Friday, April 17, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” 1,2,3,




"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” 1, 2, 3, 

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’[அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை ‘முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

இறை வணக்கம்

தர்மமிகு சென்னைக்கு அருகில் உள்ள வைணவத் தலமாகிய திருநின்றவூர், ‘திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று.’ என்கிறது தல புராணம். இவ்விடம் அருள் பாலிக்கும் இலக்குமிப் பிராட்டிக்கு, ‘என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி‘ என்று பெயர். நம் மீது திரு வைத்திருக்கும் கனிவுக்கு ஏற்ற காரணப்பெயர் எனலாம். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை தெய்வ சன்னிதானத்தில் காண்கிறோம். அண்ணல் பக்தவத்ஸலன்; அன்னை பெற்ற தாயார். இதை விளக்கி காஞ்சி முனிவர், ‘இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள் (ஒளவை). ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.’ என்று அருளமுதம் தந்துள்ளார். 

உனது நாமகரணம்

எமது தேசத்தை பாரதமாதா என்று விளித்து, வணங்குவது சாலத்தகும். பாரதம், இந்தியா, ஹிந்துஸ்தான் என்ற பெயர்களை தாங்கும் தீபகற்பம் ஒரு தெய்வத்திரு. மஹாகவி சுப்ரமணிய பாரதியார் ‘மன்னும் இமயமலை/ இன்நறு நீர் கங்கை/ உபநிடநூல்/ பாரத வீரர்/ நாரத கானம்/ பூரண ஞானம்...’ எல்லாமே பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே; 
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!’  என்று என்றோ 

தீர்க்கதரிசனம் தந்துருளினாரல்லவா! அதன் தொடர்பாக, நானும் 

பாரதமாதா என் அன்னை, அவளே இந்தியத் தாய் என்று 
தொழுது வணங்குகிறேன்.
(தொடரும்)

Monday, April 13, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1 & 2


"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1 & 2
இன்னம்பூரான்

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’   [அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] 
என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை 

முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ 

ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

(தொடரும்)

இறை வணக்கம்

தர்மமிகு சென்னைக்கு அருகில் உள்ள வைணவத் தலமாகிய திருநின்றவூர், ‘திருவாகிய இலக்குமிப் பிராட்டி வைகுந்தத்தை விட்டு இங்கு வந்து நின்றதால் திரு நின்றவூராயிற்று.’ என்கிறது தல புராணம். இவ்விடம் அருள் பாலிக்கும் இலக்குமிப் பிராட்டிக்கு, ‘என்னைப் பெற்ற தாயார், சுதாவல்லி‘ என்று பெயர். நம் மீது திரு வைத்திருக்கும் கனிவுக்கு ஏற்ற காரணப்பெயர் எனலாம். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதை தெய்வ சன்னிதானத்தில் காண்கிறோம். அண்ணல் பக்தவத்ஸலன்; அன்னை பெற்ற தாயார். இதை விளக்கி காஞ்சி முனிவர், ‘இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள் (ஒளவை). ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.’ என்று அருளமுதம் தந்துள்ளார். 

(தொடரும்)

Monday, April 6, 2020

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1

"என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்” ~1
இன்னம்பூரான்

என்னை பெற்றெடுத்து, பொத்தி, பொத்தி வளர்த்து, சீராட்டி, அடிசில் அமுது ஊட்டி, வெண்சங்கினால் பாலும் நீரும் புகட்டி, வண்ண வண்ணமாக, வித விதமான சொக்காய் அணிவித்து, அழகு பாராட்டி, இல்லத்தினுள் கண்ணின் பாவையாக பாதுகாத்து, கல்விக்கு வித்திட்டு, நெறி தவறாத நல்வழி என்ற ராஜபாட்டையில் கவனமாக அழைத்துச்சென்று, கண்ணும், கருத்துமாக என்னை வளர்த்து ஆளாக்கிய நற்றன்னையே ! உன்னிரு தாள் மலர் பணிந்தேன். உடனே, தலை நிமிர்ந்து உன் முகாரவிந்த தரிசனம் செய்தேன்; என்னே பொலிவு! என்னே ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம்!  செயலிழந்தேன். கனவுகள் பல கண்டேன். கனவும் நனவும் களிநடம் புரிந்தன. தெளிவு பெற்ற பின் உனக்கு மடல் தூது விடத் துணிந்தேன். 

