Showing posts with label மஹாத்மா காந்தி. Show all posts
Showing posts with label மஹாத்மா காந்தி. Show all posts

Friday, March 27, 2020

சுவரொட்டி 6 பழங்கதை 3

சுவரொட்டி 6
பழங்கதை 3
இன்னம்பூரான்
26 03 2020
இது ஆயிரங்காலத்துப்பயிர். நம்மில் அனேகர் நாட்தோறும் தியானஸ்லோகங்களை பக்தியுடன் பாராயணம் செய்வது போல, இந்த தகவலை நாம் இன்னும் ஆயிரம் வருடமாவது நாட்தோறும் தேசபக்தி பாராயணம் செய்வது சாலவும் தகும்.
நூறு வருடங்களுக்கு முன்னால் இதே தினம் அண்ணல் காந்தி அனுப்பிய சுற்றறிக்கை கூறுவது: ஏப்ரல் மாதம் 6 முதல் 13 தேதி வரை சத்யாக்ரஹ வாரம்  அனுஷ்டிக்க போவதாக சொன்ன என்னுடைய கருத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த வாரத்தில் குறைந்தது பத்து லக்ஷம் ரூபாய் தானம் பெறுவது கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன். யோக்கியதையும் நற்பண்பும் நிறைந்த தன்னார்வலர்கள் கிடைத்தால் ரசீது விவகாரம் இருக்காது; எல்லாரிடமிருந்து வசூலிக்கலாம். செல்வந்தர்கள் தங்கள் தங்கள் கூட்டங்களிலிருந்து எளிதில் வசூலிக்கமுடியும். அதை எல்லாம் விட முக்கியம் நாம் எப்படி அந்த வாரத்தை கொண்டாடப்போகிறோம் என்பதே. அது பற்றிய எனது அணுகுமுறையையோ அல்லது 13ம்தேதி நடந்த படுகொலையின் ஞாபகார்த்தமோ  சர்ச்சைக்கு உட்படாது என்று நம்புகிறேன். படுகொலையுண்ட மக்களின் ஞாபகார்த்தம், அந்த அட்டூழியத்தை (ஜாலியன்வாலாபாக் படுகொலை) விட முக்கியமான விஷயம். இந்த சத்தியாக்ரஹத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அதற்காக வசூல் செய்வதில் சுணங்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். இது சாராம்சம்.

இந்த சுற்றறிக்கை ஆயிரம் கோடி சூரிய சந்திர நக்ஷத்திர பிரபஞ்சத்தை விட பல்லாயிரம் கோடி வலிமை பெற்றது எனலாம். சென்னையிலும், இந்தியா முழுதும் சத்தியாக்ரஹ தினம் எப்படி கொண்டாடப்பட்டது என்று ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். தருணம் கிட்டும்போது மீள்பதிவு செய்கிறேன். இப்போது சொல்வது என்னவென்றால், இந்த சுற்றறிக்கை ஆங்கிலேய கலோனிய அரசை குழி தூண்டி புதைத்தது. இந்தியர்களிடம் ஒரு ஒருமைப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் ஒரு யாகத்தின் ஹோமாக்னி போல வளர்த்தது. அடிக்கடி, அதாவது குறைந்தது நாட்தோறுமாவது நாம் இந்த சுற்றறிக்கையை படித்து மனம் தெளிவு கொள்ளவேண்டும்.
-#-

நன்றி: ஹிந்து இதழ்.


I’m not that much of a online reader to be honest but your blogs
really nice, keep it up! I'll go ahead and bookmark
your site to come back down the road. Cheers
Reply
Thank You.

  • Fine way of telling, and pleasant post to take facts on the topic of my presentation focus, which i am going to deliver in school.


    I’m not that much of a online reader to be honest but your blogs
    really nice, keep it up! I'll go ahead and bookmark
    your site to come back down the road. Cheers
    Reply
  • Fine way of telling, and pleasant post to take facts on the topic of my presentation focus, which i am going to deliver in school.
    Reply
  • It's really a nice and useful piece of info. I am satisfied that you just shared this helpful info with us.
    Please keep us informed like this. Thanks for sharing.
    Reply
  • This web site definitely has all of the info I wanted about this subject and didn't
    know who to ask.
    Reply
  • I am very happy , my friends. I shall write what your students want. Please mail me. I thank you all for the encouragement. Hereafter my positing will be either podcasts or videos. At age 87, I find it difficult to type texts.

