Monday, October 12, 2015

நோபெல் விருது: 2015: 6

நோபெல் விருது: 2015: 6


இன்னம்பூரான்
அக்டோபர் 12 , 2015

பொருளியலின் பொருள் காண்பதும் கடினம். பொருள் ஈட்டுவது அதை விட கடினம். அதனால் தான் பொருளாதாரம் என்ற சொல்லை நான் ஏற்புடையதாகக் கருதுவதில்லை  வறுமையை பற்றியும், சமுதாயத்தில் செல்வம் தாங்கமுடியாமல் சில இடங்களில் தேங்குவதனால், பற்பல இடங்களில் வறுமையின் கொடுமை இருப்பதையும் நன்கு அலசிய பேராசிரியர் Angus Deatonக்கு நோபெல் விருது அளித்த நோபெல் கமிட்டியின் பரிந்துரையின் பின்னணி வினாக்கள்:
  1. அவரவரது செலவை நுகர்வோர்கள் எப்படி இந்த, இந்த உருப்படிகள் என்று பிரித்து வாங்குகிறார்கள்? 
இதற்கு சரியான விடை கிடைத்தால், செலவினங்களை வகை செய்து ஆரூடம் கூறலாம்; வரி, மான்யம் போன்ற கோட்பாடுகளை நிர்ணயம் செய்யலாம். இந்த விடை தேடுவதில் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட Angus Deaton 1980லிலேயே சுளுவான ஒரு மாடலை படைத்தார். அது ஆய்விலும், கொள்கை வகுப்பதில் உதவியது.
  1. சமுதாயத்தின் வரவு, செலவு, சேமிப்பு எவ்வளவு?
Kennath Kurikara வும் J.R. Hicks அறுபது வருடங்களுக்கு முன் எழுதிய நாட்டின் செல்வகுவிப்பு, வாணிக சுழல்கள் போன்ற நிகழ்வுகளை அலச வரவை பற்றியும், நுகர்வோரின் செலவு பற்றியும் அறிய வேண்டிருக்கிறது. 1990லியே Angus Deaton அவர்கள் அக்காலத்து நுகர்வு பற்றிய கருத்துகள் செல்லுபடி ஆவதில்லை என்று நிரூபித்தார். தனிமனிதர்களின் செயல்பாடுகள் (பருப்பு விலையேறினால் வத்தல் குழம்பு!) மாறி இயங்குவதை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிடின் முடிபுகள் தவறாக அமைந்து விடும் என்றார். இதை தற்காலம் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கிறார்கள்.
3. வறுமையையும், நல்வாழ்வு மான்யங்களையும் (welfare) அளவெடுப்பது எப்படி?
இல்லத்து பொருளியலை வைத்து நாட்டின் செல்வம் வளரும்/தேயும் விதத்தை கணிக்க முடியும் என்று அண்மையில் நிரூபித்த Angus Deaton அதற்கான வழிமுறைகளை வகுத்தார்; சிக்கல்களை அவிழ்த்தார்; அவருடைய வீட்டுக்கணக்குத் தான் அஸ்திவாரம் என்ற கோட்பாடு, செல்வநிலையை உயர்த்தும் வகைகளை சொல்கிறது.

இந்த பின்னணியில் Angus Deatonக்கு கிடைத்த விருது பொருத்தமானதே என்பது தான் பெரும்பாலோரின் கருத்து. தனிமனிதனின் விருப்பங்கள் எவ்வாறு கொள்கைகளை நிர்ணயம் செய்கிறது என்பதை விளக்கி, நுட்பம் சார்ந்த பொருளியல், நாட்டுக்குரிய ‘பெரிய கை’ பொருளியல், வளர்ச்சி பொருளியல் எல்லாவற்றிலும் அவர் மாற்றி அமைத்த கொள்கைகளுக்குத்தான் இந்த விருது (“By linking detailed individual choices and aggregate outcomes, his research has helped transform the fields of microeconomics, macroeconomics, and development economics.”) என்கிறது, நோபெல் கமிட்டி.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://i.dailymail.co.uk/i/pix/2012/02/09/article-2098651-11A47191000005DC-865_634x656.jpg

