Showing posts with label .இன்னம்பூரான். Show all posts
Showing posts with label .இன்னம்பூரான். Show all posts

Thursday, May 21, 2020

Shalini Letter 1.

Shalini Letter 1.
உதயன் கேர் ஷாலினிகளுக்கு முதல் கடிதம்.
இன்னம்பூரான்
29 04 2020

கல்வி என்ற ஆலயத்துக்கு எட்டு திசைகளிலும் கோபுரங்கள் உண்டு. பாடம் படித்து முன்னேறலாம். மற்ற புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம். சான்றோர் சொல்லுக்கு பணிந்து மேலும் கற்கலாம். இணையவழி கல்வி துரிதமாக வளர்கிறது. கடிதங்களும் எழுதலாம்; படிக்கலாம்;பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் மீது என்னைப்போன்ற ஆர்வலர்களுக்கு நேசமும் பாசமும் இருப்பது போல, எனக்கு பிரியமான மாணவ மாணவிகள் தேவகோட்டையில் ஒரு நடு நிலைப்பள்ளியில் வெளுத்து வாங்குகிறார்கள். நான் அவர்களை சந்திக்க சென்றபோது, ஒரு ராணுவப்பள்ளியின் கட்டுப்பாட்டை முன் நிறுத்தி எனக்கு மகிழ்ச்சி அளித்தார்கள். அசந்து போகாமல் இயல்பாகவே பல கேள்விகள் கேட்டு என்னை அசத்தியது, ஆறாம் வகுப்பு மாணவி.
இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள். தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் பள்ளியை சிறப்பாக நடத்துகிறார். ஆசிரியர் குழாமும் அப்படியே. பெற்றோர்கள் ஒத்து உழைக்கிறார்கள். என்னுடைய நிகழ்வுக்கு அவர்களில் ஒருவர் கூட வரவில்லை. ஏனெனில், அவர்கள் அன்றாடக்கூலிகள். ஒரு நாள் கூலியை விட்டால், பட்டினி தான். நான் போய் அவர்களில் சிலரை பார்த்தேன். எனது சகபாடியான ஜெர்மனி-வான செல்வி. சுபாஷிணி உங்களுடன் வந்து உரையாடியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அவர் அண்மையில் அந்த பள்ளிக்கு சென்ற செய்தி வந்ததும், அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கடிதம் உங்களுக்கு பயன் தருமானால் அடிக்கடி எழுதுவதாக உத்தேசம். எனது கடிதங்களோ, யூட்யூப் உரையோ, வாட்ஸ் அப் உரையாடலோ, ஸ்கைப் நேர்காணலோ,  உங்கள் கல்விமேன்மையை, வேலை செய்யும் திறனை, பொது அறிவை, நாட்டு நடப்பு புரிதலை அதிகரிக்க முடியாவிடின், அவற்றை நிறுத்தி விடுவேன்.
சில உபரி வினாக்கள்:
virus:      தமிழில்:…..
கடிதம்: தமிழில் அதே பொருள் உள்ள சொற்கள்.
Who got two Nobel Prizes?
பெனிசிலின் கண்டு பிடித்தது யார்?
பாரதியார் பாடல்களின் இரண்டின் முதல் வரி எழுதவும்.
Eureka! இது என்ன?
வூஹான் மாநிலம் எங்கே இருக்கிறது?
கை கழுவதின் முக்கியவத்தை டாக்டர்களுக்கு முதலில் கூறியவர் யார்/
Who is Harry Potter?
What computer games you play?
-x-
Homework: Translate this letter into English.

Wednesday, April 22, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” 1 to 4




"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்”  1 to 4

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’[அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை ‘முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

(தொடரும்)

இறை வணக்கம்

தர்மமிகு சென்னைக்கு அருகில் உள்ள வைணவத் தலமாகிய திருநின்றவூர், ‘திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று.’ என்கிறது தல புராணம். இவ்விடம் அருள் பாலிக்கும் இலக்குமிப் பிராட்டிக்கு, ‘என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி‘ என்று பெயர். நம் மீது திரு வைத்திருக்கும் கனிவுக்கு ஏற்ற காரணப்பெயர் எனலாம். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை தெய்வ சன்னிதானத்தில் காண்கிறோம். அண்ணல் பக்தவத்ஸலன்; அன்னை பெற்ற தாயார். இதை விளக்கி காஞ்சி முனிவர், ‘இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள் (ஒளவை). ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.’ என்று அருளமுதம் தந்துள்ளார். 

உனது நாமகரணம்
எமது தேசத்தை பாரதமாதா என்று விளித்து, வணங்குவது சாலத்தகும். பாரதம், இந்தியா, ஹிந்துஸ்தான் என்ற பெயர்களை தாங்கும் தீபகற்பம் ஒரு தெய்வத்திரு. மஹாகவி சுப்ரமணிய பாரதியார் ‘மன்னும் இமயமலை/ இன்நறு நீர் கங்கை/ உபநிடநூல்/ பாரத வீரர்/ நாரத கானம்/ பூரண ஞானம்...’ எல்லாமே பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே; 
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!’  என்று என்றோ 

தீர்க்கதரிசனம் தந்துருளினாரல்லவா! அதன் தொடர்பாக, நானும் 

பாரதமாதா என் அன்னை, அவளே இந்தியத் தாய் என்று 
தொழுது வணங்குகிறேன்.

