Thursday, June 27, 2013

அன்றொரு நாள்: ஜூன் 28




அன்றொரு நாள்: ஜூன் 28

Innamburan Innamburan Tue, Jun 28, 2011 at 5:19 AM



அன்றொரு நாள்: ஜூன் 28


கல் தோன்றி, மண் தோன்றாக்காலத்திலிருந்து, இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நானோ வினாடியிலும் லக்ஷோபலக்ஷம் நிகழ்வுகள். அவற்றில் ஒரு நாளைக்கு ஒன்று என்று தனது நினைவுலகத்திலிருந்தும், நனவுலகத்திலிருந்தும், கனவுலகத்திலிருந்தும், படித்ததிலிருந்தும், தேடியதிலிருந்தும், ஒரு நிகழ்வை பற்றி எழுதவே ஒரு நாள் பிடிக்கிறது. கட்டுரை நீண்டு விடுகிறது. ‘ஏன் இந்த எமெர்ஜென்ஸியை பற்றி அரைகுறையாகவும், சுருக்கமாகவும் எழுதி விட்டீர்கள்?’ என்று ஒரு நண்பர் வினவினார். ‘என்னால் இயன்றதை மட்டுமே நான் எழுத முடியும். இது யாவரும் பொறுப்புணர்ச்சியுடன் மடலாடும் இழை. திருவேங்கிடமணி கேட்ட மாதிரி வினாக்களும் நல்வரவே.’ என்றேன். இது நிற்க.

இன்று மூன்று நிகழ்வுகளை பற்றி எழுதவேண்டிய வரலாற்று நிர்பந்தம்.

  1. ஜூன் 28,1914: அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆஸ்டிரிய இளவரசர் ஃப்ரான்ஸ் ஃபெர்டினாண்டும் அவரது மனவி ஸொஃபியும் கவிரோ ப்ரின்ஸிப் என்பவனால் சரஜீவோ என்ற ஊரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவமே லக்ஷக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்ட முதலாவது உலக யுத்ததிற்கு அடி கோலியது.

  1. ஜூன் 28,1919: முதலாவது உலக யுத்தம் முடிந்து, சரணடைந்த ஜெர்மனி,வெர்ஸேய்ல்ஸ் என்ற ஃப்ரென்ச் இடத்தில் சமாதன ஒப்பந்தம் செய்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டது. கடுமையான ஷரத்துக்கள்.அமெரிக்க ஜனாதிபதி வில்ஸன் அவர்களில் நியாயமான 14 பாயிண்ட் ஷரத்துக்கள் நீர்த்துப்போயின. நாடு பறித்தல், காலனி பறித்தல்,  அபகீர்த்தி பெற்ற 231வது ஷரத்துப்படி கடுமையான நஷ்ட ஈடு அபராதம், ராணுவத்தை குறைத்தது எல்லாம் நடந்தேறியன. ஆக மொத்தம், ஜெர்மானிய மக்களுக்கு, வறுமை, பட்டினி, இரண்டாவது உலக யுத்தத்திற்கு, இதுவே மூலாதாரம். தெரிந்தே இந்த கூத்துக்கள் நிகழ்ந்தன. பிரபல பொருளியல் வல்லுனர் ஜான் மேனார்ட் கீன்ஸ் ‘சமாதானத்தின் பொருளியல் தாக்கங்கள்’ என்று எழுதிய நூல் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கும் அதன் படிப்பினைகளை மறக்கலாகாது.

  1. ஜூன் 28,1921:‘ஆந்திர பெட்டு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட பீ.வி. நரசிம்ஹ ராவ் அவர்களின் ஜென்மதினம். ‘லைசன்ஸ் ராஜ்’ அவரால் களையப்பட்டது. அவரால் நியமனம் செய்யப்பட்ட நிதி அமைச்சர் மன் மோஹன் சிங் அவர்களின் பட்ஜெட் பேச்சு இன்றும் நினைவில் இருக்கிறது. காலம் தான் மாறிப்போச்சு. ஆளும் மாறிப்போயிட்டார்! பீ.வி. நரசிம்ஹ ராவ் அவர்கள் பன்மொழிபுலவர். படித்த மேதை. பிரதமரான பிறகு பலவித சர்ச்சைக்கும் உள்ளானார். நேரு வம்சாவளியின் சொத்து ஆன காங்கிரஸ் கட்சியும், இவரை பிற்காலம் புறக்கணித்தது. இவருடைய ஆட்சியில் தான் பாப்ரிமஸ்ஜீத் அவலம் நடந்தது. அலஹாபாத்தில் நள்ளிரவில், போலீஸ் பாதுகாப்புடன் ஊர் வலம் வந்து வன்முறைகளை கண்ட நான், கணிசமான அளவு, இவரையும், ‘கண்டும் காணாமல்’ இருந்ததற்குக் குறை சொல்லுவேன். மற்ற சர்ச்சைகள், சேகர் குப்தாவின் குற்றச்சாட்டுக்கள் என்றெல்லாம் சுற்றாமல், திரு.ராமசந்திர குஹா இவரை பற்றி எழுதியதை, குறிப்பால் உணர்த்தி விட்டு, அவருடைய கட்டுரையின் இணைய தொடர்பு அளித்து,விடை பெற்றுக்கொள்கிறேன். 

 திரு.ராமசந்திர குஹா: 
‘...காங்கிரஸ் கட்சிக்கு ‘வேண்டாபடாதவராக‘   ஆகி  விட்டார், நரஸிம்ஹ ராவ் அவர்கள்...இந்தியாவின் பொருள் ஆதாரத்தை அவர் உயர்த்தியதைப்பற்றி பேசாத அந்தக்கட்சி, அவரை பாப்ரிமஸ்ஜித் அவலத்துக்குக் குறை கூறினர். நேரு வம்சாவளியினர் அல்ல என்பதும் மட்டுமல்லாமல், நேரு-காந்தி குழுவுக்கு கூழைக்கும்பிடு போடாதாதும் அவர் குற்றமே!...அவருடைய சாதனைகளை மறந்து, தவறுகளை மட்டும் நினைவூட்டுவது, மிக கவனத்துடன் திட்டமிட்ட வரலாற்றுக் கூத்து...’.

மேலும்் படிக்க:

    இன்னம்பூரான்
    28 06 2011

Geetha Sambasivam Tue, Jun 28, 2011 at 5:52 AM

To: mintamil@googlegroups.com

Cc: Innamburan Innamburan , தமிழ் வாசல்
நேரு-காந்தி குழுவுக்கு கூழைக்கும்பிடு போடாதாதும் அவர் குற்றமே!...அவருடைய சாதனைகளை மறந்து, தவறுகளை மட்டும் நினைவூட்டுவது, மிக கவனத்துடன் திட்டமிட்ட வரலாற்றுக் கூத்து...’.//

உண்மைதான். ஆனால் காங்கிரஸ் தான் ஒரு குடும்பத்தின் காலடியிலேயே விழுவது என்று முடிவு கட்டி விட்டதே. :(((((((
 இரண்டாம் முறையாகவும் அவர் பிரதமராய் வந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றியது, அவருடைய காலத்தின் நிர்வாகம்.  மறக்க முடியாத ஒன்று.

