Saturday, May 23, 2020

BUDS, BLOOMS & FLOWERS


BUDS, BLOOMS & FLOWERS

INNAMBURAN

pastedGraphic.png
pastedGraphic_1.png
‘...Full many a flower is born to blush unseen
And waste its sweetness on the desert air...’
-Thomas Gray
 ‘...her mother was ordered to withdraw her from school for serfdom at her employer’s house; penniless and roofless, she is terror-stricken ...’
- An SOS in WhatsApp

The State should ensure free primary education compulsorily to all children in a robust democracy. The Constitution of India unwittingly denied it to generations of the poor, women in particular, by dumping this obligation into the backyard called the Directive Principles of State Policy instead of listing it as a fundamental right. The Constitution 86th Amendment Act, 2002 belatedly conferred that right for children in the age group of 6–14 years and a cess was levied from 2004 to meet the expenses; the outcome so far is dismal. The enormity of the cumulative loss over seven decades to the society, individuals, national integration and posterity can be gleaned from the UNESCO Report [October 2017-18].  266 million adults, a fifth of us all, cannot read or write, says the Report. Our own Census reports show limping progress and alarming increase in absolute numbers in some decades. India is host to one-third of the world’s illiterates.  

Education is a time-tested broad spectrum remedy for most social ills as it empowers the oppressed classes and enhances the quality of life for one and all. I searched in vain all along for an avenue that opened exploring pathways.
Serendipity led me to Udayan Care: www.udayancare.org  that did open many doors for the vulnerable children in 26 cities across 13 states of India since 1994. On last count, 21,000 children had benefitted. A surprise visit to its orphanage near Delhi was a humbling experience - migrant labour flocking the only dispensary, free data entry classes for tense village girls and a father-figure shepherding them. 

Udayan means 'Eternal Sunshine' in Sanskrit. Udayan Care gives home-life to orphans and offers fellowships, professional guidance and handholding to girl-children having the potential but trapped in vulnerable environs. It also reaches out to the villages with Information Technology. It is sunshine, for sure. There is a personal touch also. Udayan, a scion of the Padma Bhushan  Gujar Mal Modi -Raizada Dr. Kedar Nath Modi Group, eked out a living in USA on a shoe-string budget as he was feeding the hungry children in Africa from his allowance. We lost him at an young age in an accident.  Dr. Kiran Modi, his grief stricken mother, learnt about his noble gesture from his papers and turned his dream for a more equitable world into a modest reality by founding Udayan Care. I trace Udayan’s generosity to his forefathers, who have funded an educational empire as well.  An early donation was to the Benares Hindu University.

The Chennai Chapter, whom I joined, rightly chose Chennai North, to start with. The North & South here are so polarised culturally and economically that the former was neglected for decades.

Our Core Committee conceives initiatives and executes them as planned, with monthly reviews. The work is evenly distributed, with one selecting the Shalinis (all our fellows are so named) after house-visits and a fair test, another casts the calendar for the workshop, the convener
Distribution of work and delegation of powers
initialays down and executes the plan, updating it every month. One member visits homes, interviews student and parents and selects the Shalinis (all fellows are so identified) after a test. Another schedules the calendar and the convener oversees the projects. A full time secretary ensures smooth functioning, retaining touch with parents and schools: she is also the librarian. Carefully chosen expert-mentors guide the Shalinis on various professional openings for the long term. My portfolio is mentoring those aspiring to join the Indian Administrative Service (IAS) etc., the elite governance apparatus. The unquenchable thirst for enriching one’s life by the oppressed class is matched by the diligent and empathetic devotion of the mentors to their tasks.

Endnote: Redistribution of knowledge is more urgent than that of wealth. Mentoring achieves that through caring individuals who provide young people with support, advice, friendship, reinforcement and constructive examples. Two success stories: A hawker’s daughter, Alia Tabassum, the first graduate of the family, secured a pay packet of Rs.2 lacs per annum from Cognizant Technologies Pvt. Ltd, Kolkata.
Reena Burman is the daughter of a penurious beedi-maker. She made her community proud by pursuing a Masters degree in Sanskrit tenaciously, securing a first class! She aspires to become a teacher.  India needs millions of such Shalinis.
-X-





  

























  














































Thursday, May 21, 2020

Shalini Letter 1.