உன் வரலாறு

அம்மா என்று உன்னை விளிக்கும் போது என் உள்ளம் பரமானந்தத்தால் துள்ளல் நடை போடுகிறது. இந்த பாரதத் திருநாட்டில் சக்தி உபாசனை தொன்மையானது. கடவுளர்களில்
தேவி முதன்மை ஸ்தானம் வகிக்கிறாள். அவள் தான் மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் பராசக்தி. சிங்கம் அவளது வாஹனம். அவளே பாரதமாதாவான வரலாறு, இது. கலோனிய அரசின் அதிகார துஷ்பிரயோகமும் 1857ல் நடந்த சுதந்திர போராட்டமும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி, நாட்டுப்பற்று, அச்சமின்மை, துணிச்சல், தியாகம் போன்ற தன்மைகளை அளித்தது. எங்கும், குறிப்பாக, வங்காளத்தில், சக்தி, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி, காளி மாதா என்றெல்லாம் பேச்சு எழுந்தது எனலாம். 16 வருடங்களுக்குள் பாரதமாதா என்ற நாடகம் கிரண் சந்திர பானர்ஜி அவர்களால்1873இல் முதன்முதலாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. தனது நாட்டை இழந்த ‘திக்கற்ற பார்வதியாக ( ராஜாஜி பிற்காலம் எழுதிய கதையின் தலைப்பு இங்கு பொருத்தம்.) பாரதமாதா அந்த நாடகத்தில் சித்திரிக்கப்பட்டது, மக்களின் மனதைத் தொட்டது; அம்மையே! உனது பாதகமலங்கள் கிழிந்து குருதிக் கொட்டியது; கங்கை, யமுனா நதிகளை போல உன் கண்களில் பிரவாகம். இந்த அவலம் தேசீய நினைவு கருவூலத்தில் பதிவாகி விட்டது. அன்னை பட்ட பாடு, நாம் அன்றாடம் கண்டு வேதனை படும்படி பிரதிபலித்ததால், பாமர மக்கள் கூட, பெருமதிப்புக்குரிய அன்னையின் இன்னல்களை புரிந்து கொண்டனர்.

இன்றைக்கு 136 வருடங்களுக்கு முன்னரே 1882இல் எழுதப்பட்ட பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்தமடம் என்ற புதினத்தில் இடம் பெற்ற "வந்தே மாதரம்" பாடல் விடுதலை இயக்கத்தின் பாடலாக அமைந்தது. குருதேவ் அதற்கு அமைத்த மெட்டு அதை தேசீய கீதமாகப் பரிமளிக்கச்செய்தது. ஆனந்த மடம் நாட்டுப்பற்று மிகுந்த, அதற்காக சகலத்தையும் துறக்கவும், கலோனிய அரசு மீது புரட்சிப்போர் தொடுக்கவும் முன் வந்த துறவிகளின் கூட்டத்தைப் பற்றியது. அது பற்றி சர்ச்சை பின்னர் எழுந்தாலும், பாரத மாதாவை, வந்தே மாதரம் பாடி வணங்கும் வழக்கம் எங்கும் பரவியது. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த கர்சான் பிரபு வங்காளத்தை மதாபிமான அடிப்படையில் பிரித்தாள முயன்றதும் கலோனிய அரசு மீது வெறுப்பையே ஏற்றி விட, தாயே!, உன்னை தெய்வம் என பாவித்து மக்கள் உன்னிடம் அடைக்கலம் நாடத்தொடங்கினர். அபனிந்தரநாத் தாகூர் உன்னை மற்றொரு கோணத்தில் வரைந்த பாரத மாதா ஓவியத்தில் காவியுடையில் அமரிக்கையான தேவியாகக் காட்சி அளிக்கிறாய், நீ. கற்பனா சக்தி மிகுந்த ஓவியமது. ஹிந்து தெய்வங்களைப்போல் நான்கு கைகள். வேதநூல்கள் ஒரு கையில்; இந்தியாவின் வேளாண்மையை பிரதிபலிக்கும் நெற்கற்றை ஒரு கையில். ஜபம் செய்யும் பாரதமாதாவின் மற்றொரு கையில் ஜெபமாலை. பரிசுத்தம் பாராட்டும் தேவி அவள் என்பதைக் குறிக்க மற்றொரு கையில் வெள்ளைத்துணி.  தேசபக்தியை தூண்ட வேறு என்ன வேண்டும் தாயே! மேலும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் முயற்ச யால், பிற்காலம் சென்னைக்கு விஜயம் செய்த பிபின் சந்திர பால் அவர்கள் நுட்பமான ஹிந்து மத சடங்குகளையும், வணங்கும் பழக்க வழக்கங்களையும் ஏற்புடைய வகையில் இணைத்து, பாரதமாதாவின் தேசீய திருவுருவை நமது முன் நிறுத்தினார். 