இதில் குறிப்பிட்டிருக்கும் முதல் நிகழ்வு முற்றிலும் புதிய செய்தி என்னைப் பொறுத்த வரையில், இன்றே இந்தச் செய்தி குறித்து அறிகிறேன்.  நன்றி.  இம்மாதிரியான பகிர்வுகளை நிறைய எதிர்பார்க்கிறேன்.

எமர்ஜன்சி குறித்துச் சீக்கிரம் முடித்துவிட்டதில் எனக்கும் கொஞ்சம் வருத்தம் தான்.  இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்.




Dhivakar Tue, Jun 28, 2011 at 6:06 AM


ஜூன் 28,1921:‘ஆந்திர பெட்டு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட பீ.வி. நரசிம்ஹ ராவ் அவர்களின் ஜென்மதினம். 


பி.வி. மிகச் சிறந்த ஆட்சியாளர் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருந்ததில்லை. தெரியாத செய்தி, அவரிடம் 1990 ஆண்டில் சந்நியாஸ வாஸம் தெரிய ஆரம்பித்து அதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது. ‘குற்றால மடத்து பீடாதிபதி பதவியும் தேடி வந்த போது (அந்தச் சமயம் உள்ள பீடாதிபதி மறைந்ததினால்) அதையும் ஏற்றுக் கொள்ள முடிவு செய்து விட்டார். ஆனால் 1991 ராஜீவ் படுகொலை, சோனியா காந்தி கட்சித் தலைமையை (அந்த நிலையில் பயந்து போய்) மறுத்தது, பிரணாப் மீது ராஜீவுக்கு எல்லோருக்கும் தெரிய ஏற்பட்டிருந்த சந்தேகம், இந்த நிலையில் சீதாராம் கேசரிக்கு கட்சி போயிருந்தால், கட்சி அம்பேல் என்ற எல்லோருக்கும் தெரிந்த நிலை, எல்லாமாக சேர்த்து, நரசிம்மா ராவை ஒரேயடியாக தூக்கி ஆட்சிபீடத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டது. 

அருமையான சிந்தனையாளர். நல்ல ஆன்மீகவாதி,  நல்ல ஆட்சியாளர், தனக்கு யார் தேவையோ அவரை மட்டுமே தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டவர், இந்தியாவின் மானத்தை அந்தக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் காப்பாற்றிய புண்ணியவான், இன்னும் எத்தனையோ உண்டு. ஆனால் அவர் இருந்தவரை சோனியாவை உள்ளே வர விட வில்லை என்பதும் முக்கியமானது. ஆனால் இவருடைய மகன்கள் இவர் பெயரைப் பயன்படுத்தி இவருக்கு கெட்ட பெயர் உருவாக்கிக் கொண்டிருந்தனர். இவருடைய அரசியல் எதிரிகளும், சோனியா ஆதரவாளர்களும் நேரம் பார்த்துக் காத்திருந்தனர். இதற்கெல்லாம் பிரதமர் பதவி போன பின் சின்ன சின்ன வழக்குகளில் கோர்ட் படி ஏறிக் களைத்துப் போனார். ச்சே.. என்ன இந்த பிழைப்பு எதற்காக இந்த பிரதமர் பதவி, பேசாமல் குற்றாலம் மடத்தில் ஜாலியாக ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு, வருவோர் போவோருக்கு அருளாசி வழங்கிக் கொண்டு, வரும் ஜென்மத்துக்கும் சற்று புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டும் விடுவதை விட்டு எதற்காக இப்படி ஒரு கஷ்டம் ..

அவர் இறந்தவுடன் அவர் சவத்தைக் கூட தில்லி காங்கிரஸ் தலைமையக வெளிகேட் வெளியே ஏதோ சற்று நேரம் வைத்துவிட்டு ஹைதராபாத் அனுப்பிவிட்டனர்.  எரித்த போது அந்த உடம்பு சரியாக வேக்க்கூடவில்லை.

நேருவுக்குப் பிறகு காங்கிரஸிலிருந்து ஒரு சிறந்த ஆட்சியாளர் என்றால் அது நரசிம்ம ராவையே சாரும்.

இ’ சார்.. அது ஆந்திர பெட்டு இல்லை, பிட்ட.. bidda

anbudan
Dhivakar




Dhivakar Tue, Jun 28, 2011 at 6:48 AM


http://blog.lkadvani.in/blog-in-english/two-missed-opportunities-six-disastrous-consequences

The Blog of LK Advani mentioning two missed opportunities. He could have mentioned Rajaji too in the forgotten leader category.

Though it is irrelevant to the subject of your's today, but it is relevant to the 'after PV period'.



D



Innamburan Innamburan Tue, Jun 28, 2011 at 7:16 AM


இந்த மாதிரியான நல்வரவுகளுக்காகத்தான், நான் ஏங்கியிருந்தேன், திவாகர். ஏற்கனவே நம் மதிப்புக்குரிய ஷ்யாம் பிரசாத் முக்கர்ஜீ அவர்களை பற்றி நான் மின் தமிழில் எழுதியிருந்ததால், இந்த தடவை எழுதவில்லை. உங்கள் தயவினால், மனித நேயம்' இழையிலிருந்து சில பகுதிகள், மீள்பதிவு:

----------
1.
    "பத்து மாதம் மின் தமிழ் கர்ப்பத்தில் இருந்த  இந்த 'மனித நேயம்இழைஇன்று 'க்வாக்வா!' மென்மையான சிசுவின் குரலில்உம்மையெல்லாம் அழைக்கிறதுநேரம் இருந்தால்முந்திய இடுகைகளை ஒரு கண் பார்க்கவும்இன்று ஒரு நிஜக்கதை.