நலம். நலம் அறிய அவா. உனது நலத்தினுள் கோடானுக்கோடி மக்களாகிய எங்களின் நலம் உள்ளடக்கம். உனது நலத்துக்கு மற்றொரு பெயர் பொதுநலம். அவரவர் தன்னலம் நாடுவது மனித இயல்பே. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு.’ என்றார் ஒளவைப்பிராட்டி. ஒவ்வொருவரும் நல்வழியில் தன்னலம் நாடினால், பொதுநலம் அதன் தொகுப்பாக அமையும். சமுதாயம், சாதி மத இன பேதமின்றி, நடுவு நிலையில் நின்று, இயக்கும் பொதுநலம், ‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்;கோலுயரக் கோனுயர்வான்.’ என்று மதி நுட்பத்துடன் ஒளவையார் உரைத்தவாறு, தனி மனிதர்களின் வளத்தையும் பெருக்கும்.

‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’   [அதிகாரம் நடுவு நிலைமை: குறள் 118] 
என்ற திருக்குறளுக்கு பரிமேலகர் தரும் உரை 

முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ 

ஒரு பக்கம் சாயாமையே சால்புடையார்க்கு அழகாகும் என்பது அதன் பொருள். அதற்கிணங்க செயலாற்றும் பொதுநலம் இன்றியமையாத நல்வரவு. உனது நலம் அதுவே என்பதால் தான், தாயே!அக்கறையுடன், மனதார, உனது நலம் விசாரித்தேன். ஒரு எச்சரிக்கையையும் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவேன். தவறான பாதை, தீய செயல்கள், வன்முறை போன்றவை தன்னலத்தின் கோடரிகளாக அமைந்து விட்டால், சமுதாயம் சீரழிந்து விடும்; தனி மனிதர்களும் துலாம் போலத்தான் இயங்கவேண்டும். அன்னையே! இது நான் உன்னிடம் கேட்கும் வரன்.  

இனி இறை வணக்கம்; உனது நாம கரணம்; உன் வரலாறு; உனது பக்தர்களின் காணிக்கை; எனது புகழாரம்; பின்னர், வருங்கால அர்ப்பணிப்புகளும் அணி வகுக்கும். இறுதியில், சுருக்கமாக என் தூது கூறப்படும். 

(தொடரும்)

Fine beginning. 
Dr. Du Bois said he had concluded that "
"capitalism cannot reform itself; it is doomed to self-destruction."
"No universal selfishness can bring social good to all," he said. "Communism -- the effort to give all men what they need and to ask of each the best they can contribute -- this is the only way of human life.
"These aims are not crimes. They are practiced increasingly over the world. No nation can call itself free which does not allow its citizens to work for these ends"
=================================
How can we be un-biased when we see a 100 crore mansion and Dharaavi slum , side by side? 
Where is the data-analytic for virus affected and mortality in affluent NewYork and its Harlem?


Dear Mr.RS,
You have posted something unconnected with the blog. This is not a propaganda blog for you. Please reserve opinions for your blog. I did not delete this comment out of respect you. Not in the next time.
Innamburan

Wednesday, April 1, 2020

Please bear with me and respond.


I have received hundreds of warm and encouraging feedbacks.I am very happy , my friends. I shall write what your students want. Please mail me. I thank you all for the encouragement. Hereafter my positing will be either podcasts or videos. At age 87, I find it difficult to type texts.

Innamburan

An impressive share! I have just forwarded this onto a co-worker who had been conducting a little homework on this. And he actually bought me lunch because I discovered it for him... lol. So allow me to reword this.... Thank YOU for the meal!! But yeah, thanx for spending time to talk about this subject here on your web page.