Tuesday, October 8, 2019

தருமமிகு சென்னையும் நானும் முன்னுரை

மீள்பதிவு 08 10 2019
தருமமிகு சென்னையும் நானும்
09/09/2010Innamburan Innamburan
தருமமிகு சென்னையும் நானும்

முன்னுரை

     சுபஸ்ய சீக்ரம்! ரங்கனாராவது விட்டுக்கொடுத்தார். என் எட்டு வயது மருமான் பேரன் ஒரு பொன்வாக்கு உதிர்த்தான், ‘எனக்கு மீசை முளைக்க எட்டு வருஷம் ஆகும். அதுவரை உயிரோடு இருந்தால் நீங்கள் பார்க்கலாம்!’ என்று. தொடங்கிவிட்டேன், குறிப்புணர்ந்து. உள்ளது உள்ளபடி எழுதுவதால், சிந்தித்து சிந்தித்து குழம்பவேண்டிய தேவை இல்லை. அவ்வப்பொழுது கொஞ்சமாக எழுதினால், யாரும் விரட்டப்போவதுமில்லை. 
     பட்டிக்காட்டான் பட்டணம் வந்த கதை தான் எனது. அக்ஷராப்யாசம் செக்கானூரணியில். குக்கிராமம். நரவாஹனம் (சித்தியாவின் தோளுக்கு இனியானாக!) பக்கத்து வீட்டு லீலா டீச்சர் தான் எஸ்கார்ட். அவர் தான் அந்த கிராமத்து பள்ளி ஆல் - இன்-ஆல். பத்தடி நடை. அப்றம் அவர் தோளில். ஏதோ பாடம், எல்லா வகுப்புக்களுக்கும் ஒன்றாக. கூச்சல் கூறையை பிளக்கும். அந்த களைப்பில் அவர் மடியில் தூக்கம். அந்த உரிமை எனக்கு மட்டும். எல்லா பசங்களும் வரும் - கிழிச ட்றாயர், நோ சட்டை. கவண் கல் வீசினால், குருவி காலடியில் விழும். குறி தப்பாது. அதிலெ கெட்டி, அந்த பசங்க.  ஏழை பாழைகள். பெற்றோர்கள் படிக்காதவர்கள். முக்காவாசி பிரமலைக்கள்ளர்கள். லீலா தெய்வம், அவர்களுக்கு. எனக்கு முதல் பாடம்: ‘இன பேதம் என்று ஒன்று இல்லை’. இது உணர்ந்தது; பாடம் எடுக்கப்படவில்லை. இருபது வருடங்களுக்கு பிறகு, உடல் நலம் நலிந்த என் தந்தையை பார்க்க அவரும், கணவர் ஷண்முகமும் (அப்பாவின் சக ஊழியர்.) வந்திருந்தார்கள். லீலா டீச்சர் பூரித்து போய்விட்டார், ‘ராஜூ கார்லெ கொண்டு விட்றான், அழகிய மனைவி, அப்பா அம்மாவை பாத்துக்கிறான்’ என்று. இத்தகைய பெருமிதம் பள்ளி ஆசிரியருக்கு மட்டுமே.
     காட்சி மாறுகிறது. காரணம் நினைவில் இல்லை. காரைக்குடி முத்தூரணி கரையில் ஒரு குடிசை. அங்கு சமத்து வாத்தியாரின் திண்ணைப்பள்ளிக்கூடம். வைஷ்ணவக்கும்பல். பட்டையா நாமம் போட்டுக்கணும். மணல் தான் ஸ்லேட். சுளீர்னு பிரம்பால் அடிப்பார். லீலா டீச்சர் மடியில் ரெஸ்ட் எடுக்கும் எனக்கு இந்த கொடுமை ஒத்து வருமோ? கொள்ளுப்பாட்டியிடம் பிராது கொடுத்தேன். அவள் கையை பிடித்துக்கொண்டு, ‘சமத்தா’ மறுநாள் போனேன். பாட்டியின் வாக்கு, 
‘ஏண்டா சமத்து! ஏன் புத்தி கெட்டு அலையறே? குழந்தை மேலே கை வச்சே! கூறு கூறா வெட்டி குளத்தலே வீசிடுவேன்!’ 
     இல்லாத மீசையை முறுக்கிக்கொண்டேன்! அன்றைக்கு தான் நாமம் போட கற்றுக்கொண்டேன். இனி நான் தான் சமத்து. ஆனால், முனகுவார், ‘இந்த வாண்டு ஆட்டி வச்சிருத்து.’ நம்ம கிட்ட அளவு கடந்த கசப்பான கனிவு. நாலு மாசம் கூட அங்கே படிக்கவில்லை. அப்பவோ, பிறகோ, எப்டியோ எனக்கு ஃப்ரெண்ட் காதர் மொய்தீன். ஒரு நாள் அவன் குல்லாவை போட்டுக்கொள்ள, பாட்டி சிரியா சிரித்தாள். தாத்தா வெடியா வெடித்தார். நான் பொருட்படுத்தவில்லை. அப்பவே ‘டோண்ட் கேர் மாஸ்டர்’. தாத்தா வச்ச காரணப்பெயர். ஒரு நாள் அவரை பற்றி எழுதணும். எனக்கு வாழ்நெறி கற்றுக்கொடுத்த சான்றோன்.
     அப்றம் தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் வித்யா சாலை. தொடர்பு இருக்கிறது. தலைமை ஆசிரியர் பிரகாஷ், என்னைப்பற்றிய பதிவுகள் எடுத்துக்கொடுத்தார், கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு பிறகு! முதலில் கிடைக்கவில்லை. சக்கு பாய் என்று தேடுங்கள் என்றேன். ஹூம்! விமலா என்று தேடச்சொன்னேன். கிடைத்தது. அவள் தான் அப்போது உயிர்தோழி என்றேன். ஹெட் மாஸ்டரோல்லியோ! ஒரு மாதிரியா பார்த்தார். நான் கண்டுகொள்ளவில்லை. எல்லாத்தையும் சொல்லிண்டுருப்பாளா? என்ன? 
     பிறகு உசிலம்பட்டி, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, சென்னை வருகை. இந்த ப்ராக்கெட்டுக்குள் 12 வருடங்கள். பெரும் காதைகள். சொல்றதுக்கு வேளை வந்தால், பார்த்துக்கொள்ளலாம். என்னடாது? சென்னையை பற்றி கேட்டால் சுயபுராணம் எழுதரானே என்று கேட்டால் - 1. இது எப்படி போகும் என்று எனக்கே தெரியாது. 2. நான்கு தலைமுறை தொடராகவும் பயணிக்கலாம். 3. தருமமிழந்த சென்னை மட்டும் பேசப்படலாம். 4. அஸ்வத்தாமை போல, திருமங்கலம் டாக்டர் சிரம் திருகியது முதல் நவம்பர் 2010 விழா வரை - வோல்காவிலிருந்து கங்கை வரை மாதிரி நீண்டும் போகலாம். 5. எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு விருப்பமில்லாதது உரைக்கப்படா.