Shalini Letter 1.
உதயன் கேர் ஷாலினிகளுக்கு முதல் கடிதம்.
இன்னம்பூரான்
29 04 2020

கல்வி என்ற ஆலயத்துக்கு எட்டு திசைகளிலும் கோபுரங்கள் உண்டு. பாடம் படித்து முன்னேறலாம். மற்ற புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம். சான்றோர் சொல்லுக்கு பணிந்து மேலும் கற்கலாம். இணையவழி கல்வி துரிதமாக வளர்கிறது. கடிதங்களும் எழுதலாம்; படிக்கலாம்;பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் மீது என்னைப்போன்ற ஆர்வலர்களுக்கு நேசமும் பாசமும் இருப்பது போல, எனக்கு பிரியமான மாணவ மாணவிகள் தேவகோட்டையில் ஒரு நடு நிலைப்பள்ளியில் வெளுத்து வாங்குகிறார்கள். நான் அவர்களை சந்திக்க சென்றபோது, ஒரு ராணுவப்பள்ளியின் கட்டுப்பாட்டை முன் நிறுத்தி எனக்கு மகிழ்ச்சி அளித்தார்கள். அசந்து போகாமல் இயல்பாகவே பல கேள்விகள் கேட்டு என்னை அசத்தியது, ஆறாம் வகுப்பு மாணவி.
இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள். தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் பள்ளியை சிறப்பாக நடத்துகிறார். ஆசிரியர் குழாமும் அப்படியே. பெற்றோர்கள் ஒத்து உழைக்கிறார்கள். என்னுடைய நிகழ்வுக்கு அவர்களில் ஒருவர் கூட வரவில்லை. ஏனெனில், அவர்கள் அன்றாடக்கூலிகள். ஒரு நாள் கூலியை விட்டால், பட்டினி தான். நான் போய் அவர்களில் சிலரை பார்த்தேன். எனது சகபாடியான ஜெர்மனி-வான செல்வி. சுபாஷிணி உங்களுடன் வந்து உரையாடியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அவர் அண்மையில் அந்த பள்ளிக்கு சென்ற செய்தி வந்ததும், அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கடிதம் உங்களுக்கு பயன் தருமானால் அடிக்கடி எழுதுவதாக உத்தேசம். எனது கடிதங்களோ, யூட்யூப் உரையோ, வாட்ஸ் அப் உரையாடலோ, ஸ்கைப் நேர்காணலோ,  உங்கள் கல்விமேன்மையை, வேலை செய்யும் திறனை, பொது அறிவை, நாட்டு நடப்பு புரிதலை அதிகரிக்க முடியாவிடின், அவற்றை நிறுத்தி விடுவேன்.
சில உபரி வினாக்கள்:
virus:      தமிழில்:…..
கடிதம்: தமிழில் அதே பொருள் உள்ள சொற்கள்.
Who got two Nobel Prizes?
பெனிசிலின் கண்டு பிடித்தது யார்?
பாரதியார் பாடல்களின் இரண்டின் முதல் வரி எழுதவும்.
Eureka! இது என்ன?
வூஹான் மாநிலம் எங்கே இருக்கிறது?
கை கழுவதின் முக்கியவத்தை டாக்டர்களுக்கு முதலில் கூறியவர் யார்/
Who is Harry Potter?
What computer games you play?
-x-
Homework: Translate this letter into English.

Sunday, April 26, 2020

CORONA ONE ACT PLAYS ~1


CORONA ONE ACT PLAYS ~1



INNAMBURAN

Wednesday, April 22, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” 1 to 4




"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்”  1 to 4

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’[அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை ‘முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

(தொடரும்)

இறை வணக்கம்

தர்மமிகு சென்னைக்கு அருகில் உள்ள வைணவத் தலமாகிய திருநின்றவூர், ‘திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று.’ என்கிறது தல புராணம். இவ்விடம் அருள் பாலிக்கும் இலக்குமிப் பிராட்டிக்கு, ‘என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி‘ என்று பெயர். நம் மீது திரு வைத்திருக்கும் கனிவுக்கு ஏற்ற காரணப்பெயர் எனலாம். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை தெய்வ சன்னிதானத்தில் காண்கிறோம். அண்ணல் பக்தவத்ஸலன்; அன்னை பெற்ற தாயார். இதை விளக்கி காஞ்சி முனிவர், ‘இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள் (ஒளவை). ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.’ என்று அருளமுதம் தந்துள்ளார். 

உனது நாமகரணம்
எமது தேசத்தை பாரதமாதா என்று விளித்து, வணங்குவது சாலத்தகும். பாரதம், இந்தியா, ஹிந்துஸ்தான் என்ற பெயர்களை தாங்கும் தீபகற்பம் ஒரு தெய்வத்திரு. மஹாகவி சுப்ரமணிய பாரதியார் ‘மன்னும் இமயமலை/ இன்நறு நீர் கங்கை/ உபநிடநூல்/ பாரத வீரர்/ நாரத கானம்/ பூரண ஞானம்...’ எல்லாமே பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே; 
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!’  என்று என்றோ 

தீர்க்கதரிசனம் தந்துருளினாரல்லவா! அதன் தொடர்பாக, நானும் 

பாரதமாதா என் அன்னை, அவளே இந்தியத் தாய் என்று 
தொழுது வணங்குகிறேன்.