Friday, October 9, 2015

நோபெல் விருது: 2015: 5

நோபெல் விருது: 2015: 5



இன்னம்பூரான்
அக்டோபர் 9, 2015

சில சமயங்களில் பாரதியாரின் ‘கண்ணன் என் சேவகன்’ எங்கிருந்தோ வந்து
 ‘ எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்செல்வம்,இளமாண்பு,சீர்,சிறப்பு,நற்கீர்த்தி,கல்வி,அறிவு,கவிதை,சிவயோகம்,தெளிவே வடிவாம் சிவஞானம்,என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!’ 
என்று மனமுருக பாடியதைப் போல, இவ்வருட சமாதான நோபெல் பரிசு இந்தியர்களான நமக்கு பாடம் கற்றுக்கொள்ள வகை செய்கிறது. இது ஆனந்தமே. நான் இந்தியாவில் புரட்சி ஏற்படுவதற்கான ஹேதுகள் பல என்று சில வருடங்களாகக் கூறி வருகிறேன். நடந்து முடிந்துள்ள ஒரு மல்லிகை புரட்சியின் (ட்யூனிஷியா: 2011) பின்விளைவாக நிகழ்ந்தது அந்த நாட்டின் கொடுப்பினையே. நான்கு குழுக்கள் (தொழிற்சங்கம், தொழிலக கூட்டமைப்பு, வாணிகம், கைவினைப்பொருள் ஆகியவற்றின் அமைப்பு, ட்யூனிஷியாவின் மனித உரிமை அமைப்பு, வழக்காளர்களின் இயக்கம்) ஆகியவை ஒன்று சேர்ந்து, நாம் கனவு காணாத ஒற்றுமையுடன் Tunisian National Dialogue Quartet என்ற கூட்டணி அமைத்து, இசையின் இலக்கணமாக திகழும் ஒரு ‘தாளவாத்தியகச்சேரி’யை 2013ல் துவக்கி, சக்கை போடு போட்டு, நாட்டின் மேலாண்மையை உன்னதமான நிலைக்கு உயர்த்தி, அரசியல் கொலைகளை கட்டுப்படுத்தி, பரவியிருந்த சமுதாய சீர்கேடுகளை ஒழித்து, உள்நாட்டு யுத்தம் நடக்க இருந்த சூழ்நிலையை விலக்கி, எந்த விதமான பாலியல்/அரசியல் கோட்பாடு/மத நம்பிக்கை பொருட்டு பேதங்களை ஒழித்து, சமாதானம் பேணும் அரசியல் இலக்கணத்தை வகுக்கும் அரசியல் சாஸனத்தை வைர வரிகளால் எழுதியதும் அதற்காக, இரண்டே வருடங்களில் அந்த கூட்டமைப்புக்கு நோபெல் சமாதான விருது கிடைத்ததற்கு, உலகம் முழுதும் விழா எடுக்கவேண்டும். இந்த கூட்டமைப்பு மக்கள், அரசியல் கட்சிகள், மேலாண்மை தளங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து தேசீயம் வளர்க்க வகை செய்தது. சில சாதனைகள்:
  1. வன்முறை, அச்சமில்லாததால், ஆதரவு இல்லாததால், இறங்குமுகம் கண்டது;
  2. இது ஆல்ஃப்ரெட் நோபெலின் இலக்கை அடைவதாக அமைந்தது, குறிப்பிடத்தக்கது;
  3. பென் அலி என்ற சர்வாதிகாரியின் கொட்டதை அடக்கியது;
  4. இஸ்லாமிய அமைப்புகளும், மதசார்பற்ற அமைப்புகள் இணைந்து இயைவதை நிரூபித்துக்காட்டியது;
  5. சமாதான பேச்சுகளின் செயல்பாடுகளையும், நாட்டுப்பற்றையும் இணைத்தது;
  6. மக்கள் இயக்கம், அமைப்புகள், விழிப்புணர்ச்சி, ‘திருமங்கலமற்ற’ மங்களமான தேர்தல்கள், ஆளுமை பகிர்வுகள், எல்லாவற்றையும் நேர்த்தியாக நிகழ்த்திக்காட்டியது இந்த Tunisian National Dialogue Quartet.
  7. மல்லிகை புரட்சி வீணாகவில்லை; ஒரே காரணம்: Tunisian National Dialogue Quartet.
பின், வேறு யாருக்குத் தான் நோபெல் விருது அளிக்கப்படும்?
சொல்லுமையா, சிவனாரே!
பாரத மாதாவே! இந்தியாவுக்கு Tunisian National Dialogue Quartet போன்ற அமைப்பு தலையெடுக்க வரம் அருள்வாயாக.
-#-
சித்திரத்துக்கு நன்றி:https://pmchollywoodlife.files.wordpress.com/2015/10/nobel-peace-prize-lead.jpg?w=600