ரங்கனார் அளித்த தாரக மந்திரம்: ‘ஒன்று விடாமல்’.

நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
09 09 2010
Sign in to reply
09/09/2010Mohanarangan V Srirangam
பரவாயில்லை. 
ராஜூ சொன்னத்தைக் கேட்கற நல்ல பையன்தான்.
:--))) 
 
நல்ல ஆரம்பம். 
நன்றி. 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

 



10/09/2010சீதாலட்சுமி
ராஜு சமத்து அண்ணா
அண்ணா உங்க சரித்திரம் நன்னா இருக்கு
சென்னை வரும் பொழுது உங்ககிட்டே ஜாக்கிரதையா பேசணும்
எனக்கு கிடைத்த முதல் பாடம்
 
 


 



10/09/2010Mohanarangan V Srirangam
உங்ககிட்டே ஜாக்கிரதையா பேசணும்<<<< 
 
இது யாரைக் குறித்து எழுதப்பட்டது? 
 
’ராஜு’வைக் குறித்து என்றால் நானும் ’ஆமாம் மாமி’ போட்றேன். 
:--))

 

10/09/2010சீதாலட்சுமி
ராஜு அண்ணாவைத்தான் குறிப்பிட்டேன்.
அவர் வீட்டிற்கருகில் ஓர் கல்வெட்டு ஆய்வாளர் இருக்கின்றார்
அவருடன் அண்ணா வீடு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை விவாதிக்க வருவதாகச் சொன்னேன். அத்துடன் பல மரபுச் செய்திகள், அரசியல் வரலாறும் 
விவாதிக்கப்பட இருக்கின்றன. நான் ஏதாவது உளறி என் அண்ணனின் கைவண்ணத்தில் அது வந்து விடுமோ என்று தான் அப்படி எழுதினேன்
இம்முறை தமிழகச் சுற்றுலா சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகின்றேன்
முடிந்த மட்டும் மின் தமிழ் அறிஞ்ர்கள் பலரைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்
 


 

10/09/2010S.Krishnamoorthy
இது மிக நல்ல தொடர். சுவையான செய்திகளையும், சம்பவங்களையும், நினைவுகளையும், அனுபவங்களையும் படித்து ரசிக்கலாம்.
1950-60 களில் சென்னைக்கு வந்து சிவமானேன் என்ற தலைப்பில் அன்றைய பிரபல எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதினார்கள்.  கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்த்து எப்படி?  சென்னையில் பட்ட இன்ப துன்பங்கள், மகிழ்ச்சி-வேதனை, சென்னை தன்னை எழுத்தாளனாக எப்படி உருவாக்கியது என்பது போன்ற சுவையான அனுபவப் பரிமாற்றங்களை அந்தத் தொடர் எடுத்துவைத்தது.
வழிப்போக்கன்





10/09/2010vadivelu kaniappan
அன்புடையீர்! வணக்கம். தொடக்கமே அமர்க்களம்.இதனைப் படிக்க நான் தயார். அருமையான Serial. தொடருங்கள் ஐயா. என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.