உன் வரலாறு

அம்மா என்று உன்னை விளிக்கும் போது என் உள்ளம் பரமானந்தத்தால் துள்ளல் நடை போடுகிறது. இந்த பாரதத் திருநாட்டில் சக்தி உபாசனை தொன்மையானது. கடவுளர்களில்
தேவி முதன்மை ஸ்தானம் வகிக்கிறாள். அவள் தான் மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் பராசக்தி. சிங்கம் அவளது வாஹனம். அவளே பாரதமாதாவான வரலாறு, இது. கலோனிய அரசின் அதிகார துஷ்பிரயோகமும் 1857ல் நடந்த சுதந்திர போராட்டமும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி, நாட்டுப்பற்று, அச்சமின்மை, துணிச்சல், தியாகம் போன்ற தன்மைகளை அளித்தது. எங்கும், குறிப்பாக, வங்காளத்தில், சக்தி, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, காளி மாதா என்றெல்லாம் பேச்சு எழுந்தது எனலாம். 16 வருடங்களுக்குள் பாரதமாதா என்ற நாடகம் கிரண் சந்திர பானர்ஜி அவர்களால்1873இல் முதன்முதலாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. தனது நாட்டை இழந்த ‘திக்கற்ற பார்வதியாக ( ராஜாஜி பிற்காலம் எழுதிய கதையின் தலைப்பு இங்கு பொருத்தம்.) பாரதமாதா அந்த நாடகத்தில் சித்திரிக்கப்பட்டது, மக்களின் மனதைத் தொட்டது; அம்மையே! உனது பாதகமலங்கள் கிழிந்து குருதிக் கொட்டியது; கங்கை, யமுனா நதிகளை போல உன் கண்களில் பிரவாகம். இந்த அவலம் தேசீய நினைவு கருவூலத்தில் பதிவாகி விட்டது. அன்னை பட்ட பாடு, நாம் அன்றாடம் கண்டு வேதனை படும்படி பிரதிபலித்ததால், பாமர மக்கள் கூட, பெருமதிப்புக்குரிய அன்னையின் இன்னல்களை புரிந்து கொண்டனர்.

இன்றைக்கு 136 வருடங்களுக்கு முன்னரே 1882இல் எழுதப்பட்ட பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்தமடம் என்ற புதினத்தில் இடம் பெற்ற "வந்தே மாதரம்" பாடல் விடுதலை இயக்கத்தின் பாடலாக அமைந்தது. குருதேவ் அதற்கு அமைத்த மெட்டு அதை தேசீய கீதமாகப் பரிமளிக்கச்செய்தது. ஆனந்த மடம் நாட்டுப்பற்று மிகுந்த, அதற்காக சகலத்தையும் துறக்கவும், கலோனிய அரசு மீது புரட்சிப்போர் தொடுக்கவும் முன் வந்த துறவிகளின் கூட்டத்தைப் பற்றியது. அது பற்றி சர்ச்சை பின்னர் எழுந்தாலும், பாரத மாதாவை, வந்தே மாதரம் பாடி வணங்கும் வழக்கம் எங்கும் பரவியது. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த கர்சான் பிரபு வங்காளத்தை மதாபிமான அடிப்படையில் பிரித்தாள முயன்றதும் கலோனிய அரசு மீது வெறுப்பையே ஏற்றி விட, தாயே!, உன்னை தெய்வம் என பாவித்து மக்கள் உன்னிடம் அடைக்கலம் நாடத்தொடங்கினர். அபனிந்தரநாத் தாகூர் உன்னை மற்றொரு கோணத்தில் வரைந்த பாரத மாதா ஓவியத்தில் காவியுடையில் அமரிக்கையான தேவியாகக் காட்சி அளிக்கிறாய், நீ. கற்பனா சக்தி மிகுந்த ஓவியமது. ஹிந்து தெய்வங்களைப்போல் நான்கு கைகள். வேதநூல்கள் ஒரு கையில்; இந்தியாவின் வேளாண்மையை பிரதிபலிக்கும் நெற்கற்றை ஒரு கையில். ஜபம் செய்யும் பாரதமாதாவின் மற்றொரு கையில் ஜெபமாலை. பரிசுத்தம் பாராட்டும் தேவி அவள் என்பதைக் குறிக்க மற்றொரு கையில் வெள்ளைத்துணி.  தேசபக்தியை தூண்ட வேறு என்ன வேண்டும் தாயே! மேலும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் முயற்ச யால், பிற்காலம் சென்னைக்கு விஜயம் செய்த பிபின் சந்திர பால் அவர்கள் நுட்பமான ஹிந்து மத சடங்குகளையும், வணங்கும் பழக்க வழக்கங்களையும் ஏற்புடைய வகையில் இணைத்து, பாரதமாதாவின் தேசீய திருவுருவை நமது முன் நிறுத்தினார். 