    Innamburan

    Thursday, August 29, 2019

    திரு. வி. க. குருகுலம் -1 & 2

    திரு. வி. க. குருகுலம்
    முகவுரை

    “திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும்” என்ற தொடரை, பின்னூட்டங்களாக வந்த வாசகர்களின் 60 கருத்துக்கணிப்புக்களுக்கு இணங்க, மேற்படி தலைப்பில், சீர்திருத்தங்கள் செய்து, புதியதொரு தொடராக சமர்ப்பிக்கிறேன். 

    திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழ்த்தொண்டு, தேசீய பணி, சமுதாய சீர்திருத்தங்கள், தொழிலாளர்களுக்கு தலைமை என்று ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அடிப்படையில் செய்ததை எல்லாம் தமிழினம் மறந்து விட்டது. தற்காலத்தமிழர்களுக்கு அவரை பற்றி தெரிந்தது சொற்பம். யான் அவருடைய ஏகலைவ சீடன் -அதாவது, அவரிடம் நேரடியாக பாடம் படிக்காவிடினும், அவருடைய நூல்களை என் குருகுலமாக பாவித்து, இந்த தொடரை உங்களின் ஆதரவுடன் துவக்குகிறேன். 

    இத்தருணம் நன்றி நவில்வது பொருந்தும். எனது சிறுவயதிலேயே என் தந்தை எனக்கு நாட்டுப்பற்று கற்றுக்கொடுத்தார். ஒரு விதத்தில் அது அவருக்கே இன்னல் விளைவித்தது. கலோனிய அரசு கோலோச்சிய காலகட்டம். அவர் போலீஸ் துறையில் பணி புரிந்தார். என்னுடைய பொதுமேடை ஆவேசப்பேச்சுக்கள் உசிலம்பட்டியில் வரவேற்கப்பட்டன; கலோனிய அரசால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன; அவருடைய வேலைக்கும் உலை வைத்தன. ஆனால், அவர் என்னை தடுத்தாட்கொள்ளவில்லை. அவருக்கு என் வணக்கமும், நன்றியும் உரித்ததாகவன. அந்த காலகட்டத்தில் எனக்கு ஒரு திரு.வி.க. நூல் பரிசாக அளிக்கப்பட்டது. கொஞ்சம் கூட புரியவில்லை. கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு பிறகு அதே நூல் கிடைத்தது, தற்செயலாக. இப்போது புரிந்தது. நான் திரு.வி.க. பக்தன் ஆனேன். 

    அந்த காலகட்டத்தில் நான் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் வாழ்ந்து வந்தேன். உலகாளவிய தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான  முனைவர் சுபாஷிணியின் அறிமுகம் கிடைத்தது. அவர் திரு.வி.க. அவர்களின் வாழ்க்கை, நூல்கள், தொண்டு ஆகியவை பற்றி என்னை பலமுறை தொலை பேசி மூலம் நேர்காணல் செய்து பதிவு செய்தார். அந்த உந்துதலால், அவரின் விடா முயற்சியின் பயனாக, திரு.வி.க. அவர்களின் நூல்களை மின்னாக்கம் செய்ய சென்னை வந்து சேர்ந்தேன். டாக்டர் அக்னிஹோத்ரம் வாசுதேவன் அவர்கள் மின்னாக்கம் செய்ய சொல்லிக்கொடுத்தார். மற்றவர்களின் மறு பிரசுரங்களில் எனது நாட்டம் செல்லவில்லை. எங்கிருந்தோ வந்த முனைவர் நாகலிங்கம் அவர்கள் (அவருடைய முனைவர் பட்டத்துக்கு எடுத்துக்கொண்ட ஆய்வே, திரு.வி.க. அவர்கள் எழுதிய பெரிய புராணம் பற்றிய நூல்.) மூல நூல்களை கொடுத்து உதவினார். நான் மின்னாக்கம் செய்த திரு.வி.க. நூல்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல் சேகரிப்பில் உளன. நான் எழுதிய கட்டுரைகள் எல்லாவற்றிலும் திரு.வி.க. அவர்களின் முத்திரை உள்ளடக்கம். அவற்றை இடை விடாமல் வல்லமை மின் இதழில் முனைவர்.அண்ணா கண்ணனும், ஆசிரியர் திருமதி. பவள சங்கரியும் பிரசுரம் செய்தனர். என் தந்தைக்கு அடுத்தபடியாக, முனைவர் சுபாஷிணி, டாக்டர் வாசுதேவன், முனைவர் நாகலிங்கம்,  முனைவர் அண்ணா கண்ணன், திருமதி. பவளசங்கரி ஆகியோருக்கும், இந்த இழையின் உந்தனர் ஆகிய டாக்டர் நா.கணேசன் அவர்களுக்கும், கருத்தளித்த வாசகர்களுக்கும் நான் நன்றி நவின்று, இந்த தொடரை துவக்குகிறேன்.