10/09/2010Rasa
திரு இன்னம்பூராரே
பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது. சொல்புதிது சுவைபுதிது. இப்பொழுது நீங்கள் எழுதும் இந்த நடை எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படியே தொடந்து எழுதுங்கள்.
அன்புடன்
ஆராதி



10/09/2010Tthamizth Tthenee
திரு இன்னம்புரார் மூலமாக  வெளிவரவேண்டிய  அருமையான தொடர், 
திரு இன்னம்புராரின்  கருத்து செறிந்த நடை மனதுக்கு இதமாகவும், பல அறிய செய்திகளையும் உள்ளடக்கி வரும் என்பது நமக்கெல்லாம் தெரியும்,
 
கரை புரண்டு  ஓடட்டும் ”தருமமிகு சென்னையும் நானும்”  
நாமும்  முத்தெடுப்போம்,
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

10/09/2010myself
சக்கு பாய் என்று தேடுங்கள் என்றேன். ஹூம்! விமலா என்று தேடச்சொன்னேன். கிடைத்தது. அவள் தான் அப்போது உயிர்தோழி என்றேன். ஹெட் மாஸ்டரோல்லியோ! ஒரு மாதிரியா பார்த்தார். நான் கண்டுகொள்ளவில்லை. எல்லாத்தையும் சொல்லிண்டுருப்பாளா? என்ன?//

இப்படி எழுத உங்களுக்குத் தான் வரும். மறுபடியும் சொல்றேன், அந்தக் காலத்து எஸ்.வி.வி.யைப் படிக்கிறாப்போல் ஓர் உணர்வு. அங்கேயே போயாச்சு!
அப்புறம் பேரனை வாத்தியார் அடிச்சதுக்குப் பாட்டி வாத்தியாரைக் கண்டிக்கிறது எங்க வீட்டிலேயும் என் கணவருக்கு நடந்திருக்கு. அந்த வாத்தியாரைப் பெரிய சார் னு கூப்பிடுவாங்க. எங்க கல்யாணம் ஆகி நாங்க நமஸ்காரம் செய்யப் போனப்போ அவர் என்கிட்டே சொன்னது முதல்லே இதுதான். ஒருநாள் உன் ஆம்படையானை அடிச்சுட்டேனு அவனோட பாட்டி வந்து என்னைக் கன்னாபின்னானு திட்டிட்டா! அதுக்கப்புறம் அவன் மேலே கையே வச்சதில்லை என்றார்.  அந்தக் காலத்தில் எல்லாப் பாட்டிங்களும் இப்படித் தான் இருந்திருப்பாங்க போல! 





Attachments (1)
360.gif
453 B   View   Download

11/09/2010N. Kannan
சூப்பரோ! சூப்பர்!
இனா எழுதினா தேனா இல்லையா?
சில நேரம் இப்படிக் கொட்டும். தேன்மழை எப்போதுமில்லை!
க.>

> ‘ஏண்டா சமத்து! ஏன் புத்தி கெட்டு அலையறே? குழந்தை மேலே கை வச்சே! கூறு கூறா வெட்டி குளத்தலே வீசிடுவேன்!’
>
>      இல்லாத மீசையை முறுக்கிக்கொண்டேன்!
>      அப்றம் தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் வித்யா சாலை. தொடர்பு இருக்கிறது. தலைமை ஆசிரியர் பிரகாஷ், என்னைப்பற்றிய பதிவுகள் எடுத்துக்கொடுத்தார், கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு பிறகு! முதலில் கிடைக்கவில்லை. சக்கு பாய் என்று தேடுங்கள் என்றேன். ஹூம்! விமலா என்று தேடச்சொன்னேன். கிடைத்தது. அவள் தான் அப்போது உயிர்தோழி என்றேன். ஹெட் மாஸ்டரோல்லியோ! ஒரு மாதிரியா பார்த்தார். நான் கண்டுகொள்ளவில்லை. எல்லாத்தையும் சொல்லிண்டுருப்பாளா? என்ன? 
(தொடரும்)

Friday, September 13, 2019

காதல் ஒரு மனோரதம்



காதல் ஒரு மனோரதம்

https://www.youtube.com/watch?v=g31pr1S0wVw


இன்னம்பூரான்

What's Going down i am new to this, I stumbled upon this I've discovered It
absolutely useful and it has helped me out loads. I hope to give a contribution & assist different users like its aided me.
Good job.
Reply

  • Woah! I'm really enjoying the template/theme of this website.

    It's simple, yet effective. A lot of times it's very difficult to get
    that "perfect balance" between superb usability and visual appearance.
    I must say that you've done a amazing job with this.
    In addition, the blog loads very quick for me on Opera. Excellent Blog!
    Reply
    Thank You. You are appreciating my mind, which writes.
  • Hi to every one, the contents existing at this website
    are really remarkable for people experience, well, keep up the good work
    fellows.
    Reply

  • Yesterday, while I was at work, my sister stole my
    iphone and tested to see if it can survive a twenty five foot drop,
    just so she can be a youtube sensation. My apple ipad is now destroyed and she has 83 views.
    I know this is entirely off topic but I had to share it with someone!
    Reply
  • Thank you for the auspicious writeup. It in fact was a amusement
    account it. Look advanced to far added agreeable from you!
    By the way, how can we communicate?
    Reply

  • I'd like to thank you for the efforts you've put in penning
    this blog. I'm hoping to view the same high-grade content by you later on as
    well. In truth, your creative writing abilities has motivated me to get my very own blog now ;)
    Reply

  • It's actually a cool and helpful piece of info. I am satisfied that you shared this useful info with us.
    Please stay us informed like this. Thank you for sharing.
    Reply

  • Having read this I believed it was very enlightening.