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, October 8, 2015

நோபெல் விருது: 2015: 4

நோபெல் விருது: 2015: 4


இன்னம்பூரான்
அக்டோபர் 8, 2015

இன்றைய நோபெல் விருதை இலக்கியத்துக்கும் ஆணிவேரான ‘பாமரகீர்த்திக்கு’
பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாததால் ஓரிடத்தில் பிறந்து பற்பல இடங்களில் வளர்ந்து வரும் பாமரகீர்த்திக்குக் கிடைத்த விருதாகத்தான் பேசப்படுகிறது; ஏற்றுக்கொள்ளப்பட்டது; பாராட்டப்படுகிறது. ஒரே விருதாளரான Svetlana Alexievich பேலரஸ் நாட்டைச் சேர்ந்தவர். கடைசி நிமிடம் வரை உலா வந்த ஹேஷ்யங்களில் என்னுடைய வாக்கு இவருக்குத் தான் இருந்தது. இரட்டிப்பு மகிழ்ச்சி. ரத்னச்சுருக்கமான சுற்றறிக்கை இது தான்;

The Swedish Academy, announcing her win, praised Alexievich’s “polyphonic writings”, describing them as a “monument to suffering and courage in our time”.

அதாவது, பல்லாயிரம் மக்களின் துன்பக்கேணியில் இறங்கி அவர்களின் அச்சமின்மையை நேர்த்தியாகவும், உணர்ச்சி பிரவாஹம் தடையில்லாமல் பெருக்கெடுப்பதை மூலாதாரமாக வைத்து பண்ணிசையில் எழுதியிருக்கிறார்,

விருது வந்தடைந்த செய்தி அவருடைய ஸ்தித பிரதிஞ்ஞத்தை அசைக்கமுடியவில்லை. மகிழ்ச்சி என்றாலும், கலங்கினேன் என்கிறார், Svetlana Alexievich. Ivan Bunin, Boris Pasternak போன்ற விருதாளர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குடைச்சல்கள் அவற்றை நினைத்து வருந்தினார். விருது அளிக்கப்பட்ட செய்தி கிடைத்தபோது, சராசரி மனுஷி ஆன இவர் துணிகளுக்கு இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தாராம்.

நோபெல் அகாதமி சொல்வதை கேட்போம். 

“கடந்த 30/40 வருடங்களாக சோவியத்/ மாஜி சோவியத் மானிடர்களின் உணர்ச்சி, மனவோட்டம், நிழல் மனவோட்டம் எல்லாவற்றையும், நுட்பங்கள் தவறாமல், பொதுமை மறக்காமல், மானிடத்தின் உள்ளே சென்று, ‘ஆவியின் உள்புகுந்து’ அவர் செய்த பதிவுகள், அதுவும்  Chernobyl விபத்து, ஆஃப்கனிஸ்தானில் ஆட்டம் ஆகியவற்றை தனி மனிதப்பார்வையில் பதிவு செய்திருப்பது மாபெரும் சாதனை.

Svetlana Alexievich சொல்வது: நான் மக்களிடம் சோஷலிசம் பேசவில்லை; என்னுடைய ஆயிரக்கணக்கான பேட்டிகளில், சிறார்களிடமும், பெண்களிடமும், ஆடவர்களிடமும் அன்பு, காதல், பொறாமை, மழலை, முதுமை, இசை, நடனம், சிகை அலங்காரம் ஆகியவை பற்றி துளைத்து, துளைத்து விசாரித்தேன். சராசரி மனிதர்கள் அன்றாடம் மன்றாடும் சிக்கல்கள், அவற்றில் கொழுந்து விட்டெரியும், சுட்டுப்பொசுக்கும் உண்மைகள். 