     ஸர் அஷுடோஷ் முகர்ஜி வங்காளத்தின் தவப்புதல்வன்தலைமை பதவியில் பணி புரியாத துறை கிடையாதுஅக்கால நாடாளுமன்றத்தலைவர்அரசுக்கு முதன்மை ஆலோசகர்தலைமை நீதியரசர்கல்கத்தா பல்கலைகழக இணை வேந்தர் இத்யாதி.வெள்ளைக்காரனுக்கு சிம்ம சொப்பனம்வைதீகப்பார்ப்பனர்அதாவது சாஸ்திரப்படி அந்தணச்சான்றோன்தினந்தோறும் கங்காஸ்நானம்நதிக்கரையிலிருந்து நடந்து தான் வருவார்ஒரு நாள்ஒரு விதவை அவரை நிறுத்தினாள், 'இங்கு இருக்கும் புரோகிதர்கள் அளவுக்குமீறி கேட்கும் தக்ஷிணை கொடுக்க வசதியில்லைஎன் கணவனுக்கு இன்று திதிஉம்மை பார்த்தால் படித்த பிராமணன் போல் இருக்கிறதுசிரார்த்தம் செய்து வையும்என்றாள்கோர்ட்டாவதுகீர்ட்டாவதுஐயா நிதானமாகஅக்ஷரசுத்தத்துடன்மந்த்ரஹீனம் இல்லாமல்,சிரார்த்தம் செய்து வைத்தார்அவள் கொடுத்த ஒரு ரூபாயையும் இடுப்பில் சொருகிக்கொண்டுகிளம்பினார்யாரோ இவரின் பதவியை சொல்லி அவளை அதட்டஓடோடி போய்அவள்அவர் தாள் பணிந்து மன்னிப்பு கேட்டாள்இந்த சிம்மம் சொல்லிற்று, 'நான்அந்தணன்என் குலதர்மத்தை செய்தேன்.' என்றுசற்றே சுதாரித்துதஷிணை ஏன் வாங்கினீர் என்று கேட்டாள்இல்லாவிடின்நீ சந்தேஹப்படுவாயேபலன் இருக்காதோ என்றுஅதான் என்றார்

புரிகிறதோ?
அன்புடன்,

இன்னம்பூரான்

16 09 2010"
------------

2. 'நன்றிதேவ்கோவத்துக்கும் நமக்கும் காததூரம்சின்ன காதம்அவர்
ஹிமாலயம் என்றால்நான் கூழாங்கல்.
இந்த ஆஷுதோஷரின் திருமகன் ஷியாமப்பிரசாதரும் புகழ் பெற்ற அரசியல்ஹிந்து
முன்னணி தலைவர்கொல்கத்தாவின் முக்ய பகுதிகள் ஆகிய செளரங்கி - பாலிகஞ்ச்
ராஸ்தா மிகவும் நீண்டதுஒரு பகுதி அப்பா பேரில்தொடருவது பிள்ளை
பேரில்வங்காளத்தின் தவப்புதல்வர்கள்அந்த ராஸ்தாவில்
ஷியாமப்பிரசாதரின் இறுதி ஊர்வலம் சென்றபோது கல்கத்தாவின் கண்ணீர்
கங்காப்பிரவாகமாக இருந்ததுநினைவில் இருக்கிறது. (ஒரு படம்ஹிந்துவில்)
தேசபக்தியில் காங்கிரஸ்க்காரர்களுக்கு லவலேசமும் குறையாத அவர்,
காஷ்மீரில் நுழைய இருந்த தடையை மீறினார்கைது செய்யப்பட்டார்நீரழிவு
நோய்க்குஅவர் கொண்டு வந்திருந்த மருந்துகளை கொடுப்பதில்
தகராறு/குழப்பம்மனிதநேயத்தை மண்ணாங்கட்டியாக கருதிய காஷ்மீர் அரசு.
சான்றோன் இறந்து போனார்சாமான்ய குடும்பமாசட்டம் அறியாமல் இருக்க!
சகோதரர் ராமப்பிரசாத் நீதியரசர்அன்னை ஜவஹர்லால் நேஹ்ருவுக்கு கடிதம்
எழுதினார்இறுதி வரிமனக்கண்ணின் முன் நிற்கிறது, "I charge you with
complicity in my son's murder." எனக்கு தெரிந்தவரைஅவர் விடையளித்ததாக
வரலாறு இல்லைதேடுகிறேன்என்னிடம் உள்ள நூல்களில்.
11/12/10'
----------------
3.
'செப்டம்பர் 20க்கு பிறகு புதிய அங்கத்தினர்கள் வந்துள்ளதால்தொடர்கிறேன்சிலர் ஆர்வம் காட்டலாம் என்ற எதிர்ப்பார்ப்புஇது ஒரு தனி மொழி இழையாக இருந்துவிட்டால்பிழை எனது.

அந்தக்காலம்ஒரு பிரபல வழக்கறிஞர்அப்பெல்லாம் இரட்டை மாட்டு வண்டி தான் ரோல்ஸ்ராய்ஸ் கார்ஒரு சிற்றூரில்  கோர்ட்டு அலுவலாக வந்த அவர்மாலை சொந்த ஊருக்கு திரும்புகிறார்ஏதோ கலவரசத்தம்வன விலங்குகள்கொள்ளையர்கள் நடமாடும் இடம்.கையில் இருந்த துப்பாக்கியால்திசை நோக்கி சுட்டுவிட்டார். 'ஐயோஎன்ற சத்தம் கேட்டு போய் பார்த்தால்ஒரு பாமர மனிதன் காலைப்பிடித்துக்கொண்டு அலறுகிறான்குறி தப்பவில்லைஅவனை முடக்கத்தானே நினைத்தார். He was a good shot. அவனை வண்டியில் போட்டுக்கொண்டுவைத்தியம் பார்த்துஆயுசு பரியந்தம் பென்ஷன் கொடுத்தாராம்சின்ன வயதில் படித்ததுஆதாரம் கையில் இல்லை எனினும்நம்பகம் வாய்ந்த இதழில் படித்தததாக நினைவு.

ஊரு சேலம்ஆளுசக்ரவர்த்திசிராஜகோபாலாச்சாரியார்.

துணுக்இந்த தகவல் அநேகருக்கு தெரியாதுஇவர் கவர்னர் ஜெனெரலாக இருந்த போதுராணுவ போட்டி ஒன்றை துவக்க அழைத்துமரியாதை நிமித்தம்துப்பாக்கியை கொடுத்து ஆகாயத்தைபார்த்து சுடச்சொன்னார்களாம்இவரோ குறியை சுட்டு தள்ளிவிட்டாராம். He hit the Bull's eye! இதுவும் கேள்விப்பட்டது தான்

ஆமாம்மனிதநேயம் பேசக்கூட ஆவணம் தேவையாஇடம்பொருள்ஏவல் பொருத்தமாக இருந்தால்?
11/11/10
---------
நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

28 06 2011



Geetha Sambasivam Tue, Jun 28, 2011 at 7:43 AM


'நான் அந்தணன்என் குலதர்மத்தை செய்தேன்.' என்றுசற்றே சுதாரித்துதஷிணை ஏன் வாங்கினீர் என்று கேட்டாள்இல்லாவிடின்நீ சந்தேஹப்படுவாயேபலன் இருக்காதோ என்றுஅதான் என்றார். //

புத்தகங்களில் படித்தாலும் இவ்வளவு விபரமாக இன்று தான் தெரியும்.  அருமையான மனிதர்கள் இருந்த நாடு.  செல்வன் அமெரிக்காவை ஆவ்சம் அமெரிக்கா என்பது போல் இந்தியா குறித்து எழுத யாரும் இல்லையா என செல்வகுமரன் கேட்டதற்கு நீங்கள் அளித்த மறுமொழி முற்றிலும் பொருத்தமானதே. இப்படியான ஆக்கங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்தல் வேண்டும்..