    I appreciate you spending some time and energy to put this
    article together. I once again find myself personally spending a significant amount
    of time both reading and commenting. But so what, it was still worthwhile!
    Reply

  • Monday, February 29, 2016

    வீர சவர்க்கார்

    Friend Srirangam Mohanarangam , one of our valued serious writers, wrote as under 11 hours ago. I replied to him as under and start a new thread in Min Tamil for inculcating historical perspectives.

    Innamburan

    March 1, 2016


    My deep apologies to Mr Innamburan for my negligence in not noting this post which has come even in 2012 itself.

    It is well written and evinces your true spirit.

    Casually while searching in the Google I landed here and your article was nice and informative. Of course you have your own style, no doubt.

    And your citations of references were helpful.

    Once again sorry for not being prompt.

    ***


    Dear Srirangam Mohanarangan,

    I am so very happy that you brought this again to my attention.
    Academia, patriots and those interested in true perspectives will read history in a frame of mind, which expels pet prejudices and mischievous interpretations.
    To my mind, all patriots will welcome this input today.
    Thanks to you, I am republishing it today.
    Warm regards, 
    Innamburan
    March 1, 2016


    அன்றொருநாள்: ஃபெப்ரவரி 26 ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர் - innamburan@gmail.com - Gmail

    அன்றொருநாள்: ஃபெப்ரவரி 26
     ஒரு நாத்திக ஹிந்துத்துவ புரட்சியாளர்
    வீர சுதந்திரம் வேண்டி நின்றார், வீர சாவர்க்கர், 1905ல். தேசாபிமானத்தை நிலை நிறுத்த, முதல் முறையாக, விதேசி பகிஷ்காரம், அன்னியநாட்டுத்துணி எரித்தல் எல்லாம் செய்து புரட்சிக்கு வித்திட்டவர், அவர். வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களுக்கு ஆணிவேர் சுதந்திரம். கவிதை பாடினார், நூல்கள் வடித்தார். நாடகங்கள் எழுதினார். அடிப்படையில், வன்முறையில் நம்பிக்கை வைத்த புரட்சியாளர். அந்த வழியில் அரசியலர்,ஜாதி மதத்தை அறவே வெறுத்து. 1857ம் வருட ‘சிப்பாய் கலகத்தை’ முதன் முதலாக சுதந்திரப்போராட்டம் என்று புத்தகம் எழுதினார். அது தடையும் செய்யப்பட்டது. ஆர்வத்துடன் என் போன்றவர்களால் படிக்கவும் பட்டது. (எழுபது வருடங்களுக்கு முன்னாலேயே, தமிழாக்கம் இருந்ததாக, ஞாபகம்.) அவருக்கு ஹிந்துமத கோட்பாடுகள், மரபுகள், தொன்மை சமாச்சாரங்களில் ஆர்வம் குறைவு. பகுத்தறிவு, நாத்திகம், மனித நேய கோட்பாடுகள், ஆன்மீகத்தைத் தவிர்த்தத் தத்துவ விசாரணைகள், அதுவும் மேற்கத்திய போக்கில், மீது தான் ஆர்வம். எனினும், அவர் தான் ஹிந்துத்வம் என்ற ‘அகண்ட பாரத’ வழிமுறையை வகுத்தவர்.
    நமது மெத்தனங்களில் ஒன்று, ஆளுமை ஒதுக்கினால், நாமும் ஒதுக்குவது. கண்டால் தான் காமாட்சி நாயக்கன்! யதா ராஜா! ததா கூஜா! இதை விட அநாகரீகமான அடிமைத்தளை வேறு ஒன்றுமில்லை. மனம் விட்டு பேசுகிறேன், வலி பொறுக்காமல். சர்தார் படேலுக்கு உதட்டளவில் மரியாதை. ஒரு படி கீழே நேதாஜிக்கு. ராஜாஜி என்றால் தள்ளுபடியே. ஏன்? இந்திரா காந்தி தலையெடுத்தபின் அத்தை விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு இருட்டடிப்பு. இந்த அழகில், வினாயக தாமோதர் சாவர்க்கரை ( 28 May 1883 - 26 February 1966) , அவரது அஞ்சலி தினமாகிய இன்று நினைவு கூர்ந்தால், யார் யார் கண்டனக்குரல் எழுப்புவார்களோ, யான் அறியேன். பொருட்படுத்தவும் இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே, என் மனசாக்ஷியின் ஆணைக்குக் கட்டுப்பட்டு. காங்கிரஸ் கட்சியை சார்ந்தது எங்கள் குடும்பம். இருந்தும், சிறுவனான என்னை, என் தந்தை வினாயக தாமோதர் சாவர்க்கர் அவர்களை தரிசிக்க, மதுரை ஹிந்து மஹா சபையின் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றார். அவருடன், டாக்டர் மூஞ்சேயையும், மற்றொரு தலைவரையும் (ஷியாம்பிரசாத் முக்கர்ஜி?)  அருகிலிருந்து கண்டோம். பாரிசவாயுவினால் நலம் குன்றியிருந்தார், சாவர்க்கர், என்று ஞாபகம். 1966ல் சல்லேஹனம் இருந்து (உணவு, நீர், மருந்து எல்லாவற்றையும், சக்கரவர்த்தி சந்திரகுப்த மெளரியர் மாதிரி உயிரை பரித்யாகம் செய்து விடுவது) ஆத்மஹத்தி செய்து கொண்டார். அவரை பற்றி சில வார்த்தைகள்.