    இன்னம்பூரான்
    29 ஆகஸ்ட் 2019

    1. முதற்படி

    சான்றோர்களைத் தற்காலத் தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் போது, அவர்களின் பிறந்து, வளர்ந்து, மறைந்த கதையை விட அவர்களின் வாழ்நெறியை எடுத்துரைப்பது தான் பயன் தரும். அத்தருணம் சில நிகழ்வுகளை முன்னிறுத்தி அலசுவது தான் வாழ்க்கைப்பாடங்களை அளிக்கும் வழி. அவ்வாறு தொகுக்கும்போது அட்டவணை போட்டு கதாநாயகன் கட்டை விரல் சப்பியதில் தொடங்கி மரணாவஸ்தை வரை வரிசைப்படுத்துவது தேவையல்ல. சில சம்பவங்கள் அந்த சான்றோர்களின் பெருமைக்குக் கட்டியம் கூறும். சில அவர்களின் தர்மசங்கடங்களை பூடகமாகத் தெரிவிக்கும் – திறந்த மனதுடன் தேடினால். நான் என்னவோ என் மனம் அழைத்துச்செல்லும் ராஜபாட்டையில் தான் உங்களை அழைத்துச்செல்வேன். ராஜபாட்டை விசாலமானது. திரு.வி.க. அவர்களை முன்னிறுத்தினாலும், நாட்டு நடப்புகள் -உதாரணமாக ஜாலியன் வாலா பாக் - விவாதிக்கப்படும். மஹாத்மா காந்தி வருவார்; கார்ல் மார்க்ஸ்ஸும் வருவார். பொறுத்தாள்க.

    மஹாத்மா காந்தியின் ஜன்மதினம் அன்று உலகெங்கும் அவரது நினைவாக விழாக்கள் எடுக்கப்படும். அவரது சிலைகளுக்கு மாலை மரியாதை நடக்கும். சொற்பொழிவுகள் நிகழும். இந்தியாவில் விடுமுறையல்லவா! சிறார்கள் விளையாடுவார்கள். வயது வந்தோர் ஓய்வு எடுப்பார்கள். காந்திஜியை நினைவு கூர்பவர்கள் சொற்பம். 

    அது கூட இல்லை. ‘தமிழ் காந்தி’ ‘தமிழ்தென்றல்’ திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம் அவர்களை தமிழர்கள் அறவே மறந்துவிட்டார்கள். ஏதோ விருது அளிக்கும் தினத்தில் ஒரு வரி உதட்டளவு புகழுரை. அத்துடன் சரி. அங்கும், இங்கும், எங்கும் இறைவனின் சிலாரூபத்தைப் பழிப்பவர்கள் எழுப்பிய மானிடஜன்மங்களில் சிலைகள் மலிந்த நம் நாட்டில், எனக்குத் தெரிந்து மூவருக்கு மட்டும் தான் ஆளுக்கு ஒரே ஒரு சிலை, பொது மக்களே முன் வந்து ஆர்வத்துடன் சந்தா அளித்து எழுப்பபட்டவை. அவர்களில் ஒருவர் திரு.வி.க. அவர்கள். மாஜி பி & ஸி மில் முன் நிற்கிறார், அஃறிணை ஆகி விட்ட திரு.வி.க. மற்ற இருவரை பற்றி யாராவது கேட்டால் சொல்கிறேன். இது நிற்க.

    கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரிஜனல் காந்தியிடம் செல்வோம். காந்திஜிக்கு ராமன் இஷ்டதெய்வம். இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவருக்கு இஷ்ட மந்திரம். ‘ரஹம்’ என்ற இஸ்லாமியத்தின் நங்கூரசொல்லின் பொருள் கருணை. அதையும் இணைத்தல்லவோ, அவருடைய பஜனை அமைந்தது. அண்ணலின் விருப்பம் இனியாவது நிறைவேற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அந்த கனிவை ந்யூஸிலாந்தில் காண்கிறோம். அங்கு ஒரு பயங்கரவாதி பலரை சுட்டுத்தள்ளி விட்டான். அந்த நாட்டு வெள்ளையர் மக்கள் இஸ்லாமியர்களை தேடி அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். அவர்களுக்கு காந்தி மஹான் அறிமுகம் இருக்கிறது. நமக்குத்தான் இல்லை.

    “ஒரு தனிமனிதன், தன்னுடைய மனசாட்சியை மட்டுமே, பாற்கடலை கடையும் மத்தாக, வாய்மை என்ற கயிறை, கடைவதற்கான சாதனமாக வைத்துக்கொண்டு, அஹிம்சை என்ற பிரணவ உச்சாடனத்துடன், ஸ்வதேச அபிமானம் என்ற அமிர்தத்தை எடுத்து அளித்ததும், அடிமைமோஹத்திலிருந்து விடுபட்டு, இந்திய மக்கள், இந்த நோன்பில், ஒரே திரளாக திரண்டு வந்து வடம் பிடித்ததும், அமிர்தம் பருகியதும் வரலாறு. அத்தருணம், இந்த உலகமே ஆட்டம் கண்டதும் வரலாறு. அந்த தனிமனிதன்: அண்ணல் காந்தி.” -இன்னம்பூரான்.

    2. நோன்பு
    நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. நாமகரணம்: ஸத்யாக்கிரஹ தினம். ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது.
    தனித்தழில் சொன்னால், ‘உண்மை மேலாண்மை ஏற்றுக்கொண்டது’. இடம்: இந்தியா முழுதும். குறிப்பாக இங்கு சென்னை நிகழ்வுகளின் அணி. அதற்கு முன் ஒரு பின்னணி. அரசு, நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், மார்க்கம் ஒன்று வேண்டாமோ? காந்திஜி மீது குறை காண்பது தற்கால நாகரீகம். அவர் மறைந்து எழுபது வருடங்கள் ஆயின. இரண்டு/மூன்று தலைமுறைகளுக்கு அவர் ஐநூறு ரூபாய் நோட்டின் சித்திரம் மட்டும்! எனினும், ஒரு வகையிலாவது அவரை போற்றவேண்டும். கறார் மேனேஜர், அவர்.
    சட்டம் அமலுக்கு வரும் தினம் முன்பே யாவருக்கும் தெரியும் என்பதால், முன்கூட்டியே, ஏபரல் 6 தான் சத்யாக்ரஹ தினம் என்று அறிவித்து, நாடு முழுதும் பயணித்து, யாவரிடமும், ஒரு பிரதிஞ்ஞை பெற்றுக்கொண்டார் – 

    ‘சட்டத்தை மீறவும் வேண்டும். நன்னடத்தையையும் வெளிப்படையாக காட்டவும் வேண்டும்.’ 
    இந்த மந்திரம் காட்டுத்தீ போல் பரவியது என்கிறார், திரு.வி.க.