வந்தேமாதரம்!




Tthamizth Tthenee Tue, Jun 28, 2011 at 6:05 PM



உண்மையிலேயே  எமர்ஜன்சியைப் பற்றி  மேலும் விவரமாக தெரிந்துகொள்ள  ஆசைதான்
அரசாங்க அலுவலர்கள்  அலறித் துடித்து   சரியான நேரத்துக்கு  அலுவலகம் சென்ற நாட்கள்  அவை
அன்புடன்
தமிழ்த்தேனீ
]

Dhivakar Fri, Jul 1, 2011 at 7:00 AM


முகர்ஜி பற்றிய கூடுதல் செய்தி, இ’ சார் சொன்னதுதான் முழுவதும், இன்னும் கூட கொஞ்சம் சேர்த்து.. எழுதியது ஜெக்மோகன் (எமர்ஜென்சி புகழ்)


Innamburan Innamburan Fri, Jul 1, 2011 at 7:21 AM

உங்கள் பங்களிப்புக்கு நன்றி, திவாகர். ஜெக்மோகன் (எமர்ஜென்சி புகழ்) விவரமாக எழுதியிருக்கிறார். நான் நினைவிலிருந்து எழுதினதாலும், அக்காலத்து நாளிதழ்கள் கிடைக்காததாலும், உரை நடையில் கவனமாக இருந்தேன். அன்று என் போன்றவர்களுக்கு இருந்த வியாகூலம் இன்னும் நினைவில் இருக்கிறது.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: http://dinamani.com/india/article864297.ece/alternates/w460/narasimarav.jpg




Wednesday, June 26, 2013




அரசு 10: சட்டியில் இருக்காம்! அகப்பையில்?

Innamburan S.Soundararajan Wed, Jun 26, 2013 at 6:43 PM


அரசு 10: சட்டியில் இருக்காம்! அகப்பையில்?
Inline image 1


பாரிஸ் நகரில் உள்ள Financial Action Task Force (FATF) என்ற அமைப்பு ஒன்று உலகம் முழுவதிலும் கறுப்புப்பணம், ஹவாலா, பினாமி, திரை கடலோடிய பணம், பயங்கரவாதிகளுக்கு வரவு ஆகியவை பற்றி உன்னிப்பாக கவனித்து, ஆய்வுகளை வெளியிடும். இந்தியாவை பற்றி FATF இன்று சொன்னது:

  1. பரவாயில்லை. இந்தியா இவற்றை பற்றி புலன் விசாரணையில் இறங்கியிருக்கிறது.
  2. 2009ல் 798 கேசுகளில் விசாரணை; 2013ல் 1,561.
  3. 2006லிருந்து 2013 வரை சந்தேகத்து உள்ளான பயங்கரவாத நபர்கள் 470; கேசுகள் 143.
  4. FATF இந்தியாவை தன் ப்ளேக் லிஸ்டிலிருந்து நீக்கியிருக்கிறது.
  5. FATF: ‘ இந்தியா கறுப்புப்பணத்தை புலன் விசாரிப்பதில் பற்பல செயல்களை அமல் படுத்தியுள்ளது. ஆனால்.....’
‘சட்டியில் இருந்தாலும்...அகப்பையில்!?
  1. அதாவது, நடவடிக்கை கூடினாலும், தடுத்தாட்கொள்வதில் பிரச்னை:
  2. பயங்கரவாதம் சார்ந்த குற்றவாளிகளை தண்டிப்பதில் குறை: 2006-11: ஐந்து நபர்கள்!
  3. 2011 - 2013: ஒருவர் கூட இல்லை.
  4. 2012ல் ஒரு வழக்குக்கூட பதியவில்லை.
சட்டியில் இருக்கிறதோ இல்லையோ. அகப்பை அள்ளவில்லையே, சாமி!

உசாத்துணை:
சித்திரத்துக்கு நன்றி:http://www.vallamai.com/wp-content/uploads/2012/04/saddiakapain.jpg

இன்னம்பூரான்

ஓலை வெடி!:அன்றொருநாள்: மார்ச் 2


அன்றொருநாள்: மார்ச் 2
ஓலை வெடி!