ஒரு சுட்டெரிக்கும் உண்மையை போட்டு உடைக்க வேண்டும் தாய்மார்களே. Svetlana Alexievich எழுதிய U vojny ne ženskoe lico (War’s Unwomanly Face) என்ற நூல் இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கெடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கான பெண்களை பேட்டி எடுத்ததின் சாராம்சம். குறைந்தது பத்து லக்ஷம் பெண்மணிகள் யுத்தத்தில் பங்கெடுத்தனர். வரலாற்றில் அதை பற்றி சொல்லொன்றும் காணவில்லை. அந்த குறையை மேற்படி நூலில் நீக்கி விட்டார், இவர். அதற்கு இன்னொரு நோபெல் கொடுக்கலாம், மேரி க்யூரிக்குக் கொடுத்தது போல.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://i.ndtvimg.com/i/2015-10/svetlana-alexievich_650x400_71444303070.jpg



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, October 7, 2015

நோபெல் விருது : 2015: 3


நோபெல் விருது: 2015: 3

இன்னம்பூரான்
அக்டோபர் 7, 2015

இன்று அறிவிக்கப்பட்ட வேதியியல் நோபெல் விருது Tomas Lindahl, Paul Modrich, Aziz Sancar எனப்ப்டும் மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. உயிரணுக்களின் விநோதமான வாழ்வியலை அறியவும், ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்   (DNA) எவ்வாறு உயிரணுக்களால் பராமரிக்கப்படுகிறது என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றியடைந்த மேற்காணும் விஞ்ஞானிகளை பாராட்டுவது நலமே. புற்று நோய் சிகிச்சைகளுக்கு, இந்த ஆராய்ச்சிகள் மிகவும் உதவும். ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்   (DNA) அழுகி, அழிந்து போகும் வேகத்தைப்பார்த்தால், புவியில் வாழ்க்கை அமைந்து வளர்வது சாத்தியமில்லை என்ற கூற்றை முதன்முறையாக நிரூபித்த Tomas Lindahl, அடுத்த கட்டமாக அந்த அழிவை எவ்வாறு மூலக்கூறு (molecular machinery) அடிப்படை மராமத்து செய்யும் விந்தையை  base excision repair எடுத்துக்கூற  nucleotide excision repair என்ற நுட்பத்தை Aziz Sancar விவரித்தார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, mismatch repair என்று காரணப்பெயர் எடுத்த (ஒரு விதத்தில் அறுவை சிகிச்சை போன்ற) ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்  உயிரணுக்கள் பெருகும்போது ஏற்படும் ஆயிரக்கணக்கான சிக்கல்களை அவிழ்ப்பதை நிரூபணம் செய்தார். 

சுருங்கச்சொல்லின், இவ்வருட முக்கூடல் நோபெல் விருது உயிரணுக்களின் நடைமுறை,அந்த இயல்பை உபயோகம் செய்வது, குறிப்பாக புற்று நோய் நிவாரணம் ஆகியவற்றை பற்றி அடிப்படை நுட்பங்களை பாராட்டியுள்ளதை நாமும் பாராட்டவேண்டும்.
-#-
உசாத்துணை: பல தளங்கள்.
சித்திரத்துக்கு நன்றி: http://pbs.twimg.com/media/CQtKEK7UsAAITh5.jpg