    சென்னையில் பலத்த ஏற்பாடு. ராஜாஜியின் தலைமையில், ஒரு கண்காணிப்புக்குழு. அக்காலம் ஃப்ளெக்ஸ்போர்ட் கலாச்சாரம் கிடையாது. போஸ்டர்களும், துண்டறிக்கைகளும் மட்டும் தான். ராயப்பேட்டையும், [உறுதுணை: காமத்] தொழிலாளர்கள் பேட்டைகளும், [உறுதுணை: தண்டபாணி பிள்ளை] திரு.வி.க. அவர்களின் பொறுப்பு. ராஜாஜிக்குழுவில், திரு.வி.க.வும், கே.வி. ரங்கசாமி ஐய்யங்காரும். பெரம்பூரில் ஒரே கலவரம், முதல் நாளே. வ.உ.சி. யாலேயே தொழிலாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ‘தமிழ் காந்தி’ திரு.வி.க. அவர்கள் மேடை ஏறி பேசினார் -வசிஷ்டர், பிரஹ்லாதன், ஏசு கிறிஸ்து,, அப்பர்! ‘வீட்டுக்கு போய், நாளை வருக.’ என்றார். கட்டுப்பட்டார்கள்.

    கல்கி சொல்லுவார். திரு.வி.க. வுக்கு அடி பணிய, அவர் சொன்னதெல்லாம் புரிந்துகொள்ள தேவையில்லை என்று.
    (தொடரும்)
    இன்னம்பூரான்

    பின்குறிப்பு:
    புவனம் முழுதும் நண்பர்கள் இருப்பது ஒரு கொடுப்பினை. டெக்ஸாஸ் வாழும் டாக்டர் நா.கணேசன் அவர்களிலொருவர். ஒரு இழையில், அவர் ”…மதறாஸ் வந்தால் இன்னம்பூரான் சார் வீட்டிலோ அல்லது கீதாம்மா வீட்டிலோ நிச்சயம் திணைப்பாயாசம் கொடுக்கணும்.” என்று எழுதி என் மனதை கவர, இந்த இழை பிறந்தது.
    என் குருநாதரின் அன்பு கட்டளை படி எனக்கு எல்லாரும் வேண்டும். இதமாக பழக வேண்டும். இங்கிதமான உறவு நாடுபவன், நான். இந்த இழை தொடரும். காழ்ப்புணர்ச்சியை உரக்கப் பேசுபவர்களை தணிந்து பேசச்சொல்லி கோரிக்கை விடுகிறேன்.

    3.அடிச்சுவடுகள்:
    சான்றோர்களை பற்றி மற்றவர்கள் எழுதியதை படிக்கும் போது, நாம் அவ்வாறு எழுதியிருக்கலாகாதா? என்ற அங்கலாய்ப்பு எழுவது ச்கஜம். நம்மில் பெரும்பாலோர் என்னைப்போல பாமரர்கள் தானே. ஆர்.நல்லகண்ணு அவர்கள் பழுத்த பொதுவுடைமை அரசியல் வாதி. நல்லொழுக்கத்துக்கு முன்னுதாரணம் வகிப்பவர். அவர் திரு.வி.க. அவர்களின் சீடர் என்பது வியப்புக்குரிய செய்தி அல்ல. குருநாதர் தானே கார்ல் மார்க்ஸின் நூல்களை பிரசுரம் ஆனவுடன் படித்து தொழிற்சங்கத் தலைவர் ஆனார்.மேலும் சீடர் குருநாதரின் அடிச்சுவடுகளை தொகுத்தார். அவற்றை பட்டியலிட்டு இங்கு, தோழர். நல்லகண்ணு அவர்களுக்கு நன்றி கூறி, இங்கு தவணை முறையில் தருகிறேன்.

    1. "அரசியல் மேடைகளில் தமிழில் பேசிச் சாதாரணமக்களை அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடச் செய்தார். முதன்முதல் ஏகாதிபத்ய எதிர்ப்பு அரசியலில் சானான்யரும் ஈடுபடவேண்டுமென்று வலியுறுத்தினார். சாதாரணமக்களையும் விடுதலைப் போரில் ஈடுபடத்தூண்டினார்.