1948: பாளையங்கோட்டை ஜில்லா ஆசுபத்திரி: கிழிந்த நாராக கிடக்கிறேன். ஆத்மபோதனை நடக்கிறது, ஒரு கத்தோலிக்க சான்றோனால். அப்போது, அவர் கொடுத்த Take Courage என்ற கையடக்கமான நூல் தற்செயலாக இன்று பக்கம் 12ல் காட்டிய வரி, ‘He asked for a stone, and God gave him bread.’ யக்ஷிணி வந்து சொன்னது போல்! அடுத்துப்படித்த வரி: 
‘மண்டியிட்டு ரொட்டித்துண்டை இறைஞ்சினேன்; கிடைத்தது என்னமோ ஒரு கல்’ 
- அண்ணல் காந்தி:   அவருடைய  மடலை  வைஸ்ராய் உதாசீனம் செய்ததை பற்றி.  
வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கு காந்திஜி விடுத்த ஓலையின் சுருக்கம்:
ஸத்யாக்ரக ஆஶ்ரமம்
சபர்மதி
மார்ச் 2, 1930
அன்பார்ந்த நண்பரே! 
இத்தனை வருடங்களாக நான் வீச அஞ்சிய ஒத்துழையாமை என்ற பாணத்தை கையில் எடுக்கும் முன், தீர்வு காண உம்மை அணுகுகிறேன். என்னுடைய நம்பிக்கை பரிசுத்தமானது. எந்த உயிரனத்திற்கும் என்னால் ஹானி விளைவிக்க இயலாது, அதுவும் மனித இனத்திற்கு. எனக்கும், என் இனத்திற்கும் என்ன தான் அநீதி நீங்கள் இழைத்திருந்தாலும், இது தான் என் நிலைப்பாடு. பிரிட்டீஷ் ஆட்சியை சாபக்கேடு என்று சொல்லும் நான் ஒரு ஆங்கிலேயனுக்கும், இந்தியாவில் அவனுக்கு இருக்கக்கூடும் நியாயமான எந்த ஈடுபாட்டுக்கும் தீங்கு இழைக்கமாட்டேன். தவறாக என்னை எடை போடவேண்டாம். பிரிட்டீஷ் ஆட்சியை சாபக்கேடு என்று சொன்னாலும், ஆங்கிலேயர்களை மற்றவர்களை விட நீசர்களாக, நான் கருதவில்லை. எனக்கு பல ஆங்கிலேய நண்பர்கள் உண்டு. சொல்லப்போனால், துணிச்சலான, திறந்த மனது உடைய ஆங்கிலேயர்களில் படைப்புகள் மூலமாகத்தான், பிரிட்டீஷ் ஆட்சியின் தீமைகளை அறிந்து கொண்டேன்... இந்த மடல் பயமுறுத்தும் கடிதம் அல்ல. ஒரு அமைதியான எதிர்ப்பு; அது என்னுடைய பவித்ரமான கடமை. எனக்கு ஆண்டவன் ஒரு அருமையான ஆங்கிலேய தூதரை (ரேனால்ட்ஸ்: 24 வயதில் காந்திஜியிடம் வந்தவர்; பிறகு அவரை பற்றி.) அனுப்பியிருக்கிறார். அவருக்கு இந்தியாவின் தார்மீக வேட்கை, அஹிம்சை எல்லாம் புரியும். அவர் மூலமாக இந்த கடிதத்தை அனுப்புகிறேன்.
என்றும் உமது நண்பன்,
எம்.கே.காந்தி.
இந்த மடலின் மின்னாக்கப்பதிவை இணைத்திருக்கிறேன். 
நேற்றைய இழையில் அதிகார நந்தியே ‘விக்கிலீக்’ செய்து, மக்களின் ஆதரவை திரட்டியதை பற்றி பேசப்பட்டது. இன்று பேசப்படும் உத்தி, எழுதிய ஓலையை வெடிக்க வைக்கும் ‘ஓலை வெடி’. அதாவது கையோடு கையாக, குறிப்பிட்ட மடலை பொது மன்றத்தில் வைத்து விடுவது. குட்டை உடைத்து விடுவது. விலாசதாரரால் புறக்கணிக்கப்பட்ட இந்த கடிதம், இந்திய வரலாற்றில் திருப்புமுனை அல்ல. திருகிய முனை. கடலலையும், மக்கள் அலையும் கனிவுடன், கண்ணியமாக, கட்டுக்கோப்பாக தழுவிக்கொண்டன ~பத்தாவது நாள். உலகத்தின் கழுத்து சுளுக்கிக்கொண்டது. அப்படி திரும்பிப்பார்த்த வண்ணமே!
இன்று சரோஜினி நாயுடுவின் அஞ்சலி தினம்: 02 03 1949. அவரின் ஞாபகார்த்தமான சித்திரம். மார்ச் 12ம் தேதி இவ்விழையை தொடருவதாக உத்தேசம். பார்க்கலாம்.
இன்னம்பூரான்
02 03 2012

உசாத்துணை & இணைப்பு: க்ளிக்கவும்.
http://www.bl.uk/reshelp/findhelpregion/asia/india/indianindependence/indiannat/source3/large14219.html

வழக்கம் போல் அருமையான இழை.  பைபிளின் வரிகளும் அட்டகாசம்.  சரோஜினி நாயுடுவுக்கும் அஞ்சலி.  காந்தியின் கடிதம் உருக வைக்கிறது.  (என் மனதைத் திடப்படுத்திக்கொண்டு காந்தியின் மேல் நான் கொண்டிருக்கும் மனவேற்றுமைகளை நினைவு கூர வேண்டியதாயிற்று.)pastedGraphic_1.pdfpastedGraphic_2.pdfpastedGraphic_3.pdfpastedGraphic_4.pdf 
ஓய்வு எடுத்துக் கொண்டு தொடருங்கள்.pastedGraphic_5.pdf
Gita
கவிதைக் குயில் சரோஜினி நாயுடு என் சிறு வயதிலேயே  என் மனதில் பதிந்த  ஒரு நற்சித்திரம்
அது ஏனோ தெரியவில்லை  படிக்கும் காலத்தே  இவர்கள் என் மனதில் ஒரு இடம் பிடித்துவிட்டார்கள்
வாழ்க  கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள்
அன்புடன்
தமிழ்த்தேனீ

அரசு-9: மாபெரும் புரட்சி



அரசு-9: மாபெரும் புரட்சி

Innamburan S.Soundararajan Wed, Jun 26, 2013 at 11:19 AM

அரசு-9: மாபெரும் புரட்சி
Inline image 1

அரசு-9: மாபெரும் புரட்சி

நாயுடுகாரு மண்ணூர் ரெவென்யூ இன்ஸ்பெக்டர்; கல்லூரில் சுப்பய்யர். இருவருக்கும் மேலதிகாரி தணிகாசலம் பி.ஏ. ~ அதாவது தாசில்தார். மக்கள் சம்பந்தப்பட்டவரையில் மூவருமே உருப்படாத கேஸ், ‘அரசு-8: இளங்கன்று’ இழையில் அகப்பட்டுக்கொண்டவர்கள் போல. கலோனிய அரசு இந்தியர்களை நம்பவில்லை. பிறந்த நாள் முதற்கொண்டு பொய் சொல்வது நமக்கு வழக்கம் என்பதும் உண்மை. விளைவு: எதற்கெடுத்தாலும் நற்சான்று, முன்பின் தெரியாத தாசில்தாரிடமிருந்து. அதற்கான சடங்கு, ரெவென்யூ இன்ஸ்பெக்டர். மேல்வரும்படிக்கு, இதை விட பெரிய சுரங்கம் கிடையாது. அதான் அதற்கு கிம்பளம் என்ற செல்லப்பெயர். எப்படி என்றால், மேல அக்ராஹத்து சம்பத் ஐயங்காருடைய பிள்ளை சமத்து என்பவனை, இந்த ‘நற்சான்று’ சேரிவாசி ‘சக்கிலியன்’ என்று நம்பவைக்கும், கிம்பளம் வாங்கிக்கொண்டு. 