Thank You for enthusing. One day, I hope to call you for Lunch.
Innamburan

Friday, March 27, 2020

சுவரொட்டி 6 பழங்கதை 3

சுவரொட்டி 6
பழங்கதை 3
இன்னம்பூரான்
26 03 2020
இது ஆயிரங்காலத்துப்பயிர். நம்மில் அனேகர் நாட்தோறும் தியானஸ்லோகங்களை பக்தியுடன் பாராயணம் செய்வது போல, இந்த தகவலை நாம் இன்னும் ஆயிரம் வருடமாவது நாட்தோறும் தேசபக்தி பாராயணம் செய்வது சாலவும் தகும்.
நூறு வருடங்களுக்கு முன்னால் இதே தினம் அண்ணல் காந்தி அனுப்பிய சுற்றறிக்கை கூறுவது: ஏப்ரல் மாதம் 6 முதல் 13 தேதி வரை சத்யாக்ரஹ வாரம்  அனுஷ்டிக்க போவதாக சொன்ன என்னுடைய கருத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த வாரத்தில் குறைந்தது பத்து லக்ஷம் ரூபாய் தானம் பெறுவது கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன். யோக்கியதையும் நற்பண்பும் நிறைந்த தன்னார்வலர்கள் கிடைத்தால் ரசீது விவகாரம் இருக்காது; எல்லாரிடமிருந்து வசூலிக்கலாம். செல்வந்தர்கள் தங்கள் தங்கள் கூட்டங்களிலிருந்து எளிதில் வசூலிக்கமுடியும். அதை எல்லாம் விட முக்கியம் நாம் எப்படி அந்த வாரத்தை கொண்டாடப்போகிறோம் என்பதே. அது பற்றிய எனது அணுகுமுறையையோ அல்லது 13ம்தேதி நடந்த படுகொலையின் ஞாபகார்த்தமோ  சர்ச்சைக்கு உட்படாது என்று நம்புகிறேன். படுகொலையுண்ட மக்களின் ஞாபகார்த்தம், அந்த அட்டூழியத்தை (ஜாலியன்வாலாபாக் படுகொலை) விட முக்கியமான விஷயம். இந்த சத்தியாக்ரஹத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அதற்காக வசூல் செய்வதில் சுணங்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். இது சாராம்சம்.

இந்த சுற்றறிக்கை ஆயிரம் கோடி சூரிய சந்திர நக்ஷத்திர பிரபஞ்சத்தை விட பல்லாயிரம் கோடி வலிமை பெற்றது எனலாம். சென்னையிலும், இந்தியா முழுதும் சத்தியாக்ரஹ தினம் எப்படி கொண்டாடப்பட்டது என்று ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். தருணம் கிட்டும்போது மீள்பதிவு செய்கிறேன். இப்போது சொல்வது என்னவென்றால், இந்த சுற்றறிக்கை ஆங்கிலேய கலோனிய அரசை குழி தூண்டி புதைத்தது. இந்தியர்களிடம் ஒரு ஒருமைப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் ஒரு யாகத்தின் ஹோமாக்னி போல வளர்த்தது. அடிக்கடி, அதாவது குறைந்தது நாட்தோறுமாவது நாம் இந்த சுற்றறிக்கையை படித்து மனம் தெளிவு கொள்ளவேண்டும்.
-#-

நன்றி: ஹிந்து இதழ்.


I’m not that much of a online reader to be honest but your blogs
really nice, keep it up! I'll go ahead and bookmark
your site to come back down the road. Cheers
Reply
Thank You.

  • Fine way of telling, and pleasant post to take facts on the topic of my presentation focus, which i am going to deliver in school.


    I’m not that much of a online reader to be honest but your blogs
    really nice, keep it up! I'll go ahead and bookmark
    your site to come back down the road. Cheers
    Reply
  • Fine way of telling, and pleasant post to take facts on the topic of my presentation focus, which i am going to deliver in school.
    Reply
  • It's really a nice and useful piece of info. I am satisfied that you just shared this helpful info with us.
    Please keep us informed like this. Thanks for sharing.
    Reply
  • This web site definitely has all of the info I wanted about this subject and didn't
    know who to ask.
    Reply
  • I am very happy , my friends. I shall write what your students want. Please mail me. I thank you all for the encouragement. Hereafter my positing will be either podcasts or videos. At age 87, I find it difficult to type texts.