    2. "சென்னை மாநகரில் அமைப்பு ரீதியாகத் தொழிலாளர்களைச் சங்கமாகத் திரட்டினார். இறுதி மூச்சு வரை தொழிலாளர் நலனுக்காகப் போராடி வந்தார்."
    (தொடரும்)


    http://innamburan.blogspot.de/view/magazine

    https://www.blogger.com/blogger.g?blogID=4506062343141339038#overviewstats


    Wednesday, July 10, 2019

    தண்டி யாத்திரை

    தண்டி யாத்திரை

    https://www.youtube.com/watch?v=79bslyeR028&t=

    இன்னம்பூரான்

    Sunday, November 16, 2014

    ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 3


    ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 3

    Aalappaakkam & Neighborhood II 3


    நண்பர்களே/ Friends,

    அண்ணல் காந்தியை பற்றிய இந்த தொடர்ப்படம் வரலாற்று கருவூலம். இதை அனுப்பிய திரு.ஏ.ராஜகோபாலனுக்கு வாழ்த்துக்கள்.

    These clips on Mahatma Gandhi are heritage archival material. I share them with gratitude to Mr.A.Rajagopalan.who sent it and to the copyright-holders and IE.

    http://indianexpress.com/article/india/india-others/five-videos-of-mahatma-gandhi-you-have-never-seen/



    Innamburan

    இன்னம்பூரான்

    Wednesday, May 14, 2014

    மஹாத்மா காந்தியின் மன உளைச்சல்.

    மஹாத்மா காந்தியின் மன உளைச்சல்.
    இன்னம்பூரான்
    14 05 2014
    Return to frontpage


    Published: May 14, 2014 16:48 IST | Updated: May 14, 2014 16:55 IST

    Gandhi’s letter accusing his son of rape to be auctioned

    PTI
    Mahatma Gandhi and his eldest son Harilal had troubled relationship between them throughout their life.
    Gandhi SmritiMahatma Gandhi and his eldest son Harilal had troubled relationship between them throughout their life.
    Three explosive letters that highlight Mahatma Gandhi’s deep concerns over the behaviour of his eldest son, Harilal, will go under the hammer at an auction in England next week.
    Mullock’s Auctioneers based in Shropshire county are hoping to fetch between £50,000 and £60,000 for a set of three letters written by the Father of the Nation in June 1935.
    “You should know that your problem has become much more difficult for me even then our national freedom,” says Gandhiji in one of the letters in reference to allegations of inappropriate behaviour by Harilal.
    “Manu is telling me number of dangerous things about you. She says that you had raped her before eight years and she was so much hurt that medical treatment was also to be taken,” the letter reads, in reference to Harilal’s daughter Manu who had come to stay with her grandfather at Sabarmati Ashram.
    “The letters are written in Gujarati and are in good condition. These have come via descent from a branch of Gandhi’s family to the present vendor. As far as we are aware they have never before been seen in public and as such they provide remarkable new information on the troubled relationship Gandhi had with his son,” Mullock’s said in a statement.
    “Please let me have pure truth please tell me if still you are interested in alcohol and debauchery. I wish that you better die rather than resort to alcohol in any manner,” adds another autographed letter.
    Harilal Gandhi had wanted to go to England to study and become a barrister like his father but Gandhiji had firmly opposed this believing a Western education would not be helpful in the struggle against British Raj.
    This led to Harilal renouncing all family ties in 1911 and his troubled relationship with his father continued throughout his life.
    The series of letters is part of Mullock’s Historical Documents Sale at Ludlow Racecourse on May 22.
    It also includes another set of 27 autographed letters to Vijaya Lakshmi Pandit, the sister of Jawaharlal Nehru, some written by Gandhiji when he was imprisoned.
    “Women have done more work than us. Even so much remains to be done. The modern world has as yet seen the like of India’s woman power. I am convinced they will go much further ahead and I will be very surprised if you do not play a very big part in this,” reads a letter dated November 11, 1930.
    The earliest letters date back to 1920 but others are from the 1930s and the majority dating from the crucial period of 1938-1944 in the Indian national movement.
    Some of the other Gandhi-related lots to go under the hammer include portraits, signed postcards and a wooden ’charkha’ expected to fetch as much as £80,000.
    Printable version | May 14, 2014 5:13:37 PM | http://www.thehindu.com/news/international/world/gandhis-letter-accusing-his-son-of-rape-to-be-auctioned/article6008642.ece
    © The Hindu









    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Monday, September 9, 2013

    'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்... [2]






    'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்...

