்ஸ்தைப் பெறுவார் என்றூ அரசியல் சட்டத்தில் வழி ஏற்படுத்திக் கொடுத்தார்
மக்கள் விருப்பப்படி இன்றும் அரசர் தர்பார் மந்திரிகள் என்று இருந்து மக்கள் மரபு போற்றப்படுகிறது
மக்கள் கருத்தை அறிந்து இந்தியாவை ஆளமுடியமா செல்வன் சார்
நாகராசன்


2012/4/11 செல்வன் <holyape@gmail.com>
[Quoted text hidden]
[Quoted text hidden]

செல்வன் Wed, Apr 11, 2012 at 8:30 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/4/11 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>
செல்வன் ஐயா
இப்ப இருக்குற ஆட்சி மட்டும் பெரும்பான்மையான மக்கள் விருப்பத்தோடு தேர்ந்தெடுத்த ஆட்சியா என்ன?

இப்ப இருப்பது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சிதான் ஐயா.

இந்தியாவோடு சேரமாட்டேன் என சொல்ல மன்னர்களுக்கு என்ன உரிமை உள்ளது?அவர்களே ப்ரிட்டிஷ்காரன் காலை பிடித்து பதவி வாங்கியவர்கள்.மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் அல்ல.
[Quoted text hidden]

Nagarajan Vadivel Wed, Apr 11, 2012 at 8:48 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
சரி சரி இது முடியறமாதிர்த் தெரியல எனக்கு முடியல
போற போக்கிலே இந்திய ராணுவத்துக்கு அஸ்மாராவிலே என்ன வேலை என்று கேட்டீக
இலங்கையில் ஐ.பி.கே எஃப் க்கு என்ன வேலை ஏன் போனார்கள்?
இப்பொழுது நடந்து முடிந்த இறுதிப்போரிலும் இண்டிய ராணுவத்தினரைப் போர்முனையில் பார்த்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்
இலங்கையில் ராணுவ உதவி அளிக்க என்ன முகாந்திரம்
இனிமேல் பேசினா ராணுவத்தை அனுப்புவீங்க நான் ஜூட்
நாகராசன்



செல்வன் Wed, Apr 11, 2012 at 8:55 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/4/11 Nagarajan Vadivel
இலங்கையில் ஐ.பி.கே எஃப் க்கு என்ன வேலை ஏன் போனார்கள்?

அது அமைதிப்படை ஐயா. போனதும் அண்டைநாட்டுக்கு. அஸ்மாராவுக்கு அல்ல.

இப்பொழுது நடந்து முடிந்த இறுதிப்போரிலும் இண்டிய ராணுவத்தினரைப் போர்முனையில் பார்த்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்

வதந்திங்க.சூடுகண்ட பூனை மறுபடி பாலை குடிக்குமா?

Innamburan Innamburan Wed, Apr 11, 2012 at 12:07 PM
To: mintamil@googlegroups.com
அர்ஜெண்டா ஒரே ஒரு விளக்கம், கீதாவுக்கும், ஷைலஜாவுக்கும். வெண்குடை சாலோமன், தனது ராணியை ஷேபா என்று தான் கூப்பிடுவார். ராஜம் சொல்வது என்றுமே சரியாக இருக்கும். பேராசிரியர் நம்ம கொடியை தூக்கிப்பிடித்து இருக்கிறார். நன்றி பல. மார்கட்டெங்க் ஆசாமிகளுக்கு, வரலாறு இரண்டாம் பக்ஷம். மற்றவை பிறகு.
இன்னம்பூரான்
2012/4/11 செல்வன் <holyape@gmail.com>
[Quoted text hidden]


இன்னம்பூரான்
10 04 2013

No comments:

Post a Comment