Friday, April 17, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” 1,2,3,




"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” 1, 2, 3, 

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’[அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை ‘முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

இறை வணக்கம்

தர்மமிகு சென்னைக்கு அருகில் உள்ள வைணவத் தலமாகிய திருநின்றவூர், ‘திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று.’ என்கிறது தல புராணம். இவ்விடம் அருள் பாலிக்கும் இலக்குமிப் பிராட்டிக்கு, ‘என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி‘ என்று பெயர். நம் மீது திரு வைத்திருக்கும் கனிவுக்கு ஏற்ற காரணப்பெயர் எனலாம். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை தெய்வ சன்னிதானத்தில் காண்கிறோம். அண்ணல் பக்தவத்ஸலன்; அன்னை பெற்ற தாயார். இதை விளக்கி காஞ்சி முனிவர், ‘இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள் (ஒளவை). ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.’ என்று அருளமுதம் தந்துள்ளார். 

உனது நாமகரணம்

எமது தேசத்தை பாரதமாதா என்று விளித்து, வணங்குவது சாலத்தகும். பாரதம், இந்தியா, ஹிந்துஸ்தான் என்ற பெயர்களை தாங்கும் தீபகற்பம் ஒரு தெய்வத்திரு. மஹாகவி சுப்ரமணிய பாரதியார் ‘மன்னும் இமயமலை/ இன்நறு நீர் கங்கை/ உபநிடநூல்/ பாரத வீரர்/ நாரத கானம்/ பூரண ஞானம்...’ எல்லாமே பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே; 
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!’  என்று என்றோ 

தீர்க்கதரிசனம் தந்துருளினாரல்லவா! அதன் தொடர்பாக, நானும் 

பாரதமாதா என் அன்னை, அவளே இந்தியத் தாய் என்று 
தொழுது வணங்குகிறேன்.
(தொடரும்)

Monday, April 13, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1 & 2


"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1 & 2
இன்னம்பூரான்

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’   [அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] 
என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை 

முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ 

ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

(தொடரும்)

இறை வணக்கம்

தர்மமிகு சென்னைக்கு அருகில் உள்ள வைணவத் தலமாகிய திருநின்றவூர், ‘திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று.’ என்கிறது தல புராணம். இவ்விடம் அருள் பாலிக்கும் இலக்குமிப் பிராட்டிக்கு, ‘என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி‘ என்று பெயர். நம் மீது திரு வைத்திருக்கும் கனிவுக்கு ஏற்ற காரணப்பெயர் எனலாம். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை தெய்வ சன்னிதானத்தில் காண்கிறோம். அண்ணல் பக்தவத்ஸலன்; அன்னை பெற்ற தாயார். இதை விளக்கி காஞ்சி முனிவர், ‘இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள் (ஒளவை). ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.’ என்று அருளமுதம் தந்துள்ளார். 

(தொடரும்)

Monday, April 6, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1
இன்னம்பூரான்

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’   [அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] 
என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை 

முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ 

ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

(தொடரும்)

Fine beginning. 
Dr. Du Bois said he had concluded that "
"capitalism cannot reform itself; it is doomed to self-destruction."
"No universal selfishness can bring social good to all," he said. "Communism -- the effort to give all men what they need and to ask of each the best they can contribute -- this is the only way of human life.
"These aims are not crimes. They are practiced increasingly over the world. No nation can call itself free which does not allow its citizens to work for these ends"
=================================
How can we be un-biased when we see a 100 crore mansion and Dharaavi slum , side by side? 
Where is the data-analytic for virus affected and mortality in affluent NewYork and its Harlem?


Dear Mr.RS,
You have posted something unconnected with the blog. This is not a propaganda blog for you. Please reserve opinions for your blog. I did not delete this comment out of respect you. Not in the next time.
Innamburan

Wednesday, April 1, 2020

Please bear with me and respond.


I have received hundreds of warm and encouraging feedbacks.I am very happy , my friends. I shall write what your students want. Please mail me. I thank you all for the encouragement. Hereafter my positing will be either podcasts or videos. At age 87, I find it difficult to type texts.

Innamburan

An impressive share! I have just forwarded this onto a co-worker who had been conducting a little homework on this. And he actually bought me lunch because I discovered it for him... lol. So allow me to reword this.... Thank YOU for the meal!! But yeah, thanx for spending time to talk about this subject here on your web page.

Thank You for enthusing. One day, I hope to call you for Lunch.
Innamburan