    இங்கிலாந்தில், இந்திய விடுதலை புரட்சியாளன் என்று 1910ல் கைது செய்யப்பட்டார்; 50 வருட தீவாந்திர சிக்ஷை வழங்கப்பட்டது. தப்பித்து மார்ஸேல்ஸ் என்ற ஃப்ரென்ச் நகருக்கு ஓடிவிட்டார். பிடிப்பட்டு, இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டார். அந்தமானில் சிறை வைக்கப்பட்டார். அங்கு தான் ஹிந்துத்துவ தேசாபிமானம் என்ற கருத்தை, சிந்தித்து, சிந்தித்து, கோட்பாடாக வகுத்தார். சிறையில் அவருடைய தேகாரோக்யம் முழுதும் குலைந்தது. 1920லியே, திலகர், காந்திஜி, வல்லபாய் படேல் ஆகியோர் இவரது விடுதலையை கோரினர். காரணங்களும், கண்டனங்களும் பல கூறப்பட்டாலும், ஆங்கில அரசின் தயை நாடி, வன்முறையிலிருந்து விலகுவதாக மன்னிப்பு கடிதம் கொடுத்து, 1921ல் வெளிவந்ததை பற்றி நான் பெரிது படுத்தப்போவதில்லை. தீவிரமாக ஹிந்துத்துவ தேசாபிமான பிரச்சாரத்தில் இறங்க, அவருக்கு வேறு உபாயம் கிடைக்கவில்லை என்பது என்னமோ உண்மை. காங்கிரஸ் கட்சியை கண்டனம் செய்தார். அண்ணல் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டார்.
    அவருடைய ஹிந்துத்துவ தேசாபிமானம் சமய சின்னத்துக்குள் அடங்க வில்லை; அந்த எல்லைக்குள் வளைய வரவில்லை. ஹிந்து மதம், சமணம், பெளத்தம், சீக்கிய மதம் எல்லாம் அவருடைய அகண்ட பாரதத்தில் ஒன்று சேர்ந்து இயங்கின. தன்னை வெளிப்படையாகவே நாத்திகன் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். இஸ்லாமிய பிரிவினைக் கொள்கைகளும், அந்த சமயமும், கிருத்துவமும் நாட்டின் எல்லை தாண்டிய விசுவாசம் வைத்திருந்ததை அவர் ஆதரிக்கவில்லை. சாதி வெறியையும், தீண்டாமையையும் ஒழிக்கப் பாடுபட்டார். ஹிந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களை திரும்பவும் கொணர முயன்றார். ஹிந்து மஹாசபையின் அக்ராசனராக 1937லிருந்து 1943 வரை பணி புரிந்த சாவர்க்கர், முஸ்லீம் லீக் உடனும், கம்யூனிஸ்ட்களுடனும் சேர்ந்து இரண்டாவது உலக யுத்தத்தில் இங்கிலாந்தை ஆதரித்தார்.ஹிந்துக்களை ராணுவத்தில் சேர தூண்டினார். 1947க்கு பிறகு ஹிந்து மஹா சபையில் பிளவுகள் தோன்றின. ஷியாம் பிரசாத் முக்கர்ஜி, கருத்து வேற்றுமையினால் உப அக்ராசனர் பதவியிலிருந்து விலகினார்.
    1947ல் சுதந்திரம் வந்தாலும் வந்தது; 1905லியே சுதந்திர யக்ஞத்தில் ஈடுபட்ட சாவர்க்கர் இருட்டடிப்பு செய்யப்பட்டார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் மக்கள் திரள் திரளாக கலந்து கொண்டாலும், அவருடைய ராணுவ நோக்கை மரியாதை செய்யும் வகையில் ராணுவ வண்டி கொடுங்கள் என்ற (அநாவசிய) வேண்டுகோளை, பாதுகாப்பு அமைச்சர் சவான் நிராகரித்தார். மஹாராஷ்ட்டிர மாநில சார்பில் ஒரு அமைச்சர் கூட மயானத்துக்கு வரவில்லை. நாடாளுமன்ற மரியாதை தர, அவைத்தலைவர் மறுத்தார். சவானோ, மொரார்ஜி தேசாயோ அந்தமான் சென்ற போது, இவர் இருந்த சிறையின் குச்சு அறையை பார்வையிட மறுத்தனர்.
    சாவர்க்காரின் தீவிர ஹிந்துத்வ சிந்தனைகள், பாரபக்ஷமற்ற, மதவெறி தணித்த இந்திய ஜனநாயகத்தின் ஒற்றுமை பண்பாட்டை குலைக்கும் என்று ஒரு கட்சி; ஜனநாயக மரபை குலைக்காமல், மக்களின் அபிலாஷையை தான் அவரது சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன என்பது எதிர் கட்சி. காமன் எரிந்த கட்சி/எரியாத கட்சி விதண்டாவாதம் போல் இது இருக்கிறது. அவருடைய படைப்புகளிலிருந்து சிந்தனைகளை நடுநிலையில் வைத்து ஆராய்வது தான் நியாயம் என்ற ஆய்வு ஒன்றை, ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் தந்துள்ளார். இரு சாராரும், சாவர்க்காரின் தத்துவம், சிந்தனை, கருத்துக்கிட்டங்கி ஆகியவற்றை மேலெழுந்தவாரியாகத்தான், அவரவரது பிரசார பீரங்கிகளுக்கு பயன் படுத்தினர். அது நியாயமில்லை என்கிறார். அந்த ஆய்வுகட்டுரையை வடிகட்டி, சுருக்கி  தமிழாக்கம் இங்கே செய்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இரு காரணங்கள்: 1. ஆய்வுகட்டுரையே சுருக்கி அமைக்கப்பட்டிருப்பது. 2. இந்தியாவில், ஆய்வின்மையால், வரலாறு நடுநிலை பிறழ்ந்து இருப்பது. இன்று ராமச்சந்திர குஹா, கோபால்கிருஷ்ண காந்தி போன்றோரின் படைப்புகள் போன்ற ஆய்வுகள் பெருகவேண்டும். உதாரணத்திற்கு, சில வினாக்கள்.
    1. சாவர்க்காரின் ஹிந்துத்வத்தின் முழு பரிமாணம் என்ன?
    2. திரு.வி.க. அவர்கள் தேசபக்தன் இதழிலிருந்து ஏன் விலக நேரிட்டது?
    3. ராஜாஜி ஸர். ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸிடம் என்ன சொன்னார்? ஏன்?
    4. சர்தார் படேலின் எந்த எச்சரிக்கையை நேரு ஏற்கவில்லை? ஏன்?
    சாவர்க்கர் பற்றிய ஆய்வுகட்டுரையை பிறகு தான், பெரும்பாலோர் கேட்டால், அலசவேண்டும். இப்போதைக்கு:
    1. சாவர்க்காரின் தத்துவம், அவரது படைப்புகளில், அங்குமிங்குமாக உளன. வெள்ளி முடியும், கறுத்த முடியும் அவரவர் அஜெண்டா படி, பிடுங்கிக்கொள்ளப்பட்டன.
    2. ஜே.எஸ்.மில், பென்தாம், ஹெர்பெட் ஸ்பென்ஸர் போன்றோரின் தாக்கம் போல, சனாதன தர்மம் அவரை கவரவில்லை. அவர் படிக்கவில்லை என்று பொருள் அன்று. யோக வாசிஷ்டம் அவரை முற்றிலும் ஆகர்ஷித்து இருக்கிறது. 
    3. ஒரு தொலை நோக்கு [worldview (Weltansicht)] நாடிய சாவர்க்காருக்கு இந்திய தத்துவங்களின் விட்டேற்றி அணுகுமுறை பிடிக்கவில்லை. மேற்கத்திய விசாரமோ இவ்வுலக ஆணிவேர் அணுகுமுறை. அது அவரை கவர்ந்தது. மேலும், பகுத்தறிவும், அதன் பரிசிலாகிய நாத்திக அணுகுமுறையும், அவரிடம் நிலையாகவே இருந்தன.
    4. சமயங்களை பற்றி நன்கு அறிந்த சாவர்க்கர், ஹிந்து மத கோட்பாடுகளை முழுதும் ஒத்துக்கொள்ளவில்லை.
    சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
    இன்னம்பூரான்
    25 02 2012
    Inline image 1
    உசாத்துணை:

    Wolf, S.O (2010): Vinayak Damodar Savarkar’s‘Strategic Agnosticism’:A Compilation of his Socio-Political Philosophy and Worldview: Working Paper No. 51: Heidelberg Papers in South Asian and Comparative Politics: Retrieved on Feb 24, 2012 from https://docs.google.com/viewer?a=v&q=cache:T7DvOdXjgJ8J:archiv.ub.uni-heidelberg.de/volltextserver/volltexte/2010/10414/pdf/HPSACP_Wolf.pdf+savarkar+utilitarian+humanist&hl=en&pid=bl&srcid=ADGEESiMazwIuo_woe1GTyJEUXYMGbGNmRo8E3ISs1a3mellCeCT-2ur02Got4FrG84PhQKoW2_ALdxrNgvVoW48h_N8rw9KbwseGI-Y4g3pujTAT-JVQ1tWTsgE5-Qw4UQzUxD_ErQu&sig=AHIEtbQ3YVQu24_Gij9LQPRCS6wvycB19A


    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Wednesday, December 16, 2015

    நாளொரு பக்கம் 39

    நாளொரு பக்கம் 39


    Friday, the 3rd April 2015
    People are like stained glass windows: they sparkle and shine when the sun is out, but when the darkness sets in their true beauty is revealed only if there is a light within. 
    -Elisabeth Kübler-Ross, psychiatrist and author (1926-2004) 

    Elisabeth Kübler-Ross became a celebrity psychiatrist with her ground-breaking book, "On Death and Dying.", as the Western world attaches great importance to Grief-counseling in a professional approach. She founded Shanti Nilaya in California as a  healing center for the dying and their families.

    We will benefit by listening to the advice from such a distinguished star. She advocates our exercising our minds to illuminate our living styles, by using the apt simile of the stained glass in the Church windows, each one an art-creation. Just as they sparkle when the sun is out, our enlightened mind will liven us up, if only we know the secret of enlightening it,from within.

    Lead! Kindly Light! 

    -x-