மே மாதம் 23 அன்று தமிழ்ச்செல்வி அடுக்கிய ஆதிதிராவிடர், பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் எல்லாம் நாயுடுவுக்கும், சுப்பய்யருக்கும் மனப்பாடம். அதில் உள்ள நெளிவு சுளிவுகள் தணிகாசத்துக்கு தண்ணி பட்ட பாடு. ஏன் அவர்கள் முற்றத்தில் காசு மழையாக பெய்யாது? அந்த மாதிரி இந்திய பிரஜை யாவரும், பட்டாவிலிருந்து மரண சான்று வரை, இவர்களிடம் தொங்கவேண்டும். பிணத்திடமிருந்து கைநாட்டு வாங்கி மாற்று உயில் தயாரித்த ரெவென்யூ இன்ஸ்பெக்டர் ஒருவரை தெரியும். ஜமீன்தார் வீட்டு சமாச்சாரம் என்பதால் கனத்த காசு மழை. இத்தனை பீடிகை எதற்கென்றால்:

மத்திய அரசு இந்த நற்சான்று தீமையை ஒரேயடியாக ஒழிக்க, ஒரு புதிய பாதையை போட்டு இருக்கிறது. சொல்லப்போனால், அது ஏற்கனவே உயிர் விஷயத்தில் இருக்கிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள்  ‘இன்னும் உயிர் தரித்திருக்கிறேன்’ என்று சொல்ல, ஆஜரானால் போதும். தான் அளிக்கும் பத்திரங்கள், ஆவணங்கள் உண்மையானவை என்று சத்தியம் செய்ய, நாமே அவற்றில் ‘இது உண்மையான ஆவணம்’ என்று நற்சான்று கொடுத்தால், சம்மதத்துடன் அதிகாரிகள் அவற்றை வாங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தான் அந்த மே 2013 ஆணை. பின்னர், நேரில் வந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது மூல ஆவணங்களை காட்ட வேண்டும்.

இது அருமையான ஆணை. கொஞ்சம் என்ன ரொம்ப லேட். நிர்வாகத்தை சீரமைக்கும் மன்றம் 2009ல் செய்த பரிந்துரை, இது. ஆடி அசைந்து, அரசு மெதுவாக நல்லதொரு ஆணையை பிறப்பித்தது. நிறைய பொடி வைத்து வடித்த ஆணை, இது, அதாவது மூன்றாவது பாரா படி, இந்த ஆணை மண்ணூரிலும், கல்லூரிலும் அமலுக்கு வர, இன்னும் ஒரு மாமாங்கம் ஆகலாம்.  செய்தி எனக்கு எல்.ஸ்வாமிநாதன் என்ற நண்பரிடமிருந்து வந்தது. அவருக்கு நன்றி நவின்று, அந்த ஆணையை, எல்லாருக்கும் பயன்படும் என்பதால், கீழே பதிவு செய்திருக்கிறேன்.
ஒரு கேள்வி: ஐஏஎஸ்ஸை விட கடுமையான போட்டி, எந்த பரீக்ஷைக்கு?
இன்ன்ம்பூரான்
26 06 2012
*

SELF-CERTIFICATION OF DOCUMENTS INSTEAD OF ATTESTATION OF DOCUMENTS BY GAZETTED OFFICERS – DEPARTMENT OF ADMINISTRATIVE REFORMS RECOMMENDS SELF-CERTIFICATION OF DOCUMENTS IN LIEU OF GAZETTED OFFICER’S ATTESTATION
No.K-11022/67/2012-AR
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Administrative Reforms & Public Grievances
Sardar Patel Bhavan, Sansad Marg,
New Delhi-110001. Dated the 10th May, 2013

OFFICE MEMORANDUM
Subject: Self-certification
The Second Administrative Reforms Commission in its 12th Report titled “Citizen Centric Administration – The Heart of Governance”, has recommended, adoption of self-certification provisionfor simplifying procedures. (www:darpg.gov.in)
2. Taking a cue from this some Ministries/State Governments have adopted the provision of self-certification of documents like marksheet, birth certificate etc. by the applicants/stakeholders instead of asking for an attested copy of the documents by a Gazetted Officer or filing of affidavits. Under the self attestation method, the original documents are required,to be produced at the finalstage.
3. You will appreciate that the above method is citizen friendly and obtaining either an attested copy or affidavit not only cost money but also involves wastage of time of the citizens and the Government officials.
3.  It is requested to kindly review the existing requirements of attested copy or affidavit in variousapplication forms in a phased manner and wherever possible make provision for self-certification ofdocuments, after obtaining the approval of the competent authority.
Sd/-
(Sanjay Kothari)
Secretary to the Government of India



Tuesday, June 25, 2013

அன்றொரு நாள்: ஜூன் 27


அன்றொரு நாள்: ஜூன் 27

Innamburan Innamburan Sun, Jun 26, 2011 at 9:03 PM



அன்றொரு நாள்: ஜூன் 27
எனக்குள் பல வருடங்களாகவே ஒரு கருத்தை மனம் அசை போட்டவண்ணம். வங்காளிகளும், தமிழர்களும், அடிமை தகர்ப்பு, தேசாபிமானம், ஒற்றுமை, பாரதமாதாவின் மேன்மை, மத நல்லிணக்கம், கலாச்சார பகிர்வு என்றெல்லாம் கலந்து இயங்கியிருந்தால்,நாமும், நமது நாடும், நமது புகழும், இந்த புவிதனில், உன்னதமாக இருந்திருக்கும் என்பதே, அது. ஸ்வாமி விவேகானந்தாவும், சென்னையும், பிபின் சந்திர பால் அவர்களும் சென்னையும், பங்கிம் சந்திர சட்டோபாத்யாவும், மஹாகவி பாரதியாரும், அஷுடோஷ் முக்கர்ஜியும், டாக்டர் சி.வி.ராமனும் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்று (1859) ‘வந்தே மாதரம்’ புகழ் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்களின் ஜென்மதினம். பெங்காலி உரை நடை, புதின இலக்கியம், இதழியல் (பங்க தர்ஷன்), தேசாபிமானம், தீர்க்கதரிசனம் போன்ற துறைகளில், அவர் ஒரு முன்னோடி. பகவத் கீதையை ஆங்கிலத்தில் வடித்த ஸர் எட்வின் அர்னால்ட், இவரது ‘விஷவிருக்ஷம்’  என்ற புதினத்தின் ஆங்கில மொழியாக்கத்துக்கு வழங்கிய முன்னுரையில் (1884), இவரது புத்தி கூர்மை, கற்பனாசக்தி, நாடக வருணனை ஆகியவற்றை போற்றி, தற்கால இந்திய இலக்கிய மேன்மை உதயமாகி விட்டது என்கிறார்.

1857ம் வருட புரட்சி நிகழ்ந்த போது, இவர் கல்லூரி மாணவர். அதன் தாக்கம் இவர் மேல் இருந்ததாக தோன்றவில்லை. 32 வருடங்களாக 1891 வரை, டிபுடி மேஜிஸ்ட்ரேட்ட்டாக பணி புரிந்த பங்கிம் பாபுவின் ஆர்வங்களையும், தாகங்களையும், அவற்றின் ஆக்கங்களையும் கவனித்தால், நமக்கு வியப்பு மேலிடுகிறது. ஆங்கிலத்தில் முதலில் எழுதினார். பெங்காலியில் கவிதையில் தொடக்கம், இவரது இலக்கிய பயணம். உண்மை ஊழியம் அவற்றில் குறுக்கிடவில்லை.