    Innamburan S.Soundararajan Tue, Sep 10, 2013 at 11:13 AM



    'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்...
    (தொடரும்)






    தேமொழி Tue, Sep 10, 2013 at 11:45 AM
    Reply-To: vallamai@googlegroups.com
    To: vallamai@googlegroups.com
    On Monday, September 9, 2013 10:43:57 PM UTC-7, இன்னம்பூரான் wrote:

    'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்...


    சூப்பர் ட்ரைலர்.....


    ..... தேமொழி
     

    --
    You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
    For more options, visit https://groups.google.com/groups/opt_out.

    Nagarajan Vadivel Tue, Sep 10, 2013 at 11:53 AM

    இந்த வரிசையில் எங்களுக்கு "இந்திரா" காந்தி, "ராஜீவ்" காந்தி "சோனியா" காந்தி "ராகுல்" காந்தி தெரியும்

    'அண்ணல்' காந்தி தெரியலீங்களே 

    வவ
    [Quoted text hidden]

    Dhivakar Tue, Sep 10, 2013 at 12:02 PM

    லஞ்சம் எனும் வரிசையில் காந்திகளை வைத்துப் பார்ர்க்கும்போது அண்ணல் காந்தி எப்படி கண்ணுக்குத் தெரிவார்?
    [Quoted text hidden]
    --
    Dhivakar
    [Quoted text hidden]

    கி.காளைராசன் Tue, Sep 10, 2013 at 8:55 PM

    ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

    On Tue, Sep 10, 2013 at 11:13 AM, Innamburan S.Soundararajan <innamburan@gmail.com> wrote:

    'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்...
    (தொடரும்)
    படித்தமாத்திரத்திலேயே
    வருந்துகிறேன்.
    வாதி, பிரதிவாதி இருவரையும் விசாரித்த பின்பே ஒருவர் மேல் மற்றவர் குற்றம் சொல்ல முடியும்.

    கொலை செய்விக்கப்பட்ட ஒருவரைப் பற்றி, 
    தன்னிலை விளக்கம் அளிக்க அவர் உயிருடன் இல்லாத நிலையில்,
    இந்த வார்த்தைகளைப் படித்து வருந்துகிறேன்.

    உயிரோடு இருப்பவர் மேல்,
    அதுவும் அவர் பதில் அளிக்கும் மனநிலையில் இருந்தால் மட்டுமே அவர்மீது குற்றம் சாட்ட நாம் தகுதி பெற்றவராவோம் என்று கருதுகிறேன்.

    அன்பன்
    கி.காளைராசன்




    [Quoted text hidden]

    Pandiyaraja Tue, Sep 10, 2013 at 9:13 PM

    அன்புள்ள ஐயா,
    என்ன சொல்லவருகிறீர்கள் என்பது புரியவில்லை. முழுவதும் தெரிந்த பின்னர்தான் எதுவும் சொல்லமுடியும். இருந்தாலும் தலைப்பு திகைக்கவைக்கிறது. சீக்கிரம் தொடருங்கள்.
    ப.பாண்டியராஜா


    Subashini Tremmel Tue, Sep 10, 2013 at 11:24 PM



    On Tue, Sep 10, 2013 at 7:43 AM, Innamburan S.Soundararajan <innamburan@gmail.com> wrote:




    'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்...
    (தொடரும்)

    ??? என்ன இது? விஷயமில்லாமல் வெறும் தலைப்பு மாத்திரம் .. அதுவும் இந்திய தேசத்தந்தையை குற்றம் சொல்லும் வகையில்? ஏன் இந்த முயற்சி?