    Innamburan

    Wednesday, March 25, 2020

    சுவரொட்டி 6 பழங்கதை 2

    சுவரொட்டி 6
    பழங்கதை 2
    இன்னம்பூரான்
    26 03 2020

    அவ்வப்பொழுது நாடாளுமன்றத்துஉறுப்பினர்கள்/ சட்டசபை உறுப்பினர்கள் அடித்துக்கொள்வார்கள். நாற்காலிகளையும், ஒலிபெருக்கிகளையும் வீசியடிப்பார்கள். நாக்கும், வாக்கும் நீளும், கடுஞ்சொற்களால், வசை மொழியால். இந்தியாவில் நாம் அடிக்கடி தரிசிக்கும் காட்சி, இது. கனடாவிலும் இது நடந்திருக்கிறது. பிரதமர் ட்ரூடோவும் எம்.சார்ட்ராண்ட் என்ற தொழிற்ச்சங்கத்தலைவரும் ஒருவர் சிண்டை ஒருவர் பிடித்துக்கொண்டு பொதுமன்றத்தில் தடாலடியில் இறங்கினார்கள். எம்.சார்ட்ராண்ட் பிரதமரை அண்டபுளுகன் என்றார். அரசவையை குண்டர்கள், வேசிகளின் கூட்டம் என்றெல்லாம் வசை பாடினார். பிரதமரும் அவரை வெறியன் என்று தாக்கினார். இது நடந்தது எல்லாம் பாராளுமன்றத்தின் நடுக்கூடத்தில். அவர்கள் அடிதடியில் இறங்கும் தருணம் பொதுமக்கள் வந்து போராளிகளை விலக்கினார்களாம். தலையெழுத்து! அரசியல்வாதிகள் இப்படி குழாயடி சண்டை போட்டால், மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு படி மேலே போய் கத்திச்சண்டை போடுவார்கள். இப்படித்தான், அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ட்ரூமனின் பெண் பாடுவதை ஒருவர் மோசம் என்று விமரிசித்தார். ட்ரூமனுக்கு வந்ததே கோபம். அவரை அடிக்கக் கிளம்பி விட்டாராம். நாலு பேர் சமாதானம் சொல்லி அவரின் கோபத்தைத் தணித்தார்களாம். ஏன் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிராளிகள் சட்டசபையில் அவமதிக்க முயன்றனர். அவரும், அவருடைய எதிரி கருணாநிதியும், ஒருவரை ஒருவர் ஜெயிலில் அடைத்து வருத்தினர்.
    சரி. சரி. நல்ல விஷயத்துக்கு வருவோம். ஒரு காலகட்டத்தில் காங்கிரஸ் நண்பர்கள் ஜவஹர்லால் நேருவும் ராம் மனோஹர் லோகியாவும் பிரிந்து செயல்பட்டனர். பின்னவர் நேருவின் மீது நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வந்த போது நான் அதை அரசு அதிகாரிகள் இருக்கையிலிருந்து கவனித்தேன். அவர நேருவை கடுமையாக தாக்கினார். அதன் பொருட்டு இல்லாமல், மற்றொரு காரணமாக லோஹியா சிறைப்படுத்தப்பட்டார். அங்கு இருக்கும்போது அவரது பிறந்த நாள் வந்தது. வாழ்த்துடன் ஒரு கூடை அல்ஃபோன்ஸா மாம்பழமும் வந்தது. அனுப்பியவர் பிரதமர் ஜவஹஜவஹர்லால் நேரு.

    அடடா! சொல்ல மறந்து விட்டேனே! தற்கால கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த மாதிரி சண்டை போடவில்லை. பாவம்! அவர் மனைவிக்கு கரோனா பாதிப்பு. நான் சொன்ன சண்டை நடந்து நேற்று ஐமபது வருடங்கள் ஆயின. அந்த ட்ரோடோ இவரது தந்தை. அக்காலத்து பிரதமர்.

    -x-