சிறுவயதில் அவருடைய புகழ் பெற்ற புதினங்களில் ஒன்றான ‘ஆனந்தமடம்’ (1882-பெங்காலி) தமிழில் படித்திருக்கிறேன். அது ஒரு துறவிகளின் கூட்டம், அரசை எதிர்ப்பதாக சொல்லும் கதை. அது ஹிந்துத்துவமானது, இஸ்லாமியருக்கு ஆதரவாக இல்லை, இறுதியில் ஆங்கில அரசை போற்றுகிறது என்றெல்லாம் சொல்வார்கள். அது பற்றி யானறியேன். எனக்கு தெரிந்தது எல்லாம், இளவயதில், ‘ஆனந்தமடம்’ என் நாட்டுப்பற்றுத்தீயை, கொழுந்து விட்டு எரிய வைத்தது, ஸ்வாமி விவேகானந்தரை, ஒரு ஆனந்தமட சன்யாசியாக கற்பனை செய்து கொண்டது, பிற்காலம் பிபின் சந்திர பால் என்ற எளிய பெங்காலி பள்ளி ஆசிரியர், சென்னை கடற்கரையில் மூன்று நாட்கள் சொற்மாரி பெய்து, திரு.வி.க., வ.உ.சி, வீ.எஸ்.ஶ்ரீனிவாச சாஸ்திரியார், என் மாமனார் பேராசிரியர் தொடூர் மாடபூசி கிருஷ்ணமாச்சிரியார் போன்றவர்களை, மகுடிக்கு மயங்கிய அரவத்தைப் போல் தேசபக்தியில் ஆழ்த்தியது, அதன் பலனாகவோ, வேறு வகையிலோ, பங்கிம் பாபூவின் ‘வந்தே மாதரத்தை’ மஹாகவி பாரதியார், ‘வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குவோம்’ என்று தமிழ் மொழியில் முழங்கியது, ஆகிய நிகழ்வுகள் தான். இந்த ‘வந்தே மாதரத்தை’ பாடித்தானே, எங்கள் உசிலம்பட்டி- வாழ் வருஷநாட்டு மாணவர்களாகிய நாங்கள் 1943/44ல் இற்செறிக்கப்பட்டோம். எனவே, ‘வந்தே மாதரம்’ இன்று வரை, கிட்டத்தட்ட 70 வருடங்களாக,’ எனக்குள்  ஒரு கருத்தை மனம் அசை போட்டவண்ணம்’ இருப்பது வியப்புக்குரியது அல்ல. நள்ளிரவில் திடீரன்று எழுப்பினாலும் அந்த ஆத்மசங்கீதத்தை உரக்கப்பாடுவேன். பங்கிம் பாபூவுக்கு ஜே போடுவேன். இது நிற்க.

ஆனந்தமடத்தின் தாரகமந்திரம் ‘வந்தே மாதரம்’. பிற்காலம் நமது தேசியகீதம் ஆனது. இசை அமைத்தது, ரவீந்தரநாத் தாகூர். நாம் இந்தியர்கள் அல்லவோ! (Argumentative Indians: Amarthya Sen). தேசீயகீதமும் சர்ச்சைக்கு உள்ளானது. அரசு இயந்திரமும் மழுப்பவும், குழப்பவும் தொடங்கியது. இஸ்லாமிய எதிர்ப்பும், ஆதரவும் உள்ளன. அதை எல்லாம் விடுங்கள். தமிழ்நாட்டில் ஞானி என்ற புகழ் வாய்ந்த, ‘உள்ளது உள்ளபடி பேசும்’ சர்ச்சை மன்னர் இருக்கிறார். அவர் 24 09 2006 அன்றைய விகடனில் ‘வந்தே மாதரத்தை’ ஒரு சாத்து சாத்திருக்கிறார் பாருங்கள். அது கண்டு வேதனையால் கொதித்தெழுந்த அரவிந்த் நீலகண்டன் ‘திண்ணை’ இதழில் எழுதிய மறுப்புக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: 

‘... வந்தேமாதரம்' ஏதோ ஹிந்துக்களின் பாடல் என்கிற ரீதியாக அந்த எழுத்தாளர் எழுதியுள்ளார்... 1881 இல் எழுதப்பட்ட 'ஆனந்தமடம்' நாவல் முஸ்லீம் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஹிந்துத் துறவிகளை கதாநாயகர்களாகக் கொண்ட நாவல் என்பது சரியானதல்ல. வங்காளத்தை அன்று ஆண்ட நவாப் பிரிட்டிஷ் கைப்பொம்மை ஆகிவிட்ட நிலையில் பிரிட்டிஷ¤க்கு எதிராக துறவிகள் போராடும் நாவல் இது. இரண்டு முக்கிய போர்க்கள காட்சிகள் ஆனந்தமடத்தில் காட்டப்படுகின்றன. ஒன்று காப்டன் தாமஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான பிரிட்டிஷ் இராணுவத்தை சந்தான்கள் (அன்னையின் புதல்வர்கள்) எனும் துறவிகள் தாக்கி அழிக்கின்றனர். இறுதிக்கட்டத்தில் மேஜர் எட்வர்ட்ஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான இராணுவத்தை தாக்கி அழிக்கின்றனர். மேலும் ஹிந்து விடுதலை வீரர்கள் மட்டுமே வந்தே மாதரத்தை தமது முழக்கமாகக் கொண்டிருந்தனர் எனக் கூறுவதும் தவறாகும்... மகாத்மா காந்தி தேசவிடுதலைப் போராட்ட களத்தில் உதயமாவதற்கு முன்பே வங்க சுதேசி இயக்கம் வந்தேமாதரத்தை தன் ஜீவகோஷமாக்கி வீறுகொண்டெழுந்தது. தூத்துக்குடியிலும் அது மக்கள் இயக்கமாக உருவெடுத்தது... பகத்சிங்கின் குருவென கருதப்படும் தியாகி அஷ்பகுல்லா கான் வந்தேமாதரம் கானத்தை பாடியுள்ளார்... பின்னணியில் தேசபக்தியை தட்டி எழுப்பும் ஸ்ரீ அரவிந்தரின் வந்தேமாதர மொழிபெயர்ப்பு உச்சாடனத்துடன் உஸ்தாத் சாதிக் கான் ஊனும் உயிரும் கரைய பாடிய வந்தேமாதரம் 1998 இல் வெளியானது (பாரத்பாலா வெளியீடு)... நம் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய டாக்டர் அப்துல் கலாம் கூறுகிறார்: "...ஏ.ர்.ரஹ்மான் இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால் அவர் வந்தே மாதரம் பாடும் போது அவரது குரல் அனைத்து பாரத மக்களின் இதயத்திலும், அவர்கள் எந்த மத நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், அனைத்து பாரத மக்களின் இதயத்திலும் ஒலிக்கிறது...’.
மேலும் படிக்க:
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20609295&format=print&edition_id=20060929