    சுபா



     


     
    [Quoted text hidden]


    Innamburan S.Soundararajan Tue, Sep 10, 2013 at 11:47 PM

    'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்... [2]



    நம்முடைய ஸ்பெஷல் ட் ராஃபிக் ராமசாமி, ஆம் ஆத்மி அர்விந்த் கெஜ்ரிவால், அவரது குருநாதர், யோகா டீச்சர் ஆகியோர் போல சிலர் தகவல் உருவும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டால் தட்டிக்கேட்கும் மனப்பான்மையுடையோர்களில் ஒருவர் தான் 'அண்ணல்' காந்தி . ஒரு சில்லறைக்கடைக்காரர், அதிகாரி லைசன்ஸ் தரமறுக்கிறார் என்று அவரிடம் புகாரித்தார். இலை மறைவு காய் மறைவாக, அதிகாரி மீது லஞ்சக்குற்றம் சொல்வது போல சொல்லாமல் சொன்னார். நம் 'அண்ணல்' காந்தியும் விரைந்து சென்று அதிகாரியை தட்டிக்கேட்க, அவர் சமாதானமாக, 'பள்ளிக்கூடம் அருகே புகையிலை விற்பது சட்ட விரோதம்' என்றார். நம்மடவர் பலமாகவே தட்டிக்கேட்கவே, பயந்த அதிகாரி உரிமத்தைக் கொடுத்து விட்டார். இவரை வீட்டில் கொண்டு வந்த கடைக்காரர், கை குவித்து நன்றி கூறி பழங்களும், மிட்டாயும் நிறைந்தக் கூடையை, வலுக்கட்டாயமாகக்கொடுத்தார், ஆவலுடன் பழங்களை அடுக்கி வைத்த மருமகள் கையில் ஒரு மணி பர்ஸ் கிடைத்தது; உள்ளே சலவை நோட்டு ரூபாய் 500/-. புளகாங்கிதம் அடைந்த அவள் புடவை வாங்க ரூபாய் 300 ஐ ரவிக்கைக்குள் நுழைத்துக்கொண்டு, ஹெல்மெட் வாங்கிக்கொள்ள சகதர்மிஷ்டனிடம் ரூபாய் 200 கொடுத்து, பையனிடன் பத்து ரூபாய் கொடுத்தாள், மிட்டாய் வாங்க. அதற்குள் வந்த மிட்டாய்களை அவன் ஸ்வாஹா பண்ணி விட்டான். அவளும் மாமனாருக்கு கும்பகோணம் டிகிரி காஃபி கொடுத்து பலமாகவே அவரை உபசரித்தாள். இரவு வேளையா! அவர் பாயை விரித்துப்படுத்தார். உறக்கம் வருமோ? அவரோ கடமையே கண்ணாயினார் ஆவர். வாய்மையின் சுபுத்திரன். அந்த வீட்டில் அசுப ஜெனனம் மூன்று, அன்று:லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும். அவற்றின் கரு 'அண்ணல்' காந்தி உருவெடுத்த தினம். சுபாஷிணியின் சினம் புரிகிறது. இந்தியாவில் லஞ்சத்தின், வம்ச பேராசையின், நாட்டின் சீரழிவின் ஊற்று, இது தான். ஒரு அன்பளிப்பு நஞ்சாகி விட்ட சமாச்சாரம். முழுதும் எழுதி விட்டால், சுபாஷிணியின் சினம் தணிந்து விடும். அண்ணல் என்ற சொல், அடைப்புக்குள் இருப்பதால், நான் மஹாத்மா காந்தியை பற்றி இதை எழுதவில்லை என்பது தெளிவு. முழுதும் எழுத முடியவில்லை. கை வலி. நேரமின்மை. இப்போதே நடு நிசி நெருங்குகிறது. எனக்கும் உறக்கம் வரப்போவதில்லை. காலை 5 மணிக்கு எழுந்தால் தான் அலுவல்களை கவனிக்க முடியும்.
    பொறுத்தாள்க.


    (தொடரும்): 24 09 2013 அன்று.

    இன்னம்பூரான்