Tuesday, October 6, 2015

நோபெல் விருது: 2


நோபெல் விருது: 2

இன்னம்பூரான்
அக்டோபர் 6, 2015
துகள் இயற்பியல் (Particle Physics) முற்காலத்து பெளதிக ஏணியின் உயரமான நிலையில் உன்னதமாக மிளிரும் படிகளில் ஒன்று. NEUTRINO - நுண்நொதுமி - ஒளிவேகம் அருகாமையில் செல்லக்கூடிய அடிப்படைத் துகள்களை அந்த இயலில் உள்ள/ இன்று பாராட்டப்பட்ட ஆராய்ச்சிகள் நம்மை வியக்கத்தக்கவை. இந்த வருட பெளதிக நோபெல் விருது Arthur McDonald, a professor emeritus at Queen's University in Kingston, Ontario என்பவருக்கும் (17வது கனடிய நோபெல் விருதாளர்) Takaaki Kajita of the University of Tokyo என்பவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கண்டு பிடித்து நிரூபித்த உண்மை: இந்த நுண்நொதுமிகள் தமது நீண்ட பயணங்களில், எப்படியோ தன் தன்மைகளை மாற்றிக்கொள்கின்றன. இந்த மாற்றம் ஏற்பட அவைகள் MASS - திணிவு, நிறை ஆக இருக்கவேண்டும். இதனால் சகலமானவர்களுக்கும் நோபல் கமிட்டி சொல்வது: MATTER - பொருண்மை, பருப்பொருள் எனப்படும் பெளதிக பொருண்மையை பற்றி நாம் அறிந்து கொண்டது எல்லாம் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ஆக மாறிவிட்டன. துகள் இயற்பியல் (Particle Physics) மேலும் உச்சாணிக்கிளையை பிடித்து விடும் போல தோன்றுகிறது. 1998லியே ஜப்பானில் இந்த நுண்நொதுமியின் ஆள்மாறாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனிடமிருந்து புறப்பாடு செய்யும் நுண்நொதுமிகள் கூடு விட்டு கூடு பாய்வது கனடாவில் 2001ல் திண்ணமாக நிரூபிக்கப்பட்டது. இது ஒரு யுரேகா மூமெண்ட் என்று இன்று McDonald சொல்வது ஒரு மயிர் சிலிர்க்கும் நிகழ்வு என்று நான் நெகிழ்ந்து போகிறேன். நீங்கள் எப்படியோ?!

உசாத்துணை: நோபெல் ஆங்கில ஆவணங்கள்.

சித்திரத்துக்கு நன்றிள் http://static.dnaindia.com/sites/default/files/2015/10/06/382711-nobel-physics-prize.jpg

நோபெல் விருது 2015: 1

நோபெல் விருது 2015: 1




இன்னம்பூரான்

அக்டோபர் 6 ,2015


இன்று 2015 மருத்துவம் சார்ந்த நோபெல் விருது அறிவிக்கப்பட்டது. ஒரு காலத்தில் இது பற்றி எல்லாம் கடை விரித்தேன்; கேட்பார் இல்லை. மறுபடியும் கடை விரிக்கிறேன். சில வியாதிகள் தொக்கி நிற்பவை. மலேரியா அந்த வகை. புலி, சிங்கம், முதலை ஆகியவற்றை வம்சத்துடன் அழிக்கும் மனிதன் தன்னை தாக்கும் கொசுவை நசுக்கமுடியவில்லை. உச்சரிப்பு தவறாமல் இருக்க ஆங்கில எழுத்துக்கள், விருது பெற்றவர்களின்/ மருந்துகளின் பெயருக்கு மட்டும். Tu Youyou என்ற 84 வயது மூதாட்டி சைனாவில் ஒரு ரகசிய ஆய்வில் பணி புரிந்த போது கண்டு பிடித்த artemisinin என்ற மருந்து மலேரியாவுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். Mao Zedong சைனாவில் சர்வாதிகாரியாக இருந்தபோது, இந்த பெண் விஞ்ஞானிக்கு மலேரியாவை ஒழிக்கும் ஆராய்ச்சி ஒதுக்கப்பட்டது. வடக்கு வியட்னாமில் விட்டில் பூச்சி மாதிரி மக்கள் செத்து விழுந்தனர், மலேரியாவில். அங்கெல்லாம் சென்று எல்லாவற்றையும் கண்டு கொண்ட பின் ஊருக்கு வந்தால், 1600 வருடங்களுக்கு முந்திய நூல் ஒன்றில் Artemisia annua என்ற மூலிகை வைத்தியம் தெரிய வந்தது. அதை ஆதாரமாக வைத்து ஆராய்ச்சி செய்தவர் Tu Youyou. Plasmodium falciparum என்ற மலேரியா மூளையை தாக்கி ஆளை கொல்லும். Plasmodium vivax கொல்லாவிடினும், குலை நடுங்கச்செய்யும். பல சோதனைகளுக்கு பிறகு இவரால் தயாரிக்கப்பட்ட artemisinin என்ற மருந்து சஞ்சீவினி போல் ஆயிற்று. இரண்டு வகை மலேரியாவையும் முறியடித்தது. நோபெல் பரிசு ரொக்கத்தில், பாதி இவருக்கு.


William C Campbell உம் Satoshi Ōmuraவும்  [Ireland, Japan] ஆகிய இருவரும் மனித வயற்றில் குடித்தனம் நடத்தும் புழுக்களை ஒழிக்க avermectin என்ற மருந்தை உருவாக்கினர். அவர்களுக்கு மீதம் பாதி. ஹவாலா நாட்டின் மேலாண்மையை தாக்கும். பாரசைட்ஸ் எனப்படும் ஊடுருவி உள்ளே டேரா போட்டு, கூடாரத்துக்கே தீ வைக்கும் இத்தகைய வியாதிகளை குணப்படுத்த உழைத்த இந்த மூவரும் பாராட்டத்தக்கவனரே. William C Campbell, Ōmuraவின் ஆராய்ச்சியின் அடிப்படையில் செய்த ஆய்வின் பயனே இந்த மருந்து. இயற்கை அன்னைக்கு இணையாக நாமும் நுண்ணுயிர்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முரசு கொட்டுவதை நையாண்டி மேளம் என்று இவர் உணர்த்தும் விதமே அலாதி. இது உண்மை தான் என்கிறது Ōmuraவின் ஆய்வுகள்.

-#-
Image Credit: http://www.cbc.ca/gfx/topvideo/2015/nobel-medicine-niles-100515.jpg
Sources: Many.


Friday, October 2, 2015

"செல்லுலாயிட் வெங்காயம்"

"செல்லுலாயிட் வெங்காயம்"

இன்னம்பூரான்
02 10 2015
கனவு காணாத மானிடர்கள் அரிது. நனவில் இருப்பது கனவில் வந்தாலும் சங்கடம் தான். அது திரிந்து பிரிந்து வரும். எண் சாண் உடம்புக்கு இடது கால் கட்டை விரல் பிரதானமாக வரலாம். தலை பிரிந்து தனியே ஓடலாம். ‘கனவே! கனவே! ஒரிஜினல் கனவே! வா! வா!’ என்று வந்தாலும் வம்பு. உள்ளதை உள்ளபடி பெல்ஜியம் கண்ணாடி போல காட்டி, இலக்கியம் போல ஒரு கலக்குக் கலக்கி விடும். போதுமப்பா இந்த பீடிகை, சமாச்சாரத்தை சொல்லுடா! என்றார், அந்த பெரிசு; தாடியும் மீசையுமாக இருந்தாலும் தாட்யமாக இருந்தார். துர்வாசரொருபாகமாக இருந்த வசிட்டர் போல் தோற்றம். அவர் சொல்லில் திடம் இருந்ததால், என்னால் தப்பி ஓட முடியவில்லை, அந்த சொப்பனத்தில், மூன்றே பாத்திரங்கள்: பெரிசு, டவுசருக்கு மாறின இளசு, ஒம்மாச்சி. 

கனவில் வந்தது ஒரு ஓரங்க நாடகம். ஒம்மாச்சியே விதூஷகன். டிக்கெட் வாங்காமல் நான் குட்டிச்சுவர் மேல் குந்தியிருந்ததால், யானொரு பாத்திரமில்லை. அரங்கத்தில் ஒருமுக எழினியும் பொருமுக எழினியும், கரந்துவரல் எழினியும் தன்னிச்சையாக, விலகியும், ‘பொத்’ என்று விழுந்து, மறைத்தும், பாடாத பாடு படுத்தின. அத்தருணம், இது தெய்வசங்கல்பம் என்று மோப்பம் பிடித்த ‘டவுசர்’  பெரிசை பார்த்து செப்பியது யாதெனில்:

“ ஐயா! ராமானுஜ தயா பாத்திரம் என்று ஜபியுங்கள். நல்லதே நடக்கும், திரை விலகி நிற்கும், நாமும் கூத்தடிக்கலாம்.” “என்னப்பா! மடியிலேயே கையை போடுகிறாய். நானோ அண்ணன் பெயரை அலங்கரிக்கிறேன். தம்பியின் தயவு நாடலாமா?” என்று சொல்லிவிட்டு, பெரிசு இடத்தை காலி செய்தது. இளசு, மனைவி கொற்றவையுடன்,  திருக்கோட்டியூர் சென்று பூசை புனஸ்காரம் செய்து விட்டு, வீடு திரும்ப, அன்னை கருணாவிலாசம் அவர்களை பாராட்டினார். தந்தை தயாபரன் அவர்களை ரகசியமாக பாராட்டினார். அண்ணன்  குஸ்திக்கு அழைத்தார். மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவின் அலுவலகத்தில் சரணடைய நினைத்து விழுந்தடித்து ஓடிய இளசை, சிலாரூபத்திலிருந்த பெரிசு, ‘நில். என்னை பார். என் காலடியைப்பார். என் பொன்வாக்கை படி. பகுத்து அறிக.’ என்றார்.

அன்னாருக்கு பல கூழைக்கும்பிடுகளை போட்ட வண்ணம், இளசு, ‘நாங்கள் ப்ரத்ய்ங்கா தேவியிடம் தங்கள் கோட்பாடுகள் பரவவேண்டும் என்று விண்ணப்பம் செய்தோம். திருவேங்கிடத்தான் கிட்ட போய் வேறே கும்பிடணும்.’ என்றார், அளவிலா தயக்கத்துடன். சினம் கொப்பளிக்க, பெரிசு இளசை நோக்கிக் கூறீனார்,.
“ நீ ஒரு "செல்லுலாயிட் வெங்காயம்".
திரை விழுந்தது. கனவும் கலைந்தது. உவமையும் நன்றாகவே தெய்வாதீனமாக அமைந்து விட்டது.
-#-

சித்திரத்துக்கு நன்றி:http://i.ebayimg.com/00/s/MTUzNVgxNTAw/$(KGrHqZHJBwE-d,bnSpvBPsV524+ig~~60_35.JPG

Thursday, October 1, 2015

விவிலியமும், ஜான் ரஸ்கினும், காந்தி மஹானும்

விவிலியமும், ஜான் ரஸ்கினும், காந்தி மஹானும்


இன்னம்பூரான்
அக்டோபர் 2, 2015

Take that thine is, and go thy way: I will give unto this last, even as unto thee.
-Matthew 20:14

நீரின்றி அமையாது உலகு. நூலின்றி அமையாது அவ்வுலகின் மேன்மை. பொருளாதாரம் என்ற சொல்லைத் தவிர்த்து பொருளியல் என்று எகனாமிக்ஸ் என்ற துறையை வகைப்படுத்துவது சாலத்தகும்.  அத்துறையில் நான்கு நிபுணர்கள் இருந்தால், ஐந்து கருத்துக்கள் வலம் வரும் என்று கேலி செய்வதுண்டு. ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ, ஜான் ஸ்டூவர்ட் மில் போன்ற பொருளியல் தந்தைகளால் போதிக்கப்பட்ட முதலாளித்துவ பொருளியல் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்னால் கூட, நமது பாடபுத்தகங்களில் கோலோச்சின. பின்னரும்!  இத்தனைக்கும் 1860லேயே அதில் புதைந்திருந்த பாகுபாடுகளை, சமுதாய அநீதிகளை அலசி உதறிய ஜான் ரஸ்கினின் ‘Unto This Last’ என்ற நூல் வலம் வந்து, சில மாற்றுக்கருத்துக்களை முன் வைத்தது. சான்றோரை சிந்திக்க வைத்தது. அக்காலத்து பொருளியல் கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கியது. அந்த நூல் புரட்சிக்கு வித்திடுகிறது என்று முதலாளித்துவம் அஞ்சியது.

விவிலியத்தில் ஒரு குட்டிக்கதை. திராக்ஷை தோட்டம் ஒன்று. முதலாளி காலையில் சில கூலிகளையும், பின்னர் சில கூலிகளையும் ‘ஆளுக்கொரு தம்பிடி’ என்று சொல்லி அமர்த்தினார். அவ்வாறே கொடுத்தார். சிரமத்துக்கு ஏற்ற கூலியில்லையே என்று குறைப்பட்டுக்கொண்டிருந்தவர்களிடம், ‘நான் அநியாயம் செய்யவில்லையே! பேசியதை கொடுத்தேன். ["Friend, I do thee no wrong. Didst not thou agree with me for a penny? Take that thine is, and go thy way. I will give unto this last even as unto thee."] என்றார். சரி தான். ஆனால் சரியில்லை தான்.

அண்ணல் காந்தி புரட்சிக்கு வித்திடும் இந்த நூலை 1904ல், ஒரு ரயில் பிரயாணத்தின் போது படித்த போது, ‘ எடுத்த புத்தகத்தை முழுதும் படிக்காமல் வைக்க முடியவே இல்லை’ என்று தன்னுடைய சுயசரிதையில் பின்னர் எழுதினார். அவர் மேலும் சொன்னது, “...என்னை பிடித்து ஆட்டியது அந்த நூல். அதன் இலக்குகள் தான் எனக்கு அடிப்ப்டை போதனை...என் வாழ்வை அதற்கிணங்க அமைத்துக்கொள்வேன்... என்னுடைய மனத்தின் ஆழத்தைத் தொட்ட இந்த நூல் என் கோட்பாடுகளுக்கு கலங்கரை விளக்கு. என் வாழ்க்கையை மாற்றி அமைத்து விட்டது, அது” என்றார்.
சுருங்கச்சொல்லின், மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களை மஹாத்மா ஆக்கியது, இந்த நூல் தான். இங்கு நான் பொருளியல் பேசவில்லை.அதற்கு பல பரிமாணங்களும், பரிநாமங்களும் உண்டு. அண்ணல் காந்தியை பற்றி பேசி, அவரை, அவரது ஜன்மதினமன்று, வணங்குகிறேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.dominantbooks.com/pic/book/big/8178886669.jpg


Sunday, September 27, 2015

புலி வருது! புலி வருது! புலி வருது!



புலி வருது! 

Kairi, the darling tigress of Orissa was rescued from the Similipal forests as a cub by my close friend Saroj Raj Chaudary, the Conservator of Forests. Mothering the cute little one posed no problem. Blackie adopted her as to matter born; Kairi, disobendient ever, will obey her totally. There is a true sensitive story about both. Later about it.

Tuesday, September 22, 2015

மறைமூர்த்தி கண்ணா!

Copyright The Hindu
innamburan

Return to frontpage

NATIONAL » TAMIL NADU

Published: September 23, 2015 00:00 IST | Updated: September 23, 2015 05:33 IST  KANCHEEPURAM, September 23, 2015

Ancient murals discovered

Mural technicians displaying a mural discovered on a wall at Sri Devarajaswamy Temple, Little Kancheepuram —Photo D. Gopalakrishnan
Mural technicians displaying a mural discovered on a wall at Sri Devarajaswamy Temple, Little Kancheepuram —Photo D. Gopalakrishnan

Restoration process unravels inner layer of work

Restoration of murals at Sri Devarajaswamy temple, Little Kancheepuram, has led to the discovery of similar murals from an earlier period.
While working on the first circumambulatory corridor – `Kachivaiththan Thiruchuttru – of this ancient temple in the early part of August, a team of experts engaged in preservation of antiques stumbled upon a fine inner layer of murals beneath the one they were restoring, near the `Kachivaiththan Mandapam, one of the halls of place of worship, also known as Varadaraja Perumal temple.
Suspecting the presence of murals from an earlier period beneath the lime surface, they ensured the inner layer of the murals were unveiled by separating the outer layer, in the presence of R. Kannan, Additional Chief Secretary, Tourism, Culture and Religious Endowments Department, on Tuesday.
Subsequently, the team led by S. Sampathkumar, retired modeller-cum-conservationist, Archaeological Survey of India, and J.D. Jaganathan, retired Laboratory Assistant, Museum Department, separated the upper layer painting of Sri Vishnu with his two consorts in standing posture, by applying mild chemicals on the tempera mural to transfer the pigments on to a piece of cotton.
Later, they removed the upper layer of the lime surface carefully to unveil the older wall painting.
A close look at the unveiled painting revealed that the artwork might have been created using the fresco-secco method. Using this method, images were drawn on the nearly-dry and firm lime plaster, said one of the team members, S.Madhan, who holds a doctorate in mural paintings.
Mr. Kannan said that initial observation of the inner layer painting revealed that they might have been drawn using vegetable colours.
The separation exercise carried out on September 22 at Sri Devarajaswamy temple was similar to the one executed at the Big temple, Tanjore where the 13th to 16th Century Vijayanagara period murals were separated to unveil the earlier Chola period wall paintings.






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com