 ஐயன்மீர்! தாய்க்குலமே! வருங்காலத்தலைவர்களே! இந்திய குதர்க்கசாஸ்திரிகளைக்கண்டால் காததூரம் ஓடுங்கள். போதுமடா சாமி!
இன்னம்பூரான்
27 06 2011


2 attachments
Bankim_chandra_chatterjee.jpg
20K
vanthEmatharam.pages
132K

Geetha Sambasivam Mon, Jun 27, 2011 at 9:03 AM

மனதை நெகிழச் செய்த இடுகை. ஒரு காலத்தில் ஜீவ மந்திரமாக இருந்த ஒரு வார்த்தை இன்று மதச் சார்புடையதாக மாறியது காலத்தின் கோலம் என்று சொல்ல முடியாது.  எல்லாம் இந்த மதச் சார்பின்மைக்காரர்கள் செய்த கோலம்னு  தான் சொல்லணும்.  உண்மையான மதச் சார்பின்மை என்பதுஅவரவர் அவரவருக்குப் பிடித்த மதத்தை அவரவர் வழியில் பின்பற்றுவதும், அதை எந்த அரசாங்கமும் தடுக்காமல் இருப்பதும், விமரிசனம் செய்யாமல் இருப்பதுமே ஆகும்.  ஆனால் இங்கோ? மதசார்பின்மை என்பதே கேலிக்கூத்தாக மாறிவிட்டது.


வந்தே மாதரம்!

coral shree Mon, Jun 27, 2011 at 11:16 AM


அன்பின் ஐயா,

மிகத் தெளிவான விளக்கமான இடுகை ஐயா. பங்கிம் சந்தர் அவர்கள் பற்றிய அரிய தகவல்கள் பகிர்ந்துள்ளமைக்கு நன்றிகள் பல.

                                                              

Innamburan Innamburan Mon, Jun 27, 2011 at 4:23 PM


நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

அரசு 8: இளங்கன்று




அரசு 8: இளங்கன்று

Innamburan S.Soundararajan Tue, Jun 25, 2013 at 2:51 PM


அரசு 8: இளங்கன்று
Inline image 1


எல்லாரும் இந்நாட்டுமன்னர்களே,ஓரளவு சமுதாயத்துக்காக செயல் பட்டால்.

மதுரையில் ஒரு பள்ளி மாணவன் செயல்பட்டதை கவனியுங்கள். பனையூரிலிருந்தும். அதைச்சார்ந்த பத்து கிராமங்களிலும் நிலபுலன்களுக்கு உரிமம் ஆன ‘பட்டா புத்தகம்’  கொடுக்காமல், இழுத்தடித்தனர், ரெவின்யூ துர்தேவதைகள். மனுக்கள் கட்டி வைக்கப்பட்டன. தொணத்திய பிறகு லஞ்சம் ( ரூ.10,000) கேட்டார்கள். ஜமாபந்தியில், கலைக்டர் அன்ஷுல் முஸ்ராவிடம் மனு போட்டு, நீதி கேட்டும் பயன் ஒன்றுமில்லை. பட்டா அளிக்கச்சொன்ன அவருடைய ஆணையை தூக்கி அடித்தனர். இந்த அவலத்தை கண்ட அருண் என்ற மாணவன் விலாவாரியாக எல்லா விவரங்களையும் கலைக்டரின் முக நூலின் (Facebook) பதிவு செய்துவிட்டான். கலைக்டர் வெகுண்டெழ, இந்த துர்தேவதை வர்க்கம், உடனுக்குடனே உரிமங்களை அளித்தார்கள்; லஞ்சத்தைத் திருப்பினார்கள். கலைக்டர் துர்தேவதைகளைக் கூப்பிட்டு எச்சரித்தாராம்.

இரு கேள்விகள் எழுகின்றன. 1. கலைக்டரின் ஆணையை மீற, அவர்கள் என்ன சால்ஜாப்பு சொல்லியிருப்பார்கள்? 2. எச்சரிப்பு ஒரு தண்டனையா? இரு குற்றங்கள்: கடமை தவறியது + லஞ்சம். கலைக்டர் என்ன செய்திருக்கவேண்டும் என்று, விருப்பமுள்ளவர்கள் மடலாடுங்கள்.

இன்னம்பூரான்

நாடு வா வா! காடு போ போ!




நாடு வா வா! காடு போ போ!
1 message

Innamburan S.Soundararajan Tue, Jun 25, 2013 at 3:02 PM



நாடு வா வா! காடு போ போ!
Inline image 1

புலி வருதுடோய்! புலி வருதுடோய்! புலி வருதுடோய்! வந்துடுத்து! 
ஒடிஷாவின் நந்தன் கானன் மிருகக் கண்காட்சி சாலை சந்தகா கானகத்தின் நடுவே, அணிகலனாக நிற்கிறது. மாநில தலை நகர் புவனேஷ்வரம் கூப்பிடு தூரம். அந்த மிருகக் கண்காட்சி சாலைக்கு காட்டிலிருந்து வருகை புரிந்த யானைக்குட்டி, புலி ஆகியவற்றை பற்றி எழுதியிருந்தேன். இந்த புது கேஸ் தடபுடல். அவருடைய பெயர் இந்திரன் என்று வைத்துக்கொள்வோம். நான் சொன்ன பழைய கேஸ் மாதிரித்தான், கைக்கிளை அதாவது ஒரு தலைக்காதல். ( யார் கண்டா? தமிழ் காமக்கதைகளை போல, நந்தன் கானன் வாசி ஊர்வசி அவரிடம் ‘நாடு வா வா! காடு போ போ!’ என்று சொல்லி நைச்சியம் பண்ணி இருக்கலாம். வருகை: ஏப்ரல் 29, 2013. எது எப்படியோ,’ மோகம் முப்பது நாள்’ ! 18 அடி உயர்ந்த வேலியை தாண்டி குதித்து காட்டுக்குள் போய்விட்டார். அங்கும் ஒரு மோஹினியா? அல்லது வேட்டையா? யாமறியோம். ‘போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு’ என்பது உறுதியாச்சு, மே 31 அன்று. 
எல்லாருக்கும் குஷி இந்த செய்தி என்பதால் - இந்திரனுக்கும் , ஊர்வசிக்கும், கண்காட்சி சாலை அதிகாரி சர்மாவுக்கும், எனக்கும், உமக்கும் தான் - பதிவு செய்தேன். இந்திரநூர்வசி தாம்பத்தியம் செழித்தோங்க வாழ்த்துங்களேன். ப்ளீஸ். 
ஆமாம் போடுங்க, தாய்க்குலமே! அண்ணன் தம்பிகளே, வாண்டு பசங்களே!

இன்னம்பூரான்
Image Credit: http://t3.thpservices.com/fotos/thum4/013/766/bwi-blws